Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

புற்றுநோய்: எதனால் உண்டாகிறது? எவ்வாறு தவிர்ப்பது? #WorldCancerDay

உலகில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒன்றுக்கு காரணம் புற்றுநோய் என்று கூறுகிறது உலக சுகாதார நிறுவனம்.

cancerபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

புற்றுநோய் உண்டாவதற்கான கீழ்க்காணும் ஐந்து முக்கிய காரணிகளை அந்த அமைப்பு பட்டியலிடுகிறது.

  • புகையிலைப் பொருட்களை உட்கொள்வது
  • மது அருந்தும் பழக்கம்
  • அதிக உடல் எடையுடன் இருப்பது
  • குறைந்த அளவில் பழங்களையும் காய்கறிகளையும் உட்கொள்வது
  • உடல் உழைப்பு இல்லாமை

மேற்கண்டவற்றில் அதிகம் பேருக்கு புற்றுநோய் வரக் காரணமாக இருப்பது புகையிலைப் பழக்கம்தான். உலக அளவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் 22% பேரின் பாதிப்புக்கு காரணமாக இருப்பது புகையிலை மட்டுமே. அது புகைப் பிடித்தல் மட்டுமல்ல. வேறு எந்த வகையில் புகையிலைப் பொருட்களை உட்கொண்டாலும் புற்றுநோய் வர வாய்ப்புண்டு.

 

 

உலகில் ஆறு நொடிக்கு ஒரு நபரின் மரணத்துக்கு காரணமாக இருப்பது புகையிலையால் உண்டாகும் நோய்களே என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

புற்றுநோய் பல உறுப்புகளில் வந்தாலும் நுரையீரல், கல்லீரல், பெருங்குடல், வயிறு மற்றும் மார்பகம் ஆகிய உறுப்புகளிலேயே பெரும்பாலும் புற்றுநோய் உண்டாகிறது.

cancerபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநீண்டகாலம் ஆன்டி-பயாடிக் மருந்துகளை உட்கொள்பவர்களுக்கு புற்றுநோய் உண்டாக வாய்ப்புண்டு என்கிறது ஓர் ஆய்வு

எவ்வாறு புற்றுநோயைத் தவிர்ப்பது?

மேற்கண்ட புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை தவிர்ப்பதுடன், கதிர்வீச்சுகள், கற்று மாசுபாடு, பாலுறவின்மூலம் பரவும் எச்.பி.வி எனப்படும் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (Human papilloma virus) தொற்று, உள்ளிட்டவற்றைத் தவிர்ப்பதன் மூலம் புற்றுநோய் வருவதை தடுக்கலாம்.

எச்.பி.வி மற்றும் ஈரல் அழற்சி நோயை உண்டாகும் ஹெப்படிட்டீஸ்-பி வைரஸ் ஆகியவற்றுக்கு எதிரான தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வதன்மூலம் புற்றுநோய் உண்டாவதை தடுக்க முடியும். இந்த தடுப்பூசிகளை போடுவதன்மூலம் மட்டுமே ஆண்டுக்கு 10 லட்சம் உயிர்களை காப்பாற்ற முடியும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

http://www.bbc.com/tamil/science-42932583

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை பேஸ் பேக்

 
அ-அ+

பெண்களின் சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எலுமிச்சை பழத்தை பயன்படுத்தி நிரந்தர தீர்வு காண முடியும். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் எலுமிச்சை பேஸ் பேக்
 
* எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

* எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

* எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

* ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

201802071108366311_1_lemaon._L_styvpf.jpg

* பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.

* ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

* எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/02/07110837/1144497/Lemon-solution-for-skin-problems.vpf

Link to comment
Share on other sites

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் அறிகுறிகள், சிகிச்சைகள் என்னென்ன?

 
 

லகின் முதல் உயிர் எப்படித் தோன்றியிருந்தாலும், இப்போது அனைத்து உயிர்களும் கருவிலிருந்தே பிறக்கின்றன. அந்தக் கருவைச் சுமக்கும் கர்ப்பப்பை குறித்த சரியான புரிதல் இல்லாமல், பல உயிர்களை நாள்தோறும் இழந்துவருகிறோம். உலகில் லட்சக்கணக்கான பெண்களின் உயிர் போகக் காரணமாக இருப்பது, கர்ப்பப்பைவாய் புற்றுநோய்!  இந்தப் புற்றுநோய் வராமல் தடுக்க, பல முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை எடுத்தாலுமேகூட, மரணங்களைத் தடுக்க முடிவதில்லை. `ஒவ்வொரு நாளும் இந்தியாவில் 200 பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயால் இறக்கிறார்கள்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். ஆக, இந்தப் புற்றுநோய் இந்தியாவில் அவசியம் கவனிக்கப்படவேண்டிய ஒன்றாக உருவெடுத்திருக்கிறது. `உலக அளவில் வருடத்துக்கு 2,80,000 பெண்கள் இந்தப் புற்றுநோயால் இறக்கிறார்கள்’ என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். இவர்களில், 90 சதவிகிதம் பேர் ஏழ்மையான, நடுத்தர நாடுகளைச் சேர்ந்த பெண்கள்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்

 

கர்ப்பப்பைவாய் புற்றுநோய் வருவதற்கு முக்கியக் காரணம், ஹ்யூமன் பாபிலோமாவைரஸ் (Human papillomavirus-HPV). உடலுறவின்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மிக எளிதாகப் பரவக்கூடியது இந்த வைரஸ். 150-க்கும் மேற்பட்ட ஹெச்.பி.வி வைரஸ் வகைகள் இருப்பதாக மருத்துவ உலகம் கூறுகிறது. இதில், குறிப்பிட்ட இரண்டு வைரஸால் மட்டும் 70 சதவிகிதப் புற்றுநோய் ஏற்படுவதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

அறிகுறிகள்...

* மாதவிடாயின்போது அல்லது உடலுறவின்போது அதிக ரத்தம் வெளியேறுதல்

* உடலுறவின்போது கடுமையான வலி

* வெள்ளைப்படுதல்

* இடுப்பு, முதுகு, கால்களில் கடுமையான வலி

* அதிகச் சோர்வு

* வாந்தி

* உடல் எடை குறைதல்.

புற்றுநோயின் நிலைகள்

கர்ப்பப்பைவாய் புற்றுநோயின் நிலைகள்...

ஸ்டேஜ் 0: கர்ப்பப்பைவாய் பகுதி சிறிது தடித்துக் காணப்படும் (இது, புற்றுநோய் வருவதற்கு முந்தைய நிலை).

ஸ்டேஜ் I: கர்ப்பப்பை வாயில் மட்டும் நோய் காணப்படும்.

ஸ்டேஜ் IA: நுண்நோக்கியால் மட்டுமே பார்க்க முடியும்.

ஸ்டேஜ் IA1: கட்டி, 3 மில்லிமீட்டர் ஆழமாகவும், 7 மில்லிமீட்டர் அல்லது அதற்குக் குறைவான நீளமும் பரவியிருக்கும்.

ஸ்டேஜ் IA2: கட்டி, 3 முதல் 5 மில்லிமீட்டர் ஆழமாகவும், 7 மில்லிமீட்டர் அல்லது அதற்கும் குறைவான நீளம் பரவியிருக்கும்.

ஸ்டேஜ் IB: கட்டி, 5 மில்லிமீட்டருக்கு அதிக ஆழமாகவும், 7 மில்லிமீட்டருக்கு அதிகமாகப் பரவியிருக்கும்.

ஸ்டேஜ் IB1: கட்டி, 4 சென்டிமீட்டர் அல்லது அதற்குக் குறைவான அளவில் இருக்கும்.

ஸ்டேஜ் IB2: கட்டி, 4 சென்டிமீட்டருக்குப் பெரிதாகவும் மற்ற பகுதிகளுக்குப் பரவாமலும் இருக்கும்.

ஸ்டேஜ் II: கர்ப்பப்பைவாய் பகுதியிலிருந்து மற்ற பகுதிகளில் பரவியிருக்கும்.

ஸ்டேஜ் IIA: கர்ப்பப்பைவாய்ப் பகுதிக்கு அருகில் உள்ள திசுக்களில் பரவியிருக்கும்.

ஸ்டேஜ் IIA1: கட்டி, 4 செ.மீட்டரோ அல்லது அதைவிடச் சிறியதாகவோ இருக்கும். நிணநீர்க் கட்டிகள் இருக்காது.

ஸ்டேஜ் IIA2: கட்டி, 4 சென்டிமீட்டரைவிடப்  பெரியதாக இருக்கும். நிணநீர்க் கட்டிகள் இருக்காது.

ஸ்டேஜ் IIB: கட்டி, கர்ப்பப்பைவாய்ப் (Parametrial area) பகுதி முழுக்கப் பரவியிருக்கும். அருகிலுள்ள உறுப்புகளுக்குப் பரவியிருக்காது.

ஸ்டேஜ் III: கட்டி, இடுப்புப் பகுதியின் சுவர் (Pelvic wall) வரை பரவியிருக்கும். இதன் காரணமாக சிறுநீரகம் வீங்கியும், சிலருக்குச் செயல்படாமலும் போகும். 

ஸ்டேஜ் IIIA: கட்டி, யோனிக் குழாயின் மூன்றாவது பகுதி வரை பரவியிருக்கும். மற்றப் பகுதிகளுக்கு பரவியிருக்காது.

ஸ்டேஜ் IIIB: கட்டி, இடுப்புச் சுவரில் வளரத் தொடங்கும். இதனால் சிறுநீரகம் பாதிக்கப்படும். நிணநீர்க் கட்டிகளிலும் பாதிப்பு இருக்கும். கட்டி எந்த அளவிலும் இருக்கலாம்.

ஸ்டேஜ் IVA: புற்றுநோய், சிறுநீர்ப்பை மற்றும் மலக்குடல் வரை பரவியிருக்கும். மற்றப் பகுதிகளுக்குப் பரவாமலிருக்கும்.

ஸ்டேஜ் IVB: உடலின் மற்றப் பகுதிகளுக்கும் புற்றுநோய் பரவியிருக்கும்.

லட்சக்கணக்காகப் பெண்களை பலி வாங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் குறித்து நம்மிடையே போதுமான விழிப்புஉணர்வு இருக்கிறதா? `அது இல்லாததால்தான் பலி எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போகிறது’ என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். பெண்களைப் பலி வாங்கும் இந்தப் புற்றுநோய் குறித்து அரசு கவனம் செலுத்துகிறதா? 

புற்றுநோய்

சென்னை, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் விழிப்புஉணர்வு குறித்த நிகழ்ச்சி ஒன்று (8-2-2019) நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ``சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் `பெட் ஸ்கேன்’ மையங்கள் தொடங்கப்படவுள்ளன. மேலும், சென்னை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 60 கோடி ரூபாய் மதிப்பில் மண்டல புற்றுநோய் மையங்கள் விரைவில் தொடங்கப்படவுள்ளன’’  என்று கூறினார்.

கர்பப்பைவாய் புற்றுநோய் குறித்து பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர் சண்முகவடிவு சொல்கிறார்... ``கர்ப்பப்பைவாய் புற்றுநோய் பெரும்பாலும் உடலுறவின் காரணமாக வரக்கூடியது.  உடலுறவின்போது ஹெச்பிவி (HPV) என்ற வைரஸ், ஆணிடமிருந்து பெண்ணுக்குப்மருத்துவர் சண்முகவடிவு பரவும்.  ஹெச்பிவி வைரஸ், பெண்களின் கர்ப்பப்பைவாய்ப் பகுதியில் ஒட்டிக்கொண்டு, அந்தப் பகுதியில் ஏற்படும் காயங்களை குணமாகவிடாமல், புற்றுநோயை உண்டாக்கும். இந்தப் புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்துவிட்டால் குணப்படுத்திவிடலாம். 

வெள்ளைப்படுதல்தான் இதன் முக்கியமான அறிகுறி. திருமணத்துக்கு முன்பாக ஹார்மோன் மாற்றங்களால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படும். ஆனால், திருமணத்துக்குப் பிறகு ஏற்படும் வெள்ளைப்படுதல்,  கட்டியாகவும், நிறம் மாறியும், துர்நாற்றம் வீசுவதாகவும் இருக்கும். ஸ்கேன் மூலம் கர்ப்பப்பைவாய் புண்களைக் கண்டுபிடிக்க முடியாது.  அதை கண்ணால் பார்த்துத்தான் கண்டுபிடிக்க முடியும். இடுப்புவலி, வெள்ளைப்படுதல் போன்ற காரணங்களுக்காக என்னிடம் வரும் பெண்களுக்கு, கர்ப்பப்பைவாய்  புண்கள் இருக்கின்றனவா என்பதை நான் சோதித்துப்  பார்த்துவிடுவேன். 

உடலுறவில் ஈடுபடும்போது பெண்களுக்கு ரத்தம் வந்தால், உடனடியாக கர்ப்பப்பைவாய் புற்றுநோய் இருக்கிறதா என்று சோதனை  செய்ய வேண்டும். ரத்தம் கசிவது மிக மிக முக்கியமான அறிகுறி. சில பெண்களுக்கு ரத்தம் வராமல், உடலுறவின்போது வலி ஏற்படும். அப்படி இருந்தாலும் சோதனை  செய்துவிடுவது நல்லது. ஸ்டேஜ் 0 முதல் ஸ்டேஜ் 4 வரை கர்ப்பப்பைவாய் புற்றுநோயில் ஐந்து நிலைகள் இருக்கின்றன. இவை புற்றுநோயின் ஆரம்பநிலையாக இருந்தால், குணப்படுத்திவிடலாம். ஹெச்.பி.வி வைரஸ் பாதிக்காமல் தடுக்க, இப்போது தடுப்பூசிகள் வந்துவிட்டன. அவற்றைப் போட்டுக்கொண்டால் வைரஸ் பரவாமல்  தடுக்கலாம். குறிப்பாக, திருமணத்துக்கு முன்னதாகவே ஊசி போட்டுக்கொள்வது நல்லது. மொத்தம் மூன்று ஊசிகள், முதல் ஊசி போட்டு, ஒரு மாதம் கழித்து இரண்டாவது ஊசி, பின்னர் ஆறு மாதங்கள் கழித்து மூன்றாவது எனப் போட்டுக்கொள்ள வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் கர்ப்பப்பைவாய் புற்றுநோயைக் கண்டறிந்து சரிசெய்வதற்கான உபகரணங்கள் உள்ளன. ஆனால், அவற்றை  பயன்படுத்துவதற்கான பயிற்சிகள் மருத்துவர்களுக்கு வழங்கப்படுவதில்லை. மேலும், புற்றுநோய் அறிகுறி தென்பட்ட உடனேயே கர்ப்பப்பையை நீக்கும்  அறுவைசிகிச்சைதான் செய்கிறார்கள். அது தவறு. பெண்கள் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைகளைச் செய்வதில்லை. கர்ப்பப்பையை குழந்தை பெற்றுத்தரும் ஒரு மெஷின் என்று நினைத்துக்கொள்கிறார்கள். கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சை செய்துகொண்ட பெண்கள் இதய நோய்  உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். கர்ப்பப்பை, பெண்களுக்கு மிக முக்கியமான உறுப்பு. அதை உரிய காரணங்கள் இல்லாமல் நீக்குவது தவறு.  கர்ப்பப்பையை நீக்காமலேயே புற்றுநோயைக் குணப்படுத்தலாம். பாதிக்கப்பட்ட பகுதியை மட்டும் நீக்கினாலே போதுமானது. லேப்ராஸ்கோபி (Laparoscopy) மூலமாகவே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும். பெண் மருத்துவர்கள், காரணம் இல்லாமல் பெண்களின் கர்ப்பப்பையை நீக்க மாட்டார்கள் என்பது என் கருத்து. கர்ப்பப்பை நீக்க அறுவைசிகிச்சைகளுக்கு  அரசு இன்ஸ்யூரன்ஸ் கொடுக்கக் கூடாது. அப்படிக் கொடுப்பதால்தான் இதுபோன்ற தவறுகள் நடக்கின்றன. அரசு இதை நிறுத்தினாலே இதற்கான மாற்று மருத்துவத்துக்கு  மருத்துவர்கள் மாறிவிடுவார்கள். கர்ப்பப்பைவாய் புற்றுநோய் அறுவைசிகிச்சை செய்து கொண்டவர்கள் அதன் பிறகு, மூன்று ஊசிகள் போட்டுக்கொள்ள வேண்டும். இது குறித்த விழுப்புஉணர்வு பெருகினால், மரணங்களைத் தடுக்கலாம்’’ என்கிறார் சண்முகவடிவு. 

தடுப்பூசி

 

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணனிடம் பேசினோம்... ``உடலுறவின் மூலம் பரவும் ஹெச்.பி.வி வைரஸால் கர்ப்பப்பைவாய் பாதிக்கப்பட்டு,  அதிலிருந்து புற்றுநோயாக மாறுவதற்கு சுமார் 10 ஆண்டுகள் ஆகும். இந்தப் பத்து ஆண்டுகளில் கர்ப்பப்பைவாய்ப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். இந்த  மாற்றங்களை பாப் ஸ்மியர் (Pap smear) என்ற முறையில் தொடர்ந்து கண்காணிக்க முடியும். கண்காணிப்பதால் புற்றுநோய் வருவதற்கு  முன்னதாகவே, அந்தப் பகுதியை வெட்டியெடுத்து, சரிசெய்துவிடலாம். லூப் மற்றும் லீப் (Loop, Leep) அறுவைசிகிச்சை மூலம் புற்றுநோய்க்கு முந்தைய நிலையிலேயே சரி செய்துவிடலாம். பாப் ஸ்மியர் விழிப்புஉணர்வு நம்மிடையே இல்லாததால், நாம் ஆயிரக்கணக்கான பெண்களை இழந்துவருகிறோம்.  `Cervarix', `Gardasil' போன்ற ஹெச்.பி.வி தடுப்பூசிகளும் முழுவதுமாக புற்றுநோயிலிருந்து காப்பாற்றாது. நோயின் ஆரம்பநிலையில் அறுவைசிகிச்சை அல்லது  கதிரியக்கச் சிகிச்சை மூலம் 80 சதவிகிதம் வரை மிக எளிதாகக் குணப்படுத்திவிடலாம். நோய் முற்றிய நிலையில் பலன் தரக்கூடிய சிகிச்சைகள் இல்லை. கதிர்வீச்சு சிகிச்சை,  அறுவைசிகிச்சை, கீமோதெரபி போன்ற முறைகளை நோய் முற்றிய நிலையில் மாறி மாறிப் பயன்படுத்தலாம். ஆனால், பலன் கிடைக்குமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. இதற்கானத் தடுப்பூசிகளின் விலையும்  மிக அதிகம். இவற்றை, போலியோ சொட்டு மருந்துபோல அனைவருக்கும் கொடுக்க அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் பல கர்ப்பப்பைவாய் புற்றுநோய் மரணங்களைத் தடுக்க  முடியும். குறிப்பாக, இது குறித்து கிராமங்களில் விழிப்புஉணர்வை ஏற்படுத்தினால் மரணங்களைக் குறைக்கலாம்’’ என்கிறார் சரவணன்.

https://www.vikatan.com/news/health/115952-cervical-cancer-symptoms-signs-causes-stages-treatment.html

Link to comment
Share on other sites

இது இன­வி­ருத்­தியை பாதிக்குமாம் : இளவயதினரே எச்சரிக்கை.!

