Jump to content

"எனக்கு பிடித்த அனிமல்... கெஸ் பண்ணுங்களேன்!' - காஜல் அகர்வால் சவால் #VikatanExclusive


Recommended Posts

"எனக்கு பிடித்த அனிமல்... கெஸ் பண்ணுங்களேன்!' - காஜல் அகர்வால் சவால் #VikatanExclusive

காஜல்

கால்கள் ஒரு இடத்தில் நிற்க மறுக்கின்றன. கைகளின் அசைவுகள் ஒரு நொடி கூட அடங்கவில்லை. பரபரப்பாகவே இருக்கிறார்... படபடவென பேசுகிறார். ""எல்லோருக்கும் வணக்கம்... நான் காஜல் அகர்வால்..." என்பதைத் தாண்டி தமிழ் வரவில்லை. ஆனால், தமிழ் சாகவில்லை. சிரித்துக் கொண்டே இருக்கிறார்... 

"உங்களின் சிரிப்பு ரொம்ப இயல்பா,அழகா இருக்கே ??" என்று கேட்டால்... அதற்கும் நீண்ட நேரம் சிரிக்கிறார். சினிமாவில் அல்ல, காஜல் நிஜத்திலேயே வெட்கப்படுகிறார்.... " நன்றி... கண்டிப்பாக இது நடிப்பு இல்லை. நான் நானாகவே இருக்கிறேன். வாழ்வில் நான் எப்போதுமே நடிப்பதில்லை. மனதில் நினைப்பதை முகத்தில் அப்படியே பிரதிபலிப்பேன்... ஒரு நடிகையாக அது தவறு தான். ஆனால், நான் இப்படித்தான்..." என்று மீண்டும் சிரிக்கிறார். 

கவலைகளற்று சிரித்துக் கொண்டிருந்த காஜலிடம் "கவலை வேண்டாம்" என்பதிலிருந்தே தொடங்கினோம்...

இதுவரை நீங்கள் செய்த கதாபாத்திரத்தில் இருந்து "கவலை வேண்டாம்" திவ்யாவில் என்ன வித்தியாசம் இருக்கிறது?

" நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது. திவ்யா, யதார்தத்திற்கு மிக நெருக்கமான ஒரு கதாபாத்திரம். சுதந்திரமான, தைரியமான, உறுதியான ஒரு பெண் கதாபாத்திரம். அதே சமயத்தில் எப்பொழுதும் ஒரு வித குழப்பத்திலேயே இருக்கும் பெண். இந்த கதாபாத்திரம் சமூகத்தின் பெரும்பான்மை பெண்களை  பிரதிபலிக்கும்.  "

ஜீவா ரொம்ப கலாட்டாவான ஆளாச்சே?

" ஐயோ... நிச்சயமா. அவரு மட்டுமா இந்தப் படத்தின் இயக்குநர் டீகேவும் கூடத் தான். படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் அவ்வளவு கலாட்டாவாக இருக்கும். ஆர்.ஜே. பாலாஜி, மயில்சாமி, பாபிசிம்ஹா என பெரும் பட்டாளமே இருக்கும். ஷூட்டிங்க் முழுக்கவே விழுந்து விழுந்து சிரிச்சேன்னு சொல்வாங்களே. அப்படித்தான். அதே சமயம் அனைவருமே வேலையில் ரொம்ப கெட்டிக்காரர்கள். கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்கணும் "

படப்பிடிப்பில் நடந்த அப்படியான ஏதாவது கலாட்டா?

" ம்ம்ம்ம்ம்.... ( நீண்ட நேரம் யோசிக்கிறார்), டக்குன்னு ஞாபத்துக்கு வரவில்லையே. ஆனால், ஒவ்வொரு நாளுமே சிரிப்பு சரவெடியாகத் தான் இருக்கும். இந்தப் படத்தைப் பொறுத்தவரைக்கும் ஷூட்டிங் போன மாதிரியான உணர்வே இல்லை. ஏதோ, விடுமுறைக் கொண்டாட்டத்தில் இருந்தது போன்ற உணர்வு தான் இருந்தது."

அப்போ இந்தப் படத்தில் நடிப்பது மிகவும் எளிதாக இருந்ததா?

" அப்படி சொல்லிவிட முடியாது. சிச்சுவேஷன் எனக்கு பிடிச்ச மாதிரி இருந்துச்சு. அதே சமயம் இந்தப் படத்தின் சில காட்சிகளில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். குறிப்பாக, க்ளைமாக்ஸ் காட்சில ஒரு பாத்ரூமில் உட்கார்ந்து  அழுவது போல காட்சி... நிறைய எமோஷன்ஸ். எக்ஸ்பிரஷன்ஸ். ரொம்ப சவாலா இருந்தது.

