Jump to content

அழகே அழகு...


Recommended Posts

லேயர் கட், ஸ்ட்ரெயிட் கட், யூ கட் தவிர இந்தியன் ஹேர் ஸ்டைலில் புதுசா வேறென்ன இருக்கு?

 
 
teeen_indian_hair_style

தொடர்ந்து ஒரே விதமான ஹேர் ஸ்டைல் போரடித்தது. சரி ஹேர் ஸ்டைலை மாற்றித் தான் பார்ப்போமே என்று பிரபல பியூட்டி பார்லர் போனால் அங்கே விதம் விதமான ஹேர் கட்களை தேர்ந்தெடுக்க பொருத்தமான கேட்டலாக்குகள் என்று எதையும் காணோம். என்ன ஹேர் கட் வேண்டும் என்று  பெயரை  மட்டும் சொன்னால் அவர்களுக்குத் தெரியுமாம், அவர்களாக நமது முகத்துக்குப் பொருத்தமாக இருக்கும் என்றும் ஏதோ சில பெயர்களை சொன்னார்கள். ஒரு வேளை ஹேர் கட் செய்த பிறகு அந்த ஸ்டைல் பிடிக்காமல் போய் விட்டால் என்ன செய்வது? எதற்கு வம்பென்று எப்போதும் போல லேயர் கட் செய்து கொண்டு திரும்பி வந்தோம். எப்போதும் பெண்களுக்கு என்றால் இந்த ஸ்ட்ரெயிட் கட், யூ கட், டீப் யூ கட், லேயர் கட் மட்டும் தானா? அதிலும் பெண் குழந்தைகளுக்கானால் மஷ்ரூம் கட், சம்மர் கட், டயானா கட் இவ்வளவு தானா?! அலுப்பாகத் தான் இருக்கிறதில்லையா? இன்னும் வேறு என்னென்ன விதமான இந்தியன் ஸ்டைல் ஹேர் கட்கள் இருக்கின்றன என்று தேடிப் பார்க்கும் ஆர்வம் அப்போது தான் உயிர்த்தெழுந்தது. 

ஹேர் ஸ்டைலுக்காக முதலில் நம் தமிழர்களின் கவனத்தை ஈர்த்தது யாரென்றால் அது வாணிஸ்ரீ யாகத்தான் இருக்கும். வசந்த மாளிகையில் உயரத்
தூக்கிப் போடப்பட்ட அந்த  ’பம்’ கொண்டையோடு வாணிஸ்ரீயை  யாராலும் மறக்க முடியாது. வாணிஸ்ரீ க்குப் பின் நதியா ஹேர் ஸ்டைலில் மட்டுமல்ல நதியா கம்மல், நதியா மிடி, நதியா கொண்டை, நதியா பொட்டு என்று ஃபேஷன் உலகில் புது டிரெண்ட் செட்டராகவே அவதரித்தார்.  அவருக்குப் பின் 80 களில் பெண்குழந்தைகளுக்கு முடி வெட்டிக் கொள்ள சலூனுக்கு வரும் பெரும்பான்மையான பெற்றோர்கள்  'ஷாலினி கட்' பண்ணுங்க என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்வார்கள். ஷாலினி ஸ்டைல் ஹேர் கட் அப்போது அத்தனை பாப்புலர். இவர்களுக்குப் பின் தர்மத்தின் தலைவன் படத்தில் அறிமுகமான நடிகை கௌதமியின் கர்லி(சுருள்) முடிக் கொண்டைக்கு அநேக ரசிகர்கள் இருந்தார்கள். சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே பாடலிலும் கௌதமியின் கர்லி ஹேர் ஸ்டைல் அழகாகவே இருந்தது. நடுவில் 90 களில் மறைந்த மலையாள நடிகை மோனிகாவின் நீளக் கூந்தலுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள். பிறகு டைட்டானிக் பட ஹீரோயின் ரோஸ், படையப்பா நீலாம்பரி என்று சிலரது ஹேர் ஸ்டைல்கள் பெண்களால் பெரிதும் விரும்பப்பட்டன. அதற்குப் பின் சில காலம் ஹேர் ஸ்டைல் உலகில் கொஞ்சம் வறட்சி! குறிப்பிட்டுச் சொல்லும்படியாக எவருடைய ஹேர் ஸ்டைலும் மனதில் பதிந்ததாக நினைவில்லை. 

