Jump to content

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு!


Recommended Posts

சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு!

கார்த்திகா வாசுதேவன்

ஆகாயத்தின் நட்சத்திரங்களை எண்ணித் தீராது என்பதுபோல பெண்களின் புடவை மோகத்தையும் சொல்லித் தீராது. அதற்கேற்ப புடவை வகைகளும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றன. கட்டுரையை வாசிப்பதற்கு முன் நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், முதலில் உங்கள் வார்ட்ரோபை திறந்து பாருங்கள். உங்களிடம் என்னென்ன வகைப் புடவைகள் எத்தனை இருக்கின்றன என்று உங்களால் சொல்ல முடிகிறதா பாருங்கள்.

சிலருக்கு புடவை கட்டிக்கொள்ளப் பிடிக்கும், புதிது புதிதாக புடவைகளை வாங்கி அடுக்கிக்கொள்ளவும் பிடிக்கும். ஆனால், இது என்ன வகைப் புடவை? என்று கேட்டால் சொல்லத் தெரிந்திருக்காது. புடவை நிறத்தையும், அதன் பகட்டையும் பார்த்து மயங்கி வாங்குவார்கள். தரத்தைப் பற்றி கவனமில்லாது புடவை வாங்கி, சில முறை துவைத்ததுமே புடவை நிறம் மங்கி வெளுப்பதைக் கண்டு புடவையைக் குறை சொல்வார்கள். குறை புடவையிலா இருக்கிறது?! நன்றாக யோசித்துப் பார்த்தால், தேர்ந்தெடுத்து வாங்கத் தெரியாதது நமது குறைதான் இல்லையா?

பொதுவாக, இயந்திரங்களால் உற்பத்தி செய்யப்படும் புடவைகளைவிட கையால் நெசவு செய்யப்படும் கைத்தறிப் புடவைகள் நீடித்து உழைக்கும் என்பதும் தரமானதாக இருக்கும் என்பதும் மக்களிடையே உள்ள பொதுவான நம்பிக்கை. ஆனால், கைத்தறிப் புடவைகளிலும் போலிகள் வந்துவிட்ட பின்பு, பெண்கள் எதைவைத்து புடவைகளின் தரத்தை ஆராய முடியும்? தரமான கைத்தறிப் புடவைகள் எவை? அவற்றில் என்னென்ன வகையான கைத்தறிப் புடவைகள் எல்லாம் பெண்களைக் கவரக்கூடும் என்ற தன்னார்வத்திலிருந்து பிறந்ததுதான் இந்தத் தொடர். 

வாரம் ஒரு புடவை வகை என்று எடுத்துக்கொண்டு அந்தந்த கைத்தறிப் புடவைகளை அவை அவற்றுக்கான தோற்றம், தரம் கண்டுபிடித்தல், பராமரித்தல், பயன்படுத்தும் பெண்களின் அனுபவப் பகிர்வுகள் என்று வெவ்வேறு தலைப்புகளின் கீழ் அலசுவோம்.

ஒவ்வொரு புடவை வகையைப் பற்றியும் வாசிக்க ஆரம்பித்ததும்தான் தெரிந்தது, இந்த வகையிலான ஆராய்ச்சி எத்தனை சுவாரஸ்யமானது என்று! கைத்தறிப் புடவைகளை எடுத்துக்கொண்டால் அதன் தோற்றம் மற்றும் நாகரிக வளர்ச்சியை ஒட்டி அவற்றில் நிகழ்த்தப்பட்ட நவீன மாற்றங்கள், உடுத்தும் நேர்த்தியில் அன்றிலிருந்து இன்று வரையிலான தொடர் மாறுதல்கள் என்று அத்தனை விவரங்களையும் தெரிந்துகொண்டு, அந்தந்த புடவைகளை உடுத்திக்கொள்ளும்போது உடுத்திக்கொண்டவர்களோடு சேர்ந்து புடவைகளின் கம்பீரமும் கூடிவிடுகிறது என்பது அனுபவ உண்மை.

 

பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள்

 

 
kasavuuu

இந்த வாரம் பாரம்பரிய கேரள கைத்தறி நெசவான பாலராமபுரம் புடவைகளைப் பற்றி அலசலாம். 

பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள்

kasavu_jari.jpg

கேரளத் தலைநகர் திருவனந்தபுரத்தை அடுத்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள சிறுநகரம் பாலராமபுரம். 1700-களின்  தொடக்கத்தில் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தினருக்கு கசவு அல்லது பாரம்பரிய சரிகைச் சேலைகள் மற்றும் வேஷ்டிகள் நெசவு செய்வதற்காக தமிழ்நாட்டின் சேலம் மாவட்டம் வள்ளியூரில் இருந்து 20 சாலியர் குலத்தைச் சேர்ந்த குடும்பங்கள் கேரளாவிற்கு வரவழைக்கப் பட்டன. அப்போது திருவிதாங்கூர் மன்னராக இருந்தவர் ராஜா பாலராமவர்மா, தமிழ்நாட்டு நெசவாளர்களை அழைத்து வந்து இவர் குடியேற்றம் செய்த கிராமம் பின்னாட்களில் ராஜாவின் நினைவாக 'பாலராமபுரம்' என்றானது. முதலில் சாலியர்களால் நடைபெற்ற நெசவுத் தொழில் பிறகு நாராயண குரு மற்றும் அய்யா வைகுண்டர் எழுச்சிக் காலத்தில் ஈழவ சமுதாயத்தினர் மற்றும் முஸ்லீம்கள் என அனைவராலும் நடத்தப்பட்டன. 

அப்படித்தான் கேரளாவின் பாரம்பரியம் மிக்க சந்தன நிற சரிகைக் கைத்தறிப் புடவைகள் இந்த பாலராமபுரத்திலிருந்து தயாராகி உலகம் முழுதும் விற்பனையாகத் தொடங்கின. கைத்தறிப் புடவைகளோடு வேஷ்டிகளும், முண்டும், செட் முண்டும் நேரியதும் கூட இங்கிருந்து தான் தயாராகிறது. மலையாளிகள் மட்டுமல்ல இப்போது பிற மாநிலத்தை சேர்ந்தவர்களும் கையால் நெய்யப்படும் இந்தக் கைத்தறிப் புடவைகளை விரும்பி வாங்கிப் பயன்படுத்துகின்றனர் என்பதால் இந்த புடவைக்கான மவுசும், ஊருக்கான மவுசும் அதிகம். இங்கே தயாராகும் சரிகைக் கைத்தறிப் புடவையிலோ, வேஷ்டியிலோ செயற்கைச் சாயமேற்றப்படுவதில்லை. வெள்ளை நிற கோரா நூலில் சரிகை நூல் கலந்து அப்படியே நெய்கிறார்கள். பழமை மாறா தெற்கு கேரளப் பகுதிகளில் திருமணமென்றால் ஆண்கள் சாயமேற்றப்படாத வெண்ணிற வேஷ்டியும், சட்டையும் அணிவது பாரம்பரிய உடை. பெண்கள் எனில் முண்டும், நேரியதும் அல்லது செட் முண்டு தான் திருமணப் பாரம்பரிய உடை. இந்த செட் முண்டு இப்போது ‘பாலராமபுரம் புடவைகள்’ என்று புது அவதாரம் எடுத்திருக்கிறது. 

பாலராமபுரம் நெசவின் சிறப்பு

saree_3.jpg

பாலராமபுரம் நெசவு தனித்த அடையாளம் கொண்டது. இந்தவகை நெசவில் ஊடும், பாவும் தனித்தனியாக கைகளால் கட்டுப்படுத்தப்பட்டு புடவை நுனியில் தனித்தனி நூல் முடிச்சுகளாக முற்றுப்பெறும். எனவே புடவை முழுமைக்கும் எங்கும் பிசிறுகளே இன்றி ஒரே சீரான தன்மை காணப்படும். அதோடு புடவையில் பயன்படுத்தப்படும் அன்னப் பட்சி, மயில், கிளி, போன்ற ஸ்பெஷல் மோட்டிஃப்கள் தனியாக மோல்டுகளில் பதியப்பட்டு பின் தேர்ந்தெடுத்த சிறந்த நெசவாளார்கள் மூலம் தனித் தனியாக புடவைகளில் அச்சிடப்பட்டு நேர்த்தியாக நெய்யப்படுகின்றன. எனவே புடவையில் அவற்றைக் காணும் போது முன்புறம், பின்புறம் எப்படிப் பார்த்தாலும் ஒரே மாதிரியாகத் தோற்றமளிக்கும். அதாவது பொதுவாக புடவைகளில் சரிகை டிஸைன்கள் முன்புறம் பார்க்க அழகாகத் தோன்றினாலும் புடவையை மாற்றிப் போட்டால் ஒரிஜினல் டிஸைன் போலில்லாமல் அவுட்லைன் போலத் தோன்றும். ஆனால் பாலராமபுரம் நெசவில் சரிகை டிஸைன்களுக்கு ஒவ்வொன்றுக்கும் தனி நெசவென்பதால் டிஸைன்கள் முன்புறம் பின்புறம் என வித்யாசமே காணமுடியாத அளவுக்கு கைத்தறி நெசவின் நுட்பம் அபாரமாக இருக்கும். இது தான் பாலராமபுரம் நெசவின் சிறப்பு.

புடவை ஒரிஜினல் பாலராமபுரம் கைத்தறி நெசவா என்று எப்படிக் கண்டுபிடிப்பது?

  • தனித் தனி நெசவென்பதால் புடவை டிஸைன்கள் முதன்மையாக பளிச்சென்று தோற்றமளிக்கும். முன் புற பின்புற வித்யாசம் இருந்தால் அது ஒரிஜினல் இல்லை.
  • புடவையில் எந்த இடத்திலும் பிசிறுகளே இல்லாது மிக நேர்த்தியாக நெசவு செய்யப்பட்டிருக்கும். நெசவில் நேர்த்தி இல்லாவிட்டால் அது ஒரிஜினலாக இருக்காது.
  • செயற்கை வண்ணங்கள் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் எனவே புடவை சாயம் போகாது சாயம் போனால் அது ஒரிஜினல் இல்லை. 
  • பிற காட்டன் புடவைகளை விட பாலராமபுரம் கைத்தறிப் புடவைகளில் நூல் அடர்த்தி அதிகமிருக்கும். அதை வைத்தும் ஒரிஜினலை அடையாளம் காணலாம்.
  • புடவைகளில் ஸ்டார்ச் குறைவாகவே பயன்படுத்துவார்கள் என்பதால் பிற காட்டன் புடவைகளை விட  இந்தப் புடவைகளைத் தொட்டுப் பார்க்கும் போது  மிருதுத் தன்மை அதிகமிருக்கும். இப்படியும் ஒரிஜினலை கண்டுபிடிக்கலாம்.

பராமரிப்பு

கைத்தறிப் புடவைகளை எப்போதுமே பட்டுப் புடவைகள் போலத்தான் தனியாக நறுவிசாகப் பராமரிக்க வேண்டும். உடுத்தும் ஒவ்வொரு முறையும் துவைக்க வேண்டும் என்பதில்லை, இந்தப் புடவைகளை உடுத்திக் கொண்டு யாரும் நாற்று நடப் போவதில்லை. விழாக்களுக்கும், அலுவலகங்களுக்கும், உடுத்திக் கொண்டு விட்டு வீடு திரும்பியதும் உடனே புடவையை நீவி மடித்து காற்றாட உலர்த்தி மடித்து எடுத்து வைக்கலாம். மீண்டும் மறுமுறை உடுத்திய பின் புடவையை தரமான நபர்களிடம் உலர் சலவைக்குத் தரலாம். கைத்தறிப் புடவைகளை அதிக நேரம் வெயிலில் காய வைக்கக் கூடாது. வெயிலில் லேசாகக் காய்ந்ததும் நிழலில் உலர்த்தலாம். உலர்ந்த புடவைகளை உடனடியாக சுருக்கங்கள் இன்றி மடித்து அயர்ன் செய்து வைத்து விடுவது கைத்தறிப் புடவைகளின் ஆயுளுக்கு உகந்தது. 

ஒரிஜினல் பாலராமபுரம் கைத்தறிப் புடவைகள் எங்கே கிடைக்கும்?

தமிழ்நாட்டில் சென்னை நந்தனம் அண்ணாசாலையில் இருக்கும் CCIC காட்டேஜ் எம்போரியம், கோவையில் PSR சில்க், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரிஜினல் பாலராமபுரம் புடவைகள் கிடைக்கும் என்று 'இண்டியா ஹேண்ட்லூம் பிராண்ட்’ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆர்வமிருப்பவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

பாலராமபுரத்தில் கைத்தறிப் புடவைகள் எப்படி நெசவு செய்கிறார்கள் என்று கீழே உள்ள இணைப்பை அழுத்தி விடியோவைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். 

அவ்வளவு தானா?! இன்னுமிருக்கிறது...

 

http://www.dinamani.com/lifestyle

Link to comment
Share on other sites

மென்மையிலும் ’மெஜஸ்டிக் லுக்’ தரும் மங்களகிரி கைத்தறிப் புடவைகள்...

 

 
sruthihasan_at_mangalagirisaree

அப்படி என்ன தான் இருக்கிறது இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளில்?! ஒரு தீபாவளி சமயம் பக்கத்து வீட்டு அம்மாவும் எங்களோடு புதுத்துணிகள் வாங்க ஜவுளிக்கடைக்கு வந்திருந்தார். அந்தம்மாள் அரசுப்  பள்ளியில் தலைமை ஆசிரியர், கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து புடவைகளுக்கு மேலேயே எடுத்தார். அடர் நீலம், இளம் மஞ்சள், கருஞ்சிவப்பு, மென் பசுமை, குங்கும நிறம், வாடா மல்லி, என எல்லாமும் கலர் கலராக மங்களகிரி மட்டுமே, ஏன் வேறு வகைப் புடவைகள் பிடிக்கவில்லையா? என்று கேட்டதற்கு, அப்படி இல்லை இந்த மங்களகிரியில் கிடைக்கும் 'மெஜஸ்டிக் லுக்' வேறு புடவைகளில் கிடைப்பதாக எனக்குத் தோன்றவில்லை. அதோடு இந்தப் புடவைகள் உடுத்திக் கொள்ள மிருதுவாக இருப்பதோடு பயன்பாட்டுக்கும் எளிதாக இருப்பதால் நான் மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வேன், சரி தானே! என்றார்.

அந்தம்மாள் கட்டும் புடவையும் சரி அதைக் கட்டிக்க கொள்ளும் நேர்த்தியும் சரி எப்போதுமே அத்தனை அழகாக இருக்கும். எட்டு பிளீட்ஸ் வைத்து புடவை கட்டிக் கொள்ளவும், முந்தானை மடிப்புக் கலையாது எடுத்து முன்புற இடுப்பில் செருகிக் கொள்ளவும் அவரிடம் தான் கற்றுக் கொள்ள  வேண்டும். அப்படி அத்தனை பாந்தமாக புடவை காட்டுபவர் அவர். அவர் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். அவர் மட்டுமல்ல பல ஆண்டுகளாக நடுத்தர வயது கடந்த வயதான மூத்த பெண்மணிகள் பலரது ஏகோபித்த விருப்பமாகவும் இந்த மங்களகிரிப் புடவைகள் தான் இருந்து வருகின்றன என்பது பலரிடம் பேசியதிலிருந்து கிடைத்த செவிவழிச் செய்தி.

சரி இனி புடவையைப் பற்றி பேசுவோமா?

ஆந்திர மாநிலம் குண்டூரிலிருந்து  19 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சிறுநகரம் மங்களகிரி. இந்தப் பக்கம் விஜயவாடாவில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவு. இங்கே வசிக்கும் மக்களில் பெரும்பான்மையினர் நெசவாளர்கள். மங்களகிரி எனும் இந்த ஊர் புடவைகளுக்கு மட்டும் பிரசித்தி பெற்றதல்ல இங்கே மலை மீது கோயில் கொண்டுள்ள பானகால நரசிம்ம சுவாமிக்காகவும், லட்சுமி நரசிம்ம சுவாமிக்காகவும் மகாபாரத காலம் முதற்கொண்டு பாடப்பெற்ற சிறப்பு ஸ்தலமாகத் இருந்து வந்திருக்கிறது. இரண்டு நரசிம்ம சுவாமிகளையும் வழிபட வரும் பக்தர்கள் வழிபாட்டின் ஒரு பகுதியாக இங்குள்ள நெசவாளர்களிடம் இருந்து மங்களகிரிப் புடவைகளை வாங்கிச் செல்வதோடு தான் இந்த ஸ்தல வழிபாடு நிறைவடைகிறது என்பது ஆந்திர மக்களின் தொன்று தொட்ட நம்பிக்கை. அப்படி பக்தி யாத்ரீகர்கள் மூலமாக  மங்களகிரிப் புடவைகளின் பெருமை இந்தியா மட்டுமல்ல இன்று உலகெங்கும் பரவி ஊருக்கும், புடவைக்கும் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறது.

மங்களகிரிப் புடவைகள் நெசவின் சிறப்பு:

மங்களகிரிப் புடவைகளில் பெரும்பாலும் கோடுகள் மற்றும் சிறு சிறு கட்டங்கள் போன்ற டிஸைன்களே பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இந்தக் கோடுகள் மற்றும் கட்டங்களோடு அடர்த்தியான ஜரிகை கரையிட்ட இந்தப் புடவையின் உடற்பகுதி பெரும்பாலும் பிளெயின் ஆகத்தான் நெய்யப்படும், சில புடவைகளில் புடவை முழுதும் குறுக்காகவோ, நெடுக்காகவோ வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப கெட்டியான ஜரிகைக் கரையுடன் கூடிய மெல்லிய கோடுகள் புடவை முழுதும் நீண்டிருக்கும். அதோடு சுத்தமான பருத்தி நூலில் நெய்த புடவை  சாயமேற்றும் போது ஊடும், பாவுமாக இரு நிற வண்ணங்கள் பயன்படுத்தப் படுவதால் புடவைக்கு  ’டபுள் ஷைனிங்’ கிடைக்கிறது. இதனால் புடவைக்கு கிடைக்கும் மெஜஸ்டிக் லுக்கை வேறெந்தப் புடவையிலும் கூடக் காண்பது அரிது.  

பொதுவாக இந்த வகைக் கைத்தறிப் புடவைகள் 80s கணக்கில்   பிரித்தெடுக்கப்பட்ட தூய பருத்தி நூல்களின் மூலமாகவே நெய்யப்படுகின்றன. புடவையின் இருபுறமும் நீளும்  கெட்டியான ஜரிகை கரை 'நிஜாம் பார்டர்' என்றழைக்கப்படுகிறது.  இந்த நிஜாம் பார்டரும், பழங்குடியினரின் ஸ்டைல் எனும்  பொருள் தரக்கூடிய வகையில் கோடுகளும் கட்டங்களும் கலந்த 'ட்ரைபால் டிசைன்களும்' தான் இந்தப் புடவைகளுக்கான மற்றுமொரு சிறப்பு. 

இந்தப் புடவைகளுக்கான வரவேற்பையும் சிறப்பையும் இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள கீழே உள்ள இந்த யூ டியூப் விடியோவைப் பாருங்கள். 

தெலுகு புரியாதவர்கள் விடியோ பார்த்து விட்டு இதை வாசிக்கவும்.

