Jump to content

பறந்து செல்ல வா - திரை விமர்சனம்


Recommended Posts

பறந்து செல்ல வா - திரை விமர்சனம்

 

 
psv_3102234f.jpg
 
 
 

காதலே கைகூடாத விளையாட்டுப் பையனை ஒருசேர இரு பெண்கள் காதலித்தால் என்ன ஆகும்?

நாயகன் லூத்ஃபுதின் பாஷா விளை யாட்டுப் பிள்ளை. சிங்கப்பூரில் அவ ருக்கு வேலை கிடைக்கிறது. அங்கு நண் பர் அறையில் தங்குபவருக்குப் பார்க் கும் பெண்கள் மீதெல்லாம் காதல் பொங்குகிறது. தனது முயற்சிகளில் ‘பல்பு’ வாங்கும் அவரை, ‘உன் முகத் துக்கெல்லாம் காதலா’ என்று நண்பர் கள் கலாய்க்கிறார்கள். நண்பர்களை ஏமாற்ற, முகநூலில் கற்பனைக் காதலியை உருவாக்கி உலவவிடுகிறார்.

இடையே உண்மையிலேயே அவருக்கு ஒரு காதலி கிடைத்துவிடுகிறார். காதல் சுமுகமாகச் சென்றுகொண்டிருக்கும் போது கற்பனைக் காதலி நிஜமாகவே நேரில் வந்து காதலைச் சொல்கிறார். இதை எல்லாம் ரகசிய கேமராவில் படம்பிடித்துத் தொலைக்காட்சியில் ரியாலிட்டி ஷோ நடத்தத் திட்டமிடுகிறது ஒரு கூட்டம். கற்பனைக் காதலி எப்படி வந்தார், நிஜக் காதலி என்ன ஆனார், ரியாலிட்டி ஷோ நடந்ததா என்ப தெல்லாம் மீதிக் கதை.

படம் முழுவதும் இளமைத் துள்ளலும் கலகலப்பும் இருக்கின்றன. திரைக்கதையில் வெவ்வேறு இழைகளைக் கோத்து, அவற்றுக்கிடையே சிக்கலான முடிச்சுக்களைப் போட்டுச் சுவை கூட்டி யிருக்கிறார் இயக்குநர் தனபால் பத்ம நாபன். கற்பனைக் காதலி நாயகனின் வீட்டுக்குள் வந்து அமர்வது நல்ல திருப்பம். சிங்கப்பூரின் சூழலைப் பயன்படுத்திய விதம், வசனங்கள், அடுத்தடுத்து வரும் திருப்பங்கள் ஆகியவை படத்தின் பலம். யூகிக்கக்கூடிய காட்சிகளையும் பின்பாதியின் இழுவையையும் தவிர்த்திருக்கலாம். காட்சி கள் கலகலப்பாக இருந்தாலும் பார்வை யாளர்களைத் தம் வசம் ஈர்த்துக் கொள்ளத் தவறுகின்றன.

சின்னத்திரையின் ரியாலிட்டி ஷோக்கள் எந்தளவுக்கு நம் வீடுகளுக்குள்ளும் ஊடுருவத் துடிக்கின்றன என்கிற ஆபத்தான, புதிய விஷயத்தைத் தொட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதைக் காட்சிப்படுத்திய விதம் அழுத்தமாக இல்லை. பார்க்கும் பெண்களிடமெல்லாம் வழிவது, காதலில் சொதப்புவது, வம்பில் மாட்டிக்கொண்டு திணறுவது, அப் பாவித்தனமாகப் பேசுவது என விளை யாட்டுப் பிள்ளைக்கான லட்சணங் களைக் கச்சிதமாகக் கொண்டு வந்திருக்கிறார் பாஷா.

‘பழகுவோம், பிடித்தால் திருமணம்... பிடிக்கவில்லையா விலகுவோம்’ என்று அலட்டிக்கொள்ளாத பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ். காதலிப்பது, கோபித்துக்கொண்டு போவது, திரும் பவும் வந்து காதலிப்பது தவிரப் பெரியதாக அவருக்கு இடம் இல்லை.

சிங்கப்பூர் வாழ் சீன - தமிழ்ப் பெண் ணாக நரேல் கேங்குக்கு சொல்லிக் கொள்ளும்படியான காட்சிகள் அமைந் திருக்கின்றன. சீனத்து அழகு இயல் பாக வசீகரிக்கிறது. கோபத்துடன் நாய கனைப் பின்தொடர்வது, காதல் வசப் படுவது, காதல் கைகூடுமா என்று தவிப் பது, அதிரடியாகச் சண்டை போடுவது என்று மனதில் நிற்கிறார் நரேல் கேங்.

தனது நகைச்சுவை வசனங்களால் காட்சிகளைத் தாங்கிப் பிடிக்கிறார் சதீஷ். அவருக்கு வசமாக வாய்த்திருக்கின்றன பேயோனின் பகடி வசனங்கள். ‘வீட்டுல அம்மா, அப்பா சம்பளம் கேட்குறாங்க’ என்றதற்கு, ‘ஏன்? அவங்களை வேலைக்கு வெச்சிருக்கியா?’ என்பது போன்ற வசனங்கள் கதையை உற்சாக மாக நகர்த்திச் செல்ல உதவுகின்றன. ‘உலகம் முழுவதும் அடிவாங்குறதே தமி ழனுக்கு பொழப்பா போச்சு...’ என்ப தற்கு, ‘ஆமாம், அதை வேடிக்கை பார்க் குறதும் தமிழன்தான்’ என்பதுபோன்ற சற்றே சீரியஸான வசனங்களும் உண்டு.

பாலாஜியின் வேகமான பேச்சும் நக்கலும் வழக்கம்போலக் கைகொடுத்திருக்கின்றன. ஜோ மல்லூரி, பொன்னம்பலம், கருணாகரன் ஆகியோர் தத்தமது வேலையை ஒழுங்காகச் செய்திருக்கிறார்கள்.

பேயோனின் வசனங்கள், சந்தோஷ் விஜயகுமார் பிரபாகரனின் ஒளிப்பதிவு ஆகியவை படத்துக்கு பலம் சேர்க்கின் றன. சிங்கப்பூரைத் தமிழ்த் திரையுலகில் இதற்கு முன்பு இவ்வளவு அழகாக யாரும் காட்டியதில்லை. ஜோஸ்வா ஸ்ரீதரின் இசை பரவாயில்லை. ‘நதியில் விழுந்த மலரின் பயணம்...’ கேட்க இனி மையாக இருக்கிறது. ‘நம்ம ஊரு சிங் காரி...’ ரீமிக்ஸ் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனால், படம் நெடுகத் தெளித்துவிட் டதுபோன்ற பாடல் காட்சிகள் எடுபடவில்லை.

கலகலப்பும் இளமைத் துள்ளலும் சிங்கப்பூர் வாசனையும் சேர்ந்து படத்தை அதன் குறைகளை மீறி ரசிக்கவைக்கின்றன.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/பறந்து-செல்ல-வா-திரை-விமர்சனம்/article9422041.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.