Jump to content

Recommended Posts

பாதிக்கப்பட்ட ஒரு மக்கள் சமூகத்தின் வலிமையான ஆயுதம் கண்ணீர்தான். சிங்களப் பேரினவாதத்துக்கு இது புரிகிறது. அதனால்தான் நவம்பர் 27 ஆம் தேதி தமிழர் தாயகத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தக் கடல் அலையெனத் திரண்ட மக்களின் கண்ணீரைக் கண்டு உலகம் மிரள்கிறது.

சென்ற வாரம் வரை 'மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கு எத்தனைப் பேர் வருகிறார்கள் என்பதைப் பார்க்கத்தானே போகிறோம்' என்று நக்கலடித்துக் கொண்டிருந்தது இலங்கை அதன் முகத்திலடிப்பதைப் போல் நவம்பர் 27 ஆம் திகதி ஈழத் தாயகத்தின் மாவீரர் துயிலுமில்லங்கள் அனைத்திலும் பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள் திரண்டனர். கண்ணீர் மல்க மாவீரர்களுக்கு அவர்கள் அஞ்சலி செலுத்தினர். அதைப் பார்த்துத்தான் அதிர்ந்து போயிருக்கிறது இலங்கை.

'விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தியவர்களைக் கைது செய்' என்கிற கூக்குரல் கொழும்பிலிருந்து தொடர்ச்சியாக எழுவதைப் பார்க்கிற போது மாவீரர் நாளில் எமது ஈழத்துச் சொந்தங்கள் செலுத்தியிருக்கிற நன்றிக் கடன் சிங்களப் பேரினவாதத்தின் குரல் வளையைப் பிடித்து நெரித்திருப்பதை உணர முடிகிறது.

தாய் மண்ணுக்காகத் தங்களை அர்ப்பணித்த அந்த மாவீரர்களை இந்த இனம் எந்தக் கணத்திலும் மறவாது என்று அடிக்கடி குறிப்பிடுபவன் நாம். அது தாயகத்தில் மட்டுமின்றி உலகெங்கும் வாழ்கிற ஈழத்துச் சொந்தங்கள் மீதான எமது நம்பிக்கை. அந்த நம்பிக்கை பொய்த்துவிடவில்லை.

புலம்பெயர் நாடுகள் அனைத்திலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மிகச் சிறப்பாக நடந்திருந்தாலும் அதையெல்லாம் மிஞ்சுவதாக இருந்திருக்கிறது சொந்தத் தாய் மண்ணில் விடுதலைப் புலிகளுக்குத் தரப்பட்டிருக்கிற மரியாதை

தமிழீழத்தின் நிர்வாகத் தலை நகராக இருந்த கிளிநொச்சியில் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் 27 ஆம் திகதி நடந்த மாவீரர் நாள் நிகழ்வு ஒன்றே ஈழம் முழுக்க என்ன நடந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளப் போதுமானது.

'மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த கனகபுரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மலர்களுடனும் தீபங்களுடனும் திரண்டிருந்தனர். சரியாக மாலை 06.03க்கு மணி ஒலித்தது. 06.05 க்கு விளக்குகள் ஏற்றப்பட்டன. மாவீரர் துயிலுமில்லத்தில் முன்பு நிலை கொண்டிருந்த ராணுவம் மாவீரர்களின் நினைவுக் கற்களையும் கல்லறைகளையும் இடித்து அகற்றிவிட்டிருந்ததால் தங்கள் உறவுகளைப் புதைத்த இடங்களைத் தேடிப் பிடித்து மக்கள் அஞ்சலி செலுத்தியதைப் பார்க்க முடிந்தது.' என்று கனகபுரம் நிகழ்வை விவரிக்கின்றன ஊடகங்கள்.