‘பாகுபலி படத்தில் ரம்யாகிருஷ்ணனுக்காக அப்படத்தின் காஸ்டியூம் டிஸைனர் ரமா ராஜமௌலி விரும்பித் தேர்ந்தெடுத்தது இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளைத் தான். பாகுபலி 2 வுக்காக சுமார் 12 லட்சம் ரூபாய்களுக்கு புடவைகள், வேஷ்டிகள் மற்றும் பிற ஆடை வகைகளுக்கு படத்தயாரிப்புக் குழுவினர் ஆர்டர் தந்திருப்பதாக இந்த விடியோவில் பேசும் நெசவாளர் தெரிவிக்கிறார்.

ramya_in_mangalagiri_2.jpg

இது மட்டுமல்ல இயக்குனர் வம்சி மற்றும் ராஜமௌலி இருவரும் தொடர்ந்து தங்களது திரைப்படங்களில் மங்களகிரி புடவைகளைப் பயன்படுத்தி வருவது நெசவாளர்களான தங்களுக்குப் பெருமைக்குரிய விசயம் என்றும் தெரிவிக்கிறார்.

sruthi_at_mangala.jpg

 
 

மலையாள ரீமேக் படமான பிரேமம் தெலுகு வெர்ஷனில் மலர் டீச்சர் ஷ்ருதி ஹாசன் அணிவதற்காக தேர்வு செய்யப் பட்டிருப்பதும் இந்த மங்களகிரி கைத்தறிப் புடவைகளைத்தானாம். அதாவது மேற்கண்ட பெண் கதாபாத்திரங்களுக்கு இந்தப் புடவைகள் தேர்வு செய்யப்படுவதற்கான பிரதான காரணம் ஒன்றே ஒன்று மட்டும் தான்! அந்தப் பெண்கள் அந்தந்த படங்களில் கம்பீரமாக சித்தரிக்கப்பட அவர்களின் நடிப்புத் திறனோடு இந்தப் புடவைகளும் துணை நிற்கின்றன என்பதால் மட்டுமே! இந்தப் புடவைகளின் மற்றொரு வி.ஐ.பி. விசிறி என்றால் அது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. மம்தா குறிப்பிட்ட இடைவெளிகளில் மொத்தமாக மங்களகிரி புடவைகள் வாங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். 
manga-silk-sarees.jpg

ஒரிஜினல் மங்களகிரிப் புடவையா என்று எப்படி கண்டுபிடிப்பது?

  • மங்களகிரிப் புடவைகளின் உடல் பகுதியில் எந்த விதமான  எக்ஸ்ட்றா மோட்டிஃப்களோ, கூடுதல் வடிவமைப்புகளோ பயன்படுத்தியிருக்கப்பட மாட்டாது.
  • வழக்கமான மெஷின் மேட் காட்டன் புடவைகளைப் போல ஸ்டார்ச் அதிகம் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள் என்பதால் புடவை மிருதுவாக இருக்கும்.
  • பிற காட்டன் புடவைகளைக் காட்டிலும் மங்களகிரி கைத்தறிப் புடவைகளின் நெசவும் சரி வடிவமைப்பும் சரி கன கச்சிதமாக இருக்கும் என்பதோடு நிஜாம் பார்டர் என்று சொல்லப்படுகிற  வார்ஃப் டிஸைன் புடவையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சிறு பிசிறு கூட இல்லாமல் தொய்வின்றி சீரான நெசவாக இருக்கும். 

பயனாளர்களின் மனக்குறை:

மங்களகிரி கைத்தறிப் புடவைகளை பயன்படுத்துவோர் சொல்லும் ஒரே ஒரு சின்ன குறை என்னவெனில் இந்தப் புடவைகளை கவனமாகக் கையாள வேண்டும் என்பது மட்டுமே! ஏனெனில் இந்தப்புடவைகளை எல்லாக் கைத்தறிப் புடவைகளை போலவே  கஞ்சி போட்டு இஸ்திரி செய்யாமல் பயன்படுத்த முடியாது.  சாதாரண புடவைகளை போலவே இதையும் கவனமின்றி பயன்படுத்தினால் புடவையின் மெருகு குன்றி  கொச கொசப்பாக மாறி மங்களகிரி  புடவை எனும்  பெருமையே அர்த்தமற்றதாகி விடும். எனவே அதிகம் அழுக்காக்கமால் ,கசக்காமல் இரண்டு முறை உடுத்தியதும் உலர் சலவைக்கு அனுப்புவதே உத்தமம்.

சென்னையில் ஒரிஜினல் மங்களகிரி புடவைகள் எங்கு கிடைக்கும்?

சென்னையில் நல்லி, பாலம், சுந்தரி சில்க்ஸ், சென்னை சில்க்ஸ், குமரன் சில்க்ஸ், ராதா சில்க் எம்போரியம், மதார்ஷா, சரவணா ஸ்டோர்ஸ் உள்ளிட்ட இடங்களில் ஒரிஜினல் மங்களகிரி புடவைகள் கிடைக்கின்றன.

கடைசியாக மங்களகிரிப் புடவைகள் எப்படி நெசவு செய்யப்படுகின்றன? என்னென்ன விதமான ஆடைகள் மங்களகிரி நெசவில் தயாராகின்றன போன்ற இன்னபிற செய்திகளை எல்லாம் கீழே உள்ள இந்த விடியோ பார்த்து புரிந்து கொள்ளலாம்.

 

விடியோ விளக்கம்:

முதலில் விளைந்த பருத்தி ஸ்பின்னிங் மில்லுக்குச் சென்று அங்கிருந்து "யார்ன்' அதாவது பருத்தி நூலாகத்  தயாராகி வருகிறது. இந்த நூல் பண்டில்கள் ஒரு இரவு முழுதும் கொதிக்கும் நீரில் வைக்கப்படுகின்றன. பின்பு தேவையான வண்ணம் ஏற்றுவதற்காக 70 டிகிரி வெப்பத்தில் 30 நிமிடங்கள் வரை  இந்த தூய பருத்தி நூல் பண்டில்கள் இயற்கைக் சாயத்தில் மீண்டும் மீண்டும் முக்கி எடுத்து பிழியப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட நூல் பண்டில்கள் ஒரு நாள் முழுதும் காய வைக்கப்படுகின்றன. இந்த காய்ந்த நூல்களைக் கொண்டு இனி கைத்தறிப் புடவைகள், வேஷ்டிகள், பிளவுஸ்கள் எது வேண்டுமானாலும் தயார் செய்யலாம்.

இவற்றைக் கொண்டு புடவைகள் நெய்வதென்றால் அடுத்த ஸ்டெப் நூல்கள் தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு கஞ்சி ஏற்றப்படுகின்றன. கஞ்சி ஏற்றப்பட்ட புடவைகள் மெல்லிய மரக்குச்சிகள் மூலம் தொடர்ந்து இறுக்கமாக நீவப்பட்டு ஷைனிங் ஏற்றப்படுகின்றன. ஷைனிங் ஏற்றப்பட்ட நூல் பண்டில்கள் கலர் வேரியேஷனுக்காகவும் தொய்வின்றி நெய்வதற்காகவும் இரு வேறு நூல்கள்சா ம்பல் சேர்த்து ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படுகின்றன  பிறகு மறுபடியும் சில நூறு மீட்டர் நீளத்துக்கு மரக்குச்சிகளில் இறுக்கமாக சிக்கல்கள் இன்றி நீட்டப்பட்டு ராட்டையில் சுட்டப்படுகின்றன.பின்  நெசவுக்கு எளிதான வகையில் தறிக்கு மாற்றப்படுகின்றன. இதற்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை ஆகலாம். இப்படித் தயாராகும் கைத்தறி நூல் இப்போது புடவையாக நெய்வதற்குத் தயார் நிலையில் உள்ளது. இனி இதை வைத்து ஒரு தடவைக்கு நான்கு புடவைகள் வரை நெய்யலாம். 

ஸ்பெஷல் டிசைன்கள் உருவாக்கத்துக்கு வடிவமைக்கப்பட்ட டோபி இணைக்கப்பட்ட  கைத்தறியில் ஒரு புடவை நெய்வதற்கு காலை ஆறுமணி முதல் மாலை 6 மணி வரையாகுமாம். இப்படித்தான் மங்களகிரிப் புடவைகள் தயாராகின்றன என்று இந்த விடியோ பதிவு கூறுகிறது.

சரி இனி அடுத்த வாரம் எந்தப் புடவை?

பலுச்சாரி கைத்தறிப் பட்டுப்புடவைகள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறீர்களா?

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் பகீரதி ஆற்றங்கரையின் எழில் கொஞ்சும் சிற்றூர் ஒன்றில் தயாராகும் பலுச்சாரி கைத்தறிப் புடவைகளைப் பற்றி அடுத்த வெள்ளியன்று காண்போம். 

- தொடரும்

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

இதிகாசக் கதைகள் பேசும் பிஷ்ணுபூர் 'பலுச்சாரி' கைத்தறிப் பட்டுப் புடவைகள்!

 

 
baluchari_eastern_style

தென்னகத்தில் பொதுவாக காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம், திருபுவனம், பனாரஸ், மங்கலகிரி, வெங்கடகிரி, கோட்டா, கோடம்பாக்கம் போன்ற புடவைகளைப் பற்றியெல்லாம் பெரும்பாலான பெண்களுக்குத் தெரிந்தே இருக்கிறது. ஆனால்  சென்ற வாரமே ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகளை’அறிமுகம் செய்தோமே இதைப் பற்றியும் யாருக்காவது தெரிந்திருக்க கூடும் என்ற யோசனையில் நண்பர்கள் சிலரிடத்தில் விசாரித்துப் பார்த்ததில் ஒருவருக்கும் இந்தப் புடவைகளைப் பற்றி பெரிதாக எதுவும் தெரிந்திருக்க வில்லை. எல்லோரும் ஒரு சேர சொன்ன ஒரே பதில் கூகுள் பண்ணி பார்த்தால் தெரிந்து விடும் என்பது மட்டுமே! கூகுளில் புடவையை பார்க்கலாம்; ஆனால் உடுத்த முடியாதே! சரி இனி இணையத்தை தவிர வேறெங்கும் அறிந்து கொள்ள வாய்ப்பில்லை என்று அங்கே போய் இந்தப் புடவைகளின் ஆதி அந்தம் தேடி உட்கார்ந்த இடத்திலிருந்தே  ஒரு மினி டூர் அடித்ததில் அங்கிருந்து திரும்பி வரவே விரும்பாத அளவுக்கு பலுச்சாரி புடவைகளின் முந்தானை அழகு மனதை கொள்ளை கொண்டு  தன்னுள் முடிந்து வைத்துக் கொண்டது.

slide211.jpg

இந்தத் தொடர் மூலமாக நமது காஞ்சிபுரம் பட்டுப் புடவைகளுக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருப்பதைப் போல தொடரில் விவரிக்கப்படும் அனைத்து இந்தியக் கைத்தறிப் புடவைகளுக்குமே உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பது விளங்கியது, அதோடு ஒவ்வொரு மாநிலத்திலுமே அதன் தனிப்பெருமையாக நினைவு கூறத் தக்க வகையிலான சிறப்பான நெசவு முறை ஒன்றை  நெசவாளர்கள் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதும், எத்தனையோ முறை இந்திய பாரம்பரிய நெசவுத் தொழில் நசிந்து காணமல் போகும் சிக்கலான நெருக்கடி நிலைகளில் கூட அந்த சந்ததியின் அடுத்தடுத்த தலைமுறையில் யாராவது ஒருவர் இந்த நெசவு முறைகளுக்கு மீண்டும் புத்துயிரூட்டி மீட்டெடுக்கிறார்கள் என்பதும் மிகவும் பாராட்டுதலுக்குரிய விசயம். ஆகவே அந்த நெசவாளர்களுக்கு சிறப்பு செய்யும் வகையில் விழாக்காலங்களில் புடவை வாங்க நேர்ந்தால் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறைகளாவது விலை சற்று அதிகமென்றாலும் பாரம்பரியம் மிக்க இந்தியக் கைத்தறிப் புடவை பிராண்டுகளில் ஒன்றை வாங்கியே தீருவோம் என்று உறுதியேற்பது நல்லது. சரி இனி பலுச்சாரி புடவைகளுக்கான கதையைத் தொடங்கலாமா?!

தொன்று தொட்டு நீடித்து வரும் எல்லாவற்றுக்குமே தொடக்கம் என்ற ஒன்றிருக்கும் தானே! 

இந்தியாவில் பலுச்சாரி புடவைகளின் தோற்றம்:

Murshid-Quli-Khan-bangal-navaab.jpg

18 ஆம் நூற்றாண்டில் முர்ஷித் குலி கான் எனும் பெங்கால் நவாப் ஒரு காலத்தில் டாக்காவில் செல்வாக்கான குடும்பங்களின் பாரம்பரிய நெசவாக இருந்த இந்த புகழ் பெற்ற புடவை நெசவு முறையை முதன் முதலாக முர்ஷிதாபாத்திலிருக்கும் பலுச்சார்  எனும் சின்னஞ்சிறு ஆற்றங்கரை கிராமத்திற்கு அறிமுகப்படுத்தினார். நவாப் காலத்தில் இந்த கைத்தறிப் பட்டுப் புடவைகளை அரச குடும்பத்துப் பெண்களும் ஜமீன் மற்றும் அரசாங்கத்தின் உயரதிகாரிகள் குடும்பத்துப் பெண்களும் மட்டுமே அணிந்து வந்தனர். பலுச்சார் கங்கையின் கிளை நதியான பகீரதியின் கரையிலிருந்ததால் பெருமழைக்காலங்களில் கங்கையில் சீற்றம் மிகுந்த போதெல்லாம் கிராமமும் அங்கிருந்த நெசவாளர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

தொடர்ந்த மழைச்சீற்றங்களுக்குப் பின் வேறு வழியின்றி பலுச்சாரில் இருந்து பாங்குரா மாவட்டத்தின் பிஷ்ணுபூருக்கு பலுச்சாரி புடைவைகளுக்கான நெசவுத் தறிகளும், நெசவாளர்களும் இடம் மாற நேர்ந்தது. இன்று பிஷ்ணுபூரில் இந்தப் புடவைகள் நெய்யப்பட்டாலும் கூட இவ்வகை நெசவுக்கு உயிர் தந்த தாய் கிராமமான பலுச்சாரை  மறவாமல் ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகள்’ என்றே அழைக்கப்படுகின்றன.

பிரிட்டிஷ் காலத்தைய  நசிவு:

நவாப் காலத்துக்குப் பின் ’ஜகத் மல்லா’ எனும் மன்னர் மாளவத்தை ஆண்டு கொண்டிருந்த போது ‘பலுச்சாரி கைத்தறிப் புடவைகள்’ டஸ்ஸர் சில்க்கில் நெசவு செய்யப்பட்டு இந்தியாவெங்கும் பிரசித்தி பெற்று உயர் குடும்பத்து பெண்களின் மேனிகளை அலங்கரித்து புடவை உலகில் செழித்தோங்கின. ஆனால் எல்லாம் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கம் இங்கே பரவும் வரை மட்டுமே! வெள்ளையர் ஆட்சியில் புகழ் மிக்க பலுச்சாரி புடவைகளின் பெருமை குன்றி அதன் நெசவு நுணுக்கங்கள் எல்லாம் சீந்துவாரின்றி மறக்கடிக்கப்பட்டு வெறும் சாயமேற்றும் கலையாக மட்டுமே நீடிக்கும் அளவுக்கு ஷீணித்துப் போனது.

மீண்டும் புத்துயிர் பெற்ற நெசவுக் கலை:
 
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் கிட்டதட்ட அழியும் நிலையிலிருந்த இந்த நெசவுக் கலையை மீட்டெடுத்து உயிர் கொடுத்த வகையில் பிரபல நெசவுக் கலைஞர் சுபோ தாஹூரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாளுக்கு நாள் சவலைக் குழந்தை போல் மெலிந்து கரைந்து வரும் பலுச்சாரி  நெசவுக் கலையைப் பார்த்து கவலை அடைந்த சுபோ தாஹூர் பிஷ்ணுபூரில் இருந்து அதன் திறன் வாய்ந்த தலைமை நெசவாளர் அக்‌ஷய் குமார் தாஸை தனது நெசவு மையத்துக்கு வரவழைத்து ஜக்கார்டு தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வைத்தார். இப்படித்தான் டஸ்ஸர் சில்க்கில் நெசவு செய்யப்பட்ட பலுச்சாரி நெசவு பின்நாட்களில் ஜக்கார்டு நெசவாக மாறியது. சுபோவின் தறிகளில் கற்றுக் கொண்ட நுணுக்கங்களை வைத்து பிஷ்ணுபூர் திரும்பியதும் அக்‌ஷய் கடுமையாக உழைத்து பலுச்சாரி புடவைகளுக்கு மறு வாழ்வு கொடுத்தார் என்று தான் சொல்ல வேண்டும். 

பலுச்சாரியில் மல்ல ராஜாக்களின் பெருமை:

Bishnupur_baluchari_saree.jpg

ஜக்கார்டு நெசவு முறைக்கு மாறினாலும் பலுச்சாரி புடவை நெசவில் என்றென்றும் மல்லர் குல மன்னர்களின் செல்வாக்கே மிகுந்திருந்தது எனலாம். இந்தியாவில் குறிப்பாக மாளவப் பகுதியில் மல்லர்கள் ஆட்சி வலுப்பட்டிருந்த காலங்களில் மல்ல மன்னர்கள் டெரகோட்டா எனப்படும் சுடுமண் செங்கற்களால் பெருவாரியான கோயில்களை வடிவமைத்தனர். அந்தச் சிற்ப வடிவங்கள் அனைத்தும் ‘பலுச்சாரி புடவைகளின்’பல்லு அல்லது முந்தானை பகுதிகளில் தங்க நிற ஜரிகைக் கோலங்களாகி இன்றும் கூட மல்ல ராஜாக்களின் பெருமைகளைப் பறைசாற்றுகின்றன. 

பலுச்சாரி நெசவின் சிறப்பு:

பலுச்சாரி புடவைகளைப் பொறுத்தவரை  டாக்காவிலிருந்து அறிமுகமாகும் போது டஸ்ஸர் சில்க்கில் ஜலா உத்தியைப் பயன்படுத்தி தான் நெசவு செய்யப்பட்டது. ஆனால் காலம் மாற மாற ஜக்கார்டு நெசவு நுட்பத்துக்கு மாற்றப் பட்டு அதன் அடிப்படை சிறப்புத் தன்மைகளான ’பல்லு’ அல்லது ’முந்தானைப்’ பகுதியில் இந்தியாவின் பண்டைய  இதிகாசக் கதைகள், புராணக் கதைகள், அந்த கால கட்டத்தில் ஆட்சி செய்த மன்னர்கள், மகாராணிகளின் உருவங்கள், பிரிட்டிஷ் காலத்திய கலாச்சார மாறுதல்கள்,வியாபார பண்ட மாற்றங்கள், போராட்டங்கள் போன்றவை தங்க நிற ஜரிகையில் நெசவு செய்யப் பட்டன. பலுச்சாரி புடவைகளின் தனிச் சிறப்பென்று இதைத் தான் காலம் தோறும் கலாரசிகர்கள் சொல்லிச் சொல்லி மாய்ந்து போகிறார்கள்.

silk-decorative-panel-4-closeup.jpg

பலுச்சாரி புடவைகளுக்கான பார்டர் மற்றும் முந்தானை டிஸைன்கள் அனைத்தும் பெரும்பாலும் மல்ல ராஜாக்கள் கட்டிய பெருமை வாய்ந்த கோயில்களின் சுவரோவியங்கள் மற்றும் கோபுர பொம்மைகளின் மாதிரிப் படிவங்களாகவே இருக்கின்றன. இந்தப் புடவைகளுக்கான தனிப்பெரும் சிறப்பென்றே இதைக் கொண்டாடலாம். புடவை வாங்கும் சாக்கில் மட்டுமல்ல மல்லர்களின் டெரகோட்டா கோயில் சிற்ப அழகை ரசிக்கவும் கூட நாம் மெனக்கெட்டு பிஷ்ணுப்பூருக்கு ஒரு டூர் போனாலும் தவறே இல்லை. அத்தனை அழகு பலுச்சாரி புடவைகளின் பல்லு டிஸைன். 

