Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

சிறுநீர் கழிப்பதில் அலட்சியம் காட்ட வேண்டாம்!

 
 

இதயத்தைப்போலவே ஓயாமல் இயங்கிக்கொண்டிருக்கும் உறுப்பு, சிறுநீரகம். இது இயங்குவதை நிறுத்திவிட்டால் அவ்வளவுதான். உடலில் உள்ள கெட்ட நீரை மட்டுமல்ல, தேவைக்கு அதிகமான உப்பு, பல்வேறு நச்சுக்கள், அவசியமற்ற மருந்துக்கூறுகள் போன்றவற்றை வெளியேற்றுவதும் சிறுநீரகங்கள்தான். சிறுநீரகத்தை அதிகம் தாக்கும் பிரச்னைகளில் முக்கியமானது, சிறுநீரை அவசியமானபோதும் வெளியேற்றாமல் இருப்பதுதான். வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க வசதியில்லாமல் இருப்பது அல்லது கூச்சப்பட்டுக்கொண்டு போகாமல் இருப்பது ஆபத்தானது. சிறுநீர்ப்பை நிரம்பியிருக்கும்போது, கட்டாயமாக சிறுநீரை வெளியேற்றிவிட வேண்டும். வெகுநேரமாக சிறுநீர் போகாமல் அடக்கி வைத்திருந்தால், அடிவயிற்றில்  கடுமையான வலி உண்டாகும். இது அடிக்கடி தொடர்ந்தால், சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்றுகள் உண்டாகி, சிறுநீரகத்தையே செயலிழக்கவைத்துவிடும். 

சிறுநீர்

 

அதுமட்டுமின்றி சிறுநீரை அடக்கி வைத்திருப்பதால், மன ரீதியான சிக்கல்களும் உருவாகின்றன. அதாவது, சிறுநீரை வெளியேறும்வரை வேறு எந்த வேலையிலும் ஈடுபடாமல் கவனச்சிதறல் உண்டாகிறது. சிறுநீரை அடக்கிவைத்திருக்கும் நபர்களுக்கு, மனநோய்கள் அதிகம் உண்டாவதாக ஆய்வுகள் கூறுகின்றன. எனவே, மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிப்புகள் உண்டாகாமல் இருக்க, இயற்கை உபாதைகளைக் குறைப்போம். இதில் வெட்கப்பட எதுவுமே இல்லை. அப்படி வெளி இடங்களில் கழிப்பிட வசதி இல்லை எனும் பட்சத்தில், நீர் அல்லது நீர்ம ஆகாரங்களை எடுத்துக்கொள்வதை குறைத்துக்கொள்ளலாம். 

https://www.vikatan.com/news/health/119729-difficulty-passing-urine-can-be-triggered-by-different-problems-in-men-and-women.html

இடுப்பு, பின்முதுகு, கால்களுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகள்

 

 
 

உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
இடுப்பு, பின்முதுகு, கால்களுக்கு வலிமை தரும் உடற்பயிற்சிகள்
 
உடற்பயிற்சிகளையும் கால மாற்றத்துக்கேற்ப புதிய முறைகளில் மாற்றி நவீனமாக வடிவமைத்து வருகிறார்கள் நிபுணர்கள். ஸ்குவாட்ஸ், புஷ்-அப்ஸ் போன்ற வீட்டிலேயே செய்யும் பயிற்சிகளுக்கு மாற்றாக விலங்குகளின் அசைவுகளை மையமாக வைத்து வேடிக்கையாக செய்யும் Animal Workout என்ற பயிற்சி தற்போது பிரபலமாகி வருகிறது. Animal workout-ன் வகைகளையும் அதன் பலன்களையும் இங்கே பார்க்கலாம்.

Crow push up

இரண்டு கால்கள் மற்றும் கைகளை தரையில் ஊன்றி, மேலெழும்பிய நிலையில் இருக்க வேண்டும். மெதுவாக வலது முழங்காலை மடக்கியவாறு மேலே தூக்கி வலது கை முட்டிக்கு நேராக கொண்டு வரவும். இப்போது மீண்டும் வலதுகாலை பின்பக்கமாக நீட்டி பழைய நிலைக்கு கொண்டு வரவும். இதேபோல மறுபக்கம் இடது காலை மடக்கி செய்ய வேண்டும். முன்னோக்கி நகர்ந்து கொண்டே செய்ய வேண்டும். வழக்கமாக செய்யும்
புஷ் அப் பயிற்சியினை காகத்தைப் போல செய்யும் முறை இது.

பலன்கள்

அடிவயிறு, வயிறின் பக்கவாட்டு தசைகள், மார்பு மற்றும் முன்தொடை தசைகள் விரிவடைவதால் நல்ல வலிமை கிடைக்கிறது. மணிக்கட்டு எலும்புகள், இடுப்பின் மேல்பகுதி எலும்புகள் மற்றும் கால் எலும்புகள் வலுவடைகின்றன. செரிமான மண்டல உறுப்புகளின் இயக்கம் தூண்டப்படுவதால் நெஞ்செரிச்சல், அல்சர் நோய்கள் நீங்குகின்றன. மேலும் முதுகுத்தண்டுவடத்திற்கு நெகிழ்வு கிடைக்கிறது.

201803170922391717_1_CraneExcercise._L_styvpf.jpg

Crane Excercise

கொக்கு போல தரையில் ஒருகாலை மட்டும் ஊன்றி, மற்றொரு கால் முட்டியை மடக்கி கைகள் இரண்டையும் கூப்பியவாறு நிற்க வேண்டும். இப்போது பறவை பறப்பதற்கு தயாராவதுபோல் இரண்டு கைகள் மற்றும் இடதுகாலை பின்புறமாக நீட்டி, உடல் முழுவதையும் முன்பக்கமாக கொண்டுவர வேண்டும். வலது காலை மட்டும் தரையில் ஊன்றி நிற்க வேண்டும். இதேபோல் மறுபக்கம் மாற்றி செய்யலாம்.

பலன்கள்

பின்புறம், இடுப்பு தசைகள் வலுவடைகின்றன. இந்த பகுதிகளுக்கு அதிகப்படியான இயக்கம் கிடைப்பதில்லை என்பதால் இறுக்க மடைந்து நடு மற்றும் கீழ் முதுகு வலியைக் கொடுக்கும். ஒற்றைக்கால் பறவை பயிற்சியால் அடிவயிறு மற்றும் பின்புறத்தில் உள்ள அதிகப் படியான கொழுப்பு தசைகளை கரைக்க முடியும். மார்பு விரிவடைவதால் மூச்சுப் பிரச்னைகளுக்கும் நல்ல தீர்வாகிறது.

201803170922391717_2_PigeonPose._L_styvpf.jpg

Pigeon Pose

தரையில் கைகள் மற்றும் கால்களை ஊன்றி, தலையை நிமிர்ந்தவாறு நிற்க வேண்டும். இப்போது வலது முழங்காலை முன்பக்கமாக மடக்கி தரையில் படுக்கபோட்டவாறு வைக்க வேண்டும். இடதுகால் பின் பக்கம் நேராக நீட்டியபடி இருக்க வேண்டும். இரண்டு கைகளும் தோளுக்கு நேராகவும், தலை நேராக நிமிர்ந்தபடியும் வைத்துக் கொள்ள வேண்டும். இதே நிலையில் ஆழ்ந்த மூச்சு விடவேண்டும். இதேபோல் மறுபக்கம் செய்ய வேண்டும். இது புறாவைப் போல் தோற்றமளிக்கும் என்பதால் Pigeon pose என்கிறார்கள்.

பலன்கள்

இடுப்பு, பின்முதுகு மற்றும் கால்களில் நெகிழ்வு அதிகரிக்கிறது. குருத்தெலும்பு மற்றும் மூட்டு இணைப்புகளின் முறிவு குறைகிறது. இடுப்பு மூட்டு நரம்புகளில் இருக்கும் இறுக்கம், அழுத்தம் குறைகிறது. குறிப்பாக, முதுகுத் தண்டுவடத்திலிருந்து கீழ் முதுகுவழியாக பின் தொடையை இணைக்கும் நரம்பான சியாட்டிக் நரம்பின் இறுக்கத்தை குறைக்கிறது. இடுப்பு, கெண்டைக்கால் நரம்புகள் நீட்சி அடைகின்றன. நீண்ட நேரம் அமர்வதால் ஏற்படும் கீழ் இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம்.

https://www.maalaimalar.com/Health/Fitness/2018/03/17092239/1151460/strength-Exercises-Hips-low-back-legs.vpf

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

கண்களைப் பாதுகாக்க...!

 

 
 

இன்றைய திகதியில் அலுவலகத்திற்கு சென்றாலோ அல்லது விற்பனை நிலையங்களில் பணியாற்றினாலோ கணினியில்லாமல் எதுவுமில்லை. அதனால் கணினி திரையை பார்த்துக்கொண்டே பணியாற்றவேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது. அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு வந்தால் தொலைகாட்சி மற்றும் தொலைபேசியுடன் பொழுதை கழிக்கின்றனர். இதனால் கண்களை பராமரிப்பதில் போதிய கவனமின்மை உருவாகிறது. இதனால் கண்களின் ஆரோக்கியம் கெடுகிறது. வறண்ட கண்கள், பார்வை திறன் குறைவு, கண்களில் இரத்த நாளங்களின் செயல்பாட்டில் சமசீரற்றத்தன்மை போன்ற பல விடயங்கள் நடைபெறுகின்றன.

health_news_image_17318.jpg

அத்துடன் கண்கள் சோர்வடைந்துவிட்டால் அவை கண்களின் புறப்பகுதியையும் தாக்கி, அப்பகுதியை கருமையடையவைத்துவிடுகிறது என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள். அத்துடன் சோர்வான கண்கள் விரைவில் முதுமையான தோற்றத்தையும் ஏற்படுத்திவிடுகிறது. இதனால் அதனை பலரும் தவிர்க்க விரும்புகிறார்கள். 

இதனை எளிய முறையில் உணவின் மூலமாகவே தவிர்க்கலாம் என்றும் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.  அவர்களின் பட்டியலில், மீன்களில் சல்மான் மீன், சூரை மீன் எனப்படும் துனா மீன், பயறு, வேர்க்கடலை, முந்திரி போன்ற பருப்பு வகைகள், ஆளி விதை, சணல் விதை போன்ற விதைகள், எலுமிச்சை, ஓரஞ்சு, திராட்டை என சிட்ரஸ் அமிலங்கள் அதிகமுள்ள பழங்கள், பசலை கீரை போன்ற கீரைகள், விற்றமின் ஏ சத்து அதிமுள்ள கேரட் காய்கறி, பீட்ரூட், மாட்டிறைச்சி, முட்டை, குடிநீர் ஆகிய உணவு வகைகளை சரிசமவிகிதமாக எடுத்துக் கொண்டால் கண்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/31860

Link to comment
Share on other sites

தூக்கம் ஒரு சுகானுபவம்! நிம்மதியாக ஆழ்ந்து சுகமாக தூங்கினால் என்ன நடக்கும்?

 

 
sleep

 

எந்தத் தகவல் உங்களுக்குத் தேவைப்பட்டாலும், அது உங்களிடமே இருந்து யோசித்து நினைவுப் படுத்திக் கொள்ளும்படியாக உங்கள் அறிவாற்றல் திறன்களை வலுப்படுத்த விரும்புகிறீர்களா? அது சாத்தியம்தான். உறக்கச் சுழற்றியின் மூலம் நீங்கள் புதிதாக கற்றுக் கொண்ட எந்த விஷயத்தையும் நினைவில் ஆழமாகப் பதித்துக் கொள்ள முடியும். தேவைப்படும் சமயத்தில் அந்த தகவல் உங்கள் நினைவின் மேற்பரப்புக்கு வந்து உங்களுக்குக் கைக் கொடுக்கும் என்கிறனர் ஆராய்ச்சியாளர்கள். இதை யோக முறைப்படி யோகநித்ரா என்பார்கள்.

sleep-disorders-child-sleeping.jpg

மனிதர்களுக்கு சராசரியாக எட்டு மணி நேரத் தூக்கம் தேவை என்கிறார்கள். ஆனால் எவ்வளவு நேரம் தூங்கினோம் என்பது முக்கியமில்லை. எத்தகைய ஆழ்நிலையில் உறங்கினோம் என்பதுதான் முக்கியம். உடலில் உள்ள உள் உறுப்புகள் யாவும் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொண்டு புத்துணர்ச்சியுடன் விளங்க நல்ல உறக்கம் தேவை. நன்றாக உறங்கும்போது ப்ரோலேக்ட்டின் எனும் ஹார்மோன் சுரப்பி வெளிப்படும். அதுவே மன அழுத்தங்களை குறைக்கவல்ல ஹார்மோன் ஆகும்.

jojo.jpeg

எட்டு மணி நேரம் தூங்க முடியாமல் போனாலும் பரவாயில்லை. அன்றாடம் உங்களுடைய வேலைகளை எப்படி பிரித்து செய்கிறீர்களோ, அது போல தூக்கத்தையும் பிரித்து உறங்க வேண்டும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். கனவுகளில்லா உறக்கம் என்பது சாத்தியமில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ, போலவே ஒருவராலும் எட்டு மணி நேரம் தொடர்ந்து தூங்கவும் முடியாது. உறக்கத்தின் இடையே பல சுழற்சிகள் உண்டு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

images.jpg

உறக்கம், விழிப்பு,  மீண்டும் உறக்கம் என்னும் சுழற்சி முறையில்தான் உறக்கம் வரும். மேலும் மாதத்தில் ஒரு வாரம் ஆழ்ந்த உறக்கம் அடுத்த வாரம் மிதமான உறக்கம் மீண்டும் அடுத்த வாரம் ஆழ்ந்த உறக்கம் என்றும் சிலருக்கு ஏற்படும். இத்தகைய உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டால் உடல்நல பிரச்னைகள் வரலாம். எனவே இயற்கையான முறையில் நல்ல உறக்கம் ஒவ்வொருவருக்கும் அத்தியாவசியமானது.

இதற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில் உறக்கச் சுழற்சியின் எண்ணிக்கையைப் பொருத்துதான் ஒருவரது அன்றைய தினத்தின் நினைவுத் திறன் அமைகிறது என்பதும் கண்டறியப்பட்டது. இதற்காக ஆய்வொன்று நடத்தப்பட்டது.

Student-sleeping.jpg

ஒரு பரீட்சைக்கு முன்னால் 90 நிமிடங்கள் சிலரை உறங்கச் சொன்னார்கள். மற்றவர்கள் உறங்காமல் நேரடியாக அந்த பரீட்சையை எதிர்கொண்டனர், நன்றாக உறங்கி விழித்த பின் பரீட்சையை வெகு துல்லியமான தரவுகளுடன் அவர்கள் விடைகள் அமைந்திருந்தன. உறங்காமல் நேரடியாக பரீட்சை எழுதியவர்கள் அவர்களை விட சற்று குறைவான மதிப்பெண்களே பெற்றிருந்தனர். இதிலிருந்து உறக்கச் சுழற்சி முறையினால் மூளைக்குள் சில மின்னணு மாற்றங்கள் ஏற்பட்டு நினைவுத் திறன் மேம்படுகிறது என்ற முடிவுக்கு வந்தனர் ஆய்வாளர்கள்.

sugam.jpg

உறக்க சுழற்சி முறையினால் ஆழ்ந்த உறக்கம் ஏற்படுவது மட்டுமல்லாமல், உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது, நினைவுத் திறன் அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும், இது உங்கள் மன அழுத்தங்களை குறைத்து அறிவாற்றல் திறனை அதிகரிக்கவும் செய்கிறது. 

http://www.dinamani.com/health/health-news/2018/mar/12/sleep-spindles-may-help-in-improving-memory-retention-2879251.html

Link to comment
Share on other sites

காசநோயை கண்டுகொள்ளாமல் இருப்பதால் ஏற்படும் ஆபத்துகள் என்ன?

 
காசநோய்படத்தின் காப்புரிமைTHINKSTOCK

உலக காச நோய் தினத்தில், பொது சுகாதார நிபுணராண சபல் மெஹ்ரா மற்றும் புகைப்பட கலைஞர் ஷம்பா கபி இருவரும் மருத்துவர் சரீர் உத்வாதியாவை தொடர்ந்தனர். சிகிச்சை அளிக்க முடியாத காசநோயின் சில வடிவங்களை எதிர்த்து பல ஆண்டுகளாக போராடி வருகிறார் சரீர்.

சிகிச்சை அளிக்க முடியாத காசநோயின் வடிவங்கள் குறித்து, 2012ஆம் ஆண்டு மருத்துவ இதழ் ஒன்றை வெளியிட்டார் நுரையீரல்நோய் சிகிச்சையில் பிரசித்தி பெற்ற சரீர் உத்வாதியா.

இதன் மூலம், இந்தியாவில் வளர்ந்து வரும் தொற்று நோயான காசநோய் குறித்தும், மருந்துகளால் குணப்படுத்த முடியாத காசநோயின் வடிவங்கள் குறித்தும் மருத்துவ சமூகத்துக்கு சரீர் நினைவு படுத்தினார்.

காசநோய்படத்தின் காப்புரிமைSHAMPA KABI

உலகளவில் காசநோய் அதிகம் இருக்கும் நாடு இந்தியா. ஆண்டுக்கு 2.8 மில்லியன் பேருக்கு இந்த நோய் வருவதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒரு லட்சத்துக்கும் மேல் மருந்துகளால் குணப்படுத்த முடியாத காசநோய் என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

காசநோயால் ஆண்டுக்கு 4 லட்சம் இந்தியர்கள் உயிரிழக்கின்றனர். மேலும், இதனால், ஓராண்டுக்கு அரசுக்கு ஆகும் செலவு 24 பில்லியன் டாலர்கள் ஆகும்.

காசநோயை கண்டறிவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

"காலாவதியான பரிசோதனை தொழில்நுட்பங்களையே இன்னும் இந்தியா நம்பி இருக்கிறது. காசநோயை கண்டறிவதில் 50 சதவீதம் தோல்வியில் முடிகிறது" என்கிறார் மும்பையை அடிப்படையாக கொண்ட சரீர்.

காசநோய் பாக்டீரியாவின் இருப்பை கண்டறியும் மூலக்கூறு சோதனை செய்யக்கூடிய GeneXpert போன்ற புதிய தொழில்நுட்ப முறைகளை இந்தியா பின்பற்ற வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

காசநோய்படத்தின் காப்புரிமைSHAMPA KABI

"காசநோயால் நிகழும் ஒவ்வொரு மரணமும் தவிர்க்க முடியாத ஒரு சோகமாக இருக்கிறது. இதனை மாற்றுவது நம் கடமை"

காசநோய்க்கு சிகிச்சை உள்ளது என்றாலும், வறுமை, கடன் தொல்லை காரணமாக, நொடிக்கு ஒரு இந்தியர் இதனால் கொல்லப்படுகிறார். அவசர நடவடிக்கைகள் தேவைப்படும் இந்தியாவின் மிகப்பெரிய சுகாதார நெருக்கடியாக உள்ளது இது.

உடனடி சிகிச்சை அவசியம்

"சில சாதாரண காசநோய்களுக்கு எளிமையான சிகிச்சை உண்டு. சுமார் 300 ரூபாய் செலவில், ஆறு மாதங்களுக்கு 4 மாத்திரைகள் எடுத்துக் கொண்டால் குணப்படுத்தி விடலாம்" என்கிறார் சரீர்.

ஆனால், தவறான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலோ, சரியான அளவில் மருந்துகளை எடுத்துக் கொள்ளவில்லை என்றாலோ அல்லது மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தினாலோ, காசநோய் பேக்டீரியா அம்மருந்துகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க நேரிடும்.

காசநோய்படத்தின் காப்புரிமைSHAMPA KABI

மருந்துகளை ஏற்றுக்கொள்ளாமல் போகும் இந்த பாக்டீரியாக்கள் கொண்ட காசநோயை குணப்படுத்த நீண்டகாலம் ஆகும். இரண்டு ஆண்டுகள் வரை ஆகலாம். அதிக பணம் மற்றும் மருந்து மாத்திரைகள் தேவைப்படும். சரியாக சொல்லப் போனால் 250 ஊசிகள் மற்றும் 15,000 மாத்திரைகள்.

கிட்டத்தட்ட குணப்படுத்த முடியாத காசநோயுடன் பல நோயாளிகளை தாம் அவ்வப்போது சந்தித்து வருவதாக கூறுகிறார் சரீர்.

தன்னிடம் சிகிச்சை பெற வந்த தாராவியை சேர்ந்த சல்மாவை நினைவு கூர்ந்தார் அவர்.

மும்பையில் இருக்கும் குடிசைப்பகுதியான தாராவியில், பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் திறந்த கழிவுநீர் மற்றும் சிறிய வீடுகளில் வாழ்கின்றனர்.

காசநோய்படத்தின் காப்புரிமைSHAMPA KABI

"வறுமையினாலும், அதிக மக்கள் கூட்டம் கொண்டிருப்பதாலும் காசநோயின் பிறப்பிடமாக அது திகழ்கிறது" என்று சரீர் தெரிவித்தார்.

காசநோய் தொற்றில் இருந்து வெளிவர 5 ஆண்டுகளாக போராடியதாக சல்மா குறிப்பிடுகிறார். 1,500 கிலோ மீட்டர்கள் பயணம் செய்து, குறைந்தது நான்கு அரசு சுகாதார காசநோய் மருத்துவமனைகள், 12 தனியார் மருத்துவமனை மருத்துவர்களை சந்தித்து பல்வேறு மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக தெரிவித்தார்.

ஐந்து வருடங்களாக சிகிச்சை எடுத்துக் கொண்டு, நோய் சரியாகாமல், நீங்கள் இன்னும் மோசமான நிலைமைக்கு ஆளானால் எப்படி இருக்கும் என நினைத்து பாருங்கள் என்கிறார் சரீர்.

காசநோய்படத்தின் காப்புரிமைSHAMPA KABI

பின், எந்த மருந்தும் அவரை குணப்படுத்த முடியாமல் போக, ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்ட 4 ஆண்டுகளுக்கு பின் சல்மா இறந்து விட்டதாக அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மட்டும், உலகில் 10 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 2 மில்லியன் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 1,50,000 பேர் மருந்து எதிர்ப்பு தெரிவிக்கும் காசநோய் கொண்டு அதனை குணப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

செப்டம்பர் 2017ல் புல்லட் ரயில் திட்டத்தை இந்தியா அறிமுகப்படுத்தியதை சுட்டிக்காட்டி பேசும் மருத்துவர் சரீர், "பிரதமர் மோதி அவர்களே.. புல்லட் ரயில் திட்டத்தை மறந்து விடுங்கள். சிகிச்சைக்கு தேவையான மருந்துகளையும், நோய்களை விரைவில் கண்டறியும் தொழில்நுட்ப ஆய்வுக்கூடங்களையும், சமூக மாற்றத்தையும் கொடுங்கள். ஏனெனில், சரியில்லாத சமூகத்தின் சரியான வெளிப்பாடாக இந்த காசநோய் அமைந்திருக்கிறது" என்றார்.

http://www.bbc.com/tamil/india-43525586

Link to comment
Share on other sites

முதுகுவலியை போக்கும் மர்ஜரி ஆசனம்

 

 
 

முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். இப்பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்.

 
 
 
 
முதுகுவலியை போக்கும் மர்ஜரி ஆசனம்
 
செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்க வேண்டும் என்றால், நம் உடலையும், மனதையும் எப்போதும் புத்துணர்ச்சியோடு வைத்திருக்க வேண்டும்.33 வகையான எலும்புகளின் கோர்வைதான் நமது முதுகெலும்பு. இவை ஒரே எலும்பாக இல்லாமல் நடுவே ஒரு வட்டைச் சுற்றி சின்னச் சின்ன எலும்புகளாக கோர்க்கப்பட்டுள்ளது. இதனால் தான் நம்மால் சிரமம் இல்லாமல் வளையவோ, நிமிரவோ, குனியவோ முடிகிறது.

ல்லாவிதமான முதுகு வலிகளுக்கும் யோகாசனம் மூலம் தீர்வு காணலாம். பவன முக்தாசனம், சுத்த வஜ்ராசனம், மர்ஜரி ஆசனம், புஜங்காசனம், வியாகராசனம், தாடாசனம், கட்டி சக்ராசனம், மகராசனம், தனுராசனம் இவை அனைத்தும் முதுகுவலியை சரிசெய்யக்கூடிய ஆசனங்கள். இதில் அனைவரும் எளிதில் செய்யக்கூடிய இரண்டு முக்கியமான ஆசனங்களைப் பார்க்கலாம்.