நீண்ட இடைவெளிக்குப் பின் சில்லுனு ஒரு காதல் படத்தில் ஜோதிகாவின் ஹேர் ஸ்டைல் கல்லூரி மற்றும் ஐ.டி துறைப் பெண்களால் பெரிதும் நேசிக்கப்பட்டது. ஆனால் அந்த விதமான ஹேர் ஸ்டைல் எல்லோருக்கும் எளிதில் பொருந்தாது என்பது  அதிலுள்ள மைனஸ் பாயிண்ட். ஜோதிகாவுக்குப் பின் அதிக ரசிகர்களை ஈர்த்துக் கொண்டது ’நீ தானே என் பொன் வசந்தம்’ படத்தில் வரும் சமந்தாவின் ஹேர் ஸ்டைல். அவருக்குப் பின் ’நானும் ரவுடி தான்’ படத்தில் பள்ளிக் குழந்தைகள் போல ஹேர் போ மாட்டிக் கொண்டு நடமாடிய நயன்தாராவின் ஹேர் ஸ்டைலுக்கும் பெருவாரியான ரசிகர்கள் இருக்கின்றனராம். இவர்கள் மட்டுமல்ல சமீப காலமாக ஏர்டெல் 4G விளம்பரங்களில் தூள் கிளப்பிக் கொண்டிருக்கும் இளம்பெண் சாஷாவின் ஹேர் ஸ்டைல்க்கும் அதிக ரசிகர்கள் இருக்கிறார்களாம். இவ்வளவு சொல்லி விட்டு லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல் படங்களை கண்ணில் காட்டாமல் கட்டுரையை முடிக்க முடியுமா? இதோ உங்களுக்காக சில பல லேட்டஸ்ட் இந்தியன் ஹேர் ஸ்டைல்கள். இதில் உங்களுக்குப் பொருத்தமானது எதுவோ அதை நீங்களே தேர்ந்தெடுங்கள்.

ஷார்ட் & சிம்பிள் பாப் கட்

short_simple_bop_1.jpg

கியூட் பாப் கட்

cute_bop_11.jpg

இன்வெர்டட் பாப் கட்

inverted_bop_1.jpg

ஸ்மார்ட் லுக் மீடியம் பாப்

smart_look_medium_bop.jpg

மொழி ஜோதிகா கட்

mozhi_jyothika_cut.jpg

ஷாஃப்ட் கர்ல்ஸ் வித் லாங் பேங்ஸ் கட்

soft_curl_with_long_bangs_cut.jpg

ஃபுல் லெங்த் கர்ல் கட்

 

ironed_curls_1.jpg

மீடியம் வேவி ஹேர் கட்

medium_weavy_hair_cut_1.jpg

லாங் லேயர் கட்

long_layer_cut.jpg

கூகுளில் தேடியதில் இந்த ஹேர் ஸ்டைல்கள் மட்டும் தான் சற்று இந்தியத் தனத்துடன் இருப்பதாக தோன்றியது. இவற்றில் பொருத்தமான ஒன்றை அவரவர் விருப்பத்திற்கேற்ப தேர்வு செய்து கொள்ளலாம்.

http://www.dinamani.com/lifestyle/lifestyle-fashion/2016/sep/12/லேயர்-கட்-ஸ்ட்ரெயிட்-கட்-யூ-கட்-தவிர-இந்தியன்-ஹேர்-ஸ்டைலில்-புதுசா-வேறென்ன-இருக்கு-2562449--2.html

 

Link to comment
Share on other sites

என்ன உடை? எங்கு வாங்கலாம்?

ஷாப்பிங் என்றாலே கொண்டாட்டம்தான். அதிலும் தீபாவளி ஷாப்பிங் என்றால் கேட்கவே வேண்டாம். புதுசா என்ன டிரஸ் வாங்கலாம் என்பதைத் தாண்டி புதுசா புதுசா என்னென்ன டிசைன், என்னென்ன வெரைட்டி வந்திருக்கு? இப்போ என்ன டிரெண்ட்? என பார்த்து பார்த்து வாங்குவதே தனி உற்சாகம்தான். இந்த தீபாவளிக்கு புடவை தொடங்கி நவீன ஆடைகள் வரை புதுசா என்னென்ன வந்திருக்குன்னு உங்களுக்கு அறிமுகம் செய்றோம். புதுசு புதுசா வாங்குங்க... தீபாவளியை சந்தோஷமா கொண்டாடுங்க.