பலுச்சாரி புடவைகளின் பல்லு பகுதியில் நெசவு செய்யப்படும் கதைகளுக்கான சிறப்பு மோட்டிஃப்களை பிற நெசவுகளில் காண்பது அரிது. இந்த வகை மோட்டிஃப்கள் அனைத்தும் புடவையின் பார்டர் மற்றும் முந்தானை பகுதியில் சிறு பிசிறோ தடங்களோ இல்லாமல் தொடர்ச்சியாக நெசவு செய்யப்பட்டிருப்பது பிற போலியான நெசவில் இருந்து ஒரிஜினல் பலுச்சாரி நெசவை நாம் கண்டடைவதற்கான  நல்வாய்ப்பு எனலாம். 

பலுச்சாரி புடவை நெசவு முறை:

  • பட்டுக்கூடு சாகுபடி,
  • நூல் செயலாக்கம் பெறுதல்,
  • மோட்டிஃப் கள் தயாரித்தல்,
  • நெசவு செய்தல்

எனும் நான்கு முக்கியமான செயல் முறைகளைத் தாண்டித் தான் பலுச்சாரி புடவைகள் தயாராகின்றன.

தூய பட்டு நூல் தயாரிக்க முதலில் பட்டுப் புழுக்கள் வளர்க்கப்பட்டு அவற்றில் இருந்து பாரம்பரிய முறையில் பாலுச்சாரி புடவை நெசவுக்குத் தேவையான பட்டு நூல்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன. 

பின் நெசவுக்குத் தேவையான நூல் பண்டில்கள் மிருதுவாகும் பொருட்டு சோடா மற்றும் சோப் திரவத்தில் கொதிக்க வைக்கப்பட்டு வெவ்வேறு வண்ண புடவைகளுக்கேற்ற வகையில் அமிலங்களை பயன்படுத்தி சாயமேற்றப்படுகின்றன. சாயமேற்றப்பட்ட புடவைகள் கசங்காது நறுவிசாக இருக்கும் பொருட்டு நீண்ட கழிகளில் இழுத்துக் கட்டப்பட்டு நீளமான குச்சிகளால் நிரவப்பட்டு மெருகேற்றப்படுகின்றன.

பலுச்சாரி புடவைகளின் மோட்டிஃப்கள் நெசவு செய்யும் போது ஜக்கார்டு முறையில் டிஸைன்கள் முதலில் கிராப் பேப்பரில் வரையப்பட்டு பின் கார்டுகளில் பஞ்ச் செய்யப்படுகின்றன. பஞ்ச் செய்து முடிந்ததும் இந்த கார்டுகள் ஜக்கார்டு மெஷினில் தைக்கப்பட்டு மோட்டிஃகள்  சிறப்பாக நெசவு செய்யப்படுகின்றன. 

Design-baluchai.jpg

ஜக்கார்டு தறிகள் கண்டுபிடிக்கப்பட்ட பின் குறைந்த பட்சம் 5 அல்லது 6 நாட்களில் ஒரு பலுச்சாரி புடவை நெய்து முடிக்கப்படுகிறது. இல்லா விட்டால் பழைய  ’ஜல’ நெசவு முறையில் இந்த வகை முழு வேலைப்பாடமைந்த புடவைகளை நெசவு செய்ய கிட்டத்தட்ட 2, 3 மாதங்களுக்கு மேலும் கூட ஆகுமாம். ஜக்கார்டு மெஷின்கள் வந்ததும் தான் நெசவு எளிதாகியிருக்கிறது.

பலுச்சாரி கைத்தறி புடவைகளின் வகைகள்:

பலுச்சாரி புடவைகள் தற்போது மூன்று விதமாக வகைப்படுத்தப் படுகின்றன. 

  • சாதாரண பலுச்சாரி புடவைகள்: இவற்றில் சிறப்பாக எந்த விதமான வண்ணக் கலவையோ, பேட்டர்ன்களோ இல்லாமல் மிகவும் சிம்பிளாக ஒன்று அல்லது இரு நிற நூல்களைப் பயன்படுத்தி  புடவை முழுதும் நெசவு செய்யப்படுகிறது.

baluchari1.jpg

  • பலுச்சாரி மீனாகரி புடவைகள்: பலுச்சாரி புடவைகளில் தனித்து தெரியும் வண்ணம் மீனாகரி எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்து நெசவு செய்தால் அது மீனாகரி எனப்படும். இந்த வகை எம்பிராய்டரியால் புடவை தனித்து மிகப் பகட்டாக காட்சியளிக்கும், திருமணம் போன்ற வைபவங்களுக்கு மிகப் பொருத்தமானது.

baluchuri_meenakari.jpg

  • ஸ்வர்ணாச்சாரி புடவைகள்: முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி நிற ஜரிகை இழைகளால் மட்டுமே நெசவு செய்யப்படும் பலுச்சாரி வகைப் புடவைகளுக்கு ஸ்வர்ணாச்சாரி புடவைகள் என்று பெயர். இந்த வகைப் புடவைகள் மணப்பெண்களுக்கு மிகவும் பொருத்தமானவை. 

swarnachari_baluchari_saree.jpg

இன்றைய நவீன நெசவு உத்திகளின் புழக்கத்தின் பின் பலுச்சாரி நெசவில் இப்போதெல்லாம் பட்டுப்புடவைகள் மட்டுமே தயாராவதில்லை. புடவைகளுக்கு பொருத்தமாக வெளிநாட்டினரும் விரும்பி வாங்கிச் செல்லும் தரத்தில் உயர்ரகமான குஷன்கள்,  பெண்களுக்கான கலைநயமான வேலைப்பாடுகள் மிக்க ரசனையான கைப்பைகள், பட்டில் துப்பட்டாக்கல் எல்லாமும் கூட தயாராகி இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

பலுச்சாரி புடவைகளையும் கூட இணையப் பெருவெளியில் இரைந்து கிடக்கும் ஏராளமான விற்பனை தளங்களில் நம்பிக்கையான ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கிருந்து ஆர்டர் செய்து பெற்றுக் கொள்ளலாம். தேடிய வரையில்;

http://shop.gaatha.com/Baluchari  

இந்த தளத்தில் எல்லா வகை பலுச்சாரி தயாரிப்புகளும் விற்பனைக்கு காணக் கிடைக்கின்றன. 

சரி இந்த வாரம் பலுச்சாரி புடவைகளின் பெருமையை போதுமான அளவுக்கு தெரிந்து கொண்டாயிற்று. தெரிந்து கொண்டு அப்படியே விட்டு விடக் கூடாதில்லையா! கூப்பிடு தூரத்தில் தீபாவளி வந்து கொண்டிருக்கிறது, முடிந்தால் ஒரு மாறுதலுக்காக  பிஷ்ணுபூரின் பலுச்சாரி கைத்தறிப் பட்டையும் இந்த  முறை முயற்சித்துப் பார்க்கலாமே!

பலுச்சாரியைத் தொடர்ந்து அடுத்த வாரம் நாம் பார்க்கவிருப்பது மண் மணம் மாறா சிவகங்கை மாவட்டத்து  காரைக்குடி சுற்றுவட்டாரச் செட்டிநாட்டுப் பெருமை பேசும் ‘செட்டிநாடு கைத்தறிப் புடவைகள்” 

- தொடரும்

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

நகரத்தார் சமூகத்தின் கொடை செட்டி நாட்டுக் கைத்தறிப் புடவைகள்!

 

 
vidya-balan-with-family-at-a-classical-concert-1-16

செட்டிநாடு என்றதும் நம் அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது செட்டிநாட்டு உணவு வகைகள் தான். செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு முறையேனும் ருசி பார்க்காதவர் எவருமில்லை. உணவு வகைகளுக்காக மட்டுமல்ல செட்டிநாடு இன்னொரு விஷயத்துக்காகவும் பெண்களால் குறிப்பாக நடுத்தர வயதுப் பெண்களால் பெரிதும் விரும்பப் படுகிறது. அது எதற்காக என்றால் இந்தியாவின் பாரம்பரிய அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்படும் செட்டிநாட்டு கைத்தறிப் புடவைகளுக்காகத் தான். செட்டிநாட்டி கைத்தறிப் புடவைகளின் ஸ்பெஷாலிட்டி அவற்றின் அடர் வண்ணங்கள் மட்டுமல்ல பெரும்பாலும் சிறிதும் பெரிதுமாக பட்டை பட்டையான கோடுகள் அல்லது கட்டங்கள் நிறைந்த அவற்றின் டிஸைனும் தான். செட்டிநாட்டில் குறிப்பாக தேவாங்கர் இனத்தவர் தான் புடவை நெசவில் அதிகமும் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களால் நெய்யப்பட்ட புடவைகள் பல்வேறு நாடுகளையும் வியாபார நிமித்தம் சுற்றி வரும் மற்றொரு பிரிவினரான நாட்டுக் கோட்டைச் செட்டியார்கள் அல்லது நகரத்தார் மூலம் உலகெங்கும் பரவியது.

chetti2.jpg
  
செட்டிநாட்டுப் புடவைகளில் கட்டங்கள் மற்றும் கோடுகளின் வண்ணம் தான் மாறுமே தவிர பார்டரில் பெரும்பாலும் ருத்ராட்சம், கோயில் கோபுர டிஸைன், மயில், அன்னம், போன்ற மரபான டிஸைன்களே மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்பட்டிருக்கும். காஞ்சிபுரப் பட்டு நெசவில் கூட முன்பெல்லாம் சிங்கிள் ஸைட் பார்டர் மட்டும் தான் வழக்கமாக நெசவு செய்வார்கள். ஆனால் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளில் டபுள் சைட் பார்டர் நெசவு செய்யப்பட்டிருக்கும், அதோடு மற்ற புடவைகளில் தேடோ தேடென்று தேடினாலும் அத்தனை எளிதில் கிட்டாத 48 'இஞ்ச்' அகலம், 5.5 மீட்டர் நீளம் எனும் அளவிலான புடவை விஸ்தீரணம் தினசரி புடவை உடுத்தும் வழக்கமுள்ள நமக்கு முந்தைய தலமுறைப்  பெண்களுக்கு மிகவும் பிடித்துப் போனதில் ஆச்சர்யமில்லை.

koorai.jpg

இத்தகைய செட்டிநாட்டுப் புடவைகளை கூறைப்புடவைகள் என்றும் அழைக்கும் வழக்கமுண்டு. இப்படியொரு டிஸைனில் இந்த வகைப் புடவைகளை நெசவு செய்யும் எண்ணம் 250 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் காரைக்குடி மற்றும் சிவகங்கைப் பகுதியில் வாழ்ந்த செட்டிநாட்டு தேவாங்கர் சமூகத்தினருக்குத் தான் வந்ததாம். அவர்கள் எண்ணத்தில் விளைந்த கோடுகளுடனும், கட்டங்களுடனும் சுத்தமான ஜரிகையில் இணைந்த மாங்காய், மயில், அன்ன பட்சி, கோபுரம் முதலான டிஸைன்கள் அழகழகான புடவைகளாயின. 

செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் நெசவு முறை:

செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் 60s ரக நூல் கொண்டு ஊடும் பாவுமாக நெசவு செய்யப்படுகின்றன. பார்டர் டிஸைன்களுக்கு டோபி பயன்படுத்துகிறார்கள். வண்ணக் கலவை என்று எடுத்துக் கொண்டால் அடிப்படை வண்ணங்களான அரக்கு, சிவப்பு, பச்சை, அடர் நீலம் இவற்றோடு கருப்பு மற்றும் வெள்ளை வண்ண சாயங்களைப் கலந்து பயன்படுத்துகிறார்கள். இதனால் டபுள் ஷேடு கிடைக்கும். புடவையும் பளிச்சென்று கான்போரைக் கவர்ந்திழுக்கும். பெரும்பாலும் குழித்தறி அல்லது உயர்த்தப்பட்ட குழித்தறிகளில் ’ஷட்டில் நெசவு’ முறையில் இந்த வகைப் புடவைகளை நெசவு செய்கிறார்கள்.

handloom_chetti.jpg

பிற கைத்தறிப் புடவைகளிலிருந்து செட்டி நாட்டு கைத்தறிப் புடவைகளை எப்படி வேறுபடுத்தி அறிவது?

  • பிற கைத்தறிப் புடவைகளைக் காட்டிலும் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளில் நீள, அகலம் அதிகம். தொடக்கத்தில் 6 கஜம், 8 கஜம் எனும் அளவிலான பெரிய பெரிய புடவைகள் எல்லாம் கூட நெய்திருக்கிறார்கள். அளவை வைத்து நாம் ஒரிஜினல் செட்டிநாட்டு கைத்தறிப் புடவைகளைக் கண்டுபிடிக்கலாம்.
  • புடவையின் உடல் பகுதியில் எந்த விதமான கூடுதல் டிஸைன்களும் இருக்காது. அதிசயமாக நூல் புட்டாக்களுடன் பெரும்பாலும் பிளெயினாகத்தான் நெசவு செய்வார்கள். 
  • இரண்டு புறமும் அகலமான கெட்டி பார்டர் இருக்கும். 
  • பாலும் பழமும் வகைப் புடவைகளில் நீண்ட கோடுகள் மற்றும் கட்டங்கள் இடம் பெறும்.

settinad.jpg

ஒரிஜினல் செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகள் எங்கெல்லாம் கிடைக்கின்றன?

இந்தியாவிலிருக்கும் அனைத்து பாரம்பரிய இந்தியக் கைத்தறிப் புடவைகளின் நெசவையும் மீட்டெடுக்கும் முயற்சியிலுள்ளது மத்திய அரசு, தரம் மற்றும் நெசவு முறைகளில் மத்திய அரசின் பரிசோதனைகளில் வெற்றி பெற்ற பிரபல இந்திய கைத்தறிப் புடவைகள் அனைத்தும் தற்போது பெரிய ஜவுளிக்கடைகள் அனைத்திலும் விற்பனைக்கு கிடைக்கின்றன. சென்னையில் நந்தன அண்ணாசாலையில் உள்ள "காட்டேஜ் எம்போரியம், கோவையில் பி.எஸ்.ஆர் சில்க்ஸ், காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க்ஸ்" போன்ற இடங்களில் மத்திய அரசால் ஒரிஜினல் செட்டிநாடு தறி பிராண்ட் முத்திரையிடப்பட்ட கைத்தறிப் புடவைகள் கிடைக்கும்.

செட்டிநாட்டுப் புடவைகள் பிற கைத்தறிப் புடவைகளைக் காட்டிலும் அளவில் பெரிதாக இருப்பதைக் கண்ட என்.ஐ.எஃப்.டி பேராசிரியர் குழுவினர் 1920 ஆண்டு நெசவு செய்யப்பட்ட 40s நூல் ரகம் கொண்ட புடவையை ஆய்வு செய்து தற்போதைய 60s ரக செட்டிநாட்டுக் கைத்தறிப் புடவைகளை கண்டாங்கி சேலைகளின் மாற்று வடிவம் என்று கூறுகின்றனர். 

செட்டிநாட்டுத் தறியில் அடிப்படை நிறங்களான பச்சை, அடர் நீலம், மஞ்சள், ஆரஞ்சு, அரக்கு, மஸ்டர்டு ஊதா, போன்ற அடர் வண்ணக்கலவைகளில் உருவான சில தூய கைத்தறிப் புடவைகளின் விடியோ காட்சியை இங்கு காணலாம். இந்தப் புடவைகள் அனைத்துமே அன்றாடப் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் எளிமையானதாகவே உள்ளன.

’பாலும் பழமும்’ திரைப்படம் பலருக்குத் தெரியுமோ இல்லையோ ஆனால் நிச்சயம் செட்டிநாட்டுப் பாலும் பழமும் வகைப் புடவைகளைத் தெரிந்திருக்கும். திருமண விழாக்களில் வயதில் மூத்த பெண்களின் ஏகோபித்த சாய்ஸ் இந்தப் பாலும் பழமும் புடவையே! இந்த வகைப் புடவைகளில் பொடிக்கட்டம், சிறிய கட்டம், பெரிய கட்டம் என்று அவற்றின் அளவு தான் மாறுபடுமே தவிர எல்லா வண்ணப் புடவைகளிலும் கட்டங்கள் தவறாது இடம் பெறும். இந்த வகைப் புடவைகளுக்கான விடியோவைக் காண கீழுள்ள லிங்கை அழுத்தவும். 

 

தமிழ்நாட்டில் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் உரியதாக பிரத்யேகமாக புடவை உடுத்தும் ஸ்டைல் இருப்பது எல்லோருக்கும் தெரியும். அந்த வரிசையில் செட்டிநாட்டு ஸ்டைல் என்பது பின் கொசுவம் வைத்து புடவை கட்டிக் கொள்வது. இன்றைய தலைமுறையினரில் வயதான பெண்களைத் தவிர பிறர் அப்படி பின் கொசுவம் வைத்து உடுத்துவதில்லை. செட்டிநாட்டுப் பின் கொசுவம் பாணியில் புடவை உடுத்துவது எப்படி என்று கீழுள்ள விடியோவில் இருக்கும் பெண்மணி விளக்குகிறார். பள்ளிகளில் மாறுவேடப் போட்டிகளில் பங்கு பெறும் சிறுமிகளுக்கு இந்த விடியோ பயன்படலாம்.

அம்மாக்களுக்குப் பிடித்த செட்டிநாட்டுப் புடவைகளைப் பற்றி பார்த்தாகி விட்டது, இனி அடுத்த வாரம் மத்தியப் பிரதேசத்தின் ”சந்தேரி கைத்தறிப் புடவை”களைப் பற்றி பார்க்கலாம்.

தொடரும்...

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

சந்தேரி கைத்தறிப் பட்டுப்புடவைகள்!

