Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என்னடா யோசிக்கிற இந்த வெயிலுக்க நிண்டு கொண்டு ஒன்றும் இல்லடா எல்லா வீட்டிலையும் கணக்கெடுத்தாச்சு இந்த வீடு மட்டும் தான் கடைசி அதுகென்ன  வா உள்ள போவோம் .போவோம் சரி ஆனால் நீ கனக்க கதைக்கப்படாது ஏண்டா  அந்த Ms; என்ன மோசமான ஆளடா பெயர் கந்தசாமி ஊர் கூப்பிடுவது வெடியன் கந்தசாமி மோசம்மான ஆள்  வாயை துறந்தால் வஞ்சகம் இல்லாமல் பொய் சொல்லுவார்டா மனுசன் அப்படியா வா உள்ள போவோம் ஐயா ஐயா  ... என்டா சத்தத்தை காணல பொறுடா அந்தாள் தூங்கிட்டு இருப்பாரு சரி சரி செருப்பைகழட்டி விடு ஏண்டா அதால அடிப்பாரோ நண்பன் முறைக்கிறான் சரி சரி யாருப்பா அது நான் தான் ஐயா ஜி.எஸ் வந்திருக்கிறன் வணக்கம் வணக்கம் ஜி. எஸ்சா வா தம்பி என்ன ஏதாவது நிவாரணம் கொடுக்க போறியளா அல்லது நிவாரணம் தந்து விட்டோம் என்று சொல்லிகையெழுத்து வேண்டி சுருட்ட போறியளா ( மனதுகுள்ள ம்கும்) ஆரம்பமே நல்லா தொடங்கிட்டுது சரி சரி உள்ள வாங்க வெயில் வேற மண்டைய புளக்குது ஓம் ஐயா சரியான வெயில் இருங்கள் நன்றி ஐயா இது யாரு புது பொடியன் இவரோ இப்ப ஐயா யுத்தம்முடிஞ்ச கையோட அரசாங்கம் ஆட்களைகணக்கெடுக்குது எனக்கு உதவியாளாக இவரை போட்டு இருக்கிறது அரசாங்கம் என்னை மேலையும் கீழேயும் பார்க்கிறார் மனுசன் ஏதோ பிகரைப்பார்ப்பது போல கணக்கெடுத்து என்ன செய்ய போறாங்களாம் அது தெரியாது ஐயா கிராமங்களை அபிவிருத்தி செய்வாங்க மொத்த சனத்தொகையும் அறிந்து கொள்ளவதற்க்காகவும் அப்படியா இவர்ட பெயர் என்ன தீரன் என்று ஜி.எஸ் அறிமுகப்படுத்தினான்  என்னை.

இந்தாங்கோ ஐயா போம் இதை நிரப்பி நாளைக்கு தாங்கோ நீங்கள் நிரப்புவீங்கள்தானே நான் நிரப்புவன் இல்லாட்டா மகளை நிரப்ப சொல்லுங்கோ என்று அந்த படிவங்களை அவரிடம் கொடுத்தேன்.

 

சரி சரி ஊர் சுற்றி களைச்சு போனியள் தேத்தண்ணி ஏதாவது குடிங்களன் ம் புள்ள மது  ... மது ஓம் அப்பா இஞ்சி போட்டு மூன்று  பிளேன்டீ ஊத்து மகள் இஞ்சியில்லப்பா சும்மா ஊத்தவா என்று  ஒரு மதுக்குரல் கேட்டது உள்ளே ஒரு மயில் இருப்பது உள்மனது சொல்லியது ஆனாலும் என்ன ஒளிந்து இருப்பதை பார்க்க துடிக்கும் அடிமனது சரி என்ன நம் கண்கள் காணாமலா போய்விடும் என்ற எண்ணத்துடன் திரும்பி பார்க்கையில் நண்பன் போவோம் என்றான் பொறுங்க தம்பி பிளேன்டி இல்லையென்றால் என்ன தோட்டத்தில் இளநீர் குடிப்போம் என்றார் பக்கத்தில் இருந்த நானோ ஓம் இந்த வெக்கைக்கு இளநீர்தான் சரி அப்ப சரி வாங்கோ என்றார் கொக்குதுரட்டியுடன் தோட்டத்திற்கு நுழைகிறோம்  அப்போது பிள்ள மது கொஞ்சம் சீனியும் தேசிக்காயும் தா பிள்ள என்றார் என் மனதில் உள்ளே இருக்கும் மது வர போகிறாள் அவளைப்பார்க்கலாம் என்று தோன்றினாலும் தேசிக்காயும் சீனியும்  எதற்கு என்ற யோசனை ஓடியது வந்தாள் மது ம் (சொல்ல வேலையில்லை கந்தசாமி பெத்துத்தான் வச்சியிருக்கான் என்ற உள் மனதுகுள்ள ஒரு படம் ஓடியது) . இந்தாங்கோ அப்பா பிடியுங்க நான் பள்ளிக்கு போய் பிள்ளையை கூட்டிக்கொண்டு வருகிறேன் என்றாள் ஓடிய படம் எல்லாம் திரை கிழிஞ்சு போனதுபோல நின்றது .

