Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

உணவே மருந்து

 
 
உணவே மருந்து
 

நமது சமூ­கம் அச்­சு­றுத்­த­லுக்கு ஆளா­கி­யுள்­ளது. சீரான உண­வுப் பழக்­க­மும், உடற்­ப­யிற்­சி­யும் நல்­லொ­ழுக்­க­மும் உடல் ஆரோக்­கி­யத்­தைத் தக்­க­வைத்து நீண்ட ஆயுளை எமக்­குத் தரு­கின்­றன.

fff.jpg

இன்று நாம் பலவித தொற்­றும் தொற்­றாத நோய்­க­ளுக்கு ஆளாகி அல்­லற்­ப­டு­கி­றோம் முப்­பது வய­தா­னாலே மருந்­து­கள் நம்­மைப் பாது­காக்­கும் நிலைக்­குத் தள்­ளப்­ப­டு­கி­றோம். ஆனா­லும் கவர்ச்­சி­க­ர­மான உண­வு­களை உண்டு ஆடம்­ப­ர­மாக வாழ்­வ­தையே நாம் பெரி­தும் விரும்­பு­கிறோம்.

நமக்கு முன் இருக்­கின்ற உணவு சரி­யா­னதா? ஆரோக்­கி­ய­மா­னதா? சம­வி­கித உணவா? நோய்­களை உரு­வாக்க கார­ண­மா­குமா? இவ்­வு­ண­வு­க­ளால் தேவை­யற்ற அழுக்­கு­கள் நம் உட­லில் சேருமா? சமூ­கத்­துக்கு கேடா­குமா? என யாருமே சிந்­திப்­ப­தில்லை.

 

நம் முன்­னோ­ரின் உண­வுப் பழக்­க­மா­னது ஆரோக்­கி­ய­மாக நீண்­ட­கா­லம் அவர்­களை வாழ வழி­ச­மைத்­தது. சாமை குரக்­கன், வரகு போன்ற தானி­யங்­களை இன்­றைய சிறு­வர்­க­ளுக்கு தெரி­யாது. அதே சிறு­வர்­கள் அவற்றை தாம் வளர்க்­கும் புறாக்­க­ளுக்கு உண­வாக வாங்­கு­கின்­ற­னர். இது காலத்­தின் கொடு­மை­யல்­லவா?

முன்­னோ­ரின் உண­வு­கள்

 

நம் முன்­னோ­ரின் உண­வுப்­ப­ழக்­கங்­கள் நம்­முன் இருக்க நாக­ரிக உண­வு­களைத் தேடி அலை­கி­றோம் வட இந்­தி­யா­வின் கடற்­கரை யோரத்­தில் குடி­யி­ருந்த மக்­கள் மிக நீண்ட காலம் உயிர் வாழ்ந்­த­னர் எனக் கூறப்­ப­டு­கி­றது. அவர்­க­ளது உண­வாக வேட்­டை­யா­டிய மிரு­கங்­க­ளின் இறைச்­சி­யும், தாவர உண­வு­க­ளும் அமைந்­தி­ருந்­தது.

 

உண­வெ­னப்­ப­டு­வது நிலத்தோடு நீரே… என்­கி­றது புற­நா­னூறு எனவே நில­மும் நீரும் சுத்­த­மாக இருக்க வேண்­டி­ய­தும். அவற்­றி­னால் உரு­வா­கும் உண­வு­க­ளுமே ஆரோக்­கி­ய­மா­னது. எம் நடை­முறை வாழ்­வில் பொதி­க­ளில் அடைக்­கப்­பட்ட உண­வு­க­ளுக்கு முத­லி­டம் கிடைக்­கி ­றது.

images-8.jpg

கவர்ச்­சி­க­ர­மான பைக்­கற்­று­க­ளில் மனதை கொள்ளை கொள்­ளும் விளம்­ப­ ரங்­க­ளில் விற்­ப­னை­ யா­கும் உண­வுப் பொருள்­களை அதிக விலை கொடுத்து வாங்கி உண்­கி­றோம். அதுவே மதிப்­பார்ந்த கௌர­வ­மாக கரு­து­கி­றோம்.

பொதி­க­ளில் அடைக்­கப்­பட்ட உண­வு­களை நாம் நோக்­கின் பல­வித தொழில்­நுட்­பங்­க­ளுக்­குள்­ளாகி மிகக் கூடு­த­லான வெப்­பத்தை தாங்கி இர­சா­ய­னக் கல­வை­கள் சேர்க்­கப்­பட்டு பதப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. உண­வின் போச­ணைச் சத்­துக்­கள் நீரி­னால் காற்­றால் வெப்­பத்­தால் மிக மிக விரை­வில் அழிந்து விடும் தன்­மை­யு­டை­யன.

1355693067_topramen.jpg

இவ்­வாறு பல படி­மு­றை­க­ளைத் தாண்டி பொதி­யில் அடைக்­கப்­ப­டும் உண­வு­க­ளில் நாம் எதிர்­பார்க்­கின்ற உட­லுக்­குத் தேவை­யான சத்­துக்­கள் ஏதா­வது கிடைக்­குமா? என்­பதை சிந்­திக்க வேண்­டி­யது எமது கடமை. அது மட்­டு­மல்ல உணவை எடுத்­துக் கொண்­ட­பின் வெற்­றுப் பொதி­களை மண்­ணிலே வீசி விடு­கி­றோம். அவை உக்­கல்­நிலை அடைய பல வரு­டங்­கள் ஆகின்­றன. அவற்றை எரித்து அழிக்க முற்­ப­டும் போது வெளி­வ­ரும் வாயு எம்மை மட்­டு­மல்ல எம்­மைச் சுற்­றி­யுள்ள ­வர்­க­ளுக்­கும் வளிக்­கும் நஞ்­சாக மாறு­கின்­றது.

குதி­ரைக்­கான உணவு

oats.jpg

ஓட்ஸ் என்­னும் தானிய உண­வுக்­கான விளம்­ப­ரம் நம்­ம­வரை அவற்றை நுகர வைக்­கின்­றது. ஓட்ஸ்ட் மேலை நாடு­க­ளில் குதி­ரைக்கு உண­வா­கப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஓட்ஸை விட தர­மான சத்­துக்­கள் மிகச் செறிந்­துள்ள தானி­ய­ங்கள் நம்­மி­டம் உண்டு. அவற்றை நாம் ஓரங்­கட்­டி­விட்டு விளம்­ப­ரத்­துக்க அடி­மை­யாகி பணத்தை விர­யம் செய்து நவீ­னத்­துக்­குள் பிர­வே­கிக்­கி­ றோம். இத­னால் எமது ஆரோக்­கி­யம் காவு கொள்­ளப்­ப­டு­கி­றது.

பழங்­க­ளில் கூட மேலை­நாட்­டுப் பழங்­க­ளையே நாம் விரும்பி உண்­கி­றோம். எமது நாட்­டில் கிடைக்­கின்ற வாழைப்­ப­ழம், மாம்­ப­ழம், பப்­பாசி, தோடை, எலு­மிச்சை, தக்­காளி என்­பன போதி­ய­ளவு நீர்ச்­சத்­தும் உயிர்ச்­சத்­துக்­க­ளும் கொண்­ட­வை­யாக உள்­ளன. போத்­தல்­க­ளில் அடைக்­கப்­பட்ட மென்­பா­னங்­களை அதிக விலை கொடுத்து வழங்­கு­வதை விட குறைந்த செல­வில் நிறைந்த சத்­துக்­களை கொண்ட எமது நாட்­டுப் பழங்­க­ளைக் கொண்டு தயாரிக்கப்படும் பழச்­சாறு உடல் நலத்தை மேம்­ப­டுத்­தும்.

மூன்று வேளை­யும் அதிக மருந்­து­கள்

Tamil-Daily-News-Paper_66765558720.jpg

சிலர் ஓயாது நோய்­க­ளையே சொல்­லிக் கொண்­டி­ருப்­பார்கள். மூன்று வேளை­யும் கொத்­துக் கொத்­தாக மாத்­தி­ரை­களை உட்­கொள்­வர். வைத்­தி­ய­சா­லை­க­ளில் கிளி­னிக் வாங்­கில் வரி­சை­யில் முண்­டி­ய­டிப்­பர். இவை­யெல்­லாம் ஏன்? முத­லில் உணவை மருந்­தா­கக் கொள்ள வேண்­டும். மருந்து பாவிக்க வேண்­டிய முக்­கிய தரு­ணங்­க­ளில் விபத்து , பிர­ச­வம், வயோ­தி­ப­நிலை நோய்­கள் கட்­டா­ய­மாக மருந்­து­களை உட்­கொள்­ள­லாம்.

நோய்க்­கி­டங்­கொ­டேல் என்­கிற ஒளவை மொழிக்­கேற்ப நோயை வெறுத்து ஒறுத்து வாழப் பழ­கிக் கொள்ள வேண்­டும். குறிப்­பிட்ட வய­தின் பின்­னர் நோ ய் தான் வாழ்க்கை என விரக்­தி­யில் வாழும் ஏரா­ள­மா­னோரை இன்று எம் சமூ­கம் கொண்­டுள்­ளது. கார­ணம் தப்­பா­ன­வற்றை தவ­றா­ன­வற்றை வாழ்க்­கைக்கு ஒவ்­வாத பல­வற்றை ஆதா­ர­மாக்கி அவையே கௌர­வம் என­வா­ழும் நிலைக்கு நாம் ஆளாகி விட்­டோம் என்­கிற கசப்­பான உண்­மையை யாவ­ரும் ஏற்­றுத்­தான் ஆக வேண்­டும்.

ag.jpg

பகுத்­துண்டு பல்­லு­யிர் ஓம்பி வாழ்ந்த மனி­தன் இன்று பணத்­துக்­காக வாழத் தொடங்­கி­ய­தால் எதி­லும் பணத்­தையே முதன்­மைப்­ப­டுத்­து­கி­றான். விவ­சாயி குறு­கிய காலத்­தில் அதிக விளைச்­சலை பெறு­வ­தற்­காக வீரி­யம் கொண்ட கிருமி நாசி­னி­கள் உரங்­கள் என்­ப­வற்றை விளைச்­ச­ லுக்கு பயன்­ப­டுத்­து­கி­றான்.

வியா­ பா­ரி­கள் பழங்­களை பழுக்க வைக்க மருந்­து­களை பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். முன்­னர் வேப்­பி­லை­யி­லும் வைக்­கோ­லி­லும் பழுத்த பழங்­கள் மருந்து விசி­றல் மூலம் பழுக்­கின்­றன. இவை யெல்­லாம் புற்­று­நோயை தோற்­று­விக்க கார­ண­மா­கின்­றன. டி.டி.ரி என்­கிற எறும்பு கொல்­லியே பிரி­கை­ய­டை­ வ­தில்லை. கிருமி நாசி­னி­கள் மனித உள்­ளு­றுப்­பு­களை எப்­படி சிதைக்­கும் என்­பதை சிந்­திக்க நாம் மறக்­க­லாமா?

integrative-medicine-bottles.jpg

சூப்­கள் விற்­பனை செய்­கிற உண­வு­வி­டு­தி­கள் ஆங்­காங்கு முளைத்­துள்­ளன. வகை­வ­கை­யான சூப்­கள் பல்­வேறு விலை­க­ளில் விற்­பனை செய்­யப்­ப­டு­கின்­றன. நம்­பண்­பாட்­டில் உள்ள ஒடி­யற்­கூழ் மர­வள்­ளிக் கூழ், கட­லு­ண­வுக்­கூழ் என்­ப­னவே சில நிற­மூட்­டி­கள் சுவை­யூட்­டி­க­ளின் கலப்­ப­டத்­தில் சூப் என பெயர் பெறு­கின்­றன.

இவ்­வாறு சொல்­லிக் கொண்­டே­போ­க­லாம். நமது பிர­தே­சம் ஆரோக்­கி­ய­மாக வாழ்­வ­தற்கு ஏற்ற அத்­தனை வளங்­க­ளும் கொண்­ட­தாக உள்­ளதை முத­லில் நாம் உணர்ந்து கொள்ள வேண்­டும். சுத்­த­மான சுவை­யான நீர் பச்சை இலை­வகை காய்­க­றி­கள் பழங்­கள் என்­பன உட­ன­டி­யாக தாரா­ள­மா­கக் கிடைக்­கின்­றன.

Ponna.jpg

வேலி­க­ளில் படர்­கின்ற பச்­சைக் கொடி­கள் தரும் ஆரோக்­கி­யத்தை பைக்­கற் உண­வு­கள் தரு­வ­தில்லை. வேலி­கள் மதில்­க­ளாக மாறி­விட்­டன. தாவ­ரங்­கள் கொடி­கள் வளர்ச்­சிக்கு வீட்­டின் ஓரங்­களை மரங்­களை நாட்­டிச் செப்­ப­னிட்டு தாவ­ரங்­களை வளர்த்து உண­வுக்­குப் பயன்­ப­டுத்­து­வது சிறந்­தது.

ஆக மனிதா ஆரோக்­கி­யம் விளம்­ப­ரங்­க­ ளால் காவு கொள்­ளப்­ப­டு­வதா? நீரி­ழிவு புற்­று­நோய் மார­டைப்பு, உயர் குரு­தி­ய­முக்­கம் என்­னும் நோய்­கள் சமு­தா­யத்­தில் இருந்து விரட்டி பழக்க இன்றே இந்த நிமி­ட­மும் உன் ஆரோக்­கி­யத்­தைத் தக்க வைத்­துக்­கொள்.

food_2899367f.jpg

சட்­டைப்­பை­க­ளில் அழ­காக சுற்­றி­ வைத்­தி­ருக்­கும் மாத்­தி­ரைப்­பொட்­டலங்களை உன்னை விட்டு மட்­டு­மல்ல சமூ­கத்தை விட்­டும் தூர வீசி யெறி. சத்­து­ண­வு­க­ளைத் தேடி உண்டு ஆரோக்­கி­யத்­தோடு வாழ முனைந்­திடு. நோய்­க­ளா­லும் ஆரோக்­கி­ய­மின்­மை­யா­லும் பொலி­வி­ழந்து நிற்­கும் எம் சமூ­கம் போசாக்­கி­னால் உருண்டு திரண்டு வாழ இன்றே உன்னை நீ செப்­ப­னிட்டு ஆரோக்­கி­ய­மான சமூ­கத்தை கட்­டி­யெ­ழுப்பு. அதுவே மனி­தம் வாழும் கோயில் உணர்­வாயா? திருந்­து­வாயா?

http://uthayandaily.com

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

நீரி­ழிவும் மன அழுத்­தமும்

 

 

நீரி­ழிவும் மன அழுத்­தமும் ஒன்­றுக்­கொன்று நெருக்­க­மா­னவை... பிரிக்க முடி­யா­தவை... நீண்­ட­கா­ல­மாக சர்க்­கரை நோயினால் பாதிக்­கப்­பட்­டி­ருந்தால் மனச்­சோர்வு நோய் தாக்­கு­வ­தற்­கான வாய்ப்பு அதிகம் இருக்­கி­றது. அதே­போல மனச்­சோர்வு நோயால் அவஸ்தை பட்­டுக்­கொண்­டி­ருந்­தாலும் அது நீரி­ழிவு  நோயில் கொண்டு வந்­து­விடும் அபா­யமும் இருக்­கி­றது.மூன்று வேளையும் மூக்கைப் பிடிக்க சாப்­பிட்டு விட்டு, எந்த வேலையும் செய்­யாமல் புகை, மது போன்ற பழக்க வழக்­கங்­க­ளுடன் உடலை குண்­டாக்­கிக்­கொண்டே இருந்தால் ‘பி.எம்.ஐ.’ எனப்­படும் (Body mass index) அதி­க­ரிக்கும். பி.எம்.ஐ அதி­க­ரிக்க அதி­க­ரிக்க நீரி­ழிவு நோய் வரக்­கூ­டிய வாய்ப்பும் அதிகம்.

Stress.jpg

சமீ­பத்தில் அமெ­ரிக்­காவில் நடத்­தப்­பட்ட ஓர் ஆய்வில் பத்து சத­வீதம் பேருக்கு நீரி­ழிவு  நோய் இருப்­பதும் அதிலும் 60 வயதை நெருங்­கு­ப­வர்­க­ளாக இருந்தால் சுமார் 23 சத­வி­கிதம்  பேருக்கு கண்­டிப்­பாக நீரி­ழிவு நோய் இருப்­ப­தா­கவும் கண்­ட­றிந்­தி­ருக்­கி­றார்கள்.உடல் உழைப்பு இல்­லாமை, உடல் பருமன் போன்­றவை நீரி­ழிவு நோய் வரு­வ­தற்­கான கார­ணி­க­ளாக சொல்­லப்­பட்­டாலும் மேற்­சொன்ன ஆய்வில் இன்­னொன்றும் தெரி­ய­வந்­தது. அது மனச்­சோர்வு நோயால் சிர­மப்­பட்­டாலும் நீரி­ழிவு  நோய் வரும் வாய்ப்பு அதிகம் என்­கிற உண்­மையே. பெண்­க­ளாக இருப்பின் இந்த ரிஸ்க் இன்னும் அதிகம்.

அதா­வது, மனச்­சோர்வு பாதித்த ஆண்­களைக் காட்­டிலும் பெண்­க­ளுக்கு நீரி­ழிவு  நோய் வரும் வாய்ப்பு அதிகம். இதையே மாற்றிப் போட்டு பார்க்­கலாம். அதா­வது, நீரி­ழிவு  நோயி­லி­ருந்து மனச்­சோர்வு நோய். நீரி­ழிவு வியாதி இல்­லாத பெண்­களைக் காட்­டிலும் நீரி­ழிவு நோய் இருக்கும் பெண்­க­ளுக்கு மனச்­சோர்வு வரு­வ­தற்கு 29 சத­வீதம் வாய்ப்பு இருப்­ப­தாக ஆய்­வுகள் தெரி­விக்­கின்­றன. 10 ஆண்­டு­களில் கிட்­டத்­தட்ட 50 ஆயிரம் பேரிடம் நடத்­தப்­பட்ட தொடர் ஆய்­வு­களின் முடி­வு­கள்தான் இவை.

எல்லாம் சரி, நீரி­ழிவு நோய் வந்தால் ஏன் மனச்­சோர்வு வரு­கி­றது? நீரி­ழிவு நோயினால் நமது உடலில் ஏற்­படும் உயிர் வேதி­யியல் மாற்­றங்கள் ஒரு காரணம். அந்த நோயுடன் நடத்­தக்­கூ­டிய வாழ்க்கை இருக்­கி­றதே... அது இன்­னொரு காரணம். பாதிப் பேருக்கு மேல் தனக்கு சர்க்­கரை இருக்­கி­றது என்று தெரி­ய­வந்த அந்த நாளில் ஏதோ உயிர்­கொல்லி நோய் வந்­ததைப் போன்று அதீத மனச்­சோர்­வுக்கு உள்­ளா­கி­றார்கள்.‘பின்ன என்ன சார், அதை சாப்­பிடக் கூடாது; இதைத் தொடக்­கூ­டாது என்று ஏகப்­பட்ட உணவுக் கட்­டுப்­பாடு. கால் பாதம் வேறு திகு­தி­குன்னு எரி­யுது. ஸ்பெஷல் செருப்பு போடுங்­கன்னு டாக்டர் சொல்றார். நேரத்­துக்கு உணவு சாப்­பி­ட­லைன்னா குளுக்கோஸ் டமார்னு இறங்­கி­ருது. முன்­னாடி மாதிரி தாம்­பத்­தி­யத்­திலும் ஆர்வம் இல்லை...’ என்ற ரீதியில் நீரி­ழிவு நோயா­ளிகள் புலம்­பு­வதில் ஏகப்­பட்ட நடை­முறை உண்­மைகள் உண்டு.

இளம் வயதில் நீரி­ழிவு நோய் தாக்­கிய ஆண்­களில் பல­ருக்கு ஆண்மை கோளாறு (Erectile dysfunction) மிகப் பெரிய உறவு சிக்­கல்­க­ளுக்கு வழி­வ­குக்­கி­றது என்­பது கசப்­பான உண்மை. இதன் விளை­வா­கவும் மன உளைச்சல் ஏற்­ப­டு­கி­றது. இத­னுடன் கூட கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத சர்க்­க­ரையின் விளை­வாக உடலின் முக்­கிய உறுப்­புகள் ஒவ்­வொன்றும் பாதிக்­கப்­பட்­டு­வி­டு­கின்­றன.இவை எல்லாம் ஒன்­று­கூ­டிதான் ஒரு நோயா­ளிக்கு மனச்­சோர்வை உண்­டாக்­கு­கின்­றன. கவ­னிக்­கவும், கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டாத நீரி­ழிவே  இங்கு முக்­கிய குற்­ற­வாளி. நல்ல கட்­டுப்­பாட்­டுடன் குளுக்கோஸ் இருந்தால் எதற்கும் பயப்­பட வேண்­டி­ய­தில்லை.சர்க்­க­ரையின் அளவு கட்­டுக்குள் இருக்க மருந்து, மாத்­தி­ரைகள், இன்­சுலின் இவை எல்லாம் போக நல்ல மன ஆரோக்­கி­யமும் அவ­சி­யமே. நன்கு மருந்­துகள் உட்­கொண்­டாலும் சில­ருக்கு சர்க்­கரை கட்­டுக்குள் வராது. துருவிப் பார்த்தால் ஏதோ ஒரு மன உளைச்­சலில் சிக்கித் தவித்துக் கொண்­டி­ருப்­பார்கள்.

அந்தப் பிரச்சி­னை­களை உள்­ளன்­போடு அணுகி தக்க ஆலோ­சனை கூறி, தேவைப்­பட்டால் மன­நல மருத்­து­வ­ரிடம் அழைத்துச் சென்று தகுந்த சிகிச்சை எடுத்­துக்­கொண்­டாலே போதும். மனமும் சுக­மாகி, அதன் விளை­வாக இது­வரை கட்­டுக்குள் வராத சர்க்­க­ரையும் தற்­போது நல்ல கட்­டுப்­பாட்­டுக்குள் வந்­து­விடும்.நீரி­ழிவு நோயின் தாக்­கத்­தி­னால்தான் நோயாளி மிகவும் சோர்­வாக இருக்­கிறார். எந்த நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பாடு இல்­லாமல் தனி­மையை விரும்­பு­கிறார். சரி­யாக சாப்­பி­டு­வ­தில்லை; தூங்­கு­வது இல்லை என்று பலர் சொல்லக் கேட்­டி­ருக்­கலாம்.