முதுகுவலிக்கான எளிமையான ஆசனம் மர்ஜரி ஆசனம். ‘மர்ஜரி’ என்றால் பூனை. பூனைபோல உடலை வளைத்து செய்வதால் இந்தப் பெயர்.

இரு கால்களையும் மடித்து, குதிகால் பகுதியில் நமது பிட்டப் பகுதி நன்கு பதிந்திருக்குமாறு அமர்வதுதான் வஜ்ராசனம். முதலில் வஜ்ராசனத்தில் அமர வேண்டும். முட்டி போட்டு நின்றபடி, பூனைபோல கைகளை முன்னால் ஊன்றிய நிலையில் இருக்க வேண்டும்.

கால் முட்டியை சற்று அகல மாக வைத்து, கைகள் அதற்கு நேராக இருக்குமாறு சரிசெய்துகொள்ள வேண்டும். மூச்சை உள் இழுக்கும்போது தலையை நன்றாக மேலே தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த நிலையில் முதுகுப் பகுதி நன்கு வளைந்து, ஒரு பள்ளம்போல ஏற்படும். பிறகு மூச்சை விட்டவாறு பொறுமை யாக குனிந்து நம்முடைய தாடை மார்பைத் தொடுவதுபோல நன்றாக குனிய வேண்டும்.

இந்த நிலையில், முதுகுப் பகுதி வளைந்து, ஒரு குன்று போல காணப்படும். இவ்வாறு மாற்றி மாற்றி 3-5 முறை செய்ய வேண்டும். பிறகு, மீண்டும் வஜ்ராசனத்தில் அமரலாம். அல்லது, அப்படியே குப்புறப் படுத்து ரிலாக்ஸ் செய்துவிட்டு, பிறகு, ஒருக்களித்து ஒருபுறமாகத் திரும்பி, மல்லாக்க படுத்து சாந்தி அல்லது சவாசனத்தில் 10-15 விநாடிகள் இருந்துவிட்டு எழலாம். இப்பயிற்சியை தினமும் செய்துவர முதுகுவலி நன்கு குணமாகும்

https://www.maalaimalar.com/Health/Fitness/2018/03/24113121/1152897/marjari-asana.vpf

Link to comment
Share on other sites

புற்றுநோய்க்கு உடல் பருமனும் ஒரு காரணம் - அதிர்ச்சி தரும் ஆய்வு

 

பிரிட்டனில் புகை பிடித்தல் புற்றுநோய்க்கு காரணமாவது குறைந்து, அதிக எடை அல்லது உடல் பருமன் காரணமாக புற்றுநோய் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.

புற்றுநோய்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

6.3 சதவீதம் பேருக்கு அதிக எடையால் புற்றுநோய் உருவாகி உள்ளது என பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வு அமைப்பு கண்டுபிடித்திருக்கிறது. 2011ம் ஆண்டில் இருந்த 5.5 சதவீதத்தை விட இது அதிகமாகும்.

இந்நிலையில், புகை பிடித்தல் மூலம் வருகின்ற புற்றுநோய் விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.

உடல் பருமனால் வருகின்ற சுகாதார அச்சுறுத்தலை சமாளிக்க அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நீண்டகாலம் ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு என்கிறது ஓர் ஆய்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநீண்டகாலம் ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு என்கிறது ஓர் ஆய்வு

ஸ்காட்லாந்தில் 41.5 சதவீதம், வட அயர்லாந்து 38 சதவீதம், வேல்ஸ் 37.8 சதவீதம் மற்றும் இங்கிலாந்து 37.3 சதவீதம் என பெரிய விகிதங்களில் தடுக்கக்கூடிய புற்றுநோய் காரணங்கள் இருந்ததை பிரிட்டன் புற்றுநோய் ஆய்வு அமைப்பு அறிய வந்துள்ளது.

19.4 சதவீதத்தில் இருந்து 2011ம் ஆண்டு 15.1 சதவீதத்திற்கு குறைந்திருந்தாலும், தடுக்கக்கூடிய புற்றநோயின் காரணியாக, புகை பிடிப்பது பிரிட்டன் முழுவதும் இருந்து வந்தது.

அதிக எடையோடு அல்லது உடல் பருமனாக இருப்பது இரண்டாவது காரணியாகவும், சூரியன் மற்றும் சூரிய படுகைகளிடம் இருந்து வரும் புறஊதா கதிர்வீச்சுக்கு ஆளாவது மூன்றாவது காரணியாகவும் இருந்தன.

யாராவது உடல் பருமனாக இருந்தால், அவர்களின் உடல் நிறை குறியீடு (பிஎம்ஐ) கணக்கிட்டு நோயறிதல்தான் தரமான வழிமுறையாகும்.

ஒருவரின் உயரத்திற்கு தக்க ஆரோக்கியமான எடையை அவர் கொண்டிருக்கிறீர்களா என்று இதில் அளவிடப்படுகிறது.

புற்றுநோய் சிகிச்சைக்குப் பலன் தரும் புதிய பரிசோதனை

உடல் நிறை குறியீட்டு எண் 25க்கு மேலாக இருந்தால், நீங்கள் அதிக எடை உடையவர். இந்த எண் 30க்கு மேலாக இருந்தால், சில விதிவிலக்குகள் இருந்தாலும் நீங்கள் உடல் பருமன் உடையவர்கள்.

அதிக அளவு புறஊதா கதிர்வீச்சுக்கு உள்ளாகியிருந்தால், ஆண்டுக்கு 13,600 பேருக்கு மெலனோமா தோல் புற்றுநோய் அல்லது அனைத்து புற்றுநோய் வகைகளில் 3.8 சதவீதம் புற்றுநோய் ஏற்பட்டிருக்கிறது.

அதிக எடையுடைய பெண்படத்தின் காப்புரிமைPA

மது அருந்துவது மற்றும் நார்ச்சத்து மிகவும் குறைவாக சாப்பிடுவது ஆகியவை புற்றுநோய்களை தடுக்கக்கூடிய பிற காரணிகளாகும்.

இருப்பினும், புற்றுநோயை தடுப்பதற்கான காரணிகளின் விகிதாச்சாரம் 42.7 சதவீதத்தில் இருந்து 37.7 சதவீதமாக சரிவடைந்திருப்பது ஒட்டுமொத்த பகுப்பாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

புகை பிடிப்பதை தடுப்பதற்கு எடுத்துள்ள நடவடிக்கைகள் வேலை செய்துள்ளதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், உடல் பருமனால் அதிகரித்து வருகின்ற பிரச்சனையை சமாளிக்க அதிக பணிகள் செய்யப்பட வேண்டியுள்ளது என்று பிரிட்டனின் புற்றுநோய் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

உடல் பருமன் தற்போதுள்ள மிக பெரிய சுகாதார ஆபத்தாக உள்ளது. இதனை தடுக்க எதாவது செய்யாவிட்டால், இந்தப் பிரச்சனை இன்னும் மோசமாகும் என்று பிரிட்டனின் புற்றுநோய் தடுப்பு ஆய்வகத்தின் நிபுணரான பேராசிரியர் வின்டா பௌல்டு தெரிவித்திருக்கிறார்.

"இரவு 9 மணிக்கு முன்னால் ஒளிப்பரப்பாகும் 'ஜங் புட்' தொலைக்காட்சி விளம்பரங்களை தடை செய்வது, அவசியமான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் முக்கியமானதொரு பகுதியாகும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

மது அருந்துவதால் பிரிட்டனில் 3.3 சதவீத புற்றுநோய் உருவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமது அருந்துவதால் பிரிட்டனில் 3.3 சதவீத புற்றுநோய் உருவாவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

லண்டனிலுள்ள புற்றுநோய் ஆய்வு நிறுவனத்தின் புற்றுநோய் உயிரியலாளரான பேராசிரியர் மெல் கிரியவஸ், புற்றுநோய் பலவற்றை தடுத்துவிட முடியும் என்ற கருத்துக்கு இந்த ஆய்வு சான்று என்று குறிப்பிட்டுள்ளார்.

"உடல் பருமனை தவிர்ப்பதனால், புற்றுநோய் ஏற்படும் விகிதம் குறையுமா என்பது தெரியவில்லை. ஆனால், அவை பெரும்பாலும் கணிசமான அளவுக்கு குறையும்" என்று கிரியவஸ் குறிப்பிட்டுள்ளார்.

"இளைஞர்களிடம் காணப்படும் உடல் பருமனின் தற்போதைய அதிக விகிதத்தை வைத்து பார்த்தால், மருத்துவ துறைக்கு அப்பாற்பட்ட மிக பெரிய சமூக சவாலை இந்த ஆய்வு குறிப்பிட்டு காட்டுகிறது" என்று தெரிவிக்கிறார் பேராசிரியர் கிரியவஸ்.

http://www.bbc.com/tamil/science-43526758

Link to comment
Share on other sites

வழக்கத்தைவிட அதீத சோர்வாக உள்ளதா? லிவர் பிரச்னைக்கான அறிகுறிகள் இவை!

 

 
tired-women

 

மனிதனின் உள் உறுப்புக்களில், பெரிய உறுப்பாக அமைந்திருப்பது, கல்லீரல்தான் (லிவர்). மிகப் பெரிய நீர்மம் சுரக்கும் சுரப்பியாக செயல்படும், இந்த உறுப்பின் பங்களிப்பு அளவிடமுடியாதது. அப்படி என்ன தான் அதீதமான வேலைகளைச் செய்கிறது இந்தக் கல்லீரல் என நினைக்கத் தோன்றுகிறதல்லவா? 

நாம் உண்ணும் உணவு செரிமானம் ஆவதற்கு பித்த நீர் சுரக்க வேண்டும். அந்த பித்த நீரை தயாரிப்பது கல்லீரல்தான். ரத்தத்தில் உள்ள 80 சதவிகித கொழுப்பை, பித்த நீராக மாற்றி, பித்தப்பையில் சேமித்து வைக்கிறது. நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து சத்துக்களை, நம் உடலுக்கு ஏற்ற முறையில் மாற்றித் தருகிறது. உணவிலிருந்து பெறப்படும் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் கல்லீரல் வழியாகத்தான் உடலின் பல பாகங்களையும் சென்றடைகிறது. 

tired.001_.jpeg

பிளாஸ்மாவை ரத்தமாக மாற்றும் வேலையைச் செய்கிறது. ஆற்றலை சேமித்து வைக்கும் கிளைக்கோஜன் என்னும் வேதிப்பொருளை இந்த உறுப்புதான் சேமித்து வைக்கிறது. வேண்டாத நுண்ணுயிர்களை அழித்து, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களைச் சீர் செய்து, ரத்தத்தை தூய்மைப்படுத்துகிறது. கார்போஹைடிரேட், புரதச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின்கள், மினரல்களை சேமித்து வைக்கிறது. 

ஒரு மனிதனின் கல்லீரல், சராசரி 1.3 கிலோ கிராம் முதல் 1.6 கிலோ கிராம் எடை இருக்கும். இது அதிக எடை கொண்ட உள்ளுறுப்பு என்றே சொல்லலாம். இந்த உறுப்பு சரியாகத் தன் வேலைகளைச் செய்து  வந்தால், உடலில்  நமக்கும் எந்த உபாதையும் ஏற்படாது. ஆனால் சற்றே தவறிவிட்டால் போதும். தொடர்கதையாக உறுப்புக்களில் பாதகங்கள் ஒவ்வொன்றாகத் தலை தூக்கத் தொடங்கும். 

இத்தனையொரு உன்னதமான உறுப்பினை நாம் எவ்வளவு ஜாக்கிரதையாகப் பராமரிக்க வேண்டும்? கல்லீரல் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தால், கல்லீரல் நோய்கள் அறிகுறிகள் என்னென்ன? 

palm.jpg

1. தோலில் மஞ்சள் நிறம். 
2. மஞ்சள் காமாலை. 
3. பசியின்மை. 
4. வழக்கத்தைவிட அதிகமான சோர்வு. 
5. உடல் எடை  கூடுதல் . 
6. வாயில், நாக்கில் வரட்சித்தன்மை. 
7. அடர்ந்த நிறத்தில் சிறுநீர் வெளியேறுவது. 
8. வயிற்றுப்போக்கு. 
9. மூட்டுகளில் வலி.
10. அடி வயிற்றுப்  பகுதிகளில் ஒரு இம்சை. 
11. ஆண்களுக்கு மார்பக வளர்ச்சி. 
12. ரத்தம் உறைவதில் பிரச்சனை. 
13. காலில் நீர் தேங்குதல். 
14. நிறம் மாறி மலம் கழித்தல். 

இவைகளைப் போன்ற அறிகுறிகள் தோன்றினால், நீங்கள் உடல் நலத்தில், அதுவும் முக்கியமாக கல்லீரலைப் பேணுவதில், அக்கறை காட்டவில்லை என்று தெரிந்து கொள்ளுங்கள்.  நம்மால் என்ன செய்ய முடியும் என்பதுதானே உங்கள் எண்ணம்? கவலை வேண்டாம். நாம் உண்ணும் உணவின் மூலம் அவ்வுறுப்பிற்கு பராமரிப்பைத் தர முடியும்.

02735jp_01_hercules.jpg

கேரட்

இதில் மூன்று வகையான அமினோ அமிலங்கள் (amino acids) இருப்பதால், எதிர் ஆக் சிகரணியாகச் ( anti oxidant) செயல்படுகிறது. அதனால் நச்சுக்கள் சேர்வது தவிர்க்கப்படுவதுடன், வைட்டமின் ஏ சக்தியும் உடலுக்குக் கிடைக்கிறது. 

tom.jpeg

தக்காளி

இதில் இருக்கும் எதிர் ஆக்சிகரணி, கல்லீரலில் நச்சுப்பொருட்கள் இருந்தால் வெளியேற்றுவதோடு, புற்று நோயை எதிர்த்து போராடுகிறது. benefits-of-red-grapes1.jpg

சிகப்பு திராட்சை

இப்பழத்தில், பதினெட்டு வகையான எதிர் ஆக்சிகரணிகள் இருப்பதால் கல்லீரலில் நச்சுத்தன்மையை  நீக்கும்  தன்மை அதிக அளவில் காணப்படுகிறது. உடலுக்கு   வைட்டமின் சி யும்  நிறைய கிடைக்கிறது.

 
 

Red_Pasalai_Keerai-_Upload_222200944646.

பசலைக்கீரை

பொதுவாக கீரை வகைகள் உடலுக்கு நல்லது என்றாலும், இந்த வகைக் கீரை நச்சுக்கழிவுகளை வெளியேற்றும் சக்தி கொண்டது. இதில் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது. 

முட்டைக்கோஸ்

இக்காய்க்கு கல்லீரலை சுத்தப்படுத்தும் தன்மை உண்டு. அதைத்தவிர, அழற்சியை எதிர்க்கும் தன்மையும் இருப்பதால், பல விதமான நோய்களிலிலிருந்தும்  நமக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. 

apples.jpg

ஆப்பிள்

இப்பழம் குடலை சுத்தகரிப்பதால், கல்லீரல், சிரமப்படாமல் தன் வேலையைச் செய்ய முடிகிறது. 

பூண்டு

இதில் சல்ஃபர் நிறைந்திருப்பதால் கல்லீரலை சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இதில் அல்லிசென், செலினியம் ஆகிய மினரல்கள் இருப்பதால், கல்லீரலை நச்சுகள் அணுகாமல் பாதுகாக்கிறது. 

சாப்பிடும் பொழுது வயிறு நிறைய சாப்பிட வேண்டும் என்பதில்லை. உடலுக்குத் தேவையான போஷாக்கான உணவினை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும் என்பதுதான் முக்கியம். நம்முடைய ஆரோக்கியம் நம் கையில்தான் உள்ளது என்பதை புரிந்து கொண்டீர்களா? உடல் நலம் பேணுவோம். ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிகோலுவோம். 

http://www.dinamani.com/health/health-news/2018/mar/21/liver-problems-and-symptoms-2884905--2.html

Link to comment
Share on other sites

பெண்களைப் பார்த்தாலோ யோசித்தாலோ பயம் வருகிறதா..? `கைனோஃபோபியா'வாக இருக்கலாம்! #Gynophobia

 
 

பெண்களைப் பார்த்தாலோ, அவர்களைப் பற்றி யோசித்தாலோ சிலர் பயந்து நடுங்குகிறார்கள். பொதுவிடத்தில் பெண்களைப் பார்த்தால் பதற்றமடைந்து தள்ளி நிற்பார்கள். இது மனரீதியான ஒரு பாதிப்பு என்கிறார்கள் மருத்துவர்கள். மருத்துவமொழியில் இதற்குப் பெயர், கைனோஃபோபியா (Gynophobia) அல்லது ஃபெமினோஃபோபியா (Feminophobia). இது பெண்களையும் பாதிக்கும் என்றாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது ஆண்களே. இந்த ஃபோபியாவால் பாதிக்கப்படும் ஆண், தன் தாய், சகோதரியிடம்கூட பயப்படுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள், அவ்வளவு மோசமான பாதிப்பு இது.

கைனோஃபோபியா

 

இந்த கைனோஃபோபியா குறித்து விரிவாக விளக்குகிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. 

பெண்களால் அவமதிக்கப்பட்ட, கேலி, கிண்டல்கள் செய்யப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட ஆண்களே பெரும்பாலும் இந்தப் பாதிப்புக்கு ஆளாகின்றனர். எதிர்மறையான பெண் கதாபாத்திரங்களின் கதைகளைச் சின்ன வயதில் கேட்பதும் இந்த பாதிப்பு ஏற்படக் காரணமாகலாம். உளவியல் பிரச்னைகளான மனச்சோர்வு (Bipolar disorder), மனச்சிதைவு ( Schizophrenia) பிரச்னைகளைத் தொடர்ந்தும்  கைனோஃபோபியா ஏற்படலாம். சிறு வயதில் ஏற்பட்ட புறக்கணிப்பு, மனம், உடல் ரீதியிலான தாக்குதல், மரபு வழியாகவும் இது ஏற்படலாம். சில மோசமான அனுபவங்கள் மூளையில் பதிந்துவிட்டால் பெண்களைப் பார்க்கும்போது, பழைய நினைவுகளுடன் தொடர்புபடுத்தி பயப்படுவார்கள். இவற்றில் பயத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும், கைனோஃபோபியாவால் பாதிக்கப்பட்டவர்களின் மனதில் ஆழமான தாக்கம் இருக்கும். 

பயம்

கைனோஃபோபியாவிற்கான அறிகுறிகள் 10 வயது முதலே வெளிப்படையாகத் தெரியத் தொடங்கும். சிலருக்கு இது குழந்தைப் பருவத்திலேயே சரியாகிவிடும். சிலருக்குப் பெரியவரான பிறகும் தொடரும். இந்தப் பயம் தேவையற்றது, மிகைப்படுத்தப்பட்டது என்பது தெரிந்தும்கூட, கட்டுப்படுத்த முடியாத நிலையில் இருப்பார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களைப்  பார்க்கக்கூட விரும்பமாட்டார்கள், பெண்கள் அதிகமாகக் கூடுகிற நிகழ்ச்சிகள், விழாக்களுக்குச் செல்வதையும் தவிர்ப்பார்கள். குறிஞ்சி மனநலமருத்துவர்

இந்தப் பாதிப்பு இருப்பதை வெளிக்காட்டிகொள்ளாமல் இருக்க பிறரிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். எனவே, இவர்களால் சாதாரண வாழ்க்கையைக்கூட சுதந்திரத்துடன் அணுக முடிவதில்லை. சிலருக்கு ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு ஏற்படலாம். எளிதில் போதைப் பழக்கத்திற்கு ஆளாகலாம். இதனால் தற்கொலை எண்ணங்களும் ஏற்படலாம்.

இதயத்துடிப்பு சீராக இருக்காது, சிரமப்பட்டு சுவாசிப்பார்கள், மார்புப் பகுதியில் தசைஇறுக்கம், தலைவலி, மயக்கம் ஏற்படவும் வாய்ப்புண்டு. குழந்தைகளுக்கு கைனோஃபோபியா இருந்தால், ஒரு பெண் தூக்கும்போது வீறிட்டுச் சத்தமாக அழத் தொடங்கிவிடும். தந்தையை விட்டுவிலகாது.

சிகிச்சைகள்

கைனோஃபோபியாவை எதிர்கொள்ள உளவியல் சிகிச்சையே சிறந்தது. மனநல மருத்துவரிடம் மெதுவாக பயத்தைப்  போக்குதல் (Exposure therapy), நடத்தை சிகிச்சை (Behavioural therapy),  பேச்சு சிகிச்சை (Talk therapy) எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சிகிச்சைகளால் ஓரளவு குணமான பின்னர், பயத்தின் உண்மையான நிலையை ஆராய்ந்து, சரியான உளவியல் சிகிச்சைக்குத் தயார் செய்வார்கள். பெண்கள் பேசிய குரல் ஒலிப்பதிவைக் கேட்க வைப்பது, பெண்களின் புகைப்படங்களைத்   திரையிடுவது, பெண்களுடனான சிறு உரையாடல் எனப் படிப்படியான சிகிச்சைகளை மருத்துவர் செய்வார். இந்தக் கோளாறை அலட்சியப்படுத்தினால் பாதிக்கப்பட்டவரை மீட்பது கடினம்..." என்றார்.

https://www.vikatan.com/news/health/120259-a-man-who-fears-seeing-or-thinking-women-is-gynophobia-or-feminophobia.html

Link to comment
Share on other sites

வலிப்பு வந்தால் கையில் சாவி தருவதுதான் தீர்வா? #PurpleDay

 
 

purple day

பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த காலைப்பொழுது, காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு அனைவரும் வேகமாய் ஓடிக்கொண்டிருந்தார்கள். சிறிதுநேரம் இப்படியே நகர்ந்துகொண்டிருந்த கூட்டத்தின் நடுவில் ஒருவர் பொத்தென்று கீழே விழுந்தார். அவரின் தசைகள் இறுக்கமாகி உடல் முழுவதும் உதற ஆரம்பித்து, வாயிலிருந்து நுரைத் ததும்பி வெளியே வந்தது. கீழே விழுந்தவர் சில நிமிட போராட்டத்திற்கு பிறகு நினைவுக்கு வந்தார். ஆம், அவருக்கு வலிப்பு வந்திருந்தது. 

 

இந்த நோயால் பாதிக்கப்பட்ட காசிடி மேகன் (Cassidy Megan) இது குறித்த விழிப்புஉணர்வு மக்களுக்கு வேண்டும் என நினைத்தார். எனவே காசிடி மேகனும், நோவா ஸ்காடியா - (The Epilepsy Association) இணைந்து வருடந்தோறும் மார்ச் 26 ம் நாளை வலிப்பு விழிப்புஉணர்வு நாளாகக் கடைப்பிடித்தனர். இந்த தினம்  ``ஊதா நாள் "(Purple day) என்றும் அறியப்படுகிறது. மக்கள் அனைவரும் ஊதா நிற ஆடையை அணிந்து வலிப்பு நோய் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துகின்றனர். 

World Health Organization -  ஆய்வறிக்கையின்படி உலக அளவில் 50 மில்லியன் மக்கள் வலிப்புநோயினால் (Epilepsy) பாதிக்கப்படுகின்றனர்.   மூளைச் செல்கள் மற்றும் மூளை நரம்புச் செல்களில் ஏற்படும் பாதிப்பின் விளைவாகவே வலிப்பு  உண்டாகிறது. ஒரு மனிதனின் வாழ்நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் வலிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 

காரணங்கள் :

சில நேரங்களில் இந்த நோய்க்கான காரணம் என்ன என்பதை  கண்டறியமுடிவதில்லை. இருந்தாலும், தலைப் பகுதியில் ஏற்படும் காயங்கள், நரம்பு மண்டலக் குறைபாடு, விபத்தினால் தலைப்பகுதியில் ஏற்படும் காயங்கள், மூளைக்கட்டிகள் போன்றவை வலிப்பு ஏற்பட காரணமாக அமைகிறது. 