 

 

பிளாஸ்­டிக்கில் காணப்­படும் பால்­நிலை மாற்­றத்­திற்கு வித்­தி­டு­வதும் இன­வி­ருத்தி ஆற்­றலைப் பாதிப்­பதும் மார்பு மற்றும் விதைப்பை புற்­று­நோய்க்கு கார­ண­மா­ன­து­மான இர­சா­யனம் 86 சத­வீத இள­வ­ய­தி­னரின் உடலில் இருப்­பது புதிய பிரித்­தா­னிய ஆய்­வொன்றில் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

1960 களி­லி­ருந்து குறிப்­பிட்ட பிளாஸ்­டிக்கை உரு­வாக்கப் பயன்­படும் பைபீனோல் ஏ (பி.பி.ஏ.)  என்ற மேற்­படி இர­சா­யனம் தண்ணீர் போத்­தல்­க­ளிலும் பிளாஸ்டிக் கொள்­க­லன்­க­ளிலும் உணவுப் பொருட்­களை அடைக்கப் பயன்­படும்  தகர கொள்­க­லன்­க­ளுக்­குள்ளும்  உணவு பரி­மா­றப்­படும் பிளாஸ்டிக் தட்­டு­க­ளிலும் பிளாஸ்டிக்  கிண்­ணங்­க­ளிலும் பொது­வாகக் காணப்­ப­டு­கி­றது.

பெண்­களின் பாலியல் ஹோர்­மோ­னான ஈஸ்ட்­ரோ­ஜென்னைப்  பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் வகையில் செயற்­படும் இந்த இர­சா­யனம் ஆண்­களில் விந்­த­ணுக்கள் குறை­வது மற்றும் இன­வி­ருத்தி ஆற்றல் இழப்­பது என்­பனவற்றை ஏற்­ப­டுத்­து­வ­துடன் விதைப்பை புற்­று­நோய்க்கும் கார­ண­மா­கி­றது. அதே­ச­மயம் மேற்­படி இர­சா­யனம் பெண்­களில் மார்புப் புற்­று­நோயை  ஏற்­ப­டுத்­து­கி­றது.

பிரித்­தா­னிய எக்­ஸெட்டர் பல்­க­லைக்­க­ழக ஆய்­வா­ளர்­களால் மேற்கொள்­ளப்­பட்ட மேற்­படி ஆய்­விற்­காக 94  இள­வ­ய­தி­ன­ரது  சிறுநீர் மாதி­ரிகள் பெறப்­பட்டு ஆய்வு செய்­யப்­பட்­டது.  

இதன் போது ஆய்­வுக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்­களில் 86  சத­வீ­த­மா­ன­வர்­களின் சிறு­நீரில் பைபீனோல் ஏ இர­சா­யனம் இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

உணவுப் பொருட்கள் பிளாஸ்­டிக்கில் அடைக்­கப்­ப­டு­வது என்­று­மில்­லா­த­வாறு அதி­க­ரித்­துள்ள நிலையில் இந்த  இர­சா­யனம் மக்­க­ளது உடலில் சேர்­வதை தடுப்­பது சாத்­தி­ய­மற்­ற­தாக  மாறி­யுள்­ள­தாக நிபு­ணர்கள் அச்சம் வெளி­யிட்­டுள்­ளனர்.

இது தொடர்பில் இந்த ஆய்வில் பங்­கேற்ற மேற்­படி பல்­க­லைக்­க­ழ­கத்தின் மருத்­துவ பாட­சா­லையைச் சேர்ந்த பேரா­சி­ரியர் லோர்னா ஹரிஸ் தெரி­விக்­கையில், "உலகில்  பெரும்­பா­லான மக்கள் தின­சரி பைபினோல் ஏ இர­சா­ய­னத்தை உள்ௌடுத்து வரு­கின்­றனர். தற்­போ­துள்ள சட்­டங்­களின் பிர­காரம் இந்த இர­சா­யனம் எமது உணவில் சேர்­வதை தவிர்ப்­பது கடி­ன­மா­ன­தா­க­வுள்­ளது.  உணவுப் பொதி­யிடல் முறை­களில் எவை  அந்த இர­சா­ய­னத்தைக் கொண்­டி­ருக்­கின்­றன என அடை­யாளம் காண்­பது சிர­ம­மா­க­வுள்­ளது" என்று  கூறினார்.

பைபீனோல் ஏ இர­சா­யனம் மனித உட­லுக்கு பெரும் தீங்கை விளை­விக்கக்கூடி­யது என ஐரோப்­பிய இர­சா­யன முகவர் நிலையம் ஏற்­க­னவே எச்­ச­ரித்­துள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

பிளாஸ்­டிக்கை கடி­ன­மாக்கப் பயன்­படும் அந்த இர­சா­யனம் நீரி­ழிவு மற்றும்  இரு­தய நோய்­களை ஏற்­ப­டுத்தக் கூடி­யது என அந்த முகவர் நிலையம் கூறு­கி­றது.

மேற்­படி இர­சா­யனம் பற்­றுச்­சீட்­டுகள், மூக்குக் கண்­ணா­டிகள் மற்றும் இறு­வட்டு  பெட்­டிகள் என்­ப­வற்­றிலும் காணப்­ப­டு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://www.virakesari.lk/article/30312

Link to comment
Share on other sites

தலைமுடி வளர்ச்சிக்கான நவீன சிகிச்சை.!

 

 

இன்றைய திகதியில் மாசடைந்த சுற்றுப்புற சூழலில் பணியாற்றுவதாலும், பணிப் பளுவின் காரணமாக ஏற்படும் மன உளைச்சல் மற்றும் மன அழுத்தத்தாலும் தலைமுடி உதிர்தல் என்பது இளவயதிலேயே நடைபெறுகிறது.

news_image_health_8_1_18.jpg

தலைமுடி உதிர்விற்கு ஏராளமான சிகிச்சைகள் இருந்தாலும் தற்போது P.R.P (Platalet Rich Plasma) ஊசி மூலமான சிகிச்சை பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

இவ்வகையினதான சத்திர சிகிச்சையின் போது, எம்முடைய குருதியை எடுத்து, அதிலிருந்து எடுக்கப்படும் பிளாஸ்மாக்களை சிகிச்சைக்காகப் பயன்படுத்துவதால் பாதுகாப்பானதாக இருக்கிறது. அதே தருணத்தில் இவ்வகையினதான சத்திர சிகிச்சை அனைத்து வகையினதான சிகிச்சைகளுக்கும் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக முடி வளர்ச்சிக்கு இது அவசியமாகிறது. காம்ப்ளிகேசன் எதுவும் இல்லாததால் இதனை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால்  ஒரு சில கொஸ்மெடீக் மற்றும் பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணர்கள் இது தான் சரியான தீர்வு என்று உறுதியாகச் சொல்வதில்லை. ஏனெனில் இதனால் ஏற்பட்ட பக்கவிளைவுகள் குறித்த ஆய்வு இன்றும் தொடர்கிறது.

டொக்டர் சிவக்குமார்

தொகுப்பு அனுஷா.

http://www.virakesari.lk/article/30434

Link to comment
Share on other sites

கான்டாக்ட் லென்ஸ் அணிவது நல்லதா..?

 

 

இன்றைய திகதியில் பாடசாலைக்கு செல்லும் சிறார்கள் முதல் கல்லூரிக்கு செல்லும் இளம் பெண்கள் வரை பார்வைத்திறன் பாதிப்பால் கண்ணிற்கு கண்ணாடி அணிகிறார்கள். அதே போல் அலுவலகத்தில் பணியாற்றுபவர்கள் அதிலும் குறிப்பாக கணினி முன்பாக மணிக்கணக்கில் கண்ணை இமைக்காமல் பணியாற்றுபவர்கள் தங்களின் கண்களின் ஆரோக்கியம் குறித்து கவலைக் கொள்வதேயில்லை.

health_news_image_14_2_18.jpg

தற்போது மருத்துவ துறையின் வளர்ச்சியால் கண்ணாடி அணிவதை தவிர்க்க பலரும் கண்ணிற்குள் பொருத்தப்படும் லென்ஸ் அதாவது கான்டாக்ட் லென்ஸ் அணியத் தொடங்கிவிட்டார்கள். இது பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், இதனை பராமரிப்பது கடினம் என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒருவர் பார்வை திறன் குறைபாட்டிற்காக கான்டாக்ட் லென்ஸ் அணியத் தொடங்கினால், அதனை பராமரிப்பது குறித்து முழு விவரங்களையும் தெரிந்துகொள்ளவேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகிறார்கள். இதனை அணிந்து கொண்டு குட்டித்தூக்கம் கூட போடக்கூடாது. இரவு உறங்குவதற்கு முன் இதனை பாதுகாப்பாக எடுத்து, அதற்காகவே இருக்கும் பிரத்யேகமான பெட்டியில் வைக்கவேண்டும். ஒவ்வொரு அதனை அணிந்து கொள்வதற்கு முன் இதற்காகவே தயாரித்து வழங்கப்பட்டிருக்கும் திரவத்தில் சுத்தப்படுத்திக் கொண்ட பின்னரே அணியவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் இந்த லென்ஸில் தேவையற்ற புரதச்சத்துகள் படிந்துவிடக்கூடும். இதன் காரணமாக கண்ணின் விழித்திரை பாதிக்கப்பட்டு, பார்வை திறன் குறைபாடு வருவதற்கும் வாய்ப்புண்டு. முடிந்தவரை இதனை அணிவதைத் தவிர்க்கலாம். இதனை அணிந்தால் தங்களின் வாழ்வாதாரம் சிறக்கும் என்பவர்கள் மட்டுமே உரிய பாதுபாப்பு உணர்வுடன் இதனை அணிந்து கொள்ளவேண்டும். மற்றவர்கள் இதனை பொழுதுபோக்கிற்காக அணிவதை முற்றாக தவிர்க்கவேண்டும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா. 

http://www.virakesari.lk/article/30670

Link to comment
Share on other sites

அலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்

 

மாசு ஒவ்வாமையில் இரண்டு விதங்கள் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்குத் தாவரங்கள், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படலாம்.

 
அலர்ஜி என்னும் ஒவ்வாமை வரக்காரணங்கள்
 
பொதுவாக, சைனஸ் தொல்லை உள்ளவர்களுக்கு கடல் உணவுகளான இறால், நண்டு, கருவாடு ஆகியவை ஒவ்வாமை எனப்படும் அலர்ஜியை ஏற்படுத்தும். சிலருக்குப் பால், நட்ஸ் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இவர்கள் பாலுக்குப் பதிலாக தயிர், மோர், சோயா பால் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள், தானியங்களை பொறுத்தவரை ஒருவருக்கு எது சேர்கிறதோ அதை உணவாக உட்கொள்ளலாம்.

மாசு ஒவ்வாமையில் இரண்டு விதங்கள் உண்டு. கரப்பான் பூச்சி, கொசு போன்ற பூச்சிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். சிலருக்குத் தாவரங்கள், செல்லப்பிராணிகளால் ஒவ்வாமை ஏற்படலாம். நாம் பயன்படுத்தும் தலையணை உறைகள், போர்வைகளில் நம் கண்ணுக்குத் தெரியாத பூஞ்சைகள் வளர்ந்து தொல்லை தரும். அலர்ஜி உள்ளவர்கள் பாதிப்பிலிருந்து மீட்கும் ‘டஸ்ட் மைட் பில்லோ கவர்ஸ்‘ பயன்படுத்தலாம். ஈரப்பதமுள்ள சுவர்களில் பூஞ்சை பிடித்து அதனாலும் ஒவ்வாமை ஏற்படும்.

சிமெண்டு தொழிற்சாலை, பீடிசுற்றும் தொழில், பஞ்சு ஆலைகள், மிளகாய் மண்டிகள் போன்ற தொழில் செய்யும் இடங்களிலும் ஒவ்வாமை ஏற்படுவதுண்டு. ஏ.சி. அறைகளில் நீண்டநேரம் வேலை பார்ப்பவர்களுக்கும் பிரச்சினைகள் வரும்.

வாகனப்புகை, சிகரெட் புகை, காற்றில் பரவும் தூசு போன்றவற்றாலும் ஒவ்வாமை ஏற்படும். பயணத்தின்போது குறைந்தபட்சம் துணியால் மூக்கை மறைத்துக்கொள்வது நல்லது. சில பூக்களின் மகரந்தங்கள், ஒரு சில வாசனை திரவியங்கள் கூட ஒவ்வாமையை ஏற்படுத்தலாம்.

201802181427479845_1_Allergic._L_styvpf.jpg

குளிர்ந்த காற்று, மன அழுத்தம், சொத்தைப்பல், குடற்புழுக்கள், சிறுநீர்ப் பாதைத் தொற்று போன்றவற்றாலும்கூட சைனஸ் பாதிப்பு ஏற்படலாம். மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், மூக்கில் அரிப்பு, அடிக்கடி சளி பிடிப்பது ஆகியவை சைனசின் அறிகுறிகளாகும். சைனஸ் வந்தவர்களுக்கு தலைவலி, மயக்கம், இருமல், உணவின் வாசனை-சுவை அறியாமல் போவது, தொடர்ச்சியான காய்ச்சல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். சிகிச்சை எடுக்காவிட்டால் ஆஸ்துமாவாக மாறக்கூடும்.

புகைபிடிக்கும் பழக்கம் இருந்தால் உடனடியாக கைவிடவேண்டும். படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றை வாரம் ஒருமுறை வெந்நீரில் அலசி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். செல்லப்பிராணிகளை வீட்டில் வளர்க்கக் கூடாது. அவற்றின் அசுத்தங்கள், முடிகள் காற்றில் பறந்து ஒவ்வாமையை ஏற்படுத்தும். வீட்டில் கரப்பான் பூச்சி, கொசு போன்றவை இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

கொசுவர்த்திச்சுருள், மேட்ஸ், லிக்யூட் என்று எந்த கொசுவிரட்டியையும் பயன்படுத்தக் கூடாது. கொசுவர்த்திச்சுருளில் இருக்கும் பைரித்தான் என்னும் ரசாயனம் மிகவும் ஆபத்தானது. பஞ்சு, சணல் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட பொம்மைகளைத் தவிர்ப்பது நல்லது. இளஞ்சூடான நீரில் குளிப்பது நல்லது. கொதிக்கவைத்து ஆறவைத்த நீரைப் பருக வேண்டும். ஒவ்வொரு வேளைக்கும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை சூடாகச் சாப்பிடுவது நல்லது.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/02/18142748/1146511/Allergic.vpf

Link to comment
Share on other sites

சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும் உணவுப்பழக்கம்

 
அ-அ+

நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

 
 
 
 
சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணமாகும் உணவுப்பழக்கம்
 
தற்காலத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்தரபாண்டியன் சிறுநீரக பாதிப்பு பிரச்சனை குறித்து விளக்குகிறார்.

தீட்டிய அரிசி :

கடந்த காலங்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே சிறுநீரக பாதிப்பு வரும். தற்போது, 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கூட சிறுநீரக பாதிப்புக்காக சிகிச்சைக்கு வருகிறார்கள். சிறுநீரக பாதிப்புக்கு சர்க்கரை நோய் ஒரு முக்கிய காரணமாகும். சர்க்கரை நோய்க்காக சிகிச்சைக்கு போனால் மருத்துவர்கள் அரிசி உணவை குறைத்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

 
201802191024193115_1_kidneyinside._L_styvpf.jpg

நமது முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியை உண்டார்கள். சர்க்கரை நோய் எட்டிப்பார்க்கவில்லை. ஆனால், நாம் இன்று தீட்டிய அரிசியை சாப்பிடுகிறோம். இந்த தீட்டிய அரிசி என்பது அரிசி மணியின் மேல்புறத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும் பல்வேறு சத்துகளும் நீக்கப்பட்ட சர்க்கரை மட்டுமே. எந்த சத்துகளும் இல்லாத இந்த தீட்டப்பட்ட சர்க்கரை அரிசியை உண்டு வந்தால் உடலில் சர்க்கரை உயரும். சத்து நிரம்பிய கைக்குத்தல் அரிசியையும் சிறுதானியங்களையும் உண்டால் சர்க்கரை நோய் பாதிப்புக்கான வாய்ப்புகள் குறைவு. இதனால், சர்க்கரை நோய் மூலம் ஏற்படும் சிறுநீரக பாதிப்பையும் கட்டுப்படுத்தலாம்.

பாக்கெட் உப்பு தப்பு :

சிறுநீரகத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் மருத்துவர்கள் நோயாளியிடம் உணவில் உப்பு சேர்ப்பதை நிறுத்தச் சொல்வார்கள். நாம் உண்ணத் தகுந்த உப்பு என்பது கடலில் இருந்து நேரடியாக கிடைக்கும் பழுப்பு நிறத்தில் காணப்படும் ஒரு வகை உப்பு. இதில் மாங்கனீஸ், பொட்டாஷ் உள்பட உடலுக்கு மிகத்தேவையான சத்துகள் இருக்கின்றன. இந்த உப்பு வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் என்று பாலிஸ் செய்து சத்துகளை நீக்குகிறார்கள். கடைசியில் மிஞ்சுவது சோடியம் குளோரைடு உப்புதான். இந்த சத்தற்ற உப்பையே நாம் பயன்படுத்துகிறோம். இது அளவுக்கு அதிகமாக உடலில் சேரும் போது சிறுநீரகம் பழுதடையவே செய்யும். தீட்டப்படாத பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை பயன்படுத்தினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு குறைவு.

கசக்கும் சர்க்கரை :

நமது முன்னோர்கள் கரும்புச்சர்க்கரையை பயன்படுத்தினார்கள். இது உடலுக்கு நன்மை தரும். இன்று இந்த சர்க்கரையில் உள்ள சத்துகளை நீக்கி விட்டு சீனியாக விற்பனை செய்கிறார்கள். இந்த சீனி உடலில் சர்க்கரை அளவை உயர்த்தும். சர்க்கரை நோய் வருவதற்கான பாதிப்புகளை உருவாக்கும். சீனியை தவிர்த்தால் சிறுநீரகம் பாதிப்படைவதை தடுக்கலாம். சீனிக்கு பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்.

