Jump to content

''100 பெண்கள்''


Recommended Posts

100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை சன்னி லியோன்
 
201611231645256348_Sunny-Leone-Makes-It-To-BBCs-100-Most-Influential-Women-Of_SECVPF.gif
பிபிசி  வெளியிட்டு உள்ள  100 செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலில் நடிகை சன்னி லியோனும்  இடம் பெற்று உள்ளார்.

கனடாவில் ஆபாச  படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார்.பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

2015 ல் இந்தியாவில் மிக அதிகமாக கூகுளில் தேடபட்டவர்கள் பட்டியலில்  ஆபாச நடிகை சன்னி லியோன் முதல் இடத்தை பிடித்து இருந்தார்.இது போல் 2014ம் ஆண்டிற்கான தேடபட்டவர்கள் பட்டியலில்  சன்னிலியோன் தான் முதல் இடத்தில் இருந்தார்.2013 ஆம் ஆண்டும் இவரே முதல் இடத்தில் இருந்தார்.

தற்போது பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டு உள்ள 100 செல்வாக்குள்ள பெண்மணிகள் பட்டியலில் சன்னி லியோனும் இடம்பெற்று உள்ளார்.

செல்வாக்கு மிக்க பெண்கள் பட்டியலை  பிபிசி 4 வது வருடமாக வெளியிடுகிறது.இந்த பட்டியலில் பெண் தொழில் அதிபர்கள், என்ஜினீயர், விளையாட்டு வீராங்கனைகள், பேஷன் அழகைகள்  மற்றும் கலைஞர்கள் ஆகியோர் இடம் பெறுவர்.

இந்த் பட்டியலில் சன்னி லியோன் தவிர கம்யூட்டர் என்ஜினியர் மாணவி கவுரி சந்திராகர் (சாங்லி) மல்லிகா ஸ்ரீனிவாசன்(சென்னை) நேகா சிங் ( மும்பை) சாலு மராடா  திம்மக்கா( கர்நாடகா) ஆகிய  இந்திய பெண்களும் இடம் பெற்று உள்ளனர்.

http://www.dailythanthi.com/News/CinemaNews/2016/11/23164528/Sunny-Leone-Makes-It-To-BBCs-100-Most-Influential.vpf

Link to comment
Share on other sites

பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா?

  •  

பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் காலத்தில் வலியால் துன்பப்பட்டால் ஒரு நாள் அல்லது இரண்டு நாள்கள் விடுமுறை எடுப்பதை உறுதி செய்வது சீனாவின் பல மாகாணங்களில் இப்போது சட்டங்களாகி வருகின்றது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதவிடாய் நேரத்தில் விடுமுறை வழங்கப்பட வேண்டுமா என்பது சூடான விவாதங்களை எழுப்பி வருகிறது.

ச்சுரான் ட்சாங்

நிகழ்ச்சி ஏற்பாட்டாளராக பணிபுரியும் ச்சுரான் ட்சாங் மாதவிடாய் கால விடுமுறையை தவறாமல் எடுத்துவருபவர். ஒவ்வொரு பெண்ணுக்கும் இது மிகவும் முக்கியமானது என்று அவர் கூறுகிறார்.

’’ஒவ்வொரு மாதமும் நான் மாதவிடாயின்போது வலியால் மிகவும் துன்புறுகிறேன். அப்போது, கண்ணால் காணமுடியாத சிலுவை ஒன்றில் ஒரு பெண் அறையப்பட்டிருப்பது போலவும், அவருடைய வயிற்றில் அம்புகள் செலுத்தப்பட்டிருப்பது போலவும் காட்டுகின்ற படத்தை எனது சமூக ஊடக பக்கங்களில் பதிவேற்றுகிறேன். இந்த காலகட்டத்தில் ஒரு பெண் அனுபவிக்கின்ற வலியை இந்த படம் சரியாக வெளிக்காட்டுவதால் அதிகமானோரால் இந்த படம் விரும்பப்படுவதை என்னுடைய பதிவில் காணமுடிகிறது’’.

