Jump to content

யார் தடுத்தாலும் பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பேன்!


Recommended Posts

யார் தடுத்தாலும் பொருத்து வீட்டுத்திட்டத்தை ஆரம்பிப்பேன்!

வடக்கு மாகாண மக்களுக்கான பொருத்து வீட்டுத்திட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட எந்தத் தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்தாலும் நான் அத்திட்டத்தை அமுல்படுத்தியே தீருவேன் என மீள் குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன பொருத்து வீட்டுத் திட்டத்தை நிறுத்தியுள்ளார் என்ற செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஏன் இந்த வீட்டுத் திட்டத்தை எதிர்க்கின்றனர் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்.

வடக்கில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருத்து வீட்டுத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியபோது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினரால் இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், எவ்வாறு உங்களால் இவ்வீட்டுத் திட்டத்தை ஆரம்பிக்கமுடியும் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது,

எந்த நாடுகளிலும் தற்போது பொருத்து வீடுகளே அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் பொருட்செலவு, ஆட்செலவு என்பன குறைக்கப்படுகின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்க்கலாம். ஆனால், நான் மக்களுக்கு உறுதி வழங்கியுள்ளேன். மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இரமணைமடுத் திட்டத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள், பொருளாதார மத்திய நிலையத்தை ஆரம்பித்தபோது எதிர்த்தார்கள் 30 வருடமாக மக்கள் கஷ்ரப்பட்டுள்ளார்கள். இனியும் அவர்கள் கஷ்ரப்படவேண்டுமா?

எனது திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் வைத்திருப்போர் மக்களுக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்கட்டும். எப்படியிருப்பினும் விரைவில் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பேன் எனத் தெரிவித்தார்.

http://thuliyam.com/?p=49294

Link to comment
Share on other sites

7 minutes ago, Athavan CH said:

எனது திட்டத்திற்கு மாற்றுத்திட்டம் வைத்திருப்போர் மக்களுக்கு வீட்டினை அமைத்துக் கொடுக்கட்டும்.

சென்ற கிழமை அடித்த மழையில் மல்லாகத்தில் உள்ள இடம் பெயந்தவர்களின் முகாம் கூரைத் தகடுகள் காணாமல் போய் விட்டனவாம். அந்த மக்களின் கதி? அடுத்த மழை காலத்துக்கு முன்பாகவாவது அவர்களுக்கு ஒரு வழி செய்யுங்கள். வீட்டில் உள்ள ஒழுக்குக்கே ஐயோ ஒழுகுது என்று கத்துபவர்களுக்கு - கூரையே இல்லாமல் இருப்பவர்களின் கதி புரியாதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளையார் கோவிலில் விகாரை கட்டினால் என்ன என்று கேட்கிற ஐய்ய இவர்...இதையும் சொல்வார்..இதுக்கு மேலையும் சொல்வார்...

Link to comment
Share on other sites

42 minutes ago, alvayan said:

பிள்ளையார் கோவிலில் விகாரை கட்டினால் என்ன என்று கேட்கிற ஐய்ய இவர்...இதையும் சொல்வார்..இதுக்கு மேலையும் சொல்வார்...

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது, இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஜீவன் சிவா said:

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது, இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

எங்களுக்கு இப்ப அதுவே முக்கியம்.சிரங்கு இருந்தால் தானே சொறியலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, ஜீவன் சிவா said:

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது,

இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள்

அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

 

22 minutes ago, சுவைப்பிரியன் said:

எங்களுக்கு இப்ப அதுவே முக்கியம்.சிரங்கு இருந்தால் தானே சொறியலாம்.

இதனை மறுப்பவர்கள் தமிழர் தலைவர்களும் பிரதிநிதிகளுமாக இருக்கிறார்கள்

அவ்வாறாயின் ஏன்?

எதற்காக?

யாருக்காக??? இதனை மறுக்கிறார்கள்?

அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?