புதிய புதிய எண்ணெய் :

பல காலங்களாக நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினர். இவை இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட ஜீவ உறுப்புகளை பலப்படுத்துபவை. குறிப்பாக, இவை இதயம் தொடர்பான நோய்களை தடுக்க வல்லவை. இவற்றை விட்டு விட்டு சந்தையில் கிடைக்கும் புதிய புதிய தாவர எண்ணெய் வகைகளை பயன்படுத்துகிறோம். இவை சிறுநீரகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. இவற்றையும் தவிர்க்க வேண்டும்.

எனவே, சிறுநீரகம் தொடர்பான பாதிப்பு வரும் முன் தடுக்க மற்ற எல்லாவற்றையும் விட உணவு முறைகளில் கவனமாக இருப்பது நல்லது. இதன் மூலம் உடலின் சீரான இயக்கத்தையும் ஆரோக்கியத்தையும் உறுதி செய்யலாம். குறிப்பாக, சிறுநீரகம் தொடர்பான நோய்களை தடுக்கலாம்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/02/19102419/1146607/kidney-problem-foods-to-avoid.vpf

Link to comment
Share on other sites

``உணவு என விற்பனை செய்யப்படுபவை பெரும்பாலும் விஷங்களே!’’ - மருத்துவர் கு.சிவராமன்

 
 

ன்று நாம் மிகப் பெரிய வணிக வன்முறையைச் சந்தித்துக்கொண்டிருக்கிறோம். நீங்கள் சாப்பிடும், உங்கள் தட்டில் பரிமாறப்படும், கடைகளில் தேடிப்பிடித்துச் சாப்பிடும் அத்தனை உணவுகளும் எப்படிப் பயிராக்கப்படுகின்றன... எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன... எப்படிப் பக்குவப்படுத்தப்படுகின்றன... எப்படிப் பரிமாறப்படுகின்றன... என அனைத்துப் படிநிலைகளையும் ஆராயவேண்டியிருக்கிறது. அப்படி ஆராய்ந்தால், இவை அனைத்திலும் வணிக வன்முறை தலைத்தூக்கி நிற்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.

 

பாரம்பர்ய உணவுகள்

 

அண்மையில் சென்னை, ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் `சேவ் ஃபுட்ஸ் ஃபெஸ்டிவல்’ (Save Foods Festival) என்ற விழா நடந்தது. அதில்மருத்துவர் கு.சிவராமன் சித்த மருத்துவர் கு.சிவராமன் பங்கேற்று உரையாற்றினார்... தன் உரைக்கு அவர் மையப் பொருளாக எடுத்துக்கொண்டது இந்தப் பிரச்னையைத்தான். `எல்லாவற்றையும் வணிகமாக்கிவிட்ட இன்றைய நவீன உலகம் உணவையும் விட்டுவைக்கவில்லை’ என்ற நிதர்சனமான உண்மையை விரிவாகப் பேசினார் சிவராமன்... ``ஒரு காலத்தில் தொற்றுநோய்கள்தான் நமக்கு ஆபத்தானவையாக, உயிர்கொல்லியாக இருந்திருக்கின்றன. குறிப்பாக, இந்தியா சுதந்திரமடைந்த நாள்களில் அதாவது 1947-க்குப் பிந்தைய காலத்தில் காலரா, காசநோய், பிளேக் போன்ற தொற்றுநோய்களின் தாக்கம்தான் இங்கே அதிகமாக இருந்தது. இன்றைய மருத்துவ உலகம் இவற்றையெல்லாம் வெகுவாகக் குறைத்துவிட்டது. ஆனாலும், தொற்றுநோய்கள் அல்லாத பிற வாழ்வியல் நோய்களான சர்க்கரைநோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், உளவியல் நோய்கள் போன்றவற்றின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருக்கின்றன. இதற்கு, நம் குடும்பத்திலேயே நிச்சயம் ஓர் உதாரணம் இருக்கும். மாறுபட்டுப்போன நமது உணவுப் பழக்கமும், அதைத் தனது சந்தைப்படுத்துதலின் மூலம் சாதித்துக்கொண்டிருக்கும் வணிகர்களும்தான் இதற்கான காரணம்’’ என்றவர், நம் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

``வியாபாரமயமாகிப் போன இன்றைய உணவும், உணவுக்கான விலையும் சாமானியர்களை வெகுவாகப் பாதித்திருக்கின்றன. இந்த வியாபாரம் எங்கிருந்து தொடங்கியது?’’

``இது இன்று நேற்றல்ல... விவசாயம் என்றைக்கு விவசாயத் தொழில் நிறுவனங்களாக உருமாறியதோ, அன்றைக்கே உணவு வியாபாரமும் தொடங்கிவிட்டது. விளைவித்தவனுக்கும், உணவை உண்பவனுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இன்றைய வணிகத்துக்குப் பெரிய சந்தையை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இவர்களுக்கு இடையிலிருக்கும் வணிகர் மட்டுமே இதில் கொள்ளை லாபம் பார்க்கக்கூடியவராக இருக்கிறார். இதில் லாபம் வாடிக்கையாளருக்கும் இல்லை, உற்பத்தி செய்பவருக்கும் இல்லை. இதன் விளைவாகத்தான் நாம் இன்று நோய்களையும், விவசாயிகளின் தற்கொலைகளையும் சந்தித்துவருகிறோம். விவசாயிக்கு வருமானம் இல்லை, வாடிக்கையாளருக்கு சத்தான உணவு இல்லை. இந்தப் பிரச்னைகளைச் சரிசெய்ய வேண்டுமானால், நியாயமான வர்த்தக நடைமுறையைக் (Fair trade practice) கொண்டுவர வேண்டும். இதனால் மட்டுமே உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோர்களுக்கும் நியாயமான பகிர்தலை உருவாக்க முடியும்.’’

``சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாரம்பர்ய உணவு உண்பதை ஓர் அவமானமாகப் பார்க்கிறார்கள். மேலைநாட்டு உணவுகளைத் தேடித் தேடி சாப்பிடுகிறார்கள். மற்ற நாடுகளின் தட்பவெப்பநிலைக்கு உகந்த அந்த உணவுகள் நம் நாட்டு தட்பவெப்பநிலைக்கு உகந்ததாக இருக்குமா?’’

``உணவை நிச்சயம் உலகமயமாக்க முடியாது. ஜெர்மனியில் ஓடும் காரை இந்தியாவில் ஓடச் செய்யலாம். ஆனால், ஜெர்மனியில் சாப்பிடும் உணவை இந்தியாவில் உண்ண முடியாது. ஒருவரின் உணவுப் பழக்கம், அவர் வசிக்கும் தட்பவெப்ப நிலையையும், அவருடைய மரபணுவையும், அவர் செய்யும் தொழிலையும், அவரின் மனதையும் சார்ந்தது. இத்தாலியில் இருக்கும் பீட்சாவை நாம் சாப்பிடுவது, நம் மரபணுவுக்குப் பரிச்சயமில்லாத ரசாயனக் கலவையை உட்கொள்வது போன்றது. இந்த உணவுப் பழக்கம் வேறுவிதமாக வினையாற்றி, புதுப் புது நோய்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது.’’

உணவுகள்

``இன்றைய இளைய தலைமுறையினர் ஆரோக்கியத்தில் காட்டும் அக்கறை மிகவும் குறைந்துவிட்டது. இன்றைய அவசர உலகில், காலை உணவைத் தவிர்ப்பது, `குப்பை உணவுகள்’ என்று குறிப்பிடப்படும் உணவுகளைச் சாப்பிடுவதன் விளைவு எப்படிப்பட்டதாக இருக்கும்?’’

``நம்முடைய மருத்துவத்தின்படி காலை உணவு மிக முக்கியமான ஒன்று. இன்று பலரும் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு ஓட்ஸ் கஞ்சியைக் குடிக்கிறார்கள். உண்மையில் ஓட்ஸ் என்பதை குதிரைகளுக்குத்தான் கொடுப்பார்கள். இன்று `ஓட்ஸ்’ என்ற பெயரில் அவல் போன்று விற்கப்படுபவை, பல ரசாயனக் கலவைகளைக் கொண்டு பயிரிடப்பட்டு, பல்வேறு மாறுதல்களுக்குப் பிறகு வெறும் சக்கையாக மட்டுமே சந்தைக்குக் கொண்டுவரப்படுன்றன. இந்தியாவில் இருக்கும் கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சோளம் போன்றவைதான் சிறந்த காலை உணவாக இருக்க முடியும். இவை தவிர இட்லி, தோசை, கம்மங்கூழ், தினைப் பொங்கல் போன்றவற்றையும் நாம் காலை உணவாகச் சாப்பிடலாம். இவற்றைச் சாப்பிட முடியவில்லையென்றால், வாழைப்பழம், கொய்யாப்பழம், பப்பாளிப்பழம் அல்லது கைக்குத்தல் அவல் போன்றவை சிறந்த காலை உணவுகள்.’’

``இந்தியாவில் இளம் பெண்களை அதிகமாக அச்சுறுத்தும் நோய்கள் எவை?’’

``நான் மருத்துவக் கல்லூரியில் படித்த நாள்களில், `மார்பகப் புற்றுநோய் யாருக்கெல்லாம் வரலாம்?’ என்ற கேள்வி எழும்போதெல்லாம், திருமணம் ஆகாத, பால் புகட்டாத மகளிருக்கு முதுமையில்தான் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக நினைத்தோம். இந்த வருடக் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் பரவலாகக் காணப்படும் மார்பகப் புற்றுநோய் 30 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்களைத் தாக்கக்கூடியதாக மாறியிருக்கிறது. இளம் பெண்களைத் தாக்கும் மற்றொரு நோய் சினைப்பை நீர்க்கட்டிகள் (Polycystic ovarian disease). முன்பெல்லாம் இந்தக் கட்டிகள் யதேச்சையாக அல்ட்ரா ஸ்கேன் (Ultra scan) மூலம் கண்டறியப்பட்டன. ஆனால், இன்று பத்தில் இரண்டு பெண்களுக்கு இந்தச் சினைப்பை நீர்க்கட்டிகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தக் கட்டிகள் மூலம் பெண்களின் மாதவிடாய் சுழற்சி பாதிக்கப்படுவதோடு கருத்தரிப்பும் தள்ளிப்போகும் அபாயமும் இருக்கிறது. இதனால் பெண்கள் மனம், சமூகம், பொருளாதாரம்... என எல்லாவற்றாலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.’’

உணவே மருந்து

``நீங்கள் சொல்லும் `உணவே மருந்து’ என்ற கருத்து மக்கள் மத்தியில் தவறாகப் பொருள்கொள்ளப்படுகிறதே... `உணவு’ என்ற பெயரில் நாம் இன்று உண்பதெல்லாம் உணவுதானா... நீங்கள் `உணவே மருந்து’ என்னும் பெயரில் குறிப்பிடுவது எதை?’’

``இன்று உணவு என்ற பெயரில் விற்பனை செய்யப்படுபவை பெரும்பாலும் விஷங்கள்தான்! நாம் இங்கு உணவு என்று சொல்வது நமது மரபு சார்ந்த உணவுகளை. நாம் பாரம்பர்யமாக விளைவித்துவரும் உணவுப் பொருள்கள்தான், அனைத்து வகையான பிரச்னைகளுக்கும் உரிய தீர்வு.’’

``இன்று தூக்கம் முதல் பசி வரை எல்லாவற்றுக்கும் மருந்து, மாத்திரைகள் பெருகி வருவதுபோல், சமீபத்தில் அவற்றைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்வதற்கான காரணம் என்ன... இதற்கு சித்த மருத்துவம் கூறும் தீர்வு என்ன?’’

`` `மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

     அற்றது போற்றி உணின்.’

- இதுதான் சித்தமருத்துவம் கூறும் அடிப்படைக் கருத்து. நாம் சாப்பிட்ட உணவு முழுமையாக ஜீரணித்து முற்றிலுமாக உட்கிரகிக்கப்பட்ட பிறகு, அடுத்த வேளை உணவை உண்ண வேண்டும். இதைத்தான் சித்த மருத்துவம் `பசித்துப் புசி’ என்கிறது. ஆனால், இன்று பசி எடுக்காமலேயே பசி எடுக்க ஒரு மாத்திரை, உண்ட உணவைச் செரிக்கவைக்க ஒரு மாத்திரை என்று உட்கொள்ளும்போது அது நோயைக் கூட்டுகிறது என்பதைப் புரிந்துகொள்ளாமல் இன்றைய சமூகம் மருந்துகளுக்கு அடிமையாகிக்கிடக்கிறது.’’

உணவு என்ற பெயரில் நம்மைச் சுற்றிப் பின்னப்பட்டிருக்கும் மிகப்பெரிய சந்தையும், அதனால் நாம் சந்திக்கப்போகும் பின்விளைவுகளும், நினைப்பதைவிட மிகக் கொடியதாக இருக்கும் என்பதை மிக அழகாகச் சொன்னார் மருத்துவர் சிவராமன். அதற்கு அவர் மேற்கோள் காட்டிய வரி... ``இந்த ஒரு தலைமுறைதான் தன் அடுத்த தலைமுறையின் மரணத்தை அருகிலிருந்து பார்க்கப் போகும் தலைமுறை.’’

``இதில் நீங்களும், நானும், நம் சந்ததியும் இல்லாமல் இருக்க வேண்டுமென்றால், இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட, நம் நாட்டில் பாரம்பர்ய முறையில் உற்பத்தி செய்யப்பட்ட உணவுகளை உண்பதுதான் சிறந்த வழி’’ அழுத்தமாகச் சொல்கிறார் சிவராமன்.

https://www.vikatan.com/news/health/116876-dr-k-sivaraman-speaks-about-modernity-in-food.html

Link to comment
Share on other sites

48 மணி நேரத்துக்குமேல் உணவு அருந்தாமல் இருந்தால் உங்கள் உடம்பில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா?

 
 

காற்று, நீர், உணவு... இவை மூன்றும் உயிர் வாழ மிகவும் அவசியம். காற்றில்லாமல் சில நொடிகள் வாழலாம். நீர் அருந்தாமல் அதிகபட்சம் இரண்டு நாள்கள்... உணவில்லாமல் எத்தனை நாள்கள் வாழமுடியும்?  

 

உணவு

 

ஒரு சிலர் உடல் எடையைக் குறைக்கிறேன் பேர்வழி என்று இரண்டு, மூன்று நாள்கள் கூட சாப்பிடாமல் இருக்கிறார்கள். போலவே விரதம் இருக்கிறேன் என்றும் இப்படி சாப்பிடாமல் இருப்பவர்களும் உண்டு...  அப்படி இருக்கலாமா? சாப்பிடாவிட்டால் நம் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்..? 

" சாப்பிடாமல் இருப்பதன் விளைவுகள், ஒவ்வொருவரின் உடல் நிலையைப் பொறுத்து வேறுபடும். பொதுவாகச் சொல்வதென்றால்,  ஒருவேளை கூட உணவு  இல்லாமல்  அதிகபட்சம் 48 மணி நேரம் தாக்குப் பிடிக்கலாம்..." என்கிறார் பொதுநல மருத்துவர் மருத்துவர் சிவராமக் கண்ணன்சிவராமக்கண்ணன். 

மேலும் இதுகுறித்து விரிவாகப் பேசியவர், "இரண்டு நாள்களுக்கு மேல் சாப்பிடாமல் இருந்தால், தசைகளில் உள்ள கிளைக்கோஜனையும் (Glycogen), கல்லீரலில் உள்ள குளுக்கோசையும் (Glucose) நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இவை இரண்டும் குறைந்துவிட்டால் அடுத்ததாக உடலில் உள்ள கொழுப்புகள் கரையத் தொடங்கும். இறுதியாக, செல்களில் உள்ள புரதத்தை நம் உடல் எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும். இது மிகவும் அபாயகரமான நிலை.  இந்தநிலைக்கு  'கெடோசிஸ்' (ketosis) என்று பெயர். 

உடல் இந்த நிலையை எட்டிவிட்டால்,  மிகவும் பலகீனமடைந்து விடுவோம். கடும்  சோர்வு உண்டாகும். தசைகள் வலுவிழக்கும். எலும்புகள் பலமிழந்து உடையத் தொடங்கும். இதயத் தசைகள் வலுவிழப்பதால் ரத்தத்தை பம்ப் செய்யும் ஆற்றல் குறையும். அதன் காரணமாக குறைந்த ரத்த அழுத்தம் உண்டாகும். பல்ஸ் ரேட் குறையும். அல்சர் பாதிப்பு ஏற்படும். உடல் குளிர்ச்சியடையும். முடி கொட்டும்.

மனித உடல்

72 மணி நேரத்தைக் கடந்துவிட்டால்  உடலில் ஏற்கெனவே சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் புரதத்தை உடல் தின்ன ஆரம்பித்துவிடும். இதற்குப் பிறகு நிகழ்பவை எல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக மரண வாயிலுக்கு அழைத்துச் செல்லும் நிகழ்வுகள்தான். முதலில் சிறுநீரகம், இதயம் ஆகியவையும் பாதிப்படைய ஆரம்பிக்கும். அடுத்ததாக, உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புக்களாக செயலிழக்கத் தொடங்கும். 

இது பொதுவான கருத்து, ஆனால்,  உணவில்லாமல் எழுபது நாள்கள் வரை உயிர் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள். ஐரீஷ் நாட்டு அரசியல் கைதியான  டெரன்ஸ் மேக்ஸ்வைனி (Terence MacSwiney) அதிகபட்சமாக 73 நாள்கள் சாப்பிடாமல் இருந்துள்ளார். அவருடன் போராட்டத்தில் இருந்த பலர் 46 நாள்கள் வரைத் தாக்குப்பிடித்து பிறகு இறந்திருக்கிறார்கள். மெட்ராஸ் மாகாணத்திற்கு,  'தமிழ்நாடு' என்று பெயர் சூட்டக்கோரி சங்கரலிங்கனார் 76 நாள்கள் வரை உண்ணாவிரதம் இருந்து இறந்திருக்கிறார். 

எனவே உணவில்லாமல் ஒருவர்  எத்தனை நாள்கள் உயிர்வாழலாம் என்பதை அவரின்  உடல்நலம், உயரம்,  சுற்றுப்புறச்சூழல் ஆகிய மூன்றும்தான்  தீர்மானிக்கிறது. பி.எம்.ஐ 12- 12.5 என்ற அளவில் இருப்பவர்கள் பட்டினியாக இருக்கவே கூடாது. அதுபோல, போதிய அளவு  சாப்பிடாவிட்டாலும் இது போன்ற பிரச்னைகள் உண்டாகும்.  'ஈட்டிங் டிஸ்ஆர்டர்' (eating disorders) பாதிப்புகள் ஏற்படும். 

