Jump to content

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்


Recommended Posts

15 minutes ago, நவீனன் said:

கூர்மையான அரசியல் விமர்சகர்

திரையில் அவரின் தனித்தன்மையான உடல்மொழி பலரை கவர்ந்தது. அதே போல் அவரது அரசியல் விமர்சனங்களும் வித்தியாசமானவை, மிகக் கூர்மையானவை. தன்னுடைய விமர்சனங்களில் தவறிருப்பின் அதைத் தயங்காமல் ஒப்புக் கொண்ட நேர்மையாளராக இருந்தார்.

அட பாவிகளா, அப்ப சீமானும் துரோகியா?

சோவை புகழும் துரோகி சீமான் ஒழிக:grin:

Link to comment
Share on other sites

அரசியலில் இருப்பவர்கள் எழுந்தமானமாக "செத்தாண்டா சேகரு" என்று அறிக்கை விடமாட்டார்கள். tw_blush: ஆனால் மனத்துக்குள் "போய்ச் சேர்த்துது சனியன்" என்று நினைப்பார்கள். :D: கட்டுமரத்துக்கும் இரண்டு நல்ல வார்த்தை சொல்லி மலர்மாலை அணிவிக்க வேண்டியது வரும். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலர் எழுதும் ஒவ்வொரு கருத்துக்களிலும் சிலவிடயங்கள்  தெளிவாகின்றது 
ஒரு விடயத்தை நுண்ணியமாக ஆராயாமல் எழுந்தமானமாக கருத்து சொல்பது ...  
சமயங்களில் நிதானம் இழந்து எழுதுவது  ... 
அபத்தமான  இலங்கை அரசியல் நிலைப்பாட்டை ஆரோக்கியம் என நினைப்பது  ...
புலிகளை வசைபாடுதல் மட்டுமே  மாற்றுக்  கொள்கை என நினைப்பது  ...
இவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம்... கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

நான் இப்படி எழுதுவது அதிகப் பிரசங்கிதனமாக கூட இருக்கலாம்..
பரவாயில்லை, யார் மனதையும் நோகடிக்கும் நோக்கத்தோடு இது பதியப்படவும் இல்லை.

Cho died ...so what...!!! 

 

Link to comment
Share on other sites

8 minutes ago, raja.m1982 said:

திருமுருகன் காந்தி அரசியல் இயக்கத்தில் இருப்பவர். அரசியல் கட்சி நடத்துகிறவர் இல்லை. எனது முதல் பதிவில் இதை தெளிவாகப் போட்டிருந்தால் உங்களுக்கு குழப்பம் வந்திருக்காது.

நிற்க.. சீமானின் அறிக்கையைப் படித்தீர்களானால் அவர் சொன்னதில் தவறு ஏதும் காணமுடியாது. அவர் சொன்னவைகள்..

1) அவர் ஒரு தேர்ந்த நகைச்சுவை நடிகர் - உண்மை

2) நாடக ஆசிரியர் - உண்மை

3) பத்திரிகை ஆசிரியர் - உண்மை

4) அரசியல் விமர்சகர் - உண்மை

5) துணிச்சலாக கருத்துக்களை சொல்பவர் - உண்மை

6) 46 ஆண்டுகள் பத்திரிகை உலகில் சாதித்தவர் - உண்மை

7) அவரது கருத்துக்களின்மேல் மாற்றுக் கருத்து உண்டு - உண்மை

 

Link to comment
Share on other sites

8 minutes ago, Sasi_varnam said:

புலிகளை வசைபாடுதல் மட்டுமே  மாற்றுக்  கொள்கை என நினைப்பது  ...
இவர்கள் போக வேண்டிய தூரம் அதிகம்... கற்றுக்கொண்டால் குற்றமில்லை...

புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை வசைபாடுவதின் மூலம் தாங்கள் புலிகளின் விசுவாசிகள் என்று புல்லாங்குழல் ஊதுபவரும் உண்டே இங்கு சசி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, ஜீவன் சிவா said:

புலிகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை வசைபாடுவதின் மூலம் தாங்கள் புலிகளின் விசுவாசிகள் என்று புல்லாங்குழல் ஊதுபவரும் உண்டே இங்கு சசி.

