Jump to content

ரெட்டை வால் காதல்!


Recommended Posts

மான்டேஜ் மனசு 14: ரெட்டை வால் காதல்!

 

 
 
rettaivaal_kuruvi_2765826f.jpg
 
 
 

ஒரு சனிக்கிழமை மாலைப் பொழுதில் பழைய அலுவலக நண்பர்களை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன்.

நாயக பிம்பங்களைத் தாண்டி சமூக வலைதளங்களில் கௌதம் மேனன், செல்வராகவன் பிறந்த நாளுக்கு ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்தது பற்றி பேச்சு திரும்பியது.

'விண்ணைத் தாண்டி வருவாயா' படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆனதை குறிப்பிட்டு சுரேஷ் சிலாகித்துக் கொண்டிருந்தான்.

சுரேஷ் சாதாரணமான, சின்ன விஷயத்தைக் கூட வெகு அழகாக சொல்லி கவனிக்க வைப்பான். எதிரில் இருப்பவர்கள் நிதானமாக இல்லையென்றால் தன் பக்கம் வாக்கு சேகரித்து விடுவான். அவன் மார்கெட்டிங் உத்தி உடன் இருப்பவர்களை சுண்டி இழுக்கும்.

சுரேஷ் பேசியதை விட, அன்று பிரேம் பேசியதுதான் அதிர்ச்சி.

''கௌதம் மேனன்தான் காதல் படம் எடுக்க தகுதியானவர். அவரோட ரசனைக்குப் பக்கத்துல யாரும் வர முடியாது. ஸ்டைல், மேக்கிங், அழகியல் கௌதம் மேனனின் மிகப் பெரிய பிளஸ். இந்த மாதிரி படம் எடுக்காம, செல்வராகவன்லாம் எதுக்கு இப்படி படம் எடுக்கிறாப்ல'' என்று போகிற போக்கில் காலி செய்தான் பிரேம்.

செல்வாவைப் பற்றி பேசும் போது எதிர்க்காமல் இருக்க முடியுமா?

''செல்வா காட்டுற காதல்ல நீ எந்த மேஜிக்கையும் பார்க்க முடியாது. ஃபேன்டஸி இருக்காது. யதார்த்தமா இருக்கும். இன்னும் சொல்லணும்னா நமக்கு என்ன நடந்தது, என்ன நடக்குதுன்னு சொல்ற படத்தைதான் செல்வா எடுக்கிறார். நீ பார்க்கிற கௌதம் மேனன் படம் உனக்கு அந்நியமானது. மேட்டிமைத்தனத்தோட நகல் அது. உனக்கு ஜெராக்ஸ்தான் வேணும்னா கொண்டாடு. தப்பில்லை.''

இதை சொன்னது... ஆம், நானேதான்.

''பாஸ்... காதல்னா மகிழணும். உற்சாகமா இருக்கணும். துள்ளிக் குதிக்கணும். அழுதுகிட்டு கிடைக்கலைங்கிற கவலையில தாடி வளர்த்துக்கிட்டு பைத்தியமா திரியக்கூடாது. ஆனா, உங்க செல்வா அதைத்தானே சொல்றார். நமக்கு நெகடிவ் விஷயமே வேணாம் பாஸ்!''

பிரேம் இதைச் சொன்னதும் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

மூச்சுக்கு முப்பது முறை எதைப் பற்றி கருத்து கேட்டாலும் எதிர்மறையாக பேசும் பிரேம், 'ஆன்லைனில் மொபைல் வாங்குவது என்றாலும் ஏமாத்திடுப்புடுவாய்ங்க' என்று வாய் வலிக்க சொல்லும் பிரேம், புதுசா ஆரம்பிக்கும் எந்த விஷயத்துக்கும் வாழ்த்துகள் சொல்லாமல் 'ஆபத்து பாஸ். எச்சரிக்கையா இருங்க' என்று சொல்லும் பிரேம், காதல் என்றால் பாசிட்டிவ் மட்டுமே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறானே... இது என்ன மாதிரியான டிசைன்!

