Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

ஓஸ்டியோபோரோஸிஸ் குறைபாட்டிற்காக ஊசி போட்டுக் கொள்கிறீர்களா...!

 

 

எம்மில் பல பெண்கள் தங்களுடைய மாதவிடாய் சுழற்சி நின்ற பின் எலும்பு தேய்மானத்திற்கு ஆட்பட்டு, மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, கல்சிய சத்து கொண்ட ஊசியை போட்டுக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் இத்தகைய ஊசியை தொடர்ச்சியாக எலும்பு தேய்மானத்திற்கு ஆட்பட்ட அனைவரும் பயன்படுத்தலாமா? என்று கேட்கிறார்கள்.

news_image_health_30_9_17.jpg

உலகில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகிறார்கள். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நடைபெறும் வரை அவர்களுக்கு இத்தகைய குறைபாடு ஏற்படுவதில்லை. ஏனெனில் இது தொடர்பான கல்சிய சத்து ஹோர்மோன்களின் சுரப்பினால் இயல்பாகவே எலும்பில் சேகரிக்கப்பட்டு, அதன் வலிமை உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால் பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நின்ற பின் அவர்களில் எலும்புகளில் அதன் வலிமைக்காக சேகரிக்கப்படும் கல்சிய சத்துகளின் அளவு இயல்பை விட குறைந்துவிடுகிறது. அதே தருணத்தில் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற வேறு சில உடலியல் ஆரோக்கிய சிக்கல்களால் உணவு கட்டுப்பாடு மற்றும் உணவு பழக்க வழக்கத்தை மாற்றியமைத்துக் கொண்டிருப்பர். அத்துடன் போதிய அளவிற்கு உடற்பயிற்சியையோ அல்லது உடலுக்கு தேவையான விற்றமின் - டி சத்திற்கான பயிற்சியையோ மேற்கொள்வதில்லை. இதனால் அவர்கள் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகி, ஓஸ்டியோபோரோஸிஸ் என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 

இவர்கள் மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைப் பெறும்போது அவர்களுக்கு உணவின் மூலமாக கல்சிய சத்தினை உட்கிரகித்துக் கொள்ளும் சக்தி இருந்தால் அவர்களுக்கு கல்சிய சத்துள்ள உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக் கொள்வதுடன் போதிய கால அளவில் எடுத்துக் கொள்ளுமாறு கல்சிய சத்து மாத்திரைகளையும் பரிந்துரைப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கு கல்சிய சத்துள்ள உணவுப் பொருளை சாப்பிட்டாலும் அவற்றிலுள்ள கல்சிய சத்தை உட்கிரகிக்கும் தன்மையை உடல் பெறவில்லை என்றால் மட்டுமே அவர்களுக்கு குறிப்பிட்ட கால அளவுகளில் நேரடியாக கல்சிய சத்தினை அளிக்கும் கல்சிய ஊசியினை போட்டுக் கொள்ளுமாறு பரிந்துரைப்பார்கள். இதில் மருத்துவர்களின் சோதனைக்கு பிறகே தீர்மானிக்கப்படும். அதனால் எலும்பு தேய்மான பிரச்சினை வந்துவிட்டால் கல்சிய ஊசிப் போட்டுக் கொள்ளவேண்டும் என்ற பொதுமையான முடிவிற்கு நோயாளிகள் வரக்கூடாது.

ஒரு சிலர் மருத்துவர்களின் இந்த அறிவுரைகளை அலட்சியப்படுத்திவிட்டு கல்சிய சத்து ஊசியைப் போட்டுக்கொண்டால் அவர்களின் சிறுநீரகம் பாதிப்படையும். அதே சமயத்தில் கர்ப்பப்பை அகற்றப்பட்டவர்கள், மாதவிடாய் சுழற்சியில் கோளாறுகளை சந்தித்தவர்கள், உடலுழைப்பு குறைந்தவர்கள் ஆகியவற்றிற்கு ஆளாகும் பெண்கள் எலும்பு தேய்மானத்திற்கு ஆளாகுவது அதிகம். அதனால் இவர்கள் முறையாக மருத்துவர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைக்கு பிறகே கல்சிய சத்து ஊசியினை போட்டுக் கொள்ளவேண்டும். 

டொக்டர். நிவேதனா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25216

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

``ஈஸியா மனஅழுத்தம் குறைக்கலாம்’’ - நடிகர் ரமேஷ் கண்ணாவின் பிரார்த்தனை டெக்னிக்!

 

நகர வாழ்க்கை பரபரப்புக்குப் பஞ்சமில்லாதது. அதிலும் திரைத்துறையில் இருப்பவர்கள் என்றால், சொல்லவே வேண்டாம்... நிமிடத்துக்கு நிமிடம் டென்ஷன், அன்றைய தினத்தையும் அடுத்த நாளையும் நினைத்து ஸ்ட்ரெஸ் என விரையும் வாழ்க்கை. நடிகர் ரமேஷ் கண்ணா, தன் ஸ்ட்ரெஸ்ஸைப் போக்க வித்தியாசமான ஒரு வழிமுறையைக் கையாள்கிறார் என்று கேள்விப்பட்டோம். அதை அறிய அவரைச் சந்தித்துப் பேசினோம். படப்பிடிப்பு வேலைகளுக்கு இடையிடையே படங்களுக்குக் கதை வசனம் எழுதிக்கொண்டு, இப்போதும் காலில் சக்கரம் கட்டிக்கொள்ளாத குறையாக, பிஸியாக ஓடிக்கொண்டேயிருக்கிறார். தனக்கு ஏற்படும் மன அழுத்தத்தை எப்படி சரி செய்துகொள்கிறார் ரமேஷ் கண்ணா?

மனஅழுத்தம் குறைப்பது எப்படி என விளக்கும்  நடிகர் ரமேஷ் கண்ணா

 

``ஸ்ட்ரெஸ்ங்கிறது இன்னைக்கு எல்லாருக்குமே வந்துடுச்சு. அதுவும் கல்யாணம் ஆயிடுச்சுன்னா கேட்கவே வேண்டாம். அவங்கக்கிட்ட இருக்கிற ஸ்ட்ரெஸ் நமக்கும் வந்து ஒட்டிக்குது. ஆக, ஸ்ட்ரெஸ் நம்ப வாழ்க்கையில வந்து இணைஞ்சுடுச்சு.

ஒரு பஸ்ஸுல போறோம். பஸ் நின்னதும் தடுக்கி விழுந்துடக் கூடாதுனு வயசானவர் மெள்ளமா இறங்குவார். அதுக்குக்கூட பொறுமை இல்லாம, `சீக்கிரம் இறங்குய்யா’னு கத்த ஆரம்பிச்சுடுறோம். அதே மாதிரி நம்ம காரைக் கொண்டுபோய் சிக்னல்ல நிறுத்துவோம்; சின்ன சந்தாக இருக்கும். அதுக்குள்ள போய் நிறுத்துவோம். ரெட் சிக்னல்தான் இருக்கும். பின்னாடி வர்றவனுக்கு பொறுமை இருக்காது. அந்தச் சின்ன சந்துல டூ வீலரை ஒடிச்சு, வளைச்சு நம்ம கார் தகரத்தைக் கிழிச்சுட்டுப் போய் நிப்பான். அதே ரெட் சிக்னல்தான் எனக்கும் அவனுக்கும். கொஞ்சம் பின்னாடி போகலாம். போக மாட்டான். அங்கே இருந்து வேகமா போய் ஹாரன் அடிப்போம். 'யோவ், ஏன்யா 'பாம்... பாம்'னு ஹாரன் அடிக்கிறே... போய்கிட்டுதானே இருக்கோம்'பான்.

சரி, ஒரு கேப்புல சத்தமில்லாம சைடு வாங்கிப் போனோம்னா, அதே நபர், `யோவ்... ஹாரன் அடிக்க மாட்டியா?’னு கேட்பான். என்னத்தைச் சொல்றது? எல்லாருமே அவங்களுக்குத் தகுந்த மாதிரி உலகம் இருக்கணும்னு நினைக்குறாங்க. ஆனா, நியாயமா நடந்துக்க மாட்டேங்கிறாங்க. உலகம் அவ்வளவு ஃபாஸ்ட்டா இருக்கு. முதல்ல இந்த மன அழுத்தம்ங்கிறது கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. காலப்போக்குல பல விஷயங்கள்ல அடிபட்டு மிதிபட்டு வரவும் பழகிப் போயிடுச்சு.

நடிகர் ரமேஷ் கண்ணா

மனஅழுத்தத்துக்கு உரிய காரணம் வீதியில இருக்கு. வீட்டுல இருக்கு. வேலை பார்க்கிற இடத்துல இருக்கு.

ஒரு ஷூட்டிங்குக்குப் போறோம். கரெக்ட்டா அன்னைக்கு வரவேண்டிய ஆர்ட்டிஸ்ட் வரலைன்னா, ஷூட்டிங் கேன்சலாகிடும். மறுநாள் வேற ஒரு இடத்துக்குப் போக ப்ளான் பண்ணி இருப்போம். அப்ப செம டென்ஷன் ஆகிடும். அதனால மனஅழுத்தம்ங்கிறது எப்பவும் இருக்கும். அதோடதான் நாம வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம். காலையில் எந்திரிச்சதும் செல்போன் அரை மணி நேரம் அடிக்கலைனா 'என்னடா, எவனும் போன் பண்ணலை, மார்க்கெட் இப்படி இருக்குதே'னு கவலை வந்துடும். போன் கால்ஸா வந்தாலும், 'என்னடா குளிக்க முடியலை. புறப்பட முடியலை'னு பரபரப்பு தொத்திக்கும். ஆனா, அந்தப் பரபரப்புதான் நம்மைத் தொடர்ந்து வேலைபார்க்க வெச்சிக்கிட்டே இருக்கும்.

நமக்கு மனஅழுத்தம் வந்ததுனா அதைச் சரிபண்ண, ஒரு சின்ன விஷயம் இருக்கு. காலையில் இருபது நிமிஷம், சாயங்காலம் 20 நிமிஷம் பிரேயர் பண்ண ஒதுக்கிட்டோம்னா ஸ்ட்ரெஸ்ஸெல்லாம் காணாமப் போயிடும். அப்புறம் ஸ்ட்ரெஸ்ங்கிற ஒண்ணு வரவே வராது. நான் எப்பவும் எனக்காக பிரேயர் பண்ண மாட்டேன். மத்தவங்களுக்காகத்தான் பண்ணுவேன். யார் யாருக்கெல்லாம் பிரேயர் பண்ணுவேன்னு, அந்தப் பெயர்களைச் சொன்னா அவ்வளவு நல்லா இருக்காது.

 

 

'நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்றால் நிச்சயம் நல்ல மனிதர்களின் பிரார்த்தனையில் நீங்கள் இருப்பீர்கள்' என வேதம் சொல்கிறது. நான் கிறிஸ்டியன். ஜீசஸை நினைச்சுத்தான் பிரேயர் பண்ணுவேன். அதாவது 'உனக்கு சமூகத்தில் மதிப்பும் அன்பும் இருக்கிறதென்றால், இன்னொருவருடைய இதயத்தில் நீ இருக்க வேண்டும். இன்னொருவருடைய எண்ணத்தில் நீ இருக்க வேண்டும். இன்னொருவருடைய பிரார்த்தனையில் நீ இருக்க வேண்டும்' என்பார்கள். அந்த இடத்தில இருக்கிறவன்தான் மனிதன். அதுதான் வாழ்க்கையின் சக்சஸ்.

முக்கியமா பிரேயர் பண்ணும்போது உங்களுக்காகப் பண்ணக் கூடாது. உங்களைச் சேர்ந்த உங்கள் குடும்பம், நண்பர்கள், தொழில் வாய்ப்பு அளித்தவர்கள், நமக்குத் தெரிந்தவர்கள், கஷ்டப்படுகிறவர்கள், கைம்பெண்கள் என மற்றவர்களுக்காகப் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதுக்கு பெரிய லிஸ்ட்டே இருக்கு. அப்படிப் பண்ணும்போது அவங்க முகமெல்லாம் நமக்கு வந்து போகும். உடனே தெம்பாயிடுவேன்'' இவ்வாறு அவர் கூறினார்'.

 

'எனக்கு ரொம்ப மன அழுத்தமா இருந்தா, மத்தவங்களுக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பிச்சிடுவேன்' எனும், உங்களின் பிரார்த்தனை ரொம்பவே வித்தியாசமாக இருக்கு சார்' எனக்கூறி விடைபெற்றோம்.

http://www.vikatan.com/news/health/103867-actor-ramesh-kanna-speaks-about-his-stress-relief-technique.html

Link to comment
Share on other sites

காலை உணவை தவிர்ப்பவர்களா நீங்கள்...!