இவை மன­நோயின் ஆரம்ப அறி­கு­றிகள். இதை உடல் கோளாறு என்று தப்­பாக அர்த்தம் கற்­பித்­துக்­கொள்ளும் சூழ்­நி­லையை தவிர்க்க வேண்டும். நோயா­ளி­களின் உற­வி­னர்கள் மட்டும் அல்ல... ஆரம்ப நிலை சிகிச்சை அளிக்கும் மருத்து வர்­களே கூட நீரி­ழிவு நோயா­ளிகள் இடையே தென்­படும் மனச்­சோர்வு நோய்க்­கான அறி­கு­றி­களை கவ­னிக்க தவ­றி­வி­டவும் வாய்ப்பு உண்டு. மருத்­துவர் உட­னான ஆலோ­சனை நேரம் குறை­வாக இருப்­பது மட்­டு­மல்­லாமல் - பொது மருத்­து­வர்கள் இடையே மன­நல விழிப்­பு­ணர்வு மேலும் வேண்டும் என்­ப­தையே இது உணர்த்­து­கி­றது. உட­லுக்கும் மன­துக்கும் உள்ள நெருங்­கிய தொடர்பை நிரூ­பிக்கும் வித­மா­கத்தான் நீரி­ழிவு நோய்க்கும் மனச்­சோர்­வுக்­கு­மான உறவு கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.நல்ல உணவு பழக்­கங்கள், தீயப் பழக்­கங்கள் இல்­லாத தூய வாழ்க்கை நடை­மு­றைகள், சரி­யான நேரத்தில் அளிக்­கப்­படும் தர­மான சிகிச்­சைகள், ரிலாக்­ஸான வாழ்க்கை முறை, நல்ல சிந்­தனை - இவை எல்லாம் ஆரோக்­கிய வாழ்வின் ரக­சி­யங்கள் என்­பதை சொல்­லவும் வேண்­டுமா?

 

மனச்­சோர்­வுக்­கான அறி­கு­றிகள்!

மன அழுத்­தத்­துக்­கென்று சில அறி­கு­றிகள் இருக்­கின்­றன. கவலை, நம்­பிக்­கை­யின்மை, தோல்வி உணர்வு, குற்ற உணர்வு, எதிலும் மகிழ்ச்­சி­யின்மை, தற்­கொலை எண்­ணங்கள், திடீ­ரென பொங்கி வரும் அழுகை, எதிலும் முடிவு எடுக்க முடி­யாமை, தானே குற்­ற­வாளி என்­கிற எண்ணம்,  இவை எல்லாம் மன ரீதி­யான அறி­கு­றிகள். அள­வுக்கு அதி­க­மான சோர்வு, வேலையில் விருப்­ப­மின்மை, தூக்கம், பசி­யின்மை, எடை குறைந்து போதல், பாலுணர்வு குறைந்தோ அல்லது இல்லாமலோ போதல் - இவை எல்லாம் உடல் ரீதியான அறிகுறிகள். மேற்கூறிய அறிகுறிகள் அவ்வப்போது தென்படுவது பிரச்சினை இல்லை.சுமார் இரண்டு வாரங்களுக்கும் மேலாக ஒரு நாளின் பெரும்பான்மை நேரத்தை, இந்த அறிகுறிகள் ஒரு நபரிடம் தென்பட்டால் அவர் மனச்சோர்வு நோயால் அவதிப்படுகிறார் என்பதை உணருங்கள். அவர் உடனடியாக தக்க மனநல ஆலோசனை பெற வேண்டியது அவசியம். உடலும் மனமும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்பதற்கு இது இன்னொரு சான்று !

http://www.virakesari.lk/article/21745

Link to comment
Share on other sites

ஆடு, கோழி, மீன், இறால்... தரமான இறைச்சியைக் கண்டுபிடிப்பது எப்படி?

`உணவு` என்ற மூன்றெழுத்து வார்த்தைக்காக ஒவ்வொரு மனிதனும் ஓடிக்கொண்டிருக்கிறான். அதற்காகத்தான் எத்தனை எத்தனை போராட்டங்கள். மனிதன் உள்பட ஒவ்வோர் உயிரினமும் உயிர்வாழ உணவு அவசியம். ஆனால், இன்றைய காலகட்டத்தில், நாம் உண்ணும் உணவு பாதுகாப்பானதா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அதிலும் சைவப் பிரியர்களைவிட அசைவப்பிரியர்கள் மத்தியில் இந்தக் கேள்விகள் அதிகம் என ஆய்வு சொல்கிறது. நாம் உண்ணும் இறைச்சி உடலுக்குப் பாதுகாப்பானதா... அவை தரமானதா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழக்கூடிய ஒன்று. இறைச்சி வாங்கும்போது நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும், உணவுக்கூடங்களில் செய்யவேண்டிய வழிமுறைகள் என்ன என்பதை விவரிக்கிறார் உணவுப் பாதுகாப்பு வல்லுநர் பசுபதி.

சிக்கன் 65

உணவைப் பொறுத்தமட்டில் மொத்தம் 9 உணவுச் சட்டங்கள் உள்ளன. இதில் உணவின் தரம், பாதுகாப்பு என அனைத்தும் அடங்கும். இதில் பசுபதிஇறைச்சி தொடர்பானவை நான்காவது இடத்தில் உள்ளன. இன்றைய காலக்கட்டத்தில் எந்த ஓர் உணவும் 100 சதவிகிதம் சுத்தமானதோ, பாதுகாப்பானதோ இல்லை. ஆனால், நாம் நம்மால் முடிந்த அளவுக்கு அதனை சுத்தமானதாகவும் பாதுகாப்பானதாகவும் அமைத்துக்கொள்ள முடியும். இறைச்சியைப் பொறுத்தவரை, மக்களுக்கு அவ்வளவாக விழிப்புஉணர்வு இல்லை என்பதே உண்மை. முதலில் இறைச்சி எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

வெட்டப்படாத முழு இறைச்சியைச் சாதாரண வெப்பநிலையில் 2 மணி நேரம் வரை வைத்திருந்தால் எந்தப் பிரச்னையும் இல்லை. குளிரூட்டப்பட்ட இடத்தில் (0 - 5 டிகிரி) இருந்தால் ஒருநாள் வைத்திருக்கலாம். அதனை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்தவில்லையெனில், மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் (-18 முதல் -20 டிகிரி) பாதுகாக்க வேண்டும். அதிலிருந்து வெளியே எடுத்தவுடனேயே சமைக்கக் கூடாது. மிகவும் குளிரூட்டப்பட்ட இடத்தில் இருந்து குளிரூட்டப்பட்ட இடத்தில் சில மணி நேரம் பாதுகாக்கப்பட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் ஓடும் நீரில் நன்றாகக் கழுவிவிட்டு பிறகு பயன்படுத்த வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருப்பதால் பலர் அதனை வெந்நீரில் சுத்தம் செய்கின்றனர். அது மிகவும் தவறு என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். இறைச்சி குளிர்ந்து இருந்தால், அது பழைய இறைச்சி என்று நினைக்கிறார்கள். ஆனால், அதுவே பாதுகாக்கப்பட்ட இறைச்சி.

சிக்கன்

நல்ல கோழி இறைச்சியை எப்படி அறிவது?

இறைச்சியை நசுக்கிப் பார்த்தால் அதிலிருந்து தண்ணீர்வரக் கூடாது. காரணம், நிறைய இடங்களில் எடைக்காகத்  தண்ணீரை சேர்க்கிறார்கள்.

இறைச்சி சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.

நன்றாக அழுத்திப் பார்த்தால், உள்ளே அமுங்கி சிக்கன் உடையக் கூடாது.

மேற்புறங்களில் பச்சை நிறப் படிவங்கள் இருக்கக் கூடாது.

ஆட்டு இறைச்சி கண்டறிவது எப்படி?

இறைச்சி பழையதாக இருந்தால் அழுத்தித் தொடும்போது உடையும்.     

சிவந்த நிறத்தில் இருக்க வேண்டும்.

பழுப்பு நிறத்தில் இருந்தால் அது பாதுகாப்பானது அல்ல என்பதை உணர வேண்டும்.

இறைச்சியில் அதிக வழுவழுப்புத் தன்மை இருந்தாலும் அது பாதுகாப்பானது அல்ல.  

மீன்

மீன் உணவு எவ்வாறு கணிப்பது?
மீன் கண்ணில் வெளிச்சம் அடித்துப் பார்த்தால், எதிரே பிரதிபலிக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் மட்டுமே பாதுகாப்பான மீன்.
செவுள்களில் சிவந்த நிறம் இருக்க வேன்டும். நீல நிறத்திலோ பழுப்பு நிறத்திலோ இருந்தால், அது உணவுக்கு ஏற்ற மீன் உணவு அல்ல.
வயிற்றுப் பகுதியிலோ துடுப்புப் பகுதியிலோ காயங்கள் இருந்தால், அதனைப் பயன்படுத்துவது நல்லதல்ல. எப்போதும் குளிரூட்டப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்பட வேண்டும்.

இறால்மீன் உணவு எப்படிக் கண்டறிவது ?

இறாலில் குடற்பகுதி அகற்றி இருக்க வேண்டும்.

தலைப் பகுதியில் மஞ்சள் நிற பொட்டுக்கள் இருந்தால், அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

வழுவழுப்புத் தன்மை இருக்கக் கூடாது.

இறைச்சிக் கூடங்களில் பின்பற்றவேண்டியவை

பெரிய இறைச்சிக் கூடங்களில் இறைச்சி பேக் செய்து இருக்கும்பட்சத்தில் பேக் செய்த தேதி, பேக் செய்த நாள்களில் இருந்து எத்தனை நாளில் பயன்படுத்த வேண்டும் என்ற விவரத்தைக் குறிக்க வேண்டும்.

சுகாதாரப் பரிசோதனைகளுக்கு உட்பட்டு இருப்பதை வலியுறுத்தும் வகையில் சான்றிதழ்கள் வைத்திருக்க வேண்டும்.

இறைச்சிக் கூடங்களில் பூச்சி போன்ற சிறு உயிரினக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வோர் இறைச்சிக்கும் வெவ்வேறு வெட்டுப் பலகைகளைப் பயன்படுத்த வேண்டும்.

இறைச்சியை வெட்டப் பயன்படுத்தப்படும் உபகரணத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள தேவையானப் பொருள்களைப் பயன்படுத்த வேண்டும்.   

இறைச்சி

கிராமங்களில் இருக்கும் இறைச்சிக் கூடங்களில் வெவ்வேறு இறைச்சிகளுக்கு வெவ்வேறு வெட்டுப்பலகை பயன்படுத்த முடியாத பட்சத்தில் உப்பினைக் கொண்டு நன்றாக ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்தல் நல்லது.

http://www.vikatan.com/news/health/94998-how-to-find-quality-meat-goat-chicken-fish.html

Link to comment
Share on other sites

சர்க்கரை நோயாளிகள் சுய பரிசோதனை செய்து கொள்ளலாமா..?

இன்றைய திகதியில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டேயிருக்கிறது. உடல் உழைப்பு குறைப்பு, உடற்பயிற்சியின்மை, மாற்றியமைத்துக் கொண்ட உணவு வகைகளும், உணவு பழக்கவழக்கங்கள் ஆகிய காரணங்களால் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. இதில் பலர் தங்களின் சர்க்கரை அளவை தாங்களாகவே தினமும் பரிசோதித்து கொள்கிறார்கள். 

sugarrrr.jpg

பொதுவாக நீரிழிவு நோயாளிகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சில கருவிகள் மூலம் சோதனை செய்து தாங்களாகவே அறிந்து கொள்கின்றனர். தினமும் பரிசோதனை நடத்தி அதற்கு தகுந்தவாறு உடல் நிலையை கவனித்துக் கொள்கின்றனர். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்தவர்கள் தினமும் இன்சுலின் மருந்து ஊசி போட்டுக் கொள்கின்றனர். குறைந்த அளவில் இருப்பவர்கள் மருந்து மாத்திரை எடுத்துக் கொள்கின்றனர். உணவில் கட்டுப்பாடும், உடற்பயிற்சியும் மேற்கொள்கின்றனர்.  

இந்த நிலையில் இன்சுலின் ஊசி மருந்து பயன்படுத்தாத ‘டைப் 2’ நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடலில் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தினமும் தாங்களாகவே பரிசோதிக்க வேண்டியதில்லை. வைத்தியர்கள் அறிவுரையின்படி மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் முறைப்படி தினமும் உடற்பயிற்சி செய்தால் போதும், சர்க்கரை நோய் கட்டுப்படும். மாறாக அவர்களாகவே சர்க்கரை அளவு பரிசோதனை செய்து நீரிழிவு நோய் எதிர்ப்பு மாத்திரைகளை சாப்பிடக் கூடாது. அவ்வாறு செய்தால் மயக்கம், கண் பார்வை பாதிப்பு, மூளை பாதிப்பு, சிறுநீரகம் பாதிப்பு போன்றவை பக்கவிளைவுகள் ஏற்படும்.

இரத்தத்தில் சர்க்கரை அளவு இருப்பதற்கு தகுந்தவாறு 3 மாதத்துக்கு ஒரு முறை மருந்து, மாத்திரைகளை மாற்றி டொக்டர்கள் பரிந்துரை செய்கின்றனர். எனவே அதற்குரிய மாத்திரைகளை சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் எதிர் விளைவுகள் ஏற்படும் . அதே சமயத்தில் இன்சுலின் பயன்படுத்தும் ‘டைப்-2’ நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தினமும் பரிசோதித்து கொள்வது அவசியம். 

வைத்தியர்.ராஜேஷ்  

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/21830

Link to comment
Share on other sites

மருத்துவத்தின் மகத்தான புரட்சி பிளாஸ்டிக் சர்ஜரி! #WorldPlasticSurgeryDay

மனிதனின் உடலிலுள்ள நோய்களைக் கண்டறிந்து அதனை குணப்படுத்துவதே மருத்துவம். போதிதர்மர் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட சில மருத்துவக் குறிப்புகள்கூட இன்றும் நமக்குக் கைகொடுத்து உதவுகின்றன. மருத்துவத்தில், எத்தனையோ பேர் என்னென்னவோ கண்டுபிடித்து மருத்துவத் துறையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் சென்றிருக்கிறார்கள்; இன்னும் நிறையப் பேர் நகர்த்திச் செல்லக் காத்திருக்கிறார்கள். இன்று மருத்துவத்தில் எண்ணிலடங்காத புதுப்புது தொழில்நுட்பங்களும் சிகிச்சைகளும் நம்மை பிரமிக்கவைக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்கின்றன. அதிலும் குறிப்பாக, தன் உடலமைப்பையே தனக்குப் பிடித்ததுபோல மாற்றி அமைத்துக்கொள்ளும் பிளாஸ்டிக் சர்ஜரி இன்று அதிகமாகிவருகிறது. இந்த அறுவைசிகிச்சை பற்றியும் இதிலுள்ள தொழில்நுட்பங்கள் பற்றியும் விரிவாகச் சொல்கிறார் பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் சசிகுமார் முத்து.

  அழகு பெண்

வரலாறு

மருத்துவத்தின் மிக முக்கிய பிரிவான அறுவைசிகிச்சை முறையில், உலகளவில் சாதித்த பெருமை சுஸ்ருதரையே சாரும். இவர் `சுஸ்ருதா சம்ஹிதா’ என்ற அற்புதமான மருத்துவ நூலை கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறார். ஆனால், அந்த மூல நூல் நமக்குக் கிடைக்கவில்லை. மூல நூலின் மறு பதிப்பாக கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிடைத்த நூலில் இருந்துதான் நாம் இன்று சுஸ்ருதரின் அருமை, பெருமைகளைத் தெரிந்துகொண்டிருக்கிறோம். இவரை `அறுவைசிகிச்சை மருத்துவத்தின் தந்தை’ (Father of Surgery)பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை நிபுணர் சசிகுமார் முத்து என இன்று உலக அறிஞர்கள் போற்றுகின்றனர். சுஸ்ருதர், பலவகை அறுவைசிகிச்சை முறைகளுக்குப் பிரபலமானவராகக் கருதப்பட்டாலும், இன்று நாம் அவரை அதிகமாக நினைவுகூர்வது அவர் செய்த பிளாஸ்டிக் சர்ஜரிக்குத்தான். இந்த முறையை முதன்முதலில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் சுஸ்ருதர்தான். அவர் செய்த அறுவைசிகிச்சை இன்று `RhinoPlasty’ என அழைக்கப்படுகிறது. இதில் ஒருவர் இழந்த மூக்கை மீண்டும் பெறலாம். அந்தக் காலத்தில் தவறு செய்பவர்களுக்குக் கடும் தண்டனை வழங்கப்பட்டதை வரலாறின் மூலம் நாம் அறிவோம். அப்படி வழங்கப்பட்ட கடும் தண்டனைகளில் ஒன்று, தவறு செய்தவரின் மூக்கை அறுப்பது. அப்போதெல்லாம், ஒருவரின் மூக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் இருந்தால், அவருக்கு சமுதாயத்தில் நன்மதிப்புக் கிடைத்தது. அது, கௌரவத்தின் அடையாளமாகக் கருதப்பட்டது. இந்த நிலையில்தான், தவறு செய்து மூக்கறுப்பட்டவர்களைக் காப்பாற்ற சுஸ்ருதர் முன்வந்தார்.

ஒருவரின் அறுபட்ட மூக்கைச் சரிசெய்ய, மூக்கின் அளவு, உருவ அமைப்பு ஆகியவை கணக்கிடப்படும். அதே அளவிலும், உருவ அமைப்பிலுமான தோலை ஒருவரின் முன்னந்தலையில் (நெற்றியில்) வரைந்து, பின் அதை அப்படியே கீறி எடுப்பார்கள். அதைக்கொண்டு, அறுபட்ட மூக்கின் பகுதியை நிரப்பி தையல் போடுவார்கள். இந்த மாபெரும் மருத்துவ முறையை சுஸ்ருதர் கையாண்டார். அறுவைசிகிச்சை செய்யப்பட்ட புதிய மூக்கின் பகுதி ஒன்றுசேர சிறிது காலம் பிடிக்கும். நெற்றியில் தோல் எடுத்த பகுதி, இந்தக் காயம் ஆறுவதற்கு முன்பே வளர்ந்து மீண்டும் ஒட்டிக்கொள்ளும். எனவே, முன்னந்தலையில் எந்த நஷ்டமும் இல்லாமல் இழந்த மூக்கை ஒருவர் மீண்டும் பெறலாம். சுஸ்ருதரின் இந்த வெற்றிகரமான சிகிச்சை காரணமாக, அவர் `பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை’ என்றும் அழைக்கப்பட்டார்.

பிளாஸ்டிக் சர்ஜரி - பிரிவுகள்...

மறுசீரமைப்பு அறுவைசிகிச்சை (Reconstructive Surgery)

இந்த அறுவைசிகிச்சையில் தீக்காயங்களை சீரமைத்தல், உதட்டில் பிளவு போன்ற பிறப்பிலேயே இருக்கும் பிரச்னைகளைச் சரிசெய்தல் ஆகியவை அடங்கும்.

ஒப்பனை அறுவைசிகிச்சை (Cosmetic surgery)

இது, தன் உடலமைப்பை, தனக்குப் பிடித்ததுபோல் அமைத்துக்கொள்ளச் செய்யப்படும் அறுவைசிகிச்சை. இதில், மார்பகச் சீரமைப்பு, தலைமுடியைச் சீரமைத்தல், வயிறு, இடுப்பு போன்ற இடங்களில் உள்ள கொழுப்பை நீக்குதல், உடல் பாகங்களை மாற்றி அமைத்தல் ஆகியவை அடங்கும். இது, தங்கள் அழகுக்காகப் பலர் செய்துகொள்ளும் அறுவைசிகிச்சை.

கை அறுவைசிகிச்சை (Hand Surgery)

வெட்டுக்காயம், கை விரல்கள் வெட்டப்பட்டு தனியாக இருந்தால், அவற்றைச் சேர்த்து ஒட்டவைத்து, மீண்டும் பழையநிலைக்கு மாற உதவி செய்வது இந்த அறுவைசிகிச்சை.

பிளாஸ்டிக் சர்ஜரி 

அறுவைசிகிச்சைக்கு முன்னர்...

பொதுவாக, தீ விபத்தினால் ஏற்பட்ட காயங்களுக்கு எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சிகிச்சை செய்யலாம். பிறப்பிலேயே உடலில் மாற்றம் உள்ளவர்களுக்கும் அவர்களின் நலன் கருதி உடனடி சிகிச்சை செய்யலாம். ஆனால், பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு, முதலில் அவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும்... `இந்த சிகிச்சை மேற்கொண்டால், இப்படித்தான் இருக்கும்; இதை எல்லாம் பின்பற்ற வேண்டும்’ என அவர்களுக்குச் சொல்லிப் புரியவைக்க வேண்டும். அவர்கள் அதையெல்லாம் புரிந்துகொள்ள, குறிப்பிட்ட கால அவகாசமும் வழங்க வேண்டும். அதன் பிறகும், அவர்கள் இந்தச் சிகிச்சையை செய்துகொள்ள விரும்பினால், செய்து கொள்ளலாம். முதலில் அவர்களுக்கு இதைச் செய்துகொள்ள தன்னம்பிக்கை இருக்க வேண்டும்.

தகுதி

மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை செய்துகொள்ள எந்தத் தகுதியும் தேவை இல்லை. காரணம், தீக்காயம், பிறப்பிலேயே மாற்றம் போன்றவை அவர்களின் நலன் கருதியும் உயிருக்கு முக்கியத்துவம் கொடுத்தும் செய்யப்படுவது. ஆனால், ஒப்பனை அறுவை சிகிச்சை செய்துகொள்ள 18 வயது நிரம்பி இருப்பது நல்லது. அதேபோல், சர்க்கரை, தைராய்டு போன்ற பிரச்னைகள் இருந்தால், முதலில் அவற்றைச் சரியான அளக்குக் கொண்டு வந்து பிறகு, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

சிகிச்சைக்கு பின்னர்...

