Jump to content

யாழ் சோழியன் அண்ணா காலமானார்


Recommended Posts

மிகவும் துயரமான செய்தி. பல்கலை ஆற்றல்கள் கொண்டவர்.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்!

குடும்பத்தினரின் துயரில் யாழ் குடும்பத்துடன் இணைந்து பங்குகொள்கின்றேன்.  

+++

மோகன், முகப்பில் சோழியன் அண்ணாவின் அஞ்சலியை இணைத்தமைக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் வேலையாக விடிகாலையில்...யாழைத் திறப்பது தான் எனது வழக்கம்!

இன்றைய செய்தி இடியைப் போல இறங்கியது!

முகநூல் மூலமும், யாழ் மூலமும் மிகவும் நெருங்கியவர்!

அண்மையில் கூட ஊருக்குப் போய் வந்து..திருவிழாப் படங்களைப் பெருமையுடன் இணைத்திருந்தார்!

 

கோஷான் கூறியது போன்று...இந்த உலகம் நல்லவர்களை நீண்ட காலம் விட்டு வைப்பதில்லை!

 

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்!

 

Link to comment
Share on other sites

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரின் குடும்பத்தினரின் துயரில் பங்கு கொள்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

அன்னாரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களும், நண்பனுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

ஆழ்ந்த அனுதாபஙகள்

Link to comment
Share on other sites

எழுத்துலகில் தனக்கான இருக்கையையும் தன்னோடு சார்ந்தவர்களிற்கான இருக்கையையும் உருவாக்கி தந்த வழிகாட்டி சோழியன் அண்ணா.  என்னை எனக்கே அறிமுகம் செய்து வைத்த ஆசான். இழப்பறிந்து துடிக்கிறது மனது. வயது வித்தியாசமின்றி பழகிய அன்பான நண்பன்.

வாழ்க்கையில் எத்தனையோ நபர்களை காலம் காட்டி சென்றாலும் ஒரு சிலரே மனதோடு நெருக்கமாகின்றனர். என் எழுத்தை இணையத்தில் ஏற்ற தொடங்கிய காலம் தொடக்கம் நேற்றுவரை கரம் கொடுத்து தூக்கிய அன்பு நண்பர் இன்று எம்மோடு இல்லை.

எழுத்துக்கள் வாழும் காலம் வரை உன் பெயர் நிலைக்கும் அண்ணா. 

ஆழ்ந்த அனுதாபஙகள்

என்றும் உங்கள் ஆசியோடு

கரவை பரணீ



 

Link to comment
Share on other sites

மிகவும் கவலையான செய்தி. சோழியன் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பிரபல தமிழ் எழுத்தாளரும்,
சோழியான் என்ற புனைபெயரில்
தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும்,
கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும்,
பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப்
பிறப்பிடமாகக் கொண்டவரும்
ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான
திரு. இராஜன் முருகவேல் அவர்கள்
15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்

அன்னாரது இறுதிக்கிரியைகள்
30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.

கிரியைகள் நடைபெறும் இடம்:
GE BE IN Bestattungsinstitut,
Korn Strasse. 217,
28201 Bremen

நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை

உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புகளுக்கு:
செல்லிடப் பேசி.
மகன் - 0049 176 20102799

'பிரபல தமிழ் எழுத்தாளரும், சோழியான் என்ற புனைபெயரில் தமிழ் இலக்கிய உலகில் அறியப்படுபவரும், கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவரும், பாறாளை வீதி, யாழ்.சுழிபுரம்-கிழக்கைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் ஜேர்மனி பிறேமன் நகரை வதிவிடமாகக் கொண்டவருமான திரு. இராஜன் முருகவேல் அவர்கள் 15.11.2016 திங்களன்று இறைவனடி சேர்ந்தார்  அன்னாரது இறுதிக்கிரியைகள் 30.11.2016 புதன்கிழமை நடைபெறும்.  கிரியைகள் நடைபெறும் இடம்: GE BE IN Bestattungsinstitut, Korn Strasse. 217, 28201 Bremen  நேரம்: முற்பகல் 10.00 மணிமுதல் பிற்பகல் 13.00 மணிவரை  உற்றார் உறவினர் நண்பர்கள் இத்தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.  தொடர்புகளுக்கு: செல்லிடப் பேசி. மகன்    -    0049 176 20102799'
Link to comment
Share on other sites

சோழியன் அண்ணாவின் மறைவை  மறுக்கிறது மனது. பழக இனிமையானவர். எனது யாழ் பயணத் திரியின் பின்னர் எப்படியோ எனது முகப் புத்தகத்தை மோப்பம் பிடித்து நண்பராக இணைத்திருந்தார். எனது முகப்புத்தகம் கடும் கட்டுப்பாடுகளுடன் இருந்ததால் அந்த நட்பு அழைப்பை அப்படியே விட்டுவிட்டேன்.

அண்ணா,  உங்கள் ஆன்மா சாந்தி அடைவதாக, அத்துடன் அவரின் மனைவி, பிள்ளைகள் நண்பர்களின் துயரில் நானும் பங்கு கொள்ளுகிறேன்.