 

 

இன்றைய சூழலில் காலையில் 9 மணிக்கு அலுவலகத்தில் இருக்கவேண்டும் என்றால் காலையில் 7 மணிக்கு சாப்பிடவேண்டியதாகயிருக்கிறது. அதன் பின் போக்குவரத்து நெரிசலில் பயணித்து சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வரவேண்டும். இந்நிலையில் பெரும்பாலானவர்கள் காலை உணவை 7 மணிக்கு எடுக்காமல், காலி வயிற்றுடன் பசியுடன் பயணித்து, அலுவலகத்திற்கு வந்த பின் சோர்வாக இருப்பதால் சிறிதளவு காலை உணவை எடுத்துக் கொள்வர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதயம் தொடர்பான பாதிப்பு வரக்கூடும் என்று எச்சரிக்கிறது ஒரு மருத்துவ ஆய்வு. அத்துடன் காலையில் சத்தற்ற உணவை சாப்பிடுவர்களும் பாதிக்கப்படக்கூடும் என்று அறிவுறுத்துகிறது அந்த ஆய்வு.

news_image_health_3_10_17.jpg

இரவு உணவை 8 மணிக்குள்ளாக சாப்பிட்டுவிட்டு 10 மணிக்கு உறங்கச் செல்வபவர்கள், காலையில் எழுந்து அலுவலகத்திற்கு செல்லும் முன் அல்லது பணிக்கு செல்லும் முன் கட்டாயமாக சத்து மிக்க காலை உணவை சாப்பிடவேண்டும். அலட்சியப்படுத்தினால் அதிரோஸ்கிளிரோஸிஸ் என்ற பாதிப்பு இதயத்திற்கு இரத்தம் எடுத்துச் செல்லும் தமனிகளில் உருவாகி, இதய பாதிப்பு மற்றும் இதய செயலிழப்பிற்கு காரணமாகிவிடும். காலையில் நீங்கள் உணவு எடுத்துக் கொண்டால் இந்நிலை ஏற்படுவது தடுக்கப்படுகிறது என்றும், காலையில் உணவை எடுத்துக் கொள்ள தவறினால் இதயத்திற்கு குருதியை எடுத்துச் செல்லும் தமனிகளில் தீங்கு விளைவிக்கும் புரதச்சத்து, தேக்கமடைந்து இரத்த ஓட்டத்தை தடை ஏற்படுத்தி இதய பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

அதனால் காலை உணவை ஒரு போதும் தவிர்க்காதீர்கள். அத்துடன் காலையில் சாப்பிடும் போது சத்து அதிகமுள்ள முட்டை, பழங்கள், முழு தானியங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவேண்டும். இதன் காரணமாக உடலுக்கு அன்றைய திகதிக்கு தேவைப்படும் புரதசத்துகள், இயல்பான அளவை விட 5 சதவீதம் கூடுதலாக கிடைத்து இதயத்தின் ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது என்கிறார்கள்.

டொக்டர் ஹயாஸ் அக்பர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25298

Link to comment
Share on other sites

கருப்பையில் பொருத்தக்கூடிய ஹோர்மோன் சுரப்பி கருவி

 

 

இன்றைய சூழலில் பெண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறை மற்றும் உணவு முறையை மாற்றிக் கொண்டுவிட்டதால் மாத விடாய் சுழற்சியில் கோளாறுகள், குறைபாடுகள், சிக்கல்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை எதிர்கொள்கிறார்கள்.

news_image_health_279.jpg

அதிலும் மாதவிடாய் நிற்கும் சமயத்தில் பெரும்பாலான பெண்களுக்கு அதிகளவிலான ரத்தபோக்கு ஏற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையானவர்கள் தங்களின் கருப்பையை அகற்றிவிடுகிறார்கள். ஆனால் தற்போது இந்நிலைக்கு மாற்றாக பல்வேறு வகையினதான சிகிச்சைகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன.

முதலில் பெண்கள் தங்களின் அதிகப்படியான இரத்தபோக்கிற்கான காரணத்தை கண்டறியவேண்டும். அதற்குரிய பரிசோதனைகளை செய்து கொள்ளவேண்டும். அதனைத் தொடர்ந்து கருப்பை கட்டிகள், வீக்கம், சினைப்பை கட்டிகள், கருப்பை உட்புறச் சுவர் தடிமன் ஆகியவற்றைப் பற்றி உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். அதே போல் எண்டோமெட்ரியர் பயாப்சி எடுத்து கருப்பை வாய் புற்றுநோயின் தொடக்க கால அறிகுறிகள் இருக்கிறதா என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

இதன் பிறகே இரத்தப்போக்கை கட்டுப்படுத்தக்கூடிய சிகிச்சைகளை செய்து கொள்ளவேண்டும். மாத்திரைகள், ஹோர்மோன் ஊசிகள் மூலம் நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் தற்போது கருப்பையில் பொருத்திக் கொள்வது போன்ற ஹோர்மோன் சுரப்பி கருவிகளும் கிடைக்கிறது. அதனையும் பயன்படுத்திக் கொண்டு இதற்கு தீர்வு பெறலாம்.

டொக்டர் எழிலரசி

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25028

Link to comment
Share on other sites

நீரிழிவு நோயாளிகள் சொக்லேட் சாப்பிடலாமா.?

 

 

news_image_health_4_10_17.jpg

நீரிழிவு நோயாளிகள் எப்போதும் தங்களின் சாப்பாட்டு ஆசையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பார்கள். பலர் பலவகையினதான இனிப்புகள், சொக்லேட்டுகள் சாப்பிட்டாலும் இவர்கள் அவர்களை ஒரு முறை ஏக்கத்துடன் பார்ப்பார்களேத் தவிர அதனை தொடக்கூட மாட்டார்கள். ஆனால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் நீரிழிவு நோயாளிகள் மட்டுமல்ல இதய பாதிப்புள்ள  நோயாளிகளும் சொக்லெட்டை சாப்பிடலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனால் அந்த சொக்லேட் பால் கலக்காத டார்க் சொக்லேட் வகையினதாக இருக்கவேண்டும்.

அது என்ன டார்க் சொக்லேட் என்று கேட்கிறீர்களா..? பால் கலக்காத சொக்லேட்டுகளை சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு கேடு கிடையாது. இவ்வகையினதான சொக்லேட்டுகளில் 70 சதவீத அளவிற்கு கோகோ என்ற பொருள் இருப்பதால் உடல் நலத்திற்கு ஊறு விளைவிக்காது. அதற்காக தினமும் அதிகளவிலான டார்க் சொக்லேட்டுகளை சாப்பிடக்கூடாது. ஏனெனில் அமிர்தமேயானால் அளவுக்கு மிஞ்சினால் நஞ்சாகிவிடும் அல்லவா.?

டார்க் சொக்லேட் சாப்பிடுவதால் தோலில் எங்கேனும் வீக்கங்கள் இருந்தால் அதனை குறைய உதவுகிறது. புற்றுநோய் மற்றும் டிமென்ஸியா எனப்படும் நோயை வராமல் பாதுகாக்கிறது. மன அழுத்தத்தையும், இதய பாதிப்பையும் தடுத்து ஆரோக்கியமாக இயங்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் நீரிழிவு நோயாளிகள் இதனை சுவைக்கலாம். உடலில் உள்ள கொலஸ்ட்ரால் எனப்படும் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. அத்துடன் இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.  அதனால் இனிமேல் சொக்லேட் சாப்பிட ஆசை ஏற்பட்டால், பால் கலக்காத டார்க் சொக்லேட்டை சுவைக்கலாம்.

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25351

Link to comment
Share on other sites

துரிதமாக ஆரோக்யம் கலைக்கும் துரித உணவு கலாசாரம்..! உடல்நலம் கவனம் மக்களே #FastFoodAlert

 
 

கோடை காலம் தொடங்கியவுடன், அந்நிய மோகத்தால் நமது பாரம்பர்ய பானங்களை உதாசீனப்படுத்திவிட்டு, கவர்ச்சியான நிறங்களில் காட்சியளிக்கும் செயற்கைக் குளிர்பானங்களிடம் நமது மனம் காதல்கொள்ளத் தொடங்கிவிடுகிறது. இந்த விபரீதக் காதல், பல்வேறு நோய்களை நமக்குக் காதல் பரிசாகக் கொடுத்துவிடுகிறது. ஆனால், குளிர்காலத்தில் செயற்கைக் குளிர்பானங்களை மனம் அவ்வளவாக நாடுவதில்லை. என்றாலும், நம்மை அந்நிய மோகம் விட்டபாடில்லை என்பதே யதார்த்தம். குளிருக்கும் மழைக்கும் இதமாக, சூடாக பீட்சா, பர்கர், ஃபிரைடு ரைஸ், சாட் வகைகள் போன்ற துரித உணவுகளுக்காக மனம் ஏங்கத் தொடங்கிவிடுகிறது. கோடை காலமானாலும் சரி... குளிர் காலமானாலும் சரி... காலமுறையின்றி உணவு சார்ந்த விஷயங்களில் எவ்வளவு தவறுகளை நாம் செய்துகொண்டிருக்கிறோம் தெரியுமா?

பர்கர்

 

பீட்சா, பர்கர்களின் வரவு

தொடக்கத்தில் நமது மக்களிடம் பீட்சா, பர்கர்களைக் கொண்டு சேர்க்க எண்ணிலடங்கா விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சாலையோரங்கள், பேருந்து நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் என அனைத்துப் பொது இடங்களிலும் பொதுமக்களையும் மாணவ சமுதாயத்தையும் மயக்கும் வண்ணமயமான விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டன. அந்த விளம்பரங்கள் மக்களை எந்த அளவுக்கு ஏமாற்றியிருக்கின்றன என்பதை நிரூபிக்கும்விதமாக, ஏரியாவுக்கு ஒரு மளிகைக் கடை இருப்பதைப்போல, ஏரியாவுக்கு ஒரு துரித உணவுக் கடையை இப்போது தாராளமாகப் பார்க்க முடிகிறது. ஃப்ரைடு ரைஸ், சாட் வகைகள் விற்கிற கடைகளுக்கு இணையக இப்போது பீட்சா, பர்கர் கடைகளும் நகரங்களில் முளைக்க ஆரம்பித்துவிட்டன. கூடவே மருந்தகங்களும் நம் வாழ்விடங்களைச் சுற்றி அதிகரித்திருப்பதையும் கவனித்திருக்கலாம். துரித உணவுக் கடைகள் அதிகரிக்கும்போது, உடல் சார்ந்த பிரச்னைகள் பெருகி, மருந்துகளின் வியாபாரமும் பன்மடங்கு அதிகரித்துவிடுகிறது என்பது மறைமுகமான உண்மை.

நமது உணவியலில் புகுந்துவிட்ட துரித உணவு கலாசாரம்!

‘பெருநகரங்களில் வாழ்பவர்களின் உணவியலில் வாரம் மூன்று அல்லது நான்கு வேளையாவது பீட்சா, பர்கர் போன்ற மேலை நாட்டு கலாசார உணவுகள் இடம்பிடித்துவிடுகின்றன என்கிறது உணவியல் கருத்துக் கணிப்பு. ஹோட்டல் மெனு கார்டில் தவறாமல் இடம்பிடித்து வந்த துரித உணவுகள், இப்போது வீட்டிலிருக்கும் மெனு கார்டிலும் இடம்பிடிக்கத் தொடங்கிவிட்டன. காலை உணவாக, மாலை சிற்றுண்டியாக, இரவு பார்ட்டியில்... என பீட்சா, பர்கர்கள் அனைத்து வடிவங்களுக்கும் நெகிழியைப்போல தங்களைத் தகவமைத்துக்கொண்டு, உணவியலில் முக்கியப் பங்காற்றுகின்றன. நெகிழியைப்போலவே இவையும் உடலுக்கு தீங்கானவை என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம்?

பர்கர்

பார்சலில் வரும் நோய் வித்துக்கள்...

வாய்க்குள் நுழையாத பெயர்களைக் கொண்ட பீட்சாக்களை வாய்க்குள் பலவந்தமாகப் பிடித்து தள்ளிவிடுகிறோம். சவைக்க முடியாமல் சவைத்து, அரைகுறையாக இரைப்பைக்குள் செல்லும் அவை, செரிமானத்தில் குளறுபடிகளை உ

ண்டாக்கி, பல்வேறு நோய்கள் உண்டாவதற்கு காரணமாகிவிடுகின்றன. ஆர்டர் செய்தால் வெகு விரைவில் வீடு வந்து சேரும் பார்சல் பீட்சாக்களில், ஆரோக்கியத்துக்குப் பதிலாக நோய்களின் வித்துக்கள்தான் அதிகமாக இருக்கின்றன என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

துரித உணவு எனும் போதை!

‘என்றாவது ஒரு நாள் இவற்றைச் சாப்பிடுவதில் தவறில்லை’ என்று தொடங்கும் பழக்கம், விரைவில் அடிமையாக்கும் அளவுக்கு நம்மைக் கொண்டு சென்றுவிடும். காரணம் என்ன தெரியுமா?  இதில் கலக்கப்பட்டிருக்கும் சில வகையான ரசாயனங்கள், நமது மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் செயல்பட்டு, மீண்டும் மீண்டும் அவற்றையே தேடவைக்கும் அளவுக்குப் போதையை, ஒருவித ஈர்ப்பை உண்டாக்கிவிடுகின்றன. மது, புகை வரிசையில் துரித உணவு வகைகளையும் போதைப் பட்டியலில் சேர்த்துவிடலாமா என்று யோசிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம்.

திரையரங்குகளில் அந்நிய உணவுகள்...

திரையரங்குகளில் முறுக்கு, சீடை, கடலை மிட்டாய் எனப் பாரம்பர்யத் தின்பண்டங்களின் விற்பனை கொடிகட்டிப் பறந்த நிலை மாறி, இப்போது அந்நிய தேசத்துக் கொடிகள் பறக்கும்விதமாக, பீட்சாக்கள், பர்கர்களின் விற்பனை அமோகமாக இருக்கிறது. திரைப்படத்துக்கான நுழைவுச்சீட்டு வாங்கும்போதே, கூடுதல் கட்டணத்துடன் துரித உணவுக்கான டோக்கனையும் சேர்த்து கல்லா கட்டுவது திரையரங்க உரிமையாளர்களின் வியாபாரத் தந்திரம். திரைப்படம் பார்க்கும்போது, ஏதாவது ஒரு துரித உணவு நம்மை அறியாமல் நமது இரைப்பைக்குள் சென்றுகொண்டிருக்கும் நிலைமைதான் இன்று. இடைவேளையில் சாப்பிடவில்லை என்றால், அருகிலிருப்பவர் நம்மை மேலும் கீழும் பார்க்கும் அளவுக்கு நாகரிகக் குறைச்சலாக மாறிவிட்டது. இதற்கு அதிகமாகச் செலவுசெய்து, அதற்கு இலவச இணைப்பாக வழங்கப்படும் நோய்களையும் வாங்கப் பழகிவிட்டோம்.

