Jump to content

இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன்: விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் பேட்டி!


Recommended Posts

இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன்: விவாகரத்து குறித்து நடிகை அமலா பால் பேட்டி!

AmalaPaul_engagement_PTI

 

இயக்குநர் விஜய் - நடிகை அமலா பால் ஆகிய இருவரும் 2014-ம் ஆண்டு சென்னையில் திருமணம் செய்துகொண்டார்கள். இது காதல் திருமணம் ஆகும். இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதால் விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்கள். 

விவாகரத்து குறித்து நடிகை அமலா பால், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டி:

வாழ்க்கை புதிதாக ஆரம்பித்ததுபோல உணர்கிறேன். 18 வயதில் சினிமாவில் அறிமுகமானேன். 23 வயதில் திருமணம் செய்தேன். 24 வயதில் இருவரும் பிரிந்துள்ளோம். எனக்கு அறிவுரை கூற யாரும் இல்லை. எனவே என் தவறுகள் மூலமாகவே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். பிரிவுக்குப் பிறகு நான் நிறைய அழுதேன். கடைசியில் இவற்றை என் அனுபவமாக எண்ணிக்கொள்கிறேன்.

இயக்குநர் விஜய்யை இன்னமும் காதலிக்கிறேன். எப்போதும் அந்தக் காதல் இருக்கும். அவர் எப்போதும் எனக்கு ஸ்பெஷல் மனிதர்தான். அதேசமயம் பிரிவதும் காதல் தான். யாரும் பிரிவதற்காகத் திருமணம் செய்யமாட்டார்கள். எனவே பிரிவது குறித்து எடுத்த முடிவு என் வாழ்க்கையிலேயே மிகவும் கடினமானதாகும். வாழ்க்கையில் எதையும் கணிக்கமுடியாது. 

விஜய்யைத் திருமணம் செய்தது தவறான முடிவா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் சொல்வேன். நான் யார் என்பதும் யாராக இல்லை என்பதையும் திருமணம் எனக்கு உணர்த்தியுள்ளது. தவறான வயதில் திருமணம் செய்துவிட்டேன். 20களின் தொடக்கத்தில் திருமணம் செய்வது தவறு. இந்தத் தோல்வியால் நான் உடைந்துபோகவில்லை. அதிலிருந்து நான் மெல்ல மெல்ல வெளியே வருகிறேன். நான் தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடாது. என் குடும்பமும் என் சகோதரரும் இந்தச் சமயத்தில் எனக்கு உறுதுணையாக உள்ளார்கள். இந்தப் புயலில் என் சகோதர் அபிஜித் நிறைய உதவிகள் செய்துள்ளார். என் சகோதரர் இல்லாமல் என்னால் வாழமுடியாது.

அடுத்தடுத்து படங்களில் நடிக்காததால் நிறைய பயணம் செய்கிறேன். தெய்வீகமான அனுபவம் என்னை மீட்டுக்கொண்டுவர உதவுகிறது. 

திரைப்படத்திலிருந்து நான் விலகியதாக யாரும் எண்ணவில்லை. என் திருமணத்துக்குப் பிறகு வேலை இல்லா பட்டதாரி வெளியானது. பிறகு 2015-ல் மிலி, அம்மா கணக்கு போன்ற படங்கள் ஒரு நடிகையாக வளர உதவின. என் திருமணம் மற்றும் விவாகரத்துக்குப் பிறகும் திரையுலகம் என்னை வரவேற்றுள்ளது. இப்போது நான் நடிக்கும் படங்கள் அனைத்தும் அருமையான, வலுவான கதாபாத்திரங்கள் கொண்டவை. எல்லா மொழிகளிலும் எனக்கென்று மையக் கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. 

தனுஷுக்கு ஜோடியாக வட சென்னையில் நடிக்கிறேன். திருட்டு பயலே 2, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களிலும் நடிக்கிறேன். சுதீப்புக்கு ஜோடியாக கன்னட படத்தில் அறிமுகமாகவுள்ளேன். நான் நடிக்கவுள்ள தெலுங்கு மற்றும் மலையாளப் படங்கள் குறித்து விரைவில் அறிவிப்புகள் வெளிவரும் என்று கூறியுள்ளார்.

http://www.dinamani.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம நேர்மையாக கதைப்பம் .. பழைய சோறுக்கு ருசி இருக்குதா இல்லையா . ..? குழம்புக்கு ருசி இருக்குதா ? இல்லையா ? இல்லையென்றால் ஏன் நித்தம் நித்தம் நெல்லி சோறு நெய் மணக்கும் கத்திரிக்காய் .. நேற்று வச்ச மீன் குழம்பு என்ன !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.