Jump to content

அறிவிப்பு முதல் விற்பனை வரை..சர்ப்ரைஸ் தந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டக்ல்ஸ்! #spectacles


Recommended Posts

அறிவிப்பு முதல் விற்பனை வரை..சர்ப்ரைஸ் தந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டக்ல்ஸ்! #spectacles

 

ஸ்பெக்டக்ல்ஸ்

டெக் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் கேட்ஜெட் ஸ்னாப்சாட்டின் நிறுவனத்தின் ஸ்பெக்டக்ல்ஸ் (Spectacles). ஒரு அழகான கண்ணாடியைக் மாட்டிக்கொண்டு நம் கண்கள் பார்க்கும் விஷயங்களை அதன் ஒரு 10 நொடி வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த ஐடியாதான் இந்த கண்ணாடி. போட்டோ / வீடியோவுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான ஸ்னாப்சாட் நிறுவனம் தனது முதல் வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பாக, இந்தக் கண்ணாடியை வெளியிட்டுள்ளது.

புதுமையான இன்ட்ரோ..!

spex4_12107.jpg

ஸ்னாப்சாட் சேவையோடு சேர்த்து, திடீரென ஹார்டுவேர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது அந்நிறுவனம். அதன் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க் மூலமாக இதனை வெளியிட்டுள்ளது.  Spectacles பற்றி செப்டம்பர் மாதமே அறிவித்திருந்தாலும், எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றி அந்நிறுவனம் கூறவில்லை. அதேபோல ஆப்பிள், கூகுள், மைக்ரோசாப்ட், பேஸ்புக் போன்ற நிறுவனங்களை போன்று தாங்கள் அறிமுகப்படுத்தும் புதிய தயாரிப்பின் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்தாமல், பத்திரிகையாளர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு கூட முன்கூட்டியே தகவல் அளிக்காமல், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள வெனிஸ் கடற்கரையில் “Snapbots” என்னும் இயந்திரங்கள் மூலம், “Spectacles”ஐ ஸ்னாப்சாட் நிறுவனம் சர்ப்ரைசாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடியை வைத்து என்னென்ன செய்யலாம்? 

ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடியில் வீடியோ எடுப்பதற்கு அது உங்கள் மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை. வீடியோக்களை எடுத்த பின்னர் அதை மொபைலில் உள்ள ப்ளூடூத்தை ஆன் செய்து, பிறகு ஸ்னாப்சாட் ஆப்பை திறந்து அதில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஆப்ஷன் மூலமாக மட்டுமே பகிரவோ அல்லது பார்க்கவோ இயலும்

ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடியின் மூலம் உங்களின் இரு கண்கள் பார்க்கும் விஷியங்களை 115 டிகிரி கோணத்தில், அதிகபட்சமாக 10 நொடிகள் கொண்ட வீடியோக்களை மட்டுமே எடுக்க முடியும் என்றாலும், நீங்கள் தொடர்ந்து எடுக்க விரும்பினால் அது தனித்தனி வீடியோவாக சேமிக்கப்படும்.

spex2_07258.jpg

கண்ணாடியின் வலதுப்புறத்தில் வீடியோ எடுப்பதற்கான லென்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. கண்ணாடியின் இடதுப்புறத்தின் மேற்பகுதியில் வீடியோவை ஆரம்பிப்பதற்கான பட்டன் உள்ளது,  நீங்கள் அதை அழுத்தியவுடன் வீடியோ எடுக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் விதமாக, கண்ணாடியின் இடதுப்புற ஓரத்தில் வெள்ளை நிறத்தில் எல்.இ.டி விளக்கு ஒளிரும்.

வீடியோவை ஆன் செய்வதற்கு பயன்படுத்திய அதே பட்டனை மீண்டும் அழுத்துவதன் மூலம், 10 நொடிக்கு முன்னதாகவே வீடியோவை முடிக்கவியலும்.

சில நிமிட வீடியோக்களை சேமிக்கும் திறன் கொண்ட நினைவகத்துடன் கூடிய இந்த கண்ணாடியில் சிறியளவில் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. 

கண்ணாடியை சார்ஜ் ஏற்றவும், இருக்கும் பேட்டரி அளவை தெரிந்துகொள்ளவும் கண்ணாடியை அதன் உறையில் வைக்க வேண்டும். கண்ணாடி உறையிலேயே அதன் மேற்பகுதியில் USB உள்ளதால் எளிதாக சார்ஜ் செய்யலாம்.

spex_12363.png

ஸ்பெக்டக்ல்ஸில் எடுக்கப்பட்ட வீடியோக்களை, உங்கள் மொபைலில் போர்ட்ரைட் அல்லது லாண்ட்ஸ்கேப் ஆகிய இரண்டு முறைகளில் பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே எவ்வித மாற்றமும் இல்லாமல் காணவியலும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அமெரிக்காவின் சில பகுதிகளில் மட்டுமே இது நேரடியாக விற்கப்படுகிறது. ஸ்பெக்டக்ல்ஸ் அங்கு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அத்துடன் ஸ்பெக்டக்ல்ஸில் எடுக்கப்பட்ட விதவிதமான வீடியோக்களும் தற்போது ஸ்னாப்சாட்டில் வலம்வந்து கொண்டிருக்கின்றன. 