’’மாதவிடாய் காலத்தில் மிகவும் கடுமையான உணர்வுகளை அனுபவிக்கிறேன். மாதவிடாய் தொடங்குவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் என்னுடைய வயிற்று தசை இறுகிவிடுகிறது’’.

100 பெண்கள்  

’’அடுத்தநாள் எழுகின்றபோது மாதவிடாயோடு சேர்ந்து வருகின்ற வலி தாங்க முடியாததாகிவிடுகிறது’’.

’’என்னுடைய இரைப்பையை எடுத்து உடலுக்கு வெளியே எறிந்துவிட வேண்டும் அல்லது கத்தரியால் அதனை வெட்டிவிட வேண்டும் என தோன்றுகிறது. வாந்தி எடுக்கும் உணர்வும் ஏற்படுகிறது’’.

’’நான் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறியவுடன் வேலை செய்ய தொடங்கிவிட்டேன். ஏறக்குறைய ஒவ்வொரு மாதமும் வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்திருக்கிறேன். அவை என்னை மிகவும் களைப்பாக்கி, தூங்கச் செய்யும் உணர்வை தந்தன. வலியை எதிர்த்து போராட வெந்நீர் பாட்டில்கள் எனக்கு தேவைப்பட்டன’’.

’’இந்த நேரங்களில் என்னுடைய பணிகளில் மனதை ஒருமுகப்படுத்த முடியவில்லை. சில வேளைகளில் என்னுடைய பாலினத்தையே சபிக்க செய்கிற வேளையாக அந்நேரம் அமைகிறது’’.

ச்சுரான் ட்சாங் பதிவேற்றும் அடையாளப்படம் 

’’அதிர்ஷ்டவசமாக "பிரைடு பிளனிங்" என்கிற பெண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் என்னுடைய நிறுவனம் ஒவ்வொரு பெண் ஊழியருக்கும் மாதவிடாய் நேரத்தில் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் ஊதியத்துடனான விடுமுறையை வழங்குகிறது’’.

’’இதற்கு மருத்துவர் சான்றிதழ் தேவையில்லை அல்லது ஒரு நாள் பணிக்கு வராமல் இருப்பதால் ஊதியம் குறைக்கப்படும் என்றும் கவலைப்படவும் தேவையில்லை’’

’’பணிப்பயணமோ அல்லது முடிக்க வேண்டிய முக்கியமான வேலைகளோ இல்லாவிட்டால், நான் வழக்கமாக அரை நாள் அல்லது ஒரு நாள் விடுமுறை எடுத்து கொள்கிறேன்’’.

’’அவ்வாறான விடுமுறையின்போது, வீட்டில் ஓய்வெடுக்கிறேன். வலி நிவாரணி மாத்திரைகளை எடுத்துக் கொண்டு தூங்குகிறேன் அல்லது படுக்கையில் இருந்து கொண்டே சில வேலைகளை செய்கிறேன்’’ என்கிறார்.

நிறுவன வருவாய் பாதிக்கப்படுமா?

இவ்வாறு மாதவிடாய்க்கு விடுமுறை எடுக்க அனுமதித்தால், அது நிறுவனத்தின் வருவாயை பாதிக்கும் என சிலர் எண்ணுகின்றனர். எனவே, பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டுமா என்கிற விவாதம் நடைபெறுகிறது.

இருப்பினும், எனக்கு தெரிந்த வரை, பெண் ஊழியர்கள் அதிகமான வேலை செய்கின்ற என்னுடைய நிறுவனத்தில், ஏறக்குறைய ஒவ்வொரு பெண் ஊழியரும் ஒவ்வொரு மாதமும் அல்லது ஒரு மாதம் விட்டு அடுத்த மாதம் மாதவிடாய்க்கு விடுமுறை எடுத்த பின்னரும் குறிப்பிடும் படியாக நிதி இழப்புக்கள் எதையும் சந்திக்கவில்லை.

மாதவிடாய் கால வலி

    வலியின் போது ஏற்படும் உணர்வு

மாதாந்தர மாதவிடாய் சுழற்சியில் பெண்களில் பலர் வலிகளை அனுபவிக்கிறார்கள்.