2.jpg

சென்னை சில்க்ஸ்

டிசைனர் புடவைகளில் விபன்ஜி லைட் சில்க், விவாகா ஸ்வரோவஸ்கி, பட்டுப் புடவைகளில், நவநாகரிக இக்கத் சாஃப்ட் சில்க், போச்சம்பள்ளி  போன்றவை  புது வரவாக உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டு நூலால் செய்யப்பட்டதால்  லேசாக இருப்பது இதன் சிறப்பம்சம். சாஹித்யம் ஸ்ெபன் சில்க் மென்மையாக ஜரிகை நெசவு செய்யப்பட்டுள்ளதால் கிராண்ட் லுக் கிடைக்கிறது. சென்த்தெரிக் கட் ஒர்க் மற்றும் ஃபேன்சி பேட்ச் வொர்க் பொருத்தப்பட்ட கதானா புடவைகள் இளம் பெண்கள் முதல் வயதானவர்கள் வரை அணியக்கூடிய டிசைன்களில் கிடைக்கின்றன.

2a.jpg

சாகம்பரி சில்க்ஸ்

சர்வ லட்சணம் நிறைந்த டபுள் வார்ப்பு செய்யப்பட்ட ஐஸ்வர்யம் பட்டு, காஞ்சிபுர கலைவண்ணத்தைக் காட்டும் பண்டோரா பட்டு, மென்மையாகவும் 16 வயது முதல் அனைத்து பெண்களும் அணியக் கூடிய வகையில் இருக்கும் மேகதூது, முந்தானையிலும் கொசுவத்திலும் ஒரேமாதிரியான டிசைன் கொண்ட பாட்லி பட்டு இதெல்லாம் இந்த தீபாவளி ஸ்பெஷல். லெனின், மணிப்பூரி, நேகமன், கலம்கரி, பட்டோலா, சர்ட்வால் போன்ற வகை சல்வாரிலும் புது டிசைன்கள் கிடைக்கின்றன.

சுந்தரி சில்க்ஸ்

பட்டுப் புடவைகளில் தங்க சரிகை, வெள்ளி சரிகை நாம் அறிந்தது. இந்த தீபாவளிக்கு பெண்களை கவரும் வண்ணம் காப்பர் ஜரிகை  புடவைகள் அறிமுகம் ஆகியுள்ளன. பட்டோலா, பனாரஸ், ேகாட்டா, சந்தேரி காட்டன், பிரின்டட் சில்க், சுங்கிடி காட்டன்  ேபான்ற வகைகளில் வித விதமான வண்ணங்களில் வித்தியாசமான டிசைனர் புடவைகள் கிடைக்கின்றன. டாப்ஸ், சல்வார், அனார்கலி சல்வார், தாவணி, பிளாசோ பேன்ட்ஸ் என ஏற்கனவே நமக்கு அறிமுகமான வெரைட்டியிலும் புது டிசைன்கள் வந்துள்ளன.

பாக்டம் வியர்ஸ்

குழந்தைகள் முதல் இளம் பெண்கள் வரை அனைவரும் விரும்பும் லெக்கிங்ஸிலும் பல ரகங்கள் இந்த தீபாவளிக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. காட்டன் லெக்கிங்ஸ், ஆங்கிள் லென்த் ஸ்ட்ரெச் லெக்கிங்ஸ், பிரிமியர் விஸ்கோஸ் லெக்கிங்ஸ்கள் என லெக்கிங்ஸ்கள் புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் ஸ்டைலான  அற்புதமான உணர்வை தருகின்றன. ஜீன்ஸ் கிளாத்தில் தைக்கப்பட்ட லெக்கிங்ஸ் வகையான ஜெக்கிங்ஸ், டெனிம் கிளாத் ஜெக்கிங்ஸ் ஆகியவையும் கூட பாக்கெட்டுகளுடன் வசதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

த்ரீ ஃபோர்த் கப்ரி  ஜெக்கிங்ஸ் விளையாடும்பொழுது அணிவதற்கு ஏற்றது போல வடிவமைக்கப்பட்டுள்ளதோடு கண்களைக் கவரும் பலவண்ண நிறங்களிலும் கிடைக்கிறது. நவீன ஆடையான லெக்கிங்ஸுக்கு ஏற்ற புது வகையான டாப்ஸ்களும் பல விதமான மாடல்களில் கிடைக்கிறது.