சிகிச்சைக்குப் பின்னர் பல வாரங்களுக்கு மருந்து, மாத்திரைகளைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். உணவு, சரிவிகிதத்தில் இருக்க வேண்டும். நல்ல தூக்கம் வேண்டும். சிகிச்சை முடிந்து, உடல் முழுமையாகக் குணமாக இரண்டு மாதங்கள் ஆகும். அதேபோல, சிகிச்சை முடிந்த பிறகு, தழும்புகள் நிச்சயம் இருக்கும். ஆனால், அது வெளியே தெரியாமல் அமையும் வகையில் சிகிச்சை மேற்கொள்ளப்படும். இந்தச் சிகிச்சையைப் பொறுத்தவரை, நம் உடலில் இருந்தே தோல்களை எடுத்து சிகிச்சை நடைபெறும். பிறந்த குழந்தைக்கு செய்யவேண்டுமென்றால், அந்தத் தாயின் உடலில் இருந்து தோலை எடுத்து குழந்தைக்கு வைக்க வேண்டும்.

முக மாற்று 

 

தொடர்ந்து ஒப்பனை அறுவை சிகிச்சை செய்தால்..?

திரை பிரபலங்கள், தங்கள் அழகைப் பெரிதும் நேசிப்பார்கள். அதனால், சிலவற்றை மனதில் கற்பனை செய்துகொண்டு சிகிச்சை செய்துகொள்வார்கள். அது அவர்களுக்குத் திருப்தி தராமல் இருக்கும் பட்சத்தில் திரும்பவும் செய்துகொள்வார்கள். இதுபோல் அதிகமாக இந்தச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது, ஒரு சிகிச்சை செய்த பிறகு, குறிப்பிட்ட காலம் கழித்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இதன் தேவை

ஒப்பனை அறுவை சிகிச்சையைப் பொறுத்தவரை, இந்தத் தலைமுறையினருக்கு இதன் தன்மை புரிந்திருக்கிறது. இப்போதெல்லாம் அழகில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். இணையதளத்தில் தேடித் தெரிந்துகொள்கிறார்கள். ஆனால், அதில் அவர்களுக்கு முழுமையான தகவல்கள் கிடைப்பதில்லை என்பதே உண்மை. இது குறித்த விழிப்புஉணர்வு வேண்டும். அரசு மருத்துவனையிலேயே பிளாஸ்டிக் சிகிச்சை செய்கிறார்கள். சிலர் இது அதிக செலவு பிடிக்கும் சிகிச்சை எனக் கருதி, இதைச் செய்துகொள்ள மறுக்கிறார்கள். உண்மையில், இதற்கும் மற்ற அறுவைசிகிச்சைகளுக்கு உண்டாகும் செலவுதான் ஆகும். ஆனால், ஒப்பனை அறுவை சிகிச்சைக்கு மட்டும் காப்பீடு பெற முடியாது.

 

அழகுக்காக செய்வது மட்டும்தான் பிளாஸ்டிக் சர்ஜரி என்ற தவறான கருத்து பலருக்கு உண்டு. தீக்காயம், பிறப்பில் உடல் மாற்றம் ஆகியவற்றால் சமூகத்தில் எழும் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் தற்கொலைக்குக்கூட சிலர் முயற்சிக்கின்றனர். அந்த எண்ணத்தை மாற்றவும், அவர்களுக்கு உதவவும் இந்த அறுவைசிகிச்சை உதவும். அதற்குத் தேவையெல்லாம் பிளாஸ்டிக் சர்ஜரி குறித்த முழுமையான விழிப்புஉணர்வு மட்டுமே.

http://www.vikatan.com/news/health/95549-what-are-the-different-types-of-plastic-surgery.html

Link to comment
Share on other sites

தூக்கத்தில் பற்களை நறுக்குபவரா? என்னென்ன பாதிப்புக்கள் வரும்?

 
 
பதின்ம வயதில் பற்களை நறுத்தல்: 'கேலிக்கு ஆளாவதன் அறிகுறியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபதின்ம வயதினர் பற்களை நறுக்குதல் அவர்களுக்கு பள்ளியில் ஏதாவது பிரச்சனை இருப்பதன் அறிகுறி.

பதின்ம வயதினரிடையே பற்களை நறுக்கும் பழக்கம் அவர்கள் பள்ளிக்கூடங்களில் கேலிக்கு உள்ளாவதற்கான அறிகுறி என்று ஆய்வுகள் கூறுகின்றன.

மன அழுத்தம் மற்றும் சோகத்துக்கு ஆளான பெரியவர்களையும் இது பாதிக்கும் என்பதால், பெற்றோரும் பள்ளிகளும் இதுகுறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று வாய் தொடர்புடைய சுகாதாரத்திற்கான ஒரு தொண்டு நிறுவனம் கூறியுள்ளது.

பற்களை நறுக்குதல், தலைவலி, பல் தேய்மானம் மற்றும் தூக்க குறைபாடுகள் உள்ளிட்டவற்றை உண்டாக்கும் என்றும், இவை அதிகரித்து வருவதாகவும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

நறுக்கும் சத்தத்தை வட்ட வடிவ ரம்பத்தின் சத்தத்துடன் ஒப்பிடலாம்.

பள்ளிகளில் கேலிக்கு ஆளாகும் 13 முதல் 15 வயது வரையுள்ள மாணவர்கள், பிறரைவிட நான்கு மடங்கு அதிகமாக இரவில் பற்களை நறுக்கும் பழக்கத்திற்கு உள்ளாக வாய்ப்புண்டு என்று ஜோர்னல் ஆப் ஓரல் ரீஹேபிலியேஷனில் (Journal of Oral Rehabilitation) வெளியாகியுள்ள ஓர் ஆய்வு கண்டுபிடித்துள்ளது.

பிற மாணவர்களில் 17 சதவீதத்தினரிடையே மட்டும் அப்பழக்கம் உள்ள நிலையில் கேலிக்கு உள்ளாவோரிடையே இது 65 சதவீதமாக உள்ளது.

"பரவலாகப் பார்க்கும்போது பற்களை நறுக்குவதில் ஒரு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய விடயமாகத் தோன்றாது. ஆனால் அது ஒரு குழந்தையின் மனநிலையைப் பற்றிய ஆழ்ந்த பார்வையைத் தருவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் கேலிக்கு ஆளாக்கப்படுவதை முன்கூட்டியே அறிவதற்கான அடையாளங்களை அறிய உதவும் முக்கிய அறிகுறியாகவும் இருக்கும்," என்றும் அவர் கூறுகிறார்.

குறிப்பாகத் தூக்கத்கில் பற்களை நறுக்குதல் உடல் நலத்தை பாதிக்கும் என்று கூறும் அவர், நாம் அதைச் செய்வதைப் பெரும்பாலும் அறிவதில்லை என்கிறார்.

பதின்ம வயதில் பற்களை நறுத்தல்: 'கேலிக்கு ஆளாவதன் அறிகுறியா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபற்களை நறுக்குதல் ரம்பங்களைப் போன்ற சத்தங்களை எழுப்பக்கூடும்.

"வழக்கமாக, தங்களுடன் உறங்குபவர்களை எழுப்பும்போதுதான் முதல் முதலாக மக்கள் இப்பழக்கத்தை அறிய வருகின்றனர்," என்கிறார் மருத்துவர் கார்ட்டர்.

மேல் மற்றும் கீழ் தாடைகளில் உள்ள பற்களை ஒன்றாக அழுத்துவதால், பல் கூச்சம் மற்றும் தேய்மானம், பற்கள் உடைதல், பற்கள் விழுதல், முகம் மற்றும் மற்றும் தாடையில் வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

" பற்களை நறுக்குதல் மெல்லுவதை விட 40 மடங்கு அதிகம் வலிமையானது. தன் ஈறுகள் வரை பற்கள் தேயுமளவுக்கு நறுக்குபவரை நான் கண்டுள்ளேன்," என்று கார்ட்டர் கூறுகிறார்.

பெரும்பாலானவர்களுக்கு, பற்களின் அடர்த்தி குறைவதால், அவை தட்டையாவதுடன், பல் முனைகளில் சேதங்களும் ஏற்படுகின்றன.

கண்விழிக்கும்போது நீடித்த தலைவலி அல்லது ஈறுகளில் புண் ஏற்படுதல் ஆகியன வெளிப்படையாகத் தெரியும் அறிகுறிகள்.

கவலையை விடுங்கள்

ஒரு நல்ல செய்தி என்னவென்றால், இதற்கு திறன்மிகுந்த சிகிச்சைகள் உள்ளன.

கார்டு (Guard) அல்லது ஸ்ப்ளின்ட் (Splint) எனப்படும் கடினமான பிளாஸ்டிக் உபகரணத்தைப் பற்களில் பொருத்துவதன்மூலம், அவற்றை நறுக்குவதைத் தடுக்க முடியும்.

பற்கள் ஒன்றன் மேல் ஒன்று நன்றாகக் பொருந்த வைப்பதே இதன் நோக்கம். இந்த உபகரணத்தைப் பொருத்துவதால் மெல்லுவது இலகுவாகி பற்கள் பாதுகாக்கப்படும்.

புகைப் பழக்கத்தைக் கைவிடுதல், மது உட்கொள்வதைக் குறைத்தல், மன அழுத்தத்தைக் கையாளுதல் உள்ளிட்ட வாழ்வியல் மாற்றங்களும் இப்பிரச்சனைத் தீர்க்கப் பரிந்துரைக்கப்படுகின்றன.

உறக்கத்தின்போது மூச்சுத் திணறல், கடுமையாகக் குறட்டை விடுதல் உள்ளிட்ட தூக்கம் சார்ந்த பிரச்சனைகளும் பற்களை நறுக்கும் பழக்கத்தை உண்டாக்கும்.

பிரிட்டனில் மட்டும் உறக்கத்தில் பற்களை நறுக்குதல் 60 லட்சம் பேரைப் பாதிக்கலாம் என்று கார்ட்டர் மதிப்பிடுகிறார்.

நம் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத அளவில் மன அழுத்தம் இருந்தால், நாம் அவற்றை நம் பற்களுக்கு எடுத்துச் செல்கிறோம் என்பதில் வியப்பேதுமில்லை.

பகல் நேரங்களில் நம் வீட்டு வேலைகள் மற்றும் நாமாகச் செய்து கொள்ளும் பணிகள், வாகனம் ஓட்டுதல், நாம் மிகுந்த அக்கறை கொள்ளும் பணிகள் உள்ளிட்டவற்றால் பற்களை நறுக்கறோம்.

http://www.bbc.com/tamil/science-40619397?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

Balbar Palsy க்குரிய சிகிச்சை

எம்மில் ஒரு சிலருக்குப் பேசிக் கொண்டிருக்கும் போதோ அல்லது பாடிக்கொண்டிருக்கும் போதோ திடீரென்று குரல் அடைத்து பேசமுடியாமல் அப்படியே திகைத்துப் போய் நின்றுவிடுவர். இத்தகைய குறைபாட்டிற்கு மருத்துவத்துறையில் Balbar Palsy என்று பெயர். இதற்கு பக்கவாதத்திற்கு காரணமான botulism என்ற இரசாயனமே இதற்கும் காரணம் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. ஆனால் அண்மைய ஆய்வுகளில் மரபணு குறைபாடுகளும் இதற்கு காரணமாக அமைகின்றன என்று கண்டறியப்பட்டிருக்கிறது. 

health_news_image_47.jpg

இதற்கென தனியாக மருத்துவ சிகிச்சை முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும், தசை பிடிப்பிற்கான சிகிச்சை, நரம்புகளின் பணியை மறு சீராக்கும் சிகிச்சை என்ற இயன்முறை சிகிச்சைகளும், உடலியல் சிகிச்சை (Physical Therapy) பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வலி நிவாரண சிகிச்சைகளின் மூலமே பலரும் இதிலிருந்து குணமாகி வருகிறார்கள். ஒரு சிலருக்கு பேச்சு பயிற்சி வழங்கப்படவேண்டிய அவசியமும் ஏற்படும். கழுத்து மற்றும் மூளையிலுள்ள ஒரு சில நரம்புகளில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவே இவை ஏற்படுகின்றன. அதற்குரிய பரிசோதனைகள் மூலம் கண்டறிந்து சிகிச்சைகளை வழங்கி வருகிறார்கள்.

Dr. கோடீஸ்வரன் 

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/21943

Link to comment
Share on other sites

காபி குடிப்பது நீண்ட காலம் வாழ உதவக்கூடும்: ஆய்வில் தகவல்

 
காபி அருந்துவோர் நீண்ட காலம் வாழலாம் - ஒருவேளைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

உள்மருந்துக்கான வருடாந்திர இதழில் பிரசுரிக்கப்பட்ட அந்த ஆய்வில், காஃபின் நீக்கப்பட்டிருந்தாலும் கூட, கூடுதலாக ஒரு கப் காபி, ஒருவரின் ஆயுளை அதிகரிக்கலாம் என யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதை காபி அருந்துபவர்கள் கடைப்பிடிக்கும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை என்று கூறலாமே தவிர, காபியில் பாதுகாப்பு விளைவு உள்ளதாகக் குறிப்பிடுவது சாத்தியமற்றது என நிச்சயமாகக் கூறலாம் என்று சந்தேகத்துடன் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே, கூடுதலாக ஒரு கப் காபிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

புதிய ஆய்வு கூறுவது என்ன?

அதிகமாக காபி அருந்துவது, மரணம் நேருவதற்கான குறைந்த ஆபத்துடன் தொடர்புபடுத்தப்படுகிறது என்றும் குறிப்பாக இதய நோய்கள் மற்றும் குடல் நோய்களுடன் உள்ளவர்களுக்கு இது பொருந்தும் என்று புற்று நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஐரோப்பிய யூனியனில் உள்ள பத்து நாடுகளைச் சேர்ந்த 35 வயதுக்கும் அதிகமான ஆரோக்கியமாக வாழும் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் தரவுக்கு பிறகு, இந்த முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்துள்ளனர்.

ஆய்வின் தொடக்கத்தில் எவ்வளவு காபி குடிக்கின்றனர் என்று அந்த மக்களிடம் ஆய்வாளர்கள் கேட்டனர். பிறகு, அவர்களில் சராசரியாக 16 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களை அனுமானித்தனர்.

பொதுமக்களால் உணரப்படும் ஆபத்து பற்றி ஆய்வு செய்த பிறகு, காபியால் மரணங்கள் குறைவதாக மதிப்பிட்டால், தினமும் கூடுதலாக காபி குடிப்பதால் ஒருவரின் ஆயுள் சுமார் மூன்று மாதங்களும் ஒரு பெண்ணின் ஆயுள் சராசரியாக ஒரு மாதமும் அதிகமாகலாம் என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீக்ஹால்டர்.

ஆனால், இதுபோன்ற ஆய்வு அளவு கோல் இருந்தாலும், காபி கொட்டைகளை மாயாஜால மூலப்பொருள் என்பதை மிகச்சரியாக அர்த்தம் கொள்ள முடியாது. அதை நிரூபிக்கவும் இயலாது என்கிறார் அவர்.

எதற்காக நீங்கள் அவசரப்பட்டு, அதிக காபியை வாங்க வேண்டும்?

இந்த கண்பிடிப்புகள், அவை முதலில் தோன்றியது போல மிகத் தெளிவாக இல்லை என்பது காபி பிரியர்களை விரக்தியடையச் செய்யலாம்.

காபியின் விளைவுகள் மீது ஒருவரால் எந்த அளவுக்கு நிச்சயத்தன்மையுடன் இருக்க முடியும் போன்ற ஒவ்வொரு காரணியையும் கவனத்தில் கொள்ள ஆய்வுகளால் முடியவில்லை என்பது ஒரு காரணம்.

காபி அருந்துவோர் நீண்ட காலம் வாழலாம் - ஒருவேளைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உதாரணமாக, காபி அருந்தாதவர்களுடன் ஒப்பிடும்போது, காபி அருந்துபவர்கள் அடைந்த ஆதாயம் என்ன என்பதை அந்த ஆய்வு ஆராயவில்லை.

நாளொன்றுக்கு மூன்று கப் காபி வாங்க முடிபவர் பணக்காரராக இருக்கலாம். மேலும், அந்த கூடுதல் பணம், சில வழியில் அவர்களின் சுகாதாரத்தை பாதுகாக்க உதவலாம்.

மூன்று கப் காபி அருந்துவோர், சமூக பழக்க வழக்கங்களுக்காக கூடுதல் நேரத்தை செலவிடலாம் மற்றும் அதன் பலனாக தங்கள் நலனை அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்.

ஒருவேளை இதற்கு காபிதான் பொறுப்பு என்றும் அதனால் ஒவ்வொரு ஆபத்தும் மேம்படவில்லை என்றும் அவர்கள் நிச்சயமாக இருந்திருக்கலாம்.

உதாரணமாக, அதிகமாக காபி அருந்துவது பெண்களிடையே கருப்பை புற்றுநோய் அதிகரிக்கும் விகிதத்துடன் தொடர்புபடுத்தப்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இருப்பினும், ஆய்வில் ஏராளமானோர் உட்படுத்தப்பட்டிருந்தாலும், தொடக்கத்திலேயே நீரிழிவு நோயாளிகள், இதய நோயாளிகள் அல்லது மாரடைப்பு ஏற்பட்டவர்களை ஆராய்ச்சியாளர்கள் விலக்கி விட்டனர்.

எனவே, உடல் நலமில்லா மக்கள் காபி அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகளையும் பலன்களையும் பற்றி அந்த ஆய்வு பெரிதாகக் கூறவில்லை.

அதனால் வழக்கமான பானங்களை அருந்தும்போது சில பேர் உடல் சுகவீனம் அடைந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

காபி உங்களுக்கு நல்லதா?

முந்தைய ஆய்வுகள் முரண்பட்ட மற்றும் மாறுபட்ட முடிவுகளை தெரிவித்துள்ளன.

காஃபின் கலந்த பானங்கள், தற்காலிகமாக தங்களை விழிப்புடன் உணரச் செய்வதாக பல பேருடைய அனுபவம் கூறுகிறது.

காபி அருந்துவோர் நீண்ட காலம் வாழலாம் - ஒருவேளைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

ஆனால், காஃபின் பிறரை விட சில பேரை பாதிப்பதாகவும் அந்த பாதிப்பு ஒருவருக்கொருவர் வேறுபடுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது.

தேசிய சுகாதார சேவை நிபுணர்கள், பொதுப்படையான மக்கள்தொகையில் எவ்வளவு காபி அருந்த வேண்டும் என்பதற்கான வரம்பை நிர்ணயிக்கவில்லை. ஆனால், கர்ப்பிணி பெண்கள் தினமும் 200 மில்லி கிராம் காஃபினுக்கு மேல் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என அவர்கள் கூறுகின்றனர்.

காபி அதிகமாக அருந்துவதால் குழந்தை சிறியதாக பிறக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்பதால் அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.

அதிகப்படியான கேஃபைன், கருச்சிதைவுக்கான ஆபத்தை அதிகம் விளைவிக்கலாம் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காஃபின் என்பது காபியில் மட்டுமல்ல. இரண்டு குவளை தேநீர் மற்றும் ஒரு கேன் கோலா அல்லது உதாரணமாக, இரண்டு கப் உடனடி காபி போன்றவற்றை அருந்துவதாலும், 200 மில்லி கிராம் கேஃபைன் அளவை நாம் எட்டி விட முடியும்.

அண்மையில் அமெரிக்காவை சேர்ந்த பருவ வயதுடைய ஒருவர், அளவுக்கு அதிகமான காஃபின் கலந்த பானங்களை வேகமாக அருந்தியதால் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

காபியால் உங்களால் நீண்ட காலம் உயிர் வாழ முடியும் என நம்மால் எவ்வாறு நிச்சயமாக இருக்க முடியும்?

உலகம் முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களிடையே காபி அருந்துவதை கட்டாய வழக்கமாக்கியும், மேலும் சில ஆயிரக்கணக்கான மக்களை காபி அருந்துவதில் இருந்து தவிர்க்கச் செய்தும், காபியால் நீண்ட காலம் உயிர் வாழச் செய்ய முடியுமா என மிகக் கடுமையான அறிவியல் வழியில் ஆய்வு செய்ய வேண்டும்.

பிறகு ஒவ்வொருவரின் வாழ்வையும் விஞ்ஞானிகள் கண்காணிக்க வேண்டும். உதாரணமாக அவர்கள் என்ன சாப்பிட்டனர் மற்றும் குடித்தனர், அதனால் என்ன பலன் கிடைத்தது, எவ்வளவு உடற்பயிற்சி செய்தனர் போன்றவற்றை ஆராய வேண்டும்.

அத்தகைய ஆய்வு நடைபெறுவதற்கான சாத்தியமே இல்லை.

எனவே, தற்போதைக்கு காபி குடிப்பதால் உங்களுக்கு நல்லது ஏற்படுமா என பந்தயம் கட்டுவதற்கு பதிலாக, உங்கள் ஆயுளை நீட்டிக்க - நீங்கள் காபி குடிக்கவோ அல்லது குடிக்காமல் இருப்பதற்காகவோ, அருகே உள்ள காபி கடை வரை விறுவிறுப்பான 20 நமிட நடை பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

http://www.bbc.com/tamil/global-40626175?ocid=socialflow_facebook

Link to comment
Share on other sites

புரதம், கால்சியம், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் முதியோருக்கான ஆரோக்கிய உணவுகள்!

 
 

 

‘கல்லைத் தின்றாலும் கரையும் வயது’ என்று பொதுவாக ஒரு சொலவடை உண்டு. இளவயதுடைய யாராவது எனக்கு அந்த உணவு ஒத்துக்கொள்ளாது, இந்த மாதிரியான உணவுகள் ஒத்துக்கொள்ளாது என்று சொல்லும்போது பயன்படுத்தப்படும் சொலவடை அது. ஆனால், வயதான முதியவர்களுக்கோ அப்படி அல்ல.