"மாரி" படத்திற்குப் பிறகு உங்கள் தோற்றத்திலும், நடிப்பிலும் ஒரு மெருகேற்றம் தெரிகிறதே?

" ம்ம்ம்... ஆமாம். ஒவ்வொரு படத்திலுமே ஏதாவது புதுசா செய்யணும்னு நினைப்பேன். ஒரு நடிகையா தொடர்ந்து  கத்துக்கிட்டே இருக்கேன். திறமையான நடிகர்கள், நல்ல இயக்குநர்களோடு பணிபுரியும்போது அது இன்னும் அதிகமாக வெளிப்படுது. என் உழைப்பு கவனிக்கப்படுவது எனக்கு மகிழ்ச்சி".

VIKA0966_17407.jpg

தெலுங்கில் டபுள் ஹீரோயின் சப்ஜெக்டில் நடிக்கிறீர்கள். ஆனால், தமிழில் அப்படி நடிப்பதில்லையே?

" தமிழில் அப்படியான கதாபாத்திரங்களோடு என்னை யாரும் அணுகவில்லை என்பதே உண்மை. அப்படியான கதையோடு யாராவது வந்தால், நிச்சயம் அதில் நடிப்பேன்."

பெரிய நடிகர்கள், பெரிய பேனர்களின் படங்களில் மட்டுமே நடிக்கிறீர்களே ?

" அப்படி இல்லை. எனக்கு ஸ்கிரிப்ட் தான் முக்கியம்."

ஒரு புகழ்பெற்ற நடிகையாக இருப்பதால், பழைய சராசரி வாழ்வை மிஸ் செய்கிறீர்களா?

" அப்படி சொல்ல முடியாது. நடிகையாக இருந்தாலும், குடும்பத்திடமும், நண்பர்களிடமும்... நான் அதே பழைய காஜல்தான். உறவுகளை சரிவர சமமாக சமாளிப்பதால், அந்தப் பிரச்சினை எனக்கில்லை."

ஒரு நடிகையாக இருப்பதில் சந்தோஷம் என்ன? வருத்தம் என்ன?

" சந்தோஷம் தான். இதில் வருத்தப்பட எனக்கு ஏதுமில்லை. எத்தனை பேருக்கு இப்படியான வாய்ப்பு கிடைக்கும். வெரைட்டியான வாழ்க்கை, பலவிதமான உணர்வுகள் என நடிகையாக என் வாழ்க்கை திருப்தியா இருக்கு."

ராஜமெளலியின் "மஹதீரா" ஹீரோயின் நீங்கள். பாகுபலியில் நடிக்க அழைக்கவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

" கண்டிப்பா இல்லை. இதுவரை ராஜமெளலி போல சிறந்த இயக்குநரை என் வாழ்நாள்ல சந்திக்கலை. அவரோட ஒரு படத்துதுல நடிச்சதையே பெரும் பாக்கியமாகவும், வரமாகவும் நினைக்கிறேன். பாகுபலி படத்திற்கு எந்த கதாபாத்திரங்கள் தேவையோ அதை அவர் தேர்வுசெய்திருக்கிறார். அதில் நான் இடம்பெறாததில் பெரிய வருத்தம் ஒன்றுமில்லை." என்று சிறிய புன்சிரிப்போடு சொல்லி முடிக்கிறார். அடுத்த கேள்விக்குப் போகும் முன்னரே தடுக்கிறார்... " ரொம்ப பசிக்குகுது... என்னால் பசியை அடக்க முடியாது..." 

சாப்பிட நடக்கும் நேரத்தில் காஜலிடம் சில க்விக் கேள்விகள்

1. பிடித்த நிறம் ?

 " வெள்ளை"

2. பிடித்த உணவு?

" ஆசிய உணவுகள். குறிப்பாக தாய் உணவுகள்."

3. நீங்கள் வைத்திருக்கும் கார்? உங்களின் கனவு கார்?

" இப்பொழுது ஆடி வைத்திருக்கிறேன். கார் குறித்த கனவெல்லாம் எனக்கில்லை."

4. இந்தியாவில் பிடித்த இடம்? உலகளவில் பிடித்த இடம்?

" இந்தியாவில் கோவா மற்றும் ஜம்மு கஷ்மீர். உலகளவில் ப்ரான்சின் ப்ரெஞ்ச் ரிவெய்ரா"

5. உங்கள் பொழுதுபோக்கு?

" படிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். படங்கள் பார்ப்பது, சமைப்பது, நடனம், பயணம்."

6. பிடித்த மிருகம்?

" குதிரை".

7. பிடித்த படம்?

" பிஃபோர் சன்ரைஸ், பிஃபோர் சன்செட்"

8. நீங்கள் நடித்ததில் பிடித்தது?

" அதை இனிமேல் தான் நடிக்க வேண்டும்"

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/73401-actress-kajal-agarwal-interview.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.