பர்கர்

கிராமங்களை நோக்கிப் படையெடுக்கும் துரித உணவுகள்...

கிராமங்களில் உள்ள மாணவர்களுக்கு துரித உணவுகளைப் பற்றி அவ்வளவாகத் தெரிவதில்லை. அனைத்துமே எளிதில் கிடைக்கும் நகரத்து மாணவர்களுக்குத்தான் பாதிப்புகள் அதிகம். ஆனால், இவை கிராமத்து மாணவர்களையும் சென்றடையும் காலம் வெகு தொலைவில் இல்லை எனச் சொல்லலாம். ’சாட்’ வகை  உணவுகள், நிறைய கிராமங்களில் ஏற்கெனவே அறிமுகமாகிவிட்டன. துரித உணவுகளின் வீச்சு முழுமையாக கிராமத்தை அடைவதற்கு முன்னர் இவற்றைப் பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவது முக்கியம்.

ஸ்டைலிஷ் நோய்கள்

இத்தாலியன் பீட்சா, கிரீக் பீட்சா, சிகாகோ பீட்சா என வெளிநாட்டுப் பெயர்களில் மயங்கி, தினம் ஒரு பெயருடைய பீட்சாவைச் சாப்பிடுபவர்கள் உண்டு. நமது இயல்புக்குச் சிறிதும் பொருந்தாத இவை, நாளடைவில் ஸ்டைலிஷ்ஷான பெயர்கள் கொண்ட புதுமையான நோய்களை ஏற்படுத்தலாம்.

 

புதிது புதிதாகத் தேடுவது மனித மனதின் இயல்பு. உணவு விஷயத்துக்கும் இந்தத் தத்துவம் பொருந்தும். புதியது ஆரோக்கியமானதாக இருந்தால், நல்லது. இல்லையெனில் விலகிவிடுவது சாலச் சிறந்தது. பீட்சாவைச் சுவைத்துவிட்டு, `காக்கா முட்டை’ திரைப்படத்தில் வரும் சிறுவர்களைப்போல, ’இந்த பீட்சாவுக்கு நம்ம ஆயா சுட்ட தோசையே பரவாயில்லை’ என்று சொல்லிவிட்டால் தப்பித்தோம். அதற்கு அடிமையாகி சிக்கிக்கொண்டால், விபரீதமே!

http://www.vikatan.com/news/health/103725-negative-effects-of-fast-foods.html

Link to comment
Share on other sites

கருடனைப் போன்ற கூர்மையான கண் பார்வையைப் பெற இதைச் சாப்பிடுங்கள்!

 

 
ed50052d455672758f066344dadfc1f2

 

நாம் தினமும் உண்ணும் உணவில், காய் மற்றும் கனிகளுக்கு பிரதான பங்கு இருக்கிறது. அதிலும் அன்றாடம் காய்கறி சேர்க்காமல் நாம் உணவு சமைப்பதில்லை. அந்த வகையில் காய்களுக்கு, மேஜர் ரோல் உண்டு என்றே சொல்லலாம். ஒவ்வொரு காயிலும் ஒவ்வொரு விதமான சத்து உண்டு. இப்பொழுது சொல்லப்போகும் விஷயத்தைக் கேட்டால் நீங்கள் ஆச்சர்யப் படுவீர்கள்.

பொதுவாக ஆரஞ்சு போன்ற புளிப்பான பழங்களில் தான் வைட்டமின் சி அதிகமாக இருக்கும் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அநேகம் பேரால் வெறுத்து ஒதுக்கப்படும் முட்டைக்கோஸில், ஆரஞ்சு பழங்களை விட வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது என்றால் நீங்கள் நம்புவீர்களா? முட்டைக்கோஸில்,  தொற்று நோயை எதிர்த்துப் போராடும் சல்ஃபர் அதிக அளவில் இருப்பதால், தினமும் சிறிதளவு முட்டைக்கோஸை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து எந்த வியாதியும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளும். 

farcellets.jpg

இதில் நார்ச்சத்தும் நிறைந்திருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்கிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட கோளாறுகளை சரி செய்து, அதனால் மலச்சிக்கல் ஏற்படுவதையும் தடுக்கிறது. உடலின் உட்பாகத்தில் சிறு கட்டிகள் தோன்றி, அதை நாம் கவனிக்காமல் போனால் அதுவே புற்று நோயாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது அல்லவா? முட்டைக்கோஸை சாப்பிட்டால் அம்மாதிரியான கட்டிகள் கூடக் கரைத்துவிடுகிறதாம். 

உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து, தாதுகள், வைட்டமின்கள் போன்ற எல்லாமே இதில் அடங்கியிருக்கிறதாம். ஒரு கப் சமைக்கப்பட்ட முட்டைக்கோஸில், முப்பத்து மூன்று கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையும் கூடாது. இந்தக் காயில் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைகக் கூடியது. ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது. அதனால் ஸ்ட்ரோக், ஹார்ட் அட்டாக் பாதிப்புகள் தடுக்கப்படுகின்றன. 

c31f12c7-e5bc-45ce-b768-a0efe8bc9b84.jpg

கண் பார்வை கருடனைப் போல் தீட்சண்யமாக இருக்க வைப்பதோடு, காட்டராக்ட் எனப்படும் கண்புரை வருவதையும் தவிர்க்கிறது. சிலருக்கு இளம் வயதிலேயே முதுமையின் சாயல் தெரியத்தொடங்கும். தோலில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள், தோலின் நிற மாற்றம் ஆகியவைத் தோன்றத் தொடங்கும். அவை உண்டாகாமல் இருக்க முட்டைக்கோஸ் நல்ல ஒரு மருந்தாகும். 

மிக மிக முக்கியமாக அல்சீமர் என்னும் ஞாபக மறதி நோய் உள்ளவர்கள் முட்டைக்கோஸை தினமும் உணவில் சேர்த்துவந்தால், மறதி நோயிலிருந்து முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு நிவாரணம் பெறலாம் என்று மருத்துவர்களே கூறுகிறார்கள். சல்ஃபர், வைட்டமின் சி இரண்டுமே முட்டைக்கோஸில் நிறைந்திருப்பதால், இதை உண்பதன் மூலம், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள், தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள், முடக்கு வாதம் இவற்றிலிருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். அதுமட்டுமல்ல,  பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் சத்துக்களை, இந்தக் காய் உள்ளடக்கி இருப்பதால், எலும்புகள் வலுவூட்டப்படுகின்றன. 

Cabbage-Leaves-and-Engorgement1.jpg

ஒரு சாதாரண கோஸில், எவ்வளவு மருத்துவத்தன்மைகள் இருக்கின்றன என்று பார்த்தீர்களா? அதனால் அதை உதாசீனப் படுத்தாமல், பொரியலாகவோ, கூட்டாகவோ, சாலட் ஆகவோ தினசரி உணவில் எந்த வகையிலாவது சேர்த்துக்கொள்வது நல்லது. முக்கியமாகச் சிறு வயது முதலே குழந்தைகளுக்கு முட்டைகோஸை உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்துவது எதிர்காலத்தில் மிகுந்த நன்மையைத் தரும். சர்வ ரோக நிவாரணியாகச் செயல்படும் இந்த முட்டைக்கோஸ் இருக்க பயமேன்?

http://www.dinamani.com/health/healthy-food/2017/oct/07/health-benefits-of-cabbage-2786175.html

Link to comment
Share on other sites

அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் புற்றுநோய் தடுக்கப்படுகின்றதா.?

 

 

பழங்கள் ஆரோக்­கி­யத்­திற்கு அவ­சி­ய­மான பல ஊட்­டச்­சத்­து­களைக் கொண்­டுள்­ளதை அறி­வீர்கள். பிர­தா­ன­மாக விற்­றமின் ‘சீ ’ உள்­ளிட்ட பல விற்­ற­மின்­க­ளையும், அன்­ரி­ஒக்­சி­டன்ற்­க­ளையும், கனி­யங்­க­ளையும், நார்ப்­பொ­ருட்­க­ளையும் கொண்­டுள்ள பழங்கள் மனி­தரின் உடல் ஆரோக்­கி­யத்­திற்கு இன்­றி­ய­மை­யா­தவை. இந்த வகையில் எமது நாட்டில் பயி­ரி­டப்­ப­டு­கின்ற அன்­னாசிப் பழமும் முக்­கி­ய­மான ஊட்­டங்­க­ளையும் கொண்­டுள்­ள­துடன் பல நோய்­களைத் தடுக்­கின்­றன.

aaaaaa.jpg

அன்­னாசிப் பழத்தை பழ­மா­கவோ, பழச்­சா­றா­கவோ, புருட் சலட் ஆகவோ சமைத்தோ உண்ண முடியும். மிகவும் சுவை­யான இந்தப் பழத்தை அனை­வரும் விரும்பி உண்­கின்­றனர். அபூர்­வ­மாக ஒரு சில­ருக்கு ஒவ்­வாமை (Allergy) ஏற்­ப­டு­வ­துண்டு. இவ் ஒவ்­வாமை கார­ண­மாக இதழ், முரசு, நாக்கு என்­பன தடிப்­ப­துடன் வெகு சிலரில் தேக அரிப்பு ஏற்­ப­டலாம். அன்­னாசிப் பழத்தை அதிக நாட்கள் வைத்­தி­ருந்து உண்டால் ஊட்­டங்கள் குறை­வ­டை­யலாம். குளிர்­சா­தனப் பெட்­டியில் 4 – 5 நாட்கள் வரை வைத்து சாப்­பி­டலாம்.

அன்­னாசிப் பழம் புற்று  நோயைத் தடுக்கும்.

இன்று சவா­லாக உள்ள நோய்­களில் புற்று நோய் முக்­கி­ய­மா­னது. அன்­னாசிப் பழம் புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை தடுப்­பதில் பங்­காற்­று­வதால் எமது நாளாந்த உணவில் அடிக்­கடி இதைச் சேர்த்துக் கொள்­ளலாம். அன்­னா­சிப்­ப­ழத்­தி­லுள்ள விற்­றமின் சீ, புறு­மெ­லயின் (Brome lain) மற்றும் மங்­கனீஸ் (Manganese) என்­பன புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை தடுக்கும் வல்­லமை கொண்­டவை. குறிப்­பாக குடும்ப பரம்­பரை வர­லாற்றில் புற்­றுநோய் உள்­ள­வர்கள் அன்­னா­சிப்­ப­ழத்தை வாரம் இரண்டு மூன்று தட­வை­யா­வது உண்­பது சிறந்த பலனைத் தரும். கல வளர்ச்­சி­யிலும் தொழிற்­பாட்­டிலும் முக்­கி­ய­மான கொலா­ஜெனை (Collagen) உரு­வாக்­கு­வதில் விற்­றமின் சீ, போலேற் என்­பன தொழிற்­ப­டு­கின்­றன. இது கட்­டுப்­பா­டற்ற கலப்­பி­ரி­கையை தடுத்து புற்­று­நோ­யையும் தடுக்­கின்­றது. அன்­னாசி மாத்­தி­ர­மின்றி வேறு சில பழங்­களும் இவ்­வா­றான அம்­சங்­களைக் கொண்­டி­ருப்­பதால் நாம் தினமும் பழ­வ­கை­களை தவ­றாமல் சாப்­பி­டு­வதன் மூலம் புற்­றுநோய் ஏற்­ப­டு­வதை ஓர­ளவு தவிர்க்க முடியும்.

நீர­ழிவு நோயா­ளர்கள் அன்­னா­சிப்­பழம் சாப்­பி­டலாம்

பொது­வாக பழ­வ­கைகள் இனிப்­பாக இருப்­ப­தனால் நீரி­ழிவு நோயா­ளர்கள் பழங்­களைச் சாப்­பிட பயப்­ப­டு­வார்கள். ஆனால் நீரி­ழிவு நோயா­ளர்கள் மட்­டான அளவில் பழங்­களை கட்­டா­ய­மாகச் சாப்­பி­டு­வதால் பல நன்­மைகள் உள்ளன. குருதிக் குளுக்­கோசின் அளவை பெரும்­பா­லான பழங்கள் சடு­தி­யாக கூட்­டு­வ­தில்லை. பழங்­க­ளி­லுள்ள அத்­தி­யா­வ­சி­ய­மான நுண் ஊட்­டங்கள் நன்மை பயக்கும். குறிப்­பாக அன்­னா­சி­யி­லுள்ள விற்­றமின் B6,B1,B5,போலேற், C என்­பன நீரி­ழிவு நோயா­ளர்­க­ளுக்கு நன்மை பயக்கும். அன்­னாசிப் பழத்தில் நார்ச்­சத்­துகள் நிறைய உள்­ளதால் குருதி வெல்­லத்தை அதி­க­ரிக்கச் செய்­வ­தில்லை. எனவே பயப்­ப­டாமல் நீரி­ழிவு நோயா­ளர்கள் அன்­னாசிப் பழம் சாப்­பி­டலாம்.

அன்­னாசிப் பழத்தின் பல்­வேறு நன்­மைகள்.

அன்­னாசிப் பழம் உடலின் நோயெ­திர்ப்புச் சக்­தியை அதி­க­ரிப்­பதால் பல்­வேறு நோய்­க­ளி­லி­ருந்து காக்­கின்­றது. சக்­தியை வழங்­கு­வதால் உற்­சா­கத்தை அளிக்­கின்­றது. மூட்­டு­க­ளுக்கு பாது­காப்­ப­ளிப்­பதால் மூட்­டு­வாத நோயைத் தடுப்­ப­துடன் எலும்­பு­க­ளுக்கு உறு­தியை வழங்­கு­கின்­றது. பற்­க­ளுக்கும், முர­சுக்கும் உறு­தியை வழங்­கு­வதன் மூலம் வாய்ச்­சு­கா­தா­ரத்தை பேணு­கின்­றது. சளி, தடிமல், இருமல் முத­லா­ன­வற்றை குறைக்­கின்­றது. அன்­னா­சிப்­ப­ழத்­தி­லுள்ள நிறைந்த நார்ச்­சத்து சமி­பாட்டை இல­கு­ப­டுத்­து­வ­துடன் மலச் சிக்­க­லையும் தடுக்கின்றது.