முதியோருக்கான உணவுகள்

கரைகின்ற பொருள்களைத் தின்றால்கூட அது கல் போன்று கிடந்து பல்வேறு தொந்தரவுகளைத் தந்துவிடும். அதிலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் உணவு விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எந்த மாதிரியான உணவுகளை மருத்துவர்  நடராஜன்உட்கொள்ள வேண்டும் என்று முதியோர் நல மருத்துவர் நடராஜனிடம் கேட்டோம்.

"வயதான பின்பு பசி குறையும், ருசி குறையும், ஆனால் உணவின் தரம் குறையக் கூடாது. உணவின் அளவு குறைவாக இருந்தாலும், நல்ல ஆரோக்கியமான, சத்துகள் நிறைந்த உணவுகளைத்தான் உண்ண வேண்டும்.

புரதம் நிறைந்த உணவுகள் :

வயதானவர்களின் உடலில் புரதச்சத்து குறைவதால் உடல் எடை இழந்து காணப்படுவார்கள். எனவே புரதச்சத்து நிறைந்துள்ள உணவுகளை உட்கொள்ளவேண்டும். பருப்பு வகைகளில் புரதம் நிறைந்து காணப்படுகிறது. எனவே அனைத்து வகையான பருப்பு வகைகளையும் உணவில் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது உடலுக்கு மிகுந்த வலிமையைக் கொடுக்கும். காளான் உயர்ரக புரதச்சத்து நிறைந்த உணவு. அதேபோல் சோயா, முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவையும் புரதம் நிறைந்த உணவுகள். இவற்றை வாரம் இருமுறையாவது கண்டிப்பாக உட்கொள்ளவேண்டும்.

பருப்பு வகைகள்

கால்சியம் நிறைந்த உணவுகள்:

வயதானவர்களுக்குக் கால்சியம் சத்துகள் மிக அவசியமானவை. கால்சியம் அதிகமாக உள்ள பால், தயிர், கீரை வகைகள், மீன் வகைகள் ஆகியவற்றைக் கண்டிப்பாக உட்கொள்ள வேண்டும்.

கீரை

கோதுமை மற்றும் சிறுதானியங்கள்:

மூன்று வேளையும் அரிசி உணவுகளை உட்கொள்வதால், அதிகமாக வெயிட் போட வாய்ப்புள்ளது. இதனாலும் பல்வேறு பாதிப்புகள் உண்டாகின்றன. எனவே, வயதானவர்கள் அரிசி உணவுகளை உட்கொள்ளவதைப் பெரும்பாலும் குறைத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக கோதுமை மற்றும் சிறுதானியங்களையே உட்கொள்ள வேண்டும்.

சிறுதானியங்களில் கால்சியம் மற்றும் சுண்ணாம்புச் சத்துகள் அதிகமாக இருப்பதால், எலும்புகள் மிகுந்த உறுதியாகும்.

நார்ச்சத்துகள் அதிகமாக இருப்பதால், மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் நெருங்காது. இது தேவையற்ற கொழுப்புகளைக் கரைக்கும். உடலில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும்.

சிறுதானியங்கள்

தண்ணீர் மிக அவசியம்:

உடலுக்குத் தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். உடலில் நீர்வறட்சி ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இள வயதுடையவர்களுக்குத் தாகத்தின் மூலம் உடலின் நீர்த் தேவையை அவர்களின் உடலே அறிவுறுத்தும். ஆனால், வயதானவர்களுக்குத் தாகம் ஏற்படுவது குறைந்துவிடும். எனவே தாகம் வந்தால்தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்றில்லை, நாள் ஒன்றுக்கு இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். இதய பாதிப்புள்ளவர், சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவரின் அறிவுரையோடு குடிக்க வேண்டும்.

தண்ணீர் குடித்தல்

நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க...

வயதானவர்கள் கண்டிப்பாகப் பழங்கள் உண்ண வேண்டும். கண்டிப்பாக வெறும் வயிற்றில்தான் உண்ண வேண்டும். உணவு எடுத்துக்கொண்ட பின்பு பழங்கள் சாப்பிட்டால் எந்தப் பயனும் கிடைக்காது. காலை நேரங்களிலோ அல்லது மாலை நேரங்களிலோ உண்ண வேண்டும். 

வயதானவர்களுக்கு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க ஆரஞ்சு, நெல்லிக்காய், எலுமிச்சை போன்ற சிட்ரஸ் பழங்களை அதிகமாக உண்ண வேண்டும். இதில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால், உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது. இது தவிர இஞ்சி, பூண்டு, தயிர், பாகற்காய், பாதாம் பருப்பு போன்றவையும் உடலுக்குத் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியைத் தருகின்றன.

சிட்ரஸ் பழங்கள்

மலச்சிக்கலைத் தடுக்க...

பாகற்காய், புடலங்காய், காலிபிளவர், கொத்தமல்லி, காய்ந்த மிளகாய் போன்ற நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை உட்கொண்டால் மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

பாகற்காய்

மறதியைத் தடுக்க...

உலர் திராட்சை, ஸ்ட்ராபெர்ரி, முளைகட்டிய கோதுமை, முட்டையின் மஞ்சள் கரு, வாழைப்பழம், வெங்காயம், பட்டை, வல்லாரைக் கீரை ஆகியவற்றை உட்கொள்ளும்போது மறதியைத் தவிர்க்கலாம் " என்கிறார்.

உலர் திராட்சை

 

இது போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டால் முதுமையில் ஏற்படும் பல்வேறு தொந்தரவுகளில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். நீண்ட ஆயுளோடு வாழலாம்.

http://www.vikatan.com/news/health/95000-healthy-food-habits-for-old-age-people.html

Link to comment
Share on other sites

சரும குறைப்பாட்டை சீராக்கும் நவீன சிகிச்சை

இன்றைய திகதியில் பிறவியிலேயே சிலர் முகத்திலும், உடலின் முக்கியமான பாகங்களிலும் விரும்பகாத மரு, மச்சம், படர்மச்சம், மங்கு ஆகியவற்றுடன் பிறக்கிறார்கள். இவர்கள் தங்களது தோற்றத்தை மாற்றியமைத்துக் கொள்ள விரும்புவர். ஆனால் அதற்கான பக்கவிளைவுகளற்ற சத்திர சிகிச்சையோ நவீன லேசர் சிகிச்சையோ இது வரை முழுமையாக கண்டறியப்படவில்லை. ஆனால் தற்போது இந்த குறைபாடுகளை முற்றிலும் களைய யாக் லேசர் (Yag Laser) என்ற நவீன சிகிச்சையை கண்டறிந்திருக்கிறார்கள்.

health.jpg

இது குறித்த மருத்துவ ரீதியிலான விளக்கத்தை காண்போம்.

எம்முடைய தோல் பகுதிகள் 7 அடுக்குகளைக் கொண்டது. இதில் முதலிரண்டு அடுக்குகளாக எபிடொமிஸ் மற்றும் டொமிஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தோலின் நிறத்திற்குக் காரணமான மெலனின் என்ற சுரப்பியின் உற்பத்தியின் சமச்சீரின்மையை மட்டுமே யாக் லேசர் என்ற நவீன கருவியைக்கொண்டு சிகிச்சையளிப்பதால் தோலின் வேறு அடுக்கு பகுதிகளில் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

இதன் காரணமாக பிறவியிலேயே இருக்கும் தோல் தோற்றக்குறைப்பாட்டை இதன் மூலம் மறுசீரமைக்க முடியும். அதே சமயத்தில் தற்போதைய இளைய தலைமுறையிடத்தில் உடலில் கண்ட இடங்களில் டாட்டூ என்ற பெயரில் பச்சை குத்திக் கொள்வது பெசனாகி வருகிறது. இதனை முற்றிலும் அகற்றவும் இந்த லேசர் சிகிச்சை பயன்படுகிறது.

Dr. மீனாட்சிசுந்தரம்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/22073

Link to comment
Share on other sites

அதிகம் செல்போன் பயன்படுத்துறீங்களா? மூளை, கண், காது, தோல், இதயம்... பத்திரம்!

“சோறு இல்லைன்னாக்கூட இருந்துடுவான்... செல்போன் இல்லைனா செத்துருவான்போல இருக்கு’ - இது ஒரு திரைப்படத்தில் இடம்பெற்ற வசனம். மிகைப்படுத்திச் சொல்லப்பட்டாலும்கூட, இதில் சிறிதளவு உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் இரண்டரக் கலந்த ஒன்றாகிவிட்டது செல்போன். நெருங்கியவர்களோடான வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கியில் பணப் பரிவர்த்தனை... என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது இந்தக் கையடக்கக் கருவி. செல்போனைப் பயன்படுத்தாதவர்கள் மிக மிகக் குறைவு. ஆனால், இது தரும் ஆபத்தும் அளவிலாதது. செல்போன் தரும் பாதிப்புகள் என்னென்ன என்று கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். 

செல்போன்

செல்லுலார் டெலிகம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்டர்நெட் அசோசியேஷன் (Cellular Telecommunications and Internet Association - CTIA) கணக்குப்படி, ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. பொதுவாகவே, அழைப்புகளின்போது, ரேடியோ ஃப்ரீக்வன்ஸி (Radio-Frequency) எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளியாகும். இது, அதிகளவு பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளில் முக்கியமான ஒன்று. செல்போனில் இருந்து வெளியாகும் மின் காந்தக் கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு கொஞ்சநஞ்சம் அல்ல. எப்போதெல்லாம் இந்த ரேடியேஷன் பாதிப்புகள் ஏற்படும்... அதிகளவு ரேடியேஷன் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகள் அனைத்தும் இங்கே பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இவற்றைத் தவிர்ப்பதே நம்மைப் பல பிரச்சனைகளில் இருந்தும் காக்கும்.

* எவ்வளவு நேரம் ஒருவர் அலைபேசி உபயோகிக்கிறார் என்பதைப் பொறுத்து ரேடியேஷனுடைய வீரியம் இருக்கும். செல்போன் மாடலைப் பொறுத்து, ரேடியேஷன் வெளிப்பாடு மாறுபடும். எனவே, அதிக ரேடியேஷனை வெளிப்படுத்தாத மொபைல் மாடலை உபயோகப்படுத்துவது சிறந்தது.
 
* அழைப்பின்போது மொபைல்போனுக்கும் உங்களுக்கும் எவ்வளவு தொலைவு உள்ளது என்பது முக்கியம். உதாரணமாக, ஸ்பீக்கரில் போட்டுப் பேசும்போதும், ஹெட்செட் போட்டு பேசும்போதும் ஏற்படும் பாதிப்பு, காதுக்கு அருகில் மொபைலைவைத்துப் பேசும் பாதிப்பைவிடவும் குறைவு. எனவே மொபைலில் பேசும்போது ஹெட்செட், ஸ்பீக்கர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

* செல்போன் அருகில் டவர் இருக்கும்போது, சிக்னல் வீக் ஆக இருக்காது. அது போன்ற நேரத்தில் ஆற்றலும் அதிகம் தேவைப்படாது. ஆற்றல் தேவை குறையும்போது, ரேடியேஷன் பாதிப்பும் குறையத் தொடங்கும். சில நேரங்களில், டவர் அருகில் இருந்தும், சிக்னல் பாதிப்பு ஏற்படலாம். `சிக்னல் ட்ராஃபிக்’ என இதைக் கூறுவார்கள். இந்த நேரங்களில், ஆற்றல் தேவை அதிகரித்து, ரேடியேஷன் பாதிப்பும் அதிகரிக்கும்.

செல்போன்

என்னென்ன பாதிப்புகள் ஏற்படலாம்?

* அதிகமாக மொபைல் உபயோகிப்பதால், புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்றுவரை இது நிரூபிக்கப்படவில்லை. அதிக நேரம் மொபைலில் பேசும்போது, அதிலிருந்து வெளிவரும் ரேடியேஷன், அதிகச்சூட்டை உண்டாக்கும். அது, மூளை, காது, இதயம் போன்றவற்றையும் பாதிக்கும். 

* சுத்தமில்லாத கையால் செல்போனை உபயோகித்தால், கைகளின் மூலம் பாதிப்பு செல்போனுக்குப் பரவி, காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உடல்நலப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். மிக முக்கியமாக, தோல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுத்தும்.

* கண்கள் பாதிப்பு... செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் மிக முக்கியமான பிரச்னை கண் பாதிக்கப்படுவது. பொதுவாகவே, அதிகமான வெளிச்சம் சிறிய ஸ்கிரீனில் இருந்து வெளிவரும்போது, கண்ணின் தசைகளுக்கு வலி எடுக்கத் தொடங்கும். முடிந்த வரை கண்களுக்கு மிக அருகில்வைத்து, மொபைல்போனைப் பார்க்காமல் இருப்பது நல்லது. 20 நிமிடங்களுக்கு ஒரு முறை இடைவேளை எடுத்துக்கொள்வது சிறந்தது.

* தொற்றுநோய் அபாயம்... நம்மைவிட செல்போனே விரைவில் கிருமிகளால் ஈர்க்கப்படும். நாம் செல்லும் அனைத்து இடங்களுக்கும் மூன்றாவது கையாக கூடவே வருவது இதுதான். நாம் போகும் இடங்களில் உள்ள நோய்க் கிருமிகள் இதன்ன் மூலமாகவே நமக்குப் பரவும் வாய்ப்பு அதிகம். இது சாதாரண தலைவலி முதல் புற்றுநோய் வரை பாதிப்பை ஏற்படுத்தும். செல்போனைப் பயன்படுத்தும் கையை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது நல்லது. பெர்சனல் ஹைஜீன் எப்போதும் இதற்குத்தான் அவசியம் தேவை. 

* தசை நார்களில் பாதிப்புகள்... அதிகமாகவும் நீண்ட நேரமாகவும் மொபைலில் டைப் செய்பவர்களுக்கு கை விரல்களில் உள்ள தசை நார்களில் பாதிப்புகள் ஏற்படும். ஒரே செயலை தொடர்ந்து செய்யும்போதும், ஹோல்டு செய்யும்போதும் கை விரல் தசைகளில், ரத்த ஓட்டத்தில் தடை ஏற்படும். மேலும், தசை நார்கள் கிழிந்துபோகும். இதனால், விரல்களை அசைக்க முடியாதநிலையும்கூட ஏற்படலாம்.

* உடல் வலியை உண்டாக்கும்... சரியான போஸ்ச்சர்களில் மொபைல்போன்களைப் பயன்படுத்த வெண்டும். இவற்றை நாம் நம்முடைய வசதிக்கேற்றாற்போல் அமர்ந்து, நின்றுகொண்டு, படுத்துக்கொண்டு பயன்படுத்துகிறோம். இதனால் கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கண் தசைகளில் வலி, தோள்பட்டை வலி போன்ற உடல் பாதிப்புகள் உண்டாகும்.

* கம்ப்யூட்டர் விஷன் சிண்ரோம் என்னும் தலை மற்றும் கண் வலியை உண்டாக்கும். 

* நினைவாற்றைலைப் பாதிக்கும்... அனைத்து தகவல்களையும் கையில் இருக்கும் இந்தச் சிறிய சுறுசுறுப்பு மூளையில் பதிவேற்றிவிடுகிறோம். இது, எந்த ஒரு விஷயத்தையும் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதை உணராமல் இருக்கச்செய்யும். இதனால், ஒரு செயலை உள்வாங்கும் திறன் / கண்காணிப்புத் திறனில் குறைபாடு ஏற்படும்.

செல்போன்

* மனநோய்க்கு வழிவகுக்கும்... தன்னிச்சையாக செல்போனுடன் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் நோமோஃபோபியா (Nomophobia) என்னும் மனநோயை உண்டாகும். உதாரணமாக, அழைப்பு வருவதற்கு முன்னரே, செல்போனைப் பார்க்கும் பழக்கம், அலாரம் அடிப்பதற்கு முன்னரே எழுந்து அலாரத்தை ஆஃப் செய்யும் பழக்கம், நம்மைவிட்டுத் தொலைதூரத்தில் இருக்கும்போதும் செல்போன் அடிக்கிறது என்று அலைபேசியைத் தேடும் பழக்கம், அடிக்கடி மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம் (இந்தச் சமயங்களில் ஸ்க்ரீனில் உள்ள நேரம், தேதிகூட நம் நினைவில் இருக்காது), தன்னிச்சையாக மொபைல் ஸ்க்ரீனைப் பார்க்கும் பழக்கம்... போன்றவை.

* பான்டம் பாக்கெட் வைப்ரேஷன் சிண்ரோம் (Phantom Pocket Vibration Syndrome) எனக்கூடிய அதிர்வு உணர்வை ஏற்படுத்தும் நோயை உண்டாக்கும். இது செல்போன் அடிப்பது போன்றும், வைப்ரேட் ஆவது போன்றும் மாயையை ஏற்படுத்தும். இதனால், அடிக்கடி மொபைல்போனைப் பார்க்கும் பழக்கம் உண்டாகும்.

* மனஅழுத்தத்துக்கு மகான்... செல்போன்கள். இதை அதிகம் பயன்படுத்துபவர்கள், பயன்படுத்தாமல் இருந்தால் ஒருவித மனஅழுத்தம் உண்டாகும். மீண்டும் செல்போனைப் பயன்படுத்தாமல் இருக்கும் வரை மனச்சோர்வு மற்றும் கோபத்தை உண்டாக்கும். 

* ஒபிசிட்டிக்கு வழிவகுக்கும்... உடல் உழைப்பைக் குறைக்கும். உடல் எடையை அதிகரிக்கும். 

* அதிகமாக இதை உபயோகிப்பது, தூக்கமின்மையை ஏற்படுத்தும். இரவு வேளையில் அதிக நேரம் உபயோகிப்பது மனஉளைச்சலுக்கு வழிவகுக்கும்.

 

இன்றையச் சூழலில் மொபைல் உபயோகம் என்பது, தவிர்க்க முடியாத ஒன்றாக ஆகிவிட்டது. என்றபோதும், முடிந்த வரை எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. அதிக நேரம் செல்போன் பார்ப்பது (அ) பேசுவது, கண்களைச் சிரமப்படுத்துவது முதலியவற்றைத் தவிர்க்கவேண்டியது அவசியம்.

http://www.vikatan.com/news/health/95991-damaging-side-effects-of-your-smartphone-addiction.html

Link to comment
Share on other sites

சர்க்கரைநோய் உள்ளவர்கள் மா, பலா, வாழை சாப்பிடலாமா?

 

சர்க்கரைநோய்... `நீரிழிவு', `மதுமேகம்', `பிரமியம்', `டயாபடிக்', `சுகர்'... எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. இந்த நோயை வளர் சிதை மாற்ற நோய்களின் ஒரு தொகுப்பு என்றும் சொல்லலாம். இலங்கையில், `சீனி வியாதி’ அல்லது `சர்க்கரைநோய்’ என்கிறார்கள்.

சர்க்கரைநோய்

இன்சுலினை உடல் உற்பத்தி செய்யாத நிலையில் அல்லது உற்பத்தி செய்த இன்சுலினைப் பலனளிக்கும்விதத்தில் உடலால் பயன்படுத்த முடியாத நிலைதான் சர்க்கரைநோய் எனப்படுகிறது. இந்தப் பிரச்னைக்கு ஆளானவர்களின் ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருக்கும். ஆனால், இது ஒரு நோயல்ல. குறைபாடு. இன்சுலின் சமச்சீர் நிலையை இழப்பதால் ஏற்படும் ஒரு நிலை. மனித உடலில் சேரும் சர்க்கரையை உடலுக்குத் தேவையான சக்தியாக மாற்ற, இன்சுலின் மிக அவசியம். குறிப்பாக, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சரியாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றால், உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். ரத்தக்குழாய் சுவர்களில் கொழுப்புகள் படிந்து, காலப்போக்கில் அடைபட்டுவிடும். மேலும் இதயத் தசைகளுக்கு ரத்தத்தைக் கொண்டு சேர்க்கும் நரம்புகளில் ஏற்படும் நோய் மற்றும் பாரிசவாதம் ஆகியவை ஏற்படக்கூடிய ஆபத்தை சர்க்கரைநோய் அதிகரிக்கும். ரத்தத்தில் அதிகளவு சர்க்கரை இருப்பது அடிக்கடி சிறுநீர் கழித்தல் (Polyuria), அதிகமாக தாகமெடுத்தல் (Polydipsia), அதிகப் பசி (Polyphagia) ஆகிய அறிகுறிகளை உருவாக்கும்.  

ஒருவருக்கு சர்க்கரைநோயின் ஆரம்பநிலையில் உணவுப் பழக்கத்தில் மாற்றம், உடலுழைப்பில் ஈடுபடுத்துதல், சில மருந்துகளை உட்கொள்ளச் சொல்வதன் மூலம் நிவாரணம் கிடைக்கும். நமக்கு நன்கு அறிமுகமான சில காய்கள், பழங்கள், கீரைகளை உணவில் சேர்த்துவந்தாலும் சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும். அவற்றில் சில...

நெல்லிக்காய்

* நெல்லிக்காய், பாகற்காய் சேர்ந்த ஜூஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பலனளிக்கும். பெரிய நெல்லிக்காய் ஒன்றுடன் அதைவிட அளவில் இரண்டு மடங்கு பெரிய பாகற்காயைச் சேர்த்து அரைத்து, சாறாக்கி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால், இது இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். இதனால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

* புதிதாக பூத்த ஆவாரம்பூவை 100 கிராம் எடுத்து, அதனுடன் 150 மி.லி தண்ணீர் சேர்த்து, அது 100 மி.லியாக வற்றும் வரை கொதிக்கவைக்க வேண்டும். இதற்கிடையே ஐந்து நெல்லிக்காய்களை எடுத்து, அவற்றின் விதைகளை நீக்கி (சிறிது நீர் சேர்த்து), 50 மி.லி அளவுக்குச் சாறு எடுத்து அதனுடன் ஆவாரம்பூ கொதிநீர் 50 மி.லி-யைச் சேர்த்து, அதனுடன் சிறிது தேன் கலந்து குடிக்க வேண்டும். இது கணையத்தைச் சீராக்கி, இன்சுலின் சுரப்பையும் சீராக்கும்.

