Jump to content

கைதானார் கருணா அம்மான்


Recommended Posts

கைதானார் கருணா அம்மான்
 
 

அரசாங்க வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸாரினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187107/க-த-ன-ர-கர-ண-அம-ம-ன-#sthash.kySBhsHN.dpuf

karuna.jpg

கருணா கைதானார்..!

 

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சற்றுமுன்னர் கைதானார்.

நிதி முறைகேடு விடயமொன்று தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இன்று காலை இவர் நிதிமோசடி விசாரணைப்பிரிவில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13979

கருணா கைது!
கருணா கைது!
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவில்   இன்றையதினம் ஆஜராகியநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஆட்சியின்போது பிரதி அமைச்சராக பதவி வகித்தகாலத்தில்   அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த  குற்றச்சாட்டு தொடர்பிலும் ஆட்சி மாறிய நிலையில் அவர் பயன்படுத்திய வாகனங்களை மீளவும் அரசிடம் ஒப்படைக்க தவறியமை குறித்து   வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் இன்றையதினம் அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசார ணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டநிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

http://onlineuthayan.com/news/20787

Link to comment
Share on other sites

கருணா அம்மான் கைது

 

கருணா அம்மான் கைது

 

 
 
முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இன்று வாக்குமூலம் அளிக்கச் சென்ற இவர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினராக இருந்த கருணா அம்மான், பின்னர் அந்த இயக்கத்தில் இருந்து விலகி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

பின்நாட்களில் அக் கட்சியில் இருந்து விலகிய அவர், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டார்.

இதனையடுத்து அவருக்கு பிரதியமைச்சர் பதவி மற்றும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவி போன்ற முக்கிய பொறுப்புக்கள் கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.adaderana.lk/news.php?nid=85704&mode=lead

Link to comment
Share on other sites


'இத்துபோன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள், விரைவில் வருவேன்'
 
 

“நான் கொலை செய்து, கொள்ளையில் ஈடுபட்டு நீதிமன்றம் போகவில்லை. ஒப்படைக்கப்பட்ட  ஒரு இத்துபோன வாகனத்துக்காக அழைத்துள்ளார்கள். விரைவாக வருவேன், கவலைப்படவேண்டாம், உண்மையே வெல்லும்” என கைதுசெய்யபட்டுள்ள கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரானார். அதனையடுத்து,  கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

- See more at: http://www.tamilmirror.lk/187120/-இத-த-ப-ன-வ-கனத-த-க-க-க-அழ-த-த-ள-ள-ர-கள-வ-ர-வ-ல-வர-வ-ன-#sthash.QSE6WERI.dpuf
Link to comment
Share on other sites

இலங்கை முன்னாள் அமைச்சர் கருணா திடீர் கைதின் பின்னணி!

 

b1_13255.jpg

ராமநாதபுரம் : பிரபாகரன் தலைமையிலான விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியும், ராஜபக்‌ஷே தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்த கருணா இலங்கையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டார்.

விடுதலை புலிகள் அமைப்பில் கிழக்கு மாகாண தளபதியாக இருந்தவர் கருணா என்கிற விநாயகமூர்த்தி. பிரபாகரனுடன் நெருக்கமாக இருந்தவர். பின்னர் விடுதலை புலிகள் அமைப்பில் இருந்து தனி படையை பிரித்து வெளியேறியவர், அரசியலில் குதித்தார். அதன் பின்னர் ராஜபக்‌ஷேவின் ஆதரவாளராக மாறி, அவரின் அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். 2009ம் ஆண்டு நடந்த இறுதிகட்டப் போரின் போது, விடுதலைப் புலிகளின் ரகசிய செயல்பாடுகளை இலங்கை ராணுவத்திற்கு சொல்லியவர் இவர் தான் என்றும் சொல்லப்படுகிறது.

b3_13457.jpg

தேர்தலில் ராஜபக்‌ஷே அரசு படுதோல்வியடைந்ததையடுத்து, ராஜபக்‌ஷே அரசு மீதான பழைய வழக்குகள் எல்லாம் தூசு தட்டி எடுக்கப்பட்டன. அதன்படி ராஜபக்‌ஷேவின் சகோதரர், குடும்பத்தினர் மீது வழக்குகள் போடப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், ராஜபக்‌ஷே ஆட்சியில் நிதிமோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில், கருணாவை விசாரணைக்கு அழைத்துச்சென்ற இலங்கை போலீஸார், விசாரணையின் முடிவில் கைது செய்தனர். 