ரதி சில்க்ஸ்

குழந்தைங்க இல்லாம கொண்டாட்டமா? இதோ குழந்தைகளுக்கான வாவ் கலெக்‌ஷன்ஸ். பெண் குழந்தைகளுக்கான மினி புடவை ரகங்கள் எல்லோருக்கும் அறிமுகமானதுதான். ஆனால், அதிலும் கொஞ்சம் வித்தியாசமா, புதுசா இந்த தீபாவளிக்கு, பிரத்யேகமான முறையில் வடிவமைக்கப்பட்ட நக்ஹத்ரா, சன்ஃபிளவர் வகை மினி புடவை ரகங்கள் அறிமுகமாகி உள்ளன. பல்வேறான வண்ணங்களில் கற்கள் பதிக்கப்பட்டுள்ளதோடு பேட்ச் ஒர்க், லேஸ் ஒர்க் என இந்த ரகம் கண்களை கவர்கிறது.

பெண் குழந்தைகளுக்கு அழகு சேர்க்கும் பாவாடை ரகங்கள் முன்பைவிட அழகாக விதவிதமாக வந்துள்ளன. கரிஸ்பா, சிலாப் மற்றும் வாரணாசி பார்டர், ஜோதிகா பாவாடை, தைனிகா பாவாடை, ஷிவானி, கீர்த்தி, சுசி பட்டர்ஃபிளை பாவாடைகள் என இந்த தீபாவளிக்கு கலெக்‌ஷன் ஏராளம்.

போத்தீஸ்

பெண்களின் இதயம் கவர்ந்த வசுந்தரா பட்டு இப்போது புது டிசைன்களில் வந்துள்ளது. டிசைனர் புடவை ரகங்களில் சைனா நெட் சாரி, த்ரீ டி சாரி, சனா சில்க், சாரியட் பிராஸோ இந்த தீபாவளிக்குப் புதுசு. இளம் பெண்களின் சூப்பர் ஸ்டார் குர்தீயில் இந்த ஆண்டு புதுசு சிந்து குர்தீ. மஸ்தானி மற்றும் மஸ்தகலி சுடிதாரிலும் தீபாவளி கலெக்‌ஷனாக புது டிசைன்கள் வந்துள்ளன.

ராம்ராஜ்

ஆண்களுக்கான கடையாக இருந்த ராம்ராஜ் இப்போது பெண்களுக்கென முதன்முறையாக துணிரகங்களை அறிமுகப்படுத்தி உள்ளது. கேரள பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் ரசாயனக் கலவை இல்லாத, சாயமற்ற முறையில் தயாரிக்கப்படும் ரம்யம் எக்கோ சாரீஸ் இந்த தீபாவளி ஸ்பெஷல். இதே ரகத்தில் புதிதாக சுடிதார் மற்றும் பாவாடை ரகங்கள் வந்திருப்பது இளம்பெண்கள் எதிர்பார்க்காத சர்ப்ரைஸ். நவீன ஆடைகளிலும் புது ரகங்கள் வந்துள்ளன. 

http://kungumam.co.in/ThArticalinnerdetail.aspx?id=3473&id1=118&issue=20161016

Link to comment
Share on other sites

மாடர்ன் மங்கையர் அணிய ஏற்ற புதிய துலிப் பேண்ட்கள்

இளம்பெண்கள் அணிகின்ற நவீன ஆடைகள் என்பவை பிரத்யோக வடிவமைப்புடன் உருவாக்கப்படுகின்றன. இவை அன்றைய கால டிரெண்ட் மற்றும் அணிய லகுவான வடிவுடன் உருவாக்கப்படுகின்றது. இன்றைய கால கட்டத்தில் பெண்கள் அலுவலகம், கல்லூரி மற்றும் வெளி பணிகள் என்றவாறு நாளும் புதிய புதிய ஆடைகளை அணிய வேண்டியதில்லை.

mkl


அதற்கேற்ப ஆடைகள் தனித்தனி சிறப்பு வடிவமைப்பு டிசைன், பேட்டர்ன், வண்ணங்கள் கொண்டவாறு வலம் வருகின்றன. நவீன யுக்திகள் மாடர்ன் மங்கையர் அணியக்கூடிய ஆடைகளான சுடிதார், பைஜாமா, ரசகளி போன்ற ஆடைகளுக்கு ஏற்ற பேன்ட்கள் தனிப்பட்ட வடிவமைப்புடன் உருவாக்கப்படுகிறது.