Link to comment
Share on other sites

1 minute ago, விசுகு said:

யாருக்காக??? இதனை மறுக்கிறார்கள்?

அவர்களுக்கு மக்கள் மீது அக்கறை இல்லையா?

மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஜீவன் சிவா said:

மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் ?

ஏன் மறுக்கிறார்கள் என்றே தெரியாத போது

மாற்றவழி என்னவென்று சொல்வது??

Link to comment
Share on other sites

2 minutes ago, விசுகு said:

ஏன் மறுக்கிறார்கள் என்றே தெரியாத போது

மாற்றவழி என்னவென்று சொல்வது??

எனக்கும் தெரியவில்லை.

இந்த பாதிக்கப்பட்ட மக்களை அரசியல்வாதிகள் பகடை காய்களாக பயன் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஜீவன் சிவா said:

எனக்கும் தெரியவில்லை.

இந்த பாதிக்கப்பட்ட மக்களை அரசியல்வாதிகள் பகடை காய்களாக பயன் பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எனக்கும் உண்டு. 

எந்த துரும்பையும் பிடித்தபடி

அந்த மக்கள் வெளியில் வரணும் என்று தான் தலைவர்கள் இருக்கணும்

தமிழருக்கு மட்டும்???

இதிலே மேலும் வேதனை என்னவென்றால் செய்ய முயல்பவரும் தமிழர்.

Link to comment
Share on other sites

6 minutes ago, விசுகு said:

எந்த துரும்பையும் பிடித்தபடி

அந்த மக்கள் வெளியில் வரணும் என்று தான் தலைவர்கள் இருக்கணும்

இல்லை விசுகு இங்கு வேறு ஒரு சிக்கலும் இருக்கு.

அதாவது கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள மக்களை வேறு இடங்களில் குடியேற்றினால், மறுபடியும் அந்த மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்ப முடியாமலே போகலாம் என்பது. இதனால் சில முகாம்களில் மக்களை அரசியல்வாதிகள் வைத்திருக்க முயல்வதில் சில நியாயங்கள் இருக்கு. ஆனால் காணியாற்ற வீடற்ற மக்களை முகாம்களில் வைத்திருக்க விரும்புவதுதான் புரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ஜீவன் சிவா said:

இல்லை விசுகு இங்கு வேறு ஒரு சிக்கலும் இருக்கு.

அதாவது கையகப்படுத்தப்பட்ட இடங்களில் உள்ள மக்களை வேறு இடங்களில் குடியேற்றினால், மறுபடியும் அந்த மக்கள் தமது சொந்த இடத்திற்கு திரும்ப முடியாமலே போகலாம் என்பது. இதனால் சில முகாம்களில் மக்களை அரசியல்வாதிகள் வைத்திருக்க முயல்வதில் சில நியாயங்கள் இருக்கு. ஆனால் காணியாற்ற வீடற்ற மக்களை முகாம்களில் வைத்திருக்க விரும்புவதுதான் புரியவில்லை.

அதை மக்களே முடிவு செய்ய அனுமதிக்கலாம் அல்லவா??

Link to comment
Share on other sites

7 minutes ago, விசுகு said:

அதை மக்களே முடிவு செய்ய அனுமதிக்கலாம் அல்லவா??

நிச்சயமாக

மாவிட்டபுரத்தில் இராணுவத்தால் நிமாணிக்கப்பட்ட வீடுகள் மிகவும் தரமானது. செலவு குறைவு - காரணம் இராணுவத்துக்கு கூலி தேவை இல்லை. சும்மாதானே இஞ்ச இருக்குறானுங்க வேலை செய்யலாம்தானே. இவை காங்கேசன்துறை, மயிலிட்டி, பலாலியை சேர்ந்த காணியற்றோருக்கு வழங்கப்பட்டது. மக்களும் சந்தோசமாக அங்கு குடியேறி இருக்கிறார்கள். சில வேளைகளில் அவர்களது வாழ்வாதாரம் கடலாக முன்பு இருந்திருந்தால் தவறுதான்.