இந்த இடைவெளியில் சுரேஷ், பிரேம் பக்கம் சாய ஆரம்பித்தான்.

''பாஸ் என்னதான் இருந்தாலும் ஜெஸ்ஸியை மறக்க முடியுமா?'' என்று சினிமாத்தனமாக பேச ஆரம்பித்தான். அவன் சிவகார்த்திகேயன் ரசிகன் என்பதை உங்களுக்கு சொல்லியே ஆக வேண்டும். சிவாவின் ரசிகன் என்பதில் என்று குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் இருக்கிறது. 'இறுதிச்சுற்று' படம் வந்தபோது கூட 'மான்கராத்தே'தான் பெஸ்ட் என்று அலப்பறை கூட்டியவன் சுரேஷ் என்றால் அவனைப் பற்றி நீங்களே ஒரு அனுமானத்துக்கு வந்திருப்பீர்கள் என்று கருதுகிறேன்.

''ஜெஸ்ஸி கேரக்டரைப் பார்க்க நீ அதுல உன் காதலியைப் பார்க்க முடியுமா? ஒரு படத்தை நல்லா இருக்குன்னு சொல்ல முடியும். ரசிக்க முடியும். சந்தோஷப் பட முடியும். ஆனா, அந்த படத்துக்குள்ள உன் வாழ்க்கையைப் பார்த்திருக்கியா? நீ விரும்புறதும், எதிர்பார்க்குறதும் ஒரே விஷயமா இருக்கலாம். ஆனா, அதுதான் உனக்கும், உன்னை சுற்றி இருக்குறவங்களுக்கும் நடக்குதா? வழக்கமான எம்பிஏ மூளையை கழட்டி வெச்சிட்டு உணர்வுரீதியா பேசு சுரேஷ்.''

''இல்லை பாஸ். செல்வா படம் பார்த்தா எனக்கும் அந்த ஃபீல் வருது. கஷ்டமா இருக்கு. அழாம இருக்க முடியலை. என் வலியை நான் யாருக்கு அழுது காட்ட விரும்பலை. ஏன் என் வலியை நான் எல்லாருக்கும் சொல்லணும். அதான் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு விரும்புறேன்."

''அப்போ நிஜமாவே எந்த சந்தர்ப்பத்துலயும் உன்னால சிரிச்சுக்கிட்டே இருக்க முடியுதா? அதற்கான சாத்தியங்கள் இருக்கா?''

''அப்படி சிரிக்க முடியாத சமயங்கள்ல நான் ஜாலியா இருக்குற மாதிரி நடிக்கிறேன். இப்போ நடிக்க ஆரம்பிச்சா அப்புறம் அதுவே பழகிடும். சரிதானே!''

எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியில் ஜாலியான ஆள் என்ற பிம்பத்தைக் கட்டமைக்கும் சுரேஷ் இப்படி நடந்துகொள்கிறான். அவனுக்குள் எவ்வளவு வலி இருந்தால் இந்த பிம்பத்தை வலிந்து திணித்துக்கொண்டிருப்பான். அவன் சொன்ன மேலோட்டமான ஒரு பதில் எங்களை உலுக்கிவிட்டது.

இந்த உரையாடலை இன்னும் நீட்டிக்கச் செய்தால் ஆரோக்கியமாக இருக்காது என்பதை உணர்ந்த சிவாதான் 'த்ரிஷா இல்லனா திவ்யா' என்றான்.

''அது எப்படி பாஸ் உடனே அடுத்த காதலுக்கு தயாராக முடியும்?''

'நீங்க போன தலைமுறை பாஸ். இந்த தலைமுறையில் இதெல்லாம் சகஜம்' என்று சொல்லிவிடுவார்களே என்று உள்ளூர சின்ன பயம் இருந்தது எனக்கு.

இந்த நீண்ட உரையாடலை அனுபவப் பகிர்வாகவே தருகிறேன்.