முதலுதவி :

ஒருவருக்குத் திடீரென வலிப்பு வந்துவிட்டால் முதலில் வலிப்பு வந்தவரின் பக்கத்தில் கூரான பொருள்கள் எதுவும் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அமைதியாக அவரைத் தரையில் படுக்கவைத்து கீழே விழுவதிலிருந்து தவிர்க்கலாம். தலை வேகமாகத் தரையில் படுவதைத் தவிர்ப்பதற்கு, தலைக்கு மென்மையான பொருள்களை வைக்கலாம். இறுக்கமான ஆடையைத் தளர்த்தி விடலாம். வலிப்பு வந்தவரை ஒருபக்கமாகச் சாய்த்து வாயில் உள்ள உமிழ்நீர் முற்றிலும் வெளிவரும்படி செய்யலாம். இதன்மூலம் மூச்சுப்பாதையில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளமுடியும். வலிப்பு எவ்வளவு நேரம் வருகிறது என்பதை கண்டறிவது அவசியம். பொதுவாக 5 நிமிடங்களுக்குள் வலிப்பானது சரியாகிவிடும். அப்படியில்லையெனில் மருத்துவமனையை உடனடியாக அணுகுவது சிறந்தது. வலிப்பு நின்றவுடன் நோயாளியை ஓய்வெடுக்க அல்லது தூங்க விட வேண்டும். 

பொதுவாக வலிப்பின் வகை மற்றும் அறிகுறியின் அடிப்படையில் நோயாளிக்குச் சிகிச்சை வழங்கப்படுகிறது.

வகைகள் : 
    * இடியோபதிக் ( ldiopathic).      
        இதில் நோய்க்கான காரணம் என்ன என்பது  தெரியாது.
   * க்ரிப்டோஜெனிக் (Cryptogrnic):
       நோய்க்கான காரணம் இருந்தாலும், மருத்துவரால் குறிப்பிட்டுக் கூற இயலாது. 
   * சிம்டோமேடிக் ( Symptomatic)  :
        நோய்க்கான காரணம் தெளிவாகத் தெரியும். 

வலிப்பு நோய்

சிகிச்சை :
 

 

வலிப்பு நோயின் வகை மற்றும் அறிகுறிகளுக்கு ஏற்றவகையில் மருத்துவர் சரியான சிகிச்சை அளிக்கும் போது வலிப்பு நோய் கட்டுப்படுத்தப்படும். மருத்துவரின் அறிவுரைப்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை (Anti Epileptic drugs) உட்கொள்ள வேண்டும். வலிப்பு கட்டுப்படுத்தப்படாதவர்களுக்கு மூளை அறுவை சிகிச்சை மற்றும் கீட்டோஜெனிக் டயட் (அதிக கொழுப்பு சத்துள்ள உணவு)  பரிந்துரைக்கப்படுகிறது.

https://www.vikatan.com/news/health/120265-awareness-day-special-article-about-epilepsy.html

Link to comment
Share on other sites

கெஞ்சும் பாதங்களின் வலி நீக்கிக் கொஞ்சும் பீட்ஸ் தெரபி!

 

 
Foot-Massage

 

அலுவலகத்தில் இருந்து அலுத்துக் கலைத்து போய் எப்போதடா வீட்டுக்குப் போய்ச் சேரலாம் என்று ஆவலோடு பேருந்து நிறுத்தம் வருகிறீர்கள், நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருக்கும் மழைக்கால ஈசல் போன்ற பெருங்கூட்டத்தை பார்த்ததும் வீட்டுக்குப் போகும் ஆவலையும் மீறிக் கொண்டு கால் மூட்டுகளும், பாதங்களும் ஐயோ! இத்தனை கூட்டமா உட்கார கொஞ்சம் இடம் கிடைத்தால் தேவலாம் என்று கெஞ்ச ஆரம்பித்து விடுகின்றன.

எப்போதாவாது உடனே சீட் கிடைத்து உட்காரப் போனாலும் கூட  பக்கத்திலேயே தள்ளாத வயதில் ஒரு பாட்டி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தால் இரக்க சுபாவிகள் நாம் மனிதாபிமானத்தைப் பற்றியெல்லாம் யோசித்து ஐயோ பாவம்! என்று அவர்களை உட்கார வைத்து விட்டு நின்று கொண்டே வீடு வந்து சேர வேண்டியதாகி விடுகிறது. எப்படியோ பாதங்களின் கெஞ்சல் ஓய்வதே இல்லை .
 
ஒரு வழியாக வீடு வந்து சேர்ந்த பின்னும் கூட பெரும்பாலும் என்ன செய்கிறோம் ?
 
அப்படியே கொஞ்ச நேரம் காலாற உட்காருவோம். பிறகு இருக்கவே இருக்கிறது டின்னர் தயாரித்தல், சாப்பிடுதல், பத்துப்பாத்திரம் தேய்த்துக் கழுவுதல், படுக்கைக்கு ஆயத்தமாகுதல் என்று அப்புறமும் நித்ய கடமைகள் காத்திருக்கின்றன. இதில் எங்கிருந்து பாதங்களின் கெஞ்சல் காதில் விழப் போகிறது. ஆனால் மனதிற்குத் தெரியும், அது அதன் பாட்டில் கால் வலிக்கிறது, கால் வலிக்கிறது கொஞ்சம் ஆயின்ட்மென்ட் தடவேன், கொஞ்சம் வெந்நீரில் காலை முக்கியெடுத்து மசாஜ் செய்து கொள்ளேன், என்று முணுமுணுத்துக் கொண்டே இருக்கும், நாம் அதை காதில் போட்டுக் கொள்ளாமல் நமது வேலைகளைத் தொடர்ந்து கொண்டிருப்போம். 

இதனால் என்னவாகிறது?!  

இந்நிலை நீடித்தால் ஒருநாள் ஆர்த்தரைட்டிஸில் கொண்டு போய் தள்ளும். 

இது தேவையா? அவ்வப்போது செய்ய வேண்டிய சின்ன சின்ன பயிற்சிகளை செய்தாலே போதும் கால் பாதங்கள் பெருமளவில் வலியிலிருந்து தப்பலாம்.
 
மூட்டு வலி மற்றும் பாதங்களின் சோர்வைப் போக்க வெறுமே காலாற நீட்டி நிமிர்ந்து படுத்து ஓய்வெடுத்தால் மட்டுமே போதாது. அதற்கென்று தனியான பிரத்யேக கவனிப்புகள் தேவைப்படுகின்றன. ஸ்பா போன்ற காஸ்ட்லியான மசாஜ் சென்ட்டர்களுக்குச் செல்லும் அவசியம் இன்றி எளிதாக அலுவலகம் போய் விட்டு வந்து வீட்டிலேயே நாம் செய்து கொள்ளக் கொள்ளக் கூடிய வகையில் மிக எளிமையான நிவாரணமுறைகள் மூன்றை இந்த இதழில் பார்ப்போம்.
 
1 .பாதங்களுக்கு டிசென்டிங் (decending ) முறையில்  மிதமான அழுத்தத்தில் மசாஜ்...

000_decending_masage.jpeg


 
இரண்டு பாதங்களையும் தொடர்ந்து வளைத்து  நிமிர்த்தி வளைத்து நிமிர்த்தி இயங்க விடுங்கள், பிறகு மருத்துவர்கள் பரிந்துரைத்த தரமான பாத மசாஜ் கிரீம்களில் ஏதாவதொன்றை உபயோகித்து ஒவ்வொரு பாதமாக... பாத விளிம்புகளில் தொடங்கி பாதங்களின் கணுக்கால் வளைவுகள் வரை இதமாக கீழிருந்து மேலாக அழுத்தி அழுத்தி மசாஜ் செய்ய ஆரம்பியுங்கள், இந்த மசாஜ் பத்து நிமிடங்களுக்கு அழுத்தத்தை கூட்டி குறைத்து தொடரட்டும், பத்து நிமிடங்களின் முடிவில் மெதுவாக இதமாக எல்லா விரல்களையும் இழுத்து சொடக்கெடுத்து மசாஜின் இறுதிக் கட்டம் சுண்டு விரலில் வந்து முடியட்டும். இந்த மசாஜ் சோர்வான பாதங்களின் வலியைப் போக்கி நமது சுறு சுறுப்பை மீட்டெடுத்து  குழந்தைகளின் மாலைப்பொழுது விளையாட்டு நேரங்கள் வீணாகாமல் நம்மை அவர்களோடு உற்சாகமாகப் பங்கேற்க வழி செய்யும் .
 
ப்ரூ காப்பி விளம்பரம் ஒன்று பார்த்திருப்பீர்கள். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் கார் ரிப்பேர் ஆகி விட, நடந்தே  வீடு வந்து சேர்ந்தேன் என்று சொல்லி விட்டு மனைவி சோபாவில் அலுத்துப் போய் கால்களை மோடாவில் நீட்டிக் கொண்டு உட்கார்ந்து கண்களை மூடிக் கொள்வாள். அப்போது ப்ரூ அருந்திக் கொண்டிருக்கும் கணவன் அந்த காப்பியின் இதமான சுவையில் தன் மனைவியின் மீது காதல் பொங்கி வழிய அவளது பாதங்களை ஆதரவாக பிடித்து விடத் தொடங்குவான். பாதங்களை உள்ளார்ந்த அன்போடு இதமாகப் பிடித்து விடுவதும் மசாஜ் தானே! அதிலும் பாதங்களை பிடித்து விடுவது கணவன் என்கையில் மனைவிகளுக்கு வலி பஞ்சாய் பறந்து போகாதோ!

இப்படியான பொன்னான தருணங்களை மீட்டெடுக்க எந்தத் தம்பதிகளுக்கு தான் ஆசை இருக்காது?! ஆகவே கணவர்களே உங்களுக்கான அருமையான வாய்ப்பாக இந்த பாத மசாஜ் நேரங்களைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் .
 
2. பீட்ஸ் தெரபி...

beads_masage_for_foot.jpg

 


 
தனக்குத் தானே பாதங்களை மசாஜ் செய்து கொள்ளும் பொறுமை இல்லாதவர்கள் இரண்டாவது வகை நிவாரணமான இந்த பீட்ஸ் தெரபியை பயன்படுத்தி  தங்களது ஐயோ! வலி... வலி என்று கதறும் பாதங்களின் கெஞ்சல்களில் இருந்து விடுபடலாம். இதை ‘கோலிக்குண்டு தெரபி’ என்றும் கூட சொல்லிக் கொள்ளலாம். கை நிறைய கோலிக் குண்டுகளை அள்ளி உங்கள் ஷூக்களில் நிரப்புங்கள். கோலிக்குண்டுகள் நிரப்பிய ஷூக்களை போட்டுக் கொண்டு உங்கள் அறையில் சிறிது நேரம் நடக்க ஆரம்பியுங்கள். கோலிக்குண்டுகளின் சத்தம் முதலில் கொஞ்சம் நாராசமாய் இருந்தாலும் கூட சிறிது சிறிதாக நடக்க நடக்க பாதங்களில் குண்டுகள் அழுத்த அழுத்த வலி போயே போச்!, போயிந்தே, இட்ஸ் கான் என்று பறந்து போகும் போது மிக இதமாக உணர்வீர்கள். தம்பதிகள் என்றால் ஒருவர் மாற்றி ஒருவர் காப்பி விளம்பரத்தில் காண்பிப்பதைப் போல பாதங்களை மசாஜ் செய்து கொள்ளலாம் பேச்சிலர்கள் என்ன செய்வார்களாம். அவர்களுக்கு இது தொல்லையில்லாத எளிய முறையினாலான நிவாரணம் தான் சரியானதாக இருக்கும் இல்லையா?!
 
3 .ஹாட் அண்ட் கோல்ட் வாட்டர் தெரபி...


 

000_hot_cold_water_masage.jpg


மேலே சொன்ன  இரண்டு நிவாரண முறைகளையும் பின்பற்ற நேரமில்லாதவர்கள் அல்லது சந்தர்ப்பம் வாய்க்காதவர்கள் இந்த மூன்றாவது முறையைப் பயன்படுத்தி வலி நீங்கப் பெறலாம். இது ரொம்ப சிம்பிள் மெத்தட் இரண்டு வாளிகளில் ஒன்றில் குளிர் நீர் ஒன்றில் இளஞ் சூடான நீர் என்று பாதங்கள் மூழ்கும் அளவில் நீரால் நிரப்புங்கள். இரண்டு வாளிகளிலும் பாதங்களை மாற்றி மாற்றி குறிப்பிட்ட இடைவெளியில் பாதங்களை அமிழ்த்தி வைத்துப் பிறகு எடுங்கள். இந்த முறையை பத்து நிமிடங்களுக்கு தொடர்ந்தார் போல செய்யுங்கள். இந்த நிவாரண முறையும் மிக எளிமையானது என்பதோடு வலியில் இருந்து விடுதலையும் அளிக்கக் கூடியது. இளஞ் சூடான நீரில் பாதங்களின் வலியைப் போக்க சிலர் உப்பை கூட கலப்பார்கள்.

இந்த மூன்று நிவாரண முறைகளும் கெஞ்சும் பாதங்களை எளிமையாகக் கொஞ்சிக் கெஞ்சி  சமாதானப்படுத்தும் முழுமையான நிவாரண முறைகளாகும். இந்த முறைகளைப் பின்பற்றுவதால் எதிர்மறை பக்க விளைவுகள் எதுவும் வருவதில்லை. பாதுகாப்பான பயனுள்ள முறைகள் என்பதால் தொடர்ந்தும் பின்பற்றலாம். இதன் மூலம் பல நாட்கள் சோர்வினாலும் அலுப்பினாலும் விட்டுப் போய் கிடப்பில் போட்டிருந்த குழந்தைகளுடனான மாலை விளையாட்டு நேரங்களை மீட்டெடுப்பதோடு, பெட் அனிமல் வளர்ப்பவர்கள் எனில் உங்கள் வளர்ப்புப் பிராணிகளுக்கு ஒரு அருமையான மாலை நேர வாக்கிங்கைப் பரிசாக்கி அவற்றையும் சந்தோசப் படுத்தி நாமும் வலி நீங்கி நமது மாலை நேரங்களை உற்சாகமாகக் கழிக்கலாம். சரிதானே!

http://www.dinamani.com/health/health-news/2018/mar/28/beads-therapy-for-foot-to-reduce-pain-2889094--2.html

Link to comment
Share on other sites

மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..

 
அ-அ+

முக்கியத்துவம் நிறைந்த மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம்.

 
 
 
 
மார்பகங்கள்: தவறான நம்பிக்கைகளும்.. மருத்துவ உண்மைகளும்..
 
“மார்பக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு குறித்து குழந்தைகளுக்கு தாய் சொல்லி கொடுக்க வேண்டும்”

இயற்கையின் படைப்பில் பெண்கள் அதிசயமானவர்கள் மட்டுமல்ல, அபூர்வமானவர்களும்கூட! இனப் பெருக்கத்தின் மையமான படைப்பின் ரகசியத்தை பெண்ணின் கருப்பையிலும், அவள் உருவாக்கி உலகிற்குத் தரும் புதிய சந்ததிக்கான உணவை அவள் மார்பகத்திலும் இயற்கை கொடையாக அளித்திருக்கிறது. பெண்ணின் இந்த இரண்டு உறுப்புகளும் மனித இன சுழற்சிக்கு அச்சாணி போன்றவை. கருப்பை உடலுக்கு உள்ளே உள்ள உறுப்பாக அமைந்துவிட்டதால் அதன் தோற்றமோ, இயக்கமோ யாருடைய கவனத்தையும் ஈர்ப்பதில்லை. ஆனால் மார்பகங்கள் அப்படியல்ல, வெளி உறுப்பாகிவிட்டன. அதனால் அவை பெண்ணின் உடல் அமைப்புக்கும்- தோற்றத்திற்கும் முக்கிய காரணமாகிவிட்டன.

முக்கியத்துவம் நிறைந்த மார்பகங்கள் பற்றிய விஞ்ஞானபூர்வமான உண்மைகளை பெண்களும், பெற்றோரும், சமூகமும் உணர்ந்து, விழிப்படையவேண்டியது மிக அவசியம். பெண் குழந்தை, சிறுமியாகி பத்து வயதைத் தொடும்போது மார்பகங்கள் வளருவதற்கான அறிகுறிதென்படும். 15 வயதுக்குள் பெரும்பாலான சிறுமிகள் பூப்படைந்து விடுவார்கள். அப்போது மார்பகங்கள் ஓரளவு வளர்ச்சியடைந்துவிடும். சினைப்பையில் இருந்து முட்டை வளர்ந்து, முதிர்ந்து, வெளியாகுவதே பூப்படைதலின் அடிப்படை. அப்போது ஈஸ்ட்ரோஜன் எனப்படும் பெண்மைக்கான ஹார்மோன் சுரக்கத் தொடங்கிவிடும். அந்த ஹார்மோனின் தூண்டுதலே மார்பகத்தை மெல்ல மெல்ல வளர்க்கிறது.

மார்பகங்கள் வளர்ச்சியடையும் காலகட்டம், அந்த மாற்றத்தை சந்திக்கும் எல்லா பெண் களிடமும் பல்வேறுவிதமான குழப்பங்களை உருவாக்குவதோடு கேள்விகளையும் எழுப்பும். அப்போது அவர்கள் பெரும்பாலும் சக வயது தோழிகளிடமே அது பற்றி பேசுவார்கள். அவர்கள் தங்களுக்கு தெரிந்ததை உண்மைபோல் சொல்லிவிடுவதால், அந்த பதில் சம்பந்தப்பட்ட பெண்ணை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும். இந்த குழப்பத்தை தீர்க்க, தாயார் தாமாகவே முன்வரவேண்டும். மகள் 15 வயதை எட்டும்போது அவளிடம் வெளிப்படையாக மார்பகங்களின் வளர்ச்சி பற்றி பேசவேண்டும்.

ஒரு பெண் சிறுமியாக இருக்கும்போது, சிற்பங்கள் அனைத்திலும் பெண்களுக்கு வட்டவடிவமாக மார்பகங்களை வடித்திருப்பதை பார்த்திருப்பாள். தனக்கும் அப்படித்தான் அமையும் என்று எதிர்பார்ப்பாள். அப்படி தனக்கு அமையாதபோது அதை ஒரு குறையாக அவள் கருதுவாள். ஆனால் உடற்கூறு அடிப்படையில் பெண்களுக்கு வட்டவடிவ மார்பகம் அமைவதில்லை. உடலியல் அடிப்படையில் ‘டியர் டிராப்’ எனப்படும் கண்ணீர்த் துளி வடிவத்தில்தான் மார்பகங்கள் உருவாகும். இது மேலே இருந்து கீழ்நோக்கி சற்று சரிந்த நிலையில் காணப்படும். இந்த விஞ்ஞானபூர்வமான உண்மையை தாயார் எடுத்துச் சொல்லவேண்டும்.

அதுபோல் இரண்டு மார்பகங்களும் ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு கொண்டிருப்பதாக நினைத்து பெரும்பாலான பெண்கள் அதற்காக கவலைப்படுகிறார்கள். இதுவும் ஒரு தேவையற்ற கவலையே! மனித உடலில் கண், காது, கை போன்று இரண்டாக இருக்கும் எந்த உறுப்புகளும் துல்லியமாக ஒரே அளவில் இருக்காது. அதே போன்று மார்பகங்களிலும் லேசான வித்தியாசம் இருக்கவேசெய்யும். ஒன்றுக்கொன்று அதிக வித்தியாசம் இருந்தால் மட்டுமே அதை கவனத்தில்கொண்டு டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும் என்பதை தாய்மார்கள் வலியுறுத்த வேண்டும்.

201804020915271568_1_nere._L_styvpf.jpg

வளரிளம் பருவ பெண்கள் தற்போது பெரும்பாலும் உணவு முறையாலும், உடல் வியர்க்கும் அளவுக்கு விளையாடாததாலும் குண்டாக இருக்கிறார்கள். அவர்களது உடல் குண்டாகும்போது அதற்குதக்கபடி மார்பகங்களும் பெரிதாகும் என்ற உண்மையை அவர்களிடம் தாய்மார்கள் எடுத்துச்சொல்லி, முறையான உணவுப் பழக்கத்திற்கு உட்படுத்தவேண்டும். கிரீம்களை பயன்படுத்துவது, மசாஜ் செய்வது போன்றவை மூலம் மார்பகங்களின் அளவிலோ, நிலையிலோ எந்த மாற்றத்தையும் உருவாக்கமுடியாது என்பதையும் மகளுக்கு தெளிவாக தாய் புரியவைக்கவேண்டும். அதோடு மார்பகங்களின் முக்கியத்துவத்தையும், பெருமையையும் உணர்த்தி சரியான முறையில் பாதுகாக்கவும் சொல்லித்தர வேண்டும்.

பத்து வயதில் அரும்பத் தொடங்கும் மார்பகங்கள் 18 வயதில் முழு வளர்ச்சியை எட்டிவிடும். குழந்தைக்கு பால் புகட்டுவதற்கான முழுமையை அப்போதே எட்டிவிடும். ஆனால் உடல் எடைக்கு தக்கபடியும், கர்ப்பகாலம் போன்ற சூழ்நிலைக்கு தக்கபடியும் மார்பகங்களில் மாற்றங்கள் ஏற்படும். மார்பகங்கள் நுட்பமான கட்டமைப்பை கொண்டவை. அதில் 60 சதவீதம் அளவுக்கு கொழுப்பு அடங்கியிருக்கிறது. ஏராளமான பால் சுரப்பிகளும், பால் சுரப்பு குழாய்களும் அமைந்திருக்கின்றன. மூளையின் இயக்கம் மற்றும் தூண்டுதலால் பிரசவகாலத்தில் பால் மார்பகத்திலே உற்பத்தியாகி, காம்புகள் வழியாக குழந்தைக்கு உணவாகிறது.

மார்பகங்கள் குழந்தைகளுக்கு பால்புகட்டு வதற்காக படைக்கப்பட்டவை என்ற நிலை யையும் தாண்டி பெண்களின் கம்பீரத்தின் அடையாளமாகவும், தோற்றப்பொலிவுக்கு துணைபுரிவதாகவும், தன்னம்பிக்கைக்குரியதாகவும் காலத்தால் மாற்றப்பட்டிருக்கிறது. பெரிய மார்பகங்களை கொண்ட பெண்கள் தங்கள் தோற்றப்பொலிவுக்கு அது இடைஞ்சலாக இருப்பதாக கருதுகிறார்கள். அதை மற்றவர்கள் கிண்டலாக்கிவிடுவார்களோ என அஞ்சி சமூகத்தின் முன்னால் செல்லத் தயங்கி தங்களை தனிமைப்படுத்திக்கொள்கிறார்கள்.

அதனால் அவர்களது வளர்ச்சிக்கும், திறமைக்கும் தடைவிழுந்துவிடுகிறது. அந்த தடையால் அவர்கள் படித்த கல்விக்கு ஏற்ற பலனை அனுபவிக்க முடியாமல், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். இன்னொருபுறத்தில் அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களால் பெண்கள் பல்வேறு விதமான உடல் அவஸ்தைகளையும் எதிர்கொள்கிறார்கள். தோள்வலி, முதுகுவலி, கூன்விழுதல், மார்பகங்களின் அடியில் தொற்று ஏற்படுதல் போன்ற தொந்தரவுகள் அவர்களை கஷ்டப் படுத்துகின்றன.

அந்த கஷ்டங்களில் இருந்து விடுபட நவீன மருத்துவ சிகிச்சைகள் கைகொடுக்கின்றன. அளவுக்கு அதிகமான பெரிய மார்பகங்களை ஆபரேஷன் மூலம் சிறிதாக்கி அழகுபடுத்திவிடலாம். அதற்காக அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்பையும், பால் சுரப்பிகளையும் நீக்கம் செய்தாலே போதுமானது. மார்புகளை சிறிதாக்கும்போது ஆபரேஷன் செய்த கோடு தெரியும்.

201804020915271568_2_fact._L_styvpf.jpg

மார்பகங்களை பெரிதாக்க, அதன் கீழ்ப் பகுதியில் கீறி, உள்ளே சிலிக்கான் இணைப்பு கொடுக்கப்படுகிறது. அதனால் தழும்பு எதுவும் வெளியே தெரியாது. மேற்கத்திய நாடுகளில் மார்பகத்தை பெரிதாக்கும் சிகிச்சையை பெறுபவர்களே அதிகம். ஆனால் இந்தியாவில் மார்பகத்தை சிறிதாக்க விரும்புபவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

மார்பகத்தை சிறிதாக்கும்போது வடு தெரியும் என்பதால் திருமணத்திற்கு பின்பு கணவர் ஒப்புதலோடு இந்த அழகு சிகிச்சையை பெண்கள் மேற்கொள்வதே சிறந்தது. முன்பு மார்பக அழகு சிகிச்சையில் பெண்கள் போதுமான விழிப்புணர்வு பெறவில்லை. அதனால் பயத்தோடும், பதற்றத் தோடும் அணுகினார்கள். இப்போது தங்கள் உடலுக்கும், மனதுக்கும், சவுகரியத்திற்கும் எது எதையோ அதை தேர்ந்தெடுத்து செய்வதில் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.

