Jump to content

பிறந்தநாள் பரிசு


Recommended Posts

பிறந்தநாள் பரிசு
 
 

article_1479359539-333333333333.jpg

கோலிவூட்டின் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் திரைப்படங்கள், மாஸ் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவருடைய அடுத்த திரைப்படத் திரையிடல் திகதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.   

இந்நிலையில், நயன்தாரா, நாளைய தினம் தனது பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார். மிஞ்சூர் கோபி இயக்கத்தில் நயன்தாரா கலெக்டராக நடித்துள்ள திரைப்படத்தின் தலைப்புடன் கூடிய முதற்பார்வையை, அவரது பிறந்தநாள் பரிசாக வௌியிடவுள்ளனர்.   

இன்று 17ஆம் திகதி நயன்தாராவின் பிறந்த நாள் தொடங்கும் நள்ளிரவு 12 மணிக்கு இந்தத் திரைப்படத்தின் ஃபெர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் நயன்தாராவின் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது   

விஜய் நடித்த “கத்தி” திரைப்படத்துக்குப் பின்னர், தமிழகத்தின் தண்ணீர் பிரச்சினையை அழுத்தமாகக் கூறும் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.   

பெங்களூரில் பிறந்த நயன்தாராவின் சொந்த பெயர் டயானா மரியம் குரியன். 2003ஆம் ஆண்டு “மனசின்க்கரே” என்ற மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு நடிக்க வந்த நயன்தாரா, தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.   

2005ஆம் ஆண்டு “ஐயா” திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், அஜீத், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.   

நடிகர்கள் சிம்பு, பிரபுதேவா ஆகியோருடன் ஏற்பட்ட காதல் முறிவால் மன உளைச்சலுக்கு ஆளான நயன்தாரா, பின்னர் மீண்டும் சினிமாவில் மீள் பிரவேசம் செய்து இப்போது தமிழில் கைநிறைய திரைப்படங்களுடன் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.   

நாளைய தினம் பிறந்தநாளை கொண்டாடும் நயனுக்கு நமது வாழ்த்துகள்.  

- See more at: http://www.tamilmirror.lk/186250/ப-றந-தந-ள-பர-ச-#sthash.8IMUO1QR.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நயன்தாராவுக்கு நமது சங்கமும் தனது வாழ்த்தையும் அன்பையும்  அனுப்பி வைக்கின்றது....!  tw_blush:

Link to comment
Share on other sites

நயன்தாராவுக்கு இன்று 32ஆவது பிறந்தநாள்
2016-11-18 11:02:11

தன் அழகாலும், நடிப்பாலும் தமிழ்த் திரை­யு­ல­கில் நம்பர் வன் நடிகை யாக வலம் வரும் நயன்தாராவுக்கு இன்று 32 ஆவ­து பிறந்தநாள்.

 

தமிழ் சினி­மாவின் முன்­னணி நடி­கை­யாக திகழ்ந்து வரு­பவர் நடிகை நயன்­தாரா. தற்­போது கோலி­வூட் ஹீரோ­யின்­களில் அதிக சம்­பளம் வாங்குபவ­ரும் இவர் தான். 

 

20740page-10.jpgரசி­கர்­கர்­க­ளுக்கு மட்­டு­மில்­லாமல், இளம் ஹீரோக்­
க­ளுக்கும் கனவுக் கன்­னி­யா­கவும், கவர்ச்சிப் புய­லா­கவும் வலம்­வரும் இவ­ரு­டைய உண்­மை­யான பெயர் 'டயனா மரியா குரியன்'.

 

2003ஆம் ஆண்டு 'மன­சி­ன­காரே' என்ற மலை­யாள மொழித் திரைப்­படம் மூலம் திரைப்­ப­டத்­
து­றைக்கு அறி­மு­க­மான நயன்­தாரா, 2005 ஆம் ஆண்டு ‘ஐயா’ திரைப்­ப­டத்தின் மூலம் தமிழ்த் திரைப்­ப­டத்­து­றைக்கு அறி­மு­க­மானார். 

 

‘சந்­தி­ர­மு­கி’யில் ரஜி­னி­யின் ஜோடி­யாக நடித்தும் சூர்யாவுடன் கஜி­னியில் இரண்­டா­வது நாய­கி­யா­கவே நடித்தார். ‘சிவ­காசி’ படத்தில் திடீ­ரென்று ஒரு குத்­துப்­பா­ட­லுக்கு ஆடினார்.

 

அவ்­வ­ள­வு ­தானா நயன்­தாரா என்­றி­ருந்­த­வர்­க­ளுக்கு ‘வல்­லவன்’ மூலம் சிம்­புவின் ஜோடி­யாக நடிப்பு வாய்ப்பு வந்­தது.

 

அப்­போ­து தான் சிம்பு உடன் காதல் கிசு­கி­சுவில் சிக்­கினார். அதோடு சிம்­பு­வுடன் முத்தம் கொடுப்­ப­து, நெருக்­க­மாக இருப்­ப­து போன்ற புகைப்­படங்கள் வெளி­யா­கின. அதன்பின் தனது காதல் முறிவு என்று அறி­வித்தார்.