*

முந்தைய தலைமுறையில் ஒரு காதல் சேராமல் போனால், தோல்வியில் முடிந்தால், ஒரு தலைக் காதலாக இருந்தால் அந்த பாதிப்பில் இருந்து வெளியே வர நீண்ட நாட்கள் ஆகும். ஆனால், இன்றைய தலைமுறை அந்த பாதிப்புகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல் சர்வ சாதாரணமாக கடக்கிறார்கள். தாடியும் திரியும் இளைஞர்கள் எண்ணிக்கை இப்போதும் அதிகம் என்றாலும், அதன் பின்னணியில் இருப்பது ட்ரெண்ட் தானே தவிர சோகம் அல்ல.

இன்றைய தலைமுறையின் மன முதிர்ச்சிக்கு 'மயக்கம் என்ன' படம் சிறந்த உதாரணம். சுந்தரின் காதலி ரிச்சா கங்கோபாத்யாயாவை தனுஷ் விரும்புகிறார்.

நண்பனின் காதலியை விரும்புவதால் தனுஷ் குற்ற உணர்ச்சி அடைவதோடு நிற்கவில்லை. அதற்கடுத்து காதலிக்கிறார். திருமணமும் செய்து கொள்கிறார்.

'புதுப்பேட்டை' படத்தில் நண்பனின் தங்கையை திருமண கோலத்தில் பார்க்கிறார் தனுஷ். தாலி எடுத்து கொடுக்க வேண்டிய தனுஷ், சோனியா அகர்வாலின் கழுத்தில் கட்டிவிடுறார். அங்கேயும் எந்த உறுத்தலும் தனுஷுக்கு இல்லை.

அதே சமயத்தில், இளைஞர்கள் இப்படி பயணிப்பது ஆபத்து என்று எண்ணம் வருகிறதா? அதற்கும் செல்வராகவன் இன்னொரு காட்சியில் பதில் சொல்கிறார்.

தனுஷின் இன்னொரு நண்பன் ரிச்சாவை ''நல்லா பார்த்துக்குவேன். என் கூட வந்திடு'' என்று சொல்கிறார். அப்போது ரிச்சா பேசுவது தான் இன்றைய தலைமுறையின் மனமுதிர்ச்சிக்கான உதாரணம்.

''தப்பு உன் மேல இல்லை. உன் முன்னாடி நான் அழுதிருக்கக் கூடாது. தாராளமா எங்க வீட்டுக்கு வரலாம். எனக்குப் பிரச்சினையே இல்லை. இந்த மாதிரி ஒரு விஷயம் நடந்ததுன்னு ரெண்டு பேருமே மறந்துடலாம். சீக்கிரம் கல்யாணம் பண்ணு. அதான் உன்னை இப்படியெல்லாம் பேச வைக்குது.

உன் பொண்டாட்டிய நீதான் தேடிக்கணும். இன்னொருத்தர் பொண்டாட்டி மேல ஆசைப்படக்கூடாது'' என்று சொல்வார்.

அடுத்தடுத்த சந்தர்ப்பங்களில் எந்த நெருடலும் இல்லாமல் அந்த நண்பனை ரிச்சா இயல்பாய் சந்திப்பதும், பேசுவதும் ஆரோக்கியமான அணுகுமுறை.

செல்வா இன்றைய தலைமுறையையும், காதலையும் எவ்வளவு அழகாய் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

இன்னும் சொல்லப் போனால் கௌதம் மேனன் சினிமாவில் வரும் கதைகளும் சிலருக்கு நடந்திருக்கும். செல்வராகவன் சினிமாவில் வரும் கதைகளும் சிலருக்கு நடந்திருக்கும். ஆனால், நாம் எந்த வகை கதாபாத்திரமாக இருக்கிறோம்? எந்த கதை நமக்கானது? என்பதுதான் இங்கே முக்கியம்.