அன்னாசிப்பழத்திலுள்ள தாதுப் பொருளான கொப்பர் (Copper) செங்குருதிக்கலங்களின் உற்பத்தியில் பங்காற்றுகின்றது. பொற்றாசியம் (Potassium) இரத்தக் குழாய்களுக்குள் அழுத்தத்தை குறைப்பதுடன் இரத்தச் சுற்றினை சீராகப் பேணுகின்றது. இதயத்தின் சீரான தொழிற்பாட்டுக்கு உதவுவதுடன் இதய நோய்களிலிருந்து காக்கின்றது. எனவே அன்னாசிப்பழத்தை உங்கள் மெனுவில் சேருங்கள்.

http://www.virakesari.lk/article/25463

Link to comment
Share on other sites

பெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்

எத்தனை கிலோ எடையானாலும், அத்தனையும் தாங்கித் தளராத நடைபோட நமக்குப் பெரிதும் உதவும் பாகம், பாதம். பாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ் பார்க்கலாம்.

 
பெண்களின் பாதத்தைப் பராமரிக்க டிப்ஸ்
 
பாதத்தைப் பராமரிக்க 'பளிச்’ டிப்ஸ் பார்க்கலாம்.

 * வாரம் ஒரு முறை பாத நகங்களை நன்றாக வெட்டி, சுத்தம் செய்யவேண்டும். நக ஓரங்களில் ஊக்கு, ஊசியால் சுத்தம் செய்வதைத் தவிர்க்கவும். ஸ்க்ரப்பர் அல்லது காட்டன் துணியின் முனையை வெதுவெதுப்பான நீரில் நனைத்துப் பாதங்கள் மற்றும் நகங்களைச் சுத்தப்படுத்த வேண்டும்.

* செருப்பு அணியாமல்போனால், கல், முள் போன்றவை நம் கால்களைக் காயப்படுத்திவிடும். இதனால் விரல்களில் நகச்சுத்தி வரலாம். எலுமிச்சைப் பழத்தில் மஞ்சள் கலந்து பத்துப்போடுவதன் மூலம், நகச்சுத்தி நீங்கும். கால் விரல் நகத்தின் ஓரத்தில் கல், மண் படிந்துவிட்டால், நல்லெண்ணெய் தோய்த்தத் திரியை விளக்கில் காட்டி, மிதமான சூடில் கால் விரல் நகத்தின் ஓரங்களில் தடவவும். அழுக்கு தானாக வெளியே வந்துவிடும்.

* காலை மற்றும் இரவில் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை ஐந்து நிமிடங்கள் நனைக்கவும். அது புத்துணர்வைத் தருவதுடன் பாதங்களில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

201710091416401351_1_womenfoot._L_styvpf

* மென்மையான தோலில் தயாரிக்கப்பட்ட செருப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இல்லையென்றால், அது பாதத்தைப் பதம் பார்த்துவிடும்.

* குழந்தைகளுக்கு தரமான காட்டன் சாக்ஸ்களையே பயன்படுத்தவும். சாக்ஸ் அணியும்போது உட்புறம் ஏதாவது கூரான துகள்கள் சிக்கியுள்ளதா என்று பரிசோதனை செய்த பிறகே பயன்படுத்த வேண்டும்.

* நல்ல காற்றோட்டமான செருப்புகளை அணிய வேண்டும். பாதத்தில் புண், வெடிப்பு பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்கலாம். மருதாணி இலையை விழுதுபோல் நன்கு அரைத்து, வெடிப்பு உள்ள இடங்களில் தினமும் தடவிவந்தால் வெடிப்பு நீங்கும்.

* இரவில் படுக்கப்போவதற்கு முன்பு சூடு தாங்கும் அளவு வெந்நீர், உப்பு, எலுமிச்சைச்சாறு, பேபி ஷாம்பு போட்டுப் பாதங்களை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.  பிறகு, பழைய டூத்பிரஷால் பாதத்தை நன்றாக‌ சுத்தம்செய்து, ஈரம் போகத் துடைத்து நல்லெண்ணெயை லேசாக சூடு செய்து காலில் தடவலாம். பாத வலி குறைந்து, தூக்கம் தழுவும்.

http://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2017/10/09141636/1122099/women-foot-care-tips.vpf

Link to comment
Share on other sites

வாய்ப்புண்ணிற்கு நிவாரணமளிக்கும் ஹீலிங் ஜெல்

health.jpg

 இன்றைய திகதியில் ஆண்களாகயிருந்தாலும் அல்லது பெண்களாகயிருந்தாலும் வருவாய் ஈட்டுவதில் தான் அதிகளவிலான கவனத்துடன் இருக்கிறார்கள். இதனால் தங்களின் தோற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களேத் தவிர தங்களின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படுவதில்லை. யாராவது உங்களுடன் பேசும் போது அவர்கள் வாயையும், மூக்கையும் மூடிக் கொண்டால் தான் தங்களுடைய வாய் துர்நாற்றம் வீசுகிறது என்று தெரிந்துகொள்கிறார்கள். அதே போல் தங்களுடைய வாயில் புண் ஏற்பட்டிருந்தால் அதை அலட்சியப்படுத்திவிட்டு தொடர்ந்து தங்களின் பணிகளில் கவனம் செலுத்துகிறார்கள். இது குறித்து கேட்டால்,‘ அவை வரும். போகும் ’ என்று தத்துவார்த்தமாக பதிலளிப்பர். ஆனால் வாய் புண் ஏற்பட்டால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக கவனிக்கவேண்டும். அதையும் கடந்து கவனிக்கவில்லை என்றால் அவை புற்றுநோயாக மாறக்கூடிய அபாயம் என்று எச்சரிக்கிறார் டொக்டர் மணிமாறன். 

அத்துடன் தொடர்ந்து வாய் புண்ணைப் பற்றி அவர் பேசும் போது, ‘ ஊட்டச்சத்து குறைபாடு, பல் கூச்சம், மது மற்றும் புகை பிடித்தல், கிருமித் தொற்று மற்றும் மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஒருவருக்கு வாய் புண் ஏற்படலாம். ஒரு சிலருக்கு அவர்களின் பற்களின் அமைப்பாலும் வாய் புண் தோன்றக்கூடும். அதாவது அவர்களின் பற்கள் கூர்மையாக இருந்து, அவை சரியான காலகட்டத்தில் சீராக்கப்படாமல் இருந்தால், அதன் காரணமாகவும் வாய் புண் ஏற்படக்கூடும். இதை விட அரிதாக ஒரு சிலர் உணவை வாயின் ஒரு பகுதியில் மட்டுமே வைத்து, அப்பகுதியிலுள்ள பற்களால் மட்டுமே நொறுக்கி சாப்பிடுவர். இதன் காரணமாகவும் அவருக்கு வாய் புண் ஏற்படக்கூடும்.

முதலில் உதட்டின் உள்பகுதி, வாயின் உள்பகுதி, நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் தான் உருவாகும். ஒரு சிலருக்கு ஒரு நேரத்தில் ஒரேயொரு புண்ணாக தோன்றும். ஒரு சிலருக்கு ஒரே தருணத்தில் இரண்டு அல்லது மூன்று புண்களாக தோன்றும். இது எந்த வயதினரையும், எந்த பாலினத்தினரையும் தாக்கக்கூடும். ஒரு சிலருக்கு அவர்களின் வயிற்றில் புண் இருந்தால் அதன் வெளிப்பாடாக கூட வாயில் புண் உண்டாகும். ஒரு சிலருக்கு கடுமையான வயிற்று வலி, குடல் அழற்சி, மலம் கழிக்கும் போது குருதி வெளியாதல் போன்ற அறிகுறிகளுடன் இருக்கும் போது வாயில் புண் உண்டாகும். இதனை முன்னெச்சரிக்கை அறிகுறியாக கருதி உடனடியாக முறையான சிகிச்சையை எடுத்துக் கொள்ளவேண்டும்.

பெரும்பாலும் சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும் மூன்று நாட்கள்  முதல் ஒரு வாரத்திற்குள் மறைந்துவிடும். ஆனால் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்ளாவிட்டால் அவை மீண்டும் வருவதற்கான வாய்ப்பு உண்டு. அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை உறுதியாக பின்பற்றினால் அவை மீண்டும் வராது.  ஒரு சிலருக்கு அவர்களின் பாதிப்பைப் பொறுத்து மருத்துவர்கள் ஆன்ட்டிபயாடீக் மருந்துகளை சாப்பிடும் படி பரிந்துரைப்பார். அதனை ஏற்று அந்த மாத்திரைகளை சாப்பிடவேண்டும். ஒரு சிலருக்கு இதன் காரணமாக வலியோ அல்லது அசௌகரியமோ இருந்தாலும், இதன் பாதிப்பின் வீரியம் தெரியாத அளவிற்கான ஹீலிங் ஜெல்லைத் தருவார்கள். இதனை பயன்படுத்தி வாயைக் கொப்புளித்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். ஆனால் இதனை எப்போது, எத்தனை முறை, எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். அதனை உறுதியாக கடைபிடிக்கவேண்டும். அத்துடன் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் விற்றமின் சத்துக்கள் அடங்கிய மாத்திரைகளையும் சாப்பிட சொல்வார்கள். அதனையும் ஏற்கவேண்டும்.

வாயை சுத்தமாக வைத்திருப்பது இதற்கான தற்காப்பு நடவடிக்கை. தினமும் இரவில் உறங்கச் செல்லும் முன் வாயையும், பற்களையும் சுத்தம் செய்துவிடவேண்டும். ஒரு சிலர் தங்களுடைய வாயில் பொருத்திக் கொள்ளும் செயற்கை பற்களாலும் இத்தகைய வாய் புண் ஏற்படலாம். அவர்கள் தங்களது செயற்கை பற்களை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும். அதே போல் வாய் புண்ணால் பாதிக்கப்பட்டிருக்கும் எக்காரணம் கொண்டும் காரம் அதிகமான உணவை சாப்பிடக்கூடாது. சற்று சூடான பானங்களையும் தவிர்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக்கூடிய உணவுப் பொருட்களை சாப்பிடலாம்.’ என்றார்.

டொக்டர் மணிமாறன்

தொகுப்பு: அனுஷா

http://www.virakesari.lk/article/25503

Link to comment
Share on other sites

இதய பாதிப்பிற்கான பரிசோதனை

 

 

இன்றைய திகதியில் மக்களுக்கு தங்களின் ஆரோக்கியத்தின் மேலுள்ள அதீத அக்கறை மற்றும் விழிப்புணர்வால் லேசாக நெஞ்சில் வலி வந்தாலும் உடனடியாக இது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்குமோ..! என்று அச்சம் கொள்கிறார்கள். உடனடியாக மருத்துவர்களை சந்தித்து ஆலோசிக்கிறார்கள். அவர்களும் கொரனரி ஓஞ்சியோகிராம் பரிசோதனையை செய்து கொள்ள பரிந்துரைக்கிறார்.

news_image_health_610.jpeg

இந்த கொரனரி ஓஞ்சியாகிராம் பரிசோதனையின் போது இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் இருக்கும் அடைப்புகள் பற்றிய விவரங்கள் தெரியவரும். இந்த பரிசோதனையின் முடிவுகளை வைத்து இதயத்திற்கு செல்லும் இரத்த நாளங்களில் அடைப்புகள் இருக்கிறதா?இல்லையா? என்பது துல்லியமாக தெரியவரும். ஆனால் எம்மாதிரியான சிகிச்சையை மேற்கொண்டால் குணமடையலாம் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள இன்வேசிங் ஓஞ்சியோகிராம் என்ற பரிசோதனை அவசியம். இந்த சோதனையின் முடிவுகளை வைத்து மருந்து மாத்திரைகளின் மூலம் குணப்படுத்த இயலுமா? அல்லது பலூன் சிகிச்சையின் மூலம் குணப்படுத்த இயலுமா? என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

டொக்டர் ஹயாஸ் அக்பர்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25431

Link to comment
Share on other sites

இதய பாதிப்பிற்கு பை பாஸ் சர்ஜேரி தான் நிரந்தர தீர்வா..?

 

 

‘இதய நோய்களுக்கு இதயத்தினை திறந்து மேற்கொள்ளப்படும் பை பாஸ் சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதய பாதிப்புகளுக்கு பை பாஸ் சர்ஜேரி சிறந்த தீர்வாக இருந்தாலும், பலூன் மூலம் இதய இரத்த குழாய்களில் ஏற்படும் அடைபுகளை நீக்க மேற்கொள்ளப்படும் ஓஞ்சியோபிளாஸ்ரி சத்திர சிகிச்சைகளும் சிறந்த பலனை அளித்து வருகின்றன. இதய பாதிப்புகளுக்கு எந்த வகையினதான சிகிச்சை என்பதைக் காட்டிலும், சிகிச்சையின் பலன்கள் நன்றாக இருக்கின்றனவா என்பதே முக்கியம்.

news_image_health_7_10.jpg

எம்முடைய மருத்துவ அனுபவத்தில் ஒருவருக்கு இதயத்திலுள்ள மூன்று இரத்த குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டது. பல்வேறு கட்ட பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு அவருக்கு பலூன் ஓஞ்சியோபிளாஸ்ரி சத்திர சிகிச்சை தான் அளிக்கப்பட்டது. அவர் குணமாகி இன்று வரை பலூன் ஓஞ்சியோபிளாஸ்திரி சத்திர சிகிச்சையின் அறிவிக்கப்படாத விளம்பர தூதுவராக செயல்பட்டு, மக்களிடத்தில் இந்த சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்.