 

அதற்கு பின்னர் ‘வில்லு’ படத்தில் நடித்­த­போது அந்த படத்தை இயக்­கிய பிர­பு­தேவாவுடன் காதல் வயப்­பட்டார். அந்த காதல் திரு­மணம் வரை செல்லும் அறி­குறி தென்­பட்­ட­து.

 

இதனால் இனிமேல் படத்தில் நடிக்­க­மாட்டேன் என்று அறி­வித்தார் நயன்­தாரா. கடை­சியில் அந்த காதலும் முறிந்து முடி­வுக்கு வந்­தது. காதல் கிசு­கி­சுக்கள், காதல் முறி­வுகள் என நயன்­தாரா பற்­றிய செய்­தி கள் எப்­போதும் ஊட­கங்­க­ளுக்கு தீனி போட்­டுக்­கொண்டு இருந்­தன.

 

20740_Untitled-3.jpgஇந்­நி­லை­யில் தான் காதல் தோல்­வி­களிலிருந்து மீண்டு மீண்டும் சினி­மா­வுக்கு வந்த நயன்­தா­ரா­வுக்கு வாய்ப்­புகள் மழை­யாகக் கொட்­டி­ன.

 

‘ஆரம்பம்’, ‘ராஜா ராணி’, என அடுத்­த­டுத்து ஹிட் கொடுத்தார். மாஸ் ஹீரோ என்று இல்­லாமல் யாருடன் வேண்­டு­மா­னாலும் நடிக்க தயார். ஆனால், கதை எனக்கு பிடித்திருக்க வேண்டும் என்று அறிக்கை விட்டார்.

 

காதல் தோல்­விக்குப் பிற­கு தான், நயன்­தா­ரா­வுக்கு தமிழ், தெலுங்கு இரண்­டி­லுமே இளம் நடி­கர்­க­ளி­ட­மி­ருந்து வாய்ப்­புகள் வந்­த­வண்­ண­முள்­ளதாம்.

 

இதைப் பயன்­ப­டுத்­திக்­கொள்­வதில் தீவிரம் காட்டும் நயன்­தாரா,  மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் தருகிற படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இனி எக்‌ஷன் கதை­க­ளுக்­குத் தான் முன்­னு­ரிமை என்­கிறார். 

 

தமிழில் அறிமுகமான இவர், ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு, ஆர்யா, ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட முன்னணி ஹீரோ க்கள் பலருடன் ஜோடி சேர்ந்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது, மலை யாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்துள்ளார்.

 

தற்­போது இயக்குநர், அஜய் ஞானமுத்துவின் அடுத்த படத்தில் நயன்தாரா நடித்துவருகிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள இப் படத்துக்கு ‘இமைக்கா நொடிகள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

 

இதுதவிர, சற்குணம் உதவி இயக்குநர் தாஸ் இயக்கும் டோரா, மோகன் ராஜா - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகும் படம் என முக்கியமான படங்களில் நயன்தாரா நடித்துவருகிறார்.

 

நயன்­தாரா சினிமா உல­கிற்கு வந்து பத்­தாண்­டு­க­ளுக்கு மேலாகி விட்டது. எத்தனையோ கதாநாயகிகள் வந்து போயுள்ளனர். நிறைய புதுமுகங்கள் அறிமுகமாகிவரும் நிலை­யிலும் தனக்­கென ஒரு தனி இடத்தை பிடித்து இன்றும் நம்பர் வன் நடி­கை­யாக வலம் வரு­கி­றார்.

 

20740_Nayanthara--happy-Birthday.jpg

 

இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பத்திரிகை கள் இவரை லேடி சூப்பர் ஸ்டார் என குறிப்­பிடுகின்­­ற­னர்.

- See more at: http://www.metronews.lk/article.php?category=entertainment&news=20740#sthash.Afx5ZdYw.dpuf
Link to comment
Share on other sites

படப்பிடிப்புத் தளத்தில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா..! (படங்கள்)

 

naya%201_08327.jpg

'லேடி சூப்பர் ஸ்டார்' என சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நயன்தாராவின் பிறந்தநாளான நேற்று இணையதளங்களில் நயனுக்கு வாழ்த்துகளை குவித்தனர் அவரது ரசிகர்கள்.

naya%201_08057.jpg

முந்தைய நாள் இரவு முதலே பிறந்தநாள் வாழ்த்துகள் இணையதளங்களில் குவிய ஆரம்பித்தன. இந்த பிறந்த நாள் நேரத்தில் நயன்தாரா, மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வரும் புதிய படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் இருந்தார்.

naya%204_08256.jpg

 படப்பிடிப்பு தளத்திலேயே தனது பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாராவுக்கு,  படக்குழுவினர் அவருக்கென பிளக்ஸ் ஏற்பாடு செய்து, பொக்கே அளித்து நயன்தாராவை வாழ்த்து மழையில் நனைய வைத்து விட்டனர்.

naya2_08448.jpg

வாழ்த்துகளை தெரிவித்த அனைவருக்கும் நயன்தாரா தனது நன்றியை தெரிவித்தார்.

http://www.vikatan.com/news/cinema/72851-nayanthara-celebrated-her-birthday-in-shooting-spot.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.