 

 
black_chanderi

முன்னர் பார்த்த இந்தியக் கைத்தறிப் புடவைகள் வரிசையில் சந்தேரி என்பதும் ஊரின் பெயர் தான். இந்த ஊரை உருவாக்கியதாக அடையாளம் காட்டப் படுபவர் நமது மகாபாரத வில்லன் சிசுபாலன். விதர்ப்ப தேசத்து ருக்மிணியைத் திருமணம் செய்து கொள்ள ஸ்ரீ கிருஷ்ணருடன் போட்டியிட்டு சுதர்சன சக்கரத்தால் சிரசு அறுபட்டு வீழும் சிசுபாலனை மகாபாரதம் பார்த்தவர்கள் யாரும் அத்தனை சீக்கிரம் மறந்து விட முடியாது. ருக்மிணியின் அண்ணண் ருக்மியின் அத்யந்த நண்பன் இந்த சிசுபாலன். இந்த சிசுபாலன் உண்டாக்கிய நகரமாகத்தான் மக்கள் இப்போதும் சந்தேரியை நினைவு கூர்கிறார்கள்.
 
வேதகால சந்தேரிக்கும் இப்போதிருக்கும் சந்தேரிக்கும் தோற்றத்தில் வித்யாசம் இருக்கலாம். ஆனால் இன்றும் அங்கே கோட்டைகளுக்கும், கொத்தளங்களுக்கும் பஞ்சமேயில்லை. விந்திய மலைக்கூட்டங்களுக்கு இடையே மத்தியப்பிரதேசத்தின் மாள்வா மற்றும் பந்தேல்கண்டுக்கு நடுவே சந்தேரி அமைந்திருக்கும் நிலப்பரப்பில் இயற்கை எழில் கொஞ்சுகிறது. இங்கே கி.பி. 2 மற்றும் 7 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தான் இன்றைய பிரசித்தி பெற்ற சந்தேரி கைத்தறி நெசவு கண்டறியப்பட்டு மத்திய இந்தியாவில் வேரூன்றியது. 11 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் முதல் மாள்வா, பந்தேல்கண்ட், குஜராத்தின் தென்பகுதி  உள்ளிட்ட கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல நகரங்களின் முக்கிய வியாபாரப் கேந்திரமாக சந்தேரியும் வியாபார பண்டமாற்றாக சந்தேரி நெசவுப் பொருட்களும் சிறப்புற்று  இருந்தன.

chanderriiii_cotton.jpg

முகலாயர் காலத்தில் சந்தேரி நெசவுத் தொழில்நுட்பம் அதன் உச்ச கட்ட வெற்றியை அடைந்தது. மாள்வா சுல்தான்களும், பந்தேல்கண்ட் ராஜபுத்திர ராஜாக்களும் சந்தேரி நெசவின் மீது அபிரிமிதமான விருப்பத்தைக் கொண்டிருந்தனர். முகலாயர்களைப் போலவே இவர்களும் சந்தேரி நெசவை பேணி வளர்த்தனர். ஆனால் பிற இந்தியக் கைத்தறி நெசவுக் கலைகளைப் போலவே சந்தேரி நெசவும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தின் பின் படிப்படியாக நசியத் தொடங்கியது.
 
இந்திய சுதந்திரத்தின் பின் கடந்து போன அறுபத்து சொச்ச ஆண்டுகளில் மிகப் பெரும் ஜவுளி அதிபர்கள் மற்றும் மாஸ்டர் நெசவாளர்கள் என்று அடையாளம் காணப்படுபவர்கள் மட்டுமே இந்த வகை நெசவுத் தொழிலில் அதிகம் சம்பாதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள். ஆனால் அங்கிருக்கும் நெசவாளர்களின் சுபிட்சம் மட்டும் சொல்லிக்கொள்ளும் படியாக விசேஷமாக இல்லை குடிசைத் தொழிலாக சந்தேரி நெசவு செய்பவர்களது நிலை மிக, மிக வறுமையில் தான் இருந்திருக்கிறது. சமீபத்தில் தான் நமது மத்திய அரசு சார்பில் பாரதப் பிரதமர் மோடி ’இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்’ எனும் அமைப்பைத் தொடங்கி இந்தியா முழுவதும் மீட்பர்கள் இன்றி பரவிக் கிடக்கும் இந்திய பாரம்பரியக் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சியைத் தொடங்கி இருக்கிறார். அரசு அமைப்புகள் சிறப்பு மிக்க சந்தேரி நெசவின் பெருமையை உலகம் முழுக்க எடுத்துச் செல்ல அந்தப் பகுதி சிறு நெசவாளர்களை ஒருங்கிணைத்து ”சந்தேரியான்” எனும் நெசவாளர் கூட்டமைப்பு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இந்த தளத்தில் எக்ஸ்க்ளூஸிவான சந்தேரி கைத்தறி மற்றும் பட்டுப் புடவைகள், சல்வார் மெட்டீரியல்கள், பாந்தமான துப்பாட்டக்கள் முதலியவற்றை நுகர்வோர் பார்வையிட்டு வாங்கும் வசதி உண்டு.

Cream_Pure_Chanderi_Handloom_Silk_Saree_

சந்தேரி கைத்தறியில் மூன்று விதமாக புடவைகள் நெசவு செய்கிறார்கள்;

சந்தேரி காட்டன் புடவைகள்:

chanderi_normal_cotton.jpg

இந்த விதமான புடவைகள் வீட்டில் இருக்கும் போது உடுத்திக் கொள்ள ஏற்றது.

சந்தேரி காட்டன் பட்டுப்புடவைகள்:
இவை அலுவலகப் பயன்பாட்டுக்கு, நண்பர்களை, விருந்தினர்கள் சந்திப்புக்குச் செல்கையில் உடுத்திக் கொள்ள ஏற்றது.

சந்தேரிப் பட்டுப் புடவைகள்:

onion_pink_chanderi.JPG

மிக்கியமான விசேஷ நாட்கள், திருமண விழாக்கள், திருவிழா நாட்களுக்கு  ஏற்றது இந்த வகைப் புடவைகள்.

சந்தேரிப் புடவைகள் நெசவு செய்யும் முறை:

Craftsmen.jpg

சந்தேரிப் புடவைகள் வார்ஃப் மற்றும் வெஃப்ட் தனித்தனியாக நெசவு செய்யப்பட்டு உடல் பகுதியில் ஸ்பெஷல் மோட்டிஃப்கள் தனியாக இணைக்கப்படுகின்றன. பெரும்பாலும் மயில், காசு வடிவம், பாய் பின்னல் வடிவம், பூக்கள், கணித வடிவங்கள் போன்றவையே புட்டாக்களாக மாறி புடவையின் பல்லு பகுதியில் இடம் பெறுகின்றன. மோட்டிஃப்கள் பட்டுச் ஜரிகை அல்லது வண்ண நூல் ஜரிகை இழைகளால் ஸ்பெஷலாக நெசவு செய்யப் படுவதால் அவை சந்தேரிப் புடவைகளின் தனி அடையாளங்களாக பேசப்படுகின்றன.

Saari-buti.jpg

இன்றைக்கு நமக்கு காணக் கிடைக்கும் சந்தேரி நெசவு முறையானது கி.பி 13 நூற்றாண்டில் பின்பற்றப் பட்டு வந்த சந்தேரி நெசவு முறையே. அதற்கும் முந்தைய சந்தேரி நெசவு முறை பற்றி அதிகத் தகவல்கள் இல்லை. மேலும் சந்தேரியில் முஸ்லிம் நெசவாளர்கள் தான் இந்த வகை நெசவை அறிமுகப் படுத்தினர். பின்னாட்களில் ஜான்ஸியில் இருந்து சந்தேரிக்குக் குடி பெயர்ந்த கோஷ்டி இனத்தவர்கள் இந்த நெசவு முறையைக் கற்றுக் கொண்டு நெசவில் ஈடுபட ஆரம்பித்தனர். இவர்களை அடுத்து முகலாய மன்னர்கள் சந்தேரி நெசவை தங்களது செல்லப் பிள்ளையாக தத்தெடுத்து போற்றி வளர்த்தனர். அவர்களது காலத்தில் சந்தேரி முக்கியமான வியாபார கேந்திரமாய் இருந்தது. 

சந்தேரி கைத்தறிப் புடவைகளை எப்படி நெசவு செய்கிறார்கள் என்பதை இந்த விடியோ இணைப்பு மூலமும் காணலாம்.

சந்தேரி நெசவாளர்களின் முன்னேற்றதுக்காக உருவாக்கப்பட்ட சந்தேரியான் அமைப்பின் செயல்பாட்டு முறையை இந்த விடியோ இணைப்பில் காணலாம். 

சந்தேரி கைத்தறியில் பட்டுப் புடவைகளுக்கான விடியோ இணைப்பு;

சந்தேரி கைத்தறிப் புடவைகளுக்கான விடியோ இணைப்பு;

 

ஒரிஜினல் சந்தேரி கைத்தறி மற்றும் பட்டுப் புடவைகளை வாங்க இந்த இணைய தளங்களை அணுகலாம். 

https://www.chanderiyaan.net/chanderi-saree.html

http://shop.gaatha.com/index.php?route=product/product&product_id=7610

சந்தேரிப் புடவைகள் பராமரிப்பு முறை:

vidhya_on_chanderiiii.jpg

உலர் சலவை செய்வதே நல்லது. அது காஸ்ட்லி என்று நினைப்பவர்கள் பட்டுப் புடவைகளை எப்படி வீட்டிலேயே மைல்ட் ஷாம்பூ உபயோகித்து தூய்மை செய்கிறோமோ அப்படியே இந்த வகைப் புடவைகளையும் பராமரிக்கலாம். 

சந்தேரி நெசவாளர்களை தேடிச் சென்று ஊக்குவிக்கும் அமீர்கான் மற்றும் கரீனா கபூர்:

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் சந்தேரி கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க அவர்களைத் தேடிச் சென்று உரையாடிய வீடியோ தொகுப்புகளைக் காண கீழ்க்காணும் 5 இணைப்புகளைக் கிளிக்குங்கள்; நம் ஊரிலும் சூப்பர் ஸ்டார்களும், ஸ்டாரிணிகளும் ஜொலித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களும் இப்படி நலிந்த நெசவாளர்களைச் சந்தித்து அவர்களது கஷ்ட நஷ்டங்களைக் கேட்டு உரையாடி,  ஊக்குவிக்கலாமே!

 

 

 

 

இந்திய பாரம்பரியக் கைத்தறிப் புடவைகளில் எல்லா வகைகளுமே ஒன்றுக்கொன்று சளைத்தவை இல்லை. எந்தப் புடவைகளைப் பற்றி இணையத்தில் ஆராயப் புறப்பட்டாலும் அழகழகான புடவைகள் கண்காட்சியாய் விரிந்து கண்களுக்கு விருந்தளிக்கின்றனவே தவிர புடவைகளின் தோற்றம், நெசவு முறை, நெசவாளர் வாழ்க்கை முறை, போன்றவற்றைப் பற்றியெல்லாம் விரிவான தகவல்களை அறிய முடியவில்லை. இந்தத் துறையில் இது மிகப்பெரும் குறை. எதிர் வரும் நாட்களில் இந்தக் குறை நிவர்த்தி செய்யப்பட்டால் இந்தியக் பெண்கள் மட்டுமல்ல உலகம் முழுக்க புடவை உடுத்திக் கொள்ள ஆசைப்படும் பெண்களிடையே நமது கைத்தறிப் புடவைகள் மீதான மோகத்தை இன்னும் அதிகரிக்கலாம்.

இதுவரை பாலராமபுரம், மங்கலகிரி, பலுச்சாரி, செட்டிநாடு இன்றைய சந்தேரி வரை ஐந்து வகையான கைத்தறிப் புடவை பிராண்டுகள் பற்றி இயன்ற வகையில் சற்று விளக்கமாகவே பார்த்திருக்கிறோம். இந்தப் புடவைத் தொடர் கட்டுரையை வாசிக்கும் நபர்கள் இந்த வகைப் புடவைகளைப் பற்றி தங்களுக்குத் தெரிந்த சுவாரஸ்யமான விவரங்கள், செய்திகள் ஏதேனும் இருப்பின் தங்களது கருத்துக்களை தினமணி.காமில் பகிர்ந்து கொள்ளலாம். 

அடுத்த வாரம்  பனாரஸ் கட்  வொர்க் கைத்தறிப் புடவைகளைப் பற்றி விரிவாகக் காணலாம். 

தொடரும்...

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

பனாரஸ் பட்டுக் கைத்தறிப் புடவைகள்!

 

 
vasudha_banarasi

'காசிப்பட்டு' என்ற பெயரில் தொன்று தொட்டு  தென்னிந்தியர்களுக்கு நன்கு அறிமுகமானவை தான் பனாரஸ் அல்லது பெனாரஸ் பட்டுப்புடவைகள்  . காசி மாநகரம் வேத காலத்திலும், வரலாற்றுக்காலத்திலும் வாரணாசி என்று  வழங்கி வந்தது. வாரணாசியில்  உற்பத்தியாகி இந்தியா முழுவதும் பிரபல்யமான இந்தப் பட்டுப் புடவைகள் பிற இந்திய பகுதிகளில் நெசவு செய்யப்படும் பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமான எடை கொண்டவை, இந்த அதிக எடைக்கு காரணம் இந்த வகைப் புடவைகளில் பிரத்யேகமாகச் செய்யப்படும் நுட்பமான ’புரோகேட் ஜரிகை’ போன்றகலைநயமிக்க வேலைப்பாடுகள் தான். இந்த வகைப் பட்டுப் புடவைகளில் சிறப்புறச் செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகை நூல் வேலைப்பாடுகளுக்காக இவை பெரிதும் விரும்பப்பட்டன.

பனாரஸ் புடவைகளின் தோற்றம்:

Banaras-old-image.jpg

பனாரஸின் புராதனத் தன்மையை அறிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் ரிக் வேத காலத்துக்குச் சென்று ராமாயணம், மகாபாரத காலத்த்தையெல்லாம் அலசிப் பின்னர் புத்தர் வாழ்ந்த வரலாற்றுக்காலத்துக்கு வர வேண்டும். வாரணாசி  ஆரம்ப காலத்தில் அதன் தூய பருத்தி ஆடைகளுக்காகவும் பின்னர் பட்டாடைகளுக்காகவும் சிறப்புற்ற நகரமாயிருந்தது. அப்போதெல்லாம் பனாரஸ் அரசகுடும்பத்தினரின் பிரத்யேக ஆடைகள் நெசவில் பெரும்பங்கு வகித்தது. அன்றைய நாட்களில் இந்த வகை ஆடைகள் 'ஹிரண்ய வஸ்திரம்' என்றும் 'புதம்பர் வஸ்திரம்' என்ற பெயரிலும் புழக்கத்தில்இருந்தன. புத்தர் துறவறம் மேற்கொள்ள முடிவு செய்த போது அவர் வாரணாசியின் இளவரசராக இருந்தார் என்று புத்த ஜாதகக் கதைகளில் குறிப்புகள் இருக்கின்றனவாம். துறவறத்தின் போது ஆடம்பரத்தை விட்டொழிக்கும் முயற்சியில் அவர் தமது காசிப் பட்டாடைகளையும் அப்புறப் படுத்தச் சொன்னதாக அந்தக் கதைகள் கூறுகின்றன. புத்தரின் காலத்தில் காசியின் சிறப்புக்குரிய  மென்மையான பருத்தி மட்டும் பட்டாடைகள் முக்கியமான வணிகப் பொருட்களாக இந்தியா முழுதும் பண்டமாற்று செய்யப்பட்டனவாம். அதுமட்டுமல்ல புத்தர் மோட்சமடைந்த நேரத்தில் காசியில் நெசவுசெய்த தூய பருத்தி ஆடை தான் அவரது உடல் மீது போர்த்தப் பட்டது என்றும் கூட சில பௌத்தக் கதைகள் கூறப்படுகின்றன.

mugal-wearing-brocade.jpg

அந்தக் காலத்தில் ஜரி மற்றும் புரோகேட் நெசவு வேலைகளில் குஜராத் நெசவாளர்கள் பெரும் பெயர் பெற்றவர்களாயிருந்தனர். பதினேழாம் நூற்றாண்டில் குறிப்பாகச் சொல்வதென்றால் கி.பி.1603 ஆண்டில் குஜராத்தில் பெரும் பஞ்சம் வந்த காலகட்டத்தில் இந்த நெசவாளர்கள் அனைவரும் பஞ்சம் பிழைக்க குஜராத்தில் இருந்து காசிக்கு இடம் பெயர்ந்தனராம். புது இடமும், அந்த இடத்தின் வளமையும் நெசவாளர்களுக்கு புது உற்சாகத்தை தந்ததோ என்னவோ இவர்களின் வருகைக்குப் பின்னர் பனாரஸ் பட்டு நெசவுத் தறிகள் காசி மன்னர் குடும்பத்தின் அரசாங்க அலுவல் ஆடைகள் தயாராகும் மையங்களாகின. புத்தர் காலத்திலிருந்து பனாரஸ் பட்டின் சிறப்பை உலகறிந்தாலும் முகலாய மன்னர்கள் காலத்தில் சீனாவிலிருந்து இந்தியாவுக்கு அறிமுகமான புரோகெட் நெசவு முறைகளின் வருகைக்குப் பின் பனாரஸ் புரோகேட் முறையுடன் இணைந்து நெசவு செய்யப்பட்டு தனிப்பெரும் சிறப்புற்றது. அக்பர் காலத்தில் பனாரஸ் மோகம் மேலும் வலுவடைந்து இந்தியா முழுதும் பனாரஸ் கைத்தறிப் பட்டாடைகளுக்கான வரவேற்பு அமோகமாயிருந்தது.

Banarasi-saree-patterns.jpg

காசியின் தனிச்சிறப்பு மிக்க பனாரஸ் கைத்தறிப் பட்டுப் புடவைகள் இந்தியாவின் பிற பிராந்திய நெசவுத் தொழில்கள் நசிந்த போதும் கூட சிறிதும் நலிவற்று இன்றளவிலும் பொலிவுடன் விளங்க அதன் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படும் பிரத்யேக வண்ண வேறுபாடுகள், பார்டர் டிஸைன்கள், மோட்டிஃப்கள், போன்றவற்றில் கையாளப்படும் கலநயமிக்க வேலைப்பாடுகளும் ஒரு காரணம். உதாரணமாக 

  • கி.பி. 350 லிருந்து 500 வரை பனாரஸ் கைத்தறி பட்டுப் புடவை ஆடை நெசவில் பூக்கள், வளர்ப்பு விலங்கினச் சித்தரிப்புகள், மற்றும் பறவைகளின் உருவங்கள் போன்ற டிஸைன்கள் பிரபலமாகப்பயன்படுத்தப்பட்டன.
  • 13 ஆம் நூற்றாண்டில் புடிதார் டிஸைன்களுக்கு பெருமளவில் வரவேற்பு இருந்தது.
  • 16 ஆம் நூற்றாண்டில் முகலாயர் வருகைக்குப் பின் பூக்களில் இஸ்லாமிக் பேட்டர்ன்ஸ் என்று சொல்லப்படும் 'ஜலி அல்லது ஜாலா' நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படும் டிஸைன்களுக்குமக்களிடையே மிகுந்த டிமாண்ட் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்த வகைத் தொழில்நுட்பம் இந்தியாவுக்குப் புதிது எனவே அப்போதைய ஃபேஷன் உலகில் அப்போது இது ரசனைக்குரிய மறுமலர்ச்சியாக கொண்டாடப் பட்டது.
  • அதைத் தொடர்ந்து 19 ஆம் நூற்றாண்டில் இந்திய டிஸைன்கள் வெகு விரைவில் விக்டோரியன் ஸ்டைல் வால் பேப்பர்கள் மற்றும் கணித ஜியோமெட்ரிக் பேட்டர்ன்களில் உருவாக்கப்படும் முகலாய 'லாட்டிஸ் வேலைப்பாடுகளுடன்' ஒத்துப் போய் இந்தோ மொகல் டிரான்ஸ் டிஸைன்கள் உருவாகி ஜவுளிச் சந்தையில் பனாரஸ் கைத்தறிப் பட்டின் மவுசு கூடிப் போனது.