நீங்கள் சொல்வதும் உண்மை தான் ஜீவன்.

அதே நேரம் புலிகளை ஏற்றுக்கொள்ளாமை வேறு... புலிகளின் மேல் காழ்ப்புணர்ச்சியை சம்பந்தமே இல்லாமல் கொட்டுவது வேறு.  

உதாரணம் இங்கு கனடாவில் ஒரு நண்பர் .. மட்டக்களப்பு மதவாத பௌத்த துறவியின் செயலை பற்றி நாங்கள் விசனமாக  கதைக்கும் போது, அவர்கூறுகிறார் "புலிகள் மட்டும் திறமா என்ன?  அவர்கள் செய்யாத அட்டூழியமா ?" ...

இதில் புலி எங்கே வந்தது? எதை எதோடு முடிச்சு போடுகிறார் பாருங்கள்...
யுத்தம் முடிந்து 7 வருடங்களின் பின்னர் நல்லிணக்கம் பேசும் பொழுது இது... இதை எப்படி பார்க்கலாம்...
இப்படித்தான் போகிறது சிலரது அரசியல் பார்வை.. இதை பற்றி கதைத்தால் புலி விசுவாசி ...புல்லாங்குழல் வாசி......What to do.. 

நெஞ்சில் ரணமாய் இருக்கும் இன்னும் ஒரு உதாரணம் சொல்கிறேன் 
என்னுடன் படித்த நண்பி (பிறந்தது / படித்தது / கல்யாணம் காட்டியது) எல்லாமே யாழ்ப்பாணம். 
யுத்தம் முடிவடைந்து சில மாதங்களின் பின்னர் போராளி இசைபிப்ரியா அவர்களின் காணொளி வந்ததது.
நெஞ்சம் பதை பதைத்க, தூக்கமிழந்த தருணங்கள் அவை. இந்த நண்பியுடன் நான் உரையாடும் போது இது குறித்து பேச்சு வந்தது... அவரின் அன்றைய பதில்/ நிலைப்பாடு அன்றே  எங்கள் நட்புக்கு ஆணி அடித்தது.
அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை தான் " இவையளுக்கு இது வேணும். ஆமிக்காறங்களோட சண்டைக்கு போனால் இதுவம் இல்ல இதுக்கு மேலயும் செய்வான் தானே." இவையல் எத்தின சிங்கள ஆட்களை குண்டு வைச்சு கொன்றிசீனம்"... ஆமி என்ன எல்லோரையுமா இப்படிக்கு கொண்டவன்.... புலிகளை தானே கொண்டவன்...இப்படி பல  விதமாய் கதைத்து காயப்படுத்தினார். 
இப்படியும்  சிலது இருக்கத்தானே செய்யுது... என்ன செய்வது...   
  
 

Link to comment
Share on other sites

11 minutes ago, Sasi_varnam said:

அதே நேரம் புலிகளை ஏற்றுக்கொள்ளாமை வேறு... புலிகளின் மேல் காழ்ப்புணர்ச்சியை சம்பந்தமே இல்லாமல் கொட்டுவது வேறு

சசி உங்கள் உணர்வுகள் என்னுடையதும்தான்.

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். நடந்தவை முடிந்ததாக இருக்கட்டும் ஆனால் இனியும் வேறுபட்டிருக்காமல் ஒன்றிணைவோம் என்பதுதான் எனது ஆசை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஜீவன் சிவா said:

சசி உங்கள் உணர்வுகள் என்னுடையதும்தான்.

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். நடந்தவை முடிந்ததாக இருக்கட்டும் ஆனால் இனியும் வேறுபட்டிருக்காமல் ஒன்றிணைவோம் என்பதுதான் எனது ஆசை.
 

மனிதன் மனசு வைத்தால் எதுவுமே சாத்தியம் நண்பா ...