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனத்தை முறைகேடாக பயன்படுத்தியது, வாகனம் வாங்கியதில் நிதி முறைகேடு போன்ற புகார்கள் அவர் மீது கூறப்பட்டுள்ளது. 2 மணி நேர விசாரணைக்கு பின்னர் அவரை கைது செய்த இலங்கை போலீஸார், அவரை கைது செய்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர்.

b2_13025.jpg

ராஜபக்‌ஷே தலைமையிலான அமைச்சரவையில், கருணாவுக்கு முக்கிய இலாகா ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. ஒருமைப்பாடு மற்றும் கலாச்சாரம் சார்ந்த இலாகா தான் ஒதுக்கப்பட்டிருந்தது. ராஜபக்‌ஷே அமைச்சரவையில் தமிழ் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் இவர் ஒருவரே. அது மட்டுமல்லாமல் விடுதலை புலிகள் குறித்த முழு விவரங்களையும் அறிந்தவர் ஆவார்.  பிரபாகரனுடன் மிக நெருக்கமாக இருந்தவர். இவற்றோடு இணைத்து பார்க்கையில், கருணா இலங்கை போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சிரிசேனா அரசு பதவியேற்ற பிறகு, ராஜபக்‌ஷே அரசு மீதான பல புகார்கள் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கருணா கைது என்பது மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. விடுதலை புலிகள் மீதான் போர் குறித்த முழுமையான விவரங்கள் அறிந்தவர் கருணா. இவரின் கைது இலங்கை அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இலங்கை அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றன.

http://www.vikatan.com/news/coverstory/73728-srilanka--former-minister-karuna-amman-was-arrested.art


அம்மானுக்கு விளக்கமறியல்
 
 

article_1480397380-1.jpgகருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசெம்பர் மாதம் 7ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம், இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.

அரச வாகனமொன்றை முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பாக, கருணா அம்மான், நிதிக் குற்றப் புலனாய்வு பொலிஸார் முன்னிலையில் இன்று காலை ஆஜரான நிலையில்,  கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்ட போது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

- See more at: http://www.tamilmirror.lk/187127/அம-ம-ன-க-க-வ-ளக-கமற-யல-#sthash.bnXsI2fe.dpuf
Link to comment
Share on other sites

கருணாவுக்கு விளக்கமறியல் 

 

 

கருணா அம்மான் என அழைக்கப்படும் முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை டிசம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Untitlddddddddded-1.jpg

கடந்த ஆட்சியின் போது 800 மில்லியன் பெறுமதியான துப்பாக்கி துளைக்காத வாகனொமொன்றை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில்  வாக்குமூலமளிப்பதற்காக நிதிமோசடி விசாரணைப்பிரிவில்  இன்று ஆஜராகிய போது இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/13986

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:

, உண்மையே வெல்லும்”

பெரிய  அரிச்சந்திரன் என்ற நினைப்பு. 
எப்பவோ போகவேண்டியவர். இனி ஒன்றொன்றாக கோத்துவிடுவினம்.  விரைவாய் வருவாராம்.  செய்த பாவத்துக்கு இவர்  அலைய, தாங்கள் தப்புவதற்கு  தற்கொலை, கொலை  எதுவோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15267509_10157757637950137_3378148133700

Link to comment
Share on other sites

இலங்கை: கைது செய்யப்பட்ட கருணாவுக்கு டிசம்பர் 7 வரை விளக்க மறியல்

 

அரசு வாகனத்தை தவறான முறையில் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் கிழக்கு மாகாண தளபதியும், முன்னாள் அமைச்சருமான கருணா அம்மான் எனப்படும் விநாயக மூர்த்தி முரளீதரனை, வரும் டிசம்பர் 7-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருணா கைது குறித்து படிக்க:முன்னாள் விடுதலைப்புலி தளபதி, கருணா கைது

கருணா
 கருணாவுக்கு டிசம்பர் 7 வரை விளக்க மறியல்

ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான சுமார் 9 கோடி ரூபாவிற்கும் மேல் பெறுமதியான வாகனமொன்றை தவறான முறையில் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் பாரிய நிதி மோசடிகளை ஆராயும் விசேட போலீஸ் குழு முன் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அழைக்கப்பட்ட கருணா அம்மானிடம் போலீசார் வாக்குமூலமொன்றை பதிவு செய்தனர்.