மார்பகத்தை பெரியதாக்கும்போது புற்றுநோய் ஏற் படுவதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால் ஆராய்ச்சிகளில் அப்படி எதுவும் உறுதி செய்யப்படவில்லை. மார்பகத்திற்குள் பாலியூரித்தீன் அல்லது சிலிக்கான் ஜெல்லில் உருவான வழுவழுப்பான பொருளை இணைக்கிறோம். நமது உடலுக்குள் எந்த செயற்கை பொருளை இணைத்தாலும் தொற்று ஏற்படும்.

அதனால் மிகுந்த கவனத்தோடு இதனை உள்ளே செலுத்தவேண்டும். பொருத்தி இரண்டு வருடங்களான பின்பு அந்த இணைப்பின் மீது ஒருவித கோட்டிங் உருவாகும். ஒரு சிலருக்கு அந்த கோட்டிங் உருவாகி, சுருங்கத் தொடங்கினால் மார்பகம் வலிக்கத் தொடங்கும். அப்போது மீண்டும் ஆபரேஷன் செய்து அதை நீக்கிவிட்டு, 4 மாதங்கள் கழித்து மீண்டும் இணைக்க வேண்டும். இத்தகைய பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க, அவர்கள் உடலிலே அதிகமாக இருக்கும் கொழுப்பை எடுத்து, இணைத்தும் மார்பகங்களை பெரிதாக்கலாம். ஊசி மருந்து மூலம் மார்பகங்களை பெரிதாக்குவது என்பது நல்ல பலன்களை ஏற்படுத்தாது.

பெண்களின் மார்பகங்கள் அவர்களது மனநிலையோடும், உடல்நிலையோடும், தன்னம்பிக்கையோடும் தொடர்புடையது என்பதால், அது பற்றிய பாலியல் கல்வி சார்ந்த விழிப் புணர்வை பெற்றோரும், கல்வி நிலையங்களும் வழங்கவேண்டும். நாங்கள் ஒரு குழுவாக இணைந்து கல்லூரி மாணவிகளிடம் இதுபற்றிய விழிப் புணர்வை உருவாக்கி வருகிறோம். அவர் களுக்கு உடலியலின் அடிப்படைக்கூறு களையும், அதன் விஞ்ஞான உண்மைகளையும் எடுத்துக்கூறு கிறோம். அதற்கு நல்ல பலன் கிடைத்துக்கொண்டிருக்கிறது.

கட்டுரை:

டாக்டர் ஜெயந்தி ரவீந்திரன்,

MS., DNB., MRCS (காஸ்மெட்டிக் சர்ஜன்), சென்னை.

https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/04/02091527/1154489/Breasts-medical-facts.vpf

Link to comment
Share on other sites

கர்ப்பகால முதுகுவலிக்கு ஹார்மோன் மாறுதல்கள் காரணமா?

 
அ-அ+

கர்ப்ப காலத்தில் ஹார்மோன் மாறுதல்களும் முதுகுவலியை அதிகரிக்கலாம். முதுகு வலியை சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே குறைத்துக் கொள்ளலாம்.

 
 
 
 
கர்ப்பகால முதுகுவலிக்கு ஹார்மோன் மாறுதல்கள் காரணமா?
 
கருவிலுள்ள குழந்தையின் வளர்ச்சி அதிகரிப்பதால் வயிற்றின் அழுத்தம் தாங்காமல், கர்ப்பிணிகளுக்கு உட்கார்வது, நிற்பது, நடப்பது என எல்லாமே சிரமமாகும். மல்லாந்தோ ஒருக்களித்தோ படுக்க வேண்டியிருப்பதால் முதுகுப் பகுதிக்கும் கூடுதல் அழுத்தம் உண்டாகி வலி ஏற்படும். தவிர ஹார்மோன் மாறுதல்களும் கர்ப்பகால முதுகுவலியை அதிகரிக்கலாம். ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகளைச் சுமக்கும் பெண்களுக்கு இந்த வலி சற்றே அதிகமாக இருக்கும்.

சகித்துக் கொள்ளும்படியான வலி என்றால் பயப்படத் தேவையில்லை. சின்னச்சின்ன விஷயங்களின் மூலமே வலியைக் குறைத்துக் கொள்ளலாம். அப்படிச் சில வழிகள் இங்கே…

* இரவில் வெதுவெதுப்பான நீரில் குளித்துவிட்டுத் தூங்கச்செல்வது வலியிலிருந்து ஓரளவு நிவாரணம் தரும். தவிர ஆப்பு வடிவிலான தலையணையை வயிற்றுப் பகுதிக்கு இதமாக வைத்தபடி ஒருக்களித்துப் படுக்கலாம்.

* கர்ப்பமாக இருக்கும்போது நீங்கள் தூக்குகிற பொருள்களில் கவனம் இருக்கட்டும். அதிக கனமான பொருள்களைத் தூக்க முயற்சி செய்ய வேண்டாம். கீழே உள்ள பொருள்களைத் தூக்க வேண்டியிருந்தால், அப்படியே முதுகை வளைத்துக் குனிந்து எடுக்காமல், மண்டியிட்டு உட்கார்ந்து, அந்தப் பொருளை மார்போடு அணைத்துத் தூக்குவது முதுகுவலியைத் தவிர்க்கும்.

* அடிமுதுகுப் பகுதிக்கு அதிக அழுத்தமில்லாத மிதமான மசாஜ் செய்வது வலியின் தீவிரம் குறைக்கும். மசாஜ் செய்கிறபோது சூடான எண்ணெய் மற்றும் அரோமா ஆயில்களை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

* நீண்ட நேரம் நின்றபடிச் செய்கிற வேலைகளைத் தவிர்க்கவும். அதைத் தவிர்க்க முடியாதபோது, ஒருகாலை சற்று உயர்த்தி ஸ்டூல் அல்லது உயரம் குறைவான பலகையின்மேல் வைத்துக் கொள்ளவும். உட்காரும்போதும் உங்கள் இருக்கையில் முதுகு முழுவதுமாகச் சாய்ந்திருக்கும்படிப் பார்த்துக்கொள்ளவும். முதுகுப் பகுதிக்குத் தலையணை வைத்தபடியும் உட்காரலாம்.

201804040909315426_1_pregnancy-back-pain._L_styvpf.jpg

* மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கருவிலுள்ள குழந்தையின் ஆரோக்கியத்தைத் தெரிந்துகொண்டு, எளிமையான யோகா பயிற்சிகளைச் செய்யலாம். இன்டர்நெட்டைப் பார்த்துச் செய்வதோ அடுத்தவருக்குப் பலனளித்ததாகச் சொல்லப்படுவதைச் செய்வதோ கூடாது. கர்ப்பிணியின் தனிப் பட்ட உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கேற்ற சரியான பயிற்சிகளை மருத்துவரால் மட்டுமே பரிந்துரைக்க முடியும்.

* குதிகால் உயரக் காலணிகளைக் கர்ப்பகாலம் முழுவதிலுமே தவிர்க்கவும். வயிறு பெரிதாகும் போது உடலின் பேலன்ஸ் மாறும். ஹை ஹீல்ஸ் காலணிகள் அந்த பேலன்ஸை மேலும் மாற்றி, முதுகுவலிக்குக் காரணமாகும். தடுக்கி விழவும் கால்கள் இடறவும் வாய்ப்புகளை அதிகரிக்கும்.

அலட்சியப்படுத்தக் கூடாத அறிகுறிகள்:

* வலி நாளுக்கு நாள் அதிகரித்தால்… வலியின் நேரம் நீடித்தால்… உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவினால்…

* முதுகுவலியுடன் காய்ச்சல், வாந்தி இருந்தால்… ரத்தப்போக்கு மற்றும் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் இருந்தால்.

* ஒரு காலில் உணர்ச்சியின்றிப் போனால்.

* அந்தரங்க உறுப்புகளில் உணர்ச்சியில்லாத நிலை ஏற்பட்டால்.

* கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் வலியே இல்லாமல், 7-வது மாதத்திலிருந்து திடீரென முதுகுவலி அதிகரித்தால் அது குறைப்பிரசவத் துக்கான அறிகுறியாக இருக்கலாம்.

* ஒருபக்க முதுகில் மட்டுமோ, விலா எலும்பு களுக்கு அடியிலோ வலி, கூடவே சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல், காய்ச்சல் போன்ற வையும் இருந்தால் அது சிறுநீரகத் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/04/04090931/1154933/hormonal-changes-in-pregnancy-back-pain.vpf

 

 

அப்பென்டிசைட்டிஸ் எனும் வயிற்று வலி

 
அ-அ+

அப்பென்டிசைட்டிஸ் என்பது என்ன, அது யாருக்கெல்லாம் வரும், இதற்கு சிகிச்சை என்ன, அதன் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
அப்பென்டிசைட்டிஸ் எனும் வயிற்று வலி
 
வயிற்றில் வலி வந்ததும், அது வாயுக்கோளாறாக இருக்குமா, இல்லையெனில் அல்சர் பிரச்சினையா என்பதே பெரும்பாலானோரின் தீர்க்கமான முடிவாக இருந்து வருகிறது. ஆனால், வயிற்றில் ஏற்படும் வலிக்கு வெறும் வாயு மட்டுமே பிரச்சினை, அல்சர் மட்டுமே காரணம் என்று நினைக்க வேண்டாம். அது சிறுநீரக கல், ஹெர்னியா, பித்தப்பை கல், அப்பென்டிசைட்டிஸ், குடல் அழற்சி நோய்கள் என பல்வேறு நோய் தாக்குதலின் அறிகுறிகளாக கூட இருக்கலாம் என்கிறார்கள், மருத்துவர்கள். குறிப்பாக, அப்பென்டிசைட்டிசுக்கான அறிகுறிகள் பற்றி தெளிவாகப் புரிந்து கொள்ள முடிவதில்லை.

சிறுநீரக கல்லின் அறிகுறிகளும், அப்பென்டிசைட்டிஸ் அறிகுறிகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். வேறுபாடுகள் பலருக்கும் தெரிவதில்லை. அப்பென்டிசைட்டிஸ் என்பது என்ன, அது யாருக்கெல்லாம் வரும், அதன் அறிகுறிகள் என்ன என்பதை பார்க்கலாம்.

அடிவயிற்றின் வலது பக்கத்தில், இடுப்பு எலும்புக்கு மேலே, சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் இடத்தில், சிறிய விரல் அளவு இருக்கும் ஓர் உறுப்புக்கு குடல்வால் என்று பெயர். இதன் நீளம் சுமார் 7 செ.மீ. முதல் 10 செ.மீ. வரை இருக்கும். இதில் ஏற்படும் நோய் தொற்றினால் 3 முதல் 4 செ.மீ. அளவுக்கு உருவாகும் தேவையில்லாத கட்டி அல்லது அதில் ஏற்படும் கல் ஆகியவற்றுக்கு அப்பென்டிசைட்டிஸ் என்று பெயர்.

201804040808455647_1_appendicitis._L_styvpf.jpg

உடலுக்குள் நுழையும் என்டெரோக்காக்கஸ், ஸ்ட்ரெப்டோகாக்கஸ், எஸ்செரிச்சியா கோலி போன்ற பாக்டீரியாக்கள் சிறுகுடலை அடையும்போது, அவை ரத்தத்தில் கலந்து குடல்வாலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தும். இதன் விளைவால் குடல்வாலில் அழற்சி உண்டாகிறது. இது எந்த வயதினருக்கும் வரலாம். குறிப்பாக 8 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு, காய்ச்சல், மலச்சிக்கல், பசியின்மை, தொப்புளைச் சுற்றி அல்லது வயிற்றின் வலது கைப்பக்கத்தின் அடிப்பாகத்தில் கடுமையான வலி போன்றவை ஏற்படும். மேலும் அந்த பகுதியை மென்மையாக அழுத்தும்போதோ, ஆழமாக சுவாசிக்கும்போதோ, அசையும்போதோ வலி அதிகரித்தல், இருமல் அல்லது தும்மல் வரும்போது வயிற்றில் வலி ஏற்படுதல் ஆகியன அப்பென்டிசைட்டிஸ் ஏற்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும். கடுமையான வயிற்று வலியுடன் அடிக்கடி வயிற்றுப்பிடிப்பும் ஏற்படுமாயின், மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

மருத்துவம் செய்யாமல் இருந்தால் நோய்த்தொற்று பரவி, வயிற்றுப்பை அழற்சியை ஏற்படுத்தும். இந்த நிலையிலும் மருத்துவம் செய்யாமல் விட்டால், நோயின் கடுமை அதிகமாகி, குடல் வால் வெடித்து, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். அப்பென்டிசைட்டிஸ் பிரச்சினைக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலமும், சுகாதாரமான உணவை சாப்பிடுவதன் மூலமும் அப்பென்டிசைட்டிஸ் வராமல் தடுத்துவிடலாம் என சொல்லப்படுகிறது. ஆனால், அது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/04080845/1154918/appendicitis-stomach-pain.vpf

Link to comment
Share on other sites

இதயநோயை கட்டுபடுத்தும் முறைகள்

 

 
 

நெஞ்சுக்கூட்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் விதமே, இதயத்தின் முக்கியத்துவத்தை காட்டும். இதயநோயை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி பார்க்கலாம்.

 
 
 
 
இதயநோயை கட்டுபடுத்தும் முறைகள்
 
கீழ்த்திசை மருத்துவ சிந்தாந்தப்படி, உள்ளுணர்வின் ஆன்மாவின் இருப்பிடம் மூளை அல்ல! இதயமே!! நெஞ்சுக்கூட்டுக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் விதமே, இதயத்தின் முக்கியத்துவத்தை காட்டும்.

ஒரு மனிதன் தனது இதயத்தில் என்ன நினைக்கிறானோ, அதுவே அவனது சொரூபம், இயல்பு நிலை என்று ஆங்கிலப் பழமொழி ஒன்று உண்டு. நமது உபநிஷத்துக்களும் நாம் நமது மனதில் கொண்டுள்ள உணர்வுகளும், எண்ணங்களுமே உண்மையில் நாம் யார் என்பதைக் காட்டும் அளவுகோல்! என்று கூறுகின்றன.

மூளையால் நாம் சிந்திப்பது நமக்கு அவ்வப்போது தோன்றும் மேலோட்டமான படிவங்களே.

தயநோய்கள்

மனிதன் ஆழத்தில் இருக்கும் நமது சுயம் சார்ந்த பதிவுகள், உணர்வுகள் மற்றும் உள்ளுணர்வு ஆகியவற்றின் பிரதிபலிப்பாகவே உள்ளன.  புறஉலகில் லோகாயத வாழ்வில் வெற்றி பெற்றவர்கள் கூட மனதில் நொந்து சிதைந்து போய் இருக்கிறார்கள். சாதனைகளை எட்ட, வெற்றி பெற இதயத்தைப் புறக்கணித்தால் அது தோற்றுவிடுகிறது.

நமது கலாச்சாரம் இதயத்தை ஆன்ம முன்னேற்றத்திற்கான தளமாக கொள்கிறது. தனி மனிதனது உணர்வுகள், சமுதாயம் சார்ந்த நிலைப்பாடுகள் ஆகியவற்றுக்கு தகுந்த இடம் தரவில்லை என்றே சொல்லலாம்.

வேதத்தின் அங்கங்களான ஆயுர்வேதம், யோகா, நன்மைக்கான தந்திரம் ஆகியவை இதயத்தை மாறுபட்ட, வேறுபட்ட சக்திப்பாதைகள், நாடிகள், மற்றும் பிற உடலியல் பாதைகள் ஆகியன சந்திக்கும், கடந்து போகும், ஊடறுக்கும் சக்திப்பூர்வமான வலைப்பின்னலாகச் சொல்கின்றன.

ஒரு வண்டி சக்கரத்தின் மையம் போல இதயமும் சுற்றியிருக்கும் கம்பிகளைப்போல வேறுவேறு பாதைகளும் உறுப்புக்களும் இருக்கின்றன. சக்திப்பாதைகள் இதயத்திலேயே இருக்கலாம். அங்கிருந்து தொடங்கலாம். அல்லது அவ்வழியே பயணிக்கலாம். ஆகவே இதயம் இவற்றை பாதிக்கலாம் அல்லது இவை இதயத்தை பாதிக்கலாம். இவ்வாறு இப்பாதைகளின் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது.

உடலானது தோல் முதல் எலும்பு, மஜ்ஜை வரையிலான பாகங்களால் ஆன உருவம் ஆக இருந்தாலும் அது சூட்சுமான ஸ்தூலமான சக்திகளின் தொகுப்பே ஆகும்! உடலின் உடல் சார்ந்த மனம் சார்ந்த எல்லா இயக்கங்களையும் நிர்வகிக்கும் கட்டுப்படுத்தும் திறன் இச்சக்திகளுக்கே உள்ளது. இவை சில சக்தி மையங்கள் அதாவது சக்கரங்கள் மூலம் இயக்கப்படுகின்றன. இதயம் உடல் முழுவதும் உள்ள திசுக்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் போஷாக்கைக்கொண்டு சேர்க்கிறது என்பதற்காகப் பால் சூட்சும உடலில் அதன் பங்களிப்பை அறிந்தால் மட்டுமே இதயத்தைப்பற்றி முழுமையாக அறிய முடியும்.

உடல், இதயம், சக்கரங்களின் இயக்கம், செயல்பாடுகள் ஆகியன கீழ்கண்டவாறு விளக்கப்படுகிறது.

மனித உடலுக்கு 72000 நுண்ணிய நரம்பு களைக் கொண்ட நரம்பு மண்டலம் (மூளையிலிருந்து, முதுகுத்தண்டு முடிய) சக்தியை தரும் தொழிற் கூடமாக திகழ்கிறது. இதன் முக்கிய இயக்குவிசைகள் ஆறுசக்கரங்களில் குவிகின்றன.

கண், காது , மூக்கு, நாக்கு, தோல் என்னும் ஐம்பொறிகள் வழியே பிரகாசமான சக்தி அலைகளை அனுப்பும் பெற்றுக்கொள்ளும் உணர்வுப்பூர்வமான அமைப்பாக மனம் விளங்குகிறது.

மனித உடலாகிய தொழிற்கூடத்தை இயக்கும் உயிர் முறைக்கணினி ஆக முதுகுத்தண்டு விளங்குகிறது. ஆறு சக்கரங்களும், தத்தமக்கிடையேயும் செயல்படும், சூட்சுமமான கோளங்களாகும். அவை அவரவரது ஜீன்களின் படி ஆளப்படுகின்றன.

நாடிகளும் உடலிலுள்ள பிராணன், அபானன், வியானன், சமானன், உதானன் என்னும் ஐந்து உயிர் வாயுக்களும் இயைந்து முதுகுத்தண்டில் ஒரு ஒளி அமைப்பை ஏற்படுத்துகின்றன!

இந்த சூட்சும ஒளி அமைப்பு ஆறு சக்கரங்களின் வழியாக நிலைபடுத்தப்பட்டு மின்காந்த சக்தியைக்கொண்ட அதிர்வுகளைக்கொண்ட அமைப்பை பெற்று இருக்கிறது.

உள்ளங்களிலும், பாதங்களிலும், உச்சியிலும், நாபிக்குக்கீழேயும் இதன் அதிர்வலைப் புள்ளிகளின் கட்டுப்பாட்டு நிலைகள் உள்ளன. டி.என்.ஏ. எனப்படும் மனிதத்திசு/செல்லின் அடிப்படையான ஜீன் தான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவதாக தெரிந்தாலும் உண்மையில் திரைக்கு பின்னிருந்து இயக்கும் ஆறு சக்கரங்களே உண்மையான கட்டுப்பாட்டு நிலையங்கள்!

மனித உடலானது உள்ளுணர்வால் ஆளப்படுகின்ற நல்ல கட்டமைப்புடன் கூடிய வளர்சிதை மாற்றங்களை உடைய ஸ்தூல உடலையும் கொண்ட, சூட்சுமமான மின்காந்த வலைப்பின்னலால் ஆன சூட்சும உடலையும் கொண்ட மின்காந்த மின்கலன் அமைப்பாகத் திகழ்கிறது.

இதற்கு மேல் சஹஸ்ரார சக்கரம் மத்தியக் கட்டுப்பாட்டு அறையாகத் திகழ்கிறது. இது ஏழாவது சக்கரமாக கொள்ளப்படுகிறது. இந்த சக்தி நிலைகளுக்கு அப்பால் 108 கிளை நிலைகள் மர்மஸ்தானங்கள் இருக்கின்றன.

இதயத்தில் இருக்கும் 3 நாடிகள் மனோவாகநாடி, ப்ராணவாக நாடி, ரஸவாக நாடி, என்பன ஆகும். இதில் மனோவாக நாடி என்பது மனதிற்கானது இது உடல் முழுதும் வியாபித்திருக்கிறது. சிந்தனை, ஞாபக சக்தி, தகவல் தொடர்பு, உணர்வுகள், பகுத்தறிவு, ஆகியவற்றுக்கு காரணமானது.

பிராணவாக நாடி என்பது சுவாசத்திற்குப் பொறுப்பானது ரஸவாக நாடி என்பது நிணம் மற்றும் பிளாஸ் மாவுக்கானது இது உணர்வின் சாரம் ஒவ்வொரு திசு செல்லுக்கும் போய்சேரக் காரணமாகிறது.

201804051407162986_1_Heart-disease._L_styvpf.jpg

பிற 10 நாடிகள்

மேற்சொன்ன 3 நாடிகள் தவிர வேறு 10 நாடிகளுக்கம் அடிப்படையான இடமாக இதயம் இருக்கிறது. இந்த 10 நாடிகளும் மேற்சொன்ன 3 நாடிகளுடன் நெருங்கிய தொடர்பு உடையவை.

இப்பத்து நாடிகளில் 3 நாடிகள் முக்கியமானவை இவை முதுகெழும்பின் அடியிலிருந்து தலை உச்சி வரை செல்கின்றன. இவை மூன்றும் மீதி 7 நாடிகளையும் ஊடறுத்துச் செல்கின்றன. இட, பிங்கள, சூஷ்மன, நாடிகள் என்று சொல்லப்படும் இவை பிராணவாயுவினை எடுத்துச்செல்கின்றன.

இதயச் சக்கரம்

பத்து நாடிகளும் இதயத்தை பிற சக்கரங்களுடன் இணைக்கின்றன. இதயச்சக்கரம் உள், வெளி உலகங்களை ஊடறுத்துச் செல்வதாகவும், தெய்வசக்தி உடனான பாலமாகவும் திகழ்கிறது.

உறவுகளுடனான தொடர்பு பிறர் மீது அக்கறை கொள்ளுதல் கிரக்கம், கருணை ஆகியவற்றுடன் தொடர்புடையது.

சுயபச்சாதாபம், தனிமை, வருத்தம், துக்கம் ஆகிய இதயத்தை சுற்றிச்சேருகின்ற சேருகின்ற உணர்வுகளின் முதன்மையான மையமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு சக்கரமும், பற்பல சக்திப்பாதைகளை சந்திக்கும் ஊடறுக்கும் விதத்தில் இருந்தாலும் இதயச்சக்கரம் இவற்றோடு கூட வேறு பல சூட்சுமமான பாதைகள் குவியும் இடமாகத் திகழ்வதால் அவை இதயத்தின் ஆரோக்கியத்தின் மீது ஆதிக்கம் செலுத்த நேர்கிறது.

உயிர்சக்தியான ஓஜஸ் இருக்குமிடம் இதயம் ஆகும். இதயத்தின்செயல்பாடுகள் உள்ளுணர்வு, மேலும் உயிர் ஆகியவற்றை ஓஜஸே நிலை நிறுத்துகிறது.
சரியான செரிமானம், திசுக்களுக்கு போய்சேரும் போஷாக்கு ஆகியவற்றின் இறுதி வெளிப்பாடு ஓஜஸ் ஆகும். ஆகவே ஓஜஸின் தரம்,குணம் ஆகியவை அக்னியின் பலம், பலவீனத்தைப் பொறுத்தே அமையும்.