அதே போல் இதய நோய்களுக்கு இதயத்தை துளைக்காமல் மேற்கொள்ளப்படும் நுண் துளை சத்திர சிகிச்சைக்கும் தற்போது ஆதரவும், வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அதே போல் உலகத்திலேயே அதிகளவிலான பை பாஸ் சர்ஜேரி மேற்கொள்ளப்படும் நாடாக இந்தியா திகழ்கிறது.’ என்கிறார் டொக்டர் கோபால் முருகன். இவர் சென்னையில் செயல்பட்டு வரும் சிம்ஸ் மருத்துவமனையில் இதயத்துறையின் சத்திர சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25609

Link to comment
Share on other sites

முகப்பருவை போக்கும் மூலிகை நீராவி

 

பருக்கள் மற்றும் சருமத்தின் எண்ணெய் பசையை நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம்.

 
 
 
 
முகப்பருவை போக்கும் மூலிகை நீராவி
 
கடுமையான வெயிலின் தாக்கம், புகை, தூசு, மாசு போன்றவை முகத்தில் படர்ந்து, முகத்திற்கு சோர்வை அளிக்கின்றன. நீராவி பயன்படுத்தி முக அழகை மேம்படுத்துவதற்கான முறையை இப்போது பார்ப்போம்/ நீராவி பேஷியல் முற்றிலும் இயற்கையானது. எளிதாக வீட்டிலேயே செய்ய கூடியது. ஆனால் இந்த முறையை அடிக்கடி பயன்படுத்தும்போது சரும சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதிகமான பருக்கள் இருக்கும்போது வாரத்திற்கு 2 முறை இதனை மேற்கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

மஞ்சள் தூள்
லவங்க பட்டை
க்ரீன் டீ
தண்ணீர்

க்ளென்சர் பயன்படுத்தி முகத்தை அழுக்கில்லாமல் கழுவி கொள்ளவும். 1 லிட்டர் தண்ணீர் எடுத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க விடவும். கொதிக்கும் நீரில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள், 3 அல்லது 4 லவங்க பட்டை , 1 ஸ்பூன் க்ரீ டீ ஆகியவற்றை போடவும். பிறகு அடுப்பை அணைக்கவும். ஒரு ஸ்பூனால் அந்த நீரை நன்றாக கலக்கவும். கொதிக்கும் நீர் நல்ல மஞ்சள் நிறத்தில் தோன்றும்.

201710131424444397_1_Herbsteamforpimples

ஒரு கனமான போர்வை அல்லது துண்டு எடுத்து உங்களை முழுவதும் போர்த்தி கொள்ளவும். இப்போது அந்த நீரில் இருந்து வரும் ஆவியை நீங்கள் நுகர தொடங்கலாம். தண்ணீர் மிக அதிகமாக கொதிக்க கூடாது. அது சருமடத்தை சேதமடைய செய்யும். ஓரளவு ஆவி வரும் அளவுக்கு கொதிக்க வைப்பது நலம்.

சென்சிடிவ் சருமமாக இருந்தால் 8-10 நிமிடங்கள் ஆவி பிடிப்பது நலம். எண்ணெய் சருமமாக இருக்கும்போது 20 நிமிடங்கள் செய்யலாம். கண்களை மூடிக்கொண்டு ஆவியை முகத்தில் நன்றாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிக சூடு அசௌகரியத்தை ஏற்படுத்தினால் சற்று போர்வையை விலக்கி ரிலாக்ஸ் செய்து கொள்ளலாம். முடிந்த அளவு ஆவியை எடுத்துக்கொண்டு, போர்வையை விலக்கி முகத்தை காய விடவும். பின்பு டோனர் அல்லது மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தலாம்.

கிரீன் டீ வயது முதிர்வை தடுக்கிறது. சருமம் அழகாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவுகிறது. மஞ்சளில் இருக்கு அதிக அளவு சல்பர் ஆன்டிபயாடிக் போல் செயல்பட்டு பருக்கள் மறைவதற்கு முக்கிய காரணமாகிறது.

லவங்க பட்டை சருமத்தின் துளைகளை திறந்து சருமத்துக்குள் ஊடுருவி சருமத்தை புதுப்பிக்க உதவுகிறது.

இந்த எளிய முறை நீராவி பேஷியலை செய்வதன் மூலம் பருக்கள் குறைந்து, எண்ணெய் பசை சருமம் பொலிவாக காணப்படும்.

http://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2017/10/13142440/1122850/Herb-steam-for-pimples.vpf

Link to comment
Share on other sites

மயக்கமும், தலைச்சுற்றலும் ஒன்றல்ல.!

 

 

எம்மில் பெரும்பான்மையோருக்கு மயக்கமும் தலைச்சுற்றலும் ஒன்றே என கருதுகின்றனர். ஆனால் இவையிரண்டும் வேறு வேறு.

news_image_health_11_10.jpg

மூளையின் இயக்கத்திற்கு தேவையான அளவிற்கு ஓக்சிஜன் கிடைக்காத போதும், இரத்த ஓட்டத்தின் அளவோ அல்லது வேகமோ குறையும் போதும் ஏற்படும் தற்காலிக நினைவிழப்பிற்கு தான் மயக்கம் என்று பெயர். ஆனால் தலைச்சுற்றல் என்பது இதிலிருந்து மாறுபட்டது. காலை உணவைத் தவிர்ப்பதால் ஏற்படும் அதீத சோர்வின் காரணமாகவும், அதீத வியர்வை சுரப்பதன் காரணமாகவும், வலிப்பு நோய் காரணமாகவும், கட்டுப்பாடற்ற மிகு உணர்ச்சியின் காரணமாகவும் ஏற்படும் மிகக்குறுகிய கால நினைவிழப்பே தலைச்சுற்றல் எனப்படும்.

அதே போல் மயக்கம் என்பதை, மூளை மற்றும் நரம்பு தொடர்பானவை, இதயம் தொடர்பானவை, மன நலம் தொடர்பானவை என மூன்று வகையாக பிரித்தறியலாம். அதே சமயத்தில் பெரும்பாலான பெண்களும், குழந்தைகளும் ஏனைய இரண்டு காரணங்களைக் காட்டிலும் கவலை, இறப்பு, இழப்பு, சோகம், அதிர்ச்சி என மன நலம் சார்ந்த உளவியல் காரணங்களாலேயே மயக்கமுறுகின்றனர். ஆனால் எந்த காரணத்தால் பாதிக்கப்பட்டாலும் தலைச்சுற்றலுக்கும், மயக்கத்திற்கும் உரிய  நிவாரணமும், முழுமையான சிகிச்சையும் உண்டு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

டொக்டர் கோட்டீஸ்வரன்

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25715

Link to comment
Share on other sites

கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்கள்

 

கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது.

 
கட்டிப்பிடி வைத்தியத்தின் பயன்கள்
 
கட்டிப்பிடித்துக் கொள்வதும் ஒருவகையான வைத்தியம் தான் என்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள். கட்டிப்பிடிப்பது மந்தமான மனநிலையில் இருப்பவரை உற்சாகம் அடைய செய்கிறது, கவலையில் இருப்பவரை மீண்டெழச் செய்கிறது. இது மட்டுமல்லாது இதயம் சார்ந்த நோய்கள் வராமல் நம்மை காத்திடுகிறது.

மேலும் கட்டிபிடிப்பதன் மூலம் அடையும் பயன்களை இங்கே பட்டியலிட்டுள்ளோம்..  

கட்டிபிடிப்பதால், இருவருக்கும் மத்தியில் உள்ள பயம் மற்றும் தயக்கத்தை கட்டிப்பிடிக்கும் பழக்கம் போக்குகிறது. ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இறப்பைப் பற்றிய கவலையும் கலைகிறதாம்.

ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கொள்ளும் போது இதயம் இதமாக உணரப்படுகிறது இது இதயத்திற்கு நல்லது ஆகும். மற்றும் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இதயத்தில் உள்ள தசைகள் வலுவடைகின்றன.

ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது இரத்தக்கொதிப்பு கட்டுக்கடங்குகிறது. இதனால் எப்போது எல்லாம் உங்களுக்கு உயர் இரத்தக் கொதிப்பு வருகிறதோ, அப்போது உங்கள் அருகில் உள்ளவரை கட்டிபிடித்துக் கொண்டால் இரத்தக்கொதிப்பு சமநிலைக்கு வந்துவிடுமாம்.

கட்டிப்பிடிப்பது மன இறுக்கத்தை குறைக்கிறது மற்றும் மனநிலையை அமைதியடைய செய்கிறது. இதனால் நீங்கள் மன அழுத்தத்தின் போது கட்டிப்பிடித்துக் கொண்டால் மனம் இலகுவாக உணர்வீர்கள்.

201710141210348445_1_hugmedicine._L_styv

நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது மூளையில் நேர்மறை எண்ணங்கள் அதிகமாய் உருவாகிறது அதனால் கட்டிப்பிடித்துக் கொள்வது உங்களது மனநிலையை நன்றாக வலுவடைய செய்யும்.

கட்டிப்பிடிப்பதன் மூலம் வெளிப்படும் அன்பும், அக்கறையும் நமது மூளையை நன்கு செயலாக்கம் அடைய செய்கிறது இதன் மூலம் உடலும் நன்கு செயல்பட்டு நோய்களுக்கு எதிராய் போராட முற்படுகிறது.

ஒருவருக்கு ஒருவர் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உடனடியாக மனதிற்கு தெம்பூட்டப்படுகிறது. இதனால் ஆக்ஸிடாஸின் அதிகரித்து தனிமையை உணர்பவர்களை அதிலிருந்து விடுப்படச் செய்கிறது.

கட்டிப்பிடிப்பதன் மூலம் நாம் பெறும் மற்றொரு பயன் என்னவெனில் செரோடோனின் அளவு அதிகரிப்பதால் மகிழ்ச்சியான மனநிலை உருவாகிறது.  

நீங்கள் கட்டிப்பிடித்துக் கொள்ளும் போது உங்களது உடல் தசைகள் இலகுவாகிறது மற்றும் உடலில் உள்ள வலி குறைகிறது.

கட்டிப்பிடிப்பதன் மூலமாக நாம் அடையும் மற்றொரு பயன் என்னவெனில், இதன் மூலம் நமது நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்த உதுவுகிறது.

 

http://www.maalaimalar.com/Health/WomenMedicine/2017/10/14121034/1122998/benefits-of-hug-medicine.vpf

Link to comment
Share on other sites

பர்க்கின்சன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

 

 

பர்க்கின்சன்ஸ் எனப்படும் நடுக்குவாத நோயிற்கு மூளையில் சிப் எனப்படும் மின் முனை கருவிகளைப் பொருத்தி குணப்படுத்தும் நவீன சிகிச்சையை சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனை மேற்கொண்டு வெற்றிக் கண்டிருக்கிறது.

news_image_health_10_10_17.jpg

இது குறித்து அந்த மருத்துவமனை வெளியிட்டிருக்கும் செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது..,

கேரளாவைச் சேர்ந்த 43 வயதுடைய ஆண் ஒருவர், சவூதி அரேபிய நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் இடதுபுறத்தில் நடுக்கம் ஏற்பட்டு, அது பரவத் தொடங்கியிருக்கிறது. இதற்காக அவர் மருத்துவர்களை சந்தித்து, ஆலோசனைப் பெற்று, மருந்துகளை சாப்பிட்டு வந்திருக்கிறார். ஆனால் பிரச்சினை அதிகமானதால் வேலையை விட்டுவிட்டு இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். அவர் மருத்துவ சிகிச்சைக்காக எங்களுடைய மருத்துவமனைக்கு வந்தார். அவரை நன்கு பரிசோதித்த பின், நோயாளியை மயக்க நிலைக்கு கொண்டு செல்லாமல், விழித்திருக்கும் நிலையிலேயே இதற்கான நவீன சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது, அவரது மூளைப் பகுதியில் சிறிய அளவிலான மின் முனைகள் பொருத்தப்பட்டன. இதன் காரணமாக உடல் உறுப்புகளின் செயல்பாடுகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா? என்று அறிய அவரின் கை கால்களை அசைக்கும் படியும், பேசும் படியும் கேட்டுக்கொண்டோம். அவரும் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து மூளைப் பகுதியில் உள்ள சிப் வடிவிலான சிறிய மின் முனைகளை இயக்கும் வகையில் அவரின் மார்பு சுவர் பகுதியில் பற்றரியுடனான கருவி பொருத்தப்பட்டது. இந்த பற்றரியின் மூலம் மூளையில் பொருத்தப்பட்டுள்ள மின் முனைகள் இயக்கம் பெற்று, உடல் இயக்கத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பகுதியை தூண்டி இயங்க செய்தன. இதன் காரணமாக நோயாளி குணமடைந்தார்.’ என்று அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இது குறித்து அந்த மருத்துவமனையின் மருத்துவ நிபுணர் டொக்டர் சைமன் பேசும் போது,‘ இவ்வகையினதான சத்திர சிகிச்சை குறித்த விழிப்புணர்வு மக்களிடத்தில் ஏற்படவேண்டும்’ என்றார்.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25772

Link to comment
Share on other sites

ஒழுங்கற்ற மாதவிடாய்... ஆரோக்கியமின்மையின் அறிகுறி! கவனக் குறிப்புகள்

 
 

"னக்கு 28 நாள் இடைவெளியில பீரியட்ஸ் வந்துடுது... இது சரிதானா?''

"எனக்கு ரெண்டு மாசத்துக்கு ஒருதடவைதான் பீரியட்ஸ் வருது. ஒருவேளை ஏதாவது உடம்புல பிரச்னை இருக்குமோ?''

 

"ஒவ்வொருத்தரோட உடல்நிலையைப் பொறுத்து, நாள் கணக்கு மாறலாம்னு படிச்சிருக்கேன்... எனக்குக் கண்டபடி மாறுதே...’’  

- இப்படி ஒழுங்கற்ற மாதவிடாய் குறித்த ஏராளமான சந்தேகங்கள் பலருக்கும் இருக்கின்றன.