ஸ்னாப்ச்சாட்டின் பயணமும் ஸ்பெக்டக்ல்ஸின் அறிமுகமும்:

2011-ம் ஆண்டில் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மூன்று மாணவர்களால் உருவாக்கப்பட்ட ஸ்னாப்சாட் செயலி, உலகம் முழுவதும் 150 மில்லியன் மக்களால் தினமும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவை பொறுத்தவரை இதற்கு போதிய அறிமுகமும், பிரபலமும் இல்லாததால் பேஸ்புக் மற்றும் ட்விட்டரை போன்று அதிக எண்ணிக்கையிலான மக்களால் பயன்படுத்தப்படவில்லை. எனினும்  ஸ்னாப்சாட்டின் எதிர்கால பயன்பாட்டாளர்களில் இந்தியாவின் பங்கு அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.

snapchat-spectacles_12089.png

மக்கள் ஒருவரையொருவர் தொடர்புக்கொள்ளும் மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்ளும் முறையில் தொழில்நுட்பமானது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் புதுமையான குறுந்செய்தி முறைகளை போட்டோ, வீடியோ மற்றும் ஸ்டோரி போன்ற பல்வேறு வழிகளில் அளித்து வரும் ஸ்னாப்சாட் நிறுவனம் தற்போது $130 விலையில் ஸ்பெக்டக்ல்ஸை  அறிமுகப்படுத்தியதன் மூலம் மக்களிடையே இன்னும் எதிர்பார்ப்பையும், சக நிறுவனங்களிடையே போட்டியையும் உருவாக்கியுள்ளது என்றே கூறலாம். 
பேஸ்புக் போன்ற பல்வேறு நிறுவனங்கள் ஸ்னாப்சாட்டை கையகப்படுத்துவதற்கு ஆர்வமாக இருந்தாலும் எங்கள் நிறுவனத்தை எக்காலத்திலும் விற்பதில்லை என்பதில் ஸ்னாப்சாட் உறுதியாக உள்ளது.

 

 

 

தற்போது அமெரிக்காவில் மட்டுமே விற்கப்படும் இந்த ஸ்பெக்டக்ல்ஸ் கண்ணாடிகள் கூடிய விரைவில் நம்ம மெரினா கடற்கரையிலோ அல்லது பாரிஸ் கார்னரிலோ கிடைக்கும் என்று நம்புவோம்!

http://www.vikatan.com/news/information-technology/72779-snapchat-spectacles-review.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கிருபனின் மணிக்கூடு என்ன சொல்லுதோ தெரியாது?
    • உங்க‌ளுட‌ன் சேர்த்து 17 உற‌வுக‌ள் போட்டியில் க‌ல‌ந்து இருக்கின‌ம்🙏🥰................................  
    • நித‌ர்ச‌ன‌ உண்மை ப‌ற‌க்கும் ப‌டை இல்லை தூங்கிம் ப‌டை...................இந்த‌ தேர்த‌ல் ஜ‌ன‌நாய‌க‌ முறைப்ப‌டி ந‌ட‌ந்த‌ தேர்த‌ல் மாதிரி தெரிய‌ வில்லை சென்னையில் போட்டியிட்ட‌ நாம் த‌மிழ‌ர் வேட்பாள‌ர் ஈவிம் மிசிலில்  மைக் சின்ன‌த்தை ஒரு ஜ‌யா அம‌த்த‌ மைக் சின்ன‌ம் வேலை செய்ய‌ வில்லை இவ‌ர்க‌ள் அதை த‌ட்டி கேட்க்க‌ ப‌தில் இல்லை  கைது செய்து பிற‌க்கு விடுவித்த‌ன‌ர்.................எம்பி தேர்த‌லில் நிக்கும் வேட்பாள‌ர் அவ‌ரின் தொகுதியில் மைக் சின்ன‌த்துக்கு ஓட்டு விழ‌ வில்லை என்றால் அது தேர்த‌ல் ஆணைய‌த்தின் பிழை............................விவ‌சாயி சின்ன‌ விடைய‌த்தில் ம‌ற்றும் வைக்கோவுக்கு திருமாள‌வ‌னுக்கு ந‌ட‌ந்த‌ ச‌ம்ப‌வ‌ம்  அனைத்தும் உண்மை புல‌வ‌ர் அண்ணா....................அந்த‌ ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சி த‌மிழ் நாட்டில் ஏதாவ‌து ஒரு தொகுதியில் பிர‌ச்சார‌ம் செய்த‌தை பார்த்திங்க‌ளா ஒரு ஊட‌க‌த்திலும் காண‌ வில்லை..................எல்லாம் போலி நாட‌க‌ம்................................
    • 09.59 இற்குப் போடடியில் குதித்து விட்டேன்.வேலை முடிந்து வந்து அவசரமாகப் பதிந்த படியால் சில தவறுகளும் ஏற்பட்டிருக்கலாம்.
    • பொதுவாக கிராமப்புறங்களில் அதிக வாக்கு சதவுதமும் நகர்ப்புறங்களில் குறைந்த சதவீதமும் வாகக்குப்பதிவு இருக்கும். கிராம்புற அப்பாவிப் பொதுமக்கள் அரசியல்வாதிகள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பி வாக்குப் போடுவார்கள். அவர்களின் வாக்குச் சாவடிகள் அவர்களின்  வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இருக்கும். சென்னையில் இருப்பவர்கள் வாக்குச் செலுத்துவதை பெரிய அளவில் விரும்புவதில்லை. இந்த முறை வழமைக்கு மாறாக சென்னையில் வாக்கு சதவுpதம் அதிகரித்திருப்பது. மாற்றத்தை விரும்பி அவர்கள் கோபத்தில் வாக்களித்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இது ஆளும்வர்க்கங்களுக்கு எதிரானதாகவே பார்க்க வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.