இது பொதுவாக, வயிற்று பகுதி உள்ளிழுப்பது போன்று சுருங்குகின்ற உணர்வை அளிக்கிறது. இந்த உணர்வு முதுகிற்கும், தொடைகளுக்கும் பரவலாம்.

மாதவிடாய் வலியானது கடும் தலைவலி, மற்றும் வலி பிடிப்பு போல உணரப்படும். வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் தலைவலியையும் பெண்கள் உணரலாம்.

இந்த மாதவிடாய் காலத்தின் வலியானது அறிவியல்பூர்வமாக வலி மிகுந்த மாதவிடாய் என்று பொருள் தரும் வகையில் டிஸ்மேனோரியா (dysmenorrhoea) என்று குறிக்கப்படுகிறது.

கருப்பையின் உள்ளே மெல்லிய செல்கள் உற்பத்தி செய்யும் புராஸ்டோகிலான்டின் ஹார்மோன் நிலைகள் அதனை சுருங்க செய்ய காரணமாகின்றன.

அந்த ஹார்மோன் நிலைகள் அதிகமாக இருந்தால், இந்த கருப்பை சுருங்குதல் மிகுந்த வலி ஏற்படுத்த காரணமாகிறது.

மாதவிடாய் நேரமாக இல்லாமல் இருந்தாலும் சில பெண்கள் இடுப்பு (பெல்விக்) பகுதியில் வலியை உணரலாம்.

தேங்கும் பணிகள்

விடுமுறையை முன்னரே திட்டமிடுகிறோம் அல்லது விடுமுறை முடிந்தவுடன் வேலைகளை விரைவாக முடிக்க முயல்கிறோம். ஆண்கள் தாங்கள் அநியாயமாக நடத்தப்படுவதாக உணர்வதில்லை.

உண்மையில் இந்த கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து எங்களுடைய பணிச்சூழல் மிகவும் நேர்மறையானதாக, சிறந்ததாக மாறியுள்ளது.

இத்தகைய கொள்கைகள் பெண்களை மிகவும் பாதுகாப்பதாகவும், பெண் ஊழியர்கள் பலவீனமானவர்கள் அல்லது சோம்பலானவர்கள் எனவும் பார்க்க காரணமாகலாம் என்று பிறர் எண்ணலாம்.

இருப்பினும், எனக்கு தெரிந்த வரை, மாதவிடாய் நேரத்தில் வலி அனுபவிக்காத பெண்கள் இந்த விடுமுறையை எடுப்பதில்லை.

ச்சுரான் ட்சாங்  பாலியில் தாக்குதல் தொடர்பாக கடந்த ஆண்டு திட்டமிடப்பட்ட போராட்டத்திற்கு முன்பாக கைது செய்யப்பட்ட பெண்ணியவாதிகளில் ட்சுவாங்கும் ஒருவர்

எல்லாவற்றிற்கும் மேலான அதிக போட்டியாற்றலோடு பணிகள் முன்னெடுக்கப்படுகின்ற குழும நிறுவனங்களின் பெண் ஊழியர்கள் தாங்கள் பலவீனமானவர்கள் என கருதப்படுவதை விரும்புவதில்லை.

நான் சொல்வதைபோல, என்னுடைய நிறுவனத்தில் மாதவிடாய் காலத்தில் விடுமுறை எடுப்போர், பணிக்கு திரும்பியவுடன் தேங்கியிருக்கும் அதிக அழுத்தங்களை வழங்கும் தங்களுடைய பணிகளை விரைவில் முடிக்கவே எண்ணுகின்றனர்.

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு விடுமுறை வழங்கலாமா?

மாதவிடாய் நேரரத்தில் பெண்களுக்கு சம்பளத்தோடு கூடிய விடுமுறை அளிக்கப்படுவது மிகவும் சூடான விவாதங்களையும், விமர்சனங்களையும் இன்று கூட எழுப்பக் கூடியதாக இருப்பது வினோதமாக இருக்கிறது.

எல்லாவற்றையும் விட மேலானதாக ஆதாயமும், செயல்திறனும் பார்க்கப்படுகின்றன.