மேல் சட்டை அமைப்புக்கு ஏற்ற பிரதான பேண்ட் வகைகள் முன்பு ஒரே மாதிரியாக இருந்தன. இன்று லெக்கின்ஸ், இறுக்கமான பேண்ட், பலகோ, ஜெக்கிங்ஸ் போன்றவை வந்துள்ளன. குர்தீஸ் மற்றும் குர்தா அணிவதற்கேற்ற பேண்ட் வகையில் லெக்கின்ஸ் என்ற உடலோடு ஒட்டிகொள்ள கூடிய பேண்ட் தற்போது முதலிடம் பிடிக்கின்றது.

அதுபோல் லாங் சுடிதார், பேன்ஸி சுடிதார் போன்றவைகளுக்கு பேண்ட் என்பது குறுகிய கால் பகுதியும், அகலமான மேற்பகுதியும் கொண்ட பேண்ட்கள் தயாரிக்கப்படுகிறது. மேல்சட்டையில் செய்யப்படும் டிசைன் பார்டர் கால்பகுதியில் பார்டர் ஆக வடிவமைக்கப்படுகிறது.

இறுக்கமான பேண்ட்களுக்கு மாற்றான பலசோ பேண்ட்கள்

இறுக்கமான வகையில் உருவான பேண்ட்களுக்கு மாற்றாக வித்தியாசமான வடிவில் தளர்ந்த வகையிலான ஆடையாக பலசோ பேண்ட்கள் அறிமுகமாயின. இவை அணிய சுலபமானது எந்த பயணத்திற்கும், விழாக்களுக்கும் அணிய ஏற்றவாறு வித்தியாசமான வடிவமைப்பு, வண்ண கலவையுடன் உருவாக்கப்படுகிறது. இடுப்பிலிருந்து கணுக்கால் வரை ஒரே அலகமான விரிந்த பேண்ட்கள் அமைப்பு. முந்தையகால அகல பேண்ட் அமைப்பில் சில வித்தியாசங்கள் மட்டும் செய்யப்பட்டு நவீன மங்கையர் அணிய ஏற்றவாறு உருவாக்கப்படுகிறது. இதில் பெரும்பாலும் பூ டிசைன், ஜியோ மெட்ரிக் பேட்டர்ன் முதலிடத்தை பிடிக்கிறது.

புத்தம் புதிய துலிப் பேண்ட்கள்:-

ஆண்டிற்கு ஓர் பேண்ட் வகை அறிமுகமாவது உண்டு. இந்த ஆண்டின் அறிமுகம் துலிப் பேண்ட். அழகிய மேல்சட்டைக்கு ஏற்ற அதே வண்ணம் மற்றும் மாறுபட்ட வண்ண கலவையுடன் துலிப் பேண்ட்கள் உருவாகின்றன. துலிப் பேண்ட்கள் மற்ற பேண்ட்களை விட மாறுபட்ட வடிவமைப்பு, அணிய ஏற்ற சுலபமான வடிவமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. வரும் விழாக்காலத்திற்கு பெண்கள் விரும்பி வாங்கி அணியும் பேண்ட் வகையாக துலிப் சிறந்த இடம் பிடிக்கும் என நம்பலாம்.

வித்தியாசமான புதிய வடிவமைப்பில் துலிப் பேண்ட்கள்:-

பார்க்க பஞ்சகஞ்ச வேஷ்டி அமைப்பிலான இந்த பேண்ட் கூடுதல் வேலைப்பாட்டுடன் உருவாக்கப்படுகிறது. கணுக்கால் நீண்ட பேண்ட் அமைப்பில் இருந்து மாறுபட்ட கணுக்கால் மேல் பகுதியுடன் பேண்ட் முடிவடைந்து விடும். இந்த பேண்ட் கீழ்பகுதி முக்கோண வடிவில் வெட்டப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இதன் காலி பகுதி முதல் கீழ் கால் பகுதி வரை சுருக்கம் சுருக்கமாய் இணைப்பு செய்யப்பட்டன. கணுக்கால் பட்டை பகுதியில் மேல்சட்டையின் அதே பார்டர் அல்லது மணிகள், லேஸ் போன்றவை வைக்கப்பட்டிருக்கும். இந்த பேண்ட்டிற்கு ஏற்ற மேல் சட்டை என்பது தொடை பகுதி வரை நீண்ட குர்தீஸ் மற்றும் குர்தாக்கள் பொருத்தமானது.