Link to comment
Share on other sites

On 12/7/2016 at 3:39 PM, ஜீவன் சிவா said:

ஒரு மிருகத்தின் பேரால் ஆயிரக் கணக்கில் அழித்தது நீங்களா? சோவா?

 

4 hours ago, ஜீவன் சிவா said:

ஆனால் எமது போராட்டமே தவறென்று பழி சொல்லும் பைத்தியங்களை நானும் வெறுக்கின்றேன். 

முன்னுக்குப் பின் முரணாக உள்ளதே .....

Link to comment
Share on other sites

திரு சோ அவர்கள. எதையும் வெளிப்படையாக பேசுபவர். விடுதலைப்புலிகளை எதிர்ப்பதாக பாவனை காட்டிக்கொண்டு தமிழரின் உரிமைப் போராட்டத்தையே எதிர்ததார். வடுதலைப்புலிகளின் வீழ்சசிக்கு பின்னரும் இலங்கை அரசின் யுத்தக்குற்றங்களையும் அக்கிரமங்களையும் ஆதரித்து பேட்டியளித்தார்.  இல்ங்கை அரசு எந்தகாரணத்தை கொண்டும் தண்டிகக்கபடகூடாது என்று வெளிப்படையாகவே தெரிவித்தார்.

தமிழரின் உரிமை போராட்டம் தொடங்கிய காலத்திலேயே அதாவது விடுதலைப்புலிகள் உருவாக முன்பே  திரு. ஜே.ஆர் ஜெயவர்ததனாவை சந்தித்து விடுதலைப் போரட்டத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தார். புலிகள் உட்பட    விடுதலைப்போராளிகள் அனைவரையும் பயங்கரவாதிகள் என்று திட்டிய இவர் அதேசமயம் இலங்கை அரசாங்கத்தின் அத்தனை பயங்கரவாத அக்கிரமங்களையும் வெளிப்படையாக ஆதரித்தார். இலங்கை அரச படைகள் தமிழரை கொன்ற ஒவ்வோரு தடவையும் அதை நியாயப்படுத்தி தனது கேள்வி பதில் பகுதியில் எழுதி மகிழ்ந்தார்

இவரது ஆத்மா  நரகத்தில் அவதியுற என்னும் இறைவனை வேண்டி நிற்கிறேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/7/2016 at 7:49 AM, Surveyor said:

போராட்டத்தில் போராடியும் அதற்க்கு சார்பாக இருந்தவர்களையும் மரணித்தபின்பும் கொச்சைப்படுத்தும் உங்களை எந்த வகையில் சேர்ப்பது?

அவர்கள் செய்தால் அது தர்மயுத்தம் .............

அதையே அடுத்தவன் கற்று கொண்டால் 
அது படு மிருக யுத்தம் !

இப்பிடி பல சாமி இந்தியாவிலே சுத்துது !

ஒவ்வரு மனிதனும் வாழ்வை ஒவ்வரு வகையாக விளங்கி கொள்கிறான் 
பக்தியை புரிந்து கடவுளிடம் தம்மை ஒப்படைப்பவன் 
காதலை புரிந்து தன்னை காதலியிடம் ஒப்படைப்பவன் 
சமூக சீரழிவை கண்டு சமூக சேவையில் தன்னை அர்பணிப்பவன் 
பூமி இயற்கை மீது காதல் கொண்டு தன்னை அர்பணிப்பவன் 
தனது குடுமபம் மீது காதல் கொண்டு தன்னை அர்ப்பணிப்பவன் 
எதோ ஒரு கல்வி (மருத்துவம் கணிதம் விஞ்ஞானம்) யில் காதல் கொண்டு 
ஆராய்ச்சியில் தன் வாழ்வை அழிப்பவன் 

..............................என்று எந்த வகையில் சென்றாலும் ஒரு ஆறு அறிவு மனிதன் 
தனது கடமை என்று ஒன்றை ஏற்று கொள்கிறான். அதை இன்னொருவன் மறுதலிக்க கூடும் 
அல்லது அது தவறே என்றும் வாதிட கூடும்.