பெண்களை மாதவிடாய் கால வலியிலிருந்து இயற்கை விடுவிக்கமுடியாதுதான். ஆனால், இதற்காக நம்முடைய சமூகம் பெண்களுக்கு செய்வதற்கு ஒன்றுமில்லையா?

ஆண்களுக்கும் மாதவிடாய் காலம் இருப்பதாக இருந்திருந்தால், பல நாடுகளில் அரசியல் சாசனம் எழுதப்படும்போதே மாதவிடாய் கால விடுமுறை வழங்கப்பட வேண்டுமென எழுதப்பட்டிருக்கலாம் என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

http://www.bbc.com/tamil/global-38291871

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உற‌வே ஏன் சீமான் மீது இம்புட்டு வ‌ன்ம‌ம்..........2009 முள்ளிவாய்க்கால் இன‌ அழிப்புக்கு துணை போனாரா அல்ல‌து த‌லைவ‌ருக்கு எங்க‌ட‌ போராட்ட‌த்துக்கு வைக்கோ ராம‌தாஸ் திருமாள‌வ‌ன் போன்ற‌வ‌ர்க‌ள் போல் துரோக‌ம் செய்தாரா...............எல்லாம் அழிந்த‌ நிலையில் த‌மிழீழ‌ம் என்ற‌ பெய‌ரை உயிர்ப்போடு வைத்து இருப்ப‌து 30ல‌ச்ச‌த்துக்கு மேல் ப‌ட்ட‌  எம் தொப்பில் கொடி உற‌வுக‌ள்...........பிர‌பாக‌ர‌ன் என்றாலே தீவிர‌வாதி என்று இருந்த‌ த‌மிழ் நாட்டில் பிர‌பாக‌ர‌ன் எம் இன‌த்தின் த‌லைவ‌ர் என்று கோடான‌ கோடி ம‌க்க‌ள் கேட்டுக்கும் ப‌டி சொன்ன‌துக்கா சீமான் மீது இம்ம‌ட்டு வெறுப்பா சீ சீ 2009க்கு முத‌ல் ஈழ‌ம் ஈழ‌ம் என்று க‌த்தின‌ கூட்ட‌ம் இப்ப‌ சிங்க‌ள‌வ‌னுக்கு விள‌ம்ப‌ர‌ம் செய்துக‌ள் இதை விட‌ கேவ‌ல‌ம் என்ன‌ இருக்கு...............அந்த‌ க‌ரும‌த்தை நான் தொட்டு என்ர‌ ந‌ட்ப்பு வ‌ட்டார‌ம் தொட்டு ஒருத‌ரும் கேடு கெட்ட‌ செய‌ல் செய்த‌து இல்லை................சீமான் மீது விம‌ர்ச‌ன‌ம் வைக்க‌லாம் ஆனால் அவ‌ர் கொண்ட‌ கொள்கையோடு உறுதியாய் நிக்கிறார் த‌னித்து நிக்கிறார்...........சீமான் காசு மீது பேர் ஆசை பிடித்த‌வ‌ர் என்றால் இந்த‌ தேர்த‌லில் ஆதிமுக்கா கூட‌ கூட்ட‌னி வைச்சு 500 கோடியும் 8 தொகுதியும் ஜா ப‌ழ‌னிசாமி கொடுத்து இருப்பார்................ த‌மிழ‌க‌ அர‌சிய‌ல் வாதிக‌ளை பார்த்தால் கூடுத‌லான‌ ஆட்க‌ள்  பெண்க‌ளுட‌ல் க‌ள்ள‌ உற‌வு வைத்து இருந்த‌வை அந்த‌ வ‌கையில் அண்ண‌ன் சீமான் வாழ்த்துக்க‌ள் ப‌ட‌ம் எடுத்த‌ போது விஜ‌ய‌ல‌ட்சுமி கூட‌ காத‌லோ அல்ல‌து ஏதோ ஒரு உற‌வு இருந்து இருக்கு.............நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே...........ஆனால் அண்ண‌ன் சீமான் அவ‌ரின் திரும‌ண‌த்தை வெளிப்ப‌டையாய் தான் செய்தார் அப்போது ஒரு பிர‌ச்ச‌னையும் வ‌ர‌ வில்லை அர‌சிய‌லில் வ‌ள‌ந்து வ‌ரும் போது அந்த‌ பெண்ண‌ திராவிட‌ கும்ப‌ல் ஊட‌க‌ம் முன்னாள் பேச‌ விடுவ‌து ம‌னித‌ குல‌த்துக்கு அழ‌கில்லை................. சீமான் த‌வ‌று செய்தால் அதை நான் ப‌ல‌ இட‌த்தில் சுட்டி காட்டி இருக்கிறேன்.............