* மாவிலைக் கொழுந்துடன் துவரம் பருப்பு சேர்த்து, வேகவைத்துச் சாப்பிட்டு வந்தாலும், சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

ஆவாரம்பூ

* அறுகம்புல், வெந்தயம், கீரைகள், கீழாநெல்லி, கொய்யாப்பழம், வேப்பம்பூ போன்றவற்றை ஏதாவது ஒருவகையில் தனித்தனியாக உண்ணலாம். வேப்பம்பூவை ரசம் செய்தும், வெந்தயத்தை தோசையில் சேர்த்தும் சாப்பிடலாம். வாழைப்பூவை பொரியல், கூட்டு, வடை செய்து சாப்பிடலாம். ஆவாரம்பூவை பாலில் வேகவைத்து மாலை நேரப் பானமாக அருந்தலாம். ஆவாரம்பூவை கூட்டு, பொரியல் செய்யலாம். பாகற்காயை ஜூஸ், பொரியல், குழம்பு செய்து சாப்பிட்டுவரலாம்.

* இளநீர், கொத்தமல்லிக்கீரை, கோவைக்காய், கோவைப்பழம், பப்பாளிப்பழம் ஒவ்வொன்றையும் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது சர்க்கரைநோய் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு நல்லது.

* புழுங்கலரிசி, கத்திரிப்பிஞ்சு, புடலம்பிஞ்சு, அவரைப்பிஞ்சு, வாழைத்தண்டு, பாசிப் பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, கடுகு, கசகசா, வெங்காயம், மணத்தக்காளி, சுண்டைவற்றல், கிராம்பு, ஏலக்காய், பெருஞ்சீரகம், நல்லெண்ணெய், இஞ்சி, சுக்கு, நாவல், மாதுளை, எலுமிச்சை, நாட்டுச்சர்க்கரை, தேன், மோர், கேழ்வரகு, கோதுமை உணவுகள், கறிவேப்பிலை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

* அரிசிச்சோறு, கோதுமை உணவு என எதுவாக இருந்தாலும் அளவோடு உண்பது நல்லது. பசி எடுத்தால் கட்டாயம் சாப்பிட வேண்டும். அதேபோல் தாகம் ஏற்பட்டால் மோர், ஜூஸ் என எதையாவது அருந்த வேண்டும். நெல்லிக்காய் சாற்றில் ஆவாரம்பூ, கறிவேப்பிலை சேர்த்துச் சாப்பிடலாம். தாகம் தணிக்க நீர் மோர், நெல்லிக்காய் கலவை நல்லது. முட்டைக்கோஸ் பொரியல், சூப் சிறந்தது.

* சர்க்கரைநோயால் கட்டான உடலை இழந்து, மெலிந்து, சக்கையைப்போல ஆனவர்கள் மறுபடியும் சீரான தேகத்தைப் பெற மூங்கிலரிசி உதவும். மூங்கிலரிசியை வெண்பொங்கல் போலவும் பாயசமாகவும் செய்து சாப்பிடலாம். மூங்கிலரிசி, தினையரிசி, சாலாமிசிரி ஆகியவற்றை தலா 100 கிராம் எடுத்து, அரைத்துத் தூளாக்கி, அதில் இரண்டு டீஸ்பூன் எடுத்து கஞ்சிபோலக் காய்ச்சி சாப்பிட்டுவந்தால் உடல் உறுதிபெறும். சர்க்கரைநோய் கட்டுக்குள் இருக்கும்.

* ஏரி, குளம், கிணறு, ஆறு போன்ற நீர்நிலைகளில் நீச்சலடித்துக் குளிப்பது, சைக்கிள் ஓட்டுவது, உடலுழைப்பு செய்வது போன்றவை சர்க்கரை நோயின் தீவிரத்தைக் குறைக்கும். இவற்றைத் தொடர்ந்து கடைப்பிடித்தால், சர்க்கரை நோயாளிகள் தங்கள் ஆரோக்கியத்தைச் சீராகப் பராமரிக்க முடியும்.

* அதே நேரத்தில் சர்க்கரை நோயாளிகள் சில உணவுகளைக் கட்டாயம் தவிர்ப்பது நல்லது. கடலைப் பருப்பு, வேர்க்கடலை, காராமணி, வாழைக்காய், பலாக்கொட்டை, மொச்சைக்கொட்டை, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, பச்சரிசி,  ஆட்டுக்கறி உள்ளிட்ட மாமிச வகைகள், பரங்கிக்காய், பூசணிக்காய், சுரைக்காய், பழரசங்கள், குளிர்பானங்கள், தயிர், தக்காளி, சர்க்கரை, எண்ணெய் அதிகமுள்ள பஜ்ஜி, போண்டா, மசால் வடை போன்றவற்றை தவிர்த்துவிட வேண்டும். குறிப்பாக, சாப்பாட்டில் கொழுப்புச்சத்து நிறைந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். மீன் உணவு சாப்பிடலாம். உடல் எடையை அதிகரிக்கச்செய்யும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மூன்று வேளையும் சாப்பிட்டுவிட வேண்டும் என்ற கட்டாயத்துக்காகச் சாப்பிடக் கூடாது. மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மாம்பழம்

சர்க்கரை நோயாளிகள் ஆரோக்கியமாக வாழலாம் என்பதற்கு கடலூர் பேராசிரியர் ஓர் உதாரணம்!
கடலூரைச்சேர்ந்த முன்னாள் பேராசிரியரும், சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவருமான எட்வர்ட் தனது அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். இவருக்கும் சர்க்கரைநோய் பாதிப்பு உள்ளது. இந்தநிலையில் வாழைப்பழம் சாப்பிடவே கூடாது என்பதுஎட்வர்ட் மருத்துவர்களின் பொதுவான கருத்து. ஆனால், எட்வர்டோ பல் துலக்கியதும் காலை 6 மணி அளவில் சில வாழைப்பழங்களைச் சாப்பிடுவார். சுமார் 9 மணி அளவில் காலை உணவை உண்பார். இதை வழக்கமாகவே வைத்திருக்கிறார். ஆனாலும், இவருக்கு சர்க்கரையின் அளவு உயர்வதில்லை என்கிறார். அதாவது, ``140, 150 என்ற அளவைத் தாண்டுவதில்லை’’ என்கிறார். அதே நேரத்தில் காலை உணவையும் வாழைப்பழத்தையும் ஒரே நேரத்தில் சாப்பிட்டால் சர்க்கரை அளவு நிச்சயம் கூடும் என்கிறார். மேலும், பலாப்பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு ஆகாது என்பதையும் இவர் உடைத்தெறிந்திருக்கிறார். அவர் பலாப்பழச் சுளைகளைச் சாப்பிட்ட பிறகு அதன் கொட்டையைச் (விதை) சாப்பிட்டு விடுவாராம். அதேபோல், மாம்பழத்தை அதன் தோலுடன் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை என்கிறார். வாரத்தில் ஒருநாள் ஆட்டிறைச்சி சாப்பிடும் இவர், மீன்குழம்பை அடிக்கடி சாப்பிடுவதை வழக்கமாகக்கொண்டிருக்கிறார். ``எதையும் அளவுடன் சாப்பிடுவதால் எந்தப் பிரச்னையும் இல்லை’’ என்கிறார் நம்பிக்கையுடன்!

 

கிழங்கு வகைகளைத் தவிர்ப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களைக் கைவிடுதல், உடலுழைப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பது போன்றவற்றின் மூலம் சர்க்கரைநோயின் பாதிப்புகளில் இருந்து விலகியிருக்கலாம். ஆரோக்கிய வாழ்க்கை வாழலாம்!

http://www.vikatan.com/news/health/96295-can-diabetics-eat-mangoes-jack-fruit-and-banana.html

Link to comment
Share on other sites

கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை

 

தரமான ஹேர்டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்தும் முன் கவனிக்க வேண்டியவை
 
தலைக்கு விதவிதமா கலரிங் செய்து கொள்ள வேண்டும், பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று டீன் ஏஜ் வயதினருக்கு ஆசை. நரை முடி மறைக்க வேண்டும், இளமையாய் தெரிய வேண்டும் என நடுத்தர வயதினருக்கு ஆசை. இப்படி அழகுக்காக செய்து கொள்வதால், அதன் பின்விளைவுகளைப் பற்றி நாம் யோசிப்பதில்லை.

டைகளில் உள்ள கெமிக்கல் தலையிலுள்ள சருமத்திற்கு ஒரு அந்நிய உணர்வை தருகின்றன. இதனால் நோய் எதிர்ப்பு செல்கள் உடனே டை பட்ட இடங்களுக்கு விரைந்து வந்து தங்கள் எதிர்ப்பை காட்டுகின்றன, இதன் விளைவே அலர்ஜி மற்றும் எரிச்சல் உண்டாகக் காரணம்.

எப்போதெல்லாம் தலை சருமம் எரிச்சலை உண்டுபண்ணும் என்று கவனித்தீர்களேயானால், அடிக்கடி தலைக்கு அடிக்கும் நிறத்தினை மாற்றும்போது, இல்லையென்றால் வேறு வேறு பிராண்டை மாற்றும்போது, தரம் குறைந்த டை உபயோகப்படுத்தும் போது, திடீரென சருமத்தினால் ஏற்றுக் கொள்ளாமல் அதன் எதிர்ப்பை காட்டுகின்றது.

அதேபோல் சருமம் ஹெல்தியாக இல்லாமல் இருந்தால், பொடுகு மற்றும் ஸ்கால்ப் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், டை உபயோகப்படுத்தும்போது இன்னும் பாதிக்கும். எனவே ஸ்கால்ப் பிரச்சனைகள் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவரை ஆலோசித்தபின் டை உபயோகிப்பது நல்லது. இல்லையெனில் அது சருமத்தில் வேறுவிதமான பிரச்சனைகளை கொண்டு வரும்.

எந்த கலரிங் டை யும் டெஸ்ட் பண்ணிவிட்டே உபயோகப்படுத்த வேண்டும். டையை சிறிதளவு பின்னங்கையில் தேய்த்து சில நிமிடங்கள் பாருங்கள். அங்கே எரிச்சலோ, சிவந்து தடிப்போ ஏற்பட்டால், அந்த டையை உபயோகப்படுத்தக் கூடாது என நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அதிக நேரம் வைத்திருக்கக் கூடாது: சிலர் ஹேர் டையை தலையில் போட்டுவிட்டு அவர்கள் வேலையை பார்ப்பார்கள். அது முழுவதும் காய்ந்த பின் அலசுவார்கள். இது மிகவும் தவறு. கலரிங்க் டை பாக்கெட்டுகளில் எத்தனை நிமிடங்கள் வைத்திருக்க சொல்லியிருக்கிறதோ அதன்படிதான் செய்ய வேண்டும். அதற்கு மேல் வைத்திருக்கக் கூடாது.

நீங்கள் பியூட்டி பார்லரில் சென்று கலரிங்க் அடித்துக் கொள்கிறீர்களேயானால், அவரிடம் உங்களுக்கு ஸ்கால்ப் பிரச்சனை ஏதும் இருந்தால் சொல்லிவிட வேண்டும். இதனால் சருமப் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

நிறைய பேர் டையை ஸ்கால்ப்பினை ஒட்டி தடவுவார்கள். அது மிகவும் தவறு. ஸ்கால்ப் முடியின் வேர்க்கால்களுக்கு மிக அருகில் இருப்பதால், ஸ்கால்ப்பில் போடும் போது, வேர்க்கால்களை பாதிக்கும். எனவே ஸ்கால்ப்பிலிருந்து அரை இஞ்ச் தள்ளியே டையை அடிக்க வேண்டும்.

டை அடிப்பதற்கு முன் நெற்றியில், காதில் பின்னங்கழுத்தில் பெட்ரோலியம் ஜெல்லை தடவி விடுங்கள். இது டையின் கெமிக்கலை உங்கள் சருமத்தில் படாதவாறு காக்கும்.

நமது தலையில் இயற்கையாகவே எண்ணெய் சுரக்கும். அது தலைமுடிக்கு கண்டிஷனராக, ஈரப்பதம் அளித்து காக்கும். நீங்கள் தலைக்கு குளிக்கும் போது அந்த எண்ணெய் முடியிலிருந்து நீங்கி, வறண்டிருக்கும். அதன் பின் அடுத்த ஓரிரு நாளில் நீங்கள் டை அடிக்கும் போது தலைமுடி மேலும் வறண்டு போகும். ஆகவே டை அடிப்பதற்கு முன் தலைக்கு குளிக்காதீர்கள்.

தலைக்கு ஹேர் ப்ளீச் செய்த பின், ஹேர் டிரையர் உபயோகப்படுத்தக் கூடாது. இது தலையில் எரிச்சலை உண்டு பண்ணும். முடியும் அதிகமாக உடையக் கூடிய அபாயம் உண்டு.

எனவே தரமான டையினை தக்க முன்னெச்சரிகையுடன் உபயோகித்தால் கூந்தலை கெமிக்களின் விளைவுகளிலிருந்து காப்பாற்றலாம்.

http://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2017/07/23120808/1098063/Before-the-use-of-chemical-hair-dye.vpf

Link to comment
Share on other sites

Duodenal Ulcer க்குரிய சிகிச்சை

இன்றைய திகதியில் எம்முடைய இளந்தலைமுறையினர் யாரும் நேரத்திற்கு பசியாறுவதில்லை. அத்துடன் பசிக்கும் போது சத்தான உணவை சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக அல்சரால் பாதிக்கப்படுகிறார்கள். உலகில் உள்ள 50 வயதிற்குட்டவர்களில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் அல்சரால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

health.jpg

இந்நிலையில் , இந்த வயிற்றுப்புண் என்பது வயிற்றில் ஏற்படக்கூடிய புண் (Gastric & Peptic Ulcer) என்றும், சிறு குடலில் ஏற்பட்டால் அது Duodental Ulcer என்றும் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய பாதிப்பு வருவதற்கான முக்கிய காரணம் Hrycoal - Bacterium. அத்துடன் மனஅழுத்தமும் (stress) ஒரு காரணமாக கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் மருத்துவர் ஆலோசனையின்றி மருந்து கடைகளில் மருந்து வாங்கி உட்கொள்வதாலும், புகைப்பிடித்தல் மற்றும் மதுஅருந்துதல் போன்ற தவறான பழக்க வழக்கங்களாலும்,  உடற்பருமன் மற்றும் அதிக உடல் எடையின் காரணத்தாலும் இவை உண்டாகிறது. நெஞ்சு எரிச்சல், அஜுர்ண கோளாறுகள், வாந்தி, பசியின்மை, உணவை கண்டால் பயஉணர்வு மேலும் பிடித்த உணவை கூட உண்ண முடியாத நிலை, மேலும் சாப்பிட்ட ஒரு மணி நேரத்தில் வலி உண்டகுதல் மற்றும் சாப்பிட்ட பின் 4 மணித்தியாலம் கழித்து வலி ஏற்படுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ நிபுணரைச் சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையையும் பெறவேண்டும். 

சிகிச்சையைப் பெறத் தவறினால் இரத்தம் கலந்த வாந்தி ஏற்படும் அபாயம் உள்ளது. ஒரு சிலருக்கு மலம் வழியாக இரத்தம் போகும் நிலையும் ஏற்படும். இதை நாம் வராமல் தடுப்பதற்கு முதலில் 3 வேளையும் ஆரோக்கியமான உணவு உண்பது அவசியம்.

Dr. தயாளன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/22274

Link to comment
Share on other sites

கர்ப்பிணிகளுக்கு திடீரென ஏற்படும் நீரிழிவு நோய் ஆபத்தானது.!

 

 

ஆரோக்கியமாக இருந்த இளம் பெண்கள் கர்ப்பம் தரித்திருக்கும் போது சீனியின் அளவு குருதியில் திடீரென அதிகரிக்கின்றது. இதனை கர்ப்பகால நீரிழிவு நோய் என அழைப்போம். இவ்வாறாக தோன்றும் கர்ப்பகால நீரிழிவு நோய் வயிற்றில் வளரும் சிசுவின் ஆரோக்கியத்தையும் அதன் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கின்றது. அது மட்டுமல்ல இவ்வாறு திடீரென நாம் கர்ப்பம் தரித்திருக்கும் இளம் பெண்களுக்கு நீரிழிவு நோய் வந்து விட்டது என்று சொன்னவுடன் அவர்களது குடும்பமே மனரீதியாக அதிர்ச்சியடைகின்றனர்.

prag.jpg

எனவே இவ்வாறான ஆபத்தான கர்ப்பகால நீரிழிவு நோயை கர்ப்பிணி பெண்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் புரியவைத்து சிகிச்சையில் வெற்றி கொண்டு ஆரோக்கியமாக சிசுவை வளர்த்து ஒரு குறையும் இல்லாமல் குழந்தையை வெளியில் எடுக்க சம்பந்தப்பட்டவர்களது ஒத்துழைப்பு அவசியம்.

இதற்கான முதற்படி சிகிச்சையாக கர்ப்பிணி பெண்கள் உணவு முறைகளை மாற்ற வேண்டும் இவ்வாறு உணவு முறைகளை மாற்ற ஒத்துழைப்பவர்கள் எத்தனை பேர் என்ற கேள்வி அனுபவரீதி­யில் எழுகின்றது. ஏனெனில் வீடுகளில்  ஒவ்வொருவர் கூறும் கதைகளை கேட்டு அதற்கேற்ப உணவு பரிமாறும் பழக்கம் நமது பண்பாட்டில் இருந்து வருகின்றது.  அத்துடன் கர்ப்பிணி பெண்களும் தமக்கு நாக்கிற்கு சுவையான உணவுகளைத்தான் உண்ண விரும்புகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் உணவு பழக்கத்தை முழுக்க முழுக்க நம்பி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்பது சற்று கடினமாகத்தான் உள்ளது.

அடுத்தபடியான சிகிச்சையாக கர்ப்ப­கால நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்க மெற்போமின் (Metformin) மற்றும் இன்சுலின் (Insulin) ஊசிகள் பாவிக்க வேண்டிவரும். இவற்றை பாவித்து கர்ப்பகால நீரிழிவில் சீனியின் அளவைக் குறைத்து சிகிச்சை வழங்கும் போது சிசுவானது ஆரோக்கியமாக வளர்கின்றது. ஆனால் எமது மக்களை பொறுத்த வரையில் கர்ப்பகாலத்தில் மாத்திரைகளோ ஊசிகளோ பாவிக்கும்போது அதனால் சிசுவுக்கு பக்கவிளைவு வரும்  என அச்சம் கொள்கிறார்கள். நீரிழிவு நோயில் அதிகரித்த சீனியின் அளவினால்தான் சிசுவுக்கு பாரிய பாதிப்புகள் வருமென மருத்துவர்கள் கூறினாலும் மக்கள் பார்வையில் அதனை கட்டுப்படுத்த பாவிக்கும் மருந்துகளுக்கும் இன்சுலினுக்கும் தான் பக்க விளைவுகள் வருமென உறுதியாக நம்புகின்றனர். இவ்வாறான தவறான நம்பிக்கை மக்கள் மத்தியில் வலுவாக நிலவுவதால் சிலர் சிகிச்சைகளில் இருந்து விலகிச் செல்லவும் சொன்னபடி மருந்துகளையோ ஊசிகளையோ எடுக்காது புறக்கணிப்பதும் திரைமறைவில் நடந்த வண்ணம் தான் உள்ளது. இவ்வாறு மருத்துவ ஆலோசனைகளை பொறுமையாக கேட்டு மற்றவர்கள் சொல்லும் மாறுபட்ட கருத்துகளை காதில் போடாது சிகிச்சைகளை பின்பற்றும் போது தான் உங்கள் சிசுவை ஆரோக்கியமான குழந்தையாக பெற்றெடுக்கலாம்.

கர்ப்பகால நீரிழிவில் சீனியின் அளவு கூடி உள்ள போது சிசுவுக்கும் தாய்க்கும் பாதிப்புகள் ஏற்பட செய்கின்றது.

சிசுவுக்கு ஏற்படும் பாதிப்புகளான இயற்கையான கருக்கலையும் நிலை, அங்கவீனக் குறைபாடுகள், குழந்தையின் இருதயக் குறைபாடுகள், வளர்ச்சி குறைபாடுகள், மிகையான சிசு வளர்ச்சியால் சிசு பெரிதாக ஊதிப்போதல் மற்றும் கர்ப்பிணியில் இறுதி வாரங்களில் சிசுவின் துடிப்பு குறைந்து திடீர் சிசு மரணங்கள் ஏற்படுகின்றன. அத்துடன் தாய்க்கும் குருதி அமுக்கம் அதிகரித்தல், குறைமாதப்பிரசவம் மற்றும் கர்ப்பிணி பன்னீர் குடத்தில் மிகையான நீர்த்தேங்குதல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

இவ்வாறு கர்ப்பகாலத்தில் சீனி அதிகரிப்பால் ஏற்படும் பாதிப்புகளை அதிகம் கூறினாலும் சில மக்கள் அதனை பயமுறுத்தும் வார்த்தைகளாக மருத்துவர்கள் மீது வெறுப்படைவதும் நடைமுறையில் உள்ளது. எனவே சீனி வியாதியின் பாதிப்புகளை நன்கு அறிந்தால்தான் சினிவியாதியை கட்டுப்படுத்த வழங்கப்படும் சிகிச்சைகளுக்கு கர்ப்பிணி பெண்களிடமும் அவர்களது குடும்பத்தினரிடமிருந்தும் ஒத்துழைப்பு கிடைக்கும்.  இவ்வாறு சம்பந்தப்பட்டவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு ஒத்துழைப்பு வழங்கும்போது வெற்றிகரமான சிகிச்சையை மேற்கொண்டு தாயையும் குழந்தையையும் ஆரோக்கியமாக காப்பாற்றக் கூடியதாக உள்ளது.

அடுத்ததாக கர்ப்பிணி பெண்கள் சிலரில் கர்ப்ப­காலத்தில் இறுதியில் தோன்றும் சீனி அதிகரிப்பு சரியாக கண்டறியப்படாமல் தவறவிடப்படும் சம்பவங்களும் பல இடங்களில் நடைபெறுகின்றன.

