Jump to content

பிரபல இலங்கை ஒலிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் காலமானார்


Recommended Posts

பிரபல இலங்கை ஒலிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் காலமானார்

 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் முன்னாள் இயக்குனர் பொன்மணி குலசிங்கம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ணில் காலமானார்.

பொன்மணி குலசிங்கம்
 பொன்மணி குலசிங்கம்

நான்கு பிள்ளைகளின் தாயான அவருக்கு வயது 88.

இசைப் பட்டதாரியான இவர், தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார்.

1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாட்டாளர், மேலதிக இயக்குனர், இயக்குனர் என்ற நிலையை எட்டியுள்ளார்.

பல முன்னணி அறிவிப்பாளர்கள் மற்றும் வானொலி தயாரிப்பாளர்களை அறிமுகம் செய்த பெருமை இவரைச் சாரும். இவரது காலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தமிழ் சேவையின் பொற்காலம் என்று பல தமிழ் ஒலிபரப்பாளர்களும் கூறுகிறார்கள்.

இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் முத்துசாமி தலைமையில் இயக்கிய இலங்கைப் பாடகர்களின் ''ஈழத்துப் பாடல்கள்'' நிகழ்ச்சி உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் வவேற்பை பெற்ற ஒன்று. கண்டி மற்றும் யாழ் ஒலிபரப்புகளும் இவரது காலத்திலேயே அறிமுகம் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

http://www.bbc.com/tamil/38157040

Link to comment
Share on other sites

முன்னாள் வானொலிப் பணிப்பாளர் பொன்மணி குலசிங்கம் – எஸ் எம் வரதராஜன் -நியூசீலாந்து:

 
 ponmani2
மூத்த ஒளிபரப்பாளர் பொன்மணி குலசிங்கம் அம்மையார் அவர்கள் அவுஸ்திரேலியாவில் காலமாகிய செய்தியை  மூத்த ஒளிபரப்பாளர் திரு விக்னேஸ்வரன் அவர்கள் கனடாவிலிருந்து முகநூலில் இடுகை செய்திருந்தார். பொன்மணி அவர்களுக்கு  வயது 88.
 
பொன்மணி அவர்களை  நான் முதலில் ரூபவாஹினியில் சந்தித்துள்ளேன்.
 
2000 களில் இலங்கை வந்திருந்த பொழுது – சக்தியில் காலைக்கதிர் நிகழ்ச்சிக்கு அதிதியாக அழைத்திருந்தோம்.
 
 
நேரடியாக ஒளிபரப்பான அந்த நிகழ்ச்சியில் – “உங்களுடன் ஒருவர் பேச விரும்புகிறார் .. நன்கு தெரிந்த மறக்கமுடியாத ஒரு நேயர் என்று சொல்ல அவர் “சரி அவருடன் பேசுவோம்..எங்கே இணையுங்கள் ” என்று சொல்ல நாம் இணைத்துவிட்டோம்.
 
 
தொலைபேசியின் மறுமுனையில் இருந்தவர் அமரர் காவலூர் இராசதுரை அவர்கள் .
 
 
 
சில வினாடிகள் …நிசப்தம்…காவலூர் கதையைத் தொடங்கினார்…” வணக்கம்  திருமதி  குலசிங்கம் !” என்றார்  காவலூர் .
 
 
வணக்கம் எப்படி நீங்கள் இருக்கிறீர்கள்…? என்று தொடங்கி …பழைய சம்பவங்கள் சிலவற்றை இருவரும் பகிர்ந்தனர் .
 நிகழ்ச்சி முடிந்தது . கலையகத்திலிருந்து வெளியே வந்த பொன்மணி அவர்கள் என்னைப்பார்த்து ” நல்ல வேலை செய்தீர் …!” என்றார்.
 
 
உடனடியாக கைத்தொலைபேசிக்கு தொடர்புகொண்ட  காவலூர்- ” மறுமுனையில் சிரித்துக்கொண்டேயிருந்தார் ..பின்னர்  அவரும்  மனதுக்கு ஆறுதலான ஒரு வேலையைச்  செய்திருக்கிறீர்கள் “..என்றார். பதவிக்காலத்தில் இருவரும் முரண்பட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதாக அறிந்துள்ளோம். ஒலி ஒளிபரப்புத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு அவை தெரியும். இருவரும் இன்று நம்முடன் இல்லை. மீளாத் துயிலில்  நிம்மதியாய் உறங்குகிறார்கள்.
 அப்படி உறங்க வேண்டும் என்பதே எமது பிரார்த்தனை !
 