எங்க‌ட‌ த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் எப்ப‌டி ப‌ட்ட‌வ‌ர் என்று எம‌க்கு ந‌ன்றாக‌வே தெரியுன் அண்ண‌ன் சீமான் ஒரு ப‌டி மேல‌ போய் அள‌வுக்கு அதிக‌மாய் த‌லைவ‌ரை புக‌ழ் பாட‌ தொட‌ங்கி விட்டார்.............ஆர‌ம்ப‌ கால‌த்தில் அதிக‌ம் பேசினார் அப்போது எம‌க்கே தெரிந்த‌து அது உண்மை இல்லை என்று............இப்போது சீமானின் பேச்சில் ப‌ல‌ மாற்ற‌ம் தெரியுது.................நிஜ‌த்தில் ந‌ல்ல‌வ‌ர் அன்பான‌வ‌ர் ஆனால் அவ‌ரை சுற்றி ப‌ல‌ துரோகிய‌ல் இருக்கின‌ம் அவ‌ருட‌ன் க‌தைப்ப‌தை ரெக்கோட் ப‌ண்ணி  விஜேப்பியின் ஆட்க‌ளுக்கு போட்டு காட்டின‌து அப்ப‌டி க‌ட்சிக்குள் இருந்த‌வையே  ப‌ல‌ துரோக‌ங்க‌ள் செய்த‌வை உற‌வே 2009க்கு முத‌ல் த‌மிழீழ‌த்தில் ஒரு மாத்தையா ஒரு க‌ருணா.............த‌மிழ் நாட்டில் ப‌ல‌ நூறு க‌ருணா ப‌ல‌ நூறு மாத்தையா இதை எல்லாம் தாண்டி க‌ன‌த்த‌ வ‌லியோடு தான் க‌ட்சியை கொண்டு ந‌ட‌த்துகிறார் த‌ன‌து ம‌னைவிக்கு இந்த‌ தேர்த‌லில் சீட் த‌ர‌வில்லை என்று க‌ட்சியை விட்டு போன‌ ந‌ப‌ரும் இருக்கின‌ம்............... உங்க‌ட‌ பாதுகாப்புக்கு சொல்லுறேன் உற‌வே த‌மிழ் நாட்டுக்கு போகும் நிலை வ‌ந்தால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் ப‌ய‌ணிக்கும் இள‌ம் பெடிய‌ங்க‌ள் கூட‌ அண்ண‌ன் சீமானை ப‌ற்றி யாழில் எழுதுவ‌து போல் நேரில் த‌ப்பா க‌தைச்சு போடாதைங்கோ.............நீயார‌ட‌ எங்க‌ள் அண்ண‌ன‌ விம‌ர்சிக்க‌ என்று ச‌ண்டைக்கும் வ‌ந்து விடுவின‌ம்.............இப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் இருக்கு சொல்ல‌.............இது யாழ்க‌ள் ஆனால் இதே முக‌ நூல் என்றால் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ஜ‌ரிம் சீமான சீண்டி பாப்ப‌வ‌ர்க‌ளுக்கு அவேன்ட‌ பானியில் ப‌தில் அளிப்பார்க‌ள்...............6வ‌ருட‌த்துக்கு முத‌ல் என‌க்கும் திமுக்கா சொம்புக்கும் வாத‌ம் ஏற்ப‌ட்டு க‌ட‌சியில் எப்ப‌டி போய் முடிந்த‌து என்று என‌க்கு ம‌ட்டும் தான் தெரியும்............யாழில் இருக்கும் மூத்த‌வையின் சொல்லை கேட்டு யாழில் நான் இப்ப‌ யார் கூட‌வும் முர‌ன் ப‌டுவ‌தில்லை..........இது தான் கால‌ நீர் ஓட்ட‌த்தில் பெரிய‌வ‌ர்க‌ள் சொல்ல‌  என்னை நானே மாற்றி கொண்டேன்.............. வெற்றியோ தோல்வியே த‌னித்து போட்டி யார் கூட‌வும் கூட்ட‌னி இல்லை அதுக்காக‌ தான் பெரும்பாலான‌ த‌மிழ‌க‌ இளைஞ்ர்க‌ள் வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானை தொட‌ர்ந்து ஆத‌ரிக்கின‌ம்🙏🥰.................