ஆனால் கடல்வளம் மறுக்கப்பட்ட நிலையில் பலர் வேறு விதமான தொழில் திறமைசாலிகளாகி விட்டனர்.

முடிவு மக்களே எடுக்கவேண்டும் என்ற உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு. 

Link to comment
Share on other sites

 

 

பொருத்தமற்ற பொருத்து வீடுகள் (காணொலி ஆய்வு)

மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட இருக்கின்ற  பொருத்து வீட்டுத் திட்டத்திற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட பலர் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்த பொருத்து வீடுகள் தொடர்பாக  காணொலி ஆய்வு:

Link to comment
Share on other sites

10 minutes ago, Athavan CH said:

பொருத்தமற்ற பொருத்து வீடுகள் (காணொலி ஆய்வு)

இந்த வீட்டில் எனக்கும் நூறு சதவீதம் உடன்பாடில்லைத்தான். ஆனால் அதற்கான மாற்று திட்டத்தை ஏன் யாருமே முன் வைக்கிறார்கள் இல்லை. இப்போதைய மழைக்கு அவர்கள் படும்பாடு அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின்ட வீட்டு திட்டம் என்னமாதிரி வெறுமனே வார்த்தை தானா

பொருத்து வீடு என்பது வீடு என்ற போர்வைக்கு சரிவரும் 

ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைக்கு ஒத்து வராது இந் த பொருத்து வீடுகள் 

 

 

Link to comment
Share on other sites

பொருத்து வீடு என்றால் என்ன? மற்ற வீடுகளில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இதற்கான அங்கிலப்பதம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, முனிவர் ஜீ said:

இந்தியாவின்ட வீட்டு திட்டம் என்னமாதிரி வெறுமனே வார்த்தை தானா

பொருத்து வீடு என்பது வீடு என்ற போர்வைக்கு சரிவரும் 

ஆனால் இலங்கை தமிழ் மக்களுக்கு குறிப்பாக வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கைக்கு ஒத்து வராது இந் த பொருத்து வீடுகள் 

இதைத்தான் நானும் பல இடங்களில் சொல்லியிருக்கிறேன்.
பொருத்து வீடு இலங்கை காலநிலைக்கும், நிலத்தின் வலிமைக்கும் ஒரு காலமும் ஒத்துவராது. 

 எது எப்படியோ சோ காட்டி பிரச்சனையை முடிக்க நினைக்கிறார்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஜீவன் சிவா said:

சரி, சுவாமிநாதனை விடுங்கள்.

இந்த திரியை திசை திருப்பாமல், இந்த பொருத்து வீடுகள் ஏன் மக்களுக்கு கூடாது, இவற்றை ஏன் சில அரசியல்வாதிகள் மறுக்கிறார்கள். அப்படி மறுத்தவர்கள் அதற்கு என்ன மாற்று திட்டத்தை முன் வைத்தார்கள் என்று இங்கு கொஞ்சம் ஆரோக்கியமா விவாதிக்கலாமா?

அல்லது இடம்பெயர்ந்தவர்களை மழையிலும் குளிரிலும் விட்டுவிடுவமா?

பொதுப் பணத்தை மக்கள ஏமாற்றும் திட்டம் ...மக்களை மட்டுமன்றி இனத்தையும் ஏமாற்றி செயலாற்ரூ ௹ஈ௶௶ஆ 22இலட்சத்திற்கு நம்முரில் வாழ்க்கூடிய சுநாத்தியமான வீட்டை அமைக்க முடியும்....இந்திய கழிவுப் பொருட்களைக் கொண்டு அமைக்கப்படும் பொருத்துவீடு இனத்தையும் அழிக்ககூடியது...வீட்டுத்திட்டம் என்று சொல்லி கிடைப்பதையும் தட்டிப் பறிப்ப்வர்தான் இந்த சுவாமினாதான்..மிச்சத்தை யோசித்து  பாருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

பொருத்து வீடு என்றால் என்ன? மற்ற வீடுகளில் இருந்து எப்படி மாறுபடுகின்றது? இதற்கான அங்கிலப்பதம் என்ன?