"ஏழு ஆண்டுகளுக்குப் பின் என் மகனுக்கு அவனுடைய நினைவிடத்தில் மீண்டும் அஞ்சலி செலுத்துவேன் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை. 2007 வரை எப்படி நடந்ததோ அதே அளவு எழுச்சியுடன் மாவீரர் நாள் நடக்க வேண்டும். என்னுடைய இந்த ஆசையும் நிறைவேற வேண்டும். அந்த நாள் மிகத் தொலைவில் இல்லை என்பதை உணர்கிறேன்" என்று விடுதலைப் புலி வீரன் ஒருவனது தாயார் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டதைப் பதிவு செய்திருக்கிறது ஊடகங்கள்.

பத்து ஆண்டுகளுக்கு முன் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நேரில் தரிசித்த தருணத்தில் எப்படி மெய் சிலிர்த்தேனோ அதே அளவுக்கு இப்போதும் மெய் சிலிர்க்கிறது எமக்கு.

வன்னி மண்ணில் விடுதலைப் புலிகளின் ஆட்சி நடந்த போது மாவீரர் நாள் நிகழ்வுகள் எப்படி நடந்ததோ அப்படித்தான் நடந்திருக்கிறது இப்போதும். கம்பீரமாக ஒலித்த மணியோசையுடன் நிகழ்வுகள் ஆரம்பித்திருக்கின்றன.

களத்தில் மட்டுமின்றி மற்ற நடவடிக்கைகளிலும் திட்டமிட்டுச் செயல்படுவது விடுதலைப் புலிகளின் வழக்கம். மாவீரர் நாள் நிகழ்வும் அப்படித்தான். பிரபாகரனின் பெருமதிப்புக்கு உரியவராக இருந்த பெரியவர் பொன்.தியாகம் தான் மாவீரர் பணிமனையின் பொறுப்பாளராக இருந்தார்.

பிரபாகரனின் மாவீரர் நாள் உரை ஐந்து மணிவாக்கில் தொடங்கி மிகச் சரியாக மாலை 06.02க்கு முடிவடைவது வழக்கம். அவரது உரை முடிந்த பின் 06.03க்கு மணி ஒலிக்கும். அந்த மணியோசைக்குப் பின்னரான நிசப்தத்தைக் கிழித்தபடி களம் கண்ட கவிஞன் புதுவை ரத்தினதுரையின் 'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே' பாடல் ஒலிக்கும். புதுவையின் பாடல் நம்முடைய நரம்புகள் ஒவ்வொன்றுக்குள்ளும் சிலிர்ப்பையும் உயிர்ப்பையும் செலுத்துகிற ஆற்றல் மிக்கது.

'தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய

சந்தனப் பேழைகளே!

இங்கு கூவிடும் எங்கள் குரல்மொழி கேட்குதா

குழியினுள் வாழ்பவரே?

உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள்

உறவினர் வந்துள்ளோம்

அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய

தோழர்கள் வந்துள்ளோம்.....'

என்று தொடங்குகிற புதுவையின் பாடல்,

'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.......'

என்று அந்தப் பாடல் தொடர்கிறது.

நவம்பர் 27 அன்று கிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் புதுவையின் பாடல் ஒலித்த போது அங்கே திரண்டிருந்த மக்கள் உணர்ச்சியின் விளிம்பில் நின்று கொண்டிருந்ததைப் படத்துடன் செய்தியாக்கியது ஊடகங்கள்.

'எங்கே எங்கே ஒருதரம் விழிகளை

இங்கே திறவுங்கள்

ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே

மறுபடி உறங்குங்கள்.......'

என்கிற பாடல் வரிகள் ஒலித்த போது அதைக் கேட்டுக் கதறியழுத சகோதரிகளின் உணர்ச்சியையும் நெகிழ்ச்சியையும் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறது ஊடகங்கள்.

கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் என்ன நடந்ததோ அதுதான் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கில் அனைத்துப் பகுதிகளிலும் நடந்திருக்கிறது. வெறி பிடித்த ராணுவத்தால் இடிக்கப்பட்டுத் தூர்க்கப்பட்டிருந்த அத்தனை மாவீரர் துயிலுமில்லங்களையும் தாங்களாகவே புனரமைத்து, தாய்மண்ணுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள் தமிழீழ மக்கள்.

"யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்வதாகத் தெரிவித்து விட்டு வடக்கு கிழக்கில் ராணுவ முகாம்கள் முன் விடுதலைப் புலிகளின் பதாகைகளை ஏந்திச் சென்றிருக்கிறார்கள். இது இனவாதத்தை வலுப்படுத்துகிற செயல். புலிகளை நினைவு கூர்ந்தவர்கள் மீது உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குமுறுகிறார் மகிந்த ராஜபக்சவின் கைத்தடியான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. பகிரங்கமாக இன வெறியைத் தூண்டி விடுவதில் வல்லவரான அவரைப் போன்றவர்கள் இனவாதம் பற்றியெல்லாம் பேசுவதுதான் கொடுமை.

உதய கம்மன்பில மட்டுமல்ல, நம்முடன் சேர்ந்தே நடமாடுவதாகக் காட்டிக் கொள்கிற நண்பர்கள் மட்டும் வாயை மூடிக் கொண்டிருக்கிறார்களா என்ன? 'மாவீரர் நாள் நிகழ்வுகள் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்த்த பிறகாவது மைத்திரிபாலா அரசின் ஜனநாயகத்தால்தான் வடகிழக்கில் மாவீரர் நாளை முன்பு போல் அனுஷ்டிக்க முடிந்தது என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா' என்று வம்புக்கு இழுக்கிறார் ஒரு நண்பர்.

போர்க் குற்றச் சாட்டுகளிலிருந்து சிங்கள ராணுவத்தைக் காப்பாற்றியே ஆக வேண்டிய இக்கட்டான நிலையில் நின்று கொண்டிருக்கிறார் மைத்திரிபாலா. கொலை வெறி பிடித்த ஒரு கொடூரமான ராணுவத்தை சர்வதேசத்திடமிருந்து காப்பாற்றியே ஆக வேண்டும் என்கிற நிலை மைத்திரிக்கு. ராணுவத்தைக் காப்பாற்றினால்தான் அவரால் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள முடியும்.

போர்க் குற்ற விசாரணையைத் திசை திருப்புவதற்காகத்தான் 'நல்லிணக்கம்' என்கிற வார்த்தையைத் தொடர்ந்து பயன்படுத்துகிறார் மைத்திரி. தமிழர்களுக்கு எந்த விதத்திலும் அரசாங்கம் தடையாக இருக்கவில்லை என்று பறைசாற்ற மாவீரர் நாளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். போர்க் குற்ற விசாரணை என்கிற வார்த்தையையே குழி தோண்டிப் புதைக்கிறவரை இந்தப் போலி நாடகமெல்லாம் தொடரும்.

ஒருபுறம் தமிழர்களுக்கு ஜனநாயக உரிமைகள் தரப்பட்டிருப்பதைப் போன்ற ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கிவிட்டு அதைக் காட்டியே போர்க் குற்ற விசாரணைக்கு முற்றுப் புள்ளி வைக்க மைத்திரி முயல்கிறாரே? இதற்குப் பெயர்தான் நயவஞ்சகம். என்ன நடந்தது? என்பதையும் என்ன நடக்கிறது? என்பதையும் புரிந்து கொள்ளாமல் ஜனநாயக உரிமைகளை மைத்திரி அரசு மதிப்பதாக யாரும் பிழையாகக் கருதி விடக் கூடாது.

இன்னொரு புறம் 'சர்வதேசம் நம்மை ஏமாற்றி விட்டது' என்று தமிழகத்திலிருந்து பிரச்சாரம் செய்கிற நண்பர்கள், ஈழத்து உறவுகளை சர்வதேசத்தைக் காட்டிலும் கடுமையாக ஏமாற்றியவர்கள். தாய்த் தமிழ் நாட்டைச் சேர்ந்த நாம் சர்வதேசத்தைக் குறைசொல்ல நமக்கு என்ன தகுதி இருக்கிறது?