விரதம் இருக்கவேண்டும் என்றால், நல்ல ஆரோக்கியம் கொண்ட ஒருவர்  அதிகபட்சம் 8  மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அவரது இயல்பைப் பொறுத்து விரதம் இருக்கலாமே தவிர, அதற்குமேல் உணவருந்தாமல் இருக்கக்கூடாது. " என்றார்.

இப்படியான விரதங்களால் உண்டாகும் நன்மைகள்:

உடற்பருமன் ஏற்படாது.

சர்க்கரை நோய் வராது.

இன்சுலின் உணர்திறன் மேம்படும்.

உடற்பருமன்

நல்ல கொழுப்பு அதிகரிக்கும்.

டிரைகிளிசிரைடு (Triglycerides) அளவு குறையும். 

மூளை விரைவில் சோர்வடையாது. 

https://www.vikatan.com/news/health/116938-what-will-happen-in-your-body-if-you-dont-eat-anything-for-48-hours.html

Link to comment
Share on other sites

இருதய நோயாளிகளின் பாதுகாப்பான உடற்பயிற்சிக்கு உதவும் பீட்ரூட் சாறு!

 

 
beetrootjuicefeb23

இருதய நோயாளிகளின் உடற்பயிற்சித்திறனை மேம்படுத்த பீட்ரூட் சாறு உதவுவதாக மருத்துவ ஆய்வு ஒன்று கண்டுபிடித்துள்ளது.

இருதய நோயாளிகளின் உடற் பயிற்சித் திறன் என்பது அவர்கள் ஆயுளைக் கூட்டுவதோடு அவர்களின் அன்றாட நோய்த்தாக்கமற்ற இருப்பையும் உறுதி செய்கிறது என்கிறது இந்த அமெரிக்க ஆய்வு.

பீட்ரூட் சாற்றில் உள்ள டயட்டரி நைட்ரேட் என்பதன் தாக்கத்தை இவர்கள் ஆய்வு செய்தனர். இதற்காக இருதய நோயாளிகள் 8 பேரை ஆய்வுக்கு அழைத்தனர். அதாவது இருதயத் தசை திறம்பட சுருங்காமல் போதிய ஆக்சிஜன் ரத்தத்திற்கு கிடைக்காமல் போய் விடுகிறது.

உலகம் முழுதும் இருதய நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர், இவர்களில் பாதிப்பேருக்கு இருதய தசை திறம்பட சுருங்குவதில்லை இதனால் ஆக்சிஜன் போதாமை ஏற்படுகிறது. இதனால்தான் இவர்களுக்கு பெரும்பாலும் மூச்சிரைப்பு ஏற்படுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இத்தகைய நிலைமைகளினால் பலர் உடற்பயிற்சியையே நிறுத்த நேரிடுகிறது.

பீட்ரூட் சாறு இதற்கு விடையளிப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது, அதாவது பீட்ரூட் சாறு ஆக்சிஜன் அளவை அதிகரிப்பதால் உடற்பயிற்சியை சிரமமில்லாமல் மேற்கொள்ள முடியும் என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

அதாவது இருதய நோயாளிகளுக்கு பீட்ரூட் ஜூஸ் உள்ளிட்ட நைட்ரேட்களை எடுத்துக் கொள்வதன் மூலம் இருதய தசை வலுவடைகிறது .

உடற்பயிற்சி செய்யும் போது இந்த நைட்ரேட்கள் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றமடைகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தம், இருதய ஆரோக்கியம் ஆகியவை பராமரிக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது. பொதுவாக நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டும் பயிற்சி, நீச்சல் பயிற்சியில் ஈடுபடும் போது உடலுக்குள் மேலும் ஆக்சிஜனைக் கொண்டுவர மூச்சு விடுதல் அதிகரிக்கிறது. இதற்கு பீட்ரூட் ஜூஸ் உள்ளிட்ட நைட்ரேட்கள் உதவுகின்றன.

இந்த ஆய்வின் முடிவுகள் ஜர்னல் ஆஃப் கார்டியாக் ஃபெயிலியூர் என்ற இதழில் வெளியாகியுள்ளது.

http://tamil.thehindu.com/world/article22835443.ece?homepage=true

Link to comment
Share on other sites

இருதயத்தை காப்பது அவசியம்

அ-அ+

இருதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, செயற்கை குறைபாடு, சுருக்கம் போன்றவை இருதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை.

 
 
 
 
இருதயத்தை காப்பது அவசியம்
 
மனித உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் மூலம் பிராணவாயு மற்றும் உணவுச் சத்துகளை செலுத்தி வருவது இருதயமே. உடலின் எல்லா உறுப்புகளின் செயல்பாட்டிற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியமாகிறது. ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இருதயத்தின் செயல்பாடு சீராக இருக்க வேண்டும். இருதயம் சீராக நடைபெற மற்ற உறுப்புகளைப் போலவே இருதயத்திற்கும் தங்கு தடையில்லாத ரத்த ஓட்டம் அவசியம். ஆனால் இருதயத்திற்கு ரத்தம் கொண்டு செல்லும் ரத்தக்குழாய்களின் அடைப்பு, செயற்கை குறைபாடு, சுருக்கம் போன்றவை இருதயத்தின் செயல்பாட்டை பாதிக்கக்கூடியவை. இதுவே இருதய ரத்தக்குழாய் நோய் எனப்படுகிறது.

இருதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் தடை ஏற்படும்போது அங்கு ரத்தம் தேங்குவதால் அங்கு ரத்தக்கட்டு உண்டாகி விடுகிறது. இந்த ரத்தக்கட்டு சிறு துணுக்காக பெரிய குழாயிலிருந்து சிறு குழாய்களுக்குள் செல்லும்போது அடைப்பை ஏற்படுத்தி அந்த ரத்தக்குழாய் போய் சேரும் இருதய தசைக்கு ரத்தம் போய் சேராமல் தடுத்து விடுகிறது. இதனால் இருதயத்தின் அந்த பகுதி தசை செயலிழந்து விடுகிறது.

இதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கிறதோ அந்த அளவிற்கு இருதயத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு உயிர் இழப்பும் ஏற்படலாம். இதையே மாரடைப்பு என்கிறோம். இருதய ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பு மற்ற ரத்தக் குழாய்களிலும் கூட ஏற்படலாம். மூளைக்கு ரத்தம் செல்லும் குழாயில் அடைப்பு ஏற்பட்டு மூளை செல்கள் செயலிழந்தால் அதை ஸ்ட்ரோக் என்கிறோம். இதே போல் கை, கால்களின் ரத்தக் குழாய்களிலும் கூட அடைப்பு ஏற்பட்டு உடலின் செயல்பாடு பாதிக்கப்படலாம்.

புகை பழக்கத்தை அறவே ஒழித்து விட வேண்டும். மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். உயர் ரத்த அழுத்தம் இருந்தால் அதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். நீரிழிவு இருப்பின் அதையும் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். உடல் பருமன் இருந்தால் தகுந்த உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு மூலம் சரி செய்ய வேண்டும். அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும், பிரச்சினை இருப்பின் மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை முறையாக எடுத்துக்கொள்ள வேண்டும். சுறுசுறுப்பான உடலுழைப்பு மற்றும் செயல்பாடு இருந்தால் ரத்த ஓட்டம் உடலில் சீராக நடைபெறும். வாரத்தில் 5 நாட்களாவது துரிதமான உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவை மூலம் இருதயத்தின் செயல்பாட்டை துரிதப்படுத்தி ரத்த ஓட்டத்தின் சிறு தடைகளை நீக்கி, ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும்.

இருதயத்திற்கு இதமான உணவு வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒமேகா 3, ஒமேகா 6 போன்றவை நிறைந்த வஞ்சரம், காலா, வவ்வால் போன்ற மீன் வகைகள் சோயா, பீன்ஸ், முழு கடலை, வேர்க்கடலை போன்ற பயறு வகைகள் பூண்டு, இஞ்சி, நல்லெண்ணெய் (மோனோ அன்சாச்சுரேட்டட்) போன்ற உணவுகளையும், பச்சை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் அதிகஅளவில் உணவில் சேர்த்துக் கொள்வதும் இதய ரத்தக்குழாய் மற்றும் உடலின் எல்லா உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லதாகும்.

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/02/26081633/1147766/necessary-to-protect-the-heart.vpf

 

 

கொழுப்பை கரைக்கும் சலபாசனம்

 
அ-அ+

கொழுப்பை கரைக்க யோகாவில் எவ்வளவோ ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சலபாசனா. இதன் செய்முறையை பார்க்கலாம்.

 
 
 
 
கொழுப்பை கரைக்கும் சலபாசனம்
 
கொழுப்பை கரைக்க யோகாவில் எவ்வளவோ ஆசனங்கள் உண்டு. அதில் ஒன்றுதான் சலபாசனா. உடல் எடையை குறைக்க இந்த ஆசனம் மிகச் சிறந்த ஆசனம் என யோகா பயிற்சியாளர்கள் கூறுகிறார்கள்.

செய்முறை : முதலில் தரை விரிப்பில் குப்புற கால் நீட்டிப் படுத்துக் கொள்ளுங்கள். கைகளை பக்கவாட்டில் வைத்துக் கொள்ளவும். தலையை நேராக வைத்துக் கொள்ளுங்கள். நாடி தரையில் பதிய வேண்டும்.

ஆழ்ந்து மூச்சை விட்டு, மெதுவாக தலையை உயர்த்துங்கள். மார்புப் பகுதிவரை வரை மேலே தூக்குங்கள். பின்னர் கால்களையும் தொடைப்பகுதியையும் அவ்வாறே தூக்கவேண்டும்.

இடுப்பு மட்டுமே தரையில் இருக்க வேண்டும். படகுபோல தோற்றம் இருக்கும். கைகளையும் பின்னாடி கொண்டு செல்லுங்கள். சில நொடிகளில் இந்த நிலையில் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டபடி இருங்கள். பின்னர் மெதுவாய் தளர்ந்து, இயல்பு நிலைக்கு வர வேண்டும். இதுபோல் 8-10 முறை செய்யலாம்.
கழுத்து, முதுகுத் தண்டில் அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை செய்வது தவிர்க்கவும்.

பலன்கள் : உடல் எடை குறையும். தசைகள் வலுப் பெறும், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். அடிவயிற்றில் கொழுப்புகளை கரைக்கும். அங்குள்ள உறுப்புக்களை நன்றாக இயங்க வைக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். முதுவலி நீங்கும்.

https://www.maalaimalar.com/Health/Fitness/2018/02/26092952/1147777/salabhasana-reduce-body-weight.vpf

Link to comment
Share on other sites

உணவில் சர்க்கரையின் அளவு கூடினால் நீரிழிவுடன் புற்று நோயும் தாக்குமா? - உலகச் சுகாதார அமைப்பின் எச்சரிக்கை ரிப்போர்ட்

 

 
sugar%20image

புதுடெல்லி காரி பாவோலி மார்க்கெட் பகுதியில் ஒரு வியாபாரி சர்க்கரையை எடுத்துவைக்கும் காட்சி

உணவில் சர்க்கரை கூடினால் நீரிழிவு, கேன்சருக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் அதற்கு மாற்றாக செய்யவேண்டியது என்னவென்றும் உலக சுகாதார அமைப்பு ஒரு சிறு அறிக்கை வெளியிட்டுள்ளது.

நம் தினசரி உணவு முறைகளில்  சர்க்கரை கூடினால் நீரிழிவு,  மற்றும் புற்று  நோய் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. அதற்கு மாற்றாக நாம் செய்யவேண்டியது என்ன:

'நம் உணவில் ஒரு நாளைக்கு எவ்வளவு சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்?' - என்ற கேள்விக்கு உலக சுகாதார அமைப்பு (டபிள்யூ எச் ஓ) ஒரு நாளைக்கு அதிகபட்சம் 12 தேக்கரண்டி சர்க்கரை எடுத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறது.

உணவில் சர்க்கரை கூடுவது எடை அதிகரிப்புக்கு காரணமாகும், இந்த சர்க்கரை இப்பொழுது நீரிழிவு நோயிலிருந்து சில வகையான கேன்சர்வரை அதிகமான நோய் ஆபத்துகளுடன் இணைந்துள்ளது.

பழங்களிலும் பாலிலும் சேர்ந்துள்ள சர்க்கரையை டாக்டர்கள் சேர்க்கப்பட்ட சர்க்கரையாகக் கருதுவதில்லை. பழங்களில் இயற்கையாகவே உள்ள சர்க்கரையுடன் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் பிராணவாயுவை அதிகரிக்கும் சத்துக்கள் அதிக அளவில் உள்ளன.

மற்ற உணவு வகைகளைவிட பழங்களிலும் காய்கறிகளிலும் அதிக அளவில் சத்துக்கள் உள்ளன. குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு 5 பழங்களாவது காய்கறிகளாவது ஒருவர் எடுத்துக்கொள்வது நல்லது. ஆனால் பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் பானங்களிலும் பெரிய அளவில் கூடுதல் சர்க்கரை சேர்க்கப்படுவது நம் கண்களுக்குத் தெரியாதது

சர்க்கரையை சிறியவர்களும் பெரியவர்களும் நேரடியாக அல்லாமல் உணவுப் பொருட்களின் வழியாக அதிகபட்சம் 12 தேக்கரண்டிகள் எடுத்துக்கொள்ளலாம்.

சமைக்கப்பட்ட அல்லது தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்களிலும் பானங்களிலும் மற்றும் தேன், பழச்சாறு, பாட்டில்களில் வரும் இனிப்பு திரவம் ஆகியவற்றில் இயற்கையாக சர்க்கரை உள்ளன.

திட-திரவ உணவுகள்

இதற்கிடையில், திட உணவை விட திரவங்களில்தான் அதிக கலோரிகள் இருப்பதாகவும் அதுவே எடைகூடுவதற்கு வழிவகுப்பதாவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

நம் உடலானது திட உணவுகளில் உள்ள சர்க்கரை அளவை சிதைத்துக் குறைக்கிறது. ஆனால் இதே பணி திரவ உணவுகளைப் பொறுத்தவரை சற்று தாமதமாகத்தான் நடைபெறுகிறது.  அதனால்தான் ஊட்டச்சத்துக் குறைவன கலோரிகள் கொண்ட இனிப்பு வகை பானங்களை நாம் விரைவுகதியில் உட்கொண்டாலும் திட உணவு போல் வயிறு நிரம்பியதாக நாம் உணர்வதில்லை.

"குழந்தை பருவத்தில் தொடங்கும் அதிக எடை மற்றும் உடல் பருமன் - டைப் 2 நீரிழிவு, இதய நோய்கள், பக்கவாதம் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல தொற்றுநோயற்ற நோய்களுடன் இணைக்கப்பட்டுள்ளது'' என்கிறார்கள் மருத்துவர்கள்.

http://tamil.thehindu.com/opinion/reporter-page/article22866652.ece?homepage=true

Link to comment
Share on other sites

பெற்றோருக்கு பிரித்­தா­னிய ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரிக்கை.!

 

 

வீட்டில் குறும்பு செய்து குழப்பம் விளை­விக்கும் சின்­னஞ்­ சி­றார்­களை  அமை­திப்­ப­டுத்தி ஓரி­டத்தில் அமர வைப்­ப­தற்கு   அவர்­க­ளுக்கு ஐபாட் கணினி விளை­யாட்­டு­களை விளை­யாட பெற்றோர்  அனு­ம­திக்கும் போக்கு  அதி­க­ரித்து வரு­கி­றது. அதே­ச­மயம் சில வீடு­களில்  உண்ண அடம்­பி­டிக்கும்  குழந்­தை­க­ளுக்கு  ஐபாட்டில் வேடிக்கை காட்­சி­களை  காண்­பித்து உண­வூட்டும் நடை­மு­றையும் காணப்­ப­டு­கி­றது.

இந்­நி­லையில் இவ்­வாறு ஐபாட் உப­க­ர­ணத்­துக்கு பழக்­கப்­படும் சிறு­வர்­க­ளுக்கு  கைவிரல் தசை­க­ளி­லா­ன விருத்தி பாதிக்­கப்­பட்டு எதிர்­கா­லத்தில்  பென்­சில்­களைக் கூட  ஒழுங்­காக பிடிக்க முடி­யாத நிலைக்கு அவர்கள் தள்­ளப்­ப­டு­வ­தாக பிரித்­தா­னிய குழந்தை நல மருத்­துவ ஆய்­வா­ளர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

விரல்­க­ளி­லுள்ள தசை­களின் விருத்­திக்கு உதவும்  பாரம்­ப­ரிய ரீதி­யான விளை­யாட்டுப் பொருட்­க­ளுக்கு பதி­லாக  தொடு­கை­யு­ணர்­வு­டைய கைய­டக்கத் தொலை­பேசி திரைகள் மற்றும்  ஐபாட்­டுகள் என்­ப­வற்றை  அள­வுக்­க­தி­க­மாக உப­யோ­கிக்கும் சின்னஞ் சிறார்கள்  எதிர்­கா­லத்தில் பென்­சிலைக் கூட சரி­யாகப் பிடிக்க முடி­யாத நிலைக்குத் தள்­ளப்­ப­டு­வ­தாக   மேற்­படி ஆய்­விற்கு தலைமை தாங்­கிய இங்­கி­லாந்து  தேசிய மருத்­து­வ­மனை  நம்­பிக்கை மன்­றத்தின் தலைவர்  சால்லி பேய்ன் தெரி­வித்தார்.

10  வரு­டங்­க­ளுக்கு முன்னர் சிறு­வர்­க­ளாக இருந்­த­வர்­களின்  விரல்­க­ளுக்கு இருந்த  பலம்  தற்­போ­துள்ள சிறு­வர்­களில் பல­ருக்கு இல்­லா­துள்­ள­தாக  தெரி­வித்த அவர், இன்றைய கால சிறு­வர்கள்  தமது ஆரம்பக் கல்வி உள்­ள­டங்­க­லாக அனைத்துக் கற்றல் தேவைப்­பா­டு­க­ளுக்கும் தொடு­கை­யு­ணர்­வுள்ள  ஐபாட்­க­ளையும் டப்லட் கணி­னி­க­ளையும்   பயன்­ப­டுத்தும் நிலைமை காணப்­ப­டு­வது கவலை தரு­வ­தா­க­வுள்­ள­தாக கூறினார்.

http://www.virakesari.lk/article/31050

Link to comment
Share on other sites

நாள் முழுக்க நாற்காலியில் உட்கார்ந்திருக்கீங்களா... ரிஸ்க் பாஸ்!

 

ணவு, உடை, வாழ்க்கை முறை அனைத்திலும் இன்றைக்கு அசாத்தியமான மாற்றம்! நம் பாரம்பர்ய வாழ்க்கை முறையை மெள்ள மெள்ளத் தொலைத்துவருகிறோம். கேட்டால், `இதாம்ப்பா ட்ரெண்ட்’ என்கிறார்கள். நம் வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றத்துக்கும் நம் உடல் ஆரோக்கியத்துக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு. அவற்றில் நாம் உட்காரும் முறையும் நாற்காலியும்கூட நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை நம்பித்தான் ஆக வேண்டும். 

