Jump to content

ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் !


Recommended Posts

ஆஸ்கர் பேசும் "கறுப்பு" அரசியல் !

 

ஆஸ்கர்

ஆஸ்கர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருக்கிறது. இந்த வருடத்தின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் இவருக்குத் தான் என்ற ஹாலிவுட் கணிப்பில் முன்னணியில் இருப்பது " கறுப்புச் சிங்கம் " டென்சல் வாஷிங்டன் ( Denzel Washington) .  இவர் நடித்து இயக்கியிருக்கும் " ஃபென்சஸ் " ( Fences ) படத்தின் சிறப்புக் காட்சியை, சமீபத்தில் ஆஸ்கர் கமிட்டி மற்றும் ஹாலிவுட்டின் முக்கிய பிரமுகர்கள் பார்த்தனர். இதில் டென்சலுடன் நடித்திருக்கும் வயோலா டேவிஸ் ( Viola Davis ) யின் நடிப்பும் பெரியளவில் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. நிச்சயம் இவர்கள் இருவருக்கும் ஆஸ்கர் கிடைக்கும் என்று பேசப்பட்டு வருகிறது

அதே சமயத்தில் ஆஸ்கரின் நிற, இன அரசியலைத் தாண்டி  இந்த வெற்றி கிடைக்குமா என்ற கேள்வியும் பெரும்பான்மையானவர்கள் மத்தியில் எழுந்துள்ளது . இதை இன்னும் புரிந்து கொள்ள ஒரு சின்ன " டைம் டிராவல்" தேவைப்படுகிறது. கறுப்பு - வெள்ளை காலத்தின் ஒரு கறுப்பு வரலாறு இது ... 

 வெள்ளையர்களால் கடுமையான ஒடுக்குமுறைகளை சந்தித்து வந்த கறுப்பின மக்களுக்கு, கலை, சினிமா, நடிப்பு என்பதையெல்லாம் சிந்திக்கும் திராணி கூட இல்லாத ஓர் காலகட்டம் . அந்தக் காலங்களின் மேடை நாடகங்களில், வெள்ளையர்களே முகத்தில் கறுப்பு பெயின்ட் அடித்துக் கொண்டு கருப்பர்கள் போல் நடிப்பார்கள் . " பிளாக் ஃபேசஸ் " ( Black Faces ) என்ற அந்த கதாபாத்திரங்கள், இனவெறி மிகுந்த நகைச்சுவைக்காகவே பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது அமோஸ் அன் ஆன்டி ( Amos An Andy ) என்கிற ஒரு நாடகம், தொலைக்காட்சி தொடராக எடுக்கப்பட்டது. அதில் தான் உலக சினிமா வரலாற்றிலேயே முதன் முறையாக க்ளாரன்ஸ் மியூஸ் ( Clarence Muse ) என்ற கறுப்பின நடிகர் நடித்தார்.  அதுவும் கறுப்பர்களைக் கேவலப்படுத்தும் ஒரு கதாபாத்திரம் தான். " பரவாயில்லை. குறைந்தபட்சம் ஒரு உண்மையான கறுப்புத் தோல் வெளிச்சத்துக்கு வந்ததே " என்று, இதில் நடித்த அனுபவத்தை மியூஸ் விவரித்தார். ஹாலிவுட்டில் கறுப்பின மக்களின் தொடக்கம் இது தான். 

1939ல் " கான் வித் தி விண்ட் " படத்தில் நடித்த ஹேட்டி மெக்டேனியல் ( Hattie McDaniel ) என்ற கறுப்பின நடிகை முதன்முதலாக, சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார். 1964ல் சிட்னி பாய்ட்டியர் ( Sidney Poitier ) என்ற கறுப்பின நடிகர், சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். மேலும், டென்சல் வாஷிங்டன்  - 2002, ஜேம்மி ஃபாக்ஸ் ( Jammie Fox ) - 2005, ஃபாரஸ்ட் விட்டேகர் ( Forest Whitaker ) - 2006 ஆகிய கருப்பின நடிகர்கள், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றுள்ளனர்.  2002யில் மான்ஸ்டர்'ஸ் பால் ( Monster's Ball ) படத்தில் நடித்ததற்காக, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றார் ஹாலேபெர்ரி ( Halle Berry ). இது நாள் வரை சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் வென்ற ஒரே கறுப்பின பெண் ஹாலேபெர்ரி மட்டும் தான். 