பனாரஸ் கைத்தறிப் புடவைகளின் வகைகள்:

வாரணாசி கைத்தறி நெசவில்;

  • பனாரஸி புரோக்கேட்

banaras_pink.jpg

  •  
  •   புரோகேட்

brocade_banaras.jpg

  • பனாரஸ் பட்டு ஜம்தானி

jute-silk-saree-FT50_a_02_l.jpg

  • ஜாங்லா பட்டுப் புடவை

banaras_jangla_silk_sari.jpg

  • ஜமவார் தாஞ்ஞோய் பட்டு

banarasi-2_thanzhoi.jpg

  • டிஷ்யூ பட்டு

banarasi_tissue_sari.jpg

  • கட் வொர்க் பட்டுப் புடவைகள்
  •  
  • Golden_Pure_Banaras_Dupion_Cutwork_Silk_
  • புடிதார் பட்டுப் புடவைகள்

முதலிய எட்டு வெரைட்டிகளில் பனாரஸ் பட்டுக் கைத்தறிப் புடவைகள் கிடைக்கின்றன. இந்த வகைக்கொன்றான வெரைட்டிகளை ஒருங்கிணைக்கும் பொதுவான ஒரே அம்சம் பனாரஸ் கைத்தறிப் பட்டு. பனாரஸ் கைத்தறி நெசவில் மேற்கண்ட விதம் விதமான மாறுபட்ட நெசவுத் தொழில்நுட்பங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த முடிவதால் தான் இந்தப் புடைவகள் நசிவின்றி அன்றிலிருந்து இன்று வரை சிறப்புற விளங்குகின்றன.

பனாரஸ் நெசவுத் தொழில்நுட்பம்:

 

 

பனாரஸி புரோகேட் நெசவில் இரண்டு அடுக்காக மடிக்கப்பட்ட மல்பெரி பட்டு நூல் பயன்படுத்தப் படுகிறது. உடல் பகுதிக்கு பனாரஸ் சில்க் ஃபேப்ரிக்கும் ஜரிகை மற்றும் மோட்டிஃப் டிஸைன்களுக்கு வெள்ளி மற்றும் தங்க நூல் வேலைப்பாடுகளும் நெசவு செய்யப்படுகின்றன.

பனாரஸ் பட்டுப் புடவைகள் வழக்கமான பாரம்பரிய கைத்தறிக் கூடங்களில் நெசவு செய்யப்பட்டாலும் மோடிஃப்கள் ஜக்கார்டு அல்லது ஜலா மற்றும் பாகியா தறிகளில் நெசவு செய்யப்படுவது தான் வழக்கம். இரண்டு அடுக்கு மல்பெரி துணியில் சாட்டின் ஃபேப்ரிக் பயன்படுத்தப்பட்டு வார்ஃப் அண்டு வெஃப்ட் நெசவு செய்யப்பட்டு மோட்டிஃப் மற்றும் சிறப்பு பல்லு, புட்டா டிஸைன்களுக்கு தங்கம் மற்றூம் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றில் பனாரஸ் கட் வொர்க் புடவைகள் சற்று வித்யாசமானவை. மோட்டிஃப்கள் மற்றும் புட்டா டிஸைன்கள் தெளிவாக பகட்டாகத் தெரியும் பொருட்டு இவ்வகைப் புடவைகளின் உடல் பகுதி சற்று மெல்லியதாகவும் டிரான்ஸ்பரண்ட்டாகவும் நெசவு செய்யப்படுகிறது. 

பனாரஸ் நெசவுத் தொழில் நுட்பத்தில் ஒரு புடவை தயாராக குறைந்த பட்சம் 15 நாட்கள் முதல் 1 முழு மாதம் தேவைப்படும், அதிலும் ஜரிகை வேலைப்பாடுகள் மிகுந்த கலை நயமிக்க புடவைகள் வேண்டுமெனில் 3 மாதங்கள் வரையிலான  அதிக அவகாசம் தேவைப்படும்.

ஒரிஜினல் பனாரஸ் படுப்புடவைகளை எப்படி அடையாளம் காண்பது?

 

 

  • பனாரஸ் புரோகேட் பட்டுப் புடவைகளில் தூய கனமான தங்கம் மற்றும் வெள்ளி நூல்கள் பயன்படுத்தப் படுவதால் இவ்வகைப் புடவைகள் பிற புடவைகளைக் காட்டிலும் கனமானதாக இருக்கும். 
  • மேலும் இரண்டு அடுக்கு நெசவில் அடிப்படை கிரவுண்டு  ஃபேப்ரிக்காக சாட்டின் மெட்டீரியல் மட்டுமே பயன்படுத்தப் படும்.
  • சாட்டின் மெட்டீரியல் ஃபேப்ரிக்கில் மெட்டாலிக் விஷுவல் எபெக்டுகள் தனித்துத் தெரியும் வண்ணம் நெசவு செய்யப்படுகின்றன.
  • கனமான மெட்டாலிக் யார்ன் மற்றும் கூட்டு நெசவு தொழில்நுட்பத்தால் இவ்வகைப் புடவைகளில் கனம் அதிகமிருக்கும். 

மேற்குறிப்பிட்ட காரணிகளை வைத்து மிக எளிதாக  பனாரஸ் பட்டுப் புடவைகளை அடையாளம் காணலாம்.

பனாரஸ் புடவைகள் எங்கு கிடைக்கும்?

தமிழ்நாட்டில் பிரபலமான பெரிய ஜவுளிக் கடைகள் அனைத்திலும் பனாரஸ் புடவைகள் கிடைக்கக் கூடும். கோ ஆஃப்டெக்ஸ், காதி, சர்வோதயா, வள்ளுவர் கோட்டத்தில் குறிப்பிட்ட இடைவெளிகளில் நடத்தப் படும் இந்தியக் கைத்தறிப் புடவைகளுக்கான கண்காட்சிகள் போன்ற இடங்களில் எல்லாம் தூய பனாரஸ் புடவைகளைத் தேடிக் கண்டடையலாம்.

அடுத்த வாரம் எந்தக் கைத்தறிப் புடவை?

தீபாவளியை வெகு நெருக்கத்தில் வைத்துக் கொண்டு வேறு மாநிலப் புடவைகளை எல்லாம் தேடிப் போய் வாங்குவதைக் காட்டிலும் நம்ம ஊர் காஞ்சிபுரம் பட்டுக் கைத்தறிப் புடவைகளை நிதானமாக கடை கடையாக ஏறி இறங்கி தேடி வாங்குவது எளிதானது இல்லையா? அதனால் இந்த வாரம் நமது தமிழகத்தின் ஈடில்லா பெருமை மிகு காஞ்சிபுரம் (பேச்சுவழக்கில் காஞ்சிவரம்) பட்டுப் புடவைகளைப் பற்றித் தான் அலசப் போகிறோம். பொங்கல் பண்டிகையை விட இங்கே தீபாவளிக்கு பட்டுப்புடவை வாங்குவோரின் எண்ணிக்கை தான் அதிகம் என்பதை யாராவது மறுக்க முடியுமா?
அதனால்  அடுத்த வாரம் ”காஞ்சிவரம்” போகலாம் தயாராக இருங்கள்.

தொடரும்...

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

காஞ்சிவரம் பட்டுப் புடவைகள்!

 

 
Kanchipuram-Sari_trisha

காஞ்சிபுரம் சென்னையை அடுத்து 70 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பட்டு நெசவு தவிர இயல்பில் இது ஒரு கோயில் நகரம், சோழர் காலத்திலும் அவர்களுக்குப் பின்னான பல்லவர் காலத்திலும் கட்டப்பட்ட கலைநயம் மிக்க பல கோயில்கள் இந்நகர் முழுதும் நிறைந்திருக்கின்றன. காஞ்சி கைலாசநாதர் கோயில் மற்றும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் இரண்டுமே பல்லவர் கட்டிடக் கலைக்கு மகத்தான சான்றுகள். அது தவிர பொற்கூரை வேயப்பட்ட காஞ்சி காமாட்சியம்மன் தரிசனம் பெறாதோர் தமிழ்நாட்டில் எவருளர்? இங்குள்ள கோயில்களை ஒருமுறை கூட வாழ்நாளில் காணும் வாய்ப்பில்லாதோர் கூட அங்குள்ள சிலா ரூபங்கள், கோபுர வடிவங்கள், கடவுள் பிரதிமைகளை இங்கிருந்து உலகம் முழுமைக்கும் விற்பனை செய்யப்படும் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளின் ஜரிகைக் கரைகள் மற்றும் முந்தானை அலங்காரத்தில் கண்டு ரசிக்க முடியும். அத்தனை சிறப்பாக இங்குள்ள நெசவாளர்கள் கோயில் சிற்பங்களின் மகத்துவமிக்க அடையாளங்களை தங்களது நேர்த்தியான நெசவில் பாந்தமாகப் பதிவு செய்திருக்கின்றனர். இங்கே நெசவு செய்யப் படும் 90 சதவிகிதப் புடவைகளும் பட்டுப் புடவைகள் மட்டும் தான். வெறும் 10 சதம் தான் பிற புடவைகளின் நெசவுக்கு ஒதுக்கப்படுகிறது.

தமிழகத்தின் செல்லப் புடவை! 

nalli-silks_ad.jpg

காஞ்சீவரம் பட்டைப் பற்றி புதிதாக நாம் வேறென்ன சொல்லி விட முடியும்! பிறந்து தொட்டிலில் போடப்படும் குழந்தைகள் முதற்கொண்டு ஆண்டு அனுபவித்துப் பழுத்துப் பழமாகி கிழமானாலும் நம்மை விடாது பின் தொடரும் மோகம் அல்லவா இந்த காஞ்சிப்பட்டு. தமிழகத்தின் செல்லப் புடவை இது! ஒவ்வொரு தீபாவளிக்கும் வாங்கிக் கொள்ள முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் தலை தீபாவளிக்கோ, தலைப் பொங்கலுக்கோ மட்டுமாவது பட்டு வாங்கிக் கட்டாதோர் யார்! பட்டில் அப்படி என்ன விசேஷம் என்று யாரும் கேட்டு விட முடியாது. தமிழ் நாட்டைப் பொருத்த வரை பட்டு வாங்கி உடுத்துக் கொள்வது என்பது வெறும் அந்தஸ்து மற்றும் பகட்டுக்கான வெளிப்பாடு மட்டுமில்லை அது கலாச்சார ரீதியாக அவரவர் ரசனை சார்ந்த வெளிப்பாடு என்றும் சொல்லலாம். அயல் மாநிலங்களை விட்டு விடலாம் நமது தமிழகத்தில் மட்டுமே ஆரணி, தர்மாவரம், திருபுவனம், சின்னாளம் பட்டி, என்று பல இடங்களில் பட்டு நெசவு நடைபெறுகிறது என்றாலும் காஞ்சிப்பட்டின் தனித்தன்மை தான் பெரிதாகப் பேசப்படுகிறது. 

காஞ்சீவரம் நெசவுத் தொழில்நுட்பம்:

காஞ்சீவரம் பட்டுப் புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் இரண்டு பேர் தறியில் அமர வேண்டும். இந்த நெசவுக்கு மூன்று விதமான விண் குழித்தறிகள் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தறிகளில் பட்டுப் புடவைகள் ’அடை’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுகின்றன. அதாவது உடல் பகுதி தனியாகவும், பல்லு எனப்படும் முந்தானைப் பகுதி தனியாகவும், பார்டர் ஜரிகைப் பகுதி தனியாகவும் முன்று விதமாக தனித் தனியாக நெசவு செய்யப்படுகிறது. காஞ்சீவரம் பட்டு நெசவில் தூய மல்பெரி பட்டு நூல் மற்றும் தூய தங்க, வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப்படுவதால் இந்திய நெசவுக் கூடங்களில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு விதமான வகை வகையான பட்டுப் புடவைகளில் காஞ்சிப் பட்டு தான் பிரதானமாக முதல் இடம் பிடித்திருக்கிறது.

kanchipuram-bridal-sareessss.jpg

உடல் முழுதும் சரிகையில் இழைக்கப்பட்டு நெசவு செய்யப் படும் தூய காஞ்சிப் பட்டுப்புடவை ஒன்றின் எடை சுமார் 500 கிராம் வரையிலும் கூட இருக்கலாம். நெசவில் தூய வெள்ளி மற்றும் தங்க நூல் பயன்படுத்தப் படுவதால் புடவையின் கனம் பிற பட்டுப்புடவைகளைக் காட்டிலும் சற்று அதிகமாகத் தான் இருக்கும். ஆனால் நேர்த்தியிலும், மனம் கவரும் தன்மையிலும், மென்மையிலும் இதை அடித்துக் கொள்ள இன்னொரு புடவை இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை என்று சொன்னால் கூட அது மிகையில்லை.

காஞ்சீவரத்தில் கைத்தறிகளில் பட்டுப்புடவை எப்படி நெசவு செய்யப் படுகிறது என காட்சியாகக் காண விரும்புவோர் கீழே உள்ள யூ டியூப் விடியோ இணைப்பை அழுத்திப் பாருங்கள்.

 

விடியோவுக்கான விளக்கம்:
தறியில் அமர்ந்து நெசவு செய்வதற்கு முன்பாக முதலில் கோரா எனப்படும் வெள்ளை பட்டு நூல்களை கைகளால் சுழற்றி தனித் தனியாகப் பகுத்து சிறு சிறு நூற்கட்டுகளாக மாற்றிக் கொள்கின்றனர். பிறகு இந்த கோரா நூற் திரட்டுகளை துல்லியமாக 0.008 கிராம் மட்டுமேயான அளவில் சாயப் பொடி கலந்து கொதிக்கும் நீரில் நீளமான கொம்புகளில் தொங்கலிலிட்டு மாற்றி மாற்றி முக்கி எடுக்கின்றனர். கோரா நூலில் சாயம் ஏறியதும் சாயமேற்றப்பட்ட நூல்கள் அறை வெப்பநிலையில் குளிர்ந்த நீரில் மீண்டும் மீண்டும் அமிழ்த்தி எடுக்கப்பட்டு அதிகப்படியான சாயம் வெளியேற்றப்படுகிறது. பிறகு மாற்றி மாற்றி உதறியும் பிழிந்தும் கோரா நூலில் ஈரம் அகற்றும் வேலை தொடங்குகிறது. ஈரம் அகற்றப்பட்ட சாயமேற்றப்பட்ட பட்டு நூல் அடுத்த படியாக அந்தந்த நிறங்களுக்கு ஏற்ப சர்க்காவில் உருளை வடிவ தனித் தனி நூற்கண்டுகளாக காட் போர்டுகளில் ஸ்பிண்டில்களாகச் சுற்றப்படுகிறது. இந்த உருளை வடிவ ஸ்பிண்டில்கள் அடுத்தபடியாக தறியில் பிணைக்கப்பட்டு நெசவாளர்களால் தனித்துவம் மிக்க பட்டுப் புடவைகளாக நெசவு செய்யப்படுகின்றன. இந்த முறையில் ஒரு புடவை நெசவு செய்ய குறைந்த பட்சம் 15 நாட்கள் தேவைப்படுகின்றனவாம்.

காஞ்சிப் பட்டின் மற்றொரு சிறப்பம்சம் அவை மடிக்கப்பட்டு கடைகளில் அடுக்கப்பட்டிருக்கும் விதம். ஒரு முறை புடவையைப் பிரித்து விட்டோம் என்றால் கடைக்காரர்கள் உதவியின்றி நம்மால் அவற்றை பழைய படி நறுவிசாக மடிக்கவே முடியாது. இதோ கீழே இணைக்கப்பட்டுள்ள இந்த யூ டியூப் விடியோவில் கோரா நூலைப் பிரித்தெடுத்து அது தறியில் புடவையாக மாறுவதிலிருந்து பிறகு ஒவ்வொரு புடவையாக நேர்த்தியாக மடித்து விற்பனைக்காக அடுக்கப்படும் அழகைக் காணலாம்.

 

காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீகம்:

இந்து புராணக் கதைகளின் படி காஞ்சிப் பட்டு நெசவின் பூர்வீக கர்த்தாவாகக் கருதப்படுபவர் துறவி ”மார்கண்டேயர்” மனிதர்களுக்கு மாஸ்டர் டெய்லர் என்று சிலர் இருப்பது போல இவர் கடவுள்களுக்கு மாஸ்டர் நெசவாளர். தாமரைப் பூ தண்டிலிருந்து நூல் எடுத்து இந்துக் கடவுள்களுக்கு இவர் ஆடைகள் நெசவு செய்து தருவாராம். இதிலும் சில கடவுள்களுக்கென்று சில ஸ்பெஷல்கள் நெசவுகள் உண்டு. சிவனுக்கு பருத்தி நெசவு, விஷ்ணுவுக்கு பட்டு நெசவு என்று ஸ்பெஷலாக மார்கண்டேயர் நெய்து கொடுத்ததாக நெசவாளக் குடும்பங்களில் கதைகள் சொல்லப் படுகின்றன. அது மட்டுமல்ல அயோத்யா, மதுரா, மாயா, காசி, காஞ்சி, அவந்திகா, துவாரகா என்று வகைப்படுத்தப் படும் ஏழு முக்கியமான இந்தியப் புனிதத் தலங்களுக்கான வரிசையில் பிரமிக்க வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளுடனான கோயில்கள் மற்றும் கைத்தறிப் பட்டு நெசவு, எனும் பெருமைக்குரிய காரணங்களால் காஞ்சிக்கும் வேத காலம் தொட்டு முக்கியப் பங்குண்டு. 

என்றென்றும் மணப்பெண்களுக்கான சிறப்புப் புடவை!

Kanchipuram_Saree_5.jpg

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை காஞ்சிப் பட்டு என்பது திருமண விழாக்கள் மட்டுமல்ல வாழ்வின் முக்கியமான தருணங்கள் அனைத்திலும் உடுத்துவதற்கு உகந்த ஒரு பெருமை மிகு அடையாளம். பிற விசேஷமான நாட்களில் வேறு புடவைகளுக்கு முக்கியத்துவம் தந்தாலும் மணப்பெண்களுக்கான சிறப்பு உடையாக இன்னமும் கோலோச்சுவது காஞ்சீவரம் பட்டுப் புடவைகள் தான். ஆனால் இப்போது பவர்லூம்கள் அதிகரித்து வருவதால் ஹேண்ட்லூம்களுக்கான முக்கியத்துவம் குறைந்து கைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் படு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நல்லதொரு தீர்வாகத் தான் மத்திய அரசு ”இந்தியா ஹேண்ட்லூம் பிராண்ட்” என்ற விசயத்தை தொடங்கியிருக்கிறது. தொடங்கி ஓராண்டுக்கு மேலாகிறது ஒரே தளத்தில் இந்தியாவிலிருக்கும் அனைத்து விதமான கைத்தறி நெசவாடைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள முடிகிறது என்பதைத் தாண்டி இதில் நெசவாளர்களுக்கு குறிப்பிடத்தகுந்த நன்மைகள் என்ன கிடைக்கக் கூடும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த வாரம் தெலுங்கானா ஸ்பெஷல் ”போச்சம்பள்ளி ஐகாட்” கைத்தறிப் புடவைகளைப் பற்றி விரிவாகக் காணலாம்.

