Jump to content

பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி


Recommended Posts

பீட்சா, பர்கர் வேணுமா ட்விட் பண்ணுங்க: கூகுள் அதிரடி

 

கூகுள்


திடீரென நீங்கள் இருக்கும் இடத்தில் பீட்சா, பர்கர் அல்லது வேறு ஏதேனும் உணவு வேண்டும் என்றால் கிடைக்குமா? கிடைக்கும் என்று அடித்து சொல்லுமளவுக்கு கூகுள் அதிரடியாக ஒரு விஷயத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆம்,  ஏதோ ஒரு ஊருக்கு செல்கிறோம் அங்குள்ள உணவகம் , ஹோட்டல், தியேட்டர் போன்றவை எங்குள்ளது என நமக்கு தெரியாது. அதனை கண்டுபிடிக்க ஏதுவாக இந்த சேவையை அறிமுகம் செய்துள்ளது கூகுள்.

இதற்கு நமக்கு தேவைப்படுவதெல்லாம் ஒன்று தான். உங்களிடம் ட்விட்டர் கணக்கு இருந்தால் போதும். உங்கள் ட்விட்டர் கணக்கு மூலம் உங்கள் மொபைலில் இருந்து நீங்கள் விரும்பும் இமோஜியை பதிவிட்டு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்தால் போதும். உங்கள் கணக்கை டேக் செய்து கூகுள் நீங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள தகவலை வழங்கிவிடும்.

உதாரணமாக நீங்கள் பர்கர் இமோஜியை டைப் செய்து அதோடு @google என கூகுள் ட்விட்டர் பக்கத்தை டேக் செய்ய வேண்டும். உங்கள் ஜிபிஎஸ் தகவலின் படி பர்கர் நியர் பை என கூகுள் தேடலின் லின்க்கை உங்கள் ட்விட்டர் கணக்கை டேக் செய்து கூகுள் பாட் ட்விட் செய்யும். அப்பறம் என்ன அதன் வழியாகவே நீங்கள் ஆர்டர் செய்து சாப்பிடலாம். ஏற்கனவே குறிப்பிட்ட ஃபேஸ்புக் பக்கங்கள் தங்களது தகவல் மற்றும் சேவைகளை பாட் மூலம் வழங்கி வருகின்றன. பாட் சேவையை பெரும்பாலான நிறுவனங்கள் மக்களுடன் இணைப்பில் இருக்க பயன்படுத்தி வருகின்றன. 

தெரியாத இடத்தில் இந்த சேவையை பயன்படுத்தி இடங்களை அறிவது வசதியாக உள்ளது என இதனை பயன்படுத்துபவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி ஹோட்டல், வாகனம் என அனைத்தையும் எளிதில் தேர்ந்தெடுக்க இந்த சேவை வசதியாக உள்ளது என்றும் கூறுகின்றனர். இதன் தேடல் தளம் கூகுள் தேடல் தளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் கூகுள் சமீபத்தில் டெக்ஸ்க்டாப் தேடலையும், மொபைல் தேடலையும் தனித்தனியே மாற்றிய‌மைத்தது குறிப்பிடத்தக்கது. மொபைல் தேடலின் துல்லியம் டெஸ்க்டாப்பை விட அதிகம் என்பதால் கூகுள் இதற்கு மொபைலை மீடியமாக தேர்ந்தெடுத்துள்ளது. அதிகமான ரேட்டிங், தேடல் ஆகிய அடிப்படையில் தேடல்கள் வரிசைப்படுத்தப்படுகிறது. இதனால் பயன்பாட்டாளர்களுக்கு கூடுதல் தேடல் தரத்தில் தகவல்களை வழங்க முடியும் என்கிறது கூகுள்.

twitter-google-logos2-1920_17197.jpg

கூகுள், ஃபேஸ்புக் இரண்டுமே டேட்டாவை வைத்து மேஜிக் காட்டும் நிறுவனங்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஃபேஸ்புக்கின் அதிரடி நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் கூகுள் இதுபோன்ற திட்டத்தை அறிவித்துள்ளது. மக்கள் பயனடையும் இது போன்ற விஷயங்களை தொடர்ந்து அறிமுகம் செய்யவுள்ளதாக கூகுள் தெரிவித்துள்ளது. 

இதில் எல்லாம் சரியாக இருந்தாலும் ஜி.பி.எஸ் மூலம் ட்ராக் ஆகும் இடம், இமோஜியின் பெயர் ஆகியவற்றை சில நேரங்களில் த‌வறாக புரிந்து கொள்வது என சிறிய தொழில்நுட்ப சிக்கல்கள் எழுகிறது. அதனைத் தாண்டி 80 சதவிகிதத்துக்கும் அதிகமான ட்விட்டுகள் சிறப்பான சேவையை வழங்குவதாக கூறப்படுகிறது. 

இப்போதே உங்கள் செல்போனில் ட்விட்டர் ஆப் மூலம் இந்த சேவையை பயன்படுத்துங்கள். உங்கள் நண்பர்களோடு சேர்ந்து நீங்கள் இருக்கும் இடத்தில் உள்ள விஷயங்களை இமோஜிக்கள் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.

http://www.vikatan.com/news/information-technology/74633-if-you-want-burger-just-tweet-to-google.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.