இதைத் தாண்டியும், ஒரு சிலர் இன்றைய காதலின் அப்டேட் வெர்ஷன் வேறுவிதமாக புரிந்துகொள்கிறார்கள். சுருக்கமாக சொல்லப் போனால் 'தீராத விளையாட்டுப் பிள்ளை' படத்தின் தியரி தான். ஆனால், ஒரு பெண் ஒரே சமயத்தில் இருவரைக் காதலித்தால் நாம் கொடுக்கும் பட்டப்பெயர்களை வார்த்தைகளால் சொல்ல முடியாது.

இல்லை என்கிறீர்களா?

'தீராத விளையாட்டுப் பிள்ளை', 'இனிமே இப்படித்தான்' படங்களை நீங்கள் எந்த உறுத்தலும், நெருடலும் இல்லாமல் பார்த்திருக்கிறீர்கள்தானே. அந்தப் படங்களை பார்க்கும்போது விஷால் மீதோ, சந்தானத்தின் மீதோ உங்களுக்கு கோபம் வந்திருக்கிறதா? இல்லை பரிதாபம் வந்திருக்கிறதா? இந்த இரண்டுமே இல்லாமல் எந்த சங்கடத்தையும் உணராமல் உங்களால் இயல்பாக படம் பார்க்க முடிந்ததா?

இயல்பாக படம் பார்க்க முடிந்தது என்றே வைத்துக்கொள்வோம். 'எங்கேயும் எப்போதும்' படத்தில் ஒரு காட்சி வரும். பேருந்தில் பயணிக்கும் ஒரு பெண் செல்போனில் தன் காதலனுடன் பேசிக் கொண்டிருப்பார். இன்னொரு அழைப்பு வரும்போது, 'ஹேய். கட் பண்ணு. கட் பண்ணு. அப்பா லைன்ல வர்றார். கட் பண்ணு'' என சொல்லிவிட்டு அடுத்த அழைப்பில், 'சொல்லுடா. அப்பாகிட்ட பேசிக்கிட்டு இருந்தேன்' என பேசுவார். ஒரே சமயத்தில் இருவருடன் பேசுவதற்கே நீங்களோ, உங்கள் நண்பர்களோ, பக்கத்து இருக்கையில் இருந்தவரோ திட்டித் தீர்த்திருப்பீர்கள்தானே.

இங்கே ஒரு பையன் ஒரே தருணத்தில் இருவரை ஈஸியாக காதலிக்க முடிகிறது. பெண்கள் அப்படி செய்ய முடியுமா? அப்படி செய்கிற பட்சத்தில் நீங்கள் அவர்களை ஏற்றுக்கொள்வீர்களா?

சரி. இதை விடுங்கள்.

உங்கள் காதலி / மனைவியின் பழைய காதல் தெரிந்த பிறகு எந்த கேள்வியும் எழுப்பாமல் இருக்க முடியுமா? அல்லது அந்த காதலன் பற்றி உங்கள் பிரியத்துக்குரியவர் சொல்லும்போது இயல்பாக கடக்க முடியுமா?

இந்த விவாதத்துக்குள் போவதற்கு முன் சிவாவின் நண்பன் ராகவ் கதையை சொல்லிவிடுகிறேன்.

ஒரே சமயத்தில் இரண்டு பேரை எந்த உறுத்தலும் இல்லாமல் காதலிக்க முடியும் என்பதற்கு நிகழ்கால உதாரணம் ராகவ்.

ராகவ் விஸ்காம் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான். ரம்யா முதலாமாண்டு கணிதம் படித்துவந்தாள். பக்கத்து வீட்டிலேயே வசிப்பதால் கிட்டத்தட்ட சின்ன வயதில் இருந்தே இருவரும் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். ஆனால், கல்லூரிப் பருவத்தில் ரம்யாவை ராகவ் அதிகம் கவனிக்கத் தொடங்கினான். கணக்கில் தடுமாறும் ரம்யாவுக்கு உதவினான். அவன் செய்த சின்ன சின்ன குறும்புகளையும் ரம்யா ரசிக்கவே செய்தாள்.