நாற்காலி அமர்ந்தே இருப்பது

 

தொழில்நுட்ப வளர்ச்சி உச்சம் தொட்டிருக்கும் இந்தக் காலத்தில், உடல் உழைப்பு என்றால் என்ன என்பதே தெரியாதவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதன் காரணமாகவே ஆரோக்கியக் குறைபாடு என்னும் அவலத்துக்குள்ளாகிறார்கள். வேலை முடிந்து அலுத்து, களைத்துபோய் வரும் யாராக இருந்தாலும் வீட்டுக்குள் நுழைந்தவுடன் சொல்கிற வார்த்தை... `ஷ்ஷ்ஷ்... ஷப்பா...’  பிறகு அவர்கள் தங்களைச் சாய்த்துக்கொள்வது நாற்காலியில்! கொஞ்சம் ரீவைண்ட் செய்து பார்த்தால், அவர்களின் களைப்புக்குக் காரணமே ஒரே இடத்தில், நீண்ட நேரமாக நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்ததாகத்தான் இருக்கும். உடலுழைப்புத் தந்து செய்யும் வேலைகளைவிட, ஒரே இடத்தில் அமர்ந்து செய்யும் வேலைகளால்தான் நமது உடல் அதிகமாகச் சோர்வடைகிறது. 

சாப்பிட, தூங்க, டி.வி பார்க்க, அன்பானவர்களுடன் அமர்ந்து பேச... என எல்லாவற்றுக்கும் நாம் பயன்படுத்துவது நாற்காலியைத்தான். நம் பாட்டிமார்கள் இருக்கும் வீடுகளில் நடைமுறை வேறாக இருக்கும். வயலோ, ஆபிஸ் வேலையோ... வீட்டிற்குள் நுழைந்தவுடனேயே இப்படிச் சொல்வார்கள்... 'வந்தவுடனே சோபா மேல சாயாதே... கீழே காலை நீட்டி உட்காரு...' இது போன்ற பாட்டிகளின் அறிவுரை கிடைக்காததால்தான் நாற்காலியால் நமக்கு ஏற்படும் பிரச்னைகளை அறியாமலிருக்கிறோம். 

மேற்கத்திய நாகரிகம் நம்மிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் கொஞ்ச நஞ்சமல்ல. முக்கியமாக நம்மில் பலரின் வாழ்வே நாற்காலியில்தான் கழிகிறது. படிப்பு, சாப்பாடு, எழுதுவது, ஏன்... சிலர் உறங்குவதற்குக்கூட நாற்காலியையே பயன்படுத்துகிறார்கள். நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் நமக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து விளக்குகிறார் எலும்பு மூட்டு நிபுணர், செந்தில் வேலன்... 

``முன்பெல்லாம் 50 வயதுகளில்தான் மூட்டுத் தேய்மானம் ஏற்படும். இப்போது, உடல் உழைப்பு குறைந்துவிட்டதால், உடல் உறுப்புகளின் சீரான செயல்பாடு இல்லாமல் போகிறது. அது, மூட்டுத் தேய்மானத்துக்கு வழிவகுக்கும். நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால், நமது கால்களிலேயே ரத்தம் தங்கிவிடும். உடலுக்குத் தேவையான ரத்த ஓட்டம் நிகழாமல் போய்விடும். 

மூட்டுத் தேய்வானம்

உடலின் வளர் சிதை மாற்றத்தில் குறைபாடு ஏற்படும்போது, நாம் சாப்பிடும் உணவே எனர்ஜியாக மாறாது, கொழுப்பாக மாறி உடலிலேயே தங்கிவிடும். இதன் காரணமாக உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன் ஏற்பட்டால், மெள்ள மெள்ள ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு, கொலஸ்ட்ரால் அளவு கூடுதல் என வேறு பல பிரச்னைகள் ஏற்படும். இது பல தொற்றா நோய்களுக்கு வழிவகுக்கும். 

சில பொருள்களைச் சில நாள்களுக்கு உபயோகிக்காமலிருந்தால், அவை பயனற்றுப்போகும். இது உடல் உறுப்புகளுக்கும் பொருந்தும். நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் சில உறுப்புகளின் செயல்பாடு உடலுக்குத் தேவைப்படாமல் போய்விடும்.இப்படி அந்த உறுப்புகள் தொடர்ந்து செயல்படாமலிருந்தால் காலப்போக்கில் அவற்றின் செயல்திறன் குறைந்துவிடும். கால், வயிறு மற்றும் தசைகளில் செயல்கள் நடைபெறாமல் நின்று போகும். நாளாக, ஆக பல நோய்கள் ஏற்பட இதுவும் காரணமாகிவிடும். 

நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்திருந்தால், கால்களிலேயே ரத்தம் தங்கிவிடும். இந்த ரத்தம், கால்களில் உள்ள தசைகளின் இயக்கத்தால் அழுத்தம் பெற்று, இதயத்தை நோக்கிச் செலுத்தப்படும். ரத்த ஓட்டம் தேங்கி இருப்பதால், மூளைக்கும் இதயத்துக்கும் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். இதனால், கால், மூளை, இதயம் போன்ற பகுதிகளில் உள்ள ரத்தக்குழாய்களில் கட்டிகள் உண்டாக வாய்ப்பு உண்டு. ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால், பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புக்கூட உண்டு.

 நோய்கள்

நாம் நாற்காலியில் அமர்ந்திருக்கும் நிலை சரியானதாக இல்லையென்றால், கை, கால், கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் வலியை ஏற்படுத்தும். குறிப்பாக, ஐடி மற்றும் கணினித் துறையில் பணிபுரிபவர்கள் கம்ப்யூட்டரைப் பார்க்கும் கோணம் மாறுபடும். முறையற்ற போஸ்சரில் (Posture) அமர்ந்து வேலை செய்வதால், மூட்டு எலும்புகளில் வலி உண்டாகும். இது கொஞ்சம் கொஞ்சமாக எலும்புத் தேய்மானத்தையும் உண்டாக்கும். நரம்புகளில் அழுத்தம், தண்டுவடத்தில் ஏற்படும் பிரச்னை போன்றவைதான் நீண்ட நேரம் அமர்ந்திருந்து, எழுந்து நடக்க முயலும்போது கால்களில் தசைப் பிடிப்பு, நரம்புப் பிடிப்பு போன்றவை ஏற்படுவதற்குக் காரணங்கள்.

நாற்காலியில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால், உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல... மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும். நினைவாற்றல் இழப்பு, வெற்று எண்ணம், கவனக்குறைபாடு, தன்னைச் சுற்றி நடப்பதை உள்வாங்காமல் இருப்பது, தனிமை, மனஅழுத்தம், மனச் சோர்வு போன்றவை ஏற்படும்.

நீண்ட நேரம் ஏ.சி-க்கு அடியில் நாற்காலியில் அமர்ந்தபடியே வேலை பார்ப்பதால், சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் போகும். வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து போன்றவை நம் உடலுக்குக் கிடைக்காது.’’ 

இது குறித்து பிசியோதெரபிஸ்ட் ரமேஷ் கண்ணனிடம் பேசினோம். ``பிசிக்கல் ஹெல்த்தில் மிகவும் முக்கியமானது, 'மூவ்மென்ட் இஸ் லைஃப் (Movement is Life)'. இயக்கம்தான் வாழ்க்கை. உடலியக்கம் சரியாக இல்லையென்றால் நம்மால் எந்த வேலையையும் செய்ய முடியாது. இதை நம் முன்னோர்கள் வாழ்க்கையில் ஒரு பழக்கமாகவே கடைபிடித்தார்கள். காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை அவர்களின் செயல்பாடுகள் அனைத்திலும் உடற்பயிற்சி, ஆரோக்கியம் அனைத்தும் அடங்கி இருக்கும். இன்றைக்கு இந்தப் பழக்கவழக்கங்கள் அனைத்தும் மலையேறிவிட்டன. 

உடல் பருமன்

மேற்கத்திய நாகரிகம் என்பது அவர்களுடைய தேவைக்கேற்ப, அவர்கள் வாழும் இடத்தின் தட்பவெப்பநிலை, உணவு முறை, வாழ்க்கை முறை, உடற்பயிற்சி, அவர்களின் தினசரி செயல்பாடுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. அது எல்லா நாடுகளுக்கும், எல்லோருக்கும், எல்லா சூழ்நிலைகளுக்கும் பொருந்தாது. 

அமர்ந்திருக்கும்போது இதயத்துடிப்பும் ரத்த ஓட்டமும் குறைய ஆரம்பிக்கும். இதனால், உடலின் வளர் சிதை மாற்றமும் பாதிப்படையும். நாம் நிற்கும்போது எரிக்கப்படும் கலோரி மற்றும் செலவழியும் எனர்ஜியின் அளவைவிட அமர்ந்திருக்கும்போது எரிக்கப்படும் கலோரி மற்றும் எனர்ஜியின் அளவு குறைவாக இருக்கும். அதனால் உட்கொள்ளும் உணவிலுள்ள ஊட்டச்சத்துகளை உடல் கொழுப்பாக எடுத்துக்கொள்ளும். இதனால் உடல் பருமன் அதிகரிக்கும்.

இப்படி ஏற்படும் உடல் பருமனால், உடல் எடையைத் தாங்க முடியாது. முட்டி வலுவிழக்கும். இந்தப் பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான். இதன் கூடுதல் பாதிப்பாக எதுக்கலித்தல், நெஞ்செரிச்சல், சிலருக்கு பித்தப்பைக் கற்கள் போன்றவை ஏற்படும். 

பொழுதுபோக்குக்காக மாலை நேரங்களில் நாற்காலியில் அமர்ந்து டி.வி பார்க்கும் பழக்கம், இரவு உணவுக்குப் பின்னும் தொடரும். இதனால் நடைப்பயிற்சி, விளையாட்டு, உடலுழைப்பு போன்றவற்றை மறந்து இயந்திரம்போல ஒரே மாதிரியான தொடர் செயல்களையே செய்துவருகிறோம். இது நம் உடலின் உள் உறுப்புகளையும் பாதிக்கும். உடல் பருமன் அதிகரிப்பதாலும், ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதாலும் உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகள் குறைய ஆரம்பிக்கும். இதனால், கணையத்தில் இன்சுலின் சுரப்பு குறைந்து, டைப் 2 சர்க்கரைநோய்க்கு வழிவகுக்கும். உணவில் உள்ள குளூக்கோஸ் கொழுப்பாக மாறி உடலில் தங்கிவிடும். 

நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் நம்முடைய ஆக்டிவிட்டி லெவல் (Activity level) குறையும். இதனால் உடல் சோம்பலடையும். `நீண்ட நேரம் அமர்ந்திருப்பதால் முதுகுவலி ஏற்படும்’ என்று சொல்வார்கள். உண்மையில், இடுப்புவலிதான் ஏற்படும். உட்கார்ந்திருக்கும்போது நம் உடல் எடை இடுப்புத் தசைகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். இந்த அழுத்தத்தால், முதுகுத்தண்டு மற்றும் இடுப்பைச் சுற்றியுள்ள தசைகளில் வலி மற்றும் பிடிப்புகள் ஏற்படும். சிலருக்கு சிறுநீரகக் கல்லை உண்டாக்கும்’’ எச்சரிக்கிறார் ரமேஷ் கண்ணன். 

நாற்காலியில் அமர்வதைக் குறைக்க சில வழிமுறைகள்... 

* அலுவலகத்தில் அமர்ந்துதான் வேலை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தாலும், வெளியிடங்களில் நாற்காலியிலமர்ந்து வேலை செய்வதைத் தவிர்க்கலாம்.  
* ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கும் இடையே, இருக்கையைவிட்டு எழுந்து 5 நிமிடங்கள் நடக்கலாம். சூரிய ஒளியில் செல்லும் வாய்ப்பு இருந்தால், சூரிய ஒளி உடலின் மீது படும்படி நடக்கலாம். சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்கள் பகலில் உடல் சோர்வால் உண்டாகும் தூக்கத்தை விரட்டும். உடல் செல்கள் புத்துணர்வு பெற உதவும். 
* நாம் அமர்ந்திருக்கும் நாற்காலியை சரியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அது, முதுகுத்தண்டுக்குச் சரியாகப் பொருந்தும் அளவுக்குச் சரியான உயரத்தில் இருக்க வேண்டும். 

 

உட்காரும் விதம்


* சாப்பிட்ட பிறகுல் உடனே நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. சில நிமிடங்கள் நிற்கலாம் அல்லது நடக்கலாம். நிற்கும்போதும் நடக்கும்போதும் நம் இதயத்துடிப்பு சீராகவும், அதிகமாகவும் இருக்கும். இதயம், சீரான ரத்த ஓட்டத்துக்கு ஓர் உந்துதலைக் கொடுக்கும். அது வளர் சிதை மாற்றத்துக்கு உதவும். 
* செல்போனில் பேசவேண்டி வந்தால், நடந்துகொண்டே பேசலாம். எழுந்து நடப்பதால், தசைகள் இயக்கம் பெற்றுக் காலில் ரத்தம் தேங்காமல், ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவும். 
* நீண்ட நேரம் நாற்காலியில் அசையாமல் அமரந்திருக்கக் கூடாது. அதேபோல், நீண்ட நேரம் அசையாமல் நிற்கவும் கூடாது. இரண்டுமே ஆபத்தானவை. 
* அலுவலகங்களில் லிஃப்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். மற்றவர்களின் கேலிப்பேச்சுகளை மனதில் ஏற்றிக்கொள்ளாமல், லிஃப்ட் இருந்தாலும் படிக்கட்டைப் பயன்படுத்துவது நல்லது. 
* வீட்டுக்குள் முடிந்தவரை தரையில் அமர்ந்து வேலைகளைச் செய்யப் பழகலாம். பொருள்களை அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று வாங்கலாம் அல்லது மிதிவண்டியால் செல்லலாம். 

`நீண்ட நேரம் சேரில் அமர்ந்திருப்பது சிகரெட் பிடிப்பதற்கு இணையான தீங்கைத் தரும்’ என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். ரிலாக்ஸாகச் சேரில் அமர்ந்திருக்கிறீர்களா... அது, ரிஸ்க் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

https://www.vikatan.com/news/health/118014-why-sitting-all-the-day-is-bad-for-your-health-.html

Link to comment
Share on other sites

5 தனித்தனி நோய்களே நீரிழிவு – புதிய ஆய்வு

 
இரண்டு வகைகளை விட அதிக பிரிவுகள் நீரிழிவு நோய் இருக்க முடியுமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரண்டு வகைகளை விட அதிக பிரிவுகள் நீரிழிவு நோய் இருக்க முடியுமா?

நீரிழிவு என்பது 5 தனித்தனி நோய்களால் உருவாகுவது என்றும் ஒவ்வொரு வடிவத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ரத்தத்தில் கட்டுப்படுத்த முடியாத சர்க்கரை அளவு இருப்பதைதான் நீரிழிவு என்று கூறுகின்றனர். இது பொதுவாக வகை 1, வகை 2 என இரு பிரிவாக பிரிக்கப்படுகிறது.

ஆனால், நீரிழிவுக்காக மருந்து எடுத்துக்கொள்வோரின் நிலை மிகவும் சிக்கலாக இருப்பதாக ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

எதிர்காலத்தில் நீரிழிவுக்கு வழங்கப்படும் சிகிச்சை பற்றி தற்போதைய ஆய்வு அறிவித்திருக்கிறது என்று கூறுகின்ற நிபுணர்கள், தற்போது வழங்கப்படும் சிகிச்சைகளில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக நிகழப் போவதில்லை என்று கூறியுள்ளனர்.

உலக அளவில் வயதுவந்த 11 பேரில் ஒருவரை பாதிக்கின்ற நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு, சிறுநீரக செயலிழப்பு, உறுப்பு நீக்கம் ஆகியவற்றுக்கான ஆபத்துக்களை அதிகரிக்கிறது.

வகை 1 நீரிழிவு, நோய் எதிர்ப்பு அமைப்பு தொடர்புடைய நோயாகும். பிரிட்டனில் உள்ள சூழ்நிலையில் சுமார் 10 சதவீத மக்களை இது பாதிக்கிறது.

இது உடலில் இன்சுலின் சுரக்கின்ற பீட்டா செல்களை தாக்குகின்றது. எனவே, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதற்கான ஹார்மோன் சுரக்காமல் போய்விடுகிறது.

வகை 2 நீரிழிவு மோசமான உணவு பழக்கத்தால் ஏற்படும் நோயாகும். உடலிலுள்ள கொழுப்பு இன்சுலின் செயல்படுவதை பாதிக்க செய்கிறது.

ஸ்வீடனிலுள்ள லுன்ட் பல்கலைக்கழக நீரிழிவு மையமும், ஃபின்லாந்தின் மூலக்கூறு மருத்துவ கழகமும் இணைந்து நடத்திய இந்த ஆய்வில், 14 ஆயிரத்து 775 நோயாளிகள், அவர்களின் ரத்த பரிசோதனை விபரங்களோடு பரிசீலனை செய்யப்பட்டுள்ளனர்.

"த லான்செட் நீரிழிவு மற்றும் அகசுரப்பியல்" சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள், நீரிழிவு நோயாளிகளை 5 வேறுபட்ட குழுவினராக வகைப்படுத்தி காட்டுகின்றன.