ஆனால் மன அழுத்தம், உறவுகளுடன் உள்ள தொடர்பு வாழ்க்கைத்தரம், பழைய அடிபட்ட காயம், ஆகியவை காரணமாக ஓஜஸ் பாதிக்கப்படும் போது இதயத்தின் ஆரோக்கியமும் பாதிக்கிறது.

வாத, பித்த, கப தோஷங்கள்:

இதயம் ஓஜஸ் தவிர வாத, பித்த, கப தோஷங்களுக்கான முக்கிய இடமாகத் திகழ்கிறது. ஏதோ ஒரு அளவில் இந்த 3 தோஷங்களும், இதயத்தில் தங்கி இருக்கின்றன. ஆகவே இந்த 3 தோஷங்களின் நிலைப்பாடும் இதயத்தின் ஆரோக்கியத்தில் அதிக ஆதிக்கம் கொண்டுள்ளன. அது போலவே இதயத்தின் செயல்பாடுகள் உடல் முழுவதும் இத்தோஷங்களின் செயல்பாட்டில், நிலைப்பாட்டில் ஆதிக்கம் செலுத்தும்.

இது கானும் பார்த்தவரை இதயமானது வாத, பித்த, கபம் ஆகிய 3 தோஷங்கள் திசுக்களுக்கு போய் சேரும் போஷாக்கு உணவு முறை செரிமான அக்னி ஆகியவை உள்ளடங்கிய நிகழ்வுகள் உடல் முழுவதுமான பிராண வாயுவின் ஓட்டம், மனநலம் மற்றும் மனதின் நிலைப்பாடு உயர்சக்தியுடனான தொடர்பு அன்பு, துக்கம், சுயபச்சாதாபம் போன்ற உணர்வுகள்பலம், உறுதிப்பாடு ஆகியவற்றோடு ஒரு சேர நெருங்கிய தொடர்பு டையதாக இருக்கிறது.

இதய நலம் காப்பதில் ஆயுர்வேதத்தின் அணுகுமுறை:

ஆயுர்வேதம், உடல், மனம், ஆன்மா மூன்றும் ஒருங்கிணைந்த நிலையே மனிதனின் முழுமைநிலை எனக்கொள்கிறது. இம்மூன்றில் ஏதாவது ஒன்றின் மாற்றம் ஆதிக்கம் இதயத்தில் மாற்றத்தைக்கொண்டு வரும்

அதுபோலவே இதயத்தை ஊடுருவிச் செல்லும் எல்லாப்பாதையையும் இதயத்தின் ஆரோக்கியத்தால் ஆதிக்கம் செலுத்தப்படும் பல்வேறு சிகிச்சைமுறைகள், எக்காரணத்துக்காக செலுத்தப்பட்டாலும் மற்றவற்றை இதயத்தையும் பாதிக்கும் ஆகவே கீழ்காணும் சிகிச்சை முறைகளில் நமது உடல் அமைப்பு,
அப்போதைய உடல் நிலை ஆகியவற்றுக்கான ஒன்று அல்லது சில சிகிச்சை முறைகளை மேற்கொள்ளலாம். எதுவானாலும் தகுந்த ஆலோசனை பெற்று மேற்கொள்வது அவசியம்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/05140716/1155246/Heart-disease-control-methods.vpf

Link to comment
Share on other sites

கழுத்து தண்டுவட நரம்பு பாதிப்புகள்

 
அ-அ+

கழுத்தில் இந்த சவ்வு மற்றும் எலும்பு பாதிப்பினை தண்டு வட நரம்பையும், தண்டு வடத்தில் இருந்து வரும் பக்க நரம்புகளும் அழுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் உண்டாகலாம்.

 
 
 
 
கழுத்து தண்டுவட நரம்பு பாதிப்புகள்
 
தண்டுவட நரம்பு என்பது மூளையில் இருந்து கைகள், கால்கள் மற்றும் மற்ற பகுதி களுக்கு செல்லும் நரம்புகளின் தொகுப்பு. மேலும் உடலின் பாகங்களில் இருந்து தொடு உணர்ச்சியையும் மூளைக்கு கொண்டு செல்லும் நரம்புகளும் அடங்கும். தண்டுவட பிரச்சினைகள் (Spinal Cord Disease) பல வகைப்படும். அதில் Cervical Spondylosis மற்றும் lumbar Spondylosis என்பவை மிக முக்கியமான அதிகம் காணப்படும் பிரச்சினைகள். இந்த இரண்டு பிரச்சினைகளிலும் சவ்வு பாதிப்பும், அது தண்டுவட நரம்புகளை அழுத்துவதால் ஏற்படும் பல பிரச்சினைகளும் உண்டு.

கழுத்தில் இந்த சவ்வு மற்றும் எலும்பு பாதிப்பினை தண்டு வட நரம்பையும், தண்டு வடத்தில் இருந்து வரும் பக்க நரம்புகளும் அழுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகள் உண்டாகலாம். இந்த பிரச்சினைகள் பொதுவாக கழுத்து வலி, கழுத்து பிடிப்பு, சுளுக்கு என்று பாதிக்கப்பட்டவர்களுக்கு இருக்கும்.

சில நேரங்களில் பாதிப்பு மோசமாக இருக்கும்போது கழுத்தை சிறிதும் திருப்ப முடியாத நிலை, மற்றும் கழுத்தில் இருந்து கைகளுக்கு வலி மின்சாரம் பாய்ச்சுவது போல் பரவுதல் இருக்கலாம். இன்னும் மோசமானால் கைகளில் உணர்ச்சி குறைவு ஏற்படலாம். கைகளில் பலம் குறைந்து காணப்படலாம்.

இது ரேடிக்குலோபதி (Radiculopathy) ஆகும். இன்னொரு வகை மைலோபதி (Myelopathy) ஆகும். இந்த பிரச்சினை ஏற்பட்டால் கைகள் மட்டும் அல்லாது கால்களிலும் பாதிப்பு ஏற்படும். கைகள், மற்றும் கால்கள், விரைத்து போய் (Stiffness) விறகு கட்டை மாதிரி, பலம் குறைந்து, நடக்கும்போது தள்ளாட்டம் ஏற்படுவது, கால்கள், கைகளில் உணர்ச்சி குறைவு ஏற்படலாம்.

மேலும் மோசமான பாதிப்புகள் ஏற்பட்டால், சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிக்கல் உண்டாகலாம். இதற்கு முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் ஒரு கட்டத்தில் நடக்க முடியாமல், கைகள் அசைவற்று, கழுத்துக்கு கீழ் உணர்ச்சி இல்லாமல் போகலாம்.

இந்த பிரச்சினை முன்பெல்லாம் 40 வயதிற்கு பின்னரே பாதிப்புகள் இருந்தது. வயதானவர்களுக்கு அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது இளம் வயதினருக்கு இவை ஏற்படுகிறது.

இன்றைய காலகட்டத்தில் இளவயதினருக்கு குறிப்பாக கணினி திரை, அலைபேசி திரை, தொலைக்காட்சி இவற்றை பயன்படுத்துவோருக்கும், அலைபேசியை கழுத்தை குனிந்து கொண்டு அதிக நேரம் பயன்படுத்துவோருக்கும் அதிகமாக பாதிப்புகள் உண்டாகின்றன.

201804061217382098_1_Neural-damage._L_styvpf.jpg

T.B. நோய் தாக்குதலும் தண்டுவடப் பகுதியில் காணப்படும். நடுமுதுகுப் பகுதியில் (Thoracic) காணப்படும் இந்நோய் கழுத்துத் தண்டு வடப்பகுதியையும் தாக்குகிறது. இந்த நோயும், கழுத்து வலி ஏற்படுத்துகிறது. மோசமான பாதிப்பு ஏற்படும்போது சீல் பிடித்து தண்டுவட எலும்பு சேதம் ஆகி தண்டுவட நரம்பை அழுத்தினால் 2 கை, கால்கள் செயல் இழந்து போவதற்கும், கழுத்துக்கு கீழ் உணர்ச்சி இல்லாமல் போவதற்கும் சிறுநீர் மற்றும் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்படுவதற்கும் மோசமாக பாதித்தால் உயிருக்கு கூட பாதிப்பு ஏற்படலாம்.

இந்த கழுத்து தண்டுவடப் பிரச்சினைகளுக்கு பலவித தீர்வுகள், சிகிச்சை முறைகள் உள்ளது. சிறிய பாதிப்பு இருக்கும்போதே MRI SCAN எடுத்துக் கொள்வது நல்லது. MRI SCAN மூலம் சவ்வு, அழுத்தம், தண்டுவட நரம்பு பாதிப்பு, சீழ் போன்றவை கண்டறிய முடிகிறது.

சிறிய பாதிப்புகளுக்கு கழுத்து, தலையை சரியான விகிதத்தில் வைத்துக் கொண்டு வேலை செய்வது (Position adjustment) சில சுலபமான பயிற்சிகள் செய்வது மட்டுமே முழு தீர்வாகிறது. மேலும் அதிக பாரம் சுமக்காமல், இருப்பதும் அவசியம். வலி அதிகமாக இருந்தால் சில நேரங்களில் மாத்திரைகளும் பயன்படும்.

மோசமான அழுத்தம், மற்றும் தண்டுவட நரம்பு பாதிப்பு ஏற்பட்டாலோ, பயிற்சியினால் பயன் இல்லாமல் இருந்தாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். TB நோய்க்கும், 18 மாதங்கள் மருந்துகளும், அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.

இந்த அறுவை சிகிச்சைகள், சவ்வுகளை அகற்றுவது (Discectomy), Titaniumcage (டைட்டானியம் கேஜ்) வைத்தல், Bonegraft - fusion (எலும்பு மூலம் சிகிச்சை) மற்றும் Laminectomy (லேமி னெக்டமி) பின்பகுதி தண்டு வட சிகிச்சை (Screws stablis ation) என பல வகைப்படும். இவை அனைத்தும் அதிநவீன நுண்நோக்கி (Neuro Microscope) உதவியுடன் செய்யப்படுகிறது.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/06121738/1155429/Neural-damage-to-the-neck.vpf

Link to comment
Share on other sites

`இவர்கள் ஸ்பெஷல் கிட்ஸ் அல்ல... சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி...அறிகுறிகள், சிகிச்சைகள்! #ADHDAlert

 

`வங்க ஸ்பெஷல் கிட்ஸ் இல்லை, சூப்பர் கிட்ஸ்’ - ஏ.டி.ஹெச்.டி பிரச்னையுள்ள குழந்தைகளை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 'ஹைக்கூ' படத்தில் இப்படி ஒரு வசனம் இடம்பெற்றிருக்கிறது. இது உண்மையே.  `ஏ.டி.ஹெச்.டி ஒரு நோய் அல்ல, மூளை நரம்பில் ஏற்படும் ஒருவகை மாற்றம்’ என்கிறது மருத்துவம். ஒலிம்பிக் போட்டியில் 28 முறை பதக்கம் வென்ற மைக்கேல் ஃபெல்ப்ஸ் (Micheal Phelps), நடனத்தில் புகழ்பெற்ற கரீனா ஸ்மிர்ன்ஆஃப் (Karina Smirnoff), வில் ஸ்மித் (Will Smith), ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் (Stephen Hawkings)... எல்லோருமே  `ஏ.டி.ஹெச்.டி' எனப்படும் 'அட்டென்ஷன் டெஃபிசிட் ஹைபர்ஆக்டிவிட்டி டிஸ்ஆர்டர்' (Attention deficit hyperactivity disorder) குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களே. `ஏ.டி.ஹெச்.டி பற்றிய விழிப்புஉணர்வு இங்கே குறைவு. குழந்தைக்கு இந்தக் குறைபாடு வந்துவிட்டது தெரிந்தால் பயப்படும் பெற்றோரே அதிகம். உண்மையில் இந்தக் குறைபாடு வந்துவிட்டால் பார்த்து பயப்படவேண்டியதில்லை’ என்கிறார்கள் மருத்துவர்கள். `இந்தக் குறைபாடு இருப்பதைக் குழந்தைப் பருவத்திலேயே கண்டுபிடித்துவிட்டால், சரிசெய்துவிடலாம். இல்லையென்றால், இந்தக் குறைபாட்டோடு குழந்தை வளரவேண்டியிருக்கும். ஏ.டி.ஹெச்.டி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் மூன்றில் ஒன்று, இந்தப் பிரச்னையோடு வளர்கிறது’ என்கிறது ஓர் ஆய்வு!

ஏ டி ஹெச் டி

ஏ.டி.ஹெச்.டி-யின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் மூளை மற்றும் உளவியல் நிபுணர் கௌதம் தாஸ்...மருத்துவர் கௌதம் தாஸ்

``ஏ.டி.ஹெச்.டி பாதிப்புள்ள குழந்தைகள் மிகவும் சுட்டித்தனமாக, அதே நேரத்தில் கவனக்குறைவோடு இருப்பார்கள். இவர்களால் தங்களது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. வெகுநேரத்துக்கு ஒரே இடத்தில் இருக்க முடியாது. எங்கேயாவது சத்தம் கேட்டால் அங்கே ஓடிவிடும் இவர்கள், விளைவைப் பற்றி யோசிக்காமல் செயல்படுவார்கள். எதற்காகவும் காத்திருக்கும் பொறுமை இவர்களுக்கு இருக்காது.  எதையும் நினைத்தவுடன் முடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள்.

இந்தக் குறைபாடுள்ள குழந்தைகள், பள்ளியிலும் வீட்டிலும் நிதானமில்லாமல் பரபரவென்று வேலைகளைச் செய்வார்கள். `மூட் ஸ்விங்' (Mood Swing), உணர்ச்சிக் கட்டுப்பாடின்மை போன்ற பிரச்னைகளும் இவர்களுக்கு இருக்கும். ஏ.டி.ஹெச்.டி குறைபாடுள்ள பெரியவர்கள், பெரும்பாலும் ஞாபகமறதிக்காரர்களாக இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் சிறு சிறு பொருள்கள், அவர்களைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிடுவார்கள். எதிலும் ஒட்டாமல் தனி உலகில் வாழ்வார்கள். பணம் தொடர்பான விவரம், முடிக்கப்பட வேண்டிய அலுவல் வேலைகள், மருத்துவமனைக்குச் செல்லவேண்டிய தேதிகள் இவற்றையெல்லாம்கூட மறந்துவிடுவார்கள். அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை... என `மூட் ஸ்விங்' (Mood Swing) இவர்களுக்கு ஏற்படும்.

இன்றையச் சூழல் மாற்றங்கள்தான் ஏ.டி.ஹெச்.டி போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் என நினைப்பது தவறு. ஒவ்வொரு காலத்திலும் ஹைபர் ஆக்டிவிட்டி பிள்ளைகள் இருந்திருக்கிறார்கள். மூளையிலுள்ள நரம்புக்கடத்திகளின் (Neurotransmitters) செயல்பாடு குறைவாக இருப்பதுதான் ஏ.டி.ஹெச்.டி எனக் கண்டறியப்பட்டாலும், எந்தக் காரணத்தால் நரம்புக்கடத்திகள் மெதுவாகச் செயல்படுகின்றன என்பது இன்னமும் கண்டறியப்படவில்லை.  `இந்தக் குறைபாட்டுக்கு மரபியல் காரணமாக இருக்கலாம்’ என்பது மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது.

ஏ.டி.ஹெச்.டி

தீர்வுகள்...

குழந்தை வளர்ப்பில் சில விஷயங்களில் கவனம் எடுத்துக்கொண்டு, அக்கறையுடன் செயல்பட்டால் இவர்களைவிடச் சிறப்பான குழந்தைகள் இல்லை. இந்தக் குழந்தைகளை எப்படி அணுகுகிறோம் என்பதில்தான் அவர்களின் எதிர்கால வாழ்க்கைப் பயணம் இருக்கிறது. `என் குழந்தை ரொம்ப சேட்டை பண்ணுறான். ஒரு இடத்துல உட்காரவே மாட்டேங்கிறான்; வீட்டுல தனியா இருந்தா எல்லாத்தையும் உடைச்சுடுறான்...' இப்படிப் புகார் கடிதம் வாசிக்கும் நிறைய பெற்றோர்கள் என்னிடம் வருகிறார்கள். ஹைபர்ஆக்டிவிட்டி குழந்தைகளுக்கும், சாதாரணக் குழந்தைகளுக்கும் இருக்கும் வித்தியாசங்களை உணர முடியாததால், சில பெற்றோர் திணறுவதைப் பார்க்க முடிகிறது. பொதுவான குழந்தைகளைப் பார்த்து, பிள்ளைக்குப் பிரச்னையோ என வருபவர்களும் உண்டு. அதே நேரத்தில், ஹைபர்ஆக்டிவிட்டி குழந்தையை 'அவன் அவங்க அப்பா மாதிரி' என்று சொல்லி மருத்துவமனைக்கே அழைத்து வராதவர்களும் இருக்கிறார்கள்’’ என்கிறார் கௌதம் தாஸ்.

பெற்றோர் - குழந்தை

தொடர்ந்து, ``ஏ.டி.ஹெச்.டி' இருப்பவர்களின் மிகப் பெரிய பலம், அவர்களுடைய ஐ.க்யூ லெவல்! சராசரியாக ஒருவருக்கு 100-110 வரைதான் ஐ.க்யூ இருக்கும்; ஆனால் ஏ.டி.ஹெச்.டி குறைபாடு உள்ளவர்களுக்கு அது 130-ஐத் தாண்டும். இவர்களுடைய பலவீனம், கவனச்சிதறல். அந்த கவனச்சிதறலை சரிசெய்து, சீரான நிலைமைக்கு அவர்களைக் கொண்டு வருவதுதான் சவால்’’ என்றவர், அதற்கான தீர்வாக பேரன்டிங் முறையில் மாற்றம் வேண்டும் என்பதை முன்வைக்கிறார். 

``இவர்கள், வேகமாக ஓடும் குதிரையைப் போன்றவர்கள். மேடு, பள்ளம் வலம், புறம் என எல்லாத் திசைகளிலும் ஓட வேண்டும் என்று முயற்சிப்பார்கள். அப்போது அவர்களது கவனம் சிதறாமல், சரியான திசையில் எப்படிப் பயணிப்பது என்பதை பெற்றோரால் மட்டுமே  சொல்லித்தர முடியும்.

சுட்டி குழந்தைகள்

சிகிச்சைகள்...

* ஏ.டி.ஹெச்.டி இருந்தால் மூளையில் ரசாயன மாற்றங்கள் நிகழும். அதைச் சரிசெய்வதற்கான மருந்து, மாத்திரைகள் தரப்படும். இந்த மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரையுடன் கொடுக்கப்படவேண்டியது அவசியம்.

* இந்தக் குறைபாடுள்ளவர்கள் மூளையை அதிகம் தூண்டும் திறன் கொண்ட இனிப்புப் பொருள்கள், நிறமூட்டப்பட்ட பொருள்கள், ஜங்க்ஃபுட்ஸை குறைவான அளவில் சாப்பிட வேண்டும்.

* மிகச்சிறிய வேலைகள், பயிற்சிகளைக் கொடுத்து அவற்றுக்கு அவர்களைப் பழக்கப்படுத்த வேண்டும். அவர்களின் ஒவ்வொரு செயலையும் பாராட்டவேண்டியது அவசியம். ஒழுங்குமுறைகளை அவர்களுக்குப் போதிக்கவேண்டியதும் அவசியம்.

* முன்னர் சொன்னதுபோல அவர்களது கவனச்சிதறலை ஒழுங்குபடுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்துவதைக் கற்றுக்கொடுக்க வேண்டும். 

* மனநல மருத்துவர் ஒருவரிடம் ஆலோசனைபெற்று, நடத்தைவழி சிகிச்சை (Behaviour Therapy) மேற்கொள்ள வேண்டும்’’ என்கிறார் கௌதம் தாஸ்.

குழந்தை

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீச்சல் வீரர் மைக்கேல் ஃபெல்ப்ஸின் (Micheal Phelps) அம்மா ஒரு பேட்டியில், ``என்னுடைய மகனுக்கு ஒன்பது வயது இருக்கும்போது, ஒருமுறை அவனுடைய டீச்சர் என்னைக் கூப்பிட்டுவிட்டாங்க. அவனால எதுலயும் கவனம் செலுத்த முடியலைனு சொல்லி கோபமாப் பேசினாங்க. என்னால அதைத் தாங்கிக்க முடியலை. அவனை நான் புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன். அவனோட உலகத்துக்குள்ள போறதுக்காக, `பேரன்டிங்' முறையில் சில மாற்றங்களைச் செஞ்சேன். அவன் எப்போல்லாம் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாம இருக்கானோ, அப்போல்லாம் `C' என்ற ஆங்கில எழுத்தோட வடிவத்தை கைகளால் செய்து காட்டுவேன். `Compose Yourself' என்பதுதான் அதன் உள்ளர்த்தம். ஒருமுறை நான் ரொம்பச் சோர்வா இருந்தப்போ, மைக்கேல் அதையே எனக்குச் செய்தான். அவனோட மாற்றம், அங்கேதான் ஆரம்பிச்சுது’’ என்றார். ஆக, நம்பிக்கை தரும் பெற்றோரும் சுற்றமும் மட்டுமே ஏ.டி.ஹெச்.டி குழந்தைகளுக்குத் தேவை!

https://www.vikatan.com/news/health/121852-symptoms-causes-treatments-for-adhd.html

Link to comment
Share on other sites

உஷார்! சரியான தூக்கமில்லா விட்டால் மனித மூளை தன்னைத் தானே சாப்பிடத் தொடங்கி விடுமாம்! 

 

 
00000sleep_enough

 

மனித மூளையின் ஆரோக்யமான  செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு நாளின் முடிவிலும் போதுமான பரிபூரண தூக்கம் அவசியம். அப்படி தேவையான நேரங்களில் உடலும், மனமும் தூக்கத்துக்காகக் கெஞ்சக் கெஞ்ச அதைப் பொருட்படுத்தாமல் அசட்டை செய்து நாம் மேலும், மேலுமென தூக்கத்தைத் தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தோமெனில் நமது மூளை ஒரு கட்டத்தில் தன்னைத்தானே சாப்பிடத் தொடங்கி விடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறைவான தூக்கம் கணிசமான அளவில் மூளையின் முக்கியமான நியூரான் இழப்பிற்கு காரணமாகி விடுகிறது.

அது மட்டுமல்ல மூளையின் லட்சக் கணக்கான சினாப்டிக் பரிமாற்றங்களையும் அது தடுத்து விடுகிறது. இப்படியொரு அசம்பாவிதம் நிகழ ஒருமுறை நாம் அனுமதித்து விட்டோம் எனில் மீண்டும் அதை சரி செய்து கொள்வதென்பது முடியவே முடியாத காரியமாம். பிறகு நீங்கள் ஆற, அமர நன்கு தூங்கி ஓய்வெடுத்தாலும் பயனில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். 

அதோடு தூக்கமின்மை என்பது மனிதர்களிடையே அதிகளவில் அல்சைமர் நோயின் தாக்குதல் மற்றும் நரம்பியல் தொடர்பான குறைபாடுகள் அதிகரிக்கவும் காரணமாக அமைந்து விடுகிறது. 

மிகக்குறைவான தூக்கத்தால் ஆஸ்டோசைட்ஸ் பாதிப்பு வரவும் வாய்ப்பிருக்கிறது. ஆஸ்ட்ரோசைட்ஸ் பிரச்னை இருந்தால் அதனால் பாதிப்படைந்தவர்கள் பார்ப்பதற்கு துறுதுறுவென்று சுறுசுறுப்பாக இருப்பவர்களைப் போல தோன்றினாலும் அவர்களது மூளைச் செல்களுக்குள் மிகப்பெரிய ஆபத்து இருப்பது அவர்களுடன் பழகும் மனிதர்களுக்கே தெரிய வாய்ப்பில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். ஏனெனில் இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு மூளையின் தகவல் பரிமாற்றங்களில் முக்கியப்பங்காற்றும் சினாப்டிக் செல்கள்  குழப்பமடைந்து மூளையை தனக்குத் தானே ரீமாடல் செய்து கொள்வதால் அவர்கள் அவ்விதமாக இயங்குகிறார்களே தவிர அவர்களுடைய உற்சாகமென்பது அணையப் போகிற விளக்கில் திடீரென அதிக சுடரொளி தெரிவதைப்போன்றது  தானாம்.