வலியுடன் கூடிய மாதவிடாய்

இன்றைய இளைய தலைமுறையிடம், மாதவிடாய் பற்றிய பெரிய விவாதமே நடந்துவருகிறது. மாதவிடாய் என்பது `அசுத்தம்’ என்று கூறப்பட்ட பழைய கருத்துகளை ஒதுக்கி, அது ஓர் உடல்நிலை மாற்றம் என்பதை  அனைவரும் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் பலராலும் கண்டுகொள்ளப்படாத மாதவிடாய்ச் சுழற்சியின் மறுபக்கமே, ஒழுங்கற்ற மாதவிடாய். இது இன்றைக்கு பல பெண்கள் சந்தித்து வரும் முக்கியமான பிரச்னை.

ஆக, மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை நிகழவேண்டும், ஒழுங்கற்ற மாதவிடாய்ச் சுழற்சி என்பது எது, அதனால் என்னென்ன உடல் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும்... போன்ற பல சந்தேகங்கள் இன்றைய பதின்பருவப் பெண்களிடையே இருக்கின்றன. இது தேவையில்லாத பயத்தையும் ஏற்படுத்துகிறது. அதேநேரத்தில், `மாதவிடாய்ச் சுழற்சி சரியாக இல்லாமல் இருப்பது, பல உடல்நலக் கோளாறுகளின் அறிகுறியாக இருக்கலாம்’ என்கிறார்கள் மருத்துவர்கள். இவற்றையெல்லாம் குறித்து மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் மீனா விரிவாகப் பேசுகிறார்.டாக்டர். மீனா

"சாதாரணமாக மாதவிடாய்ச் சுழற்சி எத்தனை நாள்களுக்கு ஒருமுறை வர வேண்டும்?''

* "பெண்களின் உடலில், 14 நாட்கள் ஈஸ்ட்ரோஜென் (Estrogen) சுரப்பி சுரக்கும். அடுத்த 14 நாட்கள் (15-28) புரொஜெஸ்ட்ரான் (Progesterone) சுரக்கும். 28 நாட்ளின் முடிவில், மாதவிடாய் ஏற்படும். ஆனால், எல்லோரின் உடலும் இந்த நாள் கணக்கோடு ஒத்துப்போவதில்லை. 21 முதல் 35 நாட்களுக்குள் மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டுவிட வேண்டும். அதற்கு முன்னோ, பின்னோ இருப்பது பிரச்னைக்குரிய விஷயம். அதேபோல், ஐந்து நாள்களுக்கும் மேல் ரத்தப்போக்கு இருப்பது, தொடர்ந்து வெகு நாள்களுக்கு வராமல் இருப்பது, மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு இருப்பது (4,5 நாப்கின் மாற்றவேண்டிய சூழல் ஏற்படுவது), மிகவும் குறைந்தளவு ரத்தப்போக்கு இருப்பது (ஒரு நாளைக்கு ஒரு நாப்கின் மட்டுமே பயன்படுத்தும் சூழல்) போன்றவையும் பிரச்னைக்குரியவையே. இந்தப் பிரச்னைகள்தான் `ஒழுங்கற்ற மாதவிடாய்’ என்று குறிப்பிடப்படுகின்றன.’

* 13 வயது முதல் 19 வயது வரை ஒழுங்கற்ற மாதவிடாய் இருப்பது சாதாரண விஷயம்தான். உதாரணமாக, இவர்களுக்கு 30 அல்லது 35 நாள்களுக்கு ஒருமுறை சுழற்சி ஏற்படும். 21 வயதுக்கு மேல், சீரான இடைவெளியில் 28 நாள்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வயது ஏற ஏற, சுழற்சிக்கான நாள் எண்ணிக்கை குறையத்துவங்கும்.”

ஒழுங்கற்ற மாதவிடாய்


"ஒழுங்கற்ற மாதவிடாய், எதன் அறிகுறியாக இருக்கும்? அவை என்னென்னப் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்?''

 * “பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம் (Polycystic Ovarian Syndrome - PCOS): ஹார்மோன் சமநிலையில்லாமல் இருக்கும்போது, பி.சி.ஓ.எஸ் ஏற்படும். இது கருமுட்டைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கவனிக்காவிட்டால், பெண்களுக்குக் கருத்தரிப்பதில்கூட பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பு ஏற்படுத்துவது, இதன் மிக முக்கியமான அறிகுறி. பெரும்பாலும் பருவம் எய்திய பெண்களுக்கு, முதல் சில மாதங்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும். தொடர்ந்து மாதவிடாய்ச் சுழற்சி ஒழுங்கற்று இருந்தால், இந்தப் பிரச்னை உருவாகும். உடற்பருமனாக இருப்பவர்களுக்கு இதற்கான வாய்ப்பு அதிகம். இவர்கள், உடல் எடை குறைப்பதன் மூலம் இதை சரிசெய்துவிடலாம்.

* தைராய்டு பிரச்னைகள் (Thyroid Problems): தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் இருக்கும்போது, மாதவிடாய் கால சுழற்சியில் பிரச்னை ஏற்படும். இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு, மாதவிடாய்ப் பிரச்னை மட்டுமன்றி உடல் எடை சட்டென அதிகரிப்பது அல்லது குறைவது போன்றவையும் ஏற்படும். இதில், ஹைப்போதைராய்டிஸ்ம் (Hypothyroidism) முக்கியமான ஒரு பிரச்னை.  வளர்சிதை மாற்றத்தின் வளர்ச்சியை இது பாதிக்கும். இதனால், உடலின் செயல்பாடுகள் யாவும் குறைந்து, உடல் சோர்வடையும். மாதவிடாய்ச் சுழற்சி மட்டுமன்றி, உடல்பருமன், கரு உருவாவதில் சிக்கல், ஹைப்பர்-கொலெஸ்ட்ரோலீமியா (Hypercholesterolemia) ஏற்படும். இதய பாதிப்புகள் போன்ற பிரச்னைகளையும் இது ஏற்படுத்தும்.

உடல் சோர்வு 

* ஹார்மோன்  - இம்பேலன்ஸ் (Hormone imbalance) : புரொஜெஸ்ட்ரான் (Progesterone), ஈஸ்ட்ரோஜன் (Estrogen) போன்ற மாதவிடாய்க்கு உதவும் ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படும்போது, மாதவிடாய்ச் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்தி உடல் அதை வெளிக்காட்டும்.

* பெரிமெனோபாஸ் (Perimenopause): பெண்களுக்கு `மெனோபாஸ்’ எனப்படும் மாதவிடாய்ச் சுழற்சி முடியப்போகும் சில மாதங்களுக்கு முன்னர் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். 35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மட்டுமே இதன் (Perimenopause) காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும்.''

“எதனால் ஏற்படுகிறது?”

“ * அதிகமாக ஜங்க் ஃபுட் சாப்பிடுவது உடல் கோளாறுகளை ஏற்படுத்தி உடல்பருமனுக்குக் காரணமாகும். இது, மாதவிடாயில் பிரச்னையை ஏற்படுத்தும்.

* அதிக மனஅழுத்தத்துக்கு உள்ளானவர்களுக்கு, அதன் காரணமாக, கருமுட்டை உற்பத்தி பாதிப்படையும். அலுவல்ரீதியான அழுத்தம் அல்லது குடும்பப் பிரச்னை காரணமாக அதிகளவு அழுத்தம் ஏற்படும்போது இந்தப் பிரச்னை தலைகாட்டும். நடைபயிற்சி செய்வது, சத்தான உணவுகளை சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர் குடிப்பது போன்ற வாழ்வியல் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இதை சரிசெய்யலாம்.

மன அழுத்தம்


* புரதம், ஆன்டிஆக்ஸிடென்ட் சத்துகள் இருக்கும் உணவுகளை குறைந்த அளவில் சாப்பிடும்போது, அட்ரினல் மற்றும் தைராய்டு சுரப்பிகளில் பிரச்னை ஏற்படும். இவர்கள், சரியான உணவுப் பழக்கத்துக்கு மாறினாலே போதுமானது.

 

* திடீரென்று உடல் எடை குறைப்பது, உடல் எடை அதிகரிப்பது, உடல் செயல்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இது, மாதவிடாய்ப் பிரச்னையை ஏற்படுத்தும்.''

http://www.vikatan.com/news/health/105020-irregular-periods-is-a-symptoms-of-body-issue.html

Link to comment
Share on other sites

டெங்கு ஏன்? எப்படி?

 

 

p24.jpg

p24a.jpg

p24b.jpg

p24c.jpg

p24d.jpg

p24e.jpg

p24f.jpg

p24g.jpg

தொகுப்பு: ச.ஸ்ரீராம், இன்ஃபோகிராபிக்ஸ்: எஸ்.ஆரிப் முகம்மது

http://www.vikatan.com

Link to comment
Share on other sites

அறிமுகமாகிறது மஞ்சள் தேநீர்

இதுவரை தேநீர், பிளாக் தேநீர், பால் கலக்காத தேநீர், சர்க்கரை கலக்காத தேநீர், இஞ்சி கலந்த தேநீர், கிரீன் தேநீர் என பலவகையான தேநீர் அறிமுகமாகி மக்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில் விரைவில் மஞ்சள் கலந்த தேநீர் அறிமுகமாகவிருக்கிறது.

news_image_health_9_10_17.jpg

இந்த மஞ்சள் தேநீரின் பலன்களைப் பட்டியலிட்டால் நீங்களும் ஒரு முறை அதனை தயாரித்து சுவைக்க தொடங்கிவிடுவீர்கள். உடலுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.  கல்லீரல், நுரையீரல், இதயம், பித்தப்பை கல், டைப் 2 டயாபடீஸ், ஓர்த்தரைடீஸ், அல்சைமர் எனப்படும் நினைவுத்திறன் குறைவு நோய், புற்றுநோய் என பலவகையான பாதிப்புகளிலிருந்து குணமடையவும், இத்தகையப் பாதிப்புகள் ஏதும் ஏற்படாத வண்ணம் தற்காப்பதற்காகவும் இதனை பயன்படுத்தலாம்.

இதன்போது சுத்திகரிக்கப்பட்ட மஞ்சள் கிழங்கையோ அல்லது மஞ்சள் துண்டுகளையோ அல்லது மஞ்சள் தூளையோ தேவையான அளவிற்கு பயன்படுத்தி தேநீரை தயாரித்து பருகினால் நலம் உண்டாகும். உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரையின் பேரில் ஒருவர் தினமும் 3 அல்லது 4 கிராம் அளவிற்கு மஞ்சளை உணவாகவோ அல்லது உணவின் மூலமோ சேர்த்துக் கொள்ளலாம். அவர்களுக்கு இயல்பை விட அதிகளவிற்கு நோயெதிர்ப்பு சக்தி இருக்கும். அதே சமயத்தில் இதனை தயாரிக்கும் போது பனை வெல்லத்தையோ அல்லது தேனையோ சுவைக்காக சேர்ப்பது கூடுதல் பலனைத் தரும்.

டொக்டர் டெய்சி சரண்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25856

Link to comment
Share on other sites

கேச சாயத்தால் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் அபாயம்.!

பெண்கள் வயோதி பத்தால் ஏற்படும் நரையை மறைக்கவும் நவநாகரிகத்துக்காகவும் கேசச் சாயத்தை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது.

hair.jpg

 இந்நிலையில் கேசச் சாயத்தை  அளவுக்கதிகமாக பயன்படுத்தும் பெண்களுக்கு மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயம்  உயர்வாகவுள்ளதாக  பிரித்தானிய மருத்துவ பேராசிரியர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய லண்டன்,  பிரின்சஸ் கிரேஸ் மருத்துவமனையின் பேராசிரியர் கெபாஹ்  மொக்பெல் மேற்கொண்ட மேற்படி ஆய்வில் கேசச் சாயத்தைப் பயன்படுத்தும் பெண்களுக்கு  அதனை பயன்படுத்தாத ஏனைய பெண்களுடன் ஒப்பிடு கையில் மார்பு புற்றுநோய் ஏற்படும் அபாயம் 14  சதவீதம் அதிகமாகவுள்ளமை கண்டறியப்பட்டுள்          ளது.

அதனால் பெண்கள் வருடத்திற்கு 6  தடவைகளுக்கு மேல் கேச சாயத்தை பயன்படுத்தக் கூடாது எனவும் இயற்கையான உள்ளடக்கங்களைக் கொண்ட கேசச் சாயங்களையே பயன்படுத்த வேண்டும்  எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

http://www.virakesari.lk/article/25892

Link to comment
Share on other sites

பதட்டத்தின் சில அறிகுறிகள்

 

பதட்டம் என்பது என்ன? இத்தகையப் பாதிப்பு ஏற்படும் பொழுது பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

 
 
 
 
பதட்டத்தின் சில அறிகுறிகள்
 
நமது டென்ஷன், பதட்டம், மனஉளைச்சல் இவை நம் உடலில் பல விதமாக வெளிப்படுத்தும். உடலில் ஏதோ உதறுவது போல் உள்ளே இருக்கும். நெஞ்சு வலிக்கும். மூச்சு வாங்கும். இப்படி பல பாதிப்புகளை வெளிப்படுத்தும். இந்த பதட்டம் என்பது என்ன? இது ஒரு வகையான பயம், மனசவுகர்யமின்மை, ஏதோ ஒன்று நடந்து விடுமோ என்ற கற்பனை பயம். இதனை ஆய்ந்து நம்மிடமிருந்து இதனை நீக்கிக் கொள்ளாவிடில் இது மிகப்பெரிய பாதிப்பாக உடலைத் தாக்கி விடும்.

