Jump to content

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில்


Recommended Posts

''அண்ண்ணே.... கவுண்டமணி அண்ண்ணே...!'' - உருகும் செந்தில் 

sen_16131.jpg

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'தானா சேர்ந்த  கூட்டம்' படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் செந்தில். ஏழு வருடத்துக்குப் முன்பு கொடைக்கானலில் நடைபெற்ற ஒரு ஷூட்டிங்கில் தவறி விழுந்து முதுகு எலும்பில் அடிப்பட்டு ஏழு வருடங்களாக ஓய்வில் இருந்தவர் செந்தில்.. தற்போது இந்த படத்தில் கமிட் ஆகியிருக்கிறார், அவரிடம் பேசினோம்,

''இப்போ உடல் நலம் எப்படி இருக்கு?''

''ரொம்ப நல்லா இருக்கேன். என்னோட மனைவி, என்ன நல்லாப் பார்த்துக்கிட்டாங்க. இப்போ முழு வீச்சுல நடிக்க ஆரம்பிச்சுட்டேன்.''

உங்க பசங்க என்ன பண்றாங்க?

''மூத்தவர் மணிகண்ட பிரபு, மருத்துவராக இருக்காப்ல. இரண்டாவது பையன் ஹேமசந்திர பிரபு 'சிறுத்தை' இயக்குநர் சிவா கிட்ட உதவி இயக்குநரா இருக்காப்ல. இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. கூட்டுக் குடும்பமா தான் இருக்கோம். மணிகண்ட பிரபுவோட பொண்ணு பேரு மிர்த்தி. அவங்களுக்கு எட்டு வயசு ஆகுது. ஹேமசந்திரனோட பொண்ணு பேரு அஷ்விதா. அவங்களுக்கு மூனு வயசாகுது. என்னோட கஷ்டங்களை சில நேரம் என்னோட பேத்திங்கதான் தீர்க்கிறாங்க.'' 

''இரண்டு பேத்திகளுக்கும் தாத்தா எந்த மாதிரி?''

''இரண்டு பேத்திகளும் நான் வீட்டுக்குப் போனதும் ஓடி வந்து கட்டிப்பாங்க. இரண்டு பேத்திகளோடையும் வாக்கிங் போவேன். தாத்தானா அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.''

comedy%20actor%20senthil_16037.jpg

''உங்க வாழ்க்கையில் உங்களுடைய பெஸ்ட் பிரண்ட் யார்?''

''எனக்கு எப்போதுமே என்னோட மனைவி கலைச்செல்விதான் பெஸ்ட் பிரண்ட். எல்லாமே அவங்கதான். நான் ஏழு வருஷமா பெட் ரெஸ்ட்ல இருந்தப்போ என்ன ஒரு குழந்தை மாதிரி பாத்துக்கிட்டாங்க. கோயிலுக்குப் போகணும்னாக் கூட என்கிட்ட சொல்லிட்டுத்தான் போவாங்க. என்னோட உலகமே அவங்கதான். அவங்களுக்கும் நான் தான் உலகம். ''

''உங்க ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு உங்க மனைவி வந்திருக்காங்களா?''

''இத்தனை வருஷமா நடிச்சிட்டு இருக்கேன். இதுவரைக்கும் ஒரு நாள் கூட ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததே இல்ல. என்னோட எல்லாப் படங்களும் அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும். என்னோட வாழ்க்கையில நான் வாங்கிய வரம் என்னோட மனைவி. அவங்க இல்லனா நான் இல்ல.''

''இப்பவும் இவ்வளவு சுறுசுறுப்பா இருக்கீங்களே எப்படி? என்ன வயசாகுது?''

''எனக்கு வயசாச்சுனு யார் சொன்னா? நான் இன்னும் இளமையாதான் இருக்கேன். இன்னும் அதே வேகத்தோட, அதே போலத்தான் நடிக்கிறேன். நடிகர்களுக்கு ஏது வயசு.''