நீரிழிவு நோயாளிகளின் வாழ்வை மாற்றியமைக்கவுள்ள சிகிச்சை

  • குழு 1 - கடும் நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான இந்த நீரிழிவு, பரவலாக பாரம்பரிய வகை 1 நீரிழிவு வகையை சார்ந்ததாக உள்ளது. ஆரோக்கமாக தோன்றுகின்ற இளம் பருவத்தில் இருப்போரை இது பாதிக்கிறது. இன்சுலினை உற்பத்தி செய்ய முடியாத நிலையை இந்த வகை நீரிழிவு ஏற்படுத்துகிறது.
  • குழு 2 - கடுமையான இன்சுலின் குறைபாடு உடைய நீரிழிவு நோயாளிகள் தொடக்கத்தில் குழு 1 போலவே தோற்றமளித்தனர். இவர்கள் இளமையாக இருந்தனர். ஆரோக்கியமான எடையை கொண்டிருந்தனர். இன்சுலின் சுரப்பதில் சிக்கல் இருந்தது. ஆனால், நோய் எதிர்ப்பு சக்தியில் எந்த குறைபாடும் இவர்களுக்கு இல்லை.
  • குழு 3 - சுரக்கப்படும் இன்சுலினுக்கு கடும் எதிர்ப்புதன்மையுடைய நீரிழிவு நோயாளிகள். இவர்கள் பொதுவாக அதிக எடையுடையவர்களாக இருந்தனர். இன்சுலின் சுரந்தது. ஆனால், சுரக்கின்ற இன்சுலினை அவர்களின் உடல் சரியாக செயல்பட அனுமதிக்கவில்லை.
  • குழு 4 - மிதமான உடல் பருமன் தொடர்பான இந்த நீரிழிவு அளவுக்கு மிஞ்சிய உடல் எடையுடையோரிடம் முக்கியமாக காணப்பட்டது. ஆனால், குழு 3-இல் உள்ளதை விட இயல்பான மிகவும் நெருக்கமானதாக இது இருக்கிறது
  • குழு 5 - நடு வயது தெடர்பான இந்த நீரிழிவு, நோயாளிகள் பிற குழுவினரை விட குறிப்பிடும்படியாக வயது அதிகமானதாக இருந்தபோது சில அறிகுறிகள் தோன்றின. இவர்களின் நோய் மிதமானதாக இருந்தது.
ஊசிபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

"மிகவும் துல்லியமான மருந்தை நோக்கி எடுத்து வைக்கின்ற சரியான காலடிக்கு இந்த ஆய்வு மிகவும் முக்கியமானது" என்று இந்த ஆய்வாளர்களில் ஒருவரான பேராசிரியர் லெய்ஃப் குரூப் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

"சிறந்த நிலையில் நோயை கண்டறிய இந்த ஆய்வு பயன்படுத்தப்படுகிறது. மேம்பட்ட நல்ல சிகிச்சையை நாம் எதிர்பார்க்கிறோம்" என்று அவர் கூறியுள்ளார்.

இந்த 5 குழுக்களில், இரண்டு மிதமானவற்றை விட 3 கடுமையான வடிவங்களுக்கு நாம் மிகவும் தீவிர சிகிச்சை அளிக்க முடியும்.

நோய் எதிர்ப்பு அமைப்புக்கு எதிரான நிலை இல்லாததால், குழு 2 நோயாளிகள் தற்போது இரண்டாம் வகை நீரிழிவு நோயாளிகளாக வகைப்படுத்தப்படுகின்றனர்.

இருப்பினும், அவர்கள் அதிக குண்டாக இருப்பதைவிட பீட்டா செல்களின் குறைபாட்டால் இவர்களுக்கு நோய் உருவாகியிருக்கலாம் என்று இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

இதனால், தற்போது வனை 1ஆக வரையறுக்கப்பட்டுள்ள மிதமான நோயாளிகளுக்கு கொடுக்கப்படுகின்ற நெருங்கிய அளவிலான சிகிச்சை வழங்கலாம்.

பார்வை இழப்பு ஏற்படுவதற்கு அதிக ஆபத்து நிறைந்தவர்களாக குழு 2 இருப்போர் உள்ளனர். ஆனால், குழு 3இல் இருப்போர் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கு அதிக ஆபத்தை எதிர்நோக்குகின்றனர். எனவே, மேம்படுத்தப்பட்ட பரிசோதனையால் இதில் சில குழுவினர் பயன்பெறலாம்.

சிறந்த வகைப்பாடு

லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியின் ஆலோசகரும், சிகிச்சை ஆய்வாளருமான டாக்டர் வின்டோரியா சலேம், "முதலாம் வகை மற்றும் இரண்டாம் வகை என இரண்டும் மிகவும் துல்லியமான வகைப்படுத்தப்ட்ட அமைப்பு கிடையாது என்பதை பெருமளவு சிறப்பு நிபுணர்கள் அறிவர்" என்று கூறியுள்ளார்.

"எதிர்காலத்தில் நீரிழிவை நாம் நோயாக எவ்வாறு பார்க்கப்போகிறோம் என்பது பற்றியது இது" என்று அவர் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், இந்த ஆய்வு இன்றைய நடைமுறையை உடனடியாக மாற்ற போவதில்லை என்ற எச்சரிக்கையையும் அவர் அளித்துள்ளார்.

இந்த ஆய்வு ஸ்காண்டினேவிய மக்களிடம் மட்டுமே நடத்தப்பட்ட ஆய்வாகும். தெற்கு ஆசிய மக்களிடம் நீரிழிவு அதிக ஆபத்து ஏற்படுத்துவது போன்று உலக அளவில் நீரிழிவின் பண்புகள் வித்தியாசமாகிறது.

"இன்னும் அறியப்படாதவைகள் அதிகம் உள்ளன. உலக அளவில் காணப்படும் மரபணு மற்றும் உள்ளூர் சுற்றுச்சூழல் பாதிப்புக்களை பொறுத்து 500 துணை குழுக்கள் இருக்கலாம் என்று டாக்டர் சலேம் கூறியுள்ளார்.

"இந்த விஞ்ஞானிகளின் ஆய்வில் 5 குழுக்கள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த எண்ணிக்கை உயரலாம்" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

வார்விக் மருத்துவ கல்லூரியின் மருத்துவ பேராசிரியர் சுதேஸ் குமார், "இது முதலாவது காலடிதான். இந்த குழுவினருக்கு வேறுபட்ட வகையில் சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறந்த பயன் கிடைக்குமா என்பது பற்றியும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நோயை புரிந்துகொள்வது ஒவ்வொரு வகையினருக்கு தனித்தனி சிகிச்சைகள் வழங்குவதற்கு உதவலாம். நீரிழிவு தொடர்பான சிக்கல்களை இந்த சிகிச்சைமுறை எதிர்காலத்தில் குறைக்கலாம் என்று பிரிட்டனின் நீரிழிவு அறக்கட்டளையை சேர்ந்த டாக்டர் எமிலி பர்ன்ஸ் தெரிவித்திருக்கிறார்.

"இந்த ஆய்வு இரண்டாவது வகை நீரிழிவை மேலும் பிரிந்து அதிக விபரங்களோடு காட்டுகின்ற நம்பதகுந்த முயற்சியை எடுத்திருக்கிறது. ஆனால், இந்த நிலையில் வாழ்கின்ற மக்களில் இது எவ்வாறு காணப்படுகிறது என்பதை புரிவதற்கு முன்னால், இந்த துணை குழுக்களை பற்றி நாம் இன்னும் அதிகம் அறிந்துகொள்ள வேண்டியுள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/science-43264833

Link to comment
Share on other sites

மீன், மஞ்சள், வல்லாரை... மாணவர்களின் ஞாபகசக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்! #MemoryBoostingFoods

 
 

சில வாரங்களாக வலைதளங்களில் பல பெற்றோர்களின் தேடல் என்ன தெரியுமா? ’ஞாபகசக்தியை அதிகரிக்க என்ன செய்யலாம்?' என்பதுதான். காரணம், இது பொதுத் தேர்வுகளுக்கான காலம். ஆன்லைனில் ஞாபகசக்தியைப் பெருக்கும் பெட்டகங்கள் (Memory enhancing kit) அதிகமாக விற்பனையாகின்றன. ஆன்லைனில் விளம்பரங்கள் மூலம் விற்பனையாகும் பெரும்பாலான மருந்துகள் போலியாகத்தான் இருக்கும் என்பது தனிக்கதை. மறுபுறம், போலி மருத்துவர்களை நம்பி ஆயிரம் இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து ஏமாறுபவர்களும் அதிகம். ``ஒழுங்காவே படிக்க மாட்டேங்கிறான் டாக்டர்… படிச்சாலும் கொஞ்ச நேரத்துல மறந்துடறான்… ஞாபகசக்தியை அதிகரிக்க ஏதாவது டானிக், மாத்திரை இருந்தா சொல்லுங்களேன்...” என்று மருத்துவர்களை நாடும் பதற்றமான பெற்றோர்களின் எண்ணிக்கையும் இந்த வியாபாரக் கல்வியுகத்தில் அதிகமாகிவிட்டன. ஞாபகசக்தி குறைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இருந்தாலும், உணவுகளின் மூலமேகூட நினைவாற்றலை அதிகரிக்க முடியும் என்பது உண்மை. ஞாபகத்திறனை அதிகரிக்கும், மூளைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும் உணவுகள் பற்றிப் பார்க்கலாமா? 


வல்லாரை:

 

ஞாபகசக்தியை அதிகரிக்க வேண்டும் என்றவுடனே எல்லோருடைய நினைவுக்கும் முதலில் வருவது வல்லாரை. தண்ணீர் நிறைந்த பகுதிகளில் வளரும் படர் தாவரம். நினைவுத்திறனை அதிகரிக்கும் தன்மை இதற்கு இருப்பதால், வல்லாரைக்கு யோசனவல்லி’ என்றும் பெயருண்டு. வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு வேளை, வல்லாரையைப் பொரியலாகவோ, கூட்டாகவோ, சட்னியாகவோ செய்து பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம். வல்லாரை இலைகளை உலர்த்தி, பொடியாக்கி, வாரத்தில் மூன்று நாள்களுக்கு ஒரு வேளை, அரை டீஸ்பூன் அளவுக்குப் பாலில் கலந்து கொடுத்தால், நினைவாற்றல் அதிகரிக்கும். 
தேர்வு நேரத்தில் அதிகமாகக் கொடுத்தால், ஞாபகசக்தி பல மடங்கு அதிகரிக்கும் என்று தவறாக நினைத்து, வல்லாரைக்கீரையை அளவுக்கு மீறியும் பிள்ளைகளுக்குக் கொடுக்கக் கூடாது. இதனால், தலைசுற்றல் உண்டாகலாம். இது, குளிர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால், இப்போதையச் சூழலில் தைரியமாகப் பயன்படுத்தலாம். வல்லாரை நெய்’ என்ற சித்த மருந்தை, நெய்யைப்போல உணவுகளில் பயன்படுத்தலாம். Brahmoside, Brahminoside போன்ற வேதிப்பொருள்கள் வல்லாரையில் இருப்பதால், மனதைச் சாந்தப்படுத்தும் குணம் அதற்கு உண்டு. ஆய்வுகளின் அடிப்படையில் மனச்சோர்வைப் போக்கும் தன்மையும் (Anti-depressant action) வல்லாரைக்கு இருக்கிறது.

வல்லாரை


மீன்:

தேர்வு நேரத்தில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. இருந்தாலும், கொஞ்சமாக மீன் வகைகளை உட்கொள்ளலாம். நன்றாக வறுத்த, பொரித்த மீன் உணவுகள் மட்டும் வேண்டவே வேண்டாம். மீன் குழம்பு சாப்பிடுவது சிறந்தது. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் (Omega – 3 fatty acids) நிறைந்த மீன்கள், அறிவாற்றலைப் பெருக்குவதற்கு உதவும். ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், மூளைச் செல்களை புத்துணர்வுடன் செயல்படவைக்கும். நினைவாற்றலைப் பெருக்கவும் உதவும். அதிகமாக மீன் உணவுகளைச் சாப்பிடுபவர்களின் மூளையின் நினைவாற்றலைப் பெருக்கும் பகுதி, சிறப்பாகச் செயல்படுவதாக ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

மீன்


மஞ்சள் :

முதிர்ந்த வயதில் தோன்றும் அல்சைமர் நோயால் (Alzheimer's disease) அவதிப்படும் நோயாளிகளின் ஞாபகமறதியை மஞ்சள் குறைப்பதாக சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. `மஞ்சளும் மூளையின் செயல்பாடுகளும்’ சார்ந்து பெரியளவில் ஆய்வுகள் நடைப்பெற்றுவருகின்றன. பாலில் தினமும் சிறிது மஞ்சள் தூளும், மிளகுத் தூளும் கலந்து, உங்கள் செல்லங்களுக்குப் புகட்டுங்கள். உற்சாகம் கரைபுரண்டு ஓடுவதை நீங்கள் கவனிக்கலாம். மஞ்சளில் உள்ள `குர்குமின்' (Curcumin) என்ற வேதிப்பொருள், மனச்சோர்வையும் குறைக்கிறதாம். 

மஞ்சள்


நீர்ப்பிரமி

நீர்நிலைகளில் அதிகம் காணப்படும் நீர்ப்பிரமியின் இலைகளில் சாறு பிழிந்து, நெய் சேர்த்துக் காய்ச்சி மூளைக்கு மருந்தாகப் பயன்படுத்துவது பாரம்பர்ய வழக்கம். `பிரமி நெய்’ என்ற மருந்தைப் பயன்படுத்தினால் ஞாபகசக்தி அதிகரிக்கும். இனிப்புச் சுவை இருப்பதால், உடனடியாக ஆற்றலைக் கொடுக்கும். சிறிது பிரமி நெய்யை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம். நீர்ப்பிரமியிலுள்ள `Bacosides’, நினைவாற்றல் சார்ந்த செயல்பாடுகளுக்கு காரணமாகிறது. 


மூளை ஆரோக்கியத்துக்கு...

பிஸ்தா, பாதாம், வால்நட் போன்ற கொட்டை வகைகள் நல்லது. இவற்றில் உள்ள வைட்டமின் இ, மூளைச் செயல்பாடுகளை சிறப்பாக்கும். வால்நட்டிலும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகளவில் இருக்கின்றன. இது, அறிவாற்றலை அதிகப்படுத்துவதாக ஓர் ஆய்வு சொல்கிறது. உருக்கிய நெய் சேர்த்துப் பிசைந்த பருப்பு சாதம், பாசத்தோடு சேர்த்து மூளைக்கு ஊட்டத்தையும் கொடுக்கும். சிவப்பரிசி, கவுணி போன்ற பாரம்பர்ய ரகங்களைப் பயன்படுத்த முன்வாருங்கள். மாவுச்சத்தோடு சேர்த்து, பல்வேறு நுண்ணூட்டங்களையும் வாரி வழங்கும்.

ஞாபகசக்தி உணவுகள்

 


முட்டையிலுள்ள கோலைன், ஃபோலேட், வைட்டமின் பி12 போன்றவை மூளைக்கு போஷாக்கை வழங்கக்கூடியவை. ஆனால், பிராய்லர் கோழி முட்டைகளை குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டாம். நாட்டுக்கோழி முட்டைகளை மட்டுமே பயன்படுத்தவும். கிரீன் டீயிலிருக்கும் `தியனைன்’ (Theanine) எனும் அமினோ அமிலம், ரிலாக்ஸாக வைத்துக்கொள்ள உதவும். 
கறுப்பு திராட்சை, பப்பாளி, கொய்யா, செவ்வாழை, பூசணி போன்றவற்றிலிருக்கும் ஆந்தோசயனின்களும் (Anthocyanins) மூளையின் ஆரோக்கியத்துக்கு உகந்தவை. மூளையை உற்சாகமாக்குவதோடு, பழங்களும் காய்களும் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் உதவும். வைட்டமின் சி நிறைந்த ஆரஞ்சுப் பழங்களை ஆசைதீரச் சாப்பிடலாம். கீரை வகைகளில் முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை அற்புதமான பலன்களைத் தரக்கூடியவை. கீரைகள் மனதை இதமாக்கும்; மலமிளக்கியாகவும் செயல்படும்.

முட்டை

சிறப்பு உணவுகளைத் தாண்டி, மூளைக்கு ஊட்டத்தைக் கொடுக்க, மூன்று வேளையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் மாவுச்சத்து, புரதம், கொழுப்புச்சத்து தேவையான அளவு நிறைந்த சமச்சீர் உணவை உட்கொள்வது தான் அனைத்துக்கும் அடிப்படை.
நம்மிடையே நடைமுறையிலிருப்பது நினைவுத்திறன் சார்ந்த கல்விமுறை. அதனால்தான் ஞாபகசக்தியை அதிகரிக்கும் வழிமுறைகளைப் பற்றி அதிகமாகப் பேசுகிறோம். நினைவுத்திறன் மட்டுமல்லாமல், அறிவாற்றலைச் சோதிக்கும் வகையில், கல்வி முறையில் மாற்றங்கள் நிகழ்ந்தால் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். விரைவில் மாற்றம் வரும் என்று நம்புவோம்! மூளைக்குப் புத்துணர்வு அளிக்கும் உணவுகளை, தேர்வு நேரங்களில் மட்டுமல்லாமல், வழக்கமான உணவு முறையிலும் வரவேற்பது நல்லது. சிறு வயது முதலே முறையான உணவுகளைப் பின்பற்றுவதன் மூலம், முதிர்ந்த வயதில் தோன்றும் மறதி சார்ந்த நோய்களைத் தள்ளிப்போட முடியும்.

https://www.vikatan.com/news/health/118377-best-foods-to-boost-your-memory-power.html

Link to comment
Share on other sites

தோள்பட்டைக்குரிய சிகிச்சை

 

 

ஒரு சிலருக்கு தொடர்ந்து துதி சக்கர மோட்டார் வண்டியை ஓட்டுவதால் தோள்பட்டையில் ஒருவித வலி உண்டாகும். அதனை பெரும்பாலானவர்கள் வெந்நீர் ஒத்தடம் அல்லது வலி நிவாரணி களிம்புகளைத் தடவிக் கொண்டு நிவாரணம் தேடுவர். இந்நிலையில் இந்த தோள்பட்டை வலிக்குரிய சிகிச்சையைப் பற்றி விளக்கம் அளிக்கிறார் டொக்டர் சுதன் கிறிஸ்துதாஸ்.

health_image_27218.jpg

ஒருவருக்கு அவரின் சர்க்கரை நோயின் அளவைப் பொறுத்து தோள் பட்டையைச் சுற்றியிருக்கும் தசைகள் இறுக்கமடையும். இதனை  தொடக்க நிலையிலேயே கவனித்து பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவம் மற்றும் மருத்துவர்களின் வழிகாட்டலுடன் கூடிய சிகிச்சைப் பெற்றுக்கொண்டால் குணமடையலாம். 

இதனை கவனியாது விட்டால் சில மாதங்களுக்கு பிறகு தோள்பட்டையை சிறிய அளவிற்கு கூட நகர்த்த முடியாத அளவிற்கு ப்ரோஷன் ஷோல்டர் என்ற எல்லைக்கு கொண்டு சென்றுவிடும். இது போன்ற தருணங்களில் கூட உடனடியாக சத்திர சிகிச்சையை மேற்கொள்ளாமல், நோயாளிக்கு சற்றே மயக்கமளித்து, அப்பகுதியை சுற்றியுள்ள தசைப்பகுதியை தளரச் செய்யும் பயிற்சியை மேற்கொள்வார்கள். அதற்கு பிறகு அங்கு ஒரு மருந்தை ஊசி மூலம் செலுத்துவார்கள். இதனால் ப்ரோஷன் ஷோல்டர்  பிரச்சனையைக் குணப்படுத்தலாம்.

தொகுப்பு அனுஷா

http://www.virakesari.lk/article/31403

Link to comment
Share on other sites

பெண்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய 10  ஆரோக்கிய விதிகள்!