ரம்யாவின் சாந்தமான தன்மையும், அமைதி தவழும் செயல்களும், முகக் களையும் ராகவை இயல்பாக ஈர்த்தன. கணக்கு சொல்லித் தரும் லாவகத்துடன் காதலையும் கற்றுக்கொடுத்தான். ரம்யாவும் காதலித்தாள். பக்கத்து வீடுதான் என்பதால் ராகவ் நண்பர்களுடன் அரட்டைக் கச்சேரி முடித்து வந்த பிறகு, அவள் எந்த நிலையில் இருந்தாலும் அட்டனென்ஸ் போட்டுவிடுவாள்.

சுமாராக படிப்பவள், ராகவுக்காக நல்ல மார்க் எடுக்க ஆரம்பித்தாள். ராகவ் எடுத்துத் தந்த ஆரஞ்சு நிற சுடிதாரை அலுக்காமல் அணிவாள். இப்படியே இருந்த ராகவ் - ரம்யா காதலில் தீட்சிதா நுழைந்தாள்.

தீட்சிதாவின் தோற்றமும், நுனி நாக்கு ஆங்கிலமும், சென்ட் வாசமும், குரலும் ராகவை என்னவோ செய்தன. தீட்சிதாவின் பக்கத்து வீடுதான் ராகவின் நண்பன் ஜெகதீஷ் வீடு. ஜெகதீஷை பார்ப்பதாகச் சொல்லி சொல்லியே தீட்சிதாவை நோட்டம் விட்டான். தீட்சிதாவும் ஒரு கட்டத்தில் ராகவை கவனிக்க ஆரம்பித்தாள்.

அவள் கை குலுக்கி பிறந்தநாள் வாழ்த்து சொன்னாலே ஷாக் அடித்ததாய் சொல்வான். வழக்கமாக பசங்கதானே பெண்களுக்கு அதிகம் செலவு செய்வார்கள். இங்கே ராகவ் விஷயத்தில் தலைகீழ் விகிதம். ராகவ் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு ஐஸ்கிரீம், பீட்ஸா, சாக்லேட் என்று இஷ்டத்துக்கும் வாங்கிக் கொடுத்தாள்.

ஃபேஸ்புக் அக்கவுண்டில் பாஸ்வேர்டில் தீட்சிதாவின் பெயரையும் சில எழுத்துகளுடன் சேர்த்து வைத்து உருகினான். ரம்யாவுக்கு ராகவ் விலகிப் போவது போல தெரியவில்லை. அங்கேயும் அச்சரம் பிசகாமல் மெயின்டெய்ன் செய்தான்.

தீட்சிதா ராகவ் வீட்டுப் பக்கமே புது வீடு வாங்கி குடிவந்தார்கள். அப்போது ஆரம்பித்தது பிரச்சினை. இரண்டு காதலும் தெரியவர, ராகவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு வசை பாடி வணக்கம் போட்டனர். தீட்சிதா அவளுக்கு கை வரப் பெற்ற ஆங்கிலத்தில் அதிகமாய் திட்டித் தீர்த்தாள். ஸ்டேட்டஸ், குடும்பம் என்று ஒன்றுவிடாமல் கேவலப்படுத்தியபோதும் ராகவ் கலங்கவில்லை.

ரம்யாதான் அதிகம் கவலைப்பட்டாள். 'என்கிட்ட பேசுற மாதிரியே தானா தீட்சிதா கிட்டயும் பழகியிருப்ப? அப்போ என்கிட்ட பேசுனதையே அவகிட்டயும் சொல்லும்போது உனக்கு கூச்சமா இல்லையா? ஒரே சமயத்துல ரெண்டு பேரை எப்படி உண்மையா காதலிக்க முடியும்? ஒண்ணு நான் இல்லைன்னா அவ. யார் வேணும்னு நீ முடிவு பண்ணியிருக்கலாம். இல்லை அடுத்த காதல் வந்த பிறகு என்னை விட்டு விலகியிருக்கலாம். எப்படி ரெண்டு பேரை மெயின்டெய்ன் பண்ண நினைச்ச? இதை நினைச்சாலே இத்தனை நாள் அன்பும் பொய்னு தோணுது.