இதில் எதுவுமே இல்லாது .............. சொந்த பிழைப்பு நடாத்த 
ஒரு சமூகம் .... இயற்கை .....குடும்பம் ....காதலி  என்று எதோ ஒன்றை அழித்து 
சுத்த பித்தலாட்டம் காட்டி ...... எதோ ஒருவனின் பலயீனத்தை பயன்படுத்தி 
தான் பிரபலம் காட்டி வாழ்ந்து சாகும் .....

ஒவ்வரு மிருகக்கத்தின் இறப்பிலும் எனக்கு மிக்க மகிழ்ச்சி உண்டு !!! 

Link to comment
Share on other sites

விஜய் தொலைக்காட்சியில் ஜெயலலிதாவுடன் நடித்த நடிகை (பெயர் ஞாபகம் இல்லை) ஜெயலலிதாவின் நினைவுப்பாடல்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவர் ஜெயலலிதாவை பற்றி கூறும் போது பழைய நடிகைகள் ஏழு பேருடன் சோவையும் அழைத்து விருந்து வைத்து அவர்களுடன் சேர்ந்து உணவருந்தியதையும் குறிப்பிட்டு ஒவ்வொருவருக்கும் சேலையும் சோவுக்கு வேட்டி சால்வையும் கொடுத்து மகிழ்வித்தாராம். சாப்பாட்டு வேளையில் சோவின் சாப்பட்டுக்குள் மிளகாய் கடிபட்டு விட்டதாம். அதற்காக மிளகாய் கடிபட்டதால் உறைப்பில் உணவை உண்ண முடியவில்லை என முணுமுணுத்தாராம்.உடனே ஜெயலலிதா சோ முறைப்பாடு செய்யாத இடமே இல்லை எனலாம் என ஒரே போடாக போட்டாராம்,

Link to comment
Share on other sites

“உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும்!” - ஜெயலலிதாவின் ஏக்கம்!

 

 

p30a.jpg

சாட்டிலைட் சேனல்கள் இல்லாத காலம் அது. அரசு தொலைக் காட்சியான தூர்தர்ஷன் மட்டுமே அப்போது கோலோச்சிக் கொண்டிருந்தது. தனியார் தயாரித்துத் தரும் தொடர்களை தூர்தர்ஷனில் ஒளிபரப்ப ஏக டிமாண்ட் இருந்தது. கரன்சியை தள்ளினால்தான் சீரியல்களுக்கு அனுமதியே கிடைக்கும். அப்படிப்பட்ட சூழலில் தனது நாடகத்துக்கு அனுமதி கேட்டு அப்ளிகேஷன் போட்டிருந்தார் சோ. அனுமதி கிடைக்கவில்லை. இத்தனைக்கும் அப்போது ராஜீவ் அமைச்சரவையில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சராக இருந்த அருண் நேரு, சோவுக்கு ரொம்ப நெருக்கம். ஆனாலும் சிபாரிசுக்கு போய் நிற்கவில்லை சோ. ‘‘என்னோட சீரியலுக்கு அனுமதி தர தூர்தர்ஷன் அலுவலர்கள் எதையோ எதிர்பார்க்கிறார்கள்’’ என தனது ஊழியர்களிடம் சொல்லி ஆதங்கப்பட்டார். ‘‘எதுக்கு கவலைப்படுறீங்க சார்... பணத்தை கொடுத்திட வேண்டியதுதானே’’ என ஊழியர்கள் சொன்னபோது, ‘‘பணம் இல்லாமல் இல்லை. அதைக் கொடுத்து சீரியலுக்கு அனுமதி வாங்கிவிடலாம். அதற்கு நான் துக்ளக்கை நிறுத்திவிட வேண்டும். பரவாயில்லையா?’’ என பதில் சொன்னார் சோ. அவர்தான் சோ!