இவ்வாறு கர்ப்பகால நீரிழிவுநோய் பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கும் சிகிச்சை வழங்கும் இடங்களிலும் இல்லாவிட்டால் திடீரென அதிகரித்துவரும் சீனியின் அளவை கண்டறிய முடியாது. இவ்வாறான நிகழ்வுகள் இறுதியில் சடுதியான திடீர் சிசு மரணங்களை இறுதிக் கர்ப்பகாலத்தில் ஏற்படுத்தி கர்ப்பிணி பெண்களின் கனவுகளை சிதைத்து பெரும் சோகத்தில் மூழ்கடிக்கின்றது. அவ்வாறான தருணத்தில் தான் சீனி வியாதி ஏற்பட்டதை தவறவிட்டதாக உணருகின்றனர். எனவே இவ்வாறான நிலைமை எவருக்கும் வராமல் காப்பாற்ற கர்ப்பகாலத்தில் ஒரு எளிமையான இரத்தப்பரிசோதனைகள் மூலம் மீண்டும்  மீண்டும் சீனியின் அளவை பார்ப்பது அவசியமாகின்றது.

அத்துடன் கர்ப்பகாலத்தில் நீரிழிவுநோய் உள்ளபோது பிரசவமுறை மற்றும் பிரசவம் செய்ய வேண்டிய காலப்பகுதியை சற்று ஆராய்ந்து சரியான தீர்மானம் எடுக்க வேண்டும். பிரசவமானது இரண்டு வாரங்கள் முந்தியே செய்வது எதிர்பாராத சிசு மரணங்கள் இறுதிவாரங்களில் ஏற்படுவதில் இருந்து தப்பித்து கொள்ள உதவுகின்றது. அத்துடன் சிசுவின் நிறையை ஸ்கேன் பரிசோதனை மூலம் சரியாக கணித்து சிசுவின் நிறை நான்கு கிலோவிலும் கூடவாக இருந்தால் சிசேரியன் மூலம் பிரசவிப்பது சிசுவுக்கு ஏற்படக் கூடிய காயங்கள், பாதிப்புகளை தவிர்க்க உதவும்.

எனவே கர்ப்பகாலத்தில் நீரிழிவு நோய் தற்போது நாளுக்கு நாள் கூடுதலாக காணப்படும் ஒரு மருத்துவ சிக்கல். இது குறித்த விழிப்புணர்வு மக்களிடம் உள்ள போது எமக்கு சரியான முறையில் சிகிச்சை வழங்கி பாதிப்புகள் மற்றும் சிசு மரணங்கள் தவிர்க்கப்பட்டு சரியான காலத்தில், சரியான முறையில் பிரசவத்தை மேற்கொள்ள உதவுகின்றது.

http://www.virakesari.lk/article/22226

Link to comment
Share on other sites

கை, கால் செயலிழப்பு, முடக்குவாதம்... மசூர் பருப்பு விபரீதங்கள்! - #BanMasoorDal #Video

 
 

இந்தியாவில் ரேஷன் கடையை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவர்கள் பல கோடிப் பேர். அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், பாமாயில், சர்க்கரை, கோதுமை... என வழங்கப்படும் அத்தனைப் பொருள்களுமே அவர்களுக்கு வாழ்வாதாரம்! `ரேஷன்ல மண்ணெண்ணெய் ஊத்துறாங்களாம்...’ என்கிற ஒரு வாக்கியம் எப்படித் தீயாகப் பரவியது என்று தெரியாது. அடுத்த பத்தாவது நிமிடத்தில் கால் கிலோமீட்டர் தூரத்துக்கு ரேஷன் கடையில் க்யூ நிற்கும். அரிசி சுமாராக இருக்கலாம், கோதுமையில் தூசும் பதர்களும் நிறைந்திருக்கலாம். அத்தனையையும் களைந்துவிட்டு பயன்படுத்தத் தயாராகவே இருக்கிறார்கள் நம்மவர்கள். ஆனால், `இது வேண்டாம். இதனால் உடல்நலத்துக்குத் தீங்கு’ எனத் தடைசெய்யப்பட்ட ஓர் உணவுப் பொருள் திரும்பவும் அதே ரேஷன் கடைகளில் விநியோகம் செய்யப்படுவதுதான் இன்று பலரையும் பதறவைத்திருக்கிறது. அது, மசூர் பருப்பு! 

மசூர் பருப்பு

சாமானியர்களுக்குக்கூட எல்லா உணவுப்பொருள்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டவை ரேஷன் கடைகள். அரிசி இலவசம், மலிவு விலையில் அத்தியாவசியப் பொருள்கள்.  கால்கடுக்க ரேஷன் கடை வரிசையில் நிற்க எப்போதுமே தயாராக இருக்கிறார்கள் மக்கள். ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன்னர் தடைசெய்யப்பட மசூர் பருப்பை இப்போது, மீண்டும் கொள்முதல் செய்ய அரசாணை வெளியிட்டிருக்கிறது அரசு. இது மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்துவதற்குப் பதிலாக பீதியைத்தான் கிளப்பியிருக்கிறது.

தமிழ்நாட்டில், ஆரம்பத்தில் மதிய உணவுத் திட்டத்துக்கு பயன்படுத்தப்பட்டது மசூர் பருப்பு. இந்தப் பருப்பைச் சாப்பிட்ட குழந்தைகளுக்கு நரம்புக்கோளாறுகள் ஏற்பட்டதாகவும், முடக்குவாதம்போல கை, கால்களில் செயலிழப்பு ஏற்பட்டதாகவும் புகார்கள் எழுந்தன. இதையொட்டி மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. குழந்தைகளுக்கு ஏற்பட்ட அந்த பாதிப்புகளுக்கு மசூர் பருப்புதான் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. அதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் மசூர் பருப்புக்குத் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு நுகர்வுப்பொருள் வாணிபக் கழகம் சார்பில் அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆனால், இப்போது அதே பருப்பை மீண்டும் தமிழக அரசு கொள்முதல் செய்ய முடிவு செய்திருக்கிறது. ‘குறைந்த விலையில் கொள்முதல் செய்து, குறைந்த விலைக்கு மக்களுக்கு வழங்குகிறோம்’ என்று அதற்கான செய்திகளையும் வெளியிட்டிருக்கிறது அரசு. இதை நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார் காரைக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற கால்நடைத்துறை அதிகாரி ஆதிஜெகநாதன். அதை ஏற்று நீதிமன்றம் அரசின் முடிவுக்கு இடைக்காலத் தடை விதித்திருக்கிறது. 

ரேஷன் கடை

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மகாராஷ்டிராவிலும் இதே பிரச்னை! மசூர் பருப்பை உண்ட பள்ளி மாணவர்களுக்கு முடக்குவாதம், நரம்பு மண்டலக் கோளாறுகள் ஏற்பட்டன. உடனே மகாராஷ்டிரா அரசு மசூர் பருப்புக்குத் தடை விதித்தது. இந்த நிலையில், இந்தியாவுக்குள்ளேயே ஒரு மாநில அரசால் தடைசெய்யப்பட ஓர் உணவுப் பொருளை மற்றொரு மாநில அரசு அங்கீகரிப்பது எப்படி நியாயமாகும்? 

“கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னரே மசூர் பருப்பு தடைசெய்யப்பட்டுவிட்டது. இப்போது மீண்டும் அதை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது என்பது சந்தேகிக்கவேண்டிய ஓர் அம்சமாக இருக்கிறது. மசூர் பருப்பை ரேஷன் கடைகளில் மட்டுமல்லாமல், சத்துணவுத் திட்டத்துக்கும் வழங்க இருக்கிறார்கள். இந்தப் பருப்பால் நரம்பு மண்டலத்தில் பாதிப்புகள் ஏற்படும், மூளைச் செயல்பாட்டில் குறை உண்டாகும். குழந்தைகளைச் சிறுவயதிலேயே முடக்குவாத நோய் தாக்கும். அதனால்தான், இதைத் தடை செய்ய வேண்டும் என்று மசூர் பருப்பைக் கொள்முதல் செய்வதற்கான அரசாணைக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் பொதுநல வழக்குத் தொடர்ந்து, தடை உத்தரவு வாங்கியிருக்கிறேன்’’ என்கிறார் ஆதிஜெகநாதன்.

மசூர்  பருப்பில் உள்ள அடர் சிவப்பு நிறம்தான் நோய்களுக்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த நிறமி மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். இந்த நிறத்தைப் பிரித்தெடுக்கும் தொழிநுட்பம் இன்னும் கண்டறியப்படவில்லை. ஆனால், பருப்பை நீரில் ஊறப்போட்டால் இந்த நிறமியின் தன்மை போய்விடும் என்ற வதந்தி உண்டு. ஆனால், மருத்துவரீதியாக இந்தச் செயல்முறை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. 

மூட்டு வலி

இந்த நிறமி நச்சுத்தன்மை வாய்ந்தது. இதில் உள்ள நச்சின் அளவு குறைவுதான் என்றாலும், தொடர்ந்து உட்கொள்ளும்போது ஏற்படும் பாதிப்புகள் அதிகம். நரம்புமண்டலச்  செயல்பாடுகளில் பாதிப்பை உண்டாக்கும். மூளைச் செயல்பாட்டைக் குறைக்கும். அதோடு, கை, கால் செயலிழப்பு, முடக்குவாததையும் உண்டாக்கும். இதன் நிறமிக்குக் காரணம், இதனுடன் சேர்த்து விளைவிக்கப்படும் கேசரிப் பருப்புதான் என்ற கருத்தும் உள்ளது. மருத்துவர் கு. கணேசன்

மசூர் பருப்புக் குறித்துப் பொது மருத்துவர் கு.கணேசனிடம் பேசினோம்.

“மசூர் பருப்பில் பயன்படுத்தப்படும் யூரிக் ஆசிட்டால் மூட்டுவலி, முடக்குவாதம் வருகிறது என்றுதான் இதைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. இப்போது மீண்டும் புழக்கத்துக்கு வர இருக்கிறது. மசூர் பருப்பால் எந்த பாதிப்பும் இல்லை என்று மருத்துவரீதியாகச் சான்றுகள் ஏதும் இல்லை. என்றாலும், தமிழகத்தில் இதன் பயன்பாடு குறைவாக இருப்பதும், அப்படியான சான்றுகள் இல்லாததற்குக் காரணமாக இருக்கலாம். அனைத்துவகைப் பருப்புகளும் உடலுக்கு நன்மை தருபவைதான். ஆனால், அவற்றின் தன்மை, விளையும் இடத்தைப் பொறுத்தும்கூட மாறுபடலாம். உணவுப் பொருள்களின் தன்மை மாறுவதற்கு பருவம், காலம், இடம், மண்ணின் தன்மை, சேர்க்கப்படும் உரம் மற்றும் ஊடு பயிர்ச்செடிகள் போன்றவையும் காரணங்களாகலாம்" என்கிறார் கணேசன். 

குந்தலா ரவிஉணவியல் ஆராய்ச்சியாளர் குந்தலா ரவி சொல்கிறார்... “கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மகாராஷ்டிராவில் இந்தப் பருப்பால் மாணவர்களுக்கு 'லத்திரிசம்' என்ற நரம்புநோய் ஏற்பட்டது. இதில் உள்ள நச்சுத் தன்மை நரம்பு மண்டலத்தை பாதிக்கும். மூளைச் செயல்பாடு குறையும். சில குழந்தைகளுக்கு முடக்குவாத நோய்கூட ஏற்பட்டது. கை, கால்கள் செயலிழந்து போயின. மகாராஷ்டிரா அரசு இதைத் தடை செய்தது.  தமிழகத்திலும் இதற்குத் தடை இருந்தது. 

இதில் அடர் சிவப்பு / ஆரஞ்சு நிறம் அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது. மசூர் பருப்பில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், அதனுடன் சேர்த்து பருப்புக்காகக் கொடுக்கப்படும் நிறமி, நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது. மேலும், இந்தப் பருப்பைக் கூட்டாக, சாம்பாராக என எப்படிச் சாப்பிட்டால் பாதிப்புகள் ஏற்படும், எவ்வளவு காலம் தொடர்ந்து சாப்பிட்டால் பாதிப்புகள் உண்டாகும் என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இதற்குப் பதிலாக பச்சைப் பயறு / பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்."  

மசூர் பருப்பு குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பத்மினியிடம் கேட்டோம்.பத்மினி ஊட்டச்சத்து நிபுணர்

"மசூர் பருப்பு, கேசரி பருப்பு போன்றவற்றில் உள்ள நிறமிகள் நச்சுத்தன்மை வாய்ந்தவை. இதை கிட்டத்தட்ட ஸ்லோ பாய்சன் என்றுகூடச் சொல்லலாம். இதில் சிறிய அளவில் நச்சுத்தன்மை இருக்கிறது டாக்டர் கிருஷ்ண மூர்த்திஎன்றாலும், தொடர்ந்து உட்கொண்டால், அதன் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும். இதில் வைட்டமின் சத்துக்களும் தாதுஉப்புக்களும் நிறைந்துள்ளன. இருந்தாலும், இதில் உள்ள நச்சுத்தன்மை காரணமாக இதைத் தவிர்ப்பதே நல்லது. இதற்குப் பதிலாக பாசிப் பயறு, பாசிப் பருப்பு, துவரம் பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தலாம்’’ என்று கூறினார். 

இது பற்றி மூத்த உணவியல் நிபுணர் கிருஷ்ண மூர்த்தி  கூறும்போது, "வட இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய ஒரு வகை பருப்பு மசூர் தாள்.  இந்த  பருப்புடன் ஊடுபயிராக கேசரி பருப்பு பயிரிடப்படுகிறது. மசூர் பருப்பில் நச்சுத் தன்மை உள்ளது. அதோடு அதிக நச்சுத்தன்மையுள்ள கேசரி பருப்பு சேர்த்து பயிரிடப்படும்போது, இதன் நச்சுத்தன்மையின் அளவும் அதிகரிக்கிறது. எனவே, மசூர் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிப்பது நல்லது, முக்கியமாக குழந்தைகளுக்கு இந்த வகை பருப்பை உணவாகக் கொடுக்கக் கூடாது" என்கிறார்.

இவ்வளவு அபாயகரமான ஒரு பருப்பை மக்களுக்கும், குழந்தைகளுக்கும் வழங்க தமிழக அரசு துடிப்பது ஏன்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி!

 

 

 

http://www.vikatan.com/news/health/96810-effects-of-masoor-dal.html

Link to comment
Share on other sites

டயபடீக் ரெட்டினோபதியை குணப்படுத்தும் சத்திர சிகிச்சை

 

 

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், தங்களது கண்களைக் கவனிக்கத் தவறினால் பார்வைதிறன் குறித்த பாதிப்பு அதிகமாக ஏற்படும். அதிலும் குறிப்பாக இவர்கள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ளவில்லை என்றால், கண்களில் உள்ள ஓப்டிக் நரம்பு மற்றும் கண்களின் தசைகள் பாதிக்கப்படும். இதன் காரணமாக கண்களை அசைக்க முடியாத நிலை உருவாகும். 

health_news_image_127.jpg

சர்க்கரை நோய், விழித்திரைகளைப் பாதிப்பதைத்தான் டயபடீக் ரெட்டினோபதி என்று குறிப்பிடுகிறார்கள். இதன் காரணமாக கண்களுக்கு புலப்படாத இரத்தக் குழாய்களின் உட்சுவரில் கொழுப்பு தங்கி, அதன் நடுச்சுவரில் உள்ள தசைகளின் செயல்பாட்டிற்கு இடையூறு செய்து, அதனை செயலிழக்க செய்துவிடுகின்றன. இதன் விளைவாக கண்ணின் உள்திரையில் பாதிப்பு ஏற்பட்டு, கண்ணில் உள்ள ரத்த நாளங்கள் பலவீனமாகி, இரத்த கசிவு ஏற்பட்டு, பார்வைத்திறனைப் பாதிக்கின்றன.

எம்முடைய விழித்திரையில் அதிகளவிலான ரத்த நாளங்கள் அமையப் பெற்றுள்ளன. சர்க்கரை நோய் இந்த சிறிய ரத்த குழாய்களை பாதிக்கிறது. இவை வலுவிழக்கும் போது, விழித்திரையில் நீர் அல்லது குருதியை கசியவிடுகிறது. கண்களில் ஓக்சிஜன் அளவு குறைவாக இருக்கும் போது புதிய இரத்த குழாய்கள் உருவாகும். சிலருக்கு சில நேரங்களில் இரத்த குழாய்கள் வெடித்துவிடும். இதன் காரணமாக விழித்திரையின் முக்கிய பகுதியான மாக்யூலா பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் விழித்திரையிலிருந்து மூளைக்கு அனுப்பப்படும் பொருட்களின் உருவம் தெளிவில்லாமல் இருப்பதால் நோயாளிக்கு பார்வைத்திறன் பாதிக்கப்படுகிறது.

அதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். இதனைக் கண்டறிய தற்போது ப்ளுரெசின் ஓன்ஜியோகிராம்  (fluorescein angiogram) என்ற பரிசோதனையை செய்து கண்டறியலாம். இந்த பரிசோதனையின் போது ப்ளுரெசின் என்ற திரவத்தினை நோயாளியின் கையில் ஊசி மூலம் செலுத்தப்படும். அந்த திரவம் விழித்திரையின் ரத்த குழாய்களின் வழியாக பயணிக்கும் போது புகைப்படம் எடுத்து, கசிவின் தன்மையையும், அளவையும் உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள். இதற்கு கதிர்வீச்சு சிகிச்சை மூலம் நிவாரணம் அளிக்கப்படுகிறது. இதற்கு பிறகு கண்ணிற்குள் அதிகளவிலான இரத்தம் இருப்பதாக கண்டறியப்பட்டால் அவர்களுக்கு விட்ரெக்டமி என்ற சத்திர சிகிச்சை மூலம் அதிகளவிலான ரத்தத்தை அகற்றி விழித்திரை பாதுக்காக்கப்படுகிறது. 

Dr. பத்ரி நாராயணன்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/22384

Link to comment
Share on other sites

16 கோடிப் பேருக்குக் கல்லீரல் பாதிப்பு... கவனம்! - உலக ஹெபடைட்டிஸ் தினப் பகிர்வு #EliminateHepatitis

 

பெரும்பாலான நோய்களுக்கு வைரஸ் தாக்குதல்களே காரணம். மலேரியா தொடங்கி இப்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஜிகா வரைக்கும் எல்லாமே வைரஸ்களால் ஏற்படும் நோய்களே. இந்த வரிசையில் மிகவும் அபாயகரமான வைரஸ்... ஹெபடைட்டிஸ். ஆண்டுதோறும் ஜூலை 28-ம் தேதியை 'உலக ஹெப்படைடிஸ் தினமாக' உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒரு கருத்தை அடிப்படையாகக்கொண்டு இந்த தினம் கடைபிடிக்கப்படும். இந்த ஆண்டு ஹெபடைட்டிஸ் தினத்தின் தீம் 'ஹெபடைட்டிஸை ஒழிப்போம்..! (Eliminate Hepatitis). 

ஹெபடைட்டிஸ்

ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமிகள் மிகவும் ஆபத்தானவை. உயிரையே பறிக்கும் அளவுக்கு அபாயகரமானவை. இந்த  வைரஸ் கிருமிகளின் வகைகள், பரவும் முறை, பாதிப்பு, சிகிச்சை முறைகள், இந்தக் கிருமிகளிடம் இருந்து எப்படி தற்காத்துக்கொள்வது என எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கிறார் ஹெபடைட்டிஸ் ஆலோசகர் மற்றும் கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை நிபுணர் சந்தன் குமார்...சந்தன் குமார்

வகைகள்...
ஹெபடைட்டிஸ் வைரஸால் ஏற்படும் பாதிப்புகளில் முக்கியமானது கல்லீரல் அழற்சி. இந்த வைரஸில் ஏ, பி, சி, டி, இ, ஜி எனப் பல வகைகள் உள்ளன.

பரவும் விதம், பாதிப்புகள்...
* ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் அசுத்தமான நீர் மற்றும் உணவு மூலம் பரவும். 
* ஹெபடைட்டிஸ் பி, சி ரத்தம் மற்றும் உடலில் சுரக்கும் கசிவுகள் மூலம் பரவக்கூடியவை. இதில் ஹெபடைட்டிஸ் பி, ரத்தத்தின் மூலம் மட்டும் பரவும்.
* ஹெபடைட்டிஸ் ஏ என்பது மிகவும் சாதாரணமாகப் பரவக்கூடியது. இந்த வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான காய்ச்சலின் அறிகுறிகளைப் போலவே இருக்கும். 
* ஹெபடைட்டிஸ் டி வைரஸ் நேரடியாக பாதிக்காது. மாறாக, பி வைரஸுடன் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும். இது மிகவும் ஆபத்தானது. 

ஹெபடைட்டிஸ் பாதிப்பால் ஏற்படும் நோய்கள் வளரும் நாடுகளில் அதிகமாக உள்ளன. உலகில் 350 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று இருப்பது 4.7 சதவிகிதம் என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. ஹெபடைட்டிஸ் சி வைரஸ், உலகம் முழுவதும் 160 மில்லியன் பேருக்குக் கடுமையான கல்லீரலில் நோயை ஏற்படுத்தியிருக்கிறது என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஹெபடைட்டிஸ் வைரஸ்களில், பி மற்றும் சி மிகவும் ஆபத்தானவை. ஏனெனில், இவை ரத்தம் மூலமாக பரவக்கூடியவை. இந்தியாவில் இந்தத் தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் இவை எப்படிப் பரவின என்று ஆராய்ந்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்... பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தை ஏற்றுதல், பாதுகாப்பற்ற அறுவைசிகிச்சை நடைமுறைகள், போதை மருந்தைப் பயன்படுத்துபவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்குப் போடப்படும் இன்சுலின் ஊசிகளில் கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளைப் பயன்படுத்துதல்... போன்றவை முக்கியக் காரணிகளாக இருந்திருக்கும்.