தொடரும்...

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

தெலுங்கானா ஸ்பெஷல் போச்சம்பள்ளி ஐகாட் கைத்தறிப் பட்டு!

 

 
2saris_pochampally

போச்சம்பள்ளி தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத்தை அடுத்து 50 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் ஒரு நெசவாளக் கிராமம். இங்கு கைத்தறி மற்றும் ஐகாட் பட்டு நெசவு தான் பிரதானத் தொழில். போச்சம்பள்ளி ஐகாட் புடவைகள் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் எத்தனை ஸ்பெஷலோ அத்தனைக்கத்தனை தமிழ் நாட்டு மக்களுக்கும் மிகப் பிடித்தமான ஒரு புடவையாகவே இன்றளவிலும் இருந்து வருகிறது.இந்த வகைப் புடவைகளில்
தனித்துவமாக பெருமை சேர்ப்பவை புடவைகளின் பளீரிடும் வண்ணங்களும் அவற்றில் பயன்படுத்தப்படும் ஜியோமெட்ரிக்கல்(கணிதம்) டிஸைன்களும் தான். ஜியோமெட்ரிகலை அடிப்படையாகக் கொண்ட டிஸைன்களில் உண்டாக்கப்பட்ட பூக்கள், இலைகள், பறவைகள் மற்றும் விலங்குகளின் உருவங்கலைப் போச்சம்பள்ளி ஐகாட் பட்டில் கொண்டு வர வேண்டுமானால் அதற்கு அந்த நெசவாளர்களுக்கு நெசவுக்கலை மீதான துல்லியமான அறிவும், தனித்திறமையும் இருந்தாலொழிய இத்தகைய நுட்பமான டிஸைன்களுடன் புடவை நெசவு என்பது இயலாத காரியமே!

pochampally_burgandy_saree.jpg

தற்போது போச்சம்பள்ளி புடவைகள் என அழைக்கப்பட்டாலும் இந்தப் புடவைகளின் பூர்வீகம் பிரிவினைக்குப் பின்னான தற்போதைய ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சிராலா நகரமே. சிராலா என்றால் தெலுங்கில் ’சீர’ என்றும், தமிழில் ’புடவை’ என்றும் அர்த்தம். ஆந்திராவில் இந்த நகரத்தை ’சிட்கு’ என்று குறிப்பிடுகிறார்கள். ஆரமபத்தில் சிராலாவில் பிரதானமாகத் தயாரிக்கப்பட்டவை நம்ம ஊர் லங்கோடுகள், பளீரிடும் அடர் வண்ணங்களில் நெசவு செய்யப்பட்ட லுங்கிகள், டர்பன்கள் போன்றவை தானாம்! அவை இங்கிருப்பவர்களுக்காக மட்டுமல்ல 1930 களில் பர்மா, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும், கண்டங்களுக்கும் அவை ’ஆசியா ருமால்கள்’ என்ற பெயரில் பெருமளவில் ஏற்றுமதியாகின. ’ருமால்’ என்றால் கர்சீப் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாமாம். முதலில் துண்டுத் துணியாக, துணி பெல்ட்டாக இப்படித் தொடங்கி வளர்ந்த இந்த ஊரின் நெசவுக் கலையில் கைத்தறிப் புடவை நெசவு என்பது 1960 க்குப் பிறகு தான் பரவலாக தொடங்கப்பட்டது. சிராலாவில் தொடங்கிப் பின் அது போச்சம்பள்ளிக்கு இடம் மாற்றப்பட்டது.

போச்சம்பள்ளி புடவை நெசவுக்குத் தேவையானவை:
 
போச்சம்பள்ளி ஸ்டைலில் ஒரு கைத்தறிப் புடவையோ அல்லது ஐகாட் பட்டுப் புடவையோ நெசவு செய்யவேண்டுமெனில் அதற்கு சுத்தமான பருத்தி நூல், பட்டு நூல், ஜரிகை நூல் இவை மூன்றும் தேவை.

போச்சம்பள்ளி கைத்தறி நெசவுத் தொழில்நுட்பம்:

போச்சம்பள்ளி நெசவுத் தொழில்நுட்பம் என்பது ’ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பத்தை’ அடிப்படையாகக் கொண்டது. அதாவது புடவையில் நாம்
விரும்பும் டிஸைன்களைக் கொண்டு வரும் முன் சாயமேற்றும் வேலை நடைபெறும். அப்படிச் சாயமேற்றும் போது பழைய முறைப்படி நாம் விரும்பும் இடங்களில் மட்டும் ஸ்பெஷல் மோடிஃப்கள் மூலம் அழகான டிஸைன்களை நெசவு செய்வதற்கு ஒதுக்கிக் கொண்டு முந்தானைப் பகுதியிலோ அல்லது உடல்பகுதியிலோ மீதமுள்ள  இடங்களில் சாயம் பரவும் வகையில் சாயமேற்றும் முறைக்கு ரெஸிஸ்ட் டையிங் தொழில்நுட்பம் என்றூ பெயர். இந்த வகை சாயமேற்றும் தொழில்நுட்பம் புடவையின் வார்ஃப் களில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வார்ஃப் ஐகாட்’ என்றும், வெஃப்டில் மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தால் அது ’வெஃப்ட் ஐகாட்’ என்றும் கூறப்படுகிறது. சில சமயங்களில் வார்ஃப், வெஃப்ட் இரண்டிலுமே இந்த வகை ரெஸிஸ்ட் டையிங் முறை பயன்படுத்தப் பட்டிருந்தால் அதற்கு ’டபுள் ஐகாட்’ என்று பெயர். இப்போதைய நவீன டிரெண்டுக்கு ஏற்றவகையில் ஐகாட் நெசவாளர்கள் பாரம்பரிய மயில், யானை, கிளி, டைமண்ட், மலர்கள் போன்றவற்றை டபுள் ஐகாட் முறையில் வாடிக்கையாளர் விருப்பத்திற்கேற்ப மனம் கவரும் வகையில் நெய்து தர முடிவது தான் போச்சம்பள்ளி ஐகாட் புடவைகளின் தனிச் சிறப்பு.

போச்சம்பள்ளி புடவை நெசவை வீடியோ பதிவாக இங்கே காணலாம்;

 

குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்தில் தயாராகி இஸ்திரி செய்து மடித்து விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்படும் எளிமையான போச்சம்பள்ளி கைத்தறிப் பட்டுப்புடவைக்கான வீடியோ பதிவை இங்கு காணலாம். பட்டுப் புடவைகளை மடித்து வைப்பதென்பது ஒரு மாபெரும் கலை. கடையிலிருந்து வரும் போது கையடக்கமாக வெகு பாந்தமாக மடிக்கப்பட்டு மொட மொடப்பாக ஸ்பரிசிக்கும் பட்டுப் புடவைகளை வீட்டுக்கு வந்த பின் ஒரெ ஒரு முறை கலைத்து விட்டாலும் நம்மால் ஜவுளிக்கடைக்காரர்கள் மடிப்பதைப் போலவே அத்தனை கச்சிதமாக மடிக்க முடியாது. இங்கே இவர்களைப் பார்த்தாவது பட்டுப்புடவைகளை மடிக்கும் ஆர்வத்தைக் கொஞ்சம் தணித்துக் கொள்ளலாம்.
                                                                                 


ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகளை எப்படி அடையாளம் காண்பது?

pochampally.jpg

 

சிம்பிள், ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகள் என்றால் புடவையின் முன்புறமும், பின்புறமும் ஒரே விதமான தோற்றத்துடன் இருக்கும். சமயத்தில் நமக்கு புடவையின் எந்தப் பகுதியை வெளித் தெரியும் வண்ணம் கட்டுவது எதை உட்புறமாக மடித்துக் கட்டுவது என்று குழப்பமே வந்து விடும். அத்தனைக்கு அத்தனை போச்சம்பள்ளி புடவைகள் முன்னும், பின்னும் ஒன்று போலவே இருக்கும். அதோடு போலிகள் என்றால் புடவைகளின் உட்புறம் அடையாளம் காட்டிக் கொடுத்து விடும்.

ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகள் எங்கே கிடைக்கும்?

on_shop_pl.jpg

அனைத்து பட்டு ஜவுளி மாளிகைகளிலும் போச்சம்பள்ளி கைத்தறிப் பட்டுப் புடவைகள் கிடைக்கும். சென்னையைப் பொருத்த வரை நல்லி, பாலம் சில்க்ஸ், சுந்தரி சில்க்ஸ், ராதா சில்க் எம்போரியம், குமரன், சென்னை சில்க்ஸ், ஆர்.எம்.கே.வி, போத்தீஸ், மதார்ஷா உள்ளிட்ட மொத்த பட்டு விற்பனை நிலையங்களிலும், காதி, சர்வோதயா உள்ளிட்ட அரசு சார்ந்த ஜவுளி விற்பனை நிலையங்களிலும் ஒரிஜினல் போச்சம்பள்ளி புடவைகளை நம்பி வாங்கலாம்.

பராமரிப்பு:

பிற பட்டுப் புடவைகள் போல அல்லாமல் போச்சம்பள்ளி புடவைகளை சற்று நறுவிசாகக் கையாண்டால் சீக்கிரம் மொட மொடப்புக் குறையாமல் புத்தம் புதிதாகவே தோன்றும். எல்லாப் பட்டுப் புடவைகளைப் போலவே இவற்றையும் உலர் சலவைக்கு கொடுத்து வாங்குவது உகந்தது. இல்லாவிட்டால் சீக்கிரம் கொச கொசவென்றாகி உடுத்தும் ஆர்வத்தைக் குறைத்து விடும்.

அடுத்த வாரம் 2000 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு கிரேக்க, ரோமானியர் காலத்திலிருந்து இன்றூ வரையிலும் அழியாமல் காக்கப்பட்டு இந்தியப் பெருமை பேசும் ‘பைத்தானி கைத்தறிப் பட்டுப் புடவைகளைப்’ பற்றி காணலாம்.

சாம்பிளுக்கு சில புடவைகள்  இங்கே;

floral_design_paithani_sarees.jpg

தொடரும்...

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

மகாராஷ்டிரத்து பைத்தானி கைத்தறிப் பட்டுப்புடவைகள்!

 

 
brocaded_paithani_saree

இந்தியாவின் விலை உயர்ந்த பட்டு மற்றும் கைத்தறிப் பட்டுப்புடவைகள் வரிசையில் தமிழகத்தின் காஞ்சீவரம் பட்டுப்புடவைகளுக்கு இணையாகவும் அதைத் தாண்டியும் மதிக்கப்படக் கூடிய வகையில் இருப்பவை ’மகாராஷ்டிரத்தின் பைத்தானி’ கைத்தறிப் பட்டுப்புடவைகள். இவை மற்றெல்லா பட்டுப் புடவைகளைக் காட்டிலும் காலத்தால் முந்தியவை. கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் ’பைத்தன்’ எனும் இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு ரோம் நகரத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

ரோமானியர்கள் இந்தப் புடவையை தங்கத்துக்கு நிகராக விலை கொடுத்து வாங்கிச் சென்றிருக்கின்றனர். இந்தப் புடவையின் தோற்றத்தைப் பற்றி அறிந்து கொள்ள நாம் 2000 ஆண்டுகள் பின்னோக்கிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்தப் புடவையில் முழுக்க முழுக்க தங்க நூல் வேலைப்பாடுகள் அதிகமிருப்பதால் அந்நாட்களில் இவற்றை அதிகார மட்டத்தில் உயர்ந்திருந்த குறிப்பிட்ட சில வர்க்கத்தினர் மட்டுமே பயன்படுத்த முடிந்தது. பெரும்பாலும் அரச குடும்பத்தினர், பேஷ்வாக்களின் குடும்பப் பெண்கள், அரசு உயர் அதிகாரிகள் குடும்பத்துப் பெண்கள், ஜமீந்தாரிணிகள் இப்படிச் சில தேர்ந்தெடுத்த வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்தப் புடவைகள் நெசவு செய்யப்பட்டன. தமிழ்நாட்டில் கல்யாணம் என்றால் காஞ்சீவரத்தை எப்படித் தவிர்க்க முடியாதோ அப்படியே மகாராஷ்டிரத்து கல்யாணங்களில் ‘பைத்தானி’ இல்லாது கல்யாணமே நிறைவடையாது.

பைத்தானி புடவைகளின் தோற்றம்:

இன்றைய மும்பையிலிருந்து 400 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த பைத்தன் நகரம் தக்காணத்தின் மிகப் பழமையான முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களில் ஒன்றாக இன்றளவிலும் சிறந்து விளங்க இந்தப் புடவை நெசவும் ஒரு காரணமே!.

சாதவாகன மன்னன் சாலிவாகனன் காலத்தில்...

paithani-sarees-designs.jpg

இந்தியாவில் பிரதிஸ்தானத்தை ஆட்சி செய்த சாதவாகனரான சாலிவாகன மன்னனின் காலத்தை பைத்தானி கைத்தறிப் புடவைகளின் பொற்காலம் என்று கூறலாம். அன்றைக்கு அவுரங்காபாத்தில் இருந்து 50 கிமீ தொலைவில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்த மராத்வாடா என்றழைக்கப்பட்ட சிற்றூரில் பைத்தானி நெசவு முதலில் தொடங்கியது. இந்த மராத்வாடா பின்பு பைத்தன் என்றானது. இந்த ஊரிலிருந்து தயாரான பட்டுப் புடவைகளின் பெருமை உலகெங்கும் பரவ, கூடிய விரைவில் பைத்தன் சாதவாகனர்கள் ஆட்சியில் சர்வ தேச பட்டு மற்றும் ஜரிகைச் சந்தைகளில் ஒன்றாக மாறியது.

முகலாய மன்னர் அவுரங்கசீப் காலத்தில்...

220px-Aurangzeb_in_old_age_2.jpg

சாலிவாகனர் ஆட்சிக்குப் பின்  பைத்தானி புடவைகளின் அதி தீவிர ரசிகராகவும், ரட்சகராகவும் ஒரு முகலாய மன்னர் இருந்தார். அவர் யார் தெரியுமா? தான் வாழந்த காலத்தில் சிக்கனத்தின் மறு உருவமாக சற்றேறகுறைய கஞ்ச மகாப் பிரபு என்று சூழ இருந்தோரால் பகடி செய்யப்பட்ட முகலாய மன்னர் அவுரங்கசீப் தான் பைத்தானிப் நெசவுக் கலையின் தீவிர ரசிகராக இருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில் ஜம்தானிப் புடவை நெசவை தடுத்து நிறுத்தி அதற்குப் பதிலாக பைத்தானி நெசவை அவர் போற்றி வளர்த்தார். மன்னரது உத்தரவு மீறி ஜம்தானி புடவைகளை நெசவு செய்தவர்கள் அவுரங்கசீப்பால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.

அவுரங்கசீப்புக்கு முன்பே பேஷ்வாக்கள் பைத்தானி நெசவின் தீவிரப் புரவலர்கள் என்பது தனிக்கதை.

நிஜாம்களின் காலத்தில் பைத்தானி...

Peacock_Pallu_Paithani_Theam_Silk_Saree-

இவர்களை அடுத்து கி.பி 17 லிருந்து 19 வரை ஹைதராபாத் நிஜாம் வம்சத்து மன்னர்கள் பைத்தானி ரசிகர்களாகி அதிக அளவில் பைத்தானி புடவைகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்தினர். நிஜாம் காலத்தில் பைத்தானி நெசவுக் கலையில் ஓரளவுக்கு சொல்லிக் கொள்ளும்படியான வளர்ச்சி இருந்தது. ஏனெனில் நிஜாமின் மனைவி பேகம் நிலோஃபர் பைத்தானி பட்டுப்புடவைகளில் புதுப் புது மோட்டிஃப்களை அறிமுகப்படுத்துவதை மிகுந்த விருப்பத்தோடு செய்து கொண்டிருந்தார். பைத்தானி பட்டுப் புடவைகளின் தனித்த அடையாளமான புறா மோட்டிஃப்கள் பேகம் நிலோஃபரின் கண்டுபிடிப்புகளே!

பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் பைத்தானி நெசவின் வீழ்ச்சி...

சாதவாகனர்கள், முகலாயர், பேஷ்வாக்கள், நிஜாம்கள் என சமூகத்தின் உயர் மட்டத்தில் சீரும், சிறப்புமாக கோலோச்சிக் கொண்டிருந்த பைத்தானி புடவை நெசவுக் கலையானது பிரிட்டிஷ் காலனி ஆதிக்க காலத்தில் ஏனைய கைத்தறி நெசவுக் கலைகளைப் போலவே களையிழக்கத் தொடங்கியது. நெசவுக்கான மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக ஒரு வழியாக கைத்தறி காலம் முடிந்து மெஷின்கள் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. என்ன தான் மெஷின் மூலம் புடவை நெசவு அபிரிமிதமாக இருந்தாலும், பல வெரைட்டிகளில், பல வண்ணங்களில் புடவைகள் கிடைத்தாலும் கூட மகாராஷ்டிரத்து பைத்தானி நெசவுக் கலைஞர்களுக்கு இணையாக எந்த மெஷினாலும் அத்தனை கச்சிதமாக உலகப் புகழ் பைத்தானி புடவை ஒன்றை நெசவு செய்து விட முடியாது என்பது தான் நிஜம்.

பைத்தனிலிருந்து  நாக்பூரின் இயோலாவுக்கு இடம்பெயர்ந்த நெசவுக்கலை...

paithani_000.jpg

படிப்படியாக கைத்தறிப் புடவை நெசவு குறைய ஆரம்பித்ததும் பைத்தனிலிருந்து நெசவுக்கலை இயோலாவுக்கு இடம் மாறியது. இது நாக்பூருக்கு அருகிலிருக்கும் ஒரு சிறு நகரம். இங்கிருக்கும் செல்வந்தர்களின் விருப்பத்துக்கு இணங்கி பைத்தானி நெசவாளர்களில் சிலர் பைத்தனில் இருந்து இங்கு இடம் பெயர்ந்தார்கள். தற்போது இந்தியாவில் பைத்தன் மற்றும் நாக்பூரின் இயலோ இரு இடங்களிலும் பைத்தானி நெசவு நடைபெறுகிறது.

பைத்தானி கைத்தறிப் புடவை நெசவில் பயன்படுத்தப் படும் மூலப் பொருட்கள்:

பைத்தானி பட்டுப் புடவைகள் நெசவு செய்ய;

  • பட்டு நூல்,
  • ஜரிகை நூல் மற்றும்
  • சாயம்

இந்த மூன்று மூலப் பொருட்களும் மிகவும் அவசியம். பட்டு நூலில் நெசவுக்கு ஏதுவாகப் பிரித்துத் தொகுக்கப்பட்ட ஃபிலியேச்சர் பட்டு நூல் வார்ஃப் நெசவிலும், சிட்லகட்டா அல்லது சரஹா பட்டு நூல் வெஃப்ட் பாக நெசவிலும் பயன்படுத்தப் படுகிறது.