நிழலி... Prefabricated Homes in India  என்று கூகிள் ஆண்டவரிடம் கேட்டுப்பாருங்கள்!

 

உலக அளவில் இரும்பில் விலை திடீரெனக் குறைந்ததால்..ஏற்கனவே வைத்திருக்கும் இரும்பை என்ன செய்வது என்று தெரியாமல் ...திகைத்த இந்தியாவுக்கு இப்படி ஒரு ஐடியா வந்ததில் ஆச்சரியம் இல்லை!

ஒரு வீட்டுக்காக எவ்வளவு பணம் இந்தியாவுக்குக் கொடுக்கப்படப் போகின்றது என்பது தான் இங்கு நாம் கேட்க வேண்டிய கேள்வி!

அத்துடன் எமது பாரம்பரிய வீடுகளுடன் பழக்கப் பட்ட எமக்கு...இந்தப் பொறுத்து வீடுகள் சரி வராது என்பது எனது தனிப்பட்ட கருத்து! அநேகமான இந்தியர்களும் இந்த வீடுகளை, விலை மலிவாகவிருந்தும்.. விரும்புவது இல்லை!

தமிழனது தலை தான் இருக்கிறதே...எல்லோருக்கும் மிளகாய் அரைப்பதற்கு..!

பின்வரும் காணொளியையும் ஒரு முறை பாருங்கள்!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா "சென்றல் எயர்கொண்டிசன் "போட்டு கொடுக்குதாம் எல்லாவீட்டுக்கும்......மின்சார கட்டணம் செலுத்த தேவையில்லையாம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரானின் காணொளியில்.... 
இந்தப் பொருத்து வீடுகளுக்கு, இரும்பு பாவிப்பது, எமது ஊருக்கு  பொருத்தமில்லை.
எமது காலநிலையின் படி... இரும்பு பொருட்கள் விரைவில் கறள் பிடிக்கும் தன்மை  உள்ளது. 
செய்வதை... ஒழுங்காக செய்யாமல், சுவாமிநாதன்  நாண்டு கொண்டு நிற்பது சரியல்ல.

Link to comment
Share on other sites

கூட்­ட­மைப்பு ஒன்­றையும் செய்­வ­து­மில்லை செய்­கின்­ற­வர்­களை விடு­வ­து­மில்லை

IMG-6644-cdb73a1de7c55cdba696cf66a39a864345a2059a.jpg

 

பொருத்து வீட்டுத் திட்­டமே பொருத்­த­மா­னது என்­கிறார் சுவா­மி­நாதன் 
(எம்.ஆர்.எம்.வஸீம்)

வட­மா­கா­ணத்தில் பொருத்து வீடுகள் அமைக்­கப்­ப­டு­வ­தற்கு தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அர­சியல் நோக்­கத்­திலா அல்­லது வேறு ஏதா­வது

கார­ணத்­திலா எதிர்க்­கின்­ற­தென தெரி­ய­வில்லை. ஆனால் உலக நிலை­மையை அவ­தா­னிக்­கும்­போது தற்­போ­தைய நிலையில்  பொருத்த வீட்­டுத்­திட்­டமே உகந்­த­தாகும் என சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு புனர்­வாழ்­வ­ளிப்பு மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார். 

கொழும்பில் அமைந்­துள்ள அவ­ரது அமைச்சில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வரால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்­றுக்கு பதி­ல­ளி்த்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

எனது தனிப்­பட்ட நோக்­கத்தில் பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை நான் ஆரம்­பிக்­க­வில்லை. இந்த வேலைத்­திட்­டத்தை இடை நிறுத்­து­மாறு ஜனா­தி­பதி தெரி­விக்­கவும் இல்லை. அத்­துடன் வட­மா­கா­ணத்தில் சாதா­ரண வீடு­களை நிர்­மா­ணிப்­ப­தற்கு மணல் இல்லை. அதற்கு மக்­க­ளுக்கு போது­மான நேரம் இல்லை. 20ஆயிரம் ரூபா­வாக இருந்த ஒரு டிபர் மணல் தற்­போது 40ஆயி­ர­மாக உயர்ந்­துள்­ளது.