மருத்துவர்களால் வரையறுக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தூக்க நேரமான 8 மணி நேரத் தூக்கத்தை நாம் நிராகரித்தோம் என்றால் மிக மோசமாக மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கும் உள்ளார்ந்த மீள் எண்ணங்களால் மிகுந்த தொல்லைக்கு உள்ளாகும் அபாயம் ஏற்படும். இதனால் மனிதர்கள் உள்ளார்ந்த கவலைகள் மற்றும் மன உளைச்சல்களுக்கு ஆட்பட்டு சுயவிசாரத்தில் இறங்கும் அபாயம் அதிகரிக்கும். 

இப்படி மனிதர்கள் தமக்குள் சுயவிசாரங்களில் ஆழ்ந்து போகும் போது அவர்களுடைய வாழ்நாள் அளவு தானாகக் குறைந்து விடுகிறது என்பதோடு வாழ்வின் தரமும் குறைந்து விடுகிறது. அதாவது உப்புச் சப்பில்லாமல் வாழ்ந்து மடிய வேண்டிய நிலைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

இம்மாதிரியான ஆழ்மன விசாரங்கள் தன்னைத்தானே உருக்கிக் கொள்வதோடு முடிந்து விடுவதில்லை, தன் சக மனிதர்களையும் தன்னை அணுக விடாது தன்னைச் சுற்றி மனதளவில் ஒரு வேலியிட்டுக் கொண்டு மனநோய் உள்ளிட்ட உளவியல் நோய்களில் வீழ இட்டுச் செல்லும். 

சுருக்கமாகச் சொல்வதென்றால் சரியான தூக்கமின்றி ஆண்டுக்கணக்காக வாழ நேர்பவர்கள் ஒருபாதி மனநோயாளிகளாகி விடுகிறார்கள். அவர்களுக்குத் திடீரென கோபம் வரும், திடீரென நன்றாகப் பேசுவார்கள், சட்டென மூர்க்கமாகி எப்பேர்ப்பட்ட நட்பையும், உறவையும் துண்டித்துக் கொள்ளத் தயங்க மாட்டார்கள். ஒரு நிலையான பாதுகாப்பான மனநிலையின்றி மனதளவில் ஊசலாடிக் கொண்டே இருப்பார்கள். மனநல மருத்துவர்களின் கணிப்பின் படி குறைவான தூக்கத்துக்கும் மனநலப் பிரச்னைகளுக்கும் மிக நெருங்கிய தொடர்புண்டு என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

அதனால் தான் மனநல மருத்துவர்கள் முதல் அனைத்து மருத்துவர்களும் எல்லாவித உடல் நலக் கோளாறுகளுக்கும் போதுமான தூக்கமின்மையையே முதல் காரணமாக முன் வைத்து நோயாளிகளின் ஆரோக்யமான தூக்க நேரத்தைப் பற்றி அறிவுறுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். 

தூக்கமின்மை என்பது மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தி மையம், இதயத்தின் ஆரோக்யமான செயல்பாடு, மற்றும் பாலியல் ஈடுபாடு உள்ளிட்ட விவகாரங்களில் கூட குறிப்பிடத்தக்க அளவில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவர்கள். நாளடைவில் அதே நிலை நீடிக்குமானால் கேன்சர் நோயின் தாக்கத்துக்கு தூக்கமின்மையும் ஒரு காரணமாக வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள். இப்படி தூக்கமின்மை என்ற ஒரு விஷயம் மனிதனை பல்வேறு உடல் மற்றும் மனநலன் சார்ந்த ஆரோக்யக் கேடுகளுக்கு இட்டுச் செல்கிறது என்பதை மக்கள் உணர்ந்தார்கள் எனில் நிச்சயம் இனியொரு முறை தங்களது தூக்க நேரத்தை ஒத்திப்போடவோ அசட்டையாக நிராகரிக்கவோ மாட்டார்கள் என நம்புவோம்.

http://www.dinamani.com/health/health-news/2018/apr/10/enough-sleep-otherwise-your-brain-literaly-starts-eating-itself-2897474.html

Link to comment
Share on other sites

குரல் மாறும்... கையெழுத்து சிறியதாகும்... பார்க்கின்சன் நோய் எதனால் வருகிறது? #ParkinsonsDay

 

ஓடுகிற தண்ணீர் ஓரிடத்தில் நின்று விட்டால் பாசி பிடித்து விடும்.  அப்படியே தான் மனிதர்களும்,  மனிதர்கள் ஓடிக்கொண்டிருக்கும் வரை தான் உலகத்தோடு ஒன்றி வாழ முடியும். இல்லையென்றால் ஓரம் கட்டிவிடுவார்கள். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உடலின் இயக்கங்களே காரணம். உடல் ஏற்படுத்தும் அனைத்து அசைவுகளையும் மூளைதான் கட்டுப்படுத்துகிறது. அந்த மூளையில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட மனிதனைப் பெருமளவில் பாதித்து விடும். அப்படி மூளையில் ஏற்படும் ஒரு பிரச்னை தான்  'பார்க்கின்சன்'.  

வருடந்தோறும் ஏப்ரல் 11 தேதி உலக பார்க்கின்சன் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் பார்க்கின்சன் நோய் குறித்த விழிப்புஉணர்வு இந்நாளில் பரப்பபடுகிறது.  இந்த நாளில் மரத்தான் போன்றவை நடத்தப்பட்டு, அதிலிருந்து பெறப்படும் பணத்தை இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்கொடையாகக் கொடுக்கின்றனர். 

பார்க்கின்சன் நோய்

பார்க்கின்சன் என்றால் என்ன?

நரம்புமண்டலத்தில் ஏற்படும் பாதிப்பே பார்க்கின்சன் நோய் ஏற்பட காரணம். நரம்பு மண்டலத்தில் உள்ள டோபமைன் ( Dopamine) எனப்படும் ஹார்மோனே உடலின்  இயக்கங்களைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இந்த ஹார்மோனின் சுரப்பு குறையும் போது உண்டாகும் நோயே பார்க்கின்சன். உடலின் தசை இயக்கத்தைப் பெருமளவில் இந்த நோய் பாதிக்கிறது.   பேசுவது,  எழுதுவது,  பார்ப்பது  போன்றவற்றிற்குக் கூட இந்நோயால் பாதிப்பட்டவர்,  மிகவும் சிரமப்படுவார். 
 
இந்தியாவில் கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலும் 50-60 வயதுள்ளவர்கள் இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.   

காரணம்:
இந்நோய்க்கான சரியான காரணம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைக் குறித்த ஆராய்ச்சிகள் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.  சுற்றுச்சூழல், வயதாவது மற்றும்  அசாதாரணமான ஜீன்கள் போன்றவற்றால் இந்நோய் ஏற்படலாம் என யூகிக்கப்படுகிறது. இருந்தாலும், நோய்க்கான சரியான காரணத்தைக்  குறிப்பிட இயலவில்லை.  

அறிகுறிகள் :
முதலில் நடுக்கம் போல ஆரம்பிக்கும் அறிகுறிகள் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் பரவி தசைகளின் இயக்கத்தை முற்றிலும் பாதித்து விடுகிறது. இதற்கான காரணம் என்ன என்பதை அறிய இயலாததால் அறிகுறிகளைக் கொண்டே இந்நோயைக் கண்டறிகின்றனர். 

1. நடுக்கம் :
    இந்நோயின் பொதுவான அறிகுறியாக நடுக்கம் தோன்றுகிறது.  அதிகப்படியான உடற்யிற்சி, மன அழுத்தம், விபத்து, மருந்துகள் போன்றவற்றால் ஒருவருக்கு சாதாரணமாக நடுக்கம் தோன்றும். ஆனால் இந்நோய் இருப்பவர்களுக்கு அமைதியான சூழலிலும் நடுக்கம் உண்டாகிறது. 

2. சிறிய கையெழுத்து:
வயதாகும் போது அல்லது கையில் அடிபடும் போது சரியாக எழுத முடியாது, இது இயல்புதான். ஆனால் நன்றாக எழுதுவபரின் கையெழுத்து இயல்பானதை விட சிறியதாக மாறும். எழுத்துக்கள், தெளிவில்லாமல், ஓர் எழுத்தின் மீது இன்னொரு எழுத்தை எழுதுவர். 

3.வாசனைத் திறன் இழப்பு :
குளிர்காலத்தின் போதும், மூக்கடைப்பின் போதும் சரியாக நுகர முடியாது, இது இயல்பு . ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவரால் வாசனையைக் கண்டுபிடிக்க முடியாமல் சிரமப்படுவர்.

4.தூக்கப்பிரச்சனை :
திடீரென தூக்கத்திலும் நடுக்கம் ஏற்பட்டுத் தூக்கத்தை பாதிக்கிறது. 

5. நடக்கவும் சிரமம்:
நடப்பதிலும் , எளிமையான செயல்களை செய்யவும்  கடினப்படுவர். கை, கால் மற்றும் உடலில் ஒரு வித தொய்வு ஏற்படும். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதம் தரையோடு சிக்கிக் கொள்கிறது என்கின்றனர்.  

6. மலச்சிக்கல்:
உடலில் நீரின் அளவும், நார்ச் சத்தும் குறைவாக இருக்கும் போது மலச்சிக்கல் உருவாகும், இது இயற்கை. ஆனால் இங்கே பாதிக்கப்பட்டவர் அதிகளவில் மலச்சிக்கலால் பாதிக்கப்படுவார்.  

7. குரல் மாற்றம் :
 இயல்பாக பேசுவதை விடக் குரலானது மென்மையாக அல்லது கரகரப்பான குரலாக மாறிவிடும்.

8. முகத்தில் எப்போதும் ஒரு வருத்தமான உணர்வு இருப்பது போலவே தோன்றும். நீங்கள் சாதாரணமாக இருப்பதாகக் கருதினாலும் இவர்களைப் பார்ப்பவர்கள், ஏன் வருத்தமாக இருக்கிறீர்கள் என்று கேட்பர். 

 9.கவனம் செலுத்துவதில் குறைபாடு ஏற்படும். 
 இந்த அறிகுறிகளோடு பேசுவதிலும் பிரச்சனை ஏற்படலாம். பார்வைத் திறன் குறையும். உடலில் விறைப்பு தன்மை ஏற்படும். நேராக நிற்க முடியாமல், கூன் விழும். 

Parkinson day


சிகிச்சைகள் :
    பெரும்பாலும் இந்த நோயைக் குணப்படுத்த முடிவதில்லை.  அறிகுறிகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மருந்துகள் வழங்கப்படுகிறது. இதனைக் கொண்டு வாழ்க்கையைச் சுலபமாக நடத்த முடியும். மேலும் நோய் அடுத்த கட்டத்திற்கு செல்லாமல் பாதுகாத்து கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்டவர் சிறந்த நியூராலஜிஸ்ட், பிஸியோதெரபிஸ்ட்டை அணுகுவது நல்லது. தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.  தனிமையைத் தவிர்ப்பது மிகவும் நல்லது. உடலை மட்டுல்லாமல், மனதையும் மிகவும் பாதிக்கிறது, இந்நோய். எனவே தன்னம்பிக்கையை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர் மட்டுமல்லாமல் அவரின் மீது அன்பு கொண்டவரும் அவரின் நிலையால் பாதிக்கப்படுகின்றனர்.   

 

நாம் அனைவரும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். அதுவே இந்த நாளை அர்த்தமுள்ளதாக்கும்.

https://www.vikatan.com/news/health/121903-symptoms-and-reasons-for-the-parkinson-disease.html

Link to comment
Share on other sites

உடலையும் மனதையும் பாதிக்கும் 'மூட் ஸ்விங்ஸ்' பாதிப்பிலிருந்து விடுபடுவது எப்படி?

 
 

'வர வர என்னால என்னையே கட்டுப்படுத்த முடியல' என்று சொல்லும் நண்பர்கள் உங்கள் நட்பு வட்டத்தில் இருக்கலாம். 'என்ன காரணம்னே தெரியல, கொஞ்ச நாளாவே மனசு இறுக்கமா இருக்கு' என்று புலம்புபவர்களையும் பார்க்கலாம். உடல் சார்ந்து எவ்வளவு  பிரச்னைகள் இருக்கின்றனவோ,  அந்த அளவுக்கு மனம் சார்ந்த பிரச்னைகளும் மனிதர்களைப் படுத்தி எடுக்கின்றன. அந்தவகையில், `மூட் ஸ்விங்ஸ்(Mood swings)' எனப்படும் மனநிலை மாற்றம் பெரும்பாலான இளைஞர்களை பாதித்திருக்கிறது. 

மூட் ஸ்விங்

"அதென்ன மூட் ஸ்விங்ஸ்"? 

"குறிப்பிட்ட நேரத்தில் காரணமே இல்லாமல் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவதே `மூட் ஸ்விங்ஸ்' . `எண்ணம் போல வாழ்க்கை' என்பார்கள். அந்த எண்ணங்களை கையாளச் சிரமப்படுபவர்கள்தான் இத்தகைய பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்'' என்கிறார் மனநல நிபுணர் குறிஞ்சி. இதுபற்றி அவரிடம் விரிவாகக் கேட்டோம்.

"ஒருவரால் நாள் முழுக்க, ஒரே மனநிலையில் இருக்க முடியாது. கோபம், அழுகை, வருத்தம் போன்ற உணர்ச்சிகள் நம் எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்றே. ஆனால், சிலர் மட்டும் காரணமே இல்லாமல் தன் இயல்பை மீறி பல்வேறு மனநிலையில் செயல்படுவர். அது `மூட் ஸ்விங்' எனப்படும். 

பெரும்பாலும் மனதுக்குப் பிடித்த ஒரு விஷயமோ அல்லது அதிகம் எதிர்பார்த்த விஷயமோ நடக்காமல் போகும்பட்சத்தில் ஏற்படும் ஏமாற்றம், உணவு முறை மாற்றங்கள், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள் அல்லது ஹார்மோன் குறைபாடு போன்றவற்றால் `மூட் ஸ்விங்' ஏற்படுகிறது.

 'தனக்கு அதிகமாக 'மூட் ஸ்விங்ஸ்' ஏற்படுகிறது, எப்படியாவது இதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்' என்ற எண்ணம் இருந்து, அதை செயல்படுத்த முடியாமல் சிரமப்படுபவர்கள்; தற்கொலை எண்ணம் அதிகம் ஏற்படுபவர்கள்; இரவு முழுக்க இதனால் தூங்க முடியாமல் தவிப்பவர்கள்; வேலையில் கவனம் செலுத்த முடியாமல் தவிப்பவர்கள் இதற்காக மனநல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் போதும். மற்றவர்கள், உணவுமுறை மற்றும் வாழ்வியல் மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டால் போதுமானது.

இதேபோல `மூட் டிஸார்டர்' (Mood disorder) என்ற ஒன்று இருக்கிறது. ஏதோ ஒரு இழப்பு அல்லது பாதிப்பு காரணமாக குறிப்பிட்ட சில காலம் ஒரே மாதிரியான மனநிலையில் இருப்பதை `மூட் டிஸார்டர்' என்கிறார்கள். மூளையில் ஏற்படும் சில ரசாயன மாற்றங்கள், குறைபாடுகளால் நிகழக்கூடிய இந்தப் பிரச்னைக்கு உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்வதன் மூலம் அந்தப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்." என்றார்.

மூட் ஸ்விங்

" `இந்த பிரச்னையிலிருந்து தப்ப, வாழ்வியல் மற்றும் உணவுமுறையில் என்ன மாதிரியான மாற்றங்களைச் செய்ய வேண்டும்" 

 ஊட்டச்சத்து நிபுணர் கற்பகத்திடம் கேட்டோம். 

" `மூட் ஸ்விங்ஸ்' ஏற்படுபவர்களால், அவர்களுக்கு மட்டுமன்றி அவர்களைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்னைகள் ஏற்படக்கூடும். இவர்கள், தங்களைச் சுற்றி இருப்பவர்களை மனரீதியாகவும் சில நேரங்களில் உடல்ரீதியாகவும்கூட சிரமப்படுத்துவார்கள். இப்படி, உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பவர்கள், அதைத் தவிர்க்க கீழ்காணும் விஷயங்களை முயற்சி செய்யலாம்.

* தினமும் ஒரு மணி நேரம் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அந்த இடத்திலிருந்து விலகிச்சென்று 10 முதல் 20 முறை  மூச்சுப்பயிற்சி செய்யலாம்.

மூச்சுப்பயிற்சி

* உடலையும், மனதையும் ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் காலைவேளையில், உடற்பயிற்சிக்கும் தியானத்துக்கும் நேரம் ஒதுக்க வேண்டும்.

* சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதும் சரியான நேரத்துக்குப் படுக்கைக்குச் செல்வதும் அவசியம். அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒருநாளைக்கு இரண்டு கப் வரை காபி குடிக்கலாம். தினமும் நான்கு முதல் ஐந்து லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம்.

* உணவு முறை மாற்றங்கள்:

தவிர்க்க வேண்டியவை: கஃபைன் சத்து நிறைந்த உணவுகள், கெட்ட கொழுப்பு அதிகமுள்ள உணவுகள், சர்க்கரை மற்றும் இனிப்புப் பொருள்கள்,  `பேக்' செய்த உணவுகள், மதுப்பழக்கம் முதலியவை.

சேர்த்துக்கொள்ள வேண்டியவை: காரம் குறைவான உணவுகள், ஹெல்த்தி கார்போஹைட்ரேட்ஸ், காய்கறிகள், புரதங்கள், பழங்கள், மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரைகள், தேங்காய் மற்றும் ஆலிவ் எண்ணெய், கால்சியம் அதிகம் உள்ள பால் உணவுகள் முதலியவை. ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள நட்ஸ், கீரை, திராட்சை, பழவகைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

`மூட் ஸ்விங்ஸ்' பிரச்னையால்தான் அன்றாட வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரியும்பட்சத்தில், சம்பந்தப்பட்டவர் மேற்கூறிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். `மூட் ஸ்விங்ஸ்'கால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர், வன்முறையில் அதிகம் ஈடுபடுவர். அப்படிப்பட்டவர்கள், மனநல மருத்துவரின் ஆலோசனை பெறுவதே சிறந்தது." என்றார்.

https://www.vikatan.com/news/health/122034-how-to-overcome-moodswing.html

Link to comment
Share on other sites

தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?

 
அ-அ+

தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளவும்.

 
 
 
 
தலைக்கு தலையணை வைக்காமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகளா?
 
தலையணை இல்லாமல் எப்படி உறங்க முடியும்? என்ற கேள்வி எல்லார் மனதிலும் எழும். சிலர் தலைக்கு ஒன்று, காலுக்கு ஒன்று, கட்டிப்பிடித்துக் கொள்ள ஒன்று என பல தலையணை பயன்படுத்தி உறங்குவார்கள். சிலருக்கு தலைக்கே இரண்டு தலையணை வைத்து படுத்தால் தான் உறக்கம் வரும்.
ஆனால், தலையணை வைத்து படுத்து உறங்குவதால் தான் உடலில் சில பிரச்சனைகளும் ஏற்படுகின்றன என கூறப்படுகிறது….

தலையணை பயன்படுத்தாமல் படுத்து உறங்குவதால் தண்டுவடம் அதன் இயற்கை நிலையில் இலகுவாக இருக்கும். இதனால் தண்டுவட பிரச்சனை, உடல் வலி போன்றவை ஏற்படாது. கெட்டியான / கடுமையான தலையணை பயன்படுத்துவதால் தண்டுவடத்தில் தீய தாக்கங்கள் உண்டாகலாம்.

தலையணை இல்லாமல் உறங்குவதால் தோள்பட்டை மற்றும் கழுத்து வலி உண்டாகாமல் தடுக்க முடியும். வலியை குறைக்க முடியும்.

தலையணை இல்லாமல் படுத்து உறங்குவதால் உடலின் எலும்பு நிலைகளை சீராக்க முடியும். ஆனால், சிலருக்கு மருத்துவ நிலை காரணமாக தலையணை பயன்படுத்துவதாக கட்டாயமாக இருக்கும், அவர்கள் தலையணை பயன்படுத்த வேண்டியது அவசியம்.

201804121310261699_1_Without-Pillow._L_styvpf.jpg

தலையணை பயன்படுத்தாமல் உறங்கினால் முகத்தில் சுருக்கங்கள் அதிகமாகாது என கூறப்படுகிறது.

நேராக படுத்து உறங்கும் பழக்கம் உடையவர்களுக்கு மெல்லிய தலையணை சிறந்தது. இது கழுத்து, தலை, தோள்ப்பட்டை பிரச்சனைகள் உண்டாகாமல் காக்கும்.

ஒருபக்கமாக படுத்து உறங்கும் நபர்களுக்கு அடர்த்தியான தலையணை சிறந்தது. இது தோள்பட்டை மற்றும் காதுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்தி கொடுக்கும்.

குப்புறப்படுத்து உறங்கும் நபர்களுக்கு தட்டையான தலையணைகள் சிறந்தது. இது தலையின் நிலை அசௌகரியமாக உணராமல் இருக்க உதவும். மேலும், முதுகு, இடுப்பு வலி ஏற்படாமல் தடுக்கும்.
 
 

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/12131026/1156624/sleeping-without-pillow-benefits.vpf

Link to comment
Share on other sites

தூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்

 

 
 

இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு அதிகமாகும்.

 
 
 
 
தூக்கமின்மையால் உடலில் ஏற்டும் பிரச்சனைகள்
 

இரவும் பகலும் சமமாக மாறிவருவதே தூக்கத்தின் இன்றியமையாமையை காட்டும். பகலில் உழைப்பும், இரவில் தூக்கமும் அப்போதுதான் சாத்தியமாகிறது. மனித உடல் மனம் இரண்டும் சமநிலையில் இருக்க இயற்கையின் இரவு பகல் அமைப்பு தேவையாகிறது.

நமது மூளையில் ‘பீனியல் சுரப்பி’ என்று ஒரு சுரப்பி, பட்டாணி அளவில் இருக்கிறது. இதை ‘biological clock on human body’ என்று சொல்கிறார்கள். இச்சுரப்பி ‘மெலடோனின்’ என்ற சுரப்பை சுரக்கிறது. வெளிச்சத்தில் இச்சுரப்பி வேலை செய்யாது; இரவில் சுரக்கும் இச்சுரப்பு இரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பரவும். இச்சுரப்பே தூக்கத்தை தருகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

இரவில் கண்விழித்து வெளிச்சத்தில் வேலைபார்த்தால் இச்சுரப்பி வேலை செய்யாது. இரவு 11 மணி முதல் அதிகாலை 3 மணிவரை இரத்த ஓட்டம் கல்லீரலில் அதிகமாக இருக்கும். உடல் முழுவதும் இருக்கும் கழிவுகளை உடைத்து வெளியேற்றும் வேலையை கல்லீரல் செய்கிறது. தூங்காவிட்டால் கழிவு வெளியேறுவது நடக்காது. கழிவுகள் உடலில் தங்கி நோய்கள் வரத் தொடங்கும். தூக்கம் எவ்வளவு முக்கியமானது என்று இப்போது முழுமையாக தெரிகிறதல்லவா!

இரவில் தூங்காவிட்டால் உடல்வலி, கண் எரிச்சல், சோர்வு, தலைசுற்றல், தொடர்ச்சியான கொட்டாவி, மயக்கம், செரிமான கோளாறு, வாத கோளாறு அதிகமாகும்.

கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகம் தூக்கத்தை பற்றி நடத்திய ஓர் ஆய்வின்படி தினமும் 7 முதல் 8 மணி நேரம் தூங்குபவர்கள் நோய்களில் இருந்து தப்பிக்கின்றனர். மரணத்தையும் தள்ளிப்போடுகின்றனர் என்று கண்டுள்ளனர். குறைவாக தூங்குபவர்களுக்கு ரத்த கொதிப்பு, நீரழிவு போன்ற நீண்ட நாள் உபாதைகள் வரும். நீண்ட நேரம் தூங்குபவர்கள் ஏகப்பட்ட உபாதைகளுக்கு ஆளாகின்றனர். இயல்பாக தூங்கினால் உடலும், மனமும் சுகம் பெறும். வலிமை பெறும். தாம்பத்ய உறவும், குழந்தை பெறும் திறனும் அதிகரிக்கும். அறிவு வளரும். ஆயுள் விருத்தியாகும்.

படுத்தவுடன் தூங்க

* உடல் அயரும் அளவு உழைப்பவர்கள் படுத்தவுடன் தூங்கி விடுகின்றனர்.