சாமனியர்களுக்கும் எட்டும் விலையில் பைத்தானி பட்டு...

மன்னர்கள் காலத்திலும் நிஜாம்கள் காலத்திலும் ஒரிஜினல் தங்க நூல்களே ஜரிகை வேலைப்பாடுகளில் பயன்படுத்தப் பட்டன. இதனால் இந்த வகைப் புடவைகள் சாமனிய மக்களுக்குப் எட்டாக் கனவாகவே இருந்து வந்தது. ஆனால் இன்று தங்க நூலுக்குப் பதிலாக வெள்ளி ஜரிகை நூல் பயன்படுத்தப் படுகிறது. அது தவிர ஜரிகைகளிலும் பார்டருக்கு ஒரு வகை, முந்தானைக்கு ஒரு வகை, புட்டாக்களுக்கு ஒரு வகை என மூன்று வகையான ஜரிகை நூல்கள் பயன்படுத்தப் படுகின்றனவாம். இதனால் நடுத்தர மக்களும் வாங்கி உடுத்தும் விலையில் தற்போது பைத்தானி புடவைகள் கிடைக்கின்றன.

பைத்தானி புடவைகளில் காணப்படும் பிரத்யேக வண்ணங்கள்:

தமிழ்நாட்டில் நல்லி பட்டுப் புடவைக் கடைகளில் எம்.எஸ் புளூ என்றொரு நிறத்தில் பட்டுப்புடவைகள் கிடைக்கின்றன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தப் பெயரில் இப்படி ஒரு வண்ணம் இல்லை. இசையரசி எம்.எஸ் நினைவாக நல்லி தனது பட்டுப்புடவைகளில் எம்.எஸ் க்கு பிடித்தமான நீல நிறப் புடவைகளில் ஒன்றுக்கு இப்படி அவரது பெயரை வைத்து கவுரவித்தது. இதே போல பைத்தானி பட்டுப் புடவைகளுக்கும் உள்ளூர் வண்ணப் பெயர்கள் உண்டு. அது பிற மாநிலத்து வாடிக்கையாளர்களுக்குப் புரியாது. அவர்களுக்கு பைத்தானி புடவை வண்ணங்களுக்கான இந்தப் பட்டியல் உதவலாம்.

  1. அபோலி- பீச் பிங்க்
  2. ஃபிரோஷி- வெள்ளை- சிவப்பு இளம்பச்சை
  3. குஜ்ரி- கருப்பும் வெளுப்பும் கலந்த கலவை
  4. காளி சந்திரகலா, மிராணி- கருப்பு, சிவப்பு கலந்த டபுள் ஷேட் 
  5. மோதியா- இளஞ்சிவப்பு
  6. நீலிகுஞ்ஜி- நீலம்
  7. பாசிலா- சிவப்பு, இளஞ்சிவப்பு, பச்சை டிரிபிள் ஷேட்
  8. போபாலி- மஞ்சள்

இப்படி நீளும் வண்ணப் பட்டியலில் அடர் வண்ண ஷேட்களில் சிவப்பு, பச்சை, மஞ்சள் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களிடையே மிகவும் பிரபலமானவை.

பைத்தானி கைத்தறிப் பட்டின் சிறப்பு அம்சங்கள்:

tota_maina_paiththanieee.jpg

தேர்ந்த பைத்தானி நெசவாளரால் கைகளால் நெசவு செய்யப்பட்ட சுத்தமான அசல் பைத்தானி கைத்தறிப்பட்டு

  • பிற பட்டுப் புடவைகளைக் காட்டிலும் மிகவும் கனமானது.
  • புடவையில் வண்ணக் கலவையும் அடர்தியாக இருக்கும்.
  • புட்டாக்கள் மற்றும் பார்டர்களில் ஜரிகையும் அடர்த்தியாக இருக்கும்.

பைத்தானி புடவைகளின் வழக்கமான அளவென்பது 61/4 கஜம். இதில் 1/4 கஜம் ரவிக்கைக்குப் போகும். அசல் பைத்தானியில் 500 லிருந்து 575 கிராம் எடை வரை பட்டும், 200 லிருந்து 250 கிராம் எடை வரை ஜரிகையும் பயன்படுத்தப் பட்டிருக்கும். கச்சிதமாக நெய்து முடிக்கப்பட்ட பைத்தானிப் புடவையின் ஒட்டுமொத்த எடை என்பது 600 முதல் 750 வரை இருக்கலாம். 7 முதல் 9 இஞ்ச் வரை பார்டர்களுக்கு இடம் ஒதுக்கப்படுகிறது. பார்டர்களில் பயன்படுத்தப் படும் மோட்டிஃப்களுக்கு அவை நெசவு செய்யப்பட்ட அந்தந்த ஊர்களின் பெயரே வழக்கில் புழங்கி வருகிறது. உதாரணமாக அஸ்வலிகத், நார்லிகத், பங்காகத், பைத்தானிகத் இப்படி...

முந்தானைப் பகுதி 18 இஞ்ச் சிங்கிள் பள்ளு இணைப்பிலும்...

SinglePallupaithanisare.jpg

அல்லது 36 இஞ்ச் டபுள் பள்ளு இணைப்பிலும் கிடைக்கும்.

double_pallu_paithani.jpg

பைத்தானி கைத்தறிப் பட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் மோட்டிஃப் டிசைன்கள்:

paithani-12-728.jpg

நமது காஞ்சிப் பட்டில் அன்னப் பட்சி, மாங்காய், மயில், பாய், ருத்ராட்ச மோட்டிஃப்கள் அதிகம் பயன்படுத்தப் படுவதைப் போல பாரம்பரிய பழமை வாய்ந்த பைத்தானிப் புடவைகளில் பெரும்பாலும் திராட்சைக் கொத்து, மலர் கொத்து, காத்தாடி வடிவம், பருத்தி மொட்டு போன்ற டிசைன் மோட்டிஃப்கள் பயன்படுத்தப் பட்டன. முகலாயர் வருகைக்குப் பின் பழமை மாறி மோட்டிஃப்களில் புறாக்கள், மயில்கள், மாதுளம் பூக்கள், அன்னப் பட்சி, கிளிகள் போன்ற டிசைன்கள் பயன்பாட்டுக்கு வந்தன. இப்போதும் பைத்தானிப் பட்டுப் புடவை மோட்டிஃப்களில் மயில்களுக்கு தனித்த இடம் உண்டு.

பைத்தானி  கைத்தறிப் பட்டுப் புடவைகளின் வகைகள்:

இந்த வகை படு மற்றும் கைத்தறிப் புடவைகளை அவற்றின் நெசவு முறை, பயன்படுத்தம் படும் மோட்டிஃப்கள், புடவையின் வண்ணங்கள் இவற்றின் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

மோட்டிஃப்களின் அடிப்படையில்:

பங்கடி மோர்:

bangadi-mor.jpg

பங்கடி என்றால் மராத்தியில் வளையல் என்று அர்த்தம், மோர் என்றால் மயில், அதாவது வளையல் டிசைனில் மயில் மோட்டிஃப்களைப் பயன்படுத்தி நெசவு செய்யப்படுவதால் இதற்கு இப்பெயர் வந்தது. முந்தானைப் பகுதியில் வளையல் வடிவ மயில்களைச் சுற்றி பிற மயில் மோட்டிஃப்கள் நடனமாடுவதைப் போல இந்த புடவை வடிவமைப்பட்டிருக்கும். பைத்தானி மோட்டிஃப்களில் இது மிகவும் விலை அதிகம். ஏனெனில் அதன் கலை நுணுக்கம் அத்தகையது.

முனியா புரோகேட்:

muniya_brocade.jpg

முனியா என்றால் மராத்தியில் கிளி என்று அர்த்தம், முந்தானையிலும் பார்டர்களிலும் பச்சைக் கிளிகள் பறந்தால் அந்த வகை பைத்தானி புடவைளுக்கு முனியா மோட்டிஃப் புடவைகள் என்று பெயர்.கிளிகள் பச்சை நிறத்தில் அல்லாது தங்க நிற பட்டு நூலில் ஜொலித்தால் அந்த மோட்டிஃப் டிசைனுக்கு டோட்டா மைனா மோட்டிஃப் புடவை என்று பெயர்.

லோட்டஸ் புரோகேட்:

lotus_brocade.jpg

தாமரைப் பூ வடிவ மோட்டிஃப்கள் முந்தானை மற்றும் பார்டர்களில் வடிவமைக்கப் பட்டிருந்தால் அதற்கு லோட்டஸ் புரோகேட் என்று பெயர். இந்த வகை மோட்டிஃப்கள் ஏழெட்டு வண்ணங்களில் கிடைக்கின்றன.

நெசவின் அடிப்படையில்:

கடியல் பார்டர் பைத்தானிப் பட்டுப் புடவைகள்:  

kadiyal_border_sari.jpg

கடியல் என்றால் இடைப்பூட்டிய அல்லது பின்னிய என்றூ பொருள். அதாவது இந்த வகை பைத்தானி கைத்தறீப் பட்டில் வார்ஃப் மற்றும் வெஃப்ட் பார்டர்கள் ஒரே நிறத்தில் அமைந்து புடவையின் உடல்பகுதியில் மட்டும் வெவ்வேறு வகையான வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டிருக்கும்.

காட்/எக்தோத்தி:

kad_%28ekdhoti_sari.jpg

இந்த வகை நெசவில், வார்ஃப் மற்றும் வெஃப்ட் இரண்ட்டுக்குமே வேறு வேறு நிற நூல்கள் பயன்படுத்தப்படும். சின்னச் சின்ன புட்டாக்களுடன் கூடிய மோட்டிஃப்கள் நெசவு செய்யப்படும், பெரும்பாலும் மகாராஷ்டிரத்து ஆண்கள் அணியும் லுங்கி போன்ற ஆடை வடிவில் நெசவு செய்யப்படும். இந்த வகை நெசவு ஆண்களுக்கானது.

வண்ணங்களின் அடைப்படையில்: பைத்தானி கைத்தறிப் பட்டுப் புடவைகளை நிறத்தை அடிப்படையாகக் கொண்டும் மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர்;

களிசந்திரகலா: சுத்தமான கருப்பில் சிவப்பு நிற பார்டர் கொண்ட பைத்தானி புடவை

kali_cahnthirakala_paithani.jpg
ரகு: கிளிப்பச்சை நிறப் பைத்தானிப் பட்டுப் புடவை

raghu_paithani.jpg
ஷிரோதக்: அசல் வெண்மை நிறப் பைத்தானி கைத்தறிப் பட்டு

white_paithani.jpgபைத்தானி பட்டுப் புடவைகளைப் பற்றி விலாவாரியாகத் தெரிந்து கொண்டோமில்லையா?

பைத்தானி பட்டின் தோற்றம், வளர்ச்சியை ஸ்லைட் ஷோவாகக் காண ... இங்கே க்ளிக் செய்யவும்.

இனி அடுத்த வாரம் என்ன புடவை?

வங்காளத்தின் ஜம்தானி புடவைகளின் மலிவான மாற்றாகக்கருதப் படும் ’டாங்கைல் கைத்தறிப் புடவைகளைப்’ பற்றி காண்போம்.

தொடரும்...

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

டாங்கைல் கைத்தறி பருத்தி மற்றும் பட்டுப் புடவைகள்!

 

 
tangail_red_cotton

தோற்றம்:

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன் பிரிட்டிஷ் இந்தியாவின் வங்காளத்தில் டாங்கைல் மாவட்டத்தில் இந்தப் புடவை நெசவு உருவானதால் பிற கைத்தறிப் ப்புடவைகள் போலவே இந்தப் புடவைகளும் ஊர் பெயரால் அடையாளம் காணப்பட்டன. டாங்கைல் புடவைகள் என்றவுடன் இதேது? பெயர் வித்யாசமாக இருக்கிறதே என்று இணையத்தில் தேடினால், முகலாயர் காலத்தைய ஜம்தானி புடவைகளின் எளிமையான வடிவம் தான் டாங்கைல் புடவைகளாம். ஜம்தானி மிகவும் மெல்லியது அதோடு உடல் முழுதும் பார்டர் பகுதியிலும் புட்டாக்களும், மோட்டிஃப்களுமாக மிகப் பகட்டாகத் தோற்றமளிக்கக் கூடியதும் கூட. ஆனால் டாங்கைல் சற்றேறக் குறைய ஜம்தானியை ஒத்து இருந்தாலும் உடல் பகுதியில் கலைநுணுக்கமான கை வேலைப்பாடுகள் குறைக்கப்பட்டு பள்ளு அல்லது முந்தானைப் பகுதியில் மட்டும் செய்நேர்த்தி மிக்க எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் நெசவு செய்யப் பட்டிருக்கும். இதனால் ஜம்தானி நெசவைப் போலன்றி இந்த வகைப் புடவை நெசவுக்கு நெசவாளர்களின் எண்ணிக்கை மற்றும் நெசவுக் கூலி இரண்டுமே குறைவாகவே தேவைப்படும்.

white_tangail_saree_with_jamdhani_design

ஜம்தானியின் எளிய வடிவமே டாங்கைல் புடவைகள்:

tangail_3.jpg

 சுருக்கமாகச் சொல்வதென்றால் நம்ம ஊர் காஞ்சிப் பட்டுக்கு மாற்றாகவும் அதே சமயம் விலை குறைவாகவும் இருக்குமாறு ஆரணி நெசவுப் பட்டுகளைக் கொண்டு வந்தார்கள் இல்லையா? அப்படித் தான் ஜம்தானி வாங்க முடியாத நிலையிலிருக்கும் சாமானிய மக்களின் ஜம்தானிப் பட்டுக் கனவைக் நிறைவேற்றவே அதன் மாற்று வடிவமாக டாங்கைல் பருத்தி மற்றும் பட்டுப் புடவை நெசவு வந்தது என்றால் பொருத்தமாக இருக்கும். கிழக்கு வங்காளத்தின் டாங்கைல் மாவட்டத்திலிருந்து இந்த பிரத்யேக நெசவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டாங்கைல் புடவைகளை நெய்து கொண்டிருந்த நெசவாளர்களின் பல பிரிவினர் தொழில் போட்டியினாலும், நாடு சுதந்திரம் பெற்றதற்குப் பின்னான பிரிவினைப் பூசல்களாலும்  கிழக்கு வங்கத்தை விட்டு மேற்கு வங்கம் முழுவதுமே பூலியா, சாந்திப்பூர், நபதீப், நாடியா மாவட்டம், சமுத்ரகார்க், தாத்ரிகிராம், கல்னா, பலூர்காட், கங்காராம்பூர், தினஜ்பூர் எனப் பல இடங்களுக்கும் பரவ ஆரம்பித்தனர். சுதந்திர இந்தியாவில் மேற்கு வங்காளம் தனி மாநிலமானதும் இந்த நெசவாளர்கள் அனைவரும் அவரவர் தஞ்சமடைந்த ஊர்களையே சொந்த ஊராக்கிக் கொண்டாலும் அந்தந்த ஊர்ப் பெயர்களோடு சேர்த்து தங்களது டாங்கைல் கைத்தறி நெசவையும் இணைத்துக் கொண்டு புடவை நெசவில் ஈடுபட்டு வருகின்றனர்.

phuliapics-_tangail_sari.jpg

இப்போது டாங்கைல் கைத்தறிப் புடவைகள் பூலியா டாங்கைல், சாந்திப்பூர் டாங்கைல், பலூர்காட் டாங்கைல் என்றெல்லாம் வித விதமான பெயர்களில்நமக்குக் கிடைப்பதற்கு காரணம் அந்தந்த ஊர்களில் எல்லாம் டாங்கைல் நெசவு நடைபெறுகிறது என்பதற்கான ஆவண மூலங்கள் எனலாம்.

டாங்கைல் புடவைகளில் சாந்திப்பூர் வகையில் மட்டும் தான்  புடவை பார்டர் பகுதியில் பாரம்பரியமான பழைய முறைப்படி தாமரைப்பூ மற்றும் அகல் விளக்குகள் நெசவு செய்யப் படுகின்றன.

பயன்படுத்தப் படும் பொருட்கள்:

phulia3-kaiG--621x414@LiveMint.jpg

டாங்கைல் நெசவாளர்கள் பொதுவாக 80 S மற்றும் 100 S எண்ணிக்கையிலான பருத்தி மற்றும் 72 S, 76 S எண்ணிக்கையிலான சணல் நூல்களையே புடவை நெசவுக்குப் பயன்படுத்துகின்றனர். முன்பெல்லாம் எக்ஸ்ட்ரா வார்ஃப் டிசைன்களுக்கு டஸர் சில்க் நூல் மற்றும் பள பளப்பாக்கப் பட்ட பருத்தி நூல் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள், ஆனால் தற்போது பார்டர்களில் டிசைன்கள் நெய்வதற்கு 2/100 S,2/80 S அளவுகலில் முறுக்கப்பட்ட பருத்தி நூல்களை பயன்படுத்தி வருகின்றனர். ஜக்கார்டுகள் மூலமாகவும் பார்டர் டிசைன்கள் நெசவு செய்யபடுகின்றன. வண்ண நூல்களும் வார்ஃப் மற்றும் வெஃப்ட், எக்ஸ்ட்ரா வெஃப்ட் டிசைன்களுக்கு பயன்படுத்தப் படுகின்றன. டாங்கைல் புடவைகள் மற்ற பாரம்பரிய கைத்தறிப் புடவைகளைப் போலவே தங்க மற்றும் வெள்ளி ஜரிகை வேலைப்பாடுகளுக்காகவும் அவற்றின் செய் நேர்த்திக்காகவும் பெண்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற புடவைகளே!

டாங்கைல் நெசவுத் தொழில்நுட்பம்:

tangail_handloom.jpg

டாங்கைல் கைத்தறிப் புடவைகள் இதுவரையிலான புடவை நெசவு முறைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு மிக மிக மெல்லியதாகவும், மிருதுவானதாகவும் நெய்யப் படுகின்றன. கண்ணாடி போன்ற மெல்லியதும், ஊடுருவும் தன்மை கொண்டதுமான  புடவையின் உடல் பகுதியில் தேர்ந்த கலை நயம் மிக்க மோட்டிஃப்கள் நெசவு செய்யப் படுகின்றன. பார்டர்கள் மற்றும் எக்ஸ்ட்ரா வார்ஃப் மற்றும் வெஃப்ட் டிசைன்கள் நெசவு செய்ய 100 முதல் 200 கொக்கிகள் கொண்ட ஜக்கார்டுகள் பயன்படுத்தப் படுகின்றன. ஒரு தறிக்கு ஒரு ஜக்கார்டு வீதம் பயன்படுத்தப் பட்டு உடல்பகுதியின் எக்ஸ்ட்ரா வார்ஃப் மற்றும் வெஃப்ட் டிசைன்கள் 60 S மற்றும் 80S வண்ண நூல்களைக் கொண்டு நெய்யப்படுகின்றன.