இவ்­வா­றான நிலையில் உல­க­ரீ­தியில் பார்க்­கும்­போது பொருத்த வீட்­டுத்­திட்­டம்தான் உகந்­த­தாகும். இந்த பொருத்து வீட்­டுத்­திட்­டத்தை எந்த கம்­பனி மேற்­கொண்­டாலும் எங்­க­ளுக்கு பிரச்­சி­னை­யில்லை. அந்த மக்­க­ளுக்கு வீடு­தேவை. அதுதான் எனது நோக்கம். அர­சாங்கம் அதி­கா­ரத்­துக்கு வந்து 2வரு­டங்கள் கடந்தும் ஒரு வீட்­டை­யேனும் சரி­யா­ன­மு­றையில் கட்­டி­மு­டிக்­க­வில்லை..

அத்­துடன் சர்­வ­தேச நாடு­களை பார்க்­கும்­போது, குறிப்­பாக அமெ­ரிக்கா, அவுஸ்­தி­ரே­லியா போன்ற நாடு­களில் பொருத்த வீடு­கள்தான் நிர்­மா­ணிக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இந்த வீட்­டுத்­திட்டம் மூலம் மக்­க­ளுக்கு அனைத்து வச­தி­க­ளையும் செய்­து­கொ­டுத்­துள்ளோம். ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு இதனை அர­சியல் நேக்­கத்­துக்­காக எதிர்க்­கின்­றார்­களா அல்­லது வேறு நோக்­கத்­துக்­காக எதிர்க்­கின்­றார்­களா என்று எனக்கு விளங்­க­வில்லை.

மேலும் எந்த வேலைத்­திட்­டத்தை மேற்­கொண்­டாலும் அதனை எதிர்க்­கக்­கூ­டி­ய­வர்கள் எதிர்த்­துக்­கொண்­டுதான் இருப்­பார்கள்.

அதற்­காக மக்­க­ளுக்கு செய்­யக்­கூ­டிய வேலைத்­திட்­டங்­களை நிறுத்த முடி­யாது. அந்த மக்கள் 30வருட யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் அந்த பிர­தே­சங்கள் அபி­வி­ருத்தி செய்­யப்­ப­ட­வேண்டும்.

அத்துடன் 3இலட்சத்தி 50ஆயிரம் ரூபாவுக்கு வீடுகட்டலாம் என்பது சிறு சிறு வீடுகளுக்கு பொருந்தும். எமது வீட்டுத்திட்டத்துக்கு பொருந்தாது. முடியுமானவர்கள் செய்துகொடுக்கட்டும். நான் யாரையும் தடுக்கவில்லை. இவர்கள் ஒன்றும் செய்வதும் இல்லை செய்ய விடுவதும் இல்லை என்றார்.

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2016-11-25#page-1

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணத்தில் இரும்பு பொறுக்கி விற்று ஒரு வேளைதானும் உணவு உண்ணும் வறிய குடும்பங்கள் வரும்காலத்தில் நலமடையப் பொருத்து வீடுகள் ஒரு வரப்பிரசாதமாக அமையும். இரும்புச் சூட்டிலும் மக்கள் அவிந்து நோயாளி ஆவார்கள். வைத்தியர்களுக்கும் வரும்படி அதிகமாகும்.   