Link to comment
Share on other sites

மிகவும் துக்கம் தரும் செய்தி.

சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைவதாக.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள். சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்

Link to comment
Share on other sites

அனைவருடனும் இனிமையகநட்பாக பழகும் சோழியன் அண்ணாவின் இழப்பு கவலையை தருகிறது.

அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணாவின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன் அண்ணாவின் மரணத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மனம் நம்ம மறுக்கின்றது. எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து எங்கெல்லாமோ அலைந்து ...யாழ்களம் எனும் வீட்டில் முகமறியாமலே சகோதரபாசத்துடன் பழகிய எம் சோழியன் அண்ணாவின் இழப்பை தாங்கிக்கொள்ள முடியவில்லை..இது பொய்யாக இருக்கக்கூடாதா என் மனம் தத்தளிக்கின்றது.
சோழியன் அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி....அவரின் பிரிவின் துயரால் மூழ்கியிருக்கும் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நினைச்சுப் பார்க்கவே முடியல்ல. மிகவும் அதிர்ச்சியான செய்தி மட்டுமன்றி ஒரு அன்பான குடும்ப உறவை இழந்த சோகம். இப்போது தான் இந்தச் செய்தியே கிட்டியது.

மாள முடியாத சோகம். இன்னும் எவ்வளவோ சாதிப்பார் என்று எதிர்பார்த்திருந்த போதில்......................................

வெறும் கண்ணீரஞ்சலியால் அடங்கிவிட முடியாது.. இந்தச் சோகத்தை. 

நம்பவே கஸ்டமா உள்ளது. 

Link to comment
Share on other sites

சோழியன் அண்ணா,

மிகவும் துயரமாக இருக்கிறது 

எத்தனை எத்தனை  தடவைகள் அன்பும் ஆறுதலும் பாராட்டும்,

சந்திக்ககூடிய ஒரு சந்தர்ப்பம் கிடைத்தும் சந்திக்காமல் போனதை இப்ப நினைத்து வருந்துகிறேன்... 

நீங்கள் நேசித்த இறைவனிடத்தில் அமைதி கொள்ளுங்கள் அண்ணா.

நீங்கள் எனக்கு அனுப்பிய கதைகளையும் வில்லிசை நிகழ்வுகளையும் இனியாவது பார்த்துவிடுகிறேன்... tw_cold_sweat:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று மதியம்  இந்த செய்தியை பார்த்தபோது மிகவும் அதிர்ச்சியாகவும் கவைலையாகவும் இருந்தது.  நம்ப முடியவில்லை :( யாழில் இணைந்த காலத்தில் இருந்து மிகவும் நடப்பாகவும் இனிமையாகவும் பழகிய நண்பர்.  பின்னர் முகப்புத்தகத்தில் நண்பர்களாகி farmville இல் இருவரும் நேரம் கழித்தோம்.  அவரது ஆக்கங்கள் வில்லுபாட்டுகளை பகிர்வார்.  பின்னர் சில காலங்கள் தொடர்பற்று போக, முகப்புத்தகத்தில் சில கட்டுப்பாடுகளை செய்தபோது அவர் முகப்புத்தக நடப்பு அறுந்து விட்ட்து. :(
சோழியான் அண்ணாவின் குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

எங்கள் அன்பிற்கும் மதிப்புக்கும் உரிய சோழியன் அண்ணாவின் திடீர் மறைவு நீங்க முடியாத சோகத்தையும் வேதனை அளிக்கிறது. இந்த வேளையில் அவரின் மறைவால் துயரிற்றிருக்கும் அவர் தம் குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் யாழ் கள மற்றும் முகநூல் நண்பர்கள் உட்பட எல்லோரோடும் எங்களின் ஆழ்ந்த அனுதாபங்களைப் பகிர்ந்து கொள்கிறோம்.

குருவிகள் மற்றும் நண்பர்கள். 

Link to comment
Share on other sites

யாழின் ஆரம்ப கால உறுப்பினராக இருந்து களத்திற்கு தனது படைப்புகளால் மெருகேற்றி ஏனைய அங்கத்தவர்களையும் எழுதுவதற்கு உற்சாகப்படுத்திய கள உறவான சோழியான் அண்ணாவின் மறைவுச் செய்தி கவலை தருகிறது. 

அவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர் உறவினர் நண்பர்கள்  அனைவருக்கும் ஆழ்ந்த  அனுதாபங்களைப் பதிவு செய்கிறேன்.

Link to comment
Share on other sites

செத்தும் கொடுத்தான் சீதக்காதி !


மறைந்தும் கொடுத்தார் எங்கள் யாழுறவு சோழியன் !!


தான் மறைந்துவிட்டபோதும், மறைந்திருந்த பல யாழ் உறவுகளை மீண்டும் களத்தில் காணவைத்த பெருமை சோழியன் அவர்களையே சாரும்.
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.