ஆஸ்கர் வென்ற கறுப்பின நடிகர்கள் -ஆல்பம்

மொத்த அமெரிக்க மக்கள் தொகையில், 12.6 % கருப்பினத்தவர்கள் தான். ஆஸ்கர் விருதிற்கான தேர்வுக் குழுவில் 6,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இதில் 94% வெள்ளையர்கள். 88 வருட ஆஸ்கர் வரலாற்றில், 14 விருதுகளை மட்டுமே இதுவரை கறுப்பினத்தவர்கள் நடிப்பிற்காக வென்றுள்ளனர். அதிலும், பெரும்பாலான விருதுகள் துணை நடிகைகளுக்கே வழங்கப்பட்டுள்ளன. அந்த விருதுகளை வென்ற கதாபாத்திரங்கள் வெள்ளையர்களிடம் அடிமையாக அல்லது பணியாளாக இருக்கும் கருப்பினத்தவர்களாக இருக்கிறது என்று ஆஸ்கரின் நுண் அரசியலை பலரும் விமர்சிக்கிறார்கள். 

இதுவரைக்குமான ஆஸ்கர் விருதுகளில் வெற்றி பெற்ற ஒரே கறுப்பின படம் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளிவந்த 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் ( 12 Years A Slave ) மட்டுமே. அதுவும் பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது. அதைத் தொடர்ந்து, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஆஸ்கரின் முக்கிய நான்கு பிரிவுகளின் கீழ் எந்தவொரு கருப்பினத்தவருமே பரிந்துரைக்கப்படவில்லை. இதை எதிர்த்து, வில் ஸ்மித் உட்பட ஹாலிவுட்டின் பெரும்பாலான கருப்பின நட்சத்திரங்கள் ஆஸ்கர் விழாவைப் புறக்கணித்தனர். 

ஆஸ்கர் விழாவை தொகுத்து வழங்குவது, ஆஸ்கர் மேடையில் நடனம் புரிவது போன்ற வாய்ப்புகள் கருப்பினத்தவர்களுக்கு வழங்கப்படுவதை சுட்டிக்காட்டி, ஆஸ்கரில் நிற, இன வேற்றுமைகள் இல்லை என்ற கருத்தை முன்வைக்கிறார்கள் சிலர். 

 

ஆஸ்கர்


உலக சினிமாவின் உன்னத கலைஞர்களில் ஒருவர் டென்சில் வாஷிங்டன். இவர் ஏற்கனவே, 1989யில் சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது மற்றும் 2002யில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை வென்றுள்ளார். தற்போது ஃபென்சஸ் படத்திற்கும் விருதினை வென்றால், மூன்று முறை ஆஸ்கர் வென்ற கருப்பின நடிகர் என்ற வரலாற்றை எழுதுவார் டென்சில் . 

கருப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அதிபராக இருந்த போதே கிடைக்காத அங்கீகாரங்கள், சர்வதேச வியாபாரி டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருக்கும் போதா கிடைத்துவிடப் போகிறது என்ற குரல்கள் ஹாலிவுட் வட்டாரத்தில் கேட்கத் தொடங்கியுள்ளன.

அமெரிக்காவின் ஆஸ்கர் அரசியலின் " இறுதிச்சுற்று " பிப்ரவரி மாதம் நடக்கவுள்ளது... 

" உனக்கு இன்னா வேணும் மாஸ்டர்..??"...

" நாக் அவுட்" !!!

ஆஸ்கர் வென்ற கறுப்பின நடிகர்கள் -ஆல்பம்   

http://www.vikatan.com/news/cinema/72846-academy-awards-and-racism.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
    • கனிமொழி எப்படி ஆங்கிலம் பேசுகிறார் என கேள்விக்கு விடை இருக்கா? மேற்கூறிய காரணங்கள் அவருக்கு பொருந்தாதா? இது வரை அப்படி ஒரு முறைப்பாடு இருந்ததாக தெரியவில்லை?  
    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.