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • எதிர்த்தும் பெற தெரியாது. சேர்ந்தும் பெற தெரியாது.  இரண்டையும் விட சுலபமான வழி என்ன என்பதை நீங்கள் கூறலாமே!    அல்லது நீங்கள்  கூறலாமே!   
    • "வாலிபத்தில் தவற விட்டவைகளை  ... " ஏன் அனுபவித்ததாக இருக்கக் கூடாது?      
    • டிசம்பர் 2014 இல், ஓக்லாண்ட் இன்ஸ்டிடியூட் [Oakland Institute] ஒரு கள ஆய்வு இலங்கையின் வடக்கு கிழக்கில் நடத்தியது. போரின் பின் அதன் நிழலும், போருக்குப் பிந்தைய இலங்கையில் நீதிக்கான போராட்டம் பற்றியது அது [The Long Shadow of War: the Struggle for Justice in Postwar Sri Lanka,] பருந்து போல நிறைந்த இராணுவ சூழலில் மக்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் மற்றும் துயரங்கள் பற்றியது அது. அத்துடன் பல வழிகளில்  அரசாங்க நிறுவனங்கள், அரசின் ஆசீர்வாதத்துடனும் பாதுகாப்புடனும்  செயல்படுத்தப்பட்ட தீவிரமான நில அபகரிப்பு மீது முக்கிய கவனம் செலுத்தியது.  வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு உத்திகள் மூலம் அரசாங்கம் கையாளும் தந்திரங்களையும் அடக்குமுறைகளையும்  2015 ஆண்டு தங்கள் அறிக்கை மூலம் அம்பலப்படுத்தியது அதில் நில அபகரிப்பு மற்றும் இராணுவமயமாக்கல் ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்பு மற்றும் அதன் தொடர்ச்சியான பயன்பாட்டை வெளிப்படுத்தியது.  நீர்ப்பாசனத் திட்டங்கள் மற்றும் வன்முறை போன்ற நில அபகரிப்புக்கான பழைய உத்திகளுடன் புதிதாக  புத்த கோவில்கள் அமைத்தல், தொல்பொருள் உருவாக்கம் உள்ளிட்ட புதிய முறைகள், பாதுகாப்புகள், உயர் பாதுகாப்பு வலயங்கள் மற்றும் சிங்களமயமாக்க சிறப்பு பொருளாதார வலயங்கள் என பல வழிகளில்  வடக்கு மற்றும் கிழக்கு - தமிழர்களின் பாரம்பரிய தாயகம் - கட்டாயத்தால் பறிப்பட்டுக்கொண்டு இருப்பதை எடுத்துக்காட்டியது. கொழும்பில் எந்த தமிழரும் நிலத்தை அபகரித்து குடியேறவில்லை. அது சிங்களவரின் பாரம்பரிய நிலமும் அல்ல. இலங்கையின் மன்னர் ஆட்சியை எடுத்துக்கொண்டால்,       Anuradhapura period (377 BCE–1017) Polonnaruwa period (1056–1232) Transitional period (1232–1505) இங்கு Jaffna Kingdom , Kingdom of Gampola , Kingdom of Kotte , Kingdom of Sitawaka , & Vanni Nadu என் நாம் அறிகிறோம்  The Kingdom of Kandy was a monarchy on the island of Sri Lanka, located in the central and eastern portion of the island. It was founded in the late 15th century and endured until the early 19th century. Initially a client kingdom of the Kingdom of Kotte, Kandy gradually established itself as an independent force during the tumultuous 16th and 17th centuries, allying at various times with the Jaffna Kingdom, the Madurai Nayak dynasty of South India, Sitawaka Kingdom, and the Dutch colonizers to ensure its survival. / கண்டி இராச்சியம் சேனாசம்பந்தவிக்கிரமபாகு என்பவனால் உருவாக்கப்பட்டது (1467- 1815)  கொழும்பு வை எடுத்துக்கொண்டால்  பதினாறாம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டை அரசின் ஒரு பகுதியாகவும், இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், பொ.ஊ. பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர், போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் பெறத் தொடங்கியது. அதாவது இங்கு சிங்களவர் பெரிதாக இருக்கவில்லை . இது உங்களுக்கு ஆச்சரியமாகக் கூட இருக்கலாம் , ஆனால் அதுவே உண்மை . இந்தியத் தமிழர் மற்றும் இசுலாமிய வர்த்தகர்களின் பேச்சு மொழி அதிகமாக தமிழே! 