துலிப் பேண்ட்கள் பெரும்பாலும் மென்மையான வண்ணங்களில் தான் உருவாக்கப்படுகிறது. இளம் பச்சை, இளஞ்சிவப்பு, மஞ்சள், லைட்ப்ளூ போன்ற வண்ணங்களும் அதன் மேற்புறம் பேட்ச் மற்றும் எம்பிராய்டரி செய்யப்படும் பேண்ட்கள் கிடைக்கின்றன. துலிப் பேண்ட்கள் பெண்கள் கணுக்கால் அழகை பொலிவுடன் வெளிபடுத்தும் விதமான தனித்துவத்துடன் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

http://vijaytamil.net/மாடர்ன்-மங்கையர்-அணிய-ஏற/

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யுவதிகள் விரும்பும் குர்தீஸ்

KURTI-3.jpg

சந்தை பொருட்களில் எதை எடுத்துக்கொண்டாலும் அவை,அதிக அளவில் பெண்கள் பயன்படுத்தும் பொருளாகவே இருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களில் இருந்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் நவீன சாதனங்கள் ஆனாலும் பெண்களுக்கு என்று தனி முக்கியத்துவமும் அதில் அதிக வகைகளும் இருக்கும். அதேபோல்தான் அணியும் ஆடையிலும். ஆண்களுக்கு என்று எடுத்துக்கொண்டால், பேண்ட், சட்டை, டி-சர்ட், ஜீன்ஸ் , வேட்டி என்று பட்டியல் சீக்கிரம் முடிந்துவிடும். ஆனால் அதே பெண்கள் அணியும் ஆடை வகை என்று எடுத்துக்கொண்டால் பட்டியல் நீளும். போதாதற்கு மேற்குறிப்பிட்ட பேண்ட் ,சட்டை என்று எல்லாவற்றையும் பெண்களும் அணியத்துவங்கி விட்டார்கள், வேட்டி தவிர(கேரளாவில் அதையும் அபகரித்துக்கொண்டார்கள்). அந்த வகையில் குர்தீஸ் என்பது நவீன யுக பெண்கள் அணியும் மற்றுமொறு ஆடை வகை.

குர்தீஸ் என்பது பெண்கள் அணிகின்ற குர்தா வடிவிலான மேல்சட்டை. ஜீன்ஸ் பேண்ட், சுடிதார் மற்றும் லெக்கிங்ஸ்க்கு ஏற்ப அணிகின்ற குர்தீஸ் இன்றைய நாளில் விதவிதமாக வருகின்றன. எண்ணற்ற வண்ணம், வடிவமைப்பு, கூடுதல் கட்டிங்ஸ் மற்றும் அழகிய நெக்குகள் என பலமாடல்கள் வருகின்றன. பருத்தியிலான காட்டன் குர்தீஸ் முதல் ஜார்ஜெட், டஸ்ஸர், காட்டன், பட்டு மற்றும் பூனம் துணிகளில் குர்தீஸ் உருவாக்கப்படுகின்றன.

LEGINS AND KURTI

குர்தா என்பது நீள்சதுரவடிவிலான ஆடையாகும், அரேபிய நாடுகளில் உடுத்தப்பட்ட தாவாப் என்ற ஆண்கள் ஆடையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. பெண்களுக்கு எனும் போது அதுவே குர்தீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது நீண்ட மற்றும் குட்டை வடிவில் கிடைக்கின்றது. பெண்கள் தினமும் அணிகின்றவாறு இலகுவான அதேசமயம் கச்சிதமான வடிவமைப்பில் குர்தீஸ்-களின் வகைகள் உலகளவில் பிரபலமாக உள்ளன. பருத்தி, ஷிப்பான், பட்டு, கதர் குர்தீஸ்கள் அனைத்து காலங்களிலும் அணிய  ஏற்றவாறு உள்ளன. மேலும் உல்லன் குர்தீஸ்கள் குளிர்காலத்தில் அணிய சிறந்த ஆடையாக விளங்குகிறது.

குர்தீஸ் வடிவமைப்பும், வண்ணங்களும் :

குர்தீஸ் முன்பு பூக்கள் அதிகம் நிறைந்த வாறு உருவாக்கப்பட்டன. மேலும் டை & டை மற்றும் மலைவாழ் மக்கள் அச்சு பதிவு ஆடையாக உலா வந்தன. தற்போது. ஏராளமான எம்பிராய்டரி மற்றும் சரிகை, பூ வேலைப்பாடு நிறைந்தவாறும் வருகின்றன.