பின்னர், போலீசாரால் கைது செய்யப்பட அவர் கொழும்பு மஜிஸ்ட்ரேட் நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டார்.

கருணா  நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட கருணா

நீதிமன்றத்தில் கருத்துக்களை தெரிவித்த போலீசார், விசாரணைகள் பூர்த்தி செய்யப்படாததால் காரணமாக சந்தேக நபரை விளக்க மறியலில் வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர் தரப்பு வழக்கறிஞர், அமைச்சு பதவி முடிவடைந்த பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தை மீண்டும் பெற்றுக்கொள்ளுமாறு சந்தேக நபர் ஜனாதிபதி செயலகத்திற்கு அறிவித்த போதிலும், அந்த செயலகத்தின் அதிகாரிகள் எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என்று அறிவித்தார்.

கருணா  

கருத்துக்களை ஆராய்ந்த நீதிபதி, சந்தேக நபரை வரும் 07-ஆம் தேதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சந்தேக நபருக்கு பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல்கள் இருப்பதாக அவரது வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொன்ற நீதிபதி, சிறைச்சாலைக்குள் அவருக்கு விசேட பாதுகாப்பு வழங்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

http://www.bbc.com/tamil/sri-lanka-38143149

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

கைதானார் கருணா அம்மான்

உதிலை சந்தோசப்படுறதுக்கோ இல்லை கவலைப்படுறதுக்கோ ஒண்டுமேயில்லை.....எல்லாம் நிகழ்ச்சி நிரலின்படிதான் நடக்குது.....:cool:

Link to comment
Share on other sites

45 minutes ago, நவீனன் said:

கருணா அம்மானிற்கு 7 ஆம் திகதி வரை விளக்கமறியல்

கருணா அம்மான் கைதுசெய்யப்படுவதில் கருணா அம்மானைத் தவிர வேறு எவர் முகத்திலும் சந்தோசமில்லை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தமிழரசு said:

15267509_10157757637950137_3378148133700

இந்த கேஸுக்கு உள்ள போனால் ,,,,,,,,,,,,??
வெளியில வர காலம் எதுக்குமே ?

Link to comment
Share on other sites

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

குருஜி, நான் வெறும் 2ஜி , நீங்கள்தான் 4ஜி....! tw_blush:

Link to comment
Share on other sites

56 minutes ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

சுமார் 700 இலட்சம் ரூபா பெறுமதியான ஜீப் மட்டக்களப்பில் கண்டுபிடிப்பு:

Link to comment
Share on other sites

 

8 minutes ago, கரும்பு said:

உந்த ஜீப்பை பார்த்தால் இதைக்குடுத்து பேரீச்சம்பழம்தான் வாங்கலாம் போல கிடக்கு. :2_grimacing: 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

பியரை குடிச்சுக்கொண்டு ஒவ்வொண்டாய் வாசிச்சுக்கொண்டு வரேக்கை.......உந்த வசனத்தை வாசிச்சவுடனை........சிரிப்பை அடக்கமுடியாமல் சிரிக்க வெளிக்கிட்டதாலை ....உள்ள இடம் முழுக்க பியர் சீறி பாய்ஞ்சிட்டுது....:grin:...tw_thumbsup:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கரும்பு said:

ஒன்பது கோடி ரூபாய் வாகனத்தை தவறான முறையில் பாவித்தபடியால் கைதாம். வாகனத்தை கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு ரிவர்சில் ஓடி இருப்பாரோ?