2001 சனத்தொகை கணக்கெடுப்பின்படி கொழும்பு நகர மக்கள் தொகையியல் இன அடிப்படையில் பின்வருமாறு காணப்படுகிறது. இல    இனம்    சனத்தொகை    மொத்த % 1    சிங்களவர்    265,657    41.36 2    இலங்கைத் தமிழர்    185,672    28.91 3    இலங்கைச் சோனகர்    153,299    23.87 4    இலங்கையின் இந்தியத் தமிழர்    13,968    2.17 5    இலங்கை மலேயர்    11,149    1.73 6    பறங்கியர்    5,273    0.82 7    கொழும்புச் செட்டி    740    0.11 8    பரதர்    471    0.07 9    மற்றவர்கள்    5,934    0.96 10    மொத்தம்    642,163    100 இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது 2001 இல் கூட சிங்களவரை விட [41.36] மற்றவர்களின் கூட்டுத்தொகையே கூட! Traveller Ibn Battuta who visited the island in the 14th century, referred to it as Kalanpu. Arabs, whose prime interests were trade, began to settle in Colombo around the eighth century AD mostly because the port helped their business by the way of controlling much of the trade between the Sinhalese kingdoms and the outside world. It was popularly believed that their descendants comprised the local Sri Lankan Moor community, but their genetics are predominantly South Indian [தென் இந்தியர் - ஆகவே தமிழே அங்கு கூடுதலாக பேசப்பட்டுள்ளது]  இதை ஒருக்கா முழுமையாக பாருங்கள். அதைத்தான், இலங்கை அரசு இன்று பின்பற்றுகிறது போல புரிகிறது. Israel’s Occupation: 50 Years of Dispossession  [amnesty international அறிக்கை]   Since the occupation first began in June 1967, Israel’s ruthless policies of land confiscation, illegal settlement and dispossession, coupled with rampant discrimination, have inflicted immense suffering on Palestinians, depriving them of their basic rights.    THE WORST THING IS THE SENSE OF BEING A STRANGER IN YOUR OWN LAND AND FEELING THAT NOT A SINGLE PART OF IT IS YOURS. Raja Shehadeh, Palestinian lawyer and writer     நன்றி 
    • துணிவான தமிழ் அரசியல்வாதிகளான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், வியாழேந்திரன் போன்று இனிவரும் இளைய தலைமுறையைச் சேர்ந்த துணிவான இளைஞர்கள் பின்வருவனவற்றை செய்வதன் மூலம் அரசுடன் இணைந்துகொள்ளலாம், 1. உரிமை பற்றிப் பேசுவதை முற்றாக நிறுத்துதல். 2. தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்கள் குறித்தோ, மேய்ச்சல் நில அபகரிப்புக் குறித்தோ பேசுவதை நிறுத்துதல். 3. தமிழர் தாயகத்தில் நடைபெற்றுவரும் பெளத்த மயமாக்கல் குறித்த எதிருப்புப் போராட்டங்களை நிறுத்துதல். 4. தமிழர் தாயகத்தின் இருப்புக் குறித்துப் பேசுவதை நிறுத்துதல். 5. போர்க்குற்ற விசாரணை, அரசியல்த் தீர்வு குறித்துப் பேசுவதை நிறுத்துதல். ஆகிய விடயங்களைச் செய்துவிட்டு அரசுடன் இணைந்தால், யாழ்ப்பாணத்தைக் காத்தான்குடியாக மாற்றலாம், மட்டக்களப்பில் ஹிஸ்புல்லாவின் பல்கலைக் கழகத்திற்கு நிகரான பல்கலைக்கழகம் ஒன்றைக் கட்டலாம். தமது தம்பி, அண்ணா, சகோதரிகளுக்கு பணம் பார்க்கும் வியாபாரங்களை எடுத்துக் கொடுக்கலாம். லாண்ட்ரோவரோ அல்லது லாண்ட்குறூசரோ எடுத்து ஓடலாம். இப்படிப் பல விடயங்களைச் செய்யலாம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.