 

எனக்கோ மனக்குழப்பம் வாக்கு பதிவு (வோட்லிஸ்டில்) திருமணமாகவில்லை என்று எழுதியிருக்கிறது ஆனால் பிள்ளையை கூட்டிக்கொண்டு  tu இவள் பள்ளிக்கு போகிறாள் சரி ஐயாட்ட கேட்டு தெரிந்து கொள்வோம் ஐயா என்ன ஐயா நிலத்துல இந்தம் பெரிய குழி அதுவா தம்பி ஆமிக்காரன் இந்த இடங்களை பிடிக்க வரக்குள்ள செல் அடிச்சவன் அந்த செல்களை பிடிச்சு இந்த குழிக்குள்ளதான் போட்ட நான் அது எல்லாம் சேர்ந்து  வெடிச்சதுதான் இந்த குழி என்றார் அந்த குழியோ பயிருக்கு நீர் எடுக்க தோண்டப்பட்டது என நினைக்கிறேன் ஜி எஸ் நண்பன் இதை கேட்டும் கேட்காததுமாக நின்றான் எப்படி பிடிச்ச நீங்கள் அதுவா வீட்ட கிடந்த நெல்லுச்சாக்கை தண்ணில நனைத்து அடிச்ச செல்லை ஒவ்வொன்றாக பிடிச்ச நான் ஆனாலும் ஒவ்வொரு ஷெல்லாக அடிச்சதால பிடிச்சன். ஆனால் பிறகு மல்டி என்ற ஒரு சாமான் இருக்கிரது அதை அடிச்சான் பாரு அது சும்மா மழை பொழியுறாப்போல பொழிஞ்சுது அதை கூரைக்கு மேல ஏறி தாவித்தாவி பிடிக்கைகுள்ள ஓட்டுல  கால் பாடு ஓடு முழுவதும் உடைஞ்சு போச்சுதென்றால் பாருங்கோவன் என்றார் அப்போதுதான் இந்த ஆள்ட பெயர் எனக்கு ஞாபகம் வந்தது அடப்பாவி பொய் கேள்விப்பட்டிருக்கிறேன் அஹா இது அல்லவா உலகமகா பொய் அப்போ நீங்கள் பயங்கரமான ஆள்தான் 

 

ம் அந்த காலத்தில் வேட்டைக்கு ஊர்ல் நான் தான் பேமஸ் ஒரு தோட்டாவுல ரெண்டு மான்களை வேட்டையாடிது நான் தான் அப்படியே இந்த கருமாந்திர பொய்களை கேட்க வேண்டிய நிலையில் நான் எப்படி ஐயா ஒரு தோட்டாவுல அதுவா தம்பி ஒரு நாள் நான் வேட்டைக்கு போனநான் கனநேரம் பத்தைக்குள்ள ஒளிஞ்சு இருந்த நான் ஒரு மானோ மரையோ வரல்ல சரி வீட்ட போவோம் என்று வெளிக்கிடக்குள்ள மலையோரத்துலரெண்டு மானை கண்ட நான் என்னடா ஒன்றை சுடுவமா என்று பார்த்தேன் பிறகு ரெண்டையும் சுடுவோம் என்று சரியாக மலையில் இருந்த விளிம்பை பார்த்து சுட்டநான் தோட்டா போய் விளிம்புல பட்டு இரண்டா பிரிஞ்சு ரெண்டு மானும் சுடு பட்டு கிடந்தது அதை எடுத்து ஊருக்கு கொன்டு வரகுள்ள சனம் எல்லாம் பார்த்திட்டுது அதற்கு பிறகு நான் தான் ஊர் வேட்டைக்காரன் என்றார் . சரி ஐயா போதும் போதும் நம்புறன் ஐயா நம்புறன் ஐயா சரி இந்த சீனியையும் தேசிக்காயயையும் பிடி  என்று சொல்லி விட்டு இளநீர் பருவத்தை விட முத்தின பருவத்தை உடைய இளநீரை பறித்து தந்தார் பின்னர் அதை வெட்டி அதனுள் தேசிப்புளியை புளிந்து விட்டும் சீனியும் விட்டு கலந்து தந்தார் புதுவகையான  இளநீர் அஹா என்ன ருசி  எத்தனை பேர் இப்படி குடித்து இருப்பார்களோ  தாகம் தணிந்தது .