1991 - 1996 ஜெயலலிதா ஆட்சி கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. 1996 சட்டசபைத் தேர்தல் நேரத்தில், காங்கிரஸில் இருந்து பிரிந்து த.மா.கா என்கிற புதிய கட்சியை மூப்பனார் ஆரம்பித்து தி.மு.க-வோடு கூட்டணி வைத்தார். அந்த கூட்டணிக்கு நடிகர் ரஜினியின் ஆதரவும் கிடைத்தது. ‘‘ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. அதனால் தி.மு.க கூட்டணிக்கு வாக்களியுங்கள்’’ என பகிரங்கமாகவே சொன்னார் ரஜினி. த.மா.கா கூட்டணி அமையவும் ரஜினி ஆதரவு தரவும் பின்னணியில் இருந்து செயல்பட்டவர் சோ. தி.மு.க ஆட்சியும் அமைந்தது. அதனாலேயே சோ மீது வெறுப்பு காட்டினார் ஜெயலலிதா. அந்த காலகட்டத்தில்தான் சோவின் மகள் திருமணம் நடந்தது. ‘‘மகளின் திருமணத்துக்கு ஜெயலலிதாவுக்கு பத்திரிகை வைக்கலாமா?’’ என துக்ளக் ஊழியர்களிடம் கருத்துக் கேட்டார். அதன்பிறகுதான் அழைப்பிதழ் வைக்க ஜெயலலிதாவிடம் அப்பாய்ன்மென்ட் கேட்டிருக்கிறார் சோ. ‘‘நீங்க வர வேண்டாம். நானே உங்க ஆபிஸுக்கு வருகிறேன்’’ என சொல்லி, துக்ளக் ஆபிஸுக்கு ஜெயலலிதா போனார். ‘ஜெயலலிதா வருகிறார்’ என்கிற தகவலை ஊழியர்களிடம் சொன்ன சோ, ‘‘அவங்க வருவாங்க... உங்கள் ஒவ்வொருவரையும் அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன். அவரவர் இருக்கையிலேயே இருங்கள்’’ என்றார். ஜெயலலிதா வந்ததும் அறிமுகப் படலம் நடந்து முடிந்தது. அதன்பிறகு, ‘‘மாடியில்தான் என் ஆபீஸ். உன்னால படி ஏற முடியுமா? எதற்காக சிரமப்படுகிறாய். இங்கேயே பேசிக் கொள்ளலாமா?’’ என சோ சொல்ல... ‘‘எனக்கு ஒன்றும் சிரமம் இல்லை’’ என சொல்லி, படியேறி போய் அவர் அறையில் பேசிவிட்டுப் போனார் ஜெயலலிதா. ‘நீ... வா...’ என ஜெயலலிதாவிடம் ஒருமையில் பேசியவர், ஊழியர்களிடம் ‘அவங்க... வருவாங்க’ என பன்மையில் பேசினார். முந்தையது அந்நியோன்யம்; பின்னது மரியாதை! 

p30b.jpg

சில வருடங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்தார் சோ. அவரை பார்க்கப் போயிருந்தார் ஜெயலலிதா. ‘‘உடம்பை நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்க... ரெஸ்ட் எடுங்க... நீங்க ரொம்ப வருஷம் இருக்கணும். உங்களுக்கு முன்னாடி நான் போயிடணும். எனக்குப் பின்னாடிதான் நீங்க போகணும்’’ என சோவிடம் ஆறுதல் சொல்லியிருக்கிறார் ஜெயலலிதா.

‘அப்படி எல்லாம் பேசக்கூடாது’ என்று கண்டித்தார் சோ. ஆனால், ஜெ. சொன்னதுதான் இறுதியில் நடந்தது. முந்தைய நாள் ஜெயலலிதாவும் பிந்தைய நாள் சோவும் இறந்துபோனார்கள்!

தீவிர இந்துத்வா ஆதரவாளர் சோ. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது துக்ளக் அட்டைப் படத்தை கருப்பு நிறத்தில் போட்டு எதிர்ப்பை பதிவு செய்தார். தனது அலுவலகத்தில் பணியாற்றிய முஸ்லிம் ஊழியர் ஒருவருக்கு ஐந்து வேளையும் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கித் தந்த பண்பாளர்.