பதட்டத்தின் சில அறிகுறிகள் :

* பலருக்கு கூட்டத்தினைக் கண்டால் பீதி ஏற்படும். ஏதோ காலில் செருப்பு கழண்டு விட்டது போல் தோன்றும். சிலருக்கு கூட நான்கு பேர் இருந்தாலே பீதியாக இருக்கும். இவர்களால் சமூகத்தில் சாதாரணமாக வலம் வர முடியாது. இப்படி பல உதாரணங்களை கூறிக் கொண்டே செல்லலாம். சிலருக்கு பீதி அதிகரித்து அதிகம் வியர்க்கும். கை-கால் படபடக்கும். நெஞ்சு வலி ஏற்படும்.

* இரவில் முறையான தூக்கமே இராது. பலர் இரவு 2-3 மணி வரை விழித்திருந்து பின் சோர்வாகி 2-3 மணி நேரம் தூங்குவார்கள். இது உடல் நல-மன நல பாதிப்பினை வெகுவாய் ஏற்படுத்தி விடும். நீங்கள் அதிக சோர்வுடன் இருந்தும் உங்களால் தூங்க முடியாது. உங்கள் மூளை இரவிலும் ஓய்வில்லாமல் ஏதோ நினைக்கின்றது என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இது தொடர்ந்தால் வயிற்று வலி, வாந்தி, தசைகளில் வலி என பாதிப்பு நீண்டு கொண்டே போகும்.

* சிலருக்கு திடீரென ஏதேனும் ஒரு அச்சமான சம்பவம் நிகழும் பொழுது வெகுவாய் மூச்சு வாங்கும். கை-கால்கள் வலுவிழந்து போகும். இச்சமயத்தில் அமைதியாய் நிதானமாய் மூச்சை உள் வாங்கி, வெளி விட்டு பழகுவதே பாதிப்பிலிருந்து காக்கும்.

201710190818500635_1_symptomsoftension._

* சிறிய சத்தம், டி.வி. சத்தமாக வைத்தல், சத்தமாய் பேசுவது இவை பாதிப்பு உடையவருக்கு இருதய படபடப்பினை ஏற்படுத்தும். சிலருக்கு காபி கூட இருதயத்தினை வேகமாய் வேலை செய்ய வைக்கும். பாதிப்பு தருபவைகளை அறிந்து அவைகளை நீக்கிக் கொள்வதே பாதுகாப்பாக அமையும்.

* மிக அதிக சோர்வு, எதிலும் கவனம் செலுத்த முடியாமை, எதிலும் எரிச்சல் இருப்பினும் ஏதோ ஒரு புன்னகையை முகத்தில் போலியாக ஒட்டிக் கொள்பவர்கள் அநேகர். இவர்கள் இதற்கு மருத்துவ ரீதியாக சிகிச்சை பெறாவிடில் விரைவில் பலவித பாதிப்புகள் ஏற்பட்டு நோயாளி ஆகி விடுவர்.

* வறண்ட வாய் மனஉளைச்சலின் முதல் அறிகுறி. மனஉளைச்சல் இருக்கும் பொழுது நமது உடல் சில மிக முக்கிய மற்ற வேலைகளை நிறுத்தி விடுகின்றது. இவ்வாறு இருக்கும் பொழுது ஓரிரு தம்ளர் நீர் குடியுங்கள். ஹெர்பல் டீ போன்றவற்றினை எடுத்துக் கொள்ளுங்கள். உடல் மீண்டும் சகஜ நிலையினை அடையும்.

* குளிர்ந்த பாதம், வியர்க்கும் கைகள் இருக்கலாம். காரணம் உங்கள் கை, கால்களுக்கு வரும் ரத்த அளவு குறைந்திருக்கலாம். மனது அமைதிப்படும் பொழுது உடல் சாதாரண நிலைக்கு வந்து விடும்.

* வயிற்றுப் பிரட்டல் ஏற்படும்.

* கை-கால் மற்றும் தசைகளில் வலி இருக்கும்.

சரி, இத்தகையப் பாதிப்பு ஏற்படும் பொழுது பாதிக்கப்பட்ட நபர் என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் ஓரிரு முறை இவ்வாறு இருந்தால் மூச்சு பயிற்சி, மனம் அமைதி படுதல் மூலம் சரி செய்து விடலாம். ஆனால் தொடர்ந்து இவ்வாறு இருந்தால் மருத்துவ உதவி மிக அவசியம்.

http://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2017/10/19081839/1123668/Some-symptoms-of-tension.vpf

Link to comment
Share on other sites

மூட்டுவலியில் முடங்கிப்போக வேண்டாமே..!

வியர்க்கும் அளவுக்கு விளையாடும்போது தசையும், எலும்பும் பலமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அதிக உடல் எடை எலும்புகளுக்கு சுமையாகிவிடும்.

 
மூட்டுவலியில் முடங்கிப்போக வேண்டாமே..!
 
எலும்புகள்தான் நமது உடலின் அஸ்திவாரம். நமது உடலை ஒருங்கிணைத்து நிலைநிறுத்தும் கட்டுமானமும் எலும்புகள்தான். உடல் சீராக இயங்கவேண்டும் என்றால் அதற்கு எலும்புகள் ஒத்துழைக்கவேண்டும். உடல் மற்றும் மூட்டுகளின் இயக்கத்திற்கு எலும்புகள் நெம்புகோல்கள் போன்று உதவுகின்றன. ரத்த அணுக்களின் உற்பத்திக்கும் எலும்புகள் அவசியம்.

உடலில் இருக்கும் தாதுக்கள், கொழுப்பு, அமிலங்களின் சமநிலைக்கும் எலும்புகள் சிறந்த முறையில் பங்காற்றுகின்றன. மனித உடல் முறையான முழு வடிவத்தை பெறவும் எலும்புகள் தேவை. உடல் இயக்கத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் அரிய உறுப்புகளை பெட்டகம் போல் பாதுகாக்கும் பொறுப்பும் எலும்புகளுக்கு உண்டு. மூளையை மண்டை ஓடும், இதயத்தை நல்லி எலும்புக்கூடும் பாதுகாப்பதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

உடல் முழுக்க உள்ள எலும்புகளை சில வகைகளாக பிரிக்கலாம். நீண்ட எலும்புகள் (தொடை எலும்பு, மேல்கை எலும்பு போன்றவை), குறுகிய எலும்புகள் (மணிக்கட்டு மற்றும் பாதத்தில் உள்ளவை), தட்டையான எலும்புகள் (தோள்பட்டை மற்றும் மண்டைஓட்டில் உள்ளவை), சீர் அல்லாத எலும்புகள் (முதுகெலும்பு மற்றும் கீழ்த்தாடையில் உள்ளவை), சீசமாய்டு எலும்புகள் (தசைகளில் ஊடுருவி இணைப்பவை), குருத்தெலும்புகள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

குருத்தெலும்பு என்பது மூட்டுகளின் இயக்கத்திற்கு மிக அவசியமானது. நமது உடல் எடையை தாங்கிக்கொண்டு- நாம் எதையாவது தூக்கிக்கொண்டு நடந்தால் அதையும் சேர்த்து சுமந்துகொண்டு- நமது மூட்டுகள் பாதிக்காத அளவுக்கு பாதுகாக்கிறது. நாம் நடக்கும்போதும், ஓடும்போதும், விளையாடும்போதும் மூட்டுகளின் இயல்பான இயக்கத்திற்கும் இது உதவுகிறது. வேகமான செயல்பாடுகளின்போது மூட்டுகளின் அதிர்வைத் தாங்கும் ‘ஷாக் அப்சர்பெர்’ போன்றும் செயல்படுகிறது. மூட்டுகளில் எலும்புகளில் உராய்வதை தடுத்து, மூட்டுகள் மென்மையாக இயங்கவும் குருத்தெலும்புகள் துணைபுரிகின்றன.

குருத்தெலும்புகள் ரப்பர் போன்று மென்மையானது. நெகிழத்தக்கது. இவை ‘கான்றோசைட்’ என்னும் செல்களால் ஆனவை. அற்புத சக்தி நிறைந்த இந்த செல்கள், குருத்தெலும்பு சேதமடையும்போது ஓரளவு அதனை சரிசெய்யும். ஆனாலும் அதிகப்படியான செயல்பாட்டாலும், வேறு சில தொந்தரவுகளாலும் குருத்தெலும்புகள் பாதிக்கப்படுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது.

மூட்டுகளுக்கு அதிர்ச்சியை தரும் செயல்கள், விபத்துகள், மூட்டு களுக்கு மிக அதிக வேலைகளை கொடுத்தல், வயதாகுவதால் ஏற்படும் மூட்டுத் தேய்மானம், சில வகை நோய்களால் மூட்டுகள் விரைப்படைந்து செயல்குறைதல், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, ஊட்டச்சத்துக் குறைபாடு, பாரம்பரிய வாத நோய்.. போன்ற பல்வேறு காரணங்களால் குருத்தெலும்புகள் பாதிக்கப்படுகின்றன. பாதிப்பு ஏற்படும்போது மூட்டு வலி, மூட்டு விரைப்பு, வீக்கம், மூட்டிலிருந்து சத்தம் வருதல் போன்ற அறிகுறிகள் தோன்றும்.

201710191437274211_1_joint._L_styvpf.jpg

குருத்தெலும்புக்கு ரத்த ஓட்டம் கிடையாது. அதனால், அதில் பாதிப்புகள் ஏற்படும்போது அறிகுறிகளை கண்டறிந்து முறையான சிகிச்சைகளை உடனே மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் அன்றாட வாழ்க்கையை நடத்த முடியாத அளவுக்கு உடலை முடக்கும் நிலை உருவாகிவிடும். இறுதியில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டிய கட்டாயத்தை உருவாக்கிவிடும்.

குருத்தெலும்பு சிகிச்சையில் நவீன முறைகள் பின்பற்றப்படுகின்றன. அதில் ‘கான்ட்ரோன்’ எனப்படும் செல் மீள் உருவாக்க சிகிச்சை குறிப்பிடத்தக்கது. இது அவரது குருத்தெலும்பு செல்களையே பிரித்தெடுத்து, ஆய்வு கூடத்திற்கு அனுப்பி, அந்த செல்களை இனப்பெருக்கம் செய்யவைத்து, அதை பழுதடைந்த குருத்தெலும்பு பகுதியில் செலுத்துவதாகும். இயற்கையான குருத்தெலும்பு செல்களை உடலில் இருந்து எடுத்து- அதற்குரிய ஆய்வகத்தில் வளர்த்து- பாதிக்கப்பட்ட இடத்தில் செலுத்தும் இந்த முறை, குருத்தெலும்பு சிகிச்சையில் உலக அளவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நவீன சிகிச்சை ஒரு வரப்பிரசாதமாகும்.

எலும்பு சிகிச்சை துறை வேகமாக வளர்ந்து, எத்தகைய குறை பாடுகளையும் சரி செய்திட முடியும் என்ற நிலையில் இருந்தாலும், எலும்புகள் பலவீனமாகாத, பாதிப்படையாத வகையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை மேற்கொள்வது நல்லது. எலும்பு பலத்தோடு ஆரோக்கிய வாழ்க்கை வாழவிரும்புகிறவர்கள் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்ளவேண்டும்.

இதற்காக ஜிம்மிற்கு செல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் முக்கால் மணிநேரம் நடை பயிற்சி மேற்கொண்டால் போதும். ஜாக்கிங், சிட் அப்ஸ் போன்றவைகளும் செய்யலாம். வீடு அல்லது அலுவலக மாடிப்படிகளில் தினமும் அரை மணிநேரம் ஏறி இறங்கும் பயிற்சியை செய்தாலும் போதும். உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தோ அல்லது நண்பர்களுடன் சேர்ந்தோ வாரத்தில் மூன்று நாட்கள் மைதானத்தில் இறங்கி உங்களுக்கு பிடித்தமான ஏதாவது ஒரு விளையாட்டை குறைந்தது ஒரு மணி நேரம் விளையாடுங்கள்.

அது எந்த விளையாட்டாகவும் இருக்கலாம். வியர்க்கும் அளவுக்கு விளையாடும்போது தசையும், எலும்பும் பலமடையும். உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும். அதிக உடல் எடை எலும்புகளுக்கு சுமையாகிவிடும்.

கட்டுரை:

டாக்டர். பி.ஆர். தாமோதரன், M.S. (Orth) MRCS, FRCS.,

எலும்பு செல் சிகிச்சை நிபுணர், சென்னை.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

Bicep Strain என்ற பாதிப்பிற்குரிய சிகிச்சை

 

 

குழந்தை பிறந்து, நடக்கத் தொடங்கியவுடன் அக்குழந்தை தன்னுடைய தந்தையின் முன்கையில் உள்ள biceps பகுதியில், தங்களுடைய பிஞ்சு கைகளைக் கொண்டு தொங்கி விளையாடுவதை ரசித்திருக்கிறோம். இன்றும் ஒரு சில ஆண்கள் அந்த biceps பகுதியின் பொலிவான தோற்றத்திற்காக திருமணத்திற்கு பின்னரும் விசேடமான பயிற்சிகளை செய்துக் கொண்டிருப்பர். விருந்து மற்றும் உறவினர்களின் இல்ல விழாக்களுக்கு செல்லும் போது இறுக்கமான டீசர்ட்டை அணிந்து தங்களின் biceps ன் வலிமையைக் காட்டத் தவறுவதில்லை. ஆனால் இந்த biceps இயல்பாக இருக்கவேண்டிய அளவைக் காட்டிலும் நன்றாக தெரியவேண்டும் என்று சில ஆண்கள் அதிகளவிலான உடற்பயிற்சியினை மேற்கொள்ளும் போது, அங்குள்ள தசைகளுக்கு காயம் ஏற்பட்டு, வலுவினை இழக்கத் தொடங்குகின்றன. ஒரு சிலருக்கு அப்பகுதியிலுள்ள தசைநார்கள் கிழிந்து வலியை உண்டாக்கிவிடும். இதனை biceps strain என்று குறிப்பிடுவார்கள்.

news_image_health_510.jpg

இந்த பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தசைப்பகுதிகள், முன்பக்க தோள் மூட்டு இணையும் இடம், முழங்கை மூட்டின் பகுதி ஆகிய இடங்களில் வலி தோன்றும். இந்த வலி ஒரு சிலருக்கு அடிக்கடியோ அல்லது ஒரு வாரத்திற்கு மேலாகவோ நீடிக்கக்கூடும். அப்படியிருந்தால் அவர்கள் biceps strain என்ற பாதிப்பிற்கு ஆளாகியிருக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளலாம்.