''செந்தில்கிட்ட மத்தவங்களுக்குப் பிடிச்ச விஷயம்?''

'''நான் யாரோட பிரச்னைகளிலும் தலையிட மாட்டேன். நான் உண்டு, என்னோட வேலை உண்டுனு இருப்பேன். இத்தனை வருடங்கள் ஆச்சு, எனக்கு எதிரிகள் என யாருமே இல்ல. எல்லாருமே நல்ல நண்பர்கள்தான்.''

''உங்களோட முதல் திரைப் பயணம்?''

''எங்க ஊர்ல தாத்தா, அப்பா எல்லாருமே மளிகைக் கடை வச்சு நடத்தி வந்தவங்க. எங்க ஊர் ராமநாதபுரம், முதுகுளத்தூர்ல எங்களை கடைக்காரர்னு தான் கூப்பிடுவாங்க. அப்படி இருந்தபோது என்னோட அப்பா என்னை ஒரு முறை திட்டிட்டார். அப்போ பதிமூனு வயசு இருக்கும், கோவிச்சுக்கிட்டு சென்னைக்கு ஓடி வந்துட்டேன். அப்போ நடிப்புல ஆர்வம் இருந்தது. சென்னைக்கு வந்து பல வேலைகளை பார்த்தேன். அதுக்கப்புறம் ஒவ்வொருத்தரோட அறிமுகமாக் கிடைச்சு நாடகத்துல நடிச்சேன். பிற்காலத்துல சினிமா பிரபலங்களா இருந்த பல பேரோட நாடகத்துல நடிச்சிருக்கேன். அப்படித்தான், கவுண்டமணி அண்ணன் கூடவும் பழக்கம். அண்ணனும் நானும் சேர்ந்து நிறைய நாடகங்கள் போட்டிருக்கோம். சினிமாவுக்கு முதல் என்ட்ரி மலையாளத்துலதான். தமிழ் படங்களில் சின்னச் சின்ன ரோல் பண்ணேன். அப்படியே அடுத்தடுத்து என்னோட நடிப்பைப் பார்த்துட்டு வாய்ப்புகள் வர ஆரம்பிச்சது. இதுவரைக்கும் எத்தனைப் படங்கள் நடிச்சிருக்கேனு எனக்கேத் தெரியல. அவ்வளவு படங்கள் நடிச்சிருக்கேன். அதுல நிறையப் படங்கள் கவுண்டமணி அண்ணனோட சேர்ந்து பண்ணியிருக்கேன். நான் சென்னைக்கு ஓடி வந்ததும், என்னை சமாதப்படுத்தி ஊருக்கு திருப்பிக் கூப்பிட்டாங்க, அப்படி திரும்பிப் போயிருந்தா இன்னிக்கு இந்த செந்திலை நீங்க பார்த்திருக்க முடியாது.'' 

goundamani_16218.jpg

''கவுண்டமணி அவர்களிடம் இப்போதும் பேசுவதுண்டா?''

'''கண்டிப்பா. எந்த விஷயமா இருந்தாலும் அவர்கிட்ட சொல்லிடுவேன். நாங்க நடிக்க ஆரம்பிச்சப்போ எப்படி பழகினாரோ, அதே போலத்தான் இப்போ வரைக்கும் என்கிட்டப் பழகிட்டு இருக்காரு. அவர் என் வாழ்க்கையில ஒரு சொந்தம்.  என்னை எப்பவும் 'செந்தில்' என பெயர் சொல்லித்தான் கூப்பிடுவார். நான் கவுண்டமணி அண்ணனை, அண்ண்ணே, அண்ண்ணே'னுதான் கூப்பிடுவேன். 

sen%20-gound_16345.jpg
 

''நீங்க கடவுள் பக்தி உள்ளவரா?''