* மூளை சோர்வு அடையும் வரை வேலை செய்பவர்களும் படுத்தவுடன் தூங்கி விடுவர்.

* தினமும் காலை முதல் நடந்த விஷயங்களை நினைவு கூர வேண்டும்.

* கெட்ட விஷயங்களை நினைத்து மன உளைச்சலை அதிகமாக்கி கொள்ளாமல் நல்ல விஷயங்கள், சுகமான தருணங்களையே திரும்ப, திரும்ப நினைக்க வேண்டும்.

* இந்த மகிழ்ச்சியை கொடுத்த இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.

* மருதாணி பூக்களை தலையணைக்கடியில் வைத்தால் நல்ல தூக்கம் வரும் அல்லது பிடித்த நறுமணத்தை நுகரலாம்.

* நல்ல சங்கீதம் கேட்டால் தூக்கம் வரும்.

* புழுங்கலரிசி சாதம், தயிர் சாப்பிட்டால் நன்கு தூக்கம் வரும்.

* தலையில் எண்ணெய் தேய்த்து, சில நிமிடம் ஊற விட்டு வெதுவெதுப்பான நீரில் குளித்து பின் சூடாக பால் குடித்தால் நல்ல தூக்கம் வரும்

* உடலில் உள்ள தோஷங்கள் தலைவழியே வெளியேறும் போதும், வாந்தி, பயம், குரோதம், படபடப்பு ஆகிய உணர்வுகள் இருக்கும்போதும், டி.வி. அதிகம் பார்க்கும்போதும், மன இறுக்கம் அதிகமாக இருக்கும்போதும் சீக்கிரம் தூக்கம் வராது. அந்தசமயத்தில் மேற்சொன்ன வழிகளில் ஒன்றை கடைபிடிக்கலாம்.

கூடாதவை எவை?

* சாப்பிட்டவுடன் தூங்கக்கூடாது. சாப்பிட்டு 1 1/2 மணிநேரம் கழித்தே தூங்க வேண்டும். அப்போது தான் செரிமான தொந்தரவு இருக்காது.

* தலைக்கடியில் கைகளை வைத்து கொண்டு தூங்குவது நல்லதல்ல; கழுத்து எலும்பு தேய்மானமும், கை மரமரப்பும் வரும்.

*படுக்கை மிகவும் இறுக்கமாகவோ, ரொம்ப மிருதுவாகவோ இருக்கக்கூடாது. ஓரளவு மிருதுவாக இருந்தால் போதும்.

* மிகவும் உயரமாகவோ, மிகவும் குறைவான உயரத்திலோ, தலையணை இருக்கக்கூடாது. அளவான உயரத்தில் இருக்க வேண்டும்.

தூங்குவதற்கான திசை

எந்தெந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும் என்று கூட வகுத்திருக்கிறார்கள்.
கிழக்கு - உத்தமம் - சலனமில்லாத ஆழ்ந்த உறக்கம்.
தெற்கு - மத்திமம் - உடல் களைப்பு நீங்குமளவுக்கு தூங்க முடியும்.
மேற்கு - சூலம் - கொடூரமான கனவுகள் வரும்.
குழப்பமாக இருக்கும். ஓய்வெடுத்தது போலவே இருக்காது.
வடக்கு - மரணம் - வடக்கு திசையில்தான் பூமியின் காந்தமண்டலம் இருக்கிறது. ஆகவே ரத்த ஓட்டம் பாதிக்கப்படும். தூங்கியதுபோலவே தோன்றாது.

கனவுகள்

* தூக்கத்தின் முக்கிய அம்சம் கனவு மூளையில் இருக்கும் வேண்டாத பதிவுகளை அகற்ற உதவுகிறது. விழிப்பில் சாதிக்க முடியாத விஷயங்கள், நிறைவேறாத ஆசைகள் ஆகியனவே கனவாக வருகின்றன என்கிறார்கள் உளவியலாளர்கள். குழந்தைகள் அதிகம் கனவு காண்கின்றன. கருவிலிருக்கும் குழந்தைகள் கனவிலேயே ஆழ்ந்து கிடக்குமாம்.

வாதம் தொடர்பான நோய் உள்ளவர்களுக்கு நடப்பது, படிப்பது, ஓடுவது போல கனவு வரும். பித்தக்கோளாறு உள்ளவர்களுக்கு நெருப்பு அதிகம் வரும். கபத்தொல்லை இருப்பவர்களுக்கு, தண்ணீர் பற்றிய கனவுகள் அதிகம் வரும். இவ்வாறு இன்று அறிவியல் அறிஞர்கள், உளவியலாளர்கள் ஆராய்ந்து கூறும் உண்மைகளை ஒப்புக்கொள்ளும் கூற்றுக்களை அன்றே பகுத்து மனிதகுலம் வாழ வழிகாட்டி உள்ளனர் நம் முன்னோர்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/14153744/1156990/insomnia-create-heatlh-problems.vpf

 

 

தூக்கம்... சில உண்மைகள்...

இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.

 
தூக்கம்... சில உண்மைகள்...
 
ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. ஆனால் எது ஆரோக்கியமான தூக்கம்? என்ற கேள்வி எழுவதுண்டு. அதற்கு விடை தந்துள்ளனர் அமெரிக்காவின் நேஷனல் சிலிப் பவுண்டேசன் ஆராய்ச்சியாளர்கள். அவர்கள், படுத்தவுடன் 30 நிமிடங்களுக்குள் அல்லது அதற்கும் குறைவான நேரத்தில் தூங்குவது இடையில் இரவில் ஒரே ஒரு முறை மட்டும் எழுந்து பின் 20 நிமிடங்களுக்குள் மீண்டும் ஆழ்ந்து தூங்குவது என்பதுதான் ஆரோக்கியமான தூக்கத்தின் அளவுகோல் என்கிறார்கள்.

65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விதிவிலக்கு உண்டு. அவர்கள் படுத்தவுடன் 60 நிமிடங்களுக்கு முன்னர் தூங்கிவிட வேண்டும். வயதானவர்கள் என்றால் இரவில் இரண்டு முறை எழலாம். ஆனால் அந்த இருமுறையும் 30 நிமிடங்களுக்குள் மீண்டும் தூங்கிவிட வேண்டும். இரவில் படுக்கையில் இருக்கும் நேரத்தில் 85 சதவீத நேரம் அவசியம் தூங்கியாக வேண்டும். மாறாக புரண்டு புரண்டு படுத்து 40 சதவீத நேரமே தூங்குவது ஆரோக்கியத்துக்கு கேடு தரும் என எச்சரிக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். ஒரு ஆரோக்கியமான மனிதனாக சுறுசுறுப்பாக அன்றாட பணிகளில் நாம் ஈடுபட தூக்கம் ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது என்பதை நாம் உணர்ந்து அதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். ஏன் என்கிறீர்களா?

பின்னாளில் வரும் ஒவ்வொரு பெரிய நோய்க்கும் தொடக்க நாட்களில் நீங்கள் சரிவர தூங்காததுதான் காரணமாக அமைகிறது என்கிறார், அமெரிக்காவின் பெர்க்கினி பல்கலைக்கழக மருத்துவ அறிஞர் மாத்யூ வால்க்கர். இளமையில் நன்றாக தூங்கி எழுந்தவர்கள் முதுமையில் ஆரோக்கியமாகவும், அறிவுப்பூர்வமாகவும் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஒரு மனிதனுக்கு 7 மணிநேர தூக்கம் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும், அதையும் தாண்டி நீண்ட நேரம் தூங்குவதும் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதிக தூக்கமும், குறைந்த தூக்கமும் 7 ஆண்டுகளுக்கு முன்னதாகவே நம்மை முதுமை அடைய வைக்கிறதாம். ஆக, தினமும் நீங்கள் இரவில் படுக்கச்செல்லும் நேரத்தை வரையறுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/16081542/1157178/Sleep-some-facts.vpf

Link to comment
Share on other sites

சொட்டு மருந்து போதும்... ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை! அசத்தல் நானோ டிராப்ஸ்! #NanoDrops

 
 

பார்வைக் கோளாறு வந்துவிட்டதா? அவ்வளவுதான். `இனி காலம் பூரா  கண்ணாடியோடதான் அலையணுமா?’ என்பது பலரின் ஆதங்கமாக மாறிவிடும். ஸ்டைலுக்கு கூலிங்கிளாஸ் அணிவதை விரும்புகிறவர்கள்கூட, பார்வைக் கோளாறுக்காக கண்ணாடி அணிய விரும்புவதில்லை. இதன் பொருட்டே கண் அறுவைசிகிச்சை செய்துகொள்கிறவர்களும் உண்டு. இந்தப் பிரச்னைக்குப் புதிதாக வழி பிறந்திருக்கிறது. ` சொட்டு மருந்தை கண்களில் விட்டால் போதும். ஆயுளுக்கும் கண்ணாடியும் தேவையில்லை, அறுவைகிச்சையும் தேவையில்லை’ என்கிறது  இஸ்ரேலில் அண்மையில் நடந்த ஓர் ஆய்வு. அதோடு, `மருத்துவரிடம்கூடப் போகத் தேவையில்லை. உங்கள் ஸ்மார்ட்போன்தான் உங்கள் மருத்துவர். அதைக்கொண்டு பரிசோதித்து, நீங்களே பார்வைக் குறைபாட்டுக்கு தீர்வு கண்டுகொள்ளலாம்’ என்று சொல்லி ஆச்சர்யப்படவைக்கிறது அந்த ஆய்வு. 

பார்வை குறைபாடு  

அது கிட்டப்பார்வையோ, தூரப்பார்வையோ... பார்வைக் குறைபாடுகளுக்கு மொபைல்ஆப் உதவியுடன் 'நானோ டிராப்ஸ்' (Nanoparticle Eye drops) என்னும் சொட்டு மருந்தைவிட்டு சரி செய்யலாம் என்பதைக்  கண்டறிந்திருக்கிறார்கள். இஸ்ரேலின் ஷாரே ஸெடெக் மருத்துவ மையமும் (Israel’s Shaare Zedek Medical Center) பார்-இலான் பல்கலைக்கழகமும் (Bar-Ilan University) இணைந்து நடத்திய ஆய்வில் இந்த சொட்டு மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது. 

``முதலில் உங்கள் மொபைல்போனில் இதற்கான பிரத்யேகமான ஆப்-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். மொபைல்போனிலிருந்து வெளிப்படும் லேசர் ஒளியைக்கொண்டு சில நிமிடங்கள் கண்களின் கார்னியாவை ஸ்கேன் செய்ய வேண்டும். கடைசியாக, கண்ணில் இந்த டிராப்ஸை விட்டால் போதும்... கிட்டப்பார்வை, தூரப்பார்வைக் கோளாறுகளைச் சரிசெய்துவிடும்" என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள்.

பார்வை குறைப்பாட்டுக்கு  நானோ டிராப்ஸ்

முதல் கட்டமாக, பன்றிகளுக்கு இந்தப் பரிசோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாக முடிந்திருக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் மனிதர்களுக்குச் செய்யப்படவிருக்கிறது. இன்னும் இரண்டே ஆண்டுகளில் இந்த நவீன சொட்டு மருந்து, சந்தையில் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள். 

`பார்வைக் கோளாறுகளைச்  சரிசெய்வதற்காக  இருக்கும் நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன, இந்தக் கண்டுபிடிப்பு அவற்றுக்கு எந்த வகையில் உதவும்?’ - கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷிடம் கேட்டோம். 

``பார்வைக் குறைபாட்டில் கிட்டப்பார்வை (மையோபியா (Myopia) - மைனஸ் பவர்) அல்லது தூரப்பார்வை (ஹைபரோபியா (Hyperopia) - ப்ளஸ் பவர்) ஏற்படுகிறது. இது தவிர `அஸ்டிக்மாடிஸம்' (Astigmatism) பாதிப்பும் ஏற்படலாம். இந்தக்  குறைபாடுகளுக்கு கண்ணாடிகளோ, கான்டாக்ட் லென்ஸுகளோ அணியலாம்; சின்னதாக  லேசர் சிகிச்சையும் செய்துகொள்ளலாம்.  இதுதான் இதுவரை நடைமுறையாக இருக்கிறது. 

பார்வை கோளாறு

வருடத்துக்கு ஒருமுறை கண்களைப் பரிசோதித்து புதுக் கண்ணாடி மாற்றிக்கொண்டே இருக்க ஆகும் செலவைவிட, ஒரு முறை செய்யும் லேசர் சிகிச்சைக்கு ஆகும் செலவு குறைவு. அதனால் பெரும்பாலானோர் லேசர் சிகிச்சையையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.

பார்வைக் குறைபாட்டை நீக்க நவீன முன்னேற்றமாக லேசர் சிகிச்சை இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக லாசிக் (Lasik) லேசர்கண் மருத்துவர் திரிவேணி சிகிச்சையும் புழக்கத்தில் இருக்கிறது. கார்னியா (Cornea) என்னும் விழி வெண்படலத்தில் லேசர் மூலம் திசு அகற்றப்பட்டு பார்வைக் கோளாறு சரி செய்யப்படுகிறது. இருந்தாலும், விழி வெண்படலம் (கார்னியா) மெலிதாக இருந்தால் லாசிக் லேசர் சிகிச்சையைச் செய்ய முடியாது. காயம் ஆறுவதற்கும்  சிறிது காலமாகும். ஆனால் `ஸ்மைல்' (Small Incision Lenticule Extraction) கருவி சிகிச்சையில், 2 மி.மீ அளவுக்கு மட்டுமே துளையிடப்பட்டு, லேசர் மூலம் விழி வெண்படல திசு அகற்றப்படுகிறது. விழி வெண்படலம் மெலிதாக இருந்தாலும், `ஸ்மைல்' சிகிச்சை முறை மூலம் சரிசெய்ய முடியும். குறிப்பாக ஒரு கண்ணில் மட்டும் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு `ஸ்மைல்' சிகிச்சை சிறந்தது. 10 நிமிடங்களில் இந்த முறையில் பிரச்னைக்குத் தீர்வு காணலாம். 

புதிய கண்டுபிடிப்பான 'நானோ டிராப்ஸ்' கிகிச்சையில், சொட்டு மருந்து மட்டுமே போதும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது சாத்தியமானால், கண் கோளாறுகளால் பாதிக்கப்படுபவர்களுக்கு கிடைத்திருக்கும் வரப்பிரசாதம். அதே நேரத்தில், எவ்வளவு டிராப்ஸ் விட வேண்டும். சொட்டுகள்விடுவது கண்களின் பவர்க்கேற்ப மாறுபடுமா, பக்க விளைவுகள் உண்டா, இது எத்தனை நாளைக்குப் பயன் தரும், எந்த நிலை வரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அது பலனளிக்கும்... என்பதெல்லாம் தெளிவாகச் சொல்லப்படவில்லை. அதேபோல மருத்துவரின் ஆலோசனையில்லாமல், இப்படி தாங்களாகவே சிகிச்சை செய்துகொள்வது சுயமருத்துவத்துக்கு ஒப்பானது. இது குறித்த ஆராய்ச்சிகள் இன்னும் நிறைவடையவில்லை. நடைபெற்றுவருகிறது. முடிந்த பின்னர்தான்  சரியான ஒரு முடிவுக்கு வர முடியும்" என்கிறார் கண் மருத்துவர் திரிவேணி வெங்கடேஷ்.

https://www.vikatan.com/news/health/122571-nanoparticle-eye-drops-for-improved-vision.html?artfrm=read_please

Link to comment
Share on other sites

அரிசிதான் உடல் பருமனுக்குக் காரணமா ? மருத்துவர்கள் சொல்வது என்ன? #Obesity

 
 

ம் முன்னோர்கள், இயற்கையோடும் இயற்கை சார்ந்த உணவோடும் வாழ்க்கையைக் கொண்டாடியவர்கள். அதனால், ஆரோக்கியம் அவர்களிடம் நிறையவே அடைக்கலமாகியிருந்தது. ஆனால், 'நாகரிகம்' என்ற பெயரில், ஆரோக்கியமான பாரம்பர்ய  உணவுமுறையை நாம் மறந்துவிட்டோம் . பதப்படுத்தப்பட்ட உணவுகள், செயற்கை நிற உணவுகள், துரித உணவுகள் என்று மேற்கத்திய உணவுகளிடம் மயங்கிவிட்டோம். மேலும், அந்தக் காலத்தில் வாழ்க்கை முறையிலேயே உடலுழைப்புக்கான தேவை இருந்தது. வாகன, இயந்திரப் பயன்பாடு, தொழில்நுட்பம்  என இந்த நவீன காலத்தில் எல்லாமே மாறிவிட்டது. 

வாழ்க்கை முறை

இப்படி, வாழ்க்கை முறை மாற்றம், உணவுப் பழக்கம், வளரும் சூழல் என உடல் பருமனுக்கான காரணங்கள் நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. அதனால், இன்று உலகை ஆட்டுவிக்கும் பெரும் பிரச்னையாக உடல் பருமன் உருவெடுத்து நிற்கிறது. உடல் பருமன்  மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, சர்க்கரைநோய், உயர் ரத்தஅழுத்தம், இதயநோய், பக்கவாதம் எனப் பல நோய்களுக்கு நுழைவு வாயிலாக அமைந்துவிடுகிறது.

இந்தப் பிரச்னை  நம் நாட்டில் மட்டுமல்ல... உலகம் முழுவதும், அநேக நாடுகளில் ஒரு சவாலாக மாறி வருகிறது. இதன் தீவிரத்தை உணர்ந்து அமெரிக்க மருத்துவக் கழகம் கடந்த 2013-ம் ஆண்டில் உடல் பருமனை ஒரு நோயாகவே அறிவித்துவிட்டது. 
 

உடல் பருமன்

`பொதுவாக, உடல் எடையைக்  குறைக்க மாத்திரை,  டயட் எனப்  பல வழிமுறைகள் உள்ளன. ஆனால், குறிப்பிட்ட உடல் எடையைத்  தாண்டியவர்களுக்கு அறுவை சிகிச்சை ஒன்றே தீர்வாக இருக்கிறது’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஆனால், `உடல் எடை குறைக்கும் அறுவை சிகிச்சையில் பல அபாயங்கள் இருக்கின்றன. இதை மறைத்துவிடுகிறார்கள்; வருகிறவர்கள் அனைவருக்கும் அறுவை சிகிச்சை செய்வதையே குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

இப்படி உடல் பருமன் குறித்து  குழப்பநிலையே நிலவுகிறது. உடல் பருமன் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும் இதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. `உடல் பருமன் குறித்துத் தெளிவாக அறிந்துகொண்டு, பிறகு அதிலிருந்து தற்காத்துக்கொள்வதுதான் சிறந்த வழி’ என்கிறார்கள் மருத்துவர்கள். 

உடல் பருமனாவது ஏன்? 

உண்ணும் உணவில் உள்ள சத்துகள், குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுக்கின்றன. அதிக அளவு குளூக்கோஸ் சேரும்போது அது கிளைகோஜனாக (Glycogen)  கல்லீரலிலும் தசைகளிலும் அவசரத் தேவைக்கு சேமிக்கப்படுகிறது. தேவைக்கும் அதிகமான கிளைக்கோஜன் மட்டுமே கொழுப்பாக மாற்றப்பட்டு, உடலின் பல இடங்களில் தேங்குகிறது. உடல் பருமனை அதிகரிக்கிறது. 

உடல் பருமன்

இதை எப்படித் தெரிந்துகொள்வது? 

பொதுவாக, உடல் எடையை அளவிடுவதற்கு  பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (Body  Mass Index - BMI ) என்னும் அளவீட்டைப் பயன்படுத்துகிறோம். இதைக் கணக்கிட,  உயரத்தின் அளவை அதே அளவால் பெருக்கிக்கொள்ள வேண்டும்.  உடல் எடையை இந்த அளவால் வகுத்துக் கிடைக்கும் விடை, உங்கள் பி.எம்.ஐ.  
இது 18.5-க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு அல்லது ஊட்டச்சத்துக் குறைவு என்று பொருள். 18.5 முதல் 24.9-க்குள் இருந்தால், சரியான உடல் எடை.  25 - 29.9 அதிக உடல் எடை. முப்பதுக்கு மேல் இருந்தால், உடல் பருமன். இது நாற்பதைத்  தாண்டிவிட்டால், ஆபத்தான உடல் பருமன் என்று அர்த்தம். 

உடல் பருமனால் ஏற்படும் ஆபத்துகள்... 

சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம். இதய நோய்கள், மூச்சுத் திணறல், முழங்கால் மூட்டுவலி, முதுகுவலி, தோள்வலி, பித்தப்பை நோய்கள், குடல் இறக்கம், மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, அதிகக் குறட்டை, ஸ்லீப் அப்னியா, பெண்களுக்கு மாதவிடாயில் கோளாறு, நுரையீரல் நோய்களால் எளிதில் பாதிக்கப்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

உடல் பருமனாவதற்கான காரணங்கள்... 

தவறான உணவு முறை: அதிக அளவில் உணவு உட்கொள்ளுதல், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், அதிகக் கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிடுவது. உதாரணமாக, எண்ணெயில் வறுத்த, பொரித்த இறைச்சி உணவுகள், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், இனிப்புகள், நொறுக்குத்தீனிகள்  போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது.

வாழ்க்கைமுறை: உடற்பயிற்சி இல்லாமை. வாழ்க்கையில் பெரும்பாலான நாள்களில் உடல் உழைப்பில்லாமல், உட்கார்ந்தநிலையில் வேலை, மனஅழுத்தத்தோடு இருத்தல் போன்ற வாழ்க்கை முறை உள்ளவர்களுக்கு உடல் எடை கூடும். 

நோய்கள்: தைராய்டு சுரப்புக் குறைதல், இதயச் செயலிழப்பு, சிறுநீரகச் செயலிழப்பு போன்ற நோய்கள் உடலின் திரவக் கொள்ளளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும்.

மருந்துகள்: நீண்ட காலம் நாம் எடுத்துக்கொள்ளும் ஸ்டீராய்டு போன்ற சில வகை மருந்துகள் உடல் எடையை அதிகரிக்கும். 

அரிசி

இவை மட்டுமல்லாமல், உடல் பருமனுக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுவது அரிசி. உலகில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது. அவற்றில் ஆசிய நாடுகள் மட்டுமே 90 சதவிகிதம் உற்பத்தி செய்கின்றன.  `உலக மக்கள்தொகையில் சுமார் 300 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் முக்கிய உணவாக அரிசிதான் இருக்கிறது’ என்கிறது பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சிக் கழகம். நிலைமை இப்படி இருக்க, `அரிசி சாதத்தை உண்பதால் மட்டுமே உடல் பருமன் பிரச்னை அதிகரித்துவருகிறது. ஓட்ஸ், கோதுமை போன்ற உணவுகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்’ எனப்  பலரும் ஆலோசனை கூறுவதைப் பார்க்கிறோம். இதனால், அரிசி சாதத்தை முற்றிலும் தவிர்ப்பவர்களும் இருக்கிறார்கள். மேலும் நாம் பாரம்பர்யமாக சாப்பிட்டுவரும் அரிசி ஆரோக்கியமற்றதோ என்றதாரணி கிருஷ்ணன் சந்தேகமும் எழுகிறது.

உண்மையில், உடல் பருமனுக்கு முக்கியக் காரணம் நாம் சாப்பிடும் அரிசி உணவுதானா? அரிசி உணவைச்  சாப்பிடலாமா, கூடாதா என மூத்த உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணனிடம் பேசினோம்.

அரிசி உடலுக்குப் போதிய ஆற்றலையும் வலிமையையும் தரக்கூடிய அற்புத உணவு என்பதில் மாற்றுக் கருத்தில்லை. உலகில் அரிசி வெள்ளை, பழுப்பு, மஞ்சள், சிவப்பு, ஊதா, கறுப்பு எனப்  பல நிறங்களில் உற்பத்தி செய்யப்பட்டாலும், நம் நாட்டில் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி போன்றவைதான் பிரதானம். ஆனால், இந்தத்  தலைமுறையினர் அரிசி பளிச்சென வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்பதைத்தான் விரும்புகிறார்கள். அதனால், இப்போதெல்லாம் பாலீஷ் செய்யப்பட்ட அரிசிகளைத்தான் பயன்படுத்துகிறோம். பாலீஷ் செய்யும்போதே, நார்ச்சத்து, வைட்டமின், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கொழுப்பு அமிலங்கள் ஆகியவையும் நீக்கப்பட்டுவிடுகின்றன. இதனால், அரிசியில் உள்ள இயல்பான சத்துகள் மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிடுகின்றன. ஆனால், பாலீஷ் செய்யப்படாத சிவப்பு அரிசியில் சத்துகள் நிறைவாகக் கிடைக்கின்றன. 

