Jump to content

‘ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்!’ - பிஸி கேர்ள் தமன்னா #VikatanExclusive


Recommended Posts

‘ரஜினி கூட நடிக்கணும்...ஆனா ஒரு கண்டிஷன்!’ - பிஸி கேர்ள் தமன்னா #VikatanExclusive

 

தமன்னா

தமிழ் சினிமாவில் இது தமன்னா சீசன். 'தர்மதுரை'க்குப் பிறகு 'தேவி', 'கத்திச்சண்டை', 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2' என திரும்பின பக்கமெல்லாம் தமன்னா! கிளாமர் டாலாக மட்டுமே அறியப்பட்ட தமன்னா, சமீப காலமாக 'எனக்கு இன்னொரு முகம் இருக்கு' என்கிற ரேஞ்சில் நடிப்பிலும் மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். தமன்னாவுக்குள் இருந்த நடிகையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததில் லேட்டஸ்ட் ரிலீஸ் 'தேவி'க்கு முக்கிய பங்குண்டு. 

''என் கேரியர்ல முக்கியமான, மறக்க முடியாத படம் 'தேவி'. ஒரு நடிகையா எனக்கு கிரியேட்டிவ் ஸ்பேஸ் கொடுத்த படம். கமர்ஷியலாகவும் சக்சஸ். மறுபடி இப்படியொரு மூணு மொழிப் படங்கள்ல நடிப்பேனானு தெரியலை. ரொம்ப பாசிட்டிவான விமர்சனங்கள் வந்தது. சந்தோஷமா இருக்கேன்....''

'தர்மதுரை'யில் தமன்னாவுக்கு டைவர்ஸி, லிவிங் டுகெதர் கேரக்டர்.... எப்படி சம்மதித்தார்?

அந்த கேரக்டர் ரொம்ப யதார்த்தமானது. பொதுவா இந்தியன் சினிமாவுல முதல் பார்வையிலயே காதல்ல விழற மாதிரியான கேரக்டர்களோட சித்தரிப்பு அவ்வளவு சரியா இருக்காது. ஆனா தர்மதுரையில அதை ரொம்ப அழகா, இயல்பா சித்தரிச்சிருப்பார் டைரக்டர். விமன் எம்பவர்மென்ட்ல ரொம்ப அழுத்தமான நம்பிக்கை கொண்டவள் நான். அதனால இந்த கேரக்டரை பத்தி சொன்னதுமே யெஸ் சொல்லிட்டேன். சந்தோஷமா வாழற உரிமை பெண்களுக்கும் உண்டுனு  சோஷியல் மெசேஜ் சொன்ன இந்தப் படமும், கேரக்டரும்கூட எனக்கு ஸ்பெஷல்தான்.''

வெள்ளாவியில் வச்சு வெளுத்தது போல ஒரு கலர்... தமன்னா கலர் என ஒப்பிடுகிற அளவுக்கு அவரது நிறம் அத்தனை ஃபேமஸ்... தமன்னாவுக்கு அதில் பெருமையா?

'அது அம்மா&அப்பா கொடுத்த கிஃப்ட். கலரை நினைச்சு நான் என்னிக்கும் பெருமைப்பட்டதும் இல்லை. பெருமையா சொல்லிக்கிற அடையாளம் இல்லைங்கிறது என் எண்ணம். 'பாகுபலி 1'ல போர் வீராங்கனை கேரக்டருக்காக கொஞ்சம் கறுப்பு கலர் மேக்கப்லதான் நடிச்சேன். 

தேவி' படத்துல என்னோட கலரை 10 ஷேடு கம்மியாக்கித்தான் நடிச்சிருப்பேன்.  படத்துல என் கேரக்டருக்கு கலர் செட் ஆகாதபோது, அதை மாத்திக்கிட்டுதான் நடிக்க வேண்டியிருக்கு. என் கலரை பாராட்டறதா சொல்றீங்க... விஷால், சூரினு என் கலரை வச்சு என்னைப் பயங்கரமா கலாய்ச்சவங்கதான் அதிகம்.ஸ்கின் கலருக்கு முக்கியத்துவம் கொடுக்கிறதை நான் என்னிக்குமே என்கரேஜ் பண்றதில்லை.''

'தர்மதுரை' பிரமோஷனுக்கு வரலைனு உங்க மேல கம்ப்ளெயின்ட் கொடுத்ததா சொல்றாங்க... அதே நேரம் 'தேவி' பட பிரமோஷனுக்காக பிரபுதேவாகூட கோல்டன் டெம்பிள் வரைக்கும் பிரார்த்தனை பண்ணப் போனீங்க... என்ன நடக்குது?

'தமன்னாவை பத்தி எழுத எதுவும் நியூஸ் இல்லைனா, இப்படி எதையாவது கற்பனை பண்ணி மசாலா சேர்த்து கிளப்பி விட்டுடறாங்க.  புரமோஷன்ங்கிறது அந்தப் படத்துல ஒரு பார்ட்டுனு எனக்குத் தெரியாதா என்ன? 'தர்மதுரை' புரமோஷனுக்கு நான் கோ ஆப்பரேட் பண்ணலைனு சொல்றது சுத்தப் பொய். நீங்க சொல்ற மாதிரி புரடியூசர் சைடுலேருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படலை.
'தேவி'யோட ஹிந்தி யூனிட்ல எல்லாரும் கோல்டன் டெம்பிள் போகணும்னு ஆசைப்பட்டாங்க. அவங்ககூட நானும் போனேன். ''

Tamanna-in-Veeram-movie-stills-%281%2976

ரஜினி கூட நடிக்கிறதுதான் பலரது விருப்பமா இருக்கும். உங்களுக்கு ?

தாஜ்மகால் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா? ரஜினி சார் கூட நடிக்கிறதும் அப்படித்தான். நான் ரெடி. ஆனா  ஒரு கண்டிஷன். ஹீரோயினா மட்டும்தான் நடிப்பேன்.''

ஒரு பக்கம் பாகுபலி மாதிரி பிரமாண்ட பிராஜக்ட்.... இன்னொரு பக்கம் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம்.... பணத்துக்காக நடிகைகள் யார்கூட வேணா நடிப்பாங்கனு கலாய்க்கிறது தெரியுமா?

'எல்லாருக்கும் வாழ்க்கையில பணம் முக்கியம்தானே...?-பணத்துக்காக வேலை பார்க்கிறதுல என்ன தப்பிருக்கு? இப்படிக் கலாய்க்கிற எல்லாருமே அந்தக் கடையில பொருட்கள் வாங்கினவங்களாதான் இருப்பாங்க. அது ஒரு பிரபலமான பிராண்ட். அதுல நான் நடிக்கலை. அந்த பிராண்டை என்டார்ஸ் பண்ணினேன். அவ்வளவுதான். நான்சென்ஸான கமெண்ட்ஸுக்கு விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

கல்யாணம் எப்போ?

''விஷால் கூட 'கத்திச் சண்டை', சிம்புகூட 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்', 'பாகுபலி 2'னு மறுபடி தமிழ்ல பிசியாகியிருக்கேன். கல்யாணத்தைப் பத்தி யோசிக்கக்கூட நேரமில்லை.

http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/73081-actress-tamannah-interview.art

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

கிழ கூத்தாடிக்கு  ஜோடியா  நடிக்க  பேத்தி வயசுல இருக்கவங்கல்லாம் ரெடி !!! இவுங்களையெல்லாம் ..!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.