Jump to content

'11 முதல் 15 வயதுவரை கால்பந்து பயிற்றுநரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்' - இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம் போல் ஸ்டுவர்ட் தெரிவிப்பு


Recommended Posts

'11 முதல் 15 வயதுவரை கால்பந்து பயிற்றுநரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டேன்' - இங்கிலாந்தின் முன்னாள் கால்பந்தாட்ட நட்சத்திரம் போல் ஸ்டுவர்ட் தெரிவிப்பு
 

இங்­கி­லாந்தின் பிர­பல முன்னாள் கால்­பந்­தாட்ட வீரர்­களில் ஒரு­வ­ரான போல் ஸ்டுவர்ட், தனது சிறு பரு­வத்தில் கால்­பந்­தாட்டப் பயிற்­றுநர் ஒரு­வரால் 4 வருட காலம் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக தெரி­வித்­துள்ளார்.

 

20873Paul-Stewart.jpg

போல் ஸ்டுவர்ட்


 

1981 முதல் 2000 ஆம் ஆண்­டு ­வரை இங்­கி­லாந்தின் புகழ்­பெற்ற கால்­பந்­தாட்டக் கழ­கங்­களின் சார்பில் விளை­யா­டி­யவர் போல் ஸ்டுவர்ட். மன்­செஸ்டர் யுனைடெட், லிவர்பூல், டொட்­டன்ஹாம் ஹொட்ஸ்புர் ஆகி­ய­னவும் இக்­ க­ழ­கங்­களில் அடங்கும்.

 

கழக மட்­டத்தில் 559 போட்­டி­களில் பங்­கு­பற்றி 139 கோல்­களை அவர் புகுத்­தினார். 1991 ஆம் ஆண்டு அவர் விளை­யா­டிய டொட்­டன்ஹாம் ஹொட்ஸ்புர் கழகம் ஏ.எவ். கிண்­ணத்தை கைப்­பற்­றி­யமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

20873Paul-Stewart-of-Tottenham-Hotspur.j

போல் ஸ்டுவர்ட்


 

1990களின் முற்­ப­கு­தியில் இங்­கி­லாந்து தேசிய அணி சார்­பிலும் 3 போட்­டி­களில் அவர் விளை­யா­டினார். தற்­போது அவ­ருக்கு 52 வயது. இந்­நி­லையில், இளம் கால்­பந்­தாட்ட வீர­ராக தான் இருந்­த­போது பயிற்­று­நரால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டதை நேற்று முன்­தினம் பகி­ரங்­க­மாக்­கினார் போல் ஸ்டுவர்ட்.

 

தனது 11 வய­தி­லி­ருந்து 15 வயது வரை 4 வரு­டங்கள் தான் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­பட்­ட­தாக அவர் தெரி­வித்தார். இங்­கி­லாந்தைச் சேர்ந்த மற்­றொரு முன்னாள் கால்­பந்­தாட்ட வீர­ரான அன்டி வூட்வார்ட், தனது இளமைக் காலத்தில் குரூ அலெக்­ஸாண்ட்ரா கழ­கத்தின் கனிஷ்ட வீர­ராக தான் இருந்­த­போது அக்­ க­ழ­கத்தின் கனிஷ்ட அணியின் பயிற்­றுநர் பெரி பென்னெல் தன்னை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துகு உட்­ப­டுத்­தி­ய­தாக குற்றம் சுமத்­தி­யி­ருந்தார்.

 

20873FA-Cup-after-winning-it-with-Spurs-

1991 இல் ஏ.எவ்.ஏ. கிண்ணத்துடன் போல் ஸ்டுவர்ட்


 

பெரி பென்னல் ஏற்­கெ­னவே வேறு பாலியல் குற்­றச்­சாட்­டு­களின் கார­ண­மாக சிறையில் அடைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்­நி­லையில், தற்­போது 43 வய­தான அன்டி வூட்­வார்ட்டின் கதையை தான் வாசித்­த­தை­ய­டுத்து, தன் மீது மேற்­கொள்­ளப்­பட்ட பாலியல் துஷ்­பி­ர­யோகம் குறித்தும் அம்­ப­லப்­ப­டுத்­து­வ­தற்கு தான் தீர்­மா­னித்­தாக போல் ஸ்டுவர்ட் கூறி­யுள்ளார்.

 

தான் 11 வயது சிறு­வ­னாக இருந்­த­போது, தன்னை எதிர்­கா­லத்தில் ஒரு கால்­பந்­தாட்ட நட்­சத்­தி­ர­மாக்­கு­வ­தாக மேற்­படி பயிற்­றுநர் வாக்­கு­றுதி அளித்தார் எனவும் அதன் பின்னர் தன்­னிடம் அவர் முறை­கே­டாக நடந்து கொண்டார் எனவும் போல் ஸ்டுவர்ட் தெரி­வித்­துள்ளார்.

 

20873Andy-Woodward.jpg

அன்டி வூட்வார்ட்


 

'ஒருநாள் காரில் சென்று கொண்­டி­ருந்த போது அவர் என்னை தொட்டார். எனக்கு மரண பயம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன செய்­வ­தெனத் தெரி­ய­வில்லை. எனது பெற்­றோ­ரிடம் கூறு­வ­தற்கு முயன்றேன்.