அதேபோல, நம் முன்னோர்கள்  மூன்று வேளையும் அரிசி  சாதம் சாப்பிட்டு ஆரோக்கியமாகவும்  நல்ல உடல்வாகுடனும் வாழ்ந்தார்கள். காரணம் அவர்களது உடல் உழைப்பு. நன்றாக உழைக்கும் உடலுக்கு அரிசி  சாதம் ஆரோக்கியத்தைத்தான்  கொடுத்தது; கெடுக்கவில்லை.  


   சிவப்பரிசி

அரிசியில் பல சத்துகள் இருந்தாலும், வேறு சில அத்தியாவசிய சத்துகள் இல்லை. எனவே, காய்கறிகள், பழங்கள், அசைவ உணவுகளைச் சேர்த்துக்கொள்கிறோம். 

சமையலுக்குச் சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய் (Rice bran oil) அல்லது ஆலிவ்  எண்ணெயைப்  பயன்படுத்தலாம். நாளொன்றுக்கு ஒரு நபருக்கு 15 மி.லி போதுமானது.

அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவுகள் மற்றும் பானங்கள்  உண்பதைத் தவிர்க்க வேண்டும். கொழுப்புள்ள உணவைத் தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் ஏதாவது  வேலையையோ, உடற்பயிற்சியையோ செய்து அதை எரித்துவிட வேண்டும். உண்ணும் உணவுக்கேற்ப நடைப்பயிற்சி,  உடற்பயிற்சி என்று ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

 

உடல் பருமனுக்கான காரணத்தைத் தெரிந்துகொண்டு, அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது. ஓர் உணவியலாளர் உதவியுடன்  உங்கள்  BMI-க்குத் தகுந்த கலோரிகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப உணவைச் சாப்பிடுங்கள்" என்கிறார் தாரிணி கிருஷ்ணன்.

https://www.vikatan.com/news/health/122357-is-rice-leads-to-obesity-specialist-explains.html

``நைட் ஷிஃப்ட் வேலை பார்க்கும் பெண்களின் கவனத்துக்கு..?’’ சீன ஆய்வு முடிவு

 

`ரவு... மனிதர்கள் உறங்குவதற்கான நேரம்; இது இயற்கை நியதி. அதற்கு மாறாக, இரவில் வெகு நேரம் கண்விழித்து வேலை பார்ப்பது உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல’ திரும்பத் திரும்ப மருத்துவர்கள் வலியுறுத்தும் உண்மை. ஆனால், இன்றையச்சூழலில் பலருக்கும் இரவுப் பணி தவிர்க்க முடியாததாகிவிட்டது. அதோடு, இரவுப் பணியின்போது தவறான உணவுப் பழக்கமும் சேர்ந்துகொள்கிறது. இது, மேலும் பல விபரீத விளைவுகளை உடலுக்கு ஏற்படுத்தும். இந்த நிலையில்தான், `நீண்ட நாள்களுக்கு இரவில் வேலை செய்யும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கிறது’ என்கிறது  சீனாவைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆய்வு. 

நைட் ஷிஃப்ட்

சீனாவின் செங்டூ நகரத்திலிருக்கிறது சிச்சுவான் பல்கலைக்கழகம் (Sichuan University). இதன் மேற்கு சீன மருத்துவ மையத்தில் (West China Medical Center) பணியாற்றுபவர் புற்றுநோய் நிபுணர் க்ஸ்யூலேய் மா ( Xuelei Ma). இவர் தலைமையில்தான் 'நைட் ஷிஃப்ட்' வேலை பார்ப்பவர்களுக்குப் புற்றுநோய் தாக்கும் சாத்தியம் அதிகமிருக்கிறதா என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 

வட அமெரிக்கா, ஐரோப்பா,  ஆசியா, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 39,09,152 பேரிடம் ஆய்வு நடந்தது. இதில் பங்கேற்றவர்களில் 19 டாக்டர் கே.கலைச்செல்விசதவிகிதம் பேருக்குப் புற்றுநோய் இருந்ததும் கண்டறியப்பட்டது. முக்கியமாக, 11 வகையான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களில் 41 சதவிகிதம் பேருக்கு சருமப் புற்றுநோய், 32 சதவிகிதம் பேருக்கு மார்பகப் புற்றுநோய், 18 சதவிகிதம் பேருக்கு இரைப்பைப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இரவு பணிபுரிபவர்களுக்கு ஒவ்வோர் ஐந்து வருடத்துக்கும் புற்றுநோய் வரும் வாய்ப்பு 3.3 சதவிகிதம் அதிகரிக்கிறது என்பதும் தெரியவந்திருக்கிறது. 

``இரவுப் பணி செய்பவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமா... அதை எப்படிக் கண்டறிவது... சிகிச்சை முறைகள் என்னென்ன..?’’ - சென்னை அரசு பொது மருத்துவமனை புற்றுநோய் மருத்துவத் துறைத் தலைவர்  டாக்டர் கே.கலைச்செல்வியிடம் கேட்டோம்.

``முடி, நகம் தவிர உடலின் அனைத்துப் பகுதிகளிலும் புற்றுநோய் ஏற்படலாம். இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 10 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டும் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார்  ஒரு லட்சம் பெண்கள் ஆளாகிறார்கள். சென்னை, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில்தான் பெண்கள் மார்பகப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். நீண்ட நாள்களுக்கு இரவுப் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக பல ஆய்வுகள் சொல்கின்றன.

நம் உடலில் தூக்கச் சுழற்சியை ஒழுங்குபடுத்துவது மெலடோனின் (Melatonin) ஹார்மோன். இந்த ஹார்மோன் இருட்டுச் சூழலில் மட்டுமே சுரக்கும். இரவில் விளக்கு வெளிச்சத்தில் பணிபுரியும்போது, உடலுக்குத் தேவையான மெலடோனின் ஹார்மோன் கிடைக்காமல் போகும். மேலும், வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்படுவதால், வைட்டமின் டி-யும் குறையும். இதனால் உடல்நலன் பாதிக்கப்படும்; மார்பகப் புற்றுநோயும் ஏற்படலாம்.

11064787385_c22cef1418_b_11509.jpg

ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ‘டெஸ்டோஸ்டீரான்’ (Testosterone), ‘ஈஸ்ட்ரோஜென்’ (Estrogen) போன்ற பாலியல் தொடர்பான ஹார்மோன்கள் தவறான நேரத்தில், குறிப்பிட்ட அளவைவிட அதிகமாகச் சுரப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது, இரவில் வேலை பார்ப்பவர்களுக்கு 10 மணி முதல் 2 மணிவரை அதிகளவில் சுரப்பது தெரியவந்திருக்கிறது. இதனால்தான் 'நைட் ஷிஃப்ட்' வேலை பார்க்கும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் தாக்கும் ஆபத்து அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

 

இப்போது ஆண்களைவிட, பெண்கள் அதிக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகம், வாய், கர்ப்பப்பை வாய், கர்ப்பப்பைப் புற்றுநோய்களால் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். மார்பகத்தில் கட்டி ஏற்படுவதுதான் மார்பகப் புற்றுநோயின்  முக்கிய அறிகுறி. எனவே, பெண்கள் தங்களின் மார்பகங்களைச் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மார்பகத்தில் சிறு கட்டி ஏற்பட்டாலும், உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொண்டால், மார்பகப் புற்றுநோயை முற்றிலுமாக குணப்படுத்திவிடலாம். இதற்கு அறுவைசிகிச்சை, கீமோ தெரபி, ரேடியோ தெரபி, ஹார்மோன் தெரபி என பல மருத்துவ சிகிச்சைகள் உள்ளன. நோயின் நிலை, தன்மையைப் பொறுத்து அது முடிவுசெய்யப்படும்.’’ என்கிறார் கலைச்செல்வி.

 

 

https://www.vikatan.com/news/health/122734-female-night-shift-workers-may-have-increased-risk-of-breast-cancer.html

Link to comment
Share on other sites

இதய பெருந்தமனி சுருக்க நோயிற்கான சத்திர சிகிச்சை!!!

 

 

இதயத்திற்கு செல்லும் பிரதான இரத்த குழாய்களின் சுருக்கத்திற்கு தற்போது நுண் துளை சத்திர சிகிச்சை மூலமே தீர்வு காணப்படுவதாக வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

New_Layout__3_.jpg

தெற்காசியாவில் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் பெருந்தமனி சுருக்கநோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு சரியான தருணங்களில் சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் ஐம்பது சதவீதத்திற்கு மேலானவர்கள் மரணமடையக்கூடிய வாய்ப்புண்டு.

இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான இரத்தகுழாய்களில் கல்சியம் படிவதால் அதன் செயல்பாடு சுருக்கமடைவதே பெருந்தமனி சுருக்கநோயாகும். இதற்கு செயற்கையான வால்வுகளை பொருத்துவது தான் சரியான தீர்வு. முன்பு இதற்கு ஓப்பன் ஹார்ட் சர்ஜேரி எனப்படும் இதயத்தை திறந்து தான் சிகிச்சையளித்தார்கள்.

தற்போது தொடையில் உள்ள தமனியில் ஒரு குழாய் செலுத்தப்பட்டு, அதில் பலூன் போன்ற பொருள் செலுத்தப்பட்டு, அதன் ஊடாக செயற்கை இரத்த குழாய் பொருத்தப்படுகிறது. இந்த சத்திர சிகிச்சையை சரியான நேரத்தில் மேற்கொண்டால் இத்தகைய பாதிப்பிற்கு ஆளானவர்களை காப்பாற்ற இயலும்.

மேலும் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது நோயாளிக்கு இரத்த இழப்பு அதிகமாக ஏற்படுவதில்லை. அதே சமயத்தில் இதயத்திற்கு செல்லும் இரத்த குழாய்களில் கொழுப்பு படிவதால் ஏற்படும் பாதிப்பிற்கும் இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் பலன் பெற இயலும்.

டொக்டர் கிருஷ்ணகாந்த்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/32694

Link to comment
Share on other sites

மன ஆரோக்கியத்துக்கு பழம், காய்கறிகள் உதவுமா? அந்தப் பழங்கள், காய்கறிகள் எவை?

 
 
fruits

கோப்புப் படம். | எம்.மூர்த்தி.

உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள், காய்கறிகள் உதவும் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று மன ஆரோக்கியத்துக்கும் பழங்கள், காய்கறிகள் உதவும் என்பது சமீபத்தில் வெளியான ஆய்வின் புதிய தகவலாக உள்ளது.

அதாவது சமைக்கப்பட, அடைக்கப்பட்ட, பதனப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை விட பழத்தை அப்படியே சாப்பிடுவது மன ஆரோக்கியத்துக்கு நல்லது என்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

இதுவரை பொதுச்சுகாதார, ஆரோக்கிய விழிப்புணர்வு பிரச்சாரங்களெல்லாம் எவ்வளவு பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொள்ளலாம் என்பதைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது

ஆனால் ஃப்ராண்டியர்ஸ் இன் சைக்காலஜி என்ற இதழில் வெளியான இந்த ஆய்வுக்கட்டுரையில் பழங்கள், காய்கறிகள் எப்படி சமைக்கப்படுகின்றன எப்படி உட்கொள்ளப்படுகின்றன என்பதில் கவனம் செலுத்தியுள்ளது.

நியூஸிலாந்தைச் சேர்ந்த ஒடாகோ பல்கலைக் கழக உளவியல் பிரிவு மூத்த பேராசிரியர் டாம்லின் கானர், கூறும்போது, “பழங்கள், காய்கறிகளை மாற்றம் செய்யப்படாத அதன் பாகம்படா தன்மையில் எடுத்துக் கொள்வது மன ஆரோக்கியத்துக்குச் சிறந்தது என்பதை எங்கள் ஆய்வு தெரிவித்துள்ளது” என்றார்.

ஏனெனில் சமைக்கும் போதும், அதன் நிலையை வேறு விதங்களில் மாற்றும்போதும் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காலியாகிவிடுகிறது என்கிறார் அவர்.

இந்த ஆய்வுக்காக நியூஸிலாந்து மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 18-25 வயதுடைய நபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இதில் பழங்கள், காய்கறிகளே எடுத்துக் கொள்ளாதவர்களுக்கு மன ஆரோக்கிய நிலையில் தடுமாற்றம் ஏற்படுவது தெரியவந்துள்ளது.

பழங்கள், காய்கறிகளை அதன் பாகம்படாத் தன்மையில் எடுத்துக் கொள்வதோடு பயிற்சி, தூக்கம், டயட், நீண்ட நாள் ஆரோக்கியம், சமூகப் பொருளாதார அந்தஸ்து, இனம், பாலினம் ஆகிய மக்கள்தொகையியல் கூறுகளும் இந்த ஆய்வுக்கு அளவுகோலாகப் பயன்படுத்தப்பட்டது.

இத்தகைய பாகம்படா பழங்கள், காய்கறிகளை எடுத்துக் கொள்ளும்போது மனச்சோர்வு, கவலை போன்றவைகள் குறைவதையும் மன ரீதியாக ஒருவர் மகிழ்ச்சியாக இருப்பதையும் நாங்கள் ஆய்வில் கண்டோம் என்கிறார் கானர்.

இதற்காக பாகம் செய்யாமல் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு 10 பழங்கள், காய்கறிகளை இந்த ஆய்வாளர்கள் அடையாளப்படுத்தியுள்ளனர்: கேரட், வாழைப்பழம், பச்சை இலையடந்த காய்கறிகள், பசலைக்கீரை, திராட்சை, கீரை வகைகள், சிட்ரஸ் பழங்கள், வெள்ளரிக்காய், கிவி பழங்கள், பிரெஷ் பெரிஸ்.

Link to comment
Share on other sites

சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்? - #DrinkingWaterDuringMeals

 
 

கோடைக்காலத்துக்கும் தாகத்துக்கும் நெருங்கிய பந்தம் உண்டு. தாகம் எடுத்துக்கொண்டேயிருக்கும். எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் அடங்காது. சாப்பிடும் நேரத்தில் இன்னொரு பிரச்னை... முதல் வாய்ச்சோற்றை அள்ளி வாயில் வைத்தவுடனேயே விக்கல் எடுக்க ஆரம்பித்துவிடும். தண்ணீர் குடித்த பிறகுதான் நிற்கும். ஆனால், 'சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கக் கூடாது. குடித்தால் உடலில் சத்துகள் ஒட்டாது’ என்பது பலரின் அறிவுரை. இந்தக் கருத்துகள் ஒருபுறமிருக்கட்டும். 'நம் உடலுக்கு என்ன தேவையென்பதை நம் உடலே சில சமிக்ஞைகளின் மூலம் நமக்கு உணர்த்திவிடும். உதாரணமாக, உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால், தாகம் எடுக்கும். அப்போது கண்டிப்பாகக் குடிக்கத்தான் வேண்டும். அது சாப்பிடும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை. உடலின் தேவையைப் பூர்த்திசெய்தே ஆக வேண்டும். இல்லையென்றால், தேவையில்லாத உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும்’ என்பது மற்றொரு சாரரின் கருத்தாக இருக்கிறது.

குடிநீர்

சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா, கூடாதா? மருத்துவர்களிடம் கேட்டோம்...

இரைப்பை மற்றும் குடலியல் நோய்ச் சிறப்பு மருத்துவர் வெங்கடேஷ்வரன் விளக்குகிறார்...

''சாப்பிடும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்கக் கூடாது. அப்படிக் குடித்தால் ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். பொறுமையாக அளவாகச் சாப்பிட்டால், தண்ணீர் குடிக்கவேண்டிய நிலை ஏற்படாது. சிலர் சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் நீரை முழுவதுமாகக் குடிப்பார்கள். அது கூடாது. சாப்பிட்டு இருபது நிமிடங்கள் கழித்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்க ஆரம்பிக்கலாம். சாப்பிடுவதற்கு முன்னரும் குடிக்கக் கூடாது. ஏனென்றால், வயிற்றுக்குத் தேவையான அளவு சாப்பிட முடியாது. அதோடு, உணவிலுள்ள சத்துகள் சரியாக உடலுக்குக் கிடைக்காது. சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாக தண்ணீர் குடிப்பது நல்லது. வெயில் காலத்தில் சிலருக்கு அடிக்கடி தொண்டை வறண்டுகொண்டேயிருக்கும். அடிக்கடி தாகமெடுக்கும். அவர்கள் மட்டும் மொத்தமாகக் குடிக்காமல், கொஞ்சமாகச் சிப் சிப்பாக அருந்தலாம்.’’

சாப்பாடு

அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரி முதல்வர் மணவாளன் இதுகுறித்து விளக்குகிறார்...மருத்துவர் மணவாளன்

''நாம் சாப்பிடும் உணவுகள் ஜீரணமடைவதற்கு நம் உடலில் சில அமிலங்கள் (Hydrochloride and Dijestive Juices) சுரக்கும். சாப்பிடும்போது தண்ணீர் குடித்தால் அந்த அமிலங்கள் நீர்த்துப் (Dilute) போகும். அதன் வீரியம் குறைந்து ஜீரணக் கோளாறுகள் உண்டாகும். இது தொடர்ச்சியாக நிகழும்போது, வயிறு தொடர்பான பிரச்னைகள் உண்டாகும். உதாரணமாக, எந்த விலங்கும் சாப்பிடும்போது தண்ணீர் குடிக்காது. இயற்கையின் நியதியே அதுதான். 'விக்கல் ஏற்படுகிறது, அடைத்துக்கொள்கிறது. அதனால்தான் குடிக்கிறோம்’ என்று சிலர் காரணம் சொல்வார்கள். இதற்கு, உடலுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறது என்று அர்த்தம் அல்ல. நாம் சாப்பிடும் முறை தவறு என்றுதான் அர்த்தம். சாப்பிடும்போது நிதானமாக மென்று உமிழ்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் விக்கல் எடுக்காது. தண்ணீர் குடிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. அதையும் மீறி விக்கல் வந்தால் கொஞ்சம் குடித்துக்கொள்ளலாம்.

'சாப்பிடும்போது தாகம் எடுக்கிறதே, எப்படிக் குடிக்காமல் இருக்க முடியும்?' என்பார்கள் சிலர். அப்படித் தாகம் எடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை. அதற்கு, ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். உடலில் தண்ணீர் வற்றி, தொண்டை வறண்டு, தாகம் எடுக்கட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக் கூடாது. அப்படி உடலை வறட்சியாகவிட்டால் மலச்சிக்கல், சிறுநீரகக்கல் உருவாவது போன்ற பாதிப்புகள் உண்டாகும்.

தாகம்

'தாகம் எடுக்கும்போது மட்டுமே தண்ணீர் குடிக்க வேண்டும்’ ஒரு கருத்து நிலவுகிறது. அது தவறு. தாகம் எடுக்கும்போது கண்டிப்பாகத் தண்ணீர் குடிக்க வேண்டும் அதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இன்று நாம் வேலை பார்க்கும் சூழல், குளிரூட்டப்பட்ட அறைகளில் தாகம் எடுப்பதே இல்லை. அதற்காக தாகம் எடுக்கும்போதுதான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. ஒரே நேரத்தில் மொத்தமாகவும் தண்ணீர் குடிக்கக் கூடாது. ஒரு மணி நேர இடைவெளியில் ஒரு டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். தண்ணீர் அதிகமாகக் குடித்ததால் யாருக்கும் உடல்நலப் பிரச்னைகள் ஏற்பட்டதில்லை. ஆனால், குறைவாகக் குடிப்பதால்தான் பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தண்ணீர் நம் உடலின் செல்களில் உள்ள தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி, செல்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ள உதவும். தேவையான அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் கழிவுகள் அப்படியே தங்கி, அவைதான் சிறுநீரகக் கற்களாக உருவாகின்றன. சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னர்வரை தண்ணீர் குடிக்கலாம். சாப்பிட்ட பிறகும் அரை மணி நேர இடைவெளி இருந்தால் மிகவும் நல்லது.

சிறுநீரகக் கல்

நம் உடல் 70 சதவிகிதம் நீரால் ஆனது. அதனால் தண்ணீரால் நம் உடலுக்கு எந்த ஆபத்தும் வரப் போவதில்லை. காலையில் தூங்கி எழுந்ததும், வெறும் வயிற்றில் நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியுமோ அவ்வளவு குடிக்கலாம். அது உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியைக் கொடுக்கும்.

சிறுநீரகம் செயலிழந்தவர்கள், மூளையில் நீர் கோர்ப்பு (Hydrocephalus) போன்ற பிரச்னை உள்ளவர்கள், இதய பாதிப்புள்ளவர்கள் மட்டும் மருத்துவர்களின் அறிவுரையோடு  குடிக்க வேண்டும்.’’

https://www.vikatan.com/news/health/123473-should-you-drink-water-during-meals.html

இது ஏற்படுவது இதனால் தானாம்!!!

 

ஸ்மார்ட்போன்களை அதிகமாக உபயோகப்படுத்துவோருக்கு மனச்சோர்வு ஏற்படும் என அமெரிக்க ஆராய்ச்சி முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் மீதான மோகம் இன்றைய இளம் தலைமுறையினரிடமும், சிறுவர்களிடையும் அதிகமாக உள்ளது. செல்போன் இல்லாத மனிதர்களையே பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மாகாண பல்கலைக்கழகத்தின் 135 மாணவர்களிடம் ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் அதிகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மாணவர்கள் தனிமை உணர்வுக்கும், மனச்சோர்வுக்கும் ஆளாவது ஆய்வின் முடிவில் தெரிய வந்துள்ளது.

New_Layout__3_.jpg

சிலர் வலி நிவாரணிகளுக்கு அடிமையாவது போல ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் அதற்கு அடிமையாகி விடுவதாகவும், அதிகளவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதால் சகமனிதர்களிடம் முகம் பார்த்து பேசாமலிருப்பதே ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்துவோர் தனிமை உணர்வுக்கு தள்ளப்படுவதற்கான காரணம் எனவும்  ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

http://www.virakesari.lk/article/32739

வலி நிவாரண மாத்திரைகள் சிறுநீரகத்தை பாதிக்குமா..?

தலைவலி, கால் வலி, மூட்டு வலி, இடுப்பு வலி என வலிகள் வந்தவுடன் அதிலிருந்து விடுபட அருகிலுள்ள மருந்தகங்களுக்கு சென்று வலி நிவாரண மாத்திரைகளை வாங்கி சாப்பிடுபவர்கள் இன்றும் இருக்கிறார்கள். இது போல் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரையில்லாமல் வலி நிவாரண மாத்திரைகளைச் சாப்பிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவது உறுதி என்கிறார்கள் சிறுநீரக மருத்துவ நிபுணர்கள்.

சிறுநீரகங்களை முதலில் பாதுகாக்கவேண்டும். அதனை பாதுக்காக்க வேண்டும் என்றால் சர்க்கரை நோயை வருமுன் தடுக்கவேண்டும். அதனையும் கடந்து சர்க்கரை நோய் வந்துவிட்டால் அதனை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் உயர் இரத்த அழுத்தத்தையும் சரியான அளவில் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கவேண்டும். அதே போல் எக்காரணம் கொண்டு வலி நிவாரண மாத்திரைகளை வைத்தியர்களின் பரிந்துரையில்லாமல் சாப்பிடக்கூடாது. அதை அலட்சியப்படுத்திவிட்டு சாப்பிட்டால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படும்.

சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், சிறுநீர் கழிக்கும் போது அதில் இரத்தம் வெளியேறுதல், சிறுநீர் கடுப்பு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், கை கால் முகம் வீக்கம், அதிக சோர்வு, இரத்த சோகை, எளிதில் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஆகிய பாதிப்புகளை உடையவர்கள் தங்களது சிறுநீரகத்தின் செயல்பாடுகளை ஆறு மாதத்திற்கு ஒரு முறை பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதனை தவிர்த்தால் சிறுநீரகங்கள் பாதிக்கப்படுவது அதிகமாகி ஆபத்தை ஏற்படுத்தும்.

வைத்தியர் கோபால கிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/32799

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.