ஆனா, உண்மையான அன்பை ஏமாத்துறது எவ்ளோ பெரிய துரோகம்? நீ நேர்மையா இல்லை. இப்படி ஒரு காதல் நமக்குள்ள இருந்ததுக்காக நான் வெட்கப்படுறேன். உன்னை காயப்படுத்த விரும்பலை. ஆனா, உன் மேல கோபம், வருத்தம், வெறுப்பு எல்லாமே இருக்கு. ஆனா, என் உண்மையான காதலுக்கு எந்த அர்த்தமும் இல்லாமப் போச்சு...' என வெதும்பினாள்.

ரம்யா காதலின் கசப்பில் கணிதத்தை டிஸ்கன்டினியூ செய்துவிட்டு நர்ஸிங் படிக்கப் போய்விட்டாள். தீட்சித் எம்பிபிஎஸ் படித்துவிட்டு மெல்போர்னில் எம்எஸ் படிக்கிறாள். ராகவ் நெல்லையில் ஒரு லோக்கல் சேனலில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருக்கிறான்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர், இரு காதலிகள், சிக்கிக் கொண்டு தவிப்பது என எல்லாமே எனக்கு 'ரெட்டைவால் குருவி' படத்தை நினைவுபடுத்தின.

பாலுமகேந்திரா இயக்கத்தில் மோகன், அர்ச்சனா, ராதிகா நடிப்பில் வெளியான படம் 'ரெட்டைவால் குருவி'. தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணிபுரிகிறார் மோகன். இவர் மனைவி அர்ச்சனா வங்கியில் பணிபுரிகிறார். வேலை நிமித்தம் காரணமாக வேலூருக்கு மாற்றல் ஆகிறார் அர்ச்சனா. இந்த இடைவெளியில் மெல்லிசைப் பாடகி ராதிகாவுக்கும், அவரைப் பேட்டி எடுக்கும் மோகனுக்கும் காதல் முகிழ்க்கிறது. திருமணம் ஆனதை சொல்லாமல் மறைக்கும் மோகன் ராதிகாவையும் திருமணம் செய்துகொள்கிறார். இரண்டு வீடுகளிலும் மாறி மாறி வந்து போவதும், அலுவலகத்தில் இருந்து சமாளிப்பதுமாக நாட்களை நகர்த்துகிறார். ராதிகாவும், அர்ச்சனாவும் ஒரே சமயத்தில் கர்ப்பிணி ஆகிறார்கள். இருவரும் ஒரே மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்படுவதால் மோகனின் குட்டு வெளிப்படுகிறது.

கடைசியில் அவரால் அவரது குழந்தைகளைக் கூட முழுசாய் கொஞ்ச முடியாதபடி இருவரும் விரட்டி அடிக்கிறார்கள். ஒரு நாள் மாறுவேடத்தில் சென்று தன் குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருக்கும் மோகனைப் பார்த்து அர்ச்சனா திருடன் என கத்துகிறார். அதற்குப் பிறகு மோகனைப் பார்த்து கலங்கி, அப்பா டா என சொல்லி குழந்தையின் அழுகையைப் போக்குகிறார். ராதிகா வீட்டுக்கு போகும் மோகன் அர்ச்சனா வீட்டுக்கு போவதை மறைக்கிறார். அர்ச்சனா வீட்டில் இருக்கும்போது ராதிகா வீட்டுக்கு ஏன் போகப்போகிறேன்? பொய்யாய் சமாளிக்கிறார். இப்படியே அந்த சமாளித்தல் படலம் நீள்கிறது.

இந்தப் படத்தின் ஆரம்பத்தில் சுதந்திரத்தை வாங்கிப்புட்டோம் என்று ஒரு பாடல் வரும். அதில் இரண்டாவது வரியாக வெள்ளையனை துரத்திப்புட்டோம். அவன் கூட வெட்கத்தையும் விரட்டிப்புட்டோம் வரிகளுக்கு நாவசைத்து ஆடும் பெண்ணை கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் அவர் மௌனிகாதான் என்று கண்டுகொள்வீர்கள்.