 

ஆனால், அப்­போது எனக்கு 11 வய­து தான். அப்­போ­தி­ருந்து அவர் என்னை படிப்­ப­டி­யாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தினார். இதுகுறித்து எவ­ரி­டமும் கூறினால் எனது தாய், தந்தை மற்றும் இரு சகோ­த­ரர்­களை கொன்­று­விடப் போவ­தாக அவர் அச்­சு­றுத்­தினார்.

 

208731.jpg

போல் ஸ்டுவர்ட், பெரி பென்னஸ் (இடமிருந்து வலம்)


 

11 வயது சிறு­வ­னான நான் இதை நம்­பினேன். இப்­ பா­லியல் துஷ்­பி­ர­யோ­கத்­தினால் ஏற்­பட்ட மனப் பாதிப்பு என்னை மது மற்றும் போதைப்­பொருள் பாவ­னை க்கும் இட்டுச் சென்­றது.

இத்­ துஷ்­பி­ர­யோ­கங்கள் மேலும் மேலும் மோச­ம­டைந்து சென்­றன' என போல் ஸ்டுவர்ட் கூறி­யுள்ளார். இங்­கி­லாந்தின் முன்னாள் கால்­பந்­தாட்ட வீரர்கள் இரு­வ­ரான அன்டி வூட்வார்ட் மற்றும் அவரின் அணி சகா­வான ஸ்டீவ் வோல்ட்டர்ஸ் ஆகியோர் தமது இள­மைக்­கால பயிற்­றுநர் பெரி பென்­ன­லினால் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­பட்­ட­தாக தெரி­வித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

6 சிறு­வர்­களை பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு உட்­ப­டுத்­தி­யமை உட்­பட 23 குற்­றச்­சாட்­டு­களை ஒப்­புக்­கொண்ட பெரி பென்­ன­லுக்கு 1998 ஆம் ஆண்டு சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

 

அவர் 9 வருடங்கள் சிறையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது வர்த்தகராகவுள்ள போல் ஸ்டுவர்ட், அன்டி வூட்வார்ட்டின் கதையை வாசித்த பின்னர் தான் எதிர்கொண்ட அவலங்களை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இது போன்று மேலும் பலர் தமது இன்னல்களை வெளிப்படுத்த முன்வரக்கூடும் என தான் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=gossips&news=20873#sthash.ZvJKbwGp.dpuf

 

Link to comment
Share on other sites

விளையாட்டு வீரர்கள் தங்கள் மீதான பாலியல் தாக்குதல் பற்றி வெளியே சொல்ல ரூனி அழைப்பு

 

பயிற்சியாளர்களால் பாலியல் வல்லுறுவுக்கு உள்ளாக்கப்பட்ட முன்னாள் விளையாட்டு வீரர்கள் அதைப் பற்றி வெளியே சொல்ல வேண்டும் என்று இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான வேன் ரூனி வலியுறுத்தியிருக்கிறார்.

தொலைக்காட்சியில் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட விளையாட்டு வீரர்கள்
 

பிரிட்டன் கால்பந்து உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும் இது பற்றிய தொடர் குற்றச்சாட்டுக்களுக்கு பின்னர், என்எஸ்பிசிசி என்ற பிரிட்டனின் குழந்தைகளுக்கான அறக்கட்டளையின் தூதராக விளங்கும் ரூனியின் இந்த கோரிக்கை வந்திருக்கிறது,

இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான வேன் ரூனி  இங்கிலாந்து கால்பந்து நட்சத்திரமான வேன் ரூனி

குரூ அலெக்ஸாண்ரா என்கிற இங்கிலாந்து கால்பந்து அணியின் பயிற்சியாளராக 1980-களிலும், 90-களிலும் இருந்த பேரி பெனல் மீது அதிகப்படியான குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டுள்ளதோடு, இது பற்றிய துஷ்பிரயோகம் பற்றி 5 முன்னாள் விளையாட்டு வீரர்கள் இதுவரை தெரிவித்திருக்கின்றனர்.

ஜாசன் டன்ஃபோர்டு  ஜாசன் டன்ஃபோர்டு, பெனலை அடித்திருப்பதாக கூறியுள்ளார்

இளைஞர்களுக்கு எதிரான பாலியல் தாக்குதலுக்காக மூன்றுமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

டேவிட் ஒய்ட் (இடது) மற்றும் பால் ஸ்ட்டுவர்ட் (நடுவில்)  அன்டி உட்வார்டின் கதை வெளிவர தொடங்கிய பின்னர், இங்கிலாந்து முன்னாள் சர்வதேச விளையாட்டு வீரர்கள் டேவிட் ஒய்ட் (இடது) மற்றும் பால் ஸ்ட்டுவர்ட் (நடுவில்) துஷ்பிரயோகம் பற்றி பேசியுள்ளனர்

நூற்றுக்கணக்கான இளம் ஆண்கள் இந்த தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று கருத்துக்கள் உள்ளன.

http://www.bbc.com/tamil/sport-38106973

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.