 
 
இன்று ஊடகத்துறையில் பணியாற்றுபவர்களுக்காக இத்தகவலை இங்கு குறிக்கவேண்டியிருந்தது. பொன்மணி, குலசிங்கம் ஒரு   இசைக் கலைஞர். ஆவார் . இவர் உயர்தரக் கல்வி வரை பம்பலப்பிட்டி திருக்குடும்பக் கன்னியர் கல்லூரியில் பயின்று, இசைக் கல்வியைச் சென்னை கலாஷேத்திராவில் பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் சங்கீத சிரோன்மணி பட்டத்தையும் கலாஷேத்திராவில் வாய்ப்பட்டுக்கான முதற்தர டிப்ளோமாச் சான்றிதழையும் பெற்ற ஒருவர் .
 

இவர் தனது பதினான்காவது வயதிலிருந்து இசைத் திறமையைக் காட்டும் வானொலிப் பாடகியாக விளங்கினார். 1956 ஆம் ஆண்டு சிறுவர் மற்றும் மகளிர் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக வானொலியில் சேர்ந்து கொண்ட இவர், படிப்படியாக உயர்ந்து இசைக் கட்டுப்பாளர், மேலதிகப் பணிப்பாளர், பணிப்பாளர் என்ற நிலையை எய்தினார்.இவர் புகழ்பெற்ற இசையமைப்பாளர் முத்துசாமி தலைமையில் இயக்கிய இலங்கைப் பாடகர்களின் ஈழத்துப் பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. இப்பாடல்களை  அக்காலத்தில் சிங்கப்பூர் வானொலி ஒலிபரப்பிற்காகக் கொள்வனவு செய்தமை குறிப்பிடத்தக்கது

 

நானறிய…

 நான் நினைக்கிறேன்..இவர்   ஒழுங்கு செய்திருந்த நாட்டிய நாடகம் போன்ற நிகழ்ச்சி  ஒன்று…  ரூபவாஹினியில் ஒளிபரப்பாக இருந்த இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி நாட்டிய நிகழ்வாக  என்ற பெயரைப் பெற்றுவிடும் என்று முகாமைத்துவம் – இதனை சற்றுப்  பின்போடச்சொல்லி  சிங்களத்தில் தயாரித்த நாட்டிய நாடகம் ஒன்றை (உடன் தயாரித்து) அதனை இதற்கு முன்னர் ஒளிபரப்பியதாக நாம் அங்கு ஒரு வரலாற்றை  அறிந்தோம்.
 
 
 
ஏனெனில் இலங்கை ரூபவாஹினியின்  முதலாவது தொலைக்காட்சி நாடகம் தமிழ் நாடகம் என்ற வரலாறு ஏற்கனவே பதியப்பட்டு, அமைச்சு மட்டத்தில்  ஏச்சு வாங்கிய நிலையில் மீண்டும் முதலாவது என்ற பெயரை நாட்டிய நாடகத்திலும் “தமிழ்” பெறக்கூடாது என்ற அச்சத்தின் காரணமாகவே – தயாரித்து தொகுத்து ஒளிபரப்பிற்கு ஆயத்தமாக ஒளிநாடா வைப்பகத்திற்கு கொடுக்கப்பட்ட நிலையில் -நிகழ்ச்சி நிரலில் தாமதம் செய்யப்பட்டது என ஒரு தகவல் உண்டு.
 
 
1982 இல் தான் ரூபவாஹினி முறைப்படி ஆரம்பமானது. ஆனால் தமிழ் நாடகமான கண்ணாடி வார்ப்புகள்  1981   டிசம்பரிலேயே அதன் கலையகத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்டுவிட்டமையும்  . அது ஆரம்பித்த பின்னர் தான் சிங்கள நாடகங்களை  ஒளிப்பதிவு செய்யத் தொடங்கினர்- என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
ரூபவாஹினி தொலைக்காட்சி ஆரம்பித்த நாட்களில் இலங்கை வானொலியின் பணிப்பாளராகப் பணியாற்றிய  இவர் அன்று  வானொலி அறிவிப்பாளராகப் பணியாற்றிய அண்ணர் அப்துல் ஹமீதுடன்  அங்கு வந்து சில நாட்டிய  நிகழ்ச்சிகளை ஒளிப்பதிவு செய்ததாக நான் அறிந்துள்ளேன்.
 
 
அன்று வானொலியில்  பணியாற்றிய பலர் புதிய ஊடகமான தொலைக்காட்சிக்குள் நுழைவதற்கு ஆர்வம் காட்டியிருந்த போதிலும் சிலருக்கே அந்த வரப்பிரசாதம் கிடைத்தது.
 