தனி ரூம் போட்டு யோசிப்பாங்களோ..... :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

15253534_546928848838709_4720098783660221148_n.jpg?oh=3d8989571f14e6c6e1d4589924aac5d8&oe=58B30777

அழகிய படம்.  பார்த்து ரசித்துக் கொண்டே இருக்கலாம் போலுள்ளது.

Link to comment
Share on other sites

காட்டிக் கொடுத்த கருணாவின் சேவை: துரோகத்தை துரோகத்தால் வீழ்த்தும் இலங்கை

 

 
 
கருணா | கோப்புப் படம்: ஏஎஃப்பி
கருணா | கோப்புப் படம்: ஏஎஃப்பி
 
 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1980-களின் புது வரவு முரளிதரன் என்ற கருணா. துடிப்பான நடவடிக்கைகள், தலைமையின் கண்ணசைவுக்கு ஏற்ப செயல்படும் பாங்கு - இந்த இரண்டு குணாதிசயங்களாலேயே பிராபகரனின் முக்கியத் தளபதிகளில் ஒருவர் என்ற இடத்துக்கு வேகமான முன்னேறியவர்.

புலிகள் இயக்கத்தில் இரண்டே இரண்டு நபர்கள் மட்டுமே கையில் துப்பாக்கியுடன் பிரபாகரனை சந்திக்க முடியும். முதலாமவர் பொட்டு அம்மான். அடுத்தவர் கருணா. தொடக்கத்தில் பிரபாகரனின் ஒட்டுமொத்த முக்கிய தளபதியாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கருணா, ஒரு கட்டத்தில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்க ஆரம்பித்தார். அதற்காக, “மட்டகளப்பு - அம்பாறை மாவட்டத்தை உள்ளடக்கிய தென் தமிழீழத்தைச் சேர்ந்த புலிகள் இயக்கத் தோழர்கள் மதிக்கப்படவில்லை. அவர்களின் உயிர் தியாகம் உதாசீனப்படுத்தப்படுகிறது. தென் தமிழீழ மக்களுக்காக போரிட்டு இவர்களின் மடியில் மடிவதையே எனது இறுதி லட்சியமாக கருதுகிறேன். இதில் எவரும் குறுக்கிடுவதை நான் விரும்பவில்லை” என்று பிரபாகரனுக்கே கடிதம் எழுதினார்.

இது தவிர, நிதி ஆளுமை சர்ச்சைகள், தனிப்பட்ட சொகுசு வாழ்க்கை என்றெல்லாம்கூட கருணாவுக்கு எதிரான குற்றச் சாட்டுகள் உண்டு. இப்படியான புகார்கள் வந்ததுமே கருணாவுக்கும் தனக்குமான இடைவெளியை அதிகப்படுத்திக் கொண்டார் பிரபாகரன். அதேசமயம், அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், ‘தென் தமிழீழத்தின் ஏகோபித்த தளபதியாக வரு வதற்காக இலங்கை அரசாங் கத்துடன் கைகோர்த்திருக்கிறார் கருணா’ என்ற தகவல் வெளியானபோது அதிர்ந்து போனார் பிரபாகரன். இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கருணாவுக்கு தகவல் அனுப்பப்படுகிறது. ஆனால், அதை நிராகரித்த கருணா, தென் தமிழீழ கோஷத்தை தூக்கிப் பிடிக்கும் விதமாக தலைமைக்கு கடிதம் எழுதுகிறார்.

கடிதத்தின் இறுதியில் ‘பிரபாகரனின் தலைமையில் செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம். அவரை நாங்கள் கடவுள் என பாவிக்கிறோம்’ என்றெல்லாம் இருந்த வார்த்தைகள் பிரபாகரனை சாந்தப்படுத்தவில்லை. 06-03-2004-ல் கருணா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இப்படி ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் நபர்களின் நாட்கள் எண்ணப்படும் என்பதை நன்கு உணர்ந்திருந்தவர் தனது நிஜமுகத்தை காட்ட ஆரம்பித்தார்.