ஜீன்ஸ்-க்கு ஏற்ற குர்தீஸ் :KUTI EMBRODARY

KUTI EMBRODARY

பெண்கள் அணிகின்ற அனைத்து வகை ஜீன்ஸ் பேண்ட் –க்கு ஏற்ற மேலாடையாக குர்தீஸ் விளங்குகிறது. முன்பு டி-ஷர்ட் தான் ஜின்ஸ்-க்கு நல்ல இணையாக இருந்தது. ஜீன்ஸ் க்கு ஏற்ற குர்தீஸ் என்பது அடர்த்தியான மற்றும் இலகு நிற குர்தீஸ் நன்றாக இருக்கும்.

ரேஷம் எம்பிராய்டரி லாங் குர்தீஸ் :

இவை லெக்கிங்ஸ் மற்றும் ஜீன்ஸ்க்கு அணிய ஏற்ற பிரத்யேகமான நீண்ட குர்திஸ். இதில் ரேஷம் எம்பிராய்டரியில் ஏராளமான பூ மற்றும் ஜிரிகை எம்பிராய்டரி செய்யப்பட்டு வருகின்றன. கழுத்து பகுதியில் ஆடை முழுவதும் எம்பிராய்டரி செய்யப்பட்டு கிடைக்கின்றன. இதில் பல வண்ணத்தில் பிரிண்ட் செய்யப்பட்ட குர்தீஸ் மற்றும் கண்ணாடி எம்பிராய்டரி செய்த குர்தீஸ்களும் வருகின்றன.

அழகிய டிசைனர் குர்தீஸ் :Long-Embroidered-Kurti

Long-Embroidered-Kurti

டிசைனர் குர்தீஸ் என்பதில் சந்தேரி ஸிலிவ்ஸ், டாப்ஸ்டிட்ச், மடிப்பு கொண்ட யோக் ஷார்ட் குர்தா, டிரிம், சைடு டை, பார்டர் வைக்கப்பட்ட கப், பிளைன் குர்தீஸ், ஸ்கூப் நெக் ஷார்ட் குர்தா என்று பல வகைகளில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

யோக் ஷார்ட் குர்தா என்பது ரவுண்ட் நெக் மற்றும் மார்பு பகுதியில் சிறுசிறு மடிப்புகள் கொண்டவாறு தைக்கப்பட்டிருக்கும் குர்தாவின் கீழ் பகுதி இரு ஓரமும் சற்று வளைந்தவாறு இருக்கும்.  டஸ்ஸர் காட்டன் ஷார்ட் குர்தா என்பதில் அழகிய கண்ணாடி எம்பிராய்டரி செய்யப்பட்டு பளபளவென உள்ளது. சந்தேரி பிரிண்ட் மற்றும் ஜெய்பூர் பிரிண்ட் ஷார்ட் குர்தீஸ் வருகின்றன. ஜரிகை பார்டர் கொண்ட குர்தீஸ்களும் விதவிதமான டிசைன்களில் வருகின்றன.

காதி குர்தீஸ் :

சுத்தமான பருத்தி நூலால் நெய்யப்பட்ட காதி துணிகளில் உருவாக்கப்பட்ட குர்தீஸ் என்பது அன்றாட வெளிப்பணிகளுக்கு அணிந்து செல்ல ஏற்றதாக உள்ளது. வெயில்காலத்திலும் , மழைகாலத்திலும் அணிய ஏற்றது.

http://tamil.a2zmedia.in/இளைஞிகள்-விரும்பும்-குர்/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

+++   பாவாடை தாவணியில், பார்த்த உருவத்தை, வாழ்க்கையில் மறக்கவே முடியாதுள்ளது.   +++  :grin:

தலை முறை,   இடை  வெளியாய் இருக்குமோ.......  ஆர்  கண்டது. tw_blush:

Link to comment
Share on other sites

  • 3 months later...

 

பெண்களுக்கான ஆடை வகைகள் சிலவற்றின் தொகுப்பு

Outfits for Smart Occasions

 

 

Comfy Yet Stylish Clothes for Women 

 

 

Guide to Party Dressing For Your Body Type

 

Weekend Outfits for Women

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.