 
திருமதி ஞானம் இரத்தினம் ரூபவாஹினி தமிழ்ப்பிரிவின் பணிப்பாளரானார். வானொலி நிலையத்தில் பணியாற்றிய சில  தமிழர்கள் மட்டும்    ரூபவாஹினி தமிழ்ப்பிரிவு செய்திப்பிரிவு விவரணப்பிரிவு கல்விச்சேவை பொறியியற்பிரிவு என  இணைய வாய்ப்புக்கு கிடைத்தது.
 
 
இலங்கை வானொலியின் பணிப்பாளராக திருமதி பொன்மணி குலசிங்கம் பணியாற்றிய காலத்தில் சிறுவர் நிகழ்ச்சியிலிருந்து அறிமுகமான கலைஞர்கள் பலர் அங்கு அறிவிப்பாளர்களாகப் பணியாற்றினார் கள் .அப்துல் ஹமீத் , ஜோர்ஜ் சந்திரசேகரன் , நடராஜசிவம் மயில்வாகனம் சர்வானந்தா  போன்றவர்களை  அன்புடன் “அடா” என்று அழைத்த வானொலிப் பணிப்பாளர் பொன்மணி என்று இன்றும் சொல்வார்கள். இவர்களை தமது செல்லப்பிள்ளைகளாக இவர் வழிநடத்திவந்ததாகச் சொல்லப்படுவதுண்டு . இவர்களும் ஏனைய ஊழியர்களும்  அவரை அம்மா எனவும்அ மரர் ராஜகுருசேனாதிபதி கனகரத்தினம் போன்றவர்கள்  “அக்கா” என்றும் அழைக்க  அவருடைய தமிழ்ச் சேவை சுமுகமாக  இயங்கியது.
 
 
இவர் பணிப்பாளராக இருந்த காலத்தில் தான் தமிழ்சசேவையில் பல சேவைகள் விஸ்தரிக்கப்பட்டன என்ற வரலாறுமுண்டு. . அதாவது மத்தியகிழக்கு
சேவை , யாழ் பண்ணை வானொலி நிலையம் என்பன இவருடைய காலத்தில்  உருவானவை  ..
 
 
நிமிர்ந்த நடை  , நேரிய பார்வை , உயர்ந்த தோற்றம் ,சிறந்த ஆளுமை மிக்க ஒருவராக நான் அவரைக் கண்டுள்ளேன்.
 
 
இலங்கை வானொலியின் சிங்கள ஊழியர்கள் முதல் பணிப்பாளர்கள் வரை இவருக்கு நல்ல மரியாதையை வழங்கினார்கள் என்றால் மிகையல்ல.
 
 
“எல்லாவற்றுக்கும் இவ  கேட்பதுக்கெல்லாம் ஓம் மடம் ..யெஸ்  மிஸிஸ் குலசிங்கம் என்றுவிட்டு... பிறகு தங்கட வழமையான வேலையைக் கட்டிவிடுவான்கள்..” என்றும் ஒரு மூத்த ஒளிபரப்பாளர் இவர் பற்றி ஒருமுறை சொன்னதை இங்கு இந்நாட்களில் குறிப்பது பொருத்தமாகும்.
 
 
ரூபவாஹினியின் ஆரம்பத்தில் இலங்கை மன்றக்  கல்லூரியின் அனுசரணையுடன் ஒரு கலாசார நிகழ்ச்சி மாதம்  தோறும் ஒளிபரப்பானது. சிங்கள  தமிழ் நிகழ்ச்சிகள்  கலந்த இந்த நிகழ்ச்சியில்-  ஆரம்பத்தில் இதற்கான தமிழ் நிகழ்ச்சி அம்சப்  பொறுப்பை இவரே மேற்கொண்டார்.
 
 
இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபனத்தின் வாத்தியக்  குழு வில் மெல்லிசைக்கு என்று தமிழக கலைஞர்களைக் கொண்ட குழுவை அமைத்தவர் திருமதி பொன்மணி குலசிங்கம் அவர்களாவர்.
 
 
பொன்மணி அவர்கள் 1983 இன அழிப்பு வன்செயலை நேரில் கண்டு அதன் விளைவினை அனுபவித்த ஒலிபரப்பாளரும் கூட.
 
 
இலங்கை வானொலித் தமிழ்சசேவையின் வரலாற்றிலும் இலங்கைத் தொலைக்காட்சியின்  தமிழ் நிகழ்ச்சிகளின் பயணத்திலும் பொன்மணி குலசிங்கம்   அம்மாவின் பெயர் நினைவில் நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
 
  (படத்தில் : இடமிருந்து- இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய குமரலிங்கம் ,கனடாவிலிருந்து கடந்த வருடம் அவுஸ்திரேலியா சென்றிருந்த  விக்னேஸ்வரன்  திருமதி பொன்மணியுடன்.)

http://globaltamilnews.net/archives/8749

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.