 
 

வேலைக்குச் செல்லும் பெண்கள் கால்களில் சக்கரங்களைக் கட்டிக்கொண்டு பறக்கிறார்கள். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு குடும்பத்தையும், குழந்தைகளையும் கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்புகளில் ஆழ்ந்திருக்கிற பெண்கள் தங்களது உடல் ஆரோக்கியம் குறித்து பெரிதாக கவலைப்படுவதில்லை என்பது வருத்தமான ஒன்றுதான். 

ஆரோக்கியம்

 

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். எவ்வளவு வேலைகள் இருந்தாலும் பெண்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வேலைக்குச் செல்லும் பெண்களானாலும் சரி, வீட்டை நிர்வகிக்கும் பெண்களானாலும் சரி,  கீழே தரப்பட்டுள்ள 10 ஆரோக்கிய விதிகளைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். 

1. கலோரிகளில் கவனம்!

ஒருவருக்குச் சராசரியாக ஒரு நாளைக்கு 2000 கலோரிகள் தேவை. இது, ஒவ்வொருவரின் பி.எம்.ஐ (BMI) அளவைப்பொருத்து மாறுபடும். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு, ஒரு நாளைக்கு 1600 முதல் 1800 கலோரிகள் தேவை. வயது அதிகமாகும்போது,  இந்த அளவில் ஆண்டுக்கு 7 கலோரிகள் குறைத்துக்கொள்ள வேண்டும். உணவு ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று,  பி.எம்.ஐ அளவைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்ற உணவுப்பட்டியலைத் தயாரித்து  சாப்பிட வேண்டும்.

2. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குங்கள்!

வீட்டு வேலை, அலுவலக வேலை என பெண்கள் சுழன்று கொண்டிருக்கிறார்கள். இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தங்கள் உடல்நலனைக் கருத்திக்கொள்வதே இல்லை.  குறிப்பாக, உடற்பயிற்சி... இல்லவே இல்லை. கட்டாயம் பெண்கள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.  வீட்டிலேயே எளிமையாகச் செய்யக்கூடிய பயிற்சிகளைக் கற்றுக்கொண்டு செய்யலாம். நடுத்தர வயதுப் பெண்களுக்கு உடல்ரீதியாக பல்வேறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. உடற்பயிற்சிகள் செய்வதால் உடல் எடைகூடுதல், இதய நோய்கள், சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கலாம்.

உடற்பயிற்சி

3. உடல் பரிசோதனை முக்கியம்!

நடுத்தர வயதைத் தொட்ட பெண்கள் ஆறுமாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்து கொள்வது முக்கியம். குறிப்பாக மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.  மார்பகங்களில் வலி, வீக்கம், கட்டிகள், அரிப்பு, வேறுவிதமான மாற்றங்கள் ஏதாவது இருந்தால்  உடனடியாக மருத்துவரை அணுகி காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். 

4. பிடித்தமான டயட்டைத் தேர்ந்தெடுங்கள்!

நடுத்தர வயதுப் பெண்கள், தங்களுக்கு வயதாகிவிட்டது என்ற மனநிலைக்கு வந்துவிடுகிறார்கள். அதனால்,  அழகு, ஆரோக்கியம் குறித்துப் பெரிதாகக் கவலைப்படுவதில்லை. ஆரோக்கியமாக இருந்தாலே அழகுதான்.  சரியான வயதில் உணவு நிபுணர்களிடம் ஆலோசனை பெற்று தகுந்த டயட் உணவுகளைச் சாப்பிடத் தொடங்கினால் ஆரோக்கியமாகவும் இருக்கலாம், அழகாகவும் இருக்கலாம்.

5. அதிகநேரம் உட்கார வேண்டாம்!

அதிக நேரம் உட்காருவதை தவிர்ப்பது நல்லது.  அதிக நேரம் உட்கார்ந்தே இருந்தால் சர்க்கரைநோய், இதயநோய்கள் போன்ற மிக விபரீதமான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் குறிப்பிட்ட இடைவெளியில் எழுந்து நடக்கலாம்.  பிடித்த வேறுவிதமான வேலைகளைச் செய்யலாம். 

பெண்கள் எலும்புகள்

6. எலும்புகள் பத்திரம்!

ஊட்டச்சத்துப் பற்றாக்குறையால் பெண்களுக்கு எலும்பின் அடர்த்தி குறைய வாய்ப்புண்டு.  இதை `ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்கிறார்கள். இதன் காரணமாக முதுகுவலி, எலும்புகள் உடைவது போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். உணவில் கீரைகளை அதிகமாக சேர்த்துக்கொள்வதாலும்  உடற்பயிற்சிகள் செய்வதாலும் எலும்புகள் வலுவாகும்.

7. ஹார்மோன் சோதனை

இரவுநேரத்தில் போதிய அளவுக்குத் தூக்கம் இருந்தாலே ஹார்மோன் (Harmone) குறைபாடுகள் ஏற்படாது என்கிறார்கள் மருத்துவர்கள். எந்தத் தொந்தரவும் இல்லாமல் உங்கள் உடல் எவ்வளவு தூக்கம் கேட்கிறதோ அந்த அளவுக்கு நிம்மதியாகத்  தூங்கி எழுந்தாலே  உங்கள் உடலும், மூளையும் உற்சாகமாக இருக்கும். ஹார்மோன்கள் சரியான அளவு சுரக்கின்றனவா என்பதை குறிப்பிட்ட கால இடைவெளியில் சோதித்துக்கொள்வது நல்லது. பிரச்னை இருந்தால் அதற்கான சிகிச்சைகளை எடுத்துகொள்ளவேண்டும்.

தண்ணீர்

8. தண்ணீர் குடியுங்கள்!

காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தண்ணீர் குடிக்க வேண்டும். உடலின் நீர்த்தேவையைப் பூர்த்தி செய்து, உடலும், மூளையும் புத்துணர்ச்சியடையச் செய்ய இது உதவும். தாகம் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ குறிப்பிட்ட இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள். 

9.  சருமம்  கவனம்!

30 வயதைக் கடக்கும் பெண்களின் சரும நிறத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழும். வயது அதிகமாக அதிகமாக தோலில் எண்ணெய்ச்சுரப்பு குறைந்துகொண்டே வரும். அதனால், தோல் வறண்டு போவது, சுருங்குவது போன்ற பிரச்னைகள் ஏற்பட்டு, தோற்றத்தில் மாற்றங்கள் ஏற்படலாம். குறிப்பாக, கண்களுக்கு அருகிலும், முகத்திலும் (Crow's Feet Area) சுருக்கங்கள் ஏற்படும்.  தோல் செல்களின் உற்பத்தி மந்தமாகிவிடும் . வருடத்துக்கு ஒரு முறையாவது தோல் நோய் நிபுணரிடம் சோதனை செய்துகொள்வது நல்லது.

10. திட்டமிட்டு செலவு செய்யுங்கள்!

'குடும்பத்தில் ஏற்படும் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகள்,  உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்'  என்கிறார்கள் மருத்துவர்கள். உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, தூக்கமின்மை, உடல்  எடை கூடுவது போன்ற பிரச்னைகள் வரக்கூடும். வருமானத்துக்கு தகுந்தபடி, திட்டமிட்டுச் செலவு செய்தால் நிம்மதியாக இருக்கலாம். மன உளைச்சலையும் தவிர்க்கலாம். 

https://www.vikatan.com/news/health/118647-10-health-rules-every-woman-in-her-middle-ages-needs-to-follow.html

Link to comment
Share on other sites

`ஒரு நாளைக்கு 10 டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் வேண்டாம், புற்றுநோய் ஏற்படலாம்!’ - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

 
 

நாம் சாப்பிடும் தானியங்கள், பழங்கள், காய்கறிகள்...  அனைத்திலும் இயற்கையாகவே இருக்கிறது சர்க்கரை. இவை தவிர, நாம் அருந்தும் டீ, காபி, ஜூஸ் போன்ற பானங்களில் நேரடியாகவும் சர்க்கரையைச் சேர்த்துக்கொள்கிறோம். ஒருவரின் இயல்பான அளவுக்கு மேல் ரத்தத்தில் சர்க்கரை சேர்வதால் முதலில் உடல் எடை அதிகரிக்கும். இதனால்,  சர்க்கரைநோய், இதயநோய், சிறுநீரகக் கோளாறுகள், பக்கவாதம்... எனப் பல தொற்றா நோய்கள் ஏற்படவும் அது காரணமாகிவிடும். இந்தப் பட்டியலில் இப்போது புதிதாக ஓர் ஆபத்தும் சேர்ந்திருக்கிறது... `புற்றுநோய்'. `ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமானால் புற்றுநோய் ஏற்படும்’ என்று அண்மையில் எச்சரித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

சர்க்கரை

 

சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் நம்மை காத்துக்கொள்ள சில அறிவுரைகளையும் வழங்கியிருக்கிறது. அதன்படி, `ஒருவர் நாளொன்றுக்கு அதிகபட்சமாக பத்து டீஸ்பூன் சர்க்கரைக்கு மேல் உட்கொள்ளக் கூடாது’ என்றும் அறிவுறுத்தியிருக்கிறது. 

நடைமுறையில் இதெல்லாம் சாத்தியமா, ஒவ்வோர் உணவிலும் எவ்வளவு சர்க்கரை இருக்கிறதென்று பார்த்துப் பார்த்துச் சாப்பிட முடியுமா, இதிலிருந்து தப்பிப்பதற்கு என்னதான் வழி?

விரிவாகப் பேசுகிறார் சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர் ராஜ்குமார். மருத்துவர் ராஜ்குமார்

"பொதுவாக சர்க்கரையில் இரண்டு வகைகள் உள்ளன. எக்ஸ்ட்ரின்சிக் (Extrinsic sugar) மற்றும் இன்ட்ரின்சிக் (Intrinsic sugar). எக்ஸ்ட்ரின்சிக், உணவுகளிலும் பானங்களிலும் நாம் சேர்த்துக்கொள்வது. இன்ட்ரின்சிக், காய்கறிகள், பழங்களில் இயற்கையாகவே இருப்பது. 

ஒரு நாளைக்கு, நமக்குத் தேவைப்படும் மொத்த கலோரிகளில், சர்க்கரையின் அளவு பத்து சதவிகிதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பதுதான் இதுவறையில் நடைமுறையில் இருந்தது. ஆனால், உலகச் சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தி, அதனை ஐந்து சதவிகிதமாகக் குறைத்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் கலோரி அளவு ஒரே மாதிரியாக இருக்காது. அவர்களின் பி.எம்.ஐ (BMI) அளவைப் பொறுத்து அல்லது ஐடியல் வெயிட்டைப் பொறுத்து தேவையான கலோரியைக் கணக்கிடலாம். 

முதலில், ஐடியல் வெயிட்டை வைத்து எப்படிக் கண்டறிவது என்று பார்ப்போம்.

180 செ.மீட்டர் உயரம் கொண்டவரின் (180-100 = 80) ஐடியல் வெயிட் 80. 

உடல் பருமன்

180 செ.மீட்டர் உயரம் கொண்டவர், 80 கிலோ எடையில்  சரியாக இருந்தால் நாளொன்றுக்கு 80 X 25 = 2,000 கிலோ கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

80 கிலோவைவிடக் குறைவாக இருந்தால், நாளொன்றுக்கு 80 X 30 = 2,400 கிலோ கலோரி எடுத்துக்கொள்ள வேண்டும்.

80 கிலோவிட அதிகமாக இருப்பவர்கள், நாளொன்றுக்கு 80 X 20 = 1,600 கிலோ கலோரிக்கு மேல் எடுத்துக்கொள்ளக் கூடாது. 

அதன்படி, 180 செ.மீட்டர் உயரம் கொண்டவருக்கு ஒரு நாளைக்கு  2,000 கிலோ கலோரி தேவை. அதிலிருந்து ஐந்து சதவிகிதம் என்றால் சரியாக 100 கிலோ கலோரிதான் சர்க்கரை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, ஆண் ஒருவர், 9 டீஸ்பூன் சர்க்கரையும், பெண் ஆறு டீஸ்பூன் சர்க்கரையும் எக்ஸ்ட்ரின்சிக்காக சேர்த்துக்கொள்ளலாம். அதைவிட அதிகமாகச் சேர்த்துக்கொள்ளும்போது உடல் எடை அதிகரித்துவிடும். அதனால் அனைத்துவிதமான புற்றுநோய் வருவதற்கும் வாய்ப்புள்ளது. நம் உடல் எடை சரியான அளவில் இருக்கிறதா என்பதை பி.எம்.ஐ அளவைக் கண்டறிந்து தெரிந்துகொள்ளலாம்" என்கிறார். 

சர்க்கரை அளவு

புற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணனிடம் பேசினோம் "புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் முக்கியமானது உடல் பருமன். குறிப்பாகப் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைவாய் புற்றுநோய், ஆண்களுக்கு புராஸ்டேட் கேன்சர் ஆகியவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சர்க்கரை அதிகமுள்ள உணவுகளால் உடல் பருமன் ஏற்படும். ஒவ்வொருவரும் தங்கள் உயரத்துக்கேற்ற உடல் எடையைப் பராமரித்தால், இந்தப் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளலாம்" என்கிறார் சரவணன்.

பி.எம்.ஐ... எப்படிக் கணக்கிடுவது?

ஒருவரின் உடல் எடை 80 கிலோ, உயரம் 180 செ.மீட்டர் என வைத்துக்கொள்வோம். முதலில் உயரத்தை மீட்டரில் மாற்றிக்கொள்ள வேண்டும். 180 செ.மீ/100 = 1.8 மீ. 

பி.எம்.ஐ = 80 / (1.8 X 1.8) அவரது பி.எம்.ஐ எண் = 24.69. 

இதன்படி ஒருவரின் பி.எம்.ஐ 18.5-க்கும் 25-க்கும் இடையிலிருந்தால் இயல்பான எடை. 25-லிருந்து 29.9-க்கு இடைப்பட்டதாக இருந்தால் அவர் அதிக எடையிலிருக்கிறார். 30-க்கும் மேலிருந்தால், அவர் உடல் பருமன் உள்ளவர் என்று வரையறுக்கிறார்கள்.

கர்ப்பப்பைவாய் புற்றுநோய்,

கலோரியைக் கணக்கிடுவது எப்படி?

இணையதளத்தின் மூலமாக நாம் உண்ணும் உணவுகளில் உள்ள கலோரியின் அளவைத் தெரிந்துகொள்ள விரும்புவர்கள். ninindia.org என்ற இணைய முகவரியில் `கவுன்ட் வாட் யு ஈட்’ (Count what u eat ) என்ற பகுதிக்குள் சென்று நாம் சாப்பிட்ட உணவுகளைப் பதிவுசெய்தால், நாம் எவ்வளவு கலோரி எடுத்துக்கொண்டிருக்கிறோம் என்பதைக் காட்டிவிடும்.

 

 

https://www.vikatan.com/news/health/118924-excess-sugar-in-your-diet-might-lead-to-cancer.html

Link to comment
Share on other sites

அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களா நீங்கள் ? இதோ அபாய எச்சரிக்கை!!!

 

 

மாறிவரும் உணவுப் பழக்கங்கள், வாழ்வியல் முறை ஆகிய காரணங்களால் நம்மிடையே பரவலாகக் காணப்படும் நோயாக புற்றுநோய் உருவாகியுள்ளது. ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தினசரி உடற்பயிற்சி ஆகியவற்றைக் கடைபிடித்து புற்று நோயிலிருந்து ஓரளவு தப்பித்துக்கொள்ள வேண்டிய நிலைமையில்தான் மனித சமுதாயம் உள்ளது.

சமீபத்தில் பிரான்ஸில் உள்ள சர்வதேசப் புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்ட ஆராய்ச்சி முடிவில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புண்டு என தெரியவந்துள்ளது.

New_Layout__3_.jpg

இந்த ஆராய்ச்சிக்காக 5 இலட்சத்துக்கும் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர். 6 ஆண்டுகள் கழித்து அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ததில் சுமார் 2,391 பேருக்கு குடல் புற்றுநோய் ஏற்பட்டதாக அந்த ஆய்வு கூறுகிறது. அவர்களில் ஒருநாளைக்கு 4 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி அதிகமாக பார்க்கும் ஆண்களே அதிகம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி முன்பு அதிக நேரம் செலவழிக்காத ஆண்களுக்கும் , தினசரி உடற்பயிற்சி மேற்கொள்ளும் ஆண்களுக்கும் குடல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அதிக நேரம் தொலைக்காட்சி பார்க்கும்போது ஆண்களிடையே அதிகமாக மது அருந்துதல், புகை பிடித்தல், உள்ளிட்ட பழக்கங்கள் ஏற்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் திண்பண்டங்களை அதிகமாக உட்கொள்ளும் பழக்கமும் அதிகரிக்கிறது. இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்பு அதிகரித்து உடல் பருமன் ஏற்படுகிறது. இதன் காரணமாக அதிகமாக தொலைக்காட்சி பார்க்கும் ஆண்களுக்கு குடல் புற்றுநோய் ஏற்படுகிறது” என ஆராய்ச்சியாளர் நீல் முர்ஃபி தெரிவிக்கிறார்.

http://www.virakesari.lk/article/31588

Link to comment
Share on other sites

மூட்டழற்சி நோய்க்கான காரணங்கள்

 

 
 

சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் மூட்டழற்சி பாதிப்பிலிருந்து நம்மை காக்கும் என்பதனை உணர்ந்து பின்பற்றுவோம்.

 
 
 
 
மூட்டழற்சி நோய்க்கான காரணங்கள்
 
சிலருக்கு மூட்டு வலி இருக்கும். சிலருக்குத் தோள்பட்டை வலி இருக்கும். ஆனால் பல மூட்டுகளில் பாதிப்பு இருக்கும் பொழுது இதனை பலமூட்டழற்சி என்று கூறுவர். இதன் தாக்குதல் நிதானமாய் பல மாதங்களிலும் ஏற்படலாம். மாறாக திடீரெனவும் ஏற்படலாம்.

* வலி, * மடக்கி நீட்ட முடியாமை, * வீக்கம், * சிவந்து இருத்தல், * சோர்வு, * சக்தி இன்மை, * ஜுரம் 100திக்கு மேல், * வியர்வை, * பசியின்மை, * திடீரென உடல் இளைத்தல் ஆகியவைகள் ஆகும்.

பொதுவில் இதனை பரம்பரை காரணமாகவே கூறுவர். இருப்பினும் மருத்துவ ரீதியாகவும் இதற்கு சில காரணங்கள் உள்ளன.

* புகை, மது, அதிக கஃபின் இவை பழக்கம் அதிகம் இருந்தால் இப்பாதிப்பு ஏற்படுகின்றது.