''எல்லா மதத்தினரும் தானே காசு கொடுக்கிறாங்க.  அதனால எல்லா மதக் கடவுளும் பிடிக்கும்.'' 

''சீரியல் பக்கம் வர ஆசை இருக்கா?''

''நான் ஏற்கெனவே, 'குண்டக்க மண்டக்க' என்கிற ஒரு சீரியல்ல நடிச்சிருக்கேன். இது போல நிறைய டிவில நடிச்சிருக்கேன். அதனால, டி.வியில நடிக்கிறது எனக்கு ஒண்ணும் புதுசு இல்ல. இப்பவும், நல்ல கதை அமைந்தா நடிக்க ரெடியாவே இருக்கேன். ''

வெள்ளித்திரைக்கும், சின்னத்திரைக்கும் என்ன வித்தியாசம்?

''பெயர்தான் வித்தியாசம். மத்தபடி இரண்டிலுமே நடிக்கணும். இரண்டிலும் ஒரே மாதிரிதானே நடிக்கப் போறோம்.'' 

''உங்களுக்குப் பிடித்த இயக்குநர்கள்?''

''குடியிருந்த கோயில்' இயக்கிய கே. ஷங்கரைப் பிடிக்கும். அவர் ஒவ்வொரு சீனையும் ரசிச்சு ரசிச்சு எடுப்பார். பாக்யராஜை அவரோட ஹியூமர் சென்சுக்காக ரொம்ப பிடிக்கும். சுந்தராஜன் அவரோட ரசனை பிடிக்கும். வி.சேகர், ராம நாராயணன் போல பல இயக்குநர்களைப் பிடிக்கும். 

''உங்க சகோதரர் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராமே?''

''ஆமா, என்னோட அண்ணன் பாண்டியன், எங்க ஊர்ல இப்போ, எம்.ஜி.ஆர் கட்சி கிளைச் செயலாளரா இருக்கார்.  எம்.ஜி.ஆர் காலத்துல இருந்தே அவர் எம்.ஜி.ஆரோட தீவிர ரசிகர். நானும் அப்படித்தான். எம்.ஜி.ஆர் இறந்த பிறகு  1989-ம் ஆண்டு சேவல் சின்னத்துக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறேன். அப்போ இருந்த அதே ஈர்ப்பு இப்போ வரைக்கும் அ.தி.மு.கவில் என்ன இணைச்சு வச்சிருக்கு.''

senthil_16522.jpg

''இதுவரையிலும் நடிக்கும்போது கஷ்டப்பட்டு நடிச்சது உண்டா?''

''நான் 13 வயதிலேயே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். இயல்பாகவே எனக்கு நடிப்பு வந்ததாலயும், நிறைய நாடகங்களிலும் நடிச்சிருக்கிறதால இதுவரை ஒரே டேக்ல தான் என்னோட சீன்கள் ஓ.கே ஆகிடும். இதுவரை இரண்டு, மூனு டேக் வந்ததே இல்ல.'' 

''நீங்க நினைச்ச கேரக்டர்களில் எல்லாம் நடிச்சி முடிச்சிட்டீங்க, இதுக்கும் மேல் எதாவது ஆசை இருக்கா?''

''நாங்க விவசாயக் குடும்பம். சொந்த ஊர்ல நிறைய நிலம் இருக்கு. கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளினு நிறைய விளைய வெச்சிருக்கோம். சினிமாவுல முழுசா ஈடுபட்டதால, என்னால விவசாயத்தைப் பார்க்க முடியல. தெரிஞ்சவங்ககிட்ட கொடுத்து பார்த்துக்க சொல்லிட்டேன். இப்போ விவசாயம் செய்யணும்னு என ஆசையா இருக்கு. கண்டிப்பா நேரம் கிடைக்கும்போது விவசாயம் பண்ணனும். விவசாயி மகன் என சொல்வதை பெருமையா நினைக்கிறேன்.''

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/73841-comedy-actor-senthil-interview.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
    • இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.