    • மக்கள் ஏமாற்றப்படுக்கின்றார்கள் தான் ஆனால் நூறுவீதம் இல்லை.. அதே நேரம் தமிழ் அரசியல்வாதிகளும் சரியானவர்கள் இல்லை. இருப்பினும் புலம்பெயர்ந்த பலரும் அங்கிருப்பவர்களும் தமிழர் உரிமைகள் பற்றி விவாதிக்கொண்டிருக்கும் வேளையில்...... தமிழர் பகுதிகளில் ஆடம்பர உல்லாச விடுதிகளும், புலம்பெயர் மக்களின் கோடிக்கணக்கான செலவுடன் மாட மாளிகைகளும் திறந்த வெளி  அட்டகாச நிகழ்வுகளும் புலம்பெயர் மக்களின் கோடை கால கொண்டாட்ட சுற்றுலாக்களும்..... தமிழர்களுக்கு பிரச்சனை ஏதுமில்லை என்பதை சொல்லி நிற்கின்றது.   போர் மூலம் வந்த  வறுமையால் வாடுபவர்களை இனப்பிரச்சனை அட்டவணைக்குள் சேர்க்க உடன்படுமா அந்த சிங்கள இனவாத அரசுகள்? புலம்பெயர் தமிழர்களே ஊரில் வீடுகட்டிக்கொண்டு  பிற்காலத்தில்  நிம்மதியாக வாழலாம் எனும் போது.....?!  
    • சீமானுக்காக எதையும் தாங்குவார்கள் புலன்பெயர்ந்த ஈழதமிழர்கள். தேர்தலில் சீமான் வெற்றிபெறவில்லை என்றால் மெசின் மோசடி , சீமான் ஆங்கில மோகத்தால் மகனுக்கு தமிழ்நாட்டிலேயே ஆங்கில வழிக் கல்வி கற்ப்பிப்பது தமிழ் பள்ளிகள் சரியில்லை. தமிழ் தமிழ் என்று முழங்குவது அவரது அரசியல் பிழைப்பு.  இவர்  தமிழ்நாட்டு முதல் அமைச்சராக வந்தால் அரசுபாடசாலைகளிலும் தமிழை தூக்கி எறிந்துவிட்டு ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிப்பார் தமிழ் செய்த அதிஷ்டம் அவர் முதல் அமைச்சராகும் வாய்ப்பே  இல்லை
    • அங்கு ஒரு வீட்டில் கஞ்சா புகைத்திருக்கின்றனர். பின்னர், முதலாவதாக, உடனிருந்து புகைத்த நண்பரே குத்திக் கொல்லப்பட்டிருக்கின்றார். குற்றவாளி என்று கைது செய்யப்பட்டவர் கஞ்சாவில் ஒரு வலுவான போதைப் பொருளை தன் நண்பர் கலந்து விட்டதாக இப்பொழுது சொல்லுகின்றார். எதைக் கலந்தாலும், எதைப் புகைத்தாலும், ஓட ஓட சக மனிதர்களை கத்தியால் குத்தும் அளவிற்கு நிலை தடுமாறுமா.....😢 Following his arrest in the frenzied attack, the suspect, Christian Soto, waived his Miranda rights to remain silent and told investigators he was high on marijuana he claimed was given to him by one of the slaying victims that he believed was laced with a strong narcotic, Winnebago County State's Attorney J. Hanley said at a news conference Thursday. https://abcnews.go.com/US/deadly-rockford-illinois-stabbing-spree/story?id=108605783    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.