* சிறு குழந்தைகள் குழந்தை அல்லது குடும்பத்தினர் பிடிக்கும் சிகரெட் சூழலில் வளர்ந்தால் பிற்காலத்தில் அவர்களுக்கு பல மூட்டழச்சி பாதிப்பு ஏற்படுகின்றது.

* வயது கூடும் பொழுதும், ஆண்களை விட பெண்களுக்கும், பரம்பரை காரணமாகவும் இப்பாதிப்பு ஏற்படுகின்றது. பல மூட்டழச்சியில் சில பிரிவுகள் உள்ளன.

* சருமம், சிறு நீரகம், நரம்பு மண்டலம் பாதிக்கும் வகை.

* சோரியாஸிஸ், சரும பாதிப்பு உடையவர்கள்.

எந்த பிரிவானாலும் கீழ்கண்ட பாதிப்புகளை உடையவர்களாக இருப்பர்.

* ஆரம்பத்தில் பஃளூ ஜூரம், சோர்வு இருக்கலாம்.

* விரல்கள் மடிந்து உள்ளங்கை புறம் சுருங்கி கொள்ளலாம்.

* குடலில் வீக்க பாதிப்பு இருக்கலாம்.

மருத்துவர் சில பரிசோதனைகளை நடத்தியே அதன் பிறகே சிகிச்சை அளிக்க முடியும்.

* விரல்களிலோ, மூட்டுகளிலோ பிடிப்பு, வீக்கம், வலி இருந்தால்.

* மூட்டுகள் தொடுவதற்கு மிதமான சூடாக இருந்தால்.

201803160819382269_1_bodypain._L_styvpf.jpg

தாமதிக்காது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

பல மூட்டழற்சியினை முறையாக சிகிச்சை எடுக்காவில்

* நுரையீரல் பாதிக்கலாம். மூச்சு வாங்குதல், விடாத இருமல் தோன்றலாம்.

* வறண்ட கண்கள், வீக்கம் ஏற்படலாம்.

* சரும பாதிப்பு ஏற்படலாம்.

* இருதயத்தினை சுற்றிய பகுதியில் வீக்கம். அதனால் நெஞ்சு வலி ஏற்படலாம். ஹார்ட் அட்டாக், பக்க வாத பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இதன் பாதிப்பு பல விதங்களில் கூடும் என்பதால் மருத்துவ சிகிச்சை மிக அவசியம். இதனை பற்றிய ஆய்வுகள் இன்னமும் நிகழ்வதால் இதில் மேன்மேலும் நல்ல முன்னேற்றங்களை மருத்துவ உலகம் தருகின்றது. இருப்பினும் முழு தீர்வினை கொடுக்க முடியாவிட்டாலும் நல்ல முன்னேற்றங்களை தர முடிகின்றது.

* தரமான உணவு * உடற்பயிற்சி இவையும் பெரிதும் உதவுகின்றது.

வலி நிவாரண மருந்துகள் ஆகியவை சிறந்த முன்னேற்றத்தினை அளிக்கும்.

கொலஸ்டிரால்: இந்த வார்த்தையினைக் கேட்டு இன்று அஞ்சாதவர்கள் இல்லை. இது கொழுப்பின் ஒருவகை. உடல் இயக்கத்திற்கு இதுதேவை. நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என பிரிவு படுகின்றது. மொத்த கொலஸ்டிரால் 200 னீரீ/பீறீ-க்கு கீழ் நல்ல கொலஸ்டிரால் 4060 னீரீ/பீறீ. கெட்ட கொலஸ்டிரால் 100 னீரீ/பீறீக் கீழ். இது ஒரு பொதுவான கணக்கு.

இது மாறுவதற்கான காரணங்கள்: * ஆகிய பரம்பரை, * நீரழிவு 2-ம் பிரிவு, * உடல் உழைப்பின்மை, * பரம்பரை இருதய நோய், * குடும்ப ரத்த உறவுகளில் அதிக கொலஸ்டிரால், * உடல் சதை அதிகம், * புகையிலை பழக்கம், * அதிக கொழுப்பு சேர்ந்த உணவு இவை காரணமாகின்றன.

எனவே சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும் இந்த பாதிப்பிலிருந்து நன்கு காக்கும் என்பதனை உணர்ந்து பின்பற்றுவோம்.

 

 

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/03/16081938/1151231/Dolori-alle-articolazioni.vpf

Link to comment
Share on other sites

கர்ப்பப்பை அகற்றும் சத்திர சிகிச்சைகளை தவிர்ப்பது எவ்வாறு.?

 

 
 

பெண்­களின்  வாழ்க்கைக் காலத்தில் 40 வயது தாண்­டி­ய­வுடன்  கர்ப்­பப்பை  தொடர்­பான பல நோய்கள்  ஆரம்­பிப்­பது வழக்கம்.  இதில் அதி­க­ரித்த மாத­விடாய்ப்  போக்கு,  தாங்­க­மு­டி­யாத வயிற்­று­வலி மற்றும்  மாத­விடாய்  கால வயிற்­று­வலி, கர்ப்­பப்பை  கட்­டிகள், பை­பு­ரோயிட் கட்­டிகள், சூலகக் கட்­டிகள் என்­பன முக்­கிய இடத்தைப்  பிடிக்­கின்­றன. இவற்றில்  எவை பெண்­க­ளுக்கு  ஆபத்­தா­னவை  அல்­லது  ஒரு புற்று நோயாக மாறக்­கூ­டி­யவை என ஆராய்ந்து  பார்க்க வேண்டும்.  

இவ்­வாறு ஆராய்ந்து பார்ப்­ப­தற்கு  3D SCAN பாவிக்க முடியும்.  3D ஸ்கானில் கர்ப்­பப்­பையில்  எந்த  இடத்தில் என்ன  பிரச்­சினை என்­பதைச்  சரி­யாகக் கண்­ட­றிய முடியும்.

கர்ப்­பப்­பையில் உள்ள பிரச்­சி­னை­களை சரி­யாக அறிந்தால்  கர்ப்­பப்­பையை எடுக்­காமல் சரி­யான தீர்வு வழங்க முடியும்.  அதா­வது  கர்ப்­பப்­பையில்  உள்ள  ஒரு சிறிய  பொலிப் (POLYP) போன்ற  ஒரு  சதை  வளர்ச்­சியால்  அதி­கப்­ப­டி­யான  மாத­விடாய் ஏற்­ப­டு­வது வழக்கம். இது மருந்து மாத்­தி­ரை­க­ளுக்கு கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.  ஆனால்  கடந்த காலங்­களில்  இதனைக்  கட்­டுப்­ப­டுத்த  கர்ப்­பப்­பையை  அகற்­று­வ­துதான்  வழக்­க­மாக இருந்­தது.  ஆனால் இதற்­கான  சரி­யான காரணம் சதை­வ­ளர்ச்­சி­யான பொலிப் (POLYP)  தான் என கண்­ட­றிந்தால் இதனை மட்டும் அதா­வது பொலிப் என்ற சதையை மட்டும் அகற்­றலாம்.  இவ்­வாறு அகற்­றும்­போது  கர்ப்­பப்பை  அகற்­றப்­ப­டா­மலே  சரி­யான தீர்வு  கிடைக்­கின்­றது. எனவே  கர்ப்­பப்பை  அகற்ற வேண்டி உள்­ளதே  என கவ­லைப்­படும் பெண்­க­ளுக்கும்  சத்­தி­ர­சி­கிச்­சையை  நினைத்து பின்­வாங்கும்  பெண்­க­ளுக்கும்  இவ்­வாறு கர்ப்­பப்­பையை எடுக்­காமல்  நோய்க்கு மட்டும் சரி­யான தீர்வு கொடுப்­பது பெரிய  வரப்­பி­ர­சா­த­மாக உள்­ளது.

கர்ப்­பப்­பையில்  பைபு­ரோயிட் கட்டி பெரி­தாக வளர்ந்­தி­ருந்தால்  40–45 வய­து­டைய பெண்­களின்  கர்ப்­பப்­பையை  முழு­தாக  எடுப்­பது  வழ­மை­யாக  இருந்­தது.  ஆனால்  இன்­றைய தொழில்­நுட்­பத்தில் கிடைக்­கப்­பெற்ற  3D–4D ஸ்கான்  மூலம் பைபு­ரோயிட் கட்டி  என்­ப­தனை சரி­யாக   உறுதி செய்து, பின்னர்  கட்­டியை  மட்டும் எடுத்தால்  போதும்  என்ற  முறையில்  கர்ப்­பப்­பையை அகற்­றாமல்  சத்­தி­ர­சி­கிச்சை  மேற்­கொள்ள  முடியும்.  இத­னையும்  இப்­பொ­ழுது லப்­ரஸ்­கோப்பி முறை­மூலம்  (Laparoscopy)  சிறிய ஒரு துளையில் செய்­யக்­கூ­டி­ய­தாக மாற்றம்   வந்­துள்­ளது.  எனவே வயிற்றை வெட்ட வேண்­டுமா என்ற  ஏக்கம்  இல்­லாது   இம்­மு­றையில்  ஒரு சிறிய  துளையைப்  போட்டு கர்ப்­பப்­பையில் எந்த அளவு  பெரிய  கட்­டி­யாக  இருந்­தாலும் சரி  எடுக்­க­கூ­டி­ய­தாக உள்­ளது.

 அடுத்­த­தாக கர்ப்­பப்பை  கூடு­த­லாக  அகற்­றப்­பட்டு  வரு­வது  சூல­கங்­களில் ஏற்­படும்  கட்­டி­க­ளுக்­காகும். இவ்­வாறு  சூல­கத்தில் கட்டி என்­ற­வுடன்  பெரி­த­ளவில்  பதற்­றப்­ப­டாது சரி­யான விப­ரங்­களை  3D ஸ்கானில்  பெறு­வதன் மூலம்  இவை  சாதா­ரண  நீர் நிறைந்த கட்­டி­களா  அல்­லது  சிக்கல்  தரக்­கூ­டிய  கட்­டி­களா என அறியக் கூடி­ய­தாக உள்­ளது. சாதா­ரண நீர் நிறைந்த  சூலகக் கட்­டிகள் என்றால்  இதற்­காக  கர்ப்­பப்­பையை  எடுக்க வேண்­டிய  அவ­சியம் இல்லை.  இவற்­றையும் லப்­ரஸ்­கோப்பி துளை மூலம்  நீர் நிறைந்த  கட்­டி­களை  இல­கு­வாக அகற்ற முடியும். எனவே கர்ப்­பப்பை அகற்­றா­மலே சிகிச்சை  வழங்­கக்­கூ­டி­ய­தாக உள்­ளது. 

 அடுத்­த­தாக குடும்­பத்தில் குழந்தைத் தேவை­களைப்  பூர்த்தி செய்து  இரண்டு, மூன்று பிள்­ளை­க­ளுக்குத்  தாயாக இருந்து வரும்  40 தொடக்கம் 50 வயது வரை­யான   பெண்­களை  எடுத்தால்  எண்டோ மெற்­றி­யோ­சியஸ் (Endometriosis) மற்றும்  அடி­னோ­ம­யேசிஸ் (Adenomyosis) கர்ப்­பப்பை  நோயால்  வயிற்­று­வலி  வந்து  அவ­திப்­ப­டு­கின்­றனர்.  கர்ப்­பப்­பையை  எடுத்­தால்தான் இந்த நோய்  குண­மாகும் என  நினைக்க வேண்டாம்.  ஏனெனில்  கர்ப்­பப்­பையை  எடுக்­கா­மலும் GNRH ஊசி மூல­மா­கவோ  லப்­ரஸ்­கோப்பி  சிகிச்சை  மூல­மா­கவோ  சிகிச்­சைகள்  வழங்கக் கூடி­ய­தாக  உள்­ளது.

 ஆகையால்  கடந்த காலங்­க­ளைப்போல் அல்­லாது  கர்ப்­பப்பை பிரச்­சி­னை­களை  குணப்­ப­டுத்த  ஏரா­ள­மான  மாற்று வழி­மு­றை­களும்   சிகிச்­சை­களும் வந்­துள்­ளன. ஆதலால் இவற்­றுக்கு கர்ப்பப்பையை  அகற்றுவது தான் உரிய தீர்வு என நினைக்க  வேண்டாம் .  இவற்றை  தீர்மானிக்க 3D மற்றும் 4D ஸ்கான் முறைகள் பெரிதும்   உதவும்.  எனவே  கர்ப்பப்பையை   எடுக்க  விரும்பாது  நோயால்  அவதிப்படும்  பெண்களுக்கு  நோய்களில்  இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக  வாழ்க்கையைத்  தொடர  புதிய  சிகிச்சை முறைகள் பெரிதும்  உதவுகின்றன.   

http://www.virakesari.lk/article/31734

Link to comment
Share on other sites

இரத்தம் பற்றி சுவாரசியங்கள்

 
அ-அ+

நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் இரத்தம் பற்றிய சுவாரசியங்களை இங்கே விரிவாக பார்ப்போம்

 
 
இரத்தம் பற்றி சுவாரசியங்கள்
 
நம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..!

ரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், ‘பிளாஸ்மா’ என்ற பொருளும் உள்ளது.

உற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும். எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்’கள் உற்பத்தியாகின்றன.

சிவப்பு நிறம் ஏன்?: ரத்த சிவப்பு அணுக் களின் உள்ளே; ‘ஹீமோகுளோபின்’ என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.

ஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, ரத்த சிவப்பு அணுக் களைச் செலுத்துவர்.

ரத்தத்தின் வகைகள்: ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான். அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.

ரத்த அணுக்களின் வேலை: ரத்த வெள்ளை அணுக்களை, ‘படை வீரர்கள்’ என்று அழைப்பர். ஏனெனில், உடலுக்குள் நுழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுபவை, ரத்த வெள்ளை அணுக்களே.

ரத்தத்தில் உள்ள, ‘பிளேட்லெட்’ அணுக்கள், உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் அமைப்பாக செயல்படுகிறது. உடல் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதும், கார்பன்டைஆக்சைடு வாயுவை சுமந்து சென்று வெளியேற்றுவதும் சிவப்பு செல்களின் பணியாகும்.

ரத்த ஓட்டம்: உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நல்ல உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

‘பிளாஸ்மா’ என்றால் என்ன?: ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீதம் பிளாஸ்மாவும், 40 சதவீதம் ரத்த சிவப்பு அணுக்களும் உள்ளன. மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்களும் இருக்கின்றன.

ரத்த அழுத்தம் என்பது என்ன?: உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், ‘பம்ப்’ செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம். இதயத்திலிருந்து நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது.

உடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம்: ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தொலைவு, ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு சமமாகும். ரத்தக் குழாய்களுக்குள் செல்லும்போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகமாகும். 

https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/03/18132341/1151656/Interesting-about-blood.vpf

Link to comment
Share on other sites

விந்தணுக்கள் எண்ணிக்கை குறைந்தால் நோய்வாய்ப்படும் அபாயம் அதிகம்

 

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் ஆண்கள் நோய் தாக்குதலுக்கு உள்ளாகுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் நோய் தாக்குமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

அதே சமயம், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது வளர்சிதை பிரச்னைக்கு நேரடி காரணம் என்று இந்த ஆய்வு சொல்லவில்லை. ஆனால், இரண்டுக்கும் தொடர்பு உள்ளது என்றே இந்தாய்வு கூறுகிறது.

இத்தாலியில் குழந்தைபேறு இல்லாமல் இருக்கும் ஆண்களை பரிசோதித்ததில், குழந்தை பேறு என்பதையெல்லாம் கடந்து, உடல் நல பிரச்னைகளுக்கு விந்தணு முக்கிய காரணியாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

குழந்தை பேறு

சரியாக 5177 ஆண்களை சோதித்ததில், விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 20 சதவீத ஆண்கள் குண்டாக இருக்கிறார்கள். உயர் ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கெட்ட கொழுப்பு இருக்கிறது என்று இந்தாய்வு முடிவு சொல்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கை, விந்தணுக்களின் தரம் ஆகியவை குழந்தை பேற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது. குழந்தை இல்லாமல் இருக்கும் மூன்றில் ஒருவருக்கு விந்தணுக்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.

டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன்

உடல்நலன் தொடர்பான இந்த பிரச்னைகளில் டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவாக இருப்பது முக்கியத் தொடர்பு வகிக்கிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் நோய் தாக்குமா?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

மருத்துவர் ஃபெர்லின் கூறுகையில் மலட்டுத்தன்மைக்காக சிகிச்சை கொடுக்கப்படும் ஆண்களுக்கு முறையான உடல் பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்பதை இந்த ஆய்வு முடிவு காட்டுகிறது என்றார்.

"குழந்தை பெற்று கொள்வதில் சிரமத்தை சந்திக்கும் ஆண்களுக்கு அதற்கான காரணம் குறித்து சரியாக கண்டறியப்பட வேண்டும். மேலும் கருத்தரித்தல் தொடர்பான விஷயத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் மற்றும் முதன்மை உடல் நல மருத்துவர்கள் பார்வையில் தொடர்ந்து சிகிச்சையில் இருக்க வேண்டும். ஏனெனில் அவர்களுக்கு நோய் வாய்ப்படும் வாய்ப்பும் இறக்கும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது." என்றார் ஃபர்லின்

http://www.bbc.com/tamil/science-43460438

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சுற்றுலாப் பிரதேசங்களில் சிறப்பு சோதனை நடவடிக்கை! நாட்டிலுள்ள சுற்றுலாப் பகுதிகளில் சிறப்பு சோதனை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு – காலி முகத்திடல், புதுக்கடை, பேருவளை, பெந்தோட்டை, ஹிக்கடுவ, காலி, எல்ல ஆகிய பகுதிகளில் இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் அண்மைக்காலமாக  சுற்றுலாப் பயணிகள்  அச்சுறுத்தப்படுதல் மற்றும் ஏமாற்றப்படும் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. அண்மையில், கொழும்பு – புதுக்கடை மற்றும் களுத்துறை நகரப் பகுதிகளில் இவ்வாறு இரு சம்பவங்கள் நடைபெற்றிருந்தன. இதையடுத்தே, இந்த விசேட இரவு நேரச் சோதனைகள் நடத்தப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபையின் சோதனைகள் மற்றும் விசேட விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சங்ஜய இரசிங்க தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378849
    • யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது. அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது. இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378867
    • வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கு வடை விற்றவர் கைது! வெளிநாட்டு சுற்றுலாப்  பயணியிடம் ஒரு உளுந்து வடை மற்றும் தேனீருக்கு 800 ரூபாய் அறவிட்ட குற்றச்சாட்டில் உணவகமொன்றின் பணியாளரை  களுத்துறை  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மேலும், குறித்த உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தியுள்ளார். இதேவேளை அண்மையில் கொழும்பு அளுத்கடை பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணியை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1378864
    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.