துக்ளக்கில் வெளிவரும் ‘கேள்வி பதில்’ பகுதிக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் தவறாமல் பதில்களை கொடுத்துவிடுவார் சோ. வேலைகள் இருந்தால் மட்டுமே வியாழக்கிழமை வரையில் தள்ளிப் போகும். அவர் இறப்பதற்கு முன்புகூட பதில்களை கொடுத்துவிட்டுத்தான் போனார். அந்த பதில்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்றுதான் ரெடியானது. தனது மருமகள் சித்ராவை அழைத்து வாசகர் கேள்விகளுக்கு பதில்களைக் கொடுத்திருக்கிறார். துக்ளக் ஆரம்பித்த காலத்தில் இருந்து கேள்வி பதில் பகுதி கடைசி நேரத்தில் பிரின்டுக்கு போன வரலாறு கிடையாது. அதுதான் முதல்முறை. அது கடந்த ஞாயிறு அன்றைக்குத்தான் அரங்கேறியது. உடல்நிலை குன்றி வீட்டில் இருந்த காலகட்டத்தில்கூட ஒவ்வொரு இதழும் அவரின் பார்வைக்குப் போய் ஓகே ஆனபிறகுதான் பிரின்ட்டுக்கே போகும். அப்படித்தான் கடந்த துக்ளக் இதழை ரெடி செய்துவிட்டு எடிட்டரிடம் ‘ஓகே’ வாங்க சப் எடிட்டர்கள் அப்போலோ போனார்கள். அதே ஞாயிற்றுக்கிழமைதான் அப்போலோவில் இருந்த ஜெயலலிதா சீரியஸ் என செய்திகள் பரவின. ‘‘நிறைய கெடுபிடிகள் சார்... நாங்க போராடித்தான் இங்கே வந்தோம்’’ என சோவிடம் சொல்லியிருக்கிறார்கள் சப் எடிட்டர்கள். ‘‘யாராவது வி.ஐ.பி-கள் வருகிறார்களா என்ன?’’ என கேட்டுவிட்டு பக்கங்களைப் பார்த்து திருத்தங்களை சொல்லியிருக்கிறார் சோ. ‘‘கடைசி நேரத்தில் பதில்களை கொடுத்திருக்கீங்க... வழக்கம் போல இருந்தது சார்’’ என சப் எடிட்டர்கள் சொல்ல, ‘‘அப்ப இம்ப்ரூவ்மென்டே இல்லை என்கிறீர்களா?’’ என இரட்டை அர்த்தத்தில் கேட்டுவிட்டு, ‘‘சோவின் கேள்வி பதில்கள் வருவதை போஸ்டரில் போடுங்க’’ எனவும் சொல்லியிருக்கிறார். ‘சோவின் கேள்வி பதில்கள்’ இதுவரைக்கும் போஸ்டரில் வந்ததே கிடையாது. ‘‘அவ்வளவுதான் சார்... இனிமேல் என்ன இருக்கு சார்’’ என்றபடியே சப் எடிட்டர்களை அனுப்பி வைத்திருக்கிறார்.

p30.jpg

‘‘இம்ப்ரூவ்மென்ட் இல்லையா?’’ என அவர் எதற்காக கேட்டார் என தெரியவில்லை. அதன்பிறகு அவரின் உடல்நிலையில் முன்னேற்றமே இல்லாமல் போய்விட்டது. உடனே ஐ.சி.யூ-வுக்கு சோ மாற்றப்பட்டார். அதே நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலையும் சீரியஸ் ஆகிக் கொண்டிருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இரண்டு பேர்களின் உயிர்களும் போராடிக் கொண்டிருந்தன. ஜெயலலிதா உயிர் பிரிந்தபோது அந்த செய்தி சோவின் நினைவுக்குப் போய் சேரவில்லை. அடுத்த 30 மணி நேரத்தில் சோவின் உயிரும் உடலைவிட்டுப் பிரிந்து போனது.

http://www.vikatan.com/juniorvikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.