ரெஸ்டாரன்டில் ராதிகா நாளைக்கு ப்ளூ டிரெஸ் போட்டுக்கலாம்னு இருக்கேன் என தோழியிடம் சொல்வார். அவர் யாரென்று பார்த்தால் ஹீரா.

பாலுமகேந்திரா தன் பிற்கால படங்களின் கதாநாயகிகளை இதில் சின்ன பிரேமில் அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

டைட்டில் கார்டில் பார்த்தால் உதவி இயக்கத்தில் அறிவுமதியின் பெயர் பளிச்சிடுகிறது.

அர்ச்சனாவின் நடிப்பு இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். அர்ச்சனாவின் குரலில் இருக்கும் குழைவில் கூட காதல் வெளிப்படும். ஒட்டிக்கிறதுக்கு மட்டும் வருவே. விஷயம் முடிஞ்சதும் தொட விடமாட்டியே என்பார்.

ராதிகாவோ மூக்கும் முழியுமா என்பதற்கு பதில் முழியும் முழியுமா என்று மோகனை ரசிப்பார். செக்ஸ் கல்வி பற்றி தைரியமாக கருத்து சொல்வார்.

இன்னும் சொல்லப்போனால் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் என்ற வார்த்தையை சினிமாவில் பயன்படுத்தியது இந்தப் படத்தில்தான். குழந்தைகள் தின விழாவில் பேட்டி எடுக்கும் மோகனிடம், சிந்தாதிரிப்பேட்டை சீனிவாசன் என்று கெத்தாக அறிமுகம் செய்யும் டீன் ஏஜ் இளைஞன் எதிர்காலத்தில் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஆகப் போவதாக கூறுவான்.

இப்படி 'ரெட்டைவால் குருவி' படத்தைப் பற்றிப் பேச நிறைய இருக்கிறது.

ஆண் பார்வையில் இருவரைக் காதலிக்கும் 'ரெட்டை வால் குருவி', 'ஆட்டோகிராப்' என பல படங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு பெண் காதலித்தால் ஏற்றுக்கொள்வோமா?

சினிமாவில் மட்டும்தான் இப்படியா? இலக்கியத்தில் இருக்கிறதா என்றால் நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்றே சொல்ல முடியும். கவிதா சொர்ணவல்லி 'கதவின் வெளியே மற்றொரு காதல்' என்ற சிறுகதையை எழுதி இருக்கிறார்.

'எல்லோருக்கும் இரண்டாவது காதல் எந்த நிமிடமும் நிகழும். ஏன் நான்காவது காதல் கூட வரும், வந்தே தீரும். வாழ்க்கை முழுக்க காதல் துரத்திக்கிட்டே இருக்கும்' என்கிறார் கவிதா சொர்ணவல்லி.

வெறுப்பில் பிரிவில் இன்னொரு காதல் முளைக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு காதலில் இருந்துகொண்டே இன்னொரு நபரையும் காதலிக்க முடியும் என்பதுதான் கதைக்கரு.

இரு தோழிகள். ஒருவர் தன் இரண்டு காதலையும் சொல்கிறார். அதை சகித்துக்கொண்டு கேட்கும் தோழியும் இறுதியில் ஒரே சமயத்தில் இருவரை காதலிக்கிறார்.

இதுவா பெண்ணியம்? பெண் சுதந்திரம் என்பது என்ன தெரியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டு கொடி பிடிப்பவரா நீங்கள்? அந்த கதையில் ஃபெமினிசம் இருக்காது. ஆனால், எமோஷனல் இருக்கும். முடிந்தால் படித்துப் பாருங்கள்.

கணவன் / மனைவிக்கு ஏற்கெனவே இருந்த காதலை ஏற்றுக்கொண்ட நீங்கள், ஒரு பெண்ணின் கடந்த கால / நிகழ் கால காதலையும் உணரமுடியும்தானே!

*

- மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-14-ரெட்டை-வால்-காதல்/article8324041.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.