ஒரிஜினல் டாங்கைல் கைத்தறிப் புடவைகளை எப்படி அடையாளம் காண்பது?

pink_white_tangail.jpg

ஒரிஜினல் டாங்கைல் புடவைகளை அவற்றின் எக்ஸ்ட்ரா வார்ஃப் டிசைன்கள் மற்றும் ஜாக்கார்டுகளில் ’லிஃப்டிங்’ தொழில்நுட்பம் மூலம் நெசவு செய்யப்பட்ட கலை நயமிக்க பார்டர்கள் மற்றும் புட்டாக்கள் வாயிலாக எளிதாக அடையாளம் காண முடியும். ஏனெனில் டாங்கைல் புடவைகளின் புட்டாக்கள் மற்றும் பார்டர் டிசைன்கள் சற்றே எம்பிக் கொண்டு புடைப்பாகத் தோற்றமளிக்கும் இவை பிற கைத்தறிப் புடவைகளில் இருந்து இவற்றை பிரித்துக் காட்டும்.

 

'அசல் டாங்கைல்’ கைத்தறிப் புடவைகளை இந்த யூ டியூப் விடியோவிலும் கண்டு களிக்கலாம், புடவை வாங்கும் ஆர்வத்தை தூண்டக் கூடிய வகையிலான அழகழகான வண்ணங்களில் ஒவ்வொரு புடவையும் கண்ணைப் பறிக்கிறது. ஆர்வமுள்ளவர்கள் சப் டைட்டிலுடன் கூடிய இந்த வீடியோவை ஒரு முறை பார்த்து விடுங்கள்.

டாங்கைல் கைத்தறி நெசவில் தற்போது காட்டன் புடவைகள், பட்டுப் புடவைகளோடு சுரிதார் மெட்டீரியல்களும் கிடைக்கின்றன.

http://www.dinamani.com

Link to comment
Share on other sites

  • 1 year later...

காஷ்மீர் ஸ்பெஷல் ‘பஷ்மினா சில்க்’ பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

 

 
kashmiri_pashmina

 

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு சிறந்த பொருளுக்காக பிரசித்தி பெற்று விளங்குகிறது. அந்த வகையில் இந்தியா முழுவதிலுமே அனைத்து மாநிலங்களுமே அவற்றுக்கென ஸ்பெஷலான சில நெசவு திறன்களைக் கைவசம் வைத்துள்ளன. நம்மூரில் காஞ்சிபுரம், ஆரணி, தர்மாவரம் புடவைகள் எத்தனை ஃபேமஸோ அதே விதமாக காஷ்மீரில் பஷ்மினா நெசவு ஃபேமஸ்.  பஷ்மினா என்றால் காஷ்மீரியில் தங்கம் போல மென்மையானது என்று பொருளாம்.

kashmir_pashmina_shawl.jpg

‘பஷ்மினா’ இந்தப் பெயரை உச்சரிக்கும் போது உங்களுக்கு என்ன தோன்றுகிறதோ தெரியாது... ஆனால், எனக்கு இந்தப் பெயரை உச்சரிக்கும் ஒவ்வொருமுறையும் அதன் அதி மிருதுத் தன்மையை மனதால் உணரமுடிகிறது. காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஷால்கள் அவற்றின் மிருதுத் தன்மைக்காகவும் குளிர் தாங்கும் தன்மைக்காகவும் மிகவும் பிரபலமானவை. இந்த வகை நெசவு காஷ்மீரில் மட்டுமே இன்றும் ஒரிஜினலாகப் புழக்கத்தில் இருக்கிறது. அதன் தரத்துக்கு ஏற்ப விலையும் வெகு அதிகம்.

மலையாட்டு ரோமங்களில் இருந்து துவங்கும் பஷ்மினா நெசவு...

pashmina_goats.jpg

காஷ்மீர் லடாக் பள்ளத்தாக்குகள், நேபாளம் மற்றும் திபெத் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வாழும் பஷ்மினா ஆடுகள் அல்லது சாங்தாங்கி ஆடுகளின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இருந்து பெறப்படும் ரோமங்களில் இருந்து   பஷ்மினா நெசவு செய்யப்படுகிறது. ஆட்டின் பிற உடல்பகுதிகளில் இருக்கும் முடி சற்றுத் தடிமனாக இருப்பதால் அவற்றை பியூர் பஷ்மினா நெசவில் தேர்ச்சி பெற்ற நெசவாளர்கள் பயன்படுத்துவதில்லை.

பஷ்மினா ஆடுகளின் வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் இருந்து பெறப்படும் ரோமங்களின் தடிமன் வெறும் 12 மைக்ரான்கள் மட்டுமே. மிக மிக மெலிது என நாம் நினைக்கும் நமது தலை முடி கூட கிட்டத்தட்ட 200 மைக்ரான்கள் அளவு கொண்டவை. மனித தலைமுடியின் தடிமனை விட மெலிதானவை இந்த பஷ்மினா ஆடுகளின் ரோமங்கள்.

காஷ்மீரத்து மணப்பெண்களின் வரதட்சிணை லிஸ்டில் பஷ்மினா...

bride_wearing_pashmina.jpg

அத்தனை மெலிதாக இருந்த போதும் அந்த ரோமங்களுக்கு கடுங்குளிரையும் தாங்கக் கூடிய சக்தி உண்டு. அதனால் தான் காஷ்மீரத்துப் பெண்களுக்குத் திருமணப் பேச்செடுக்கையில் வரதட்சிணைப் பொருட்கள் லிஸ்டில் கண்டிப்பாக பஷ்மினா ஷாலுக்கும் பிரதான இடம் தருகிறார்கள். புது மணப்பெண்ணின் அந்தஸ்தை அவள் கொண்டு வரும் பஷ்மினா ஷாலின் தரத்தையும், விலையையும் கொண்டு அளவிடும் நடைமுறையும் கூட அங்கு பின்பற்றப்படுகிறது. லடாக்கில் வசிக்கும் ‘சங்பா’ மலைஜாதி காஷ்மீரிகள் பஷ்மினா ஆடுகளை அவற்றின் ரோமங்களுக்காகப் பிரத்யேகமாக வளர்க்கிறார்கள். அந்த ஆடுகள் இறைச்சிக்காக வளர்க்கப்படுவதில்லை என்பதோடு பிற ஆடுகளைப்போல இவை வெறும் புற்களை மட்டுமே உட்கொள்வதில்லை புற்களோடு சேர்த்து அவற்றின் வேரையும் உண்கின்றன என்பதும் அதிசயமான தகவல்.

பஷ்மினா நெசவு...

pashmina_weavers.jpg

முதலில் ஆடுகளில் இருந்து பெறப்படும் பஷ்மினா மயிரிழைகள் மொத்தமாகத் திரட்டப்பட்டு அவை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கும் நகரங்களுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே அந்த முடிக்கற்றைகளில் இருந்து அசுத்தங்கள் அகற்றப்பட்டு சீப்பால் நீவப்பட்டு அவை நீளமான நூற்கற்றைகள் போல திரட்டப்படுகின்றன. நூற்கற்றைகள் ராட்டையில் சுழற்றப்படு நூற்பந்துகளாக்கப்பட்டு காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு அனுப்பப்படுகின்றன. அங்கே கை தேர்ந்த பஷ்மினா நெசவாளர்கள் மூலமாக ஷால்கள், கம்பளங்கள் மற்றும் புடவைகளாக மாற்றம் பெறுகின்றன. பியூர் பஷ்மினா புடவையின் விலை 40000 முதல் 50000 வரை இருக்கலாம். ஏனெனில் சாதாரண ஷாலின் விலையே 4000 முதல் 5000 வரை இருக்கும் போது புடவை விலை அதிகமாகத்தான் இருக்கக் கூடும். மார்கெட்டில் தற்போது பஷ்மினா என்ற பெயரில் 2000 முதல் 3000 வரை விலை வைத்து விற்பனை செய்யப்படும் பஷ்மினா புடவைகள் ஒரிஜினல் ஹேண்ட்லூம் புடவைகளாக இருக்க வாய்ப்பில்லை. அவை பஷ்மினா நெசவு முறையைப் பின்பற்றி மெஷினில் நெய்யப்பட்டவையாக இருக்கலாம். அந்தப் புடவைகளில் ஒரிஜினலின் மென்மை கிடைக்குமா எனத் தெரியவில்லை.

பியூர் பஷ்மினா ஷால்கள் மற்றும் புடவைகளை நெசவு செய்வதற்கான ஃபார்முலா 70 சதவிகிதம் பஷ்மினா நூல்இழைகள் மற்றும் 30 சதவிகிதம் பட்டு நூல்... 70:30. இந்த விகிதத்தில் நெய்யும் போது மிக மென்மையான பஷ்மினா துணிகள் கிடைக்கும். அதே 50:50 பட்டு 50 பஷ்மினா 50 எனும் விகிதத்தில் நெசவு செய்வதும் உண்டு. இரண்டுக்கும் மென்மையில் பெரிய வித்யாசங்கள் இல்லை என்றாலும் 70:30 விகிதாச்சாரம் தான் பஷ்மினாவின் தூய்மைக்கு அளவுகோளாகக் கருதப்படுகிறது. ஏனெனில் 100 % பஷ்மினா இழைகள் மட்டுமே கொண்டு நெசவு செய்யமுடியாது. அவை மிக மெல்லியவை என்பதால் விரைவில் அறுந்து விடும் தன்மையும் அவற்றுக்கு உண்டு. எனவே தான் தேர்ந்த நெசவுத்திறன் வாய்ந்த நெசவாளர்கள் 70:30 விகிதத்தைக் கடைபிடிக்கிறார்கள். பஷ்மினா நெசவு இந்தியாவுக்கு எப்படி வந்ததென்றால்... அது பெர்ஷியாவில் இருந்து இந்தியாவுக்கு வந்ததெனக் கூறுவார்கள்.

பஷ்மினாவுக்கு வந்த தட்டுப்பாடு...

fashion_demand.jpg

90 களில் பஷ்மினா புடவைகள் மற்றும் ஷால்களுக்கு நிலவிய டிமாண்டின் காரணமாக அவற்றின் விலை எகிறி மார்கெட்டில் அப்புடவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது .அன்றைய ஃபேஷன் டிசைனர்கள் பஷ்மினாவை ஃபேஷன் ஐகானாகக் கருதினர். எனவே ஃபேஷன் உலகில் பஷ்மினா சில்க் விஸ்வரூபமெடுத்து விற்பனையானது. இந்நிலையில் பஷ்மினா வாங்கும் ஆவலிருப்பவர்களிடையே காஷ்மீர் சில்க்குக்கும், பஷ்மினா சில்க்குக்கும் இடையே சற்றே குழப்பம் ஏற்பட்டது. இரண்டையும் ஒன்றெனக் கருதியவர்களும் உண்டு. ஒரு சின்ன வித்யாசம் தானே தவிர இரண்டும் ஒன்றே தான் என்று கூட கூறி விடலாம். ஆனால், அந்தச் சின்ன வித்யாசத்தை வைத்து தான் பஷ்மினா சில்க் நெசவுக்கு புவிசார் குறியீட்டு எண் வழங்கப்பட்டிருக்கிறது என்கையில் பஷ்மினாவை பஷ்மினா என்று மட்டுமே குறிப்பிட்டு விற்பனை செய்ய வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க ஏற்றுமதி பொருளாதாரக் கொள்கை திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளது. அதனால் பஷ்மினா வேறு, காஷ்மீரி சில்க் வேறு எனும் தெளிவு நமக்கு அவசியமாகிறது.

ஷமினா மற்றும் ஷாதுஷ்  ஷால்கள் குறித்த அறிமுகம்...

shamina_shawls.jpg

காஷ்மீரில் பஷ்மினா தவிர  ‘ஷமினா’ மற்றும்  ‘ஷாதுஷ்’ வகை நெசவுகளும் சிறந்து விளங்குகின்றன. ஷமினா வகை நெசவும் பஷ்மினா ஆடுகளில் இருந்து பெறப்படும் முடியிலிருந்து தான் நெசவு செய்யப்படுகின்றது. ஒரே வித்யாசம் நெசவு செய்யப் பயன்படுத்தும் நூலிழைகளின் தடிமன் மாத்திரமே.

ஷாதுஷ் ஷால்களுக்கு உலக நாடுகளில் தடை ஏன்?

ShahtooshShawl-2.jpg

மேற்சொன்னதில் ஷாதுஷ் வகை நெசவுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த வகை நெசவு செய்ய திபெத் பள்ளத்தாக்குப் பகுதியில் வளரும் அருகி வரும் மான் இனத்தின் முடிக்கற்றைகள் பயன்படுத்தப்படுவதால் அவ்வகை நெசவு மற்றும் விற்பனைக்கு தற்போது உலக நாடுகளிடையே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஷாதுஷ் ஷால்கள் பஷ்மினாவைக் காட்டிலும் மிக மென்மையானவை என்று கூறப்படுகிறது. இவற்றின் தடிமன் 7 முதல் 10 மைக்ரான்கள் மட்டுமே.

shatoosh_shawl.jpg

அதனால் தான் இதிலிருந்து நெசவு செய்யப்படும் ஷால்களை ‘ரிங் ஷால்கள்’ என்று சிறப்புப் பெயரிட்டு அழைக்கிறார்கள். ஏனெனில், இவற்றின் அதி மென்மையால் இந்த வகை ஷால்களை மொத்தமாகத் திரட்டி திருமண நிச்சய மோதிரத்தில் கூட நுழைத்து விட முடியும் என்பதால்.

பஷ்மினா மலையாடுகள் வசந்த காலத்தில் தங்களது ரோமங்களை உதிர்த்து விடும் சுபாவம் கொண்டவை. மீண்டும் அவற்றின் ரோம வளர்ச்சி குளிர்காலத்தில் துவங்கி அதிகரிக்கத் தொடங்கும். ஒரு ஆட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் 80 முதல் 170 கிராம் வரையிலான ரோமங்களைப் பெறலாம்.

பஷ்மினா நெசவின் வரலாறு...

Muslim-shawl-makers-kashmir1867.jpg

இந்தியாவில் நெசவுத் தொழிலின் வளர்ச்சி சிந்து சமவெளி நாகரீக காலத்திலேயே துவங்கி விட்டது. மொஹஞ்சதாரோவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட துறவி அரசனின் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த மூவிழைகொண்ட  நெசவுமுறையே அதற்கான சிறந்த உதாரணம்.

 

காஷ்மீரில் நெசவு செய்யப்பட்ட கம்பளி சால்வைகளைப் பற்றிய குறிப்புகள் கி.மு 3 ஆம் நூற்றாண்டு முதல் 11 ஆம் நூற்றாண்டு வரையிலான ஆப்கானிஸ்தான் வரலாற்றில் உண்டு. ஆயினும் பஷ்மினா நெசவை காஷ்மீரில் ஸ்தாபித்த பெருமை 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த காஷ்மீரின் இஸ்லாமிய மன்னர் ஜெயினுலாபுதீனுக்கு உரியது. மத்திய ஆசியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட சுமார் 700 தேர்ந்த நெசவாளர்களைக் கொண்டு அவர் பஷ்மினா நெசவுமுறையை உருவாக்கினார். கைத்திறன் மிக்க அந்த நெசவாளர்களின் தலைமை நெசவாளர் மிர் சயித் அலி ஹமதானி. இவர்களின் கை வண்ணத்தில் உருவான காஷ்மீர் ஸ்பெஷல் பஷ்மினா ஆடைகள் இன்றைக்கு உலகம் முழுதும் அவர்களின் கைத்திறனைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் மூலமாக காஷ்மீருக்கு அறிமுகமான பியூர் காஷ்மீரி பஷ்மினா ஷால்கள் 100 சதவிகிதம் தூய பஷ்மினா ரோமாங்களால் நெசவு செய்யப்பட்டவை. மனிதர்களின் தேவைக்கேற்ப பஷ்மினாவின் டிமாண்ட் அதிகரித்த போது கைத்தறி நெசவிலிருந்து பஷ்மினா பவர்லூமுக்கு மாறியது. அப்படி மாறுகையில் பஷ்மினா 100 சதம் தூயதாக இல்லாமல் அதனுடன் கம்பளி நூலும் செயற்கை இழைகளும் கலக்கப்பட்டு பஷ்மினா துணிகள் நெசவு செய்யப்பட்டன.

பஷ்மினா ஷாலின் சிறப்புகள்...

  • பஷ்மினா ஷால் உயர் வகுப்பினரிடையே அந்தஸ்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்ட காலங்களும் உண்டு.
  • பஷ்மினா மலையாடுகள் 40 டிகிரி செல்சியஸ் உறைபனியையும் தாங்கிக் கொண்டு உயிர் வாழக்கூடியவை. அவற்றுக்கு அந்த திறனை வழங்குவது அவற்றின் ரோமங்களே. அந்த ரோமங்களில் இருந்து தயாரிக்கப்படும் பஷ்மினா நூலிழைகளில் கம்பளங்கள், ஷால்கள், புடவைகள், ஸ்கார்ப்புகள் உள்ளிட்டவை நெசவு செய்யப்படும் போது அதன் இயல்பான வெதுவெதுப்பும், குளிர் தாங்கும் தன்மையும், மென்மையும் கூட அந்த ஆடைகளுக்கும் கடத்தப்படுகிறது. அதனால் தான் அதிகக் குளிரான இடங்களில் இந்த ஷால்களுக்கான தேவை அதிகமாக இருக்கிறது.
  • பஷ்மினா ஷால்களில் கை எம்பிராய்டரி செய்வது வெகு எளிதாக இருப்பதால் ஆடை வடிவமைப்பாளர்கள் புது ஃபேஷன்களை கிரியேட் செய்யும் போதெல்லாம் பஷ்மினாவுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். பஷ்மினாவில் எந்த வகை ஸ்டைலையும் முயன்று பார்க்கலாம் என்பது அதிலுள்ள வசதி.
  • பஷ்மினா எடை குறைந்த மென்மையான ஆடை வகைகளில் ஒன்று. எனவே லைட் வெயிட் ஆடைகளை விரும்புபவர்களின் முதல் சாய்ஸ் ஆகவும் இதுவே இருக்கிறது.

ஒரிஜினல் பஷ்மினா எங்கே கிடைக்கும்?

pashmina_saree.jpg

பஷ்மினா ஷால்கள் தமிழ்நாட்டில் ஃபேப் இந்தியா போன்ற கைத்தறி ஆடை விற்பனை நிலையங்களில் கிடைக்கலாம். ஒரிஜினல் பஷ்மினா வேண்டுமென்றால் நாம் காஷ்மீருக்குத்தான் போக வேண்டும். இங்கிருப்பதெல்லாம் ஒரிஜினல் என்று நம்ப முடியவில்லை. ஏனென்றால் நம்மூரில் பிரபலமான பெரிய கடைகளில் கூட பெயர் தான் பஷ்மினா, சந்தேரி, பட்டோலா, உப்படா, மங்கலகிரி, ஜம்தானி, என்று விற்கிறார்களே தவிர அவையெல்லாம் ஒரிஜினல் இல்லவே இல்லை. பேட்டர்ன் அப்படியிருக்குமே தவிர ஒரிஜினலின் மற்றெந்த குவாலிட்டியும் போலியில் உணர முடியாது.

http://www.dinamani.com/lifestyle/lifestyle-serials/selai-kattum-pennukkoru-vasamundu/2018/jul/10/காஷ்மீர்-ஸ்பெஷல்-பஷ்மினா-சில்க்-பற்றி-தெரிந்து-கொள்ளுங்கள்-2957174--3.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.