கல்லீரல் சிதைவு, மஞ்சள்காமாலை, அடிவயிற்றுப் பொருமல், ரத்தப்போக்கு போன்ற பாதிப்புகளுக்குக் காரணம் ஹெபடைட்டிஸ் பி அல்லது சி வைரஸ் தொற்றுதான் என்பது பலருக்குத் தெரிவதில்லை. இவற்றை ரத்தப் பரிசோதனையின் மூலம் மட்டுமே கண்டறிய இயலும். இத்தகைய பாதிப்பு உள்ளவர்கள் ஆரம்பநிலை புற்றுநோயுடன் இருக்கவும் வாய்ப்பு உண்டு.

ஹெபடைட்டிஸ் பி தொற்றைத் தவிர்க்க...
ஹெபடைட்டிஸ் பி பாதிப்புக்கு சிகிச்சை கிடையாது. தடுப்பு மருந்துகள் மட்டுமே உள்ளன. தடுப்பு மருந்துகள் வைரஸ் தொற்று அதிகரிப்பதைக் குறைக்குமே தவிர, குணப்படுத்தாது. ஹெபடைட்டிஸ் பி வைரஸை ஒழிப்பதற்கு சிறந்தவழி அதை வராமல் தற்காத்துக்கொள்வதுதான். 

கல்லீரல் பாதிப்பு

யாருக்குப் பாதிப்புகள் அதிகம் ஏற்படும்? 
ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று உள்ளவர்களின் குடும்ப உறுப்பினர்கள், ஹெபடைட்டிஸ் வைரஸ் தொற்று உள்ள தாய்மார்களின் குழந்தைகள், போதை ஊசிகளைப் பயன்படுத்துபவர்கள், பச்சை குத்திக்கொண்டவர்கள், ரத்த ஊடுகலப்புடன் தொடர்பு உடையவர்கள், ஹீமோடயாலிசிஸில் (Hemodialysis) இருப்பவர்கள், ஹெச்ஐவி பாசிட்டிவ் உள்ளவர்கள், பாதுகாப்பு இல்லாத முறையில் உடலுறவு கொள்பவர்கள் ஆகியோர் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலின் கீழ் இருப்பவர்கள். 

தொழில்வழியில் ரத்தத்துடன் தொடர்புடைய மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வுக்கூட பணியாளர்கள் போன்ற உடல்நல பராமரிப்புத் துறையில் உள்ளவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களின் பட்டியலின் கீழ் அடங்குவார்கள். இவர்களுக்கான ஒரே தீர்வு தடுப்பூசிதான்.

கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? 
நோய்க் கிருமிகளைக் கட்டுப்படுத்துவதைவிட முக்கியமான ஒன்று, பாதிக்கப்பட்டவர்களின் நிலையை அறிந்துகொள்வதுதான். நாடு முழுவதும் அனைவருக்கும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். அங்கன்வாடி மையங்களுக்கு பரிசோதனைக்கு வரும் பெண்களுக்கும், ரத்த வங்கிகளுக்கு வரும் கொடையாளிகள், பயனாளர்களுக்கும் ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி பரிசோதனை செய்யப்பட வேண்டும். 

நோய் தொற்றைத் தடுக்க...
கவனக்குறைவால் ஊசி குத்தும்போது காயம் ஏற்பட்டால், உடனடியாக ஓடும் நீரில் காயம்பட்ட இடத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பின்னர், ஆன்டிசெப்டிக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். 
ரத்தக் கொடையாளிக்கு ஹெபடைட்டிஸ் பி பாசிட்டிவாகவும், பயனாளிக்கு நெகட்டிவாகவும் இருக்கும்பட்சத்தில், பாதிக்கப்பட்டவருக்கும், பயனாளிக்கும் உடனடியாக ஹெபடைட்டிஸ் பி இமுனோகுளோபுலின் மற்றும் ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசியின் முதல் டோஸைப் போட வேண்டும்.

ஹெபடைட்டிஸ் சி தொற்றைத் தடுக்க...
ஹெபடைட்டிஸ் சி வைரஸ் ஒரு 'சைட்டோ பிளாஸ்மிக்' வைரஸ். இது, கல்லீரல் செல்லில் டிஎன்ஏவுடன் ஒருங்கிணையாது. ஆரம்பநிலையிலேயே கண்டறிந்துவிட்டால் உடனடியாக சிகிச்சையளிக்கலாம். சி வைரஸுக்குத் தடுப்பு மருந்தாக 'இன்டர்ஃபெரான்' ஊசி வாரந்தோறும் கொடுக்கப்பட்டு வந்தது. இதனால், பல பக்கவிளைவுகள் ஏற்பட்டன. அதன் பின்னர் புதிதாக வந்த ஆன்டிவைரஸ் மருந்துகள் ஹெபடைட்டிஸ் சி சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாகவும், குறைந்த விலையிலும் இருந்தன. மேலும், ஹெபடைட்டிஸ் சி-யை எளிதில் ஒழிக்க முடியும். இது குறித்த விழிப்புஉணர்வை அதிக அளவில் ஏற்படுத்த அரசு முன்வர வேண்டும். 

நலம் காக்கலாம்...
* சுத்தமான சூழலும், சுகாதாரமான உணவும், நீரும் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் இ வைரஸ் தொற்றைத் தடுக்கும். 
* வைரஸ் தாக்குதல் உள்ளவர்களுக்கு உரிய தடுப்பூசி கொடுப்பது, ஹெபடைட்டிஸ் பி வைரஸைத் தடுக்கும். மேலும், கல்லீரல் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிய உதவும். அதைக் குணப்படுத்தும் சிகிச்சைக்கும் வழிவகுக்கும்.
* நவீன மருந்துகள் மற்றும் தடுப்பூசியை வீட்டில் உள்ள அனைவரும் போட்டுக்கொள்ள வேண்டும். இதைக் குணப்படுத்த முடியும்.

கல்லீரல்

அறிகுறிகள்...
வயிற்றில் வலி எடுப்பது,
பசி எடுக்காமல் இருப்பது,
காய்ச்சல்,
வாந்தி,
மூட்டு மற்றும் தசைப் பகுதிகளில் வலி எடுப்பது,
உடல் எடை குறைதல்,
வயிற்றுப்போக்கு,
தலைச்சுற்றுதல்,
கண்கள் மற்றும் தோல் மஞ்சளாக மாறுவது,
உடல் சோர்வு முதலியவை இருக்கும்.

இந்த அறிகுறிகள் தவிர, மஞ்சள்காமாலை நோயால் ஏற்படும் அறிகுறிகள் யாவும், அனைத்து வகை ஹெபடைட்டிஸ் வைரஸ்களுக்கும் பொதுவானதே. கல்லீரலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைப் பொறுத்து, ஒருவருக்கு எந்த வகை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கண்டுபிடிக்க இயலும். அறிகுறிகள் எதுவும் ஏற்படுத்தாத வைரஸ் வகைகளும் உள்ளன. உதாரணமாக சி வகை வைரஸ், மிகவும் மெதுவாகவே தெரியவரும். சிலருக்கு ஆறு மாத காலங்களிலும் இன்னும் சிலருக்குப் பல வருடங்களுக்குப் பின்னரும்கூட தெரியவரும். இத்தகைய வைரஸ் கல்லீரல் செயலிழப்பை ஏற்படுத்தும். 

நலமாக வாழ ஹெபடைட்டிஸை ஒழிப்போம்... வாழ்வை இனிதாக்குவோம்.!

http://www.vikatan.com/news/health/97166-world-hepatitis-day-special-article.html

Link to comment
Share on other sites

முழங்கை மூட்டு வலியை குணப்படுத்தும் அல்ட்ரா சவுண்ட் தெரபி

எம்மில் பலரும் தினமும் 100 கிலோ மீற்றர் அளவிற்கு இரு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பழக்கத்தை உடையவர்களாக இருப்பார்கள். அத்துடன் அவர்கள் வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ சென்று தங்களின் மணிக்கட்டு பகுதி மற்றும் கைகளை அதிகமாக பயன்படுத்தும் பணியிலும் ஈடுபட்டிருப்பார்கள். இத்தகையவர்களுக்கு திடீரென்று முழங்கை பகுதிகளிலும், முழங்கை மூட்டு பகுதிகளிலும் தாங்க முடியாத வலி ஏற்படக்கூடும். இதற்கு உடனடியாக தற்காலிக வலிநிவாரணிகளைப் பயன்படுத்துவர்.

health.jpg

இதற்கு மருத்துவத்துறையில்கோல்ப்பர்ஸ் எல்போஎன்று குறிப்பிடுவார்கள். இதனை பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் மூலம் குணப்படுத்திட இயலும். இதன் போது நோயாளிக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் வலியின் தீவிரத்தைப் பொறுத்து பிஸியோதெரபி, அல்ட்ர் சவுண்ட் தெரபி, கிரையோதெரபி, உடற்பயிற்சி ஆகிய சிகிச்சைகளை அளிப்பார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்ட இடத்தில் உள்ள தசைகள் வலுவடையும். அதனைத் தொடர்ந்து வலி குறைந்துவிடும். பின்னர் மருத்துவர் பரிந்துரைக்கும் சத்தான உணவு முறையை கடைபிடித்தால் இதனை முழுமையாக குணப்படுத்திட இயலும். இவ்வகையினதான சிகிச்சையின் போது பூரண ஓய்வில் இருந்தால், விரைவில் குணமடையலாம்.

Dr. செந்தில்குமார்

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/22321

Link to comment
Share on other sites

Frozen Shoulder சிக்கலுக்கான தீர்வு

 

 

ஒரு சில பெண்கள் தலைகுளித்த பிறகு தங்களின் தலையை கோதிவிட்டுக் கொள்வர். இந்நிலையில் அவர்களுக்கு தோள் பட்டை வலி இருந்தால் தலையை கோதிக் கொள்வதில் கடும் சிரமமிருக்கும். தோள் பட்டை வலி அதகமாகிவிடும். இதனை மருத்துவர்கள் frozen shoulder என்று குறிப்பிடுகிறார்கள்.

health.jpg

இது குறித்து மருத்துவ ரீதியாக விளக்கவேண்டும் என்றால், தோள்பட்டையைச் சுற்றி உறை போன்ற ஒரு அமைப்பு இருக்கும். இந்த அமைப்பு பாதிக்கப்படும் போதோ அல்லது வீக்கம் உண்டாகி, இறுக்கம் ஏற்படும் நிலையே இதற்கு காரணம். இதனை மருந்து, மாத்திரை மற்றும் இயன்முறை மருத்துவ பயிற்சி மூலம் சீரமைக்க முடியும். ஒரு சிலருக்கு இதற்காக பிரத்யேக பட்டையை பயன்படுத்தியும் நிவாரணம் பெறலாம்.

சர்க்கரை நோயுள்ளவர்கள் மற்றும் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளாதவர்களில் 15 சதவீதத்தினர் இவ்வகையான தோள் பட்டை இறுக்கப் பாதிப்பிற்கு ஆளாகிறார்கள் என்கிறது ஆய்வு. அதனால் தோள்பட்டை இயக்கங்களை எப்போதும் சீராக வைத்துக் கொள்ளவேண்டும் அல்லது அதற்கான பயிற்சிகளை நாளாந்த மேற்கொள்ளவேண்டும்.

மருத்துவர் யுவராஜா

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/22549

Link to comment
Share on other sites

பெண்­களின் மெனோபோஸ் பரு­வத்தில் மாத­விடாய் ஏற்­ப­ட­லாமா?

 

 

பெண்­களின் மாத­விடாய் ஆனது நிரந்­த­ர­மாக நிற்கும் பருவம் மெனோபோஸ் என அழைக்­கப்­படும். இவ்­வா­றான மெனோபோஸ் பருவம் ஏற்­படும் வய­தா­னது 45 இலி­ருந்து 55 வய­து­வரை மாறு­படும். அதா­வது சிலரில் 45 வயதில் மாத­விடாய் நிரந்­த­ர­மாக நிற்கும். 

Image result for பெண்­களின் மெனோபோஸ் virakesari

சிலரின் 50 வயதில் நிற்கும். சிலரில் 55 வயதில் நிற்கும். இவ்­வாறு பாரிய வேறு­பா­டுகள் உள்­ளன. எந்த வய­தா­னாலும் மெனோபோஸ் பருவம் அடைந்து மாத­விடாய் நிரந்­த­ர­மாக நின்­று­போன பெண்­களில் பல மாதங்­களின் பின்னர் சரி அல்­லது பல வரு­டங்­களின் பின்னர் சரி மீண்டும் மாத­விடாய் போன்ற இரத்­தப்­போக்கு ஏற்­பட்டால் அதன் அர்த்தம் என்ன? இது ஒரு பயப்­ப­டக்­கூ­டிய அல்­லது அச்­சப்­ப­டக்­கூ­டிய ஒரு விட­யமா? இவற்­றுக்கும் புற்­று­நோய்­க­ளுக்கும் தொடர்பு உள்­ளதா? என பெண்கள் மத்­தியில் பல சந்­தே­கங்கள் ஆரம்­பிக்கும். இவற்­றுக்கு இன்று விடை காண வேண்டும்.

மெனோபோஸ் பரு­வத்தின் பின்னர் பல வரு­டங்கள்­கழித்து மாத­விடாய் போன்ற இரத்தப் போக்கை கண்டு பல பெண்கள் அச்­சத்­துடன் வைத்­திய ஆலோ­சனை நாடி வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு இந்­நி­லைமை ஏற்­பட என்ன காரணம் எனப் பார்க்க நாம் பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­வது வழக்கம். இதில் முக்­கி­ய­மாக செய்­யப்­படும் பரி­சோ­தனை ஸ்கேன் (U.S. Scan) பரி­சோ­தனை ஆகும். இந்த ஸ்கேன் பரி­சோ­தனை முதலில் செய்யும் போது தாம் முக்­கி­ய­மாக கர்ப்­பப்­பையில் உட்­சுவர் தடிப்­பைத்தான் கணிப்போம். 

இதில் கூடு­த­லா­ன­வர்­களில் தடிப்­பா­னது 5mm (ஐந்து மில்லி மீற்றர்) க்கும் குறை­வா­கத்தான் இருக்கும். இப்­படி 5mm க்கும் குறை­வாக இருக்­கும்­போது கர்ப்­பப்­பையில் ஆபத்­தான நோய்­க­ளுக்கோ அல்­லது புற்­று­நோய்­க­ளுக்கோ வாய்ப்­பில்லை என உறு­தி­யாகக் கூறி மேற்­கொண்டு எவ்­வித மேல­திக சிகிச்­சையும் தேவைப்­ப­டு­வ­தில்லை. மெனோபோஸ் பரு­வத்தின் பின்னர் இரத்­தப்­போக்கு கண்டு அச்­சத்தில் வந்த பல பெண்கள் இந்த செய்­தி­கேட்டு மன நிம்­ம­தி­யுடன் வீடு திரும்­பு­கின்­றனர். எனவே மருத்­துவ பரி­சோ­த­னை­யிலும் சரி மருத்­துவ ஆலோ­ச­னை­யிலும் சரி விடை­கா­ணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

ஆனால் ஒரு­சில பெண்­களில் இந்த விடயம் குறித்து ஸ்கேன் செய்­யும்­போது கர்ப்­பப்­பையின் உட்­சுவர் தடிப்­பா­னது 5mm க்கும் (ஐந்து மில்­லி­மீற்­ற­ருக்கும்) கூடு­த­லாக தடிப்­ப­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இவற்றை நாம் மேற்­கொண்டு பரி­சோ­தித்து இவ்­வா­றான தடிப்­புக்­கான நோய்க் கார­ணியை கண்­ட­றிய வேண்டும். அதா­வது இவர்­களை நாம் சத்­தி­ர­சி­கிச்சை கூடத்திற்கு (Operation Theatre) எடுத்து ஒரு சிறிய மயக்­கத்தை கொடுத்து கர்ப்­பப்­பையின் உட்­சுவர் பகு­தியில் ஒரு பகு­தியை எடுத்து (Biopsy) பரி­சோ­த­னைக்கு அனுப்ப வேண்டும். இதனை D and C என்றோ வயிறு கழு­வுதல் என்றோ கிஸ்ரஸ் கோப்பி (Hysteroscopy) என்றோ அழைக்­கலாம். 

இதன் நோக்கம் உட்­சுவர் தடிப்­பா­னது சில சமயம் புற்­று­நோ­யாகக் கூட இருக்க முடி­யுமா எனப் பார்ப்­ப­தே­யாகும். அவ்­வாறு பரி­சோ­திக்கும் போது சிலரில் பெறு­பே­றுகள் புற்­றுநோய் எனக்­கண்­ட­றி­யப்­படும். மற்­றை­ய­வர்­களில் இவை எவ்­வித நோயும் இல்லை. சாதா­ரண இழை­யங்கள் என்ற பெறு­பே­று­களே வரு­கின்­றன. எனவே இவ்­வாறு இவ்­வி­ட­யத்தை ஸ்கேன் செய்து அதில் சந்­தே­கிப்­ப­வர்­களை வயிறு கழு­வுதல் மூலம் (Biopsy) பரி­சோ­தித்து அறிந்தால் சரி­யான சிகிச்சை வழங்க முடியும். 

கர்ப்­பப்பை புற்­றுநோய் என பெறு­பே­று­களில் கண்­ட­றிந்தால் அடுத்து செய்­ய­வேண்­டி­யது. கால தாமதம் இல்­லாமல் அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்­பப்பை அகற்­று­வ­தே­யாகும். கர்ப்­பப்பை மற்றும் சூல­கங்களை அகற்­று­வதன் மூலம் இவ்­வாறு கண்­ட­றி­யப்­படும் கர்ப்­பப்பை புற்­றுநோய் வெற்­றி­க­ர­மாக சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கின்­றது. இத­னை­ய­டுத்து பெரும்­பா­லா­ன­வர்­களில் மேற்­கொண்டு புற்­று­நோய்க்­கான மேல­திக சிகிச்சை எதுவும் தேவைப்­ப­டு­வ­தில்லை.

இந்த விட­யத்தில் எனது கடந்த பல வருட அனு­ப­வங்­களை பார்த்தால் மெனோபோஸ் பரு­வத்­திற்கு பின்னர் இரத்­தப்­போக்கு உள்ள போது பாதிக்­கப்­பட்ட பெண்கள் மருத்­துவ ஆலோ­ச­னைக்கு வரு­வது தாமதம் இல்­லாமல் நடக்­கின்­றது. நாமும் காலத்தை வீண­டிக்­காது ஸ்கேன் பரி­சோ­த­னை­மூலம் கர்ப்­பப்பை தடிப்பை அளந்து அதற்­கேற்ப அடுத்த கட்ட பரி­சோ­த­னையோ கர்ப்­பப்பை அகற்­றலோ செய்து இதற்கு முடிவு காண்­கின்றோம். சிகிச்­சை­க­ளிலும் சரி புற்­று­நோயை குணப்­ப­டுத்­து­வ­திலும் சரி வெற்றி கண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆறுதல் கூறி­னாலும் சுற்­றத்­தாரும் சூழ­வுள்­ளோரும் பல பல அபிப்­பி­ரா­யங்­களை பல­வந்­த­மாக திணித்து மன­ரீ­தியில் சோர்­வ­டையச் செய்­கின்­றனர். 

அதா­வது மருத்­துவ ரீதியில் செய்ய வேண்­டி­ய­வற்றை செய்து பாதிக்­கப்­பட்ட பெண்­களை திடப்­ப­டுத்­தி­னாலும் சில­ரது அபிப்­பி­ரா­யங்கள் கேட்டு மனச்­சோர்வும் நிம்­ம­தி­யற்றத் தன்­மையும் ஏற்­ப­டத்தான் செய்­கின்­றது. எனவே சுற்­றத்­தா­ரையும் சூழ­வுள்ளோ­ரையும் கேட்­டுக்­கொள்­வது நோயில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும் சிகிச்சைகளில் உள்­ள­வர்­க­ளையும் மனம் புண்­ப­டா­த­வாறு அள­வோடு பேசி அவர்­களை உற்­சாகப் படுத்தி நம்­பிக்­கை­யூட்ட வேண்டும். மருத்­துவ ஆலோ­சனைப்படி கேட்­பதா அல்­லது உங்­க­ளது அபிப்­பி­ரா­யங்­களின் படி நடப்பதா என்ற ஒரு தர்மசங்கட நிலைமையை ஏற்படுத்தாதவாறு நடக்க வேண்டிய பொறுப்பு மனிதர்களாகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. 

எனவே மெனோபோஸ் பருவத்தில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்க வேண்டும். இவ்வாறு நின்று மீண்டும் ஆரம்பித்தால் இதனை அலட்சியப்படுத்தாது. வைத்திய ஆலோசனை பெறவேண்டும். நோய் என்று கண்டறிந்தாலும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் வெற்றிகரமான சிகிச்சையில் புற்றுநோயாகக் கூட இருந்தாலும் வெற்றிகண்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

http://www.virakesari.lk/article/22593

Link to comment
Share on other sites

காய்ச்சிய குடிநீரின் ஆயுள் எவ்வளவு என்று தெரியுமா.?

 

 

இன்றைய திகதியில் எம்மவர்கள் எதற்காக செலவழிக்கிறார்களோ இல்லையோ சுத்தமான குடிநீருக்காக செலவழிக்கிறார்கள். செலவழிக்கவும் தயாராகயிருக்கிறார்கள். ஆனால் பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்டு விற்பனையாகும் குடிநீர் எம்முடைய ஆரோக்கியத்தை பாதுகாக்கிறதா? சாதாரணமாக இயற்கையாக கிடைக்கும் நீரில் உள்ள தாது சத்துக்களான மெக்னீசியம், கால்சியம், கார்பனேட், தாமிரம் போன்றவை இவற்றிலும் இருக்கிறதா? என்பதை பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.

health.jpg

இவர்கள் தண்ணீரை சுத்திகரிப்பு செய்கிறார்களேத் தவிர மேற்கண்ட தாதுச்சத்துகளை சேர்க்கிறார்களா என்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. அத்துடன் இத்தகைய தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரத்தில் தண்ணீரை சுத்திகரிக்கவேண்டும் என்றால் மும்மடங்கு தண்ணீர் செலவாகுவதாகவும் தெரிய வருகிறது.