இளநீரில் புது வகையான ஒரு ருசியைக்கண்டேன்

சரி ஐயா உங்கள்ட ஒன்று கேட்கவா என்ன தம்பி கேழு ஐயா உங்கட கள் கல்யாணம் கட்டிட்டாவோ . இல்லை பிறகு எந்தகுழந்தையை கூட்டி வர போகிறா பள்ளிக்கு அதுவா தம்பி அவளுக்கு சாதகம் சரியில்லை கல்யாணம்கட்டுறவன் இருக்க மாட்டானாம் அல்லது இறந்து போய்விடுவானாம் அப்படியா ஓம் இங்க சண்டை நடக்ககுள்ள   வவுனியால இருந்த அவள் வரக்குள்ள அந்த பிள்ளைய கூட்டிக்கொண்டு வந்தா நானும் என்ன சொல்லுற ஒன்றும் சொல்லல யாரோ அநாதை பிள்ளையாம் என்று சொன்னா கேட்டதற்கு . வரும் கல்யாணம் எல்லாம் அந்த சாதகத்தால நின்று போகுது என்றார் மனவருத்தமாக ஐயோ பாவமே என்றேன் நானும் மனுசியும் இவளை நினைச்சு நினைச்சு ஒவ்வொரு நாளும் உள்ளுக்குள்ள அழுறம் தம்பி கவலைப்படாதீங்கோ ஐயா அவக்கு கல்யாணம் நடக்கும் என்று சொல்லி விட்டு சரி ஐயா நாங்கள் வருகிறோம் நாளை உங்கள் மகளிடம் சொல்லி வையுங்கள் அந்த போமை நிரப்பி வைக்க சொல்லி என்று சொல்லி விட்டு  அவர் வீட்டை விட்டு வெளியில் வருகிறோம்

வரும் வழியில் அவளும் அந்த குழந்தையும் வருகிறார்கள் நானும் நண்பனும் இறங்கி கொஞ்சம் கதைக்க வேண்டும் என்றேன் அவளும் மனப்பதட்டத்துடன் என்ன சொல்லுங்க என்றாள் இந்தகுழந்தை பற்றிய விபரங்கள் இவளை எந்த ஆஸ்பத்திரியில் அநாதையாக‌ பெற்ற நீங்கள்  அதற்க்கான சான்று அல்லது எந்த காப்பகத்தில் இருந்து எடுத்த நீங்கள் என்ற எல்லா சான்றுகளும் வேண்டும் அப்பதான் உங்களை இங்கே உள்ள வாக்காளர் பட்டியலில் சேர்க்க முடியும் என்றேன் . அவளோ எதுவும் பேசாமல் மொனமாக நின்றாள் நானோ இப்படி பேசாமல் இருப்பதால் பல்ன் இல்லை நாளைக்கு வருகிறேன் என்று சொல்லிவிட்டு போகும் போது  உன்மையில் உங்களுக்கு ஜாதக பிரச்சினையா என்று நான் கேட்க அவள்  பதிலோ அப்படியானால் இவள் அப்பன் இந்நேரம் இறந்து இருக்கணுமே என்றாள்.

 

அந்த வார்த்தைக்குள் இருந்த  அர்த்தம் கண்டு கொண்டேன்

 

யாரோ ஒருவன் இவளை ஏமாற்றி சென்று இருக்கிறான் அவன் நினைவாக இவள் அவன் குழந்தையை வளர்க்கிறாள் இன்னொரு கல்யாணம் தேவையில்லாமல் அவள் குடும்பத்தையும் ஏமாற்றியும் ஜாதகத்தை மாற்றி எழுதியும் அந்த குழந்தைக்காக வாழ்கிறாள் என்பதை நான் புரிந்து கொண்டேன் இது தெரியாமல் கந்தசாமி தன் சொந்த பேரக்குழந்தையை யாரோ பெற்ற அநாதை போலவே பார்க்கிறார் எப்போ தெரியபோகிறது அவருக்கு இந்த உன்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை

தொடருங்கோ..

 

இப்படியே சில கள விடயங்களும் வெளியில் வரட்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2016 at 0:31 AM, விசுகு said:

நல்ல கதை

தொடருங்கோ..

 

இப்படியே சில கள விடயங்களும் வெளியில் வரட்டும்.

ஊரில பெரியவன் என் கிற கன பேர் உள்ளுக்க  ........................................... அதில் ஒரு பெண் பாதிக்கப்படவள் அவளுக்காக அதை எழுதியது அவ்வளவுதான்  

கருத்துக்கு நன்றி 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாதகத்துக்கு நன்றி முனிவர்

tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/10/2016 at 5:40 AM, குமாரசாமி said:

சாதகத்துக்கு நன்றி முனிவர்

tw_thumbsup:

நன்றிங்கண்ணே 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.