இவர்களுக்கு தற்போது cold compression therapy  என்ற சிகிச்சை அறிமுகமாகியிருக்கிறது, இந்த சிகிச்சையின் மூலம் தசைநார்களில் இரத்த ஓட்டம் சீர் படுத்தப்படுகிறது. ஒரு சிலருக்கு இந்த சிகிச்சையின் போதான குளிர்ச்சி ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையில் பேரில் இந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். அத்துடன் biceps க்கான பயிற்சியை அளவாகவும் முன்னெச்சரிக்கையுடனும் மேற்கொள்ளவேண்டும்.

டொக்டர் செந்தில் குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/26061

Link to comment
Share on other sites

மருந்து, துணை மருந்து, ஊட்டச்சத்து, உடலுக்கு உரம்... நம் பாரம்பர்யப் பெருமை கஞ்சி!

ஞ்சி’ என்றால் காய்ச்சல் நேரத்தில் வழங்கப்படும் பத்திய உணவு. இப்படித்தான் பெரும்பாலோரின் மனதில் பதிந்திருக்கிறது. உண்மையில், கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல, உடலுக்கு ஊட்டம் தரக்கூடிய உணவாகவும் நம் மரபில் பயன்பட்டிருக்கிறது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஊட்ட உணவாகவும், நோய் பாதித்த நிலையில் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாகவும் கஞ்சி வகைகள் உதவுகின்றன.

ஊட்டச்சத்து உள்ள காலை உணவு

 

பட்டினப்பாலையில்...

‘சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுப் போலப் பரந்தொழுகி...’ என்கிற பட்டினப்பாலை வரிகள், சோறு வடித்த கஞ்சியானது ஆறுபோல ஓடியதாக கவிதை பேசுகிறது. நமது உணவுக் கலாசாரத்தில் பிண்ணிப் பிணைந்திருந்த கஞ்சி வகைகள் எத்தனையோ இன்று காணாமல் போய்விட்டன. கொதிகஞ்சி, உறைகஞ்சி, முடிச்சுக்கஞ்சி, பால்கஞ்சி, வடிகஞ்சி, ஊட்டக்கஞ்சி, சுடுகஞ்சி... எனப் பல்வேறு கஞ்சி வகைகளைத் தயாரித்து பயன்பெறலாம். இப்போது இருக்கும் ‘சூப்’ வகைகளுக்கு முன்னோடியாக ‘கஞ்சி’ வகைகளைக் குறிப்பிடலாம். ’கஞ்சி’ என்றதுமே ‘உவ்வே’ என்று ஒதுக்கித் தள்ளாமல், ஆரோக்கியத்தை மீட்டெடுக்கும் உணவாக அதைப் போற்றுவது அறிவுடைமை.

காய்ச்சலுக்கு...

காய்ச்சலால் அவதிப்படும் நேரத்தில் செரிமானப் பகுதிக்கு வேலைப் பளுவைத் தரக்கூடிய சீரணமாகாத உணவுகளைத் தவிர்த்துவிட்டு, மெல்லிய உணவு வகையான கஞ்சியை எடுத்துக்கொள்வதே நல்லது. ஜுரம் காரணமாக முடங்கிக்கிடக்கும் செரிமானத்தை விரைவில் மீட்டெடுத்து, தேவைப்படும் சத்துகளை உட்கிரகிக்க (Absorption of nutrients) இது உதவி புரியும். உடல் இழந்த நீர்ச்சத்தையும் இதைக்கொண்டு ஈடுகட்ட முடியும். ’குடற்தன்னில் சீதமலாது சுரம் வராது’ என்கிறது சித்த மருத்துவம். எந்த வகையான ஜுரமாக இருந்தாலும், செரிமானம் பாதிக்கப்படுவதை நாம் உணர்ந்திருப்போம். ஆமத்தை (சீதத்தை) விலக்கி, செரிமானத் திறனை மீண்டும் எழுச்சியுறச் செய்ய இது பெருமளவில் துணையாக இருக்கும். சோற்றை வடித்து எடுக்கும் செழுமையான கஞ்சிக்கு ’அன்னப்பால்’ என்றும் பெயருண்டு.

நெற்பொரிக் கஞ்சி:

ஜுர நோயாளர்களுக்கு நெற்பொரிக் கஞ்சி மிகவும் சிறந்தது. நெல்லைப் பொரித்து, உமியை நீக்கிய பின் கஞ்சியாகச் செய்துகொள்ளலாம். வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஏற்படும்போது தாராளமாக நெற்பொரிக் கஞ்சியைக் குடிக்கலாம். கிராமப் பகுதிகளில் நெற்பொரிக் கஞ்சி பிரபலமானது. காரணம் என்ன தெரியுமா? கிராமங்களில் உள்ள மக்களுக்கு, செரியாமையால் உண்டாகும் வயிற்றுவலிக்கு உடனடியாக மருந்தகங்களுக்குச் சென்று மருத்துவர் பரிந்துரையின்றி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டு, வயிற்றைப் புண்ணாக்கிக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம் தெரியாது.

கஞ்சி

பஞ்சமுட்டிக் கஞ்சி:

தென் தமிழகத்திலும், இலங்கை தமிழர்களிடமும் வழக்கத்தில் உள்ள பஞ்சமுட்டிக் கஞ்சி, உடலுக்கு ஊட்டத்தை தரக்கூடியது. மெலிந்த தேகம் உடையவர்களுக்கும் நோயுற்று மெலிந்தவர்களுக்கும் அற்புதமான உணவு. துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, சிறு பயறு (அ) தட்டைப் பயறு, கடலை, பச்சரிசி ஆகியவற்றை வகைக்குப் பத்து கிராம் எடுத்து ஒரு துணியில் வைத்து முடிந்துகொண்டு, மண்பானையில் போட்டு, ஒரு லிட்டர் நீர் சேர்த்து, நான்கில் ஒரு பாகமாக (அதாவது 250 மி.லி அளவு) வரும் வரை காய்ச்சவும். பின்னர் துணி முடிப்பை எடுத்துவிட்டு, கஞ்சியைப் பருகலாம். பருப்பு வகைகளும், பயறு வகைகளும் சேர்ந்திருப்பதால் இதில் புரதக் கூறுகளுக்குப் பஞ்சமில்லை. சிலர் முளைகட்டிய பயறு வகைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்துகிறார்கள். இதைத் தயாரித்த பிறகு சிறிது மிளகுத் தூள் தூவி பயன்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் வழங்கினால், எளிதில் சீரணமடைந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தரும். நோயாளியைச் சந்திக்கச் செல்லும்போது, விளம்பர உத்திகளின் மூலம் பிரபலமடைந்த ஊட்டச்சத்துக் கலவைகளை வாங்கிச் செல்வதற்குப் பதிலாக, பஞ்சமுட்டிக் கலவையைத் தயார்செய்து எடுத்துச் செல்லுங்கள். நோயாளியின் உடல்நிலை விரைவில் சமநிலை அடையும்.

மாதவிடாயை முறைப்படுத்த...

உளுத்தங் கஞ்சி, வெந்தயக் கஞ்சி போன்றவை காலங்காலமாக பெண்களின் உடலியிங்கியலைச் சீராக பயணிக்கச் செய்ய உதவியவை. பெண்கள் பூப்பெய்தும்போதும் அதன் பிறகும் வழங்கப்படும் உளுந்து, வெந்தயம் சேர்ந்த கஞ்சிகள், மாதவிடாய் நிகழ்வை ஒழுங்குப்படுத்தியதோடு, உடலுக்குத் தேவைப்படும் வலிமையையும் கொடுத்தன. ஆனால் இன்று, முற்றிலும் மருவிப் போன பாரம்பர்ய உணவுப் பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப் பழக்கம் காரணமாக மாதவிடாய் சார்ந்த நோய்கள் பெண்களை அதிகளவில் வாட்டுகின்றன. சுண்ணச் சத்து, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம் போன்ற தாதுக்களும், வைட்டமின்களும் உளுந்தில் அதிகளவில் உள்ளன. புரதங்களும் நார்ச்சத்தும் உளுந்தில் தேவையான அளவு இருக்கின்றன. மாதவிடாய் சார்ந்த தொந்தரவுகளை நிவர்த்தி செய்யும் கூறுகள் வெந்தயத்தில் உண்டு.

ஊட்டச்சத்துள்ள உணவு

சுக்கு முடிச்சுக் கஞ்சி:

சுக்கின் மேல் தோலை சீவி, சிறு சிறு துண்டுகளாக்கி, ஒரு துணியில் முடிந்து, பச்சரிசியைக் கொண்டு செய்யப்பட்ட கஞ்சியில் போட்டு நன்றாக காய்ச்சி, உண்டாகும் தெளிநீரை உபயோகிக்கலாம். இதனால் உணவில் ஈர்ப்பு உண்டாகும். வயிற்றில் உண்டாகும் மந்தம், மலக்கட்டு முதலியவை நீங்கும். காய்ச்சலுக்கும் கொடுக்கலாம். பச்சரிசி கஞ்சி செய்யும்போதே, சுக்கை துணியில் முடிந்து (முடிச்சுக் கஞ்சியாகவும்) காய்ச்சியும் பயன்படுத்தலாம். பசியைத் தூண்டும், வாயுவை அகற்றும் சக்தி சுக்குக்கு உண்டு.

கொள்ளுக் கஞ்சி:

சரியாகப் பசியெடுக்காமல் இருப்பவர்களுக்குக் கொள்ளுக் கஞ்சி நல்ல பரிந்துரை. அரிசியோடு கொள்ளு சேர்த்து செய்த கஞ்சியை தொடர்ந்து குடித்து வர மிகுந்த வலிமை உண்டாகும். வலிமையின் அளவை உணர்த்த, ’எள்ளைக் கையினால் கசக்கிப் பிழியும் அளவுக்கு உடலில் பலம் உண்டாகும்’ என்று உவமை கூறுகிறது சித்த மருத்துவப் பாடல் ஒன்று. கொள்ளுக் கஞ்சியை ‘காணக் கஞ்சி’ என்றும் குறிப்பிடலாம். கொள்ளைத் தொலி புடைத்து, சிறிது மிளகும் மல்லியும் சேர்த்துச் செய்யப்படும் கஞ்சி வகையும் இருக்கிறது. இது, கப நோயாளிகளுக்கு முக்கியமான மருந்தாகப் பயன்படுகிறது. பருவ நிலைக்கு ஏற்ப உணவு தயாரிப்புகளை முன்னெடுத்த முன்னோர்கள், கார்காலத்திலும், குளிர்காலத்திலும் அதிகமாகப் பரிந்துரைத்தது காணக் கஞ்சியே!...

புனற்பாகம்!

இருமுறை வடித்த கஞ்சி, `புனற்பாகம்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது, அவித்த சோற்றில் மீண்டும் தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவைத்து பயன்படுத்துவது. வெப்ப மாற்றங்களையும் நீரியல் நுணுக்கங்களையும் பற்றி அறிந்திருந்த முன்னோர்களின் அறிவியலுக்குச் சான்றாக இந்தக் கஞ்சி வகையை குறிப்பிடலாம். தண்ணீரில் நிகழும் மாற்றங்களை முன்வைத்து, வெப்ப நோய்கள் நீங்குவதோடு உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும் ஊட்டக் கஞ்சியாகவும் புனற்பாகம் பயன்படுகிறது.

வேனிற் காலங்களில்...

பாலாடையைப்போல கட்டிய உறைக்கஞ்சி, சாதம் வேகும்போது கிடைக்கும் கொதிகஞ்சி, வடிகஞ்சி... என அனைத்துக்கும் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உண்டு. வேனிற் காலத்தில் மோர், இளநீர் போன்ற இயற்கை பானங்களோடு கஞ்சி வகைகளையும் அவ்வப்போது குடிப்பது உடலுக்கு நல்லது.

சிறுதானிய கஞ்சி

சிறுதானியக் கஞ்சிகள்...

பச்சரிசி, புழுங்கல் அரிசி தவிர சாமை, தினை, வரகு போன்ற சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் கஞ்சி வகைகளும் அதிகளவில் வழக்கத்தில் இருந்தன. அவற்றை மீண்டும் மனமுவந்து ஏற்றுக்கொண்டால், சிறுதானியங்களால் கிடைக்கும் எண்ணற்றப் பயன்களைப் பெற முடியும்.

துணை மருந்தாகும் கஞ்சி!

பாம்புக்கடிக்கு வைத்தியம் செய்யும்போது, குறிப்பிட்ட மருந்துகளோடு பத்தியமாக அரிசிக் கஞ்சியை மட்டுமே பயன்படுத்துவதாக மலைவாழ் மக்கள் குறிப்பிடுகிறார்கள். பல மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும் கஞ்சி வகைகள் பயன்படுகின்றன.

மருந்தாக, துணை மருந்தாக, சிறுபொழுதுக்கான உணவாக, இடை உணவாக, ஊட்ட உணவாக, பத்திய உணவாக... எனப் பல்வேறு வகைகளில் நெடுங்காலமாகப் பயன்பாட்டில் இருந்தன கஞ்சி வகைகள். தேநீர், காபி, குளிர்பானங்கள் ஆகியவற்றின் வருகைக்குப் பின்னர் மெள்ள மெள்ள வழக்கொழிந்துப் போய்விட்டன. ’கஞ்சிக் காய்ச்சி குடிப்போம்’ என்பது அவமானம் அல்ல பெருமை! பாரம்பர்யப் பெருமை!

http://www.vikatan.com/news/health/105455-health-benefits-of-kanji.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.