அதனால் பாதுகாப்பான தண்ணீரை அருந்துவதற்கு நாம் சில எளிய வழிகளை வீட்டிலேயே மேற்கொள்ளலாம். இயற்கையாக கிடைக்கும் மிக சிறந்த சுத்திகரிப்பான் செம்பு. செம்பு பாத்திரத்தில் ஒரு நாள் முழுவதும் தண்ணீரை விட்டு மறுநாள் அருந்தினால் அந்த தண்ணீர் பாதுகாப்பானதாக இருக்கும் என்கிறார்கள்.

அதே போல் எந்த தண்ணீராக இருந்தாலும் அதனை காய்ச்சி குடிக்கவேண்டியதில்லை. நோய் பரவும் பருவ காலமான மழைக்காலம் மற்றும் ஆடி மாதத்தில் மட்டும் தண்ணீரை காய்ச்சி குடிக்கலாம். அதுவும் இன்று காய்ச்சிய தண்ணீரை இன்றே குடித்துவிடவேண்டும். மறுநாள் குடிப்பதால் எந்த பலனும் இல்லை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அதே போல் நீரை கொதிக்கவைக்கும் முன் அதில் சிறிதளவு வறுத்த சீரகத்தைப்போட்டுவிட்டு கொதி வந்தவுடன் இறக்கி வைத்து, சற்று வெதவெதுப்பான இளஞ்சூட்டுடன் தண்ணீரை அருந்தினால் அஜீரண கோளாறு முற்றாக நீங்கும்.

நோயெதிர்ப்பு சக்தியும் அதிகமாகும்.

Dr. சிவராமன்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/22678

Link to comment
Share on other sites

ஆண்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய பெண்களின் மாதாந்திர அவஸ்தை!

து பெண்கள் பற்றியது, ஆனால் பிரத்தியேகமாக ஆண்களுக்காக! ஆண்கள் கவனிக்கவும்..! உங்கள் காலில் ஒரு காயம். அதிலிருந்து ரத்தம் வழிந்துகொண்டே இருக்கிறது. காயத்தில் ஏற்பட்ட வலி வேறுபாடாகப்படுத்துகிறது. இந்த நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்? நிச்சயம் உங்களால் ஒரு வேலையையும் செய்ய முடியாது. அதற்கான மனநிலையும் இருக்காது. இந்த வலி ஒருபுறம் என்றால், அந்த வேதனைக் காலத்தில் உங்களை எல்லோரும் தீண்டத்தகாத ஒருவராகப் பார்க்கிறார்கள். வீட்டில் ஓர் ஓரமாக ஒதுக்கிவைக்கப்படுகிறீர்கள். அந்த நேரத்தில் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் நீங்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்படுவீர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா? இந்த ரத்தம், வலி உங்கள் வாழ்க்கையின் சரிபாதி காலத்துக்கு, அதுவும் மாதத்துக்கு மூன்று அல்லது நான்கு நாள்கள் நிகழ்ந்தால் வாழ்க்கை நரகம்தானே?! அந்த நரகத்தை மாதா மாதம் தாங்கிக்கொண்டேதான் நம் சகோதரியும், மனைவியும், அம்மாவும், உலகில் உள்ள எல்லாப் பெண்களும் எல்லா வேலைகளையும் செய்கிறார்கள்...  `மாதவிடாய் நாள்கள்’ என்கிற பெயரில்.

மாதவிடாய் 

 

அந்த வேதனை தரும் நாள்களில், வலியைத் தாங்கிக்கொண்டு, தங்கள் வேலையையும் மற்றவர்கள் வேலையையும் செய்து கொடுப்பது பெண்கள் நிகழ்த்தும் சாதனை. எல்லாப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்வதாலேயே நம் கண்களுக்கு இது, சாதனையாகத் தெரிவதில்லை. நம் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்கும் அத்தனைப் பெண்களும் இந்தச் சாதனையைச் செய்கிறார்கள். 
எப்போதும் மாதவிடாய் பற்றிச் சொல்லும்போது `இது பெண்களின் சமாசாரம்’ என்று மட்டும்தானே சொல்வார்கள். அதைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டாமா? நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும். இங்கே மாதவிடாய் சுழற்சி பற்றி அறிவியல் சொல்வதைத்தான் பார்க்கப் போகிறோம். இது அறிவியல் பாடத்தில் ஏற்கெனவே படித்தவர்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடும், ஆனால், ஒவ்வோர் ஆணும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சங்கதி.மாதவிடாய் வயிற்று வலி

மாதவிடாய் சுழற்சி 
மாதவிடாய் சுழற்சி என்பது பெண்ணின் இனப்பெருக்க உறுப்பில், சுழற்சி முறையில் சீரான இடைவெளியில் நடைபெறும் மாற்றங்களைக் குறிக்கும். மாதவிடாய் சுழற்சி பொதுவாக 28 நாள்களுக்கு நடைபெறும். ஆனால், அது இயல்பாகவே பல்வேறு காரணங்களால் 20 முதல் 40 நாள்களுக்குள் நடைபெறும்.

கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள்...
மாதவிடாய் சுழற்சியில் கர்ப்பப்பையில் ஏற்படும் மாற்றங்கள் அதிகம். அவை மூன்று கட்டடங்களாக நடைபெறும்.

வளரும் நிலை 
இது மாதவிடாய் ரத்தப்போக்கு நின்ற நாள்முதல், சினைமுட்டை வெளிப்படுதல் (Ovulation) நடைபெறும் நாள் வரை நீடிக்கும் (பொதுவாக 4-ம் நாள் முதல் 14-ம் நாள் வரை). அண்டகத்தில் இருந்து (Ovary) வெளிப்படும் ஈஸ்ட்ரோஜென் எனும் ஹார்மோன், கர்ப்பப்பையின் சுவரை வளர்ச்சியடையச் செய்யும். இந்த ஹார்மோன் கர்ப்பப்பையின் சுவருக்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி, 1 மி.மீ ஆக இருந்த சுவரை 4 மி.மீ அளவுக்குத் தடிமனாக்கும்.

சுரக்கும் நிலை 
இது மாதவிடாய் சுழற்சியின் இறுதி 14 நாள்களுக்கு நீடிக்கும். சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர், கார்பஸ் லூட்டியம் (Corpus luteum) அண்டகத்தில் உருவாகி, புரோஜெஸ்ட்ரான் என்னும் ஹார்மோனைச் சுரக்கும். இதுவும், சிறிய அளவில் வெளிப்படும் ஈஸ்ட்ரோஜெனும் சேர்ந்து கர்ப்பப்பை சுவரை மேலும் தடிமனாக மாற்றும். இறுதியாக கர்ப்பப்பை சுவரின் மொத்த அளவு 6 மி.மீ. என்ற அளவுக்கு இருக்கும்.

மாதவிடாய் நிலை 
கருவுறுதல் நடக்காதபோது அண்டகம் (ovary) ஹார்மோன்கள் சுரப்பதை நிறுத்திவிடும். ஹார்மோன்கள் இல்லாததால் கர்ப்பப்பை சுவருக்குச் செல்லும் ரத்த ஓட்டம் நிறுத்தப்படும், இதனால் கர்ப்பப்பையின் சுவர் செல்கள் இறந்து அழிவுக்கு உட்படுத்தப்படும். இறந்த கர்ப்பப்பை சுவர் செல்கள், ரத்தம் மற்றும் திசு திரவம் இணைந்து வெளியேறும். இப்படி வெளியேறும் திரவம்தான் `மாதவிடாய்’ எனப்படும்.

இந்த நிலை மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு நடைபெறும்.

இந்தச் சுழற்சி மீண்டும் முதலிலிருந்து தொடங்கும். 

நாப்கின்

இந்த நிகழ்வுகள் அனைத்தும் அறிவியலில் படித்ததுதான் என்றாலும், நமக்கு இன்னும் மாதவிடாயைப் பற்றித் தெரியாது. ஏன் தெரியாது என்று கேட்கும் ஆண்களுக்காக இந்தக் கேள்விகள்...

1.   சானிட்டரி நாப்கின் ஒன்றின் விலை எவ்வளவு தெரியுமா?
2.   கடைசியாக எப்போது சானிட்டரி நாப்கின் வாங்க கடைக்குச் சென்றீர்கள்?
3.   உங்கள் வீட்டில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் இன்று எத்தனையாவது நாள்?
4.  உங்கள் மனைவியைத் தவிர வேறு பெண்கள் யாரிடமாவது, மாதவிடாயைப் பற்றி பேசியிருக்கிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்குப் பெரும்பாலான ஆண்களிடம் “இல்லை”, “தெரியாது” என்ற பதில்களே உள்ளன. அப்படியானால், மாதவிடாயைப் பற்றி ஆண்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்தானே?

http://www.vikatan.com/news/health/97583-understand-the-female-menstrual-cycle-ovulation-and-periods.html

Link to comment
Share on other sites

வளையணும், நெளியணும், குனியணும்... இடுப்புக்கும் கொஞ்சம் வேலை கொடுங்க பாஸ்!

 

’ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்பது பழமொழி. ஆனால் ’ஐந்தில் வளைந்தாலும், பதினைந்துக்கு மேல் வளையாமல் போய்விடுகிறது’ என்பதே சமீபத்திய மொழி. இதை, இளம் வயதில் சொல் பேச்சுக் கேட்காத பிள்ளை, வளர்ந்த பிறகு தறுதலையாவான் என்று எடுத்துக்கொள்ளலாம். உடல்ரீதியாக இன்னோர் அர்த்தமும் கொள்ளலாம். இளம் வயதிலேயே துடிப்புடன் இருக்கவேண்டியதும், உடலை வளைத்து, நெளித்து அதற்குப் பயிற்சி கொடுக்கவேண்டியதும் அவசியம் என்பதையும் இந்தப் பழமொழி வலியுறுத்துகிறது. அப்படி நம் உடலில் அக்கறைகொள்ளவேண்டிய முக்கியமான பகுதி, இடுப்பு. துடிப்பான சிறுவயதில் அசைவுக்கு உள்ளாகும் இடுப்பு, மாணவப் பருவத்துக்குப் பிறகு ஏனோ அசையாமல் அப்படியே நிலைத்துவிடுகிறது. யோசித்துப் பார்த்தால், இன்றைய அதிவேக உலகில் நாம் இடுப்புப் பகுதிக்கு அவ்வளவாக அசைவு கொடுப்பதில்லை என்பது புரியும். தினமும் நம் செயல்பாடுகளில் இடுப்புப் பகுதியை நாம் எவ்வளவு அசைக்கிறோம் என்று ஆராய்வோமா?!

உடற்பயிற்சி அவசியம்


இறுகும் இடுப்பு

மலம் கழிக்க இந்திய பாணியில் அமைந்த கழிப்பறையே சிறந்தது. ஆனால், பெருநகரங்களில் கட்டப்படும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் நவீனம் என்ற பெயரில் இடம்பிடித்திருப்பதோ மேற்கத்திய பாணி கழிப்பறைகள் மட்டுமே. வயதானவர்கள், மூட்டுவலித் தொந்தரவால் அவதிப்படுபவர்களுக்கு மேற்கத்திய பாணிக் கழிப்பறைகள் வரப்பிரசாதம்தான். ஆனால், சிறு வயது முதலே மேற்கத்திய பாணிக் கழிப்பறைகளைப் பயன்படுத்தத்தான் பெற்றோர்களால் நகரத்துச் சிறுவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. மலத்தை முழுமையாக வெளியேற்றி, இடுப்புப் பகுதிக்கு வேலையும் கொடுக்கும் இந்திய பாணி கழிப்பறையின் பயன்பாடு குறைந்ததால், காலைப் பொழுதின் தொடகத்திலேயே இடுப்புப் பகுதி இறுகிவிடுகிறது. 

அசைவில்லாத குளியல்

அசைவில்லாத குளியல்

சரி... குளிக்கும்போதாவது இடுப்பை வளைத்து, குனிந்து, வாளியில் உள்ள நீரை மேலே ஊற்றிக் குளிக்கலாம் என்றால் அதற்கும் வழியில்லை. அலுங்காமல், குலுங்காமல் குளிக்கத்தான் ஷவர் (Shower) பயன்படுத்துகிறோமே. படுத்துக்கொண்டே நீச்சல் அடித்து, உடற்பயிற்சியோடு உடல் தூய்மையையும் செய்து வந்தது சென்ற தலைமுறையில்... பெரிய ’பாத் டப்களில்’ நீரை நிரப்பி, படுத்துக்கொண்டே அசையாமல் உடற்பயிற்சியில்லாமல் உடலைத் தூய்மை செய்துகொள்வது இன்றைய தலைமுறையில்! குளிக்கும்போதுகூட, இடுப்புக்கோ, அதன் எலும்புப் பகுதிகளுக்கோ நாம்வேலை கொடுப்பதில்லை என்பது தெளிவு.

உடற்பயிற்சியை மறந்த பள்ளிகள்

உடற்பயிற்சியை ஊக்குவிக்கும்விதமாக, பள்ளிகளில் வாரம்தோறும் நடந்த ’மாஸ் டிரில்களின்’ எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றன. தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் படிப்பை மட்டுமே வலியுறுத்தி, வாழ்க்கையைச் சீரழிக்கும் பள்ளிகளில் உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வாய்ப்பில்லை. பத்தாம் வகுப்பில் குறிப்பிட்ட பள்ளியில் இடம் கிடைக்க, ’கிண்டர்கார்டனிலேயே லட்சக்கணக்கில் ரூபாய்களைக் கொட்டி பிஞ்சுக் குழந்தைகளை அவதிக்குள்ளாக்கும் பெற்றோர்களுக்கு, கல்வியைத் தாண்டி பெரிய உலகம் இருப்பது தெரிவதில்லை. இளவயதில் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்கும் இடுப்புப் பொருத்துகளை (Joints) வளைக்க, மாணவர்களுக்கு வாய்ப்பும் அவகாசமும் வழங்காமல் போனால், பொருத்துகள் இளமையிலேயே ஸ்திரத் தன்மை அடைந்து மிகப்பெரிய பாதிப்புகளை உண்டாக்கும். நல்ல கல்வி மட்டுமே வாழ்க்கை அல்ல... தேவையான கல்வியோடு, நல்ல ஆரோக்கியமும் சேர்ந்ததுதான் வாழ்க்கை.

வளைவதைத் தடுக்கும் நாற்காலி!

இடுப்புப் பகுதியை வளைத்து, சப்பணமிட்டு உணவருந்தாமல், நாற்காலியில் கம்பீரமாக அமர்ந்து உணவருந்துகிறோம். கம்பீரத்தை வெளிப்படுத்த அது தகுந்த நேரமல்ல. நாற்காலியில் அமர்ந்து உணவருந்தும்போது, நாற்காலியின் இடுப்புப் பகுதி நன்றாக வளைந்திருக்கிறதே தவிர, மனிதனின் இடுப்புப் பகுதி கடப்பாறையைப்போல நேராக நிற்கிறது. வயிற்றில் தொப்பைவிழுவதை கிண்டல் செய்ய, ‘வயித்தைச் சுத்தி ’டயர்’ விழுந்திருச்சிப் பாரு...’ என்று கூறுவது வழக்கம். இடுப்புக்கு வேலை கொடுக்காமல், அதீத சுகபோகியாக வாழ்ந்தால், வயிற்றைச் சுற்றி லாரி டயர் அளவுக்கு தொப்பை விழுந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

சம்மணமிட்டு சாப்பிடலாம்.

பூஜ்ஜியத்தைத் தாண்டாத ’ஆப்’

எவ்வளவு தூரம் நடந்தோம் என்பதைக் கணக்கிட ‘ஆப்’ (App)... எவ்வளவு கலோரிகள் செலவிட்டோம் என்பதை உறுதிப்படுத்த ‘ஆப்’... ரத்த அழுத்தத்தை அளவிடவும் ’ஆப்’... இந்த வரிசையில் ஒருநாளைக்கு எத்தனை முறை இடுப்புப் பகுதியை அசைத்தோம் என்பதை கணக்கிட ’ஆப்’ பயன்படுத்தினால், ‘பூஜ்ஜியத்தை’விட்டு நகராது கணக்கு. 

பெருஞ்சதையைச் சுமக்கிறோம்!

போலீஸ்காரர்களைக் கிண்டல் செய்வதற்காகக் கூறப்பட்ட தொப்பை, இன்று அவ்வளவாக அவர்களுக்கு இல்லை. நமக்குத்தான் விதவிதமான சைஸ்களில் இருக்கிறது. அந்த வகையில் நாமும் போலீஸ்காரர்களே! கீழே விழும் பேனாவை குனிந்து எடுக்க முடியாமல், கால் விரல்களின் துணையைத் தேடுகிறது மனது. நமது இடுப்புப் பகுதிக்கு வேலை கொடுக்காமல் இருப்பது மிகப்பெரிய பாதகம். குழந்தை பாரத்தைச் சுமக்கும் கர்ப்பிணிகளுக்கே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தால்தான் சுகப்பிரசவம் நடக்கும். ஆனால், சுகமாக வாழும் நாம், குனியவும் முடியாமல் நிமிரவும் முடியாமல் இருப்பதால், கருவின்றியே வயிற்றைச் சுற்றி பெருஞ்சதையை சுமக்கவேண்டியிருக்கிறது.
உடல் உழைப்பின்றி, உணவுக்கட்டுப்பாடு மூலம் மட்டுமே ’ஜீரோ சைஸ்’ இடுப்பையும், உடல் அசைவின்றி மருந்துகளின் மூலம் மட்டுமே ’ஒல்லியான பெல்லி’யையும் விரும்புவது சாத்தியப்படலாம். ஆனால், குறுக்குவழியால் கிடைத்த பலனுக்கு விரைவில் பக்கவிளைவுகளும் சாத்தியப்படும் என்பதே நிதர்சனம். உடல் உழைப்போடு இருந்தால் மருந்துகளின்றி, பக்கவிளைவுகளின்றி வயிற்றுத் தசைகளை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

இடுப்பு

துருப்பிடிக்கவிடக் கூடாது!

`உரலைப் பயன்படுத்த வாய்ப்பில்லை... வழக்கொழிந்து போய்விட்டது. கிணற்றில் நீர் இரைக்க முடியாது... மழையில்லை. சரி, குனிந்து, நிமிர்ந்து நமது அலுவல்களையாவது செய்யலாமே... முடியாது, வலி பாடாகப்படுத்துகிறது. இப்படியே சொல்லிக்கொண்டு போனால், பயன்படுத்தாமல் துருப்பிடித்த பகுதியாக இடுப்புப் பகுதி மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை. 

 

என்ன செய்யலாம்? சிறுசிறு வேலைகளை நாமே செய்வது, எளிய உடற்பயிற்சிகள், சில யோகப் பயிற்சிகள் (வில்லாசனம் (தனுராசனம்), பவனமுக்தாசனம், கலப்பையாசனம், பாதஹஸ்தாசனம்) போன்றவை நிச்சயமாக இடுப்புப் பகுதிக்கு வேலையைக் கொடுக்கும். ஆனால், இவற்றையெல்லாம் தவிர்த்துவிட்டு, ஒரே இடத்தில் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதுதான் பிரச்னையின் தொடக்கமே! இப்போதிருந்தே இடுப்புப் பகுதியை வளைத்து, அசைத்து இடுப்பைப் பற்றியுள்ள தசைகளுக்கு பயிற்சி கொடுப்போம்!

http://www.vikatan.com/news/health/97735-young-hip-fit---diet-exercise-and-beauty-advice.html

Link to comment
Share on other sites

நீங்கள் தினமும் எவ்வளவு புரதச் சத்தைச் சாப்பிடலாம்..?

தெற்காசிய உணவு முறையில் புரதச் சத்தின் அளவு வளர்ச்சி மாற்றத்திற்கு தேவையான அளவை விட குறைவாகவே இருப்பதாக ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. 

health.jpg

சைவ உணவு வகையை விரும்பி சாப்பிடுபவர்கள்,  அசைவ உணவு வகையை சாப்பிடுபவர்களைக் காட்டிலும் 20 சதவீத அளவிற்கு குறைவாகவே புரதத்தை எடுத்துக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புரதச் சத்தானது எம்முடைய திசுகளின் வளர்ச்சிக்கும், திசுக்களை புதுப்பிப்பதற்கும் தேவைப்படும் இன்றியமையாத ஊட்டச்சத்தாகும். ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் ஒரு கிராம் அளவிலான புரதச் சத்தினை தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு 59 கிலோ உடல் எடை கொண்டவராக இருந்தால் அவர் தினமும் 59 கிராம் அளவிற்கு புரதச் சத்தினை எடுத்துக் கொள்ளவேண்டும். இந்த புரதச் சத்து அதிகமுள்ள உணவை அவர் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். நீங்கள் சாப்பிடும் உணவுப் பொருளிலிருந்து தான் அமினோ அமிலங்கள் உருவாகி உடலின் வளர்ச்சிக்கு அடிப்படையாகிறது. அதிலும் கர்ப்பம் தரித்திருக்கும் பெண்கள் அவர்களின் வயிற்றில் வளரும் சிசுவிற்கு தேவையான அமினோ அமிலங்களை அதிகப்படியான புரதச் சத்துள்ள உணவை சாப்பிடுவதன் மூலமே பெற இயலும்.

ஒரு கோப்பை பாலாடை கட்டியில் 25 கிராம் அளவிற்கும், அரை கோப்பை பூசணிக்காய் விதைகளில் 14 கிராம் அளவிற்கும், ஒரு கோப்பை சொக்லேட் பாலில் 14 கிராம் அளவிற்கும், வேகவைத்த ஒரு முட்டையில் 6 கிராம் அளவிற்கும், 25 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பில் 7 கிராம் அளவிற்கான புரதச்சத்துக்கள் உள்ளன.

புரதச்சத்துகள் அதிகமுள்ள இவற்றை தங்களின் உணவுகளில் சேர்த்துக் கொண்டு ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Dr. அகர்வால்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/22822

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வுக் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கட்சிக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன். ஓம்.  பிஜேபி இப்போ தன் தலைமையில் கூட்டணி வைக்கிறது. அடுத்தடுத்த தேர்தல்களில் வாக்கை பிரிக்கும் வேலை முடிந்ததும், பி டீம், ஏ டீமுடன் இணையும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.