ரணில் விக்கிரமசிங்கே கட்சியின் எம்.பி-யாக இருந்த இஸ்புல், கருணாவின் உறவுக்கார பெண் ஒருவரை மணம் முடித்திருக்கிறார். அந்த உறவுப் பாலத்தை பயன்படுத்தி ரணில் விக்கிரமசிங்கேயுடனும் அதைத் தொடர்ந்து சந்திரிகா, ராஜபக்ச உள்ளிட்ட தலைவர்களிடமும் விசுவாசம் காட்டி நெருக்கத்தை அதிகப்படுத்திக் கொண்டார்.

புலிகள் கூடாரத்தின் உள் முகத்துவாரம் வரையிலான விஷயங்களை அறிந்த நபர் என்பதால் கருணாவை கைக்குள் வைத்துக் கொண்டு புலிகள் குறித்த ரகசியங்களையும் அவர்களின் அசைவுகளையும் தந்திரமாக கிரகித்துக்கொண்டார் ராஜபக்ச. இதற்கு அவர் அளித்த சன்மானம், தனது கட்சியின் உபதலைவர் பதவி, அமைச்சரவையில் துணை அமைச்சர் பதவி. புலிகள் இயக்கத்தை அடியோடு வீழ்த்திய முள்ளிவாய்க்கால் முற்றத்தின் பின்னணியில் ராஜபக்சேவின் ராஜதந்திரமும் கருணாவின் துரோகமும் போட்டிபோட்டு பங்காற்றியது.

அதேசமயம், முள்ளிவாய்க்கால் முடிவு வரும்வரை தனக்கு என்ன முடிவு ஏற்படுமோ என்ற அச்சத்தில் கொழும்பிலேயே முடங்கிக் கிடந்தார் கருணா. “ஈழப் போரில் ஒருவேளை நாங்கள் தோல்வியுற்றால், அதற்கு காரணம் துரோகமாக இருக்கும் அல்லது இயற்கையாக இருக்கும்” என்று ஏற்கெனவே பிரகடனம் செய்திருந்தார் பிரபாகரன். அவர் சொன்னதுதான் நடந்தது. துரோகத்தை துருப்பாக வைத்து புலிகளை வீழ்த்திய இலங்கை அரசு, போதும் கருணாவின் சேவை என்ற முடிவுக்கு வந்திருக்கிறது. அதனால்தான், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

கைதுக்கான காரணம் ஒன்று சொல்லப்பட்டாலும் அவரை ஒரேயடியாய் முடக்கிப் போடுவதற்கான வேறு சில ஆதாரங்களையும் இலங்கை அரசு துருவிக் கொண்டிருக்கிறது. ஆக மொத்தத்தில், வரலாறு திரும்பி இருக்கிறது. ஈழத்தில் மீண்டும் துரோகம் வென்றிருக்கிறது.

http://tamil.thehindu.com/tamilnadu/காட்டிக்-கொடுத்த-கருணாவின்-சேவை-துரோகத்தை-துரோகத்தால்-வீழ்த்தும்-இலங்கை/article9400803.ece?homepage=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரப்பா அது, சமையல் முடிந்து விட்டது.... அந்த உப்பைத் தூக்கி அங்கால போடு......! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணா அம்மான் இலேசுப்பட்ட ஆளில்லை என்பதை புலிகளின் அழிவு தெளிவாக்கியும் ஒரு சின்னப் பிரச்சினைக்காக அவரைக் கைது செய்ததை பெரிய விடயமாக பூதாகரமாக்கியுள்ளார்கள். அவர் உப்பாகவோ, கறிவேப்பிலையாகவோ இருக்கமாட்டார். 

 

Link to comment
Share on other sites

 

23 minutes ago, கிருபன் said:

கருணா அம்மான் இலேசுப்பட்ட ஆளில்லை என்பதை புலிகளின் அழிவு தெளிவாக்கியும் ஒரு சின்னப் பிரச்சினைக்காக அவரைக் கைது செய்ததை பெரிய விடயமாக பூதாகரமாக்கியுள்ளார்கள். அவர் உப்பாகவோ, கறிவேப்பிலையாகவோ இருக்கமாட்டார். 

 

பெரு மரங்களையும் துரும்பைப்போல் தூக்கியெறியும் வல்லமைகொண்ட யானையைச் சின்ன அறுகம்புல்லு வீழ்த்திவிடும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.