8 கோடித் தமிழனின் கோழைத் தனமில்லாமல் வேறெது ஒன்றரை லட்சம் ஈழத்து உறவுகளைக் கொன்றது? கொல்லப்பட்ட தமிழருக்கு இன்று வரை நீதி கிடைக்காததற்கு 'நமக்கெதுக்கு வம்பு' என்கிற நமது பொறுப்பின்மையன்றி வேறெது காரணம்?

ஈழத்தில் நடந்தது சர்வ நிச்சயமாக ஒரு இனப் படுகொலை. சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் தயவுடன் அந்த இனப் படுகொலையை மூடி மறைத்தது இலங்கை. 'நடந்தது போர்க் குற்றம்தான்' என்று சாதித்தது. சர்வதேசத்தை நம்பவைக்க போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையில் சர்வதேசப் பங்களிப்பை வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தானும் சேர்ந்தே கொண்டு வந்தது. இது ஒரு கட்டம்.

இப்போது நடப்பது மைத்திரி நடத்தும் நாடகத்தின் அடுத்த காட்சி. தானே கொண்டு வந்த போர்க் குற்ற விசாரணை தீர்மானத்தைக் குழி தோண்டிப் புதைக்க தீவிரமாக முயல்கிறார். மகிந்த ராஜபக்சவைக் காப்பாற்ற இனப் படுகொலைக் குற்றத்தையே மூடி மறைக்க முடிந்த தன்னால் 'போர்க் குற்ற விசாரணை'யைக் கிடப்பில் போடவும் முடியும்' என்று உறுதியாக நம்புகிறார். அதற்காக அவர் உருவாக்குகிற போலிச் சித்திரங்களில் ஒன்று மாவீரர் நாளை அனுமதித்திருப்பதாக பாசாங்கு காட்டுவது.

சென்ற ஞாயிற்றுக்கிழமை மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்ட அதே நாளில் கொழும்பில் மைத்திரி செய்த பிரகடனத்தைப் படித்தவர்களுக்கு மைத்திரி என்ன செய்கிறார் என்பது புரியும்.

'இலங்கை ராணுவத்தின் மீதான போர்க் குற்றச்சாட்டுகளுக்கும் அது தொடர்பான விசாரணைகளுக்கும் முடிவு கட்ட அமெரிக்கா உதவ வேண்டும். இந்த விஷயத்தில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும்' என்று கேட்டு அடுத்த அதிபர் டோனால்டு டிரம்புக்கு கடிதமே எழுதி விட்டாராம் மைத்திரி. கொழும்பு நிகழ்ச்சியொன்றில் இதைத் தெரிவித்திருக்கும் அவர் ஐ.நா.வின் அடுத்த செயலர் நாயகமான அன்டோனியோவுக்கும் இதே போன்ற ஒரு கடிதத்தை அனுப்பியிருப்பதாகக் கூறியிருக்கிறார்.

அத்துடன், "ராஜபக்சவையும் ராணுவத்தையும் போர்க் குற்றச் சாட்டுகளிலிருந்து பாதுகாப்பது நாங்கள்தான். இதை அவர்கள் மறந்து விடக் கூடாது. என்னால்தான் அவர்கள் பத்திரமாக இருக்கின்றனர்" என்று பகிரங்கமாகப் போட்டு உடைத்திருக்கிறார்.

ராஜபக்சவும் ராணுவமும் குற்றவாளிகள் தான் என்பது மைத்திரிக்குத் தெரிகிறது. அதே சமயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தனது ஆட்சி கவிழ்ந்து விடும் என்பதும் தெரிகிறது. தன் பதவியைக் காக்க அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக அமெரிக்காவுக்கு கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார். இதைப் புரிந்து கொள்ளாமல் 'ஜனநாயக வழியில் மாவீரர் நாளை அனுமதித்திருக்கின்றனர்' என்று நம்புகிற நண்பர்களை என்னவென்று சொல்வது?

http://www.tamilwin.com/articles/01/126908?ref=right_articles

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.