Jump to content

நலம் நல்லது!


Recommended Posts

பிராஸ்டேட் வீக்கத்திற்கான நவீன சத்திர சிகிச்சை

 

 
 

பிராஸ்டேட் வீக்கப்பிரச்சனையால் தற்போது 50 வயதைக் கடந்த ஆண்கள் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அவர்கள் சிறுநீர் கழிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. சிறிதளவு சிறுநீர் பிரிவது, விட்டுவிட்டு சிறுநீர் பிரிவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், ஒரு சிலருக்கு சிறுநீரில் குருதி கலந்து வருவது போன்றவைகள் பிராஸ்டேட் சுரப்பி வீக்கமடைந்திருப்பதற்கான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம்.

news_health_image_31_8.jpg

இதற்கு சத்திர சிகிச்சைகள் மூலம் தீர்வு காணலாம். அண்மையில் 70 வயதைக் கடந்த ஒருவருக்கு இத்துறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நவீன லேசர் கருவியின் மூலம் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு, இயல்பான அளவை விட  10 மடங்கு வீக்கத்திற்குள்ளான பிராஸ்டேட் சுரப்பியை வீக்கத்திலிருந்து முற்றிலுமாக குணப்படுத்தியிருக்கிறார்கள்.

இதன் போது நவீன லேசர் கருவியால் பிராஸ்டேட் சுரப்பியின் வீக்கமடைந்த பகுதியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, சிறுநீர் பையின் மூலம் வெளியேற்றப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் இத்தகைய சத்திர சிகிச்சையின் போது ஏற்படும் இரத்த இழப்பும் குறைக்கப்பட்டிருக்கிறது.

வைத்தியர்.விஜயகுமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23871

Link to comment
Share on other sites

  • Replies 475
  • Created
  • Last Reply

பெண்களின் கர்ப்ப காலத்தில் கண்டறியப்படும் பைபுரோயிஸ்ட் கட்டிகள்

 

கர்ப்­பப்பை தொடர்­பான  கட்­டிகள்  என்­கின்ற போது, கர்ப்­பப்­பையில் தோன்றும்  பைபு­ரோயிட் கட்­டிகள், கர்ப்­பப்­பையின்  இரு­பு­றங்­க­ளி­லு­முள்ள சூல­கங்­களில் ஏற்­படும் சூலகக் கட்­டிகள் என்­பன அடங்கும். 

இவ்­வா­றான கட்­டிகள் உள்ள போது, கர்ப்­பந்­த­ரித்­தாலோ  அல்­லது கர்ப்­ப­மாக உள்­ள­போது, இவ்­வா­றான கட்­டிகள் கண்­ட­றி­யப்­பட்­டாலோ மக்கள் மத்­தியில் பெரிய ஒரு பயம் ஏற்­ப­டு­வது வழக்கம். அதா­வது கர்ப்­பப்­பையில் கரு வளரும் போது, கட்­டியும் சேர்ந்து வளர்ந்து தாயின் உடல் நலத்­திற்கோ அல்­லது குழந்­தையின்  ஆரோக்­கி­யத்­திற்கோ தீங்கை ஏற்­ப­டுத்­து­மென ஏங்­கு­வது வழக்கம். அத்­துடன் இவ்­வா­றான கட்­டிகள்  கண்­ட­ய­றி­யப்­படும் போது, இதற்­கான சரி­யான  தீர்­வுகள் என்ன? இதனை எவ்­வாறு கையாள வேண்டும் என்­பன குறித்து மக்கள் மத்­தி­யில்­கு­ழப்ப நிலை ஏற்­பட வாய்ப்­புள்­ளது. 

ஆகவே இதற்­கு­ரிய சரி­யான விளக்­கங்­களை உங்­க­ளுடன் பகிர்ந்து கொள்­வதும் சரி­யான தீர்­வுக்­கு­ரிய  பாதையில் உங்­களை வழி­ந­டத்­து­வதும் மருத்­துவத் துறை­யி­ன­ரான எமது கடமை, இதன்­போ­துதான்  இதற்­கான தீர்­வு­களை மருத்­து­வத்­து­றை­யினர் சிபாரிசு  செய்­யும்­போது அவற்றை புரிந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும். 

 

கர்ப்­ப­கா­லத்தில் சூலகக் கட்­டிகள் கண்­ட­றி­யப்­பட்டால்  அவற்­றுக்­கான  தீர்­வுகள்

கர்ப்ப காலத்தில் நாம் சாத­ராண தேவை­க­ளுக்­காக ஸ்கேன் (Scan)  பரி­சோ­தனை செய்­யும்­போது சூலகக் கட்­டிகள் கண்­ட­றி­யப்­படும். வேறு சில சந்­தர்ப்­பங்­களில் கர்ப்ப காலத்தில் அசா­தா­ரண வயிற்று வலியை பெண்­ணொ­ருவர் கூறும்­போது, நாம் கார­ணங்­களை கண்­ட­றியும் பரி­சோ­த­னைகள் மற்றும் ஸ்கேன் என்­பன செய்யும் போது, சூலகக் கட்­டிகள் அறி­யப்­ப­டு­வது வழக்கம். 

இவ்­வா­றான சூலகக் கட்­டி­களில் பெரும்­பா­லா­னவை சாதா­ரண நீர்க்­கட்­டி­க­ளா­கவும் சிறிய பருமன் அல்­லது ஒரு தேசிக்­காயின் பருமன் கொண்­ட­ன­வா­கவும் காணப்­படும். இவற்­றுக்கு மேல­தி­க­மான சிகிச்­சைகள் எதுவும் தேவைப்­ப­டு­வ­தில்லை. ஏனெனில் சில மாதங்­களில் இவை தா­மா­கவே  மறைந்து விடும். ஆனால் சற்றுப் பெரிய பரு­ம­னு­டைய சூலகக் கட்­டிகள்  அதா­வது ஒரு தோடம்­ப­ழத்தின் அளவு அல்­லது பெரிய அளவில் கண்­ட­றி­யப்­பட்டால் அவை  வயிற்­று­வ­லியைத் தோற்­று­விக்கும். அத்­துடன் அவை மேலும் வள­ரு­கின்­ற­னவா என்­ப­தனை ஓரி­ரு­மாத இடை­வெ­ளியில் மீண்டும் செய்யும் ஸ்கேன்  பரி­சோ­த­னையில் கண்­ட­றி­யலாம். இவ்­வாறு மேலும்  வள­ரு­கின்ற கட்­டி­க­ளுக்கும் வயிற்­று­வ­லியைத் தோற்­று­விக்கும் சூலகக் கட்­டி­க­ளுக்கும் சிகிச்­சை­யாக  சத்­தி­ர­சி­கிச்­சைகள் மேற்­கொள்­ள­வேண்­டி­யது அவ­சியம். 

கர்ப்ப காலத்தில் இவ்­வா­றான சூலகக் கட்­டி­க­ளுக்கு சத்­தி­ர­சி­கிச்­சைகள் மேற்­கொள்­ளும்­போது, கர்ப்­ப­கா­லத்தில் முதல் 3 மாதங்­களில்  சத்­தி­ர­சி­கிச்­சைகள் மேற்­கொள்­வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்த முதல் 3 மாதங்­களில் சத்­தி­ர­சி­கிச்­சை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்தும் மயக்க மருந்­து­களின் தாக்கம் சிசுவைக் கூடு­த­லாகப் பாதிக்கும் என்­பதால் இந்தக் கால­ப்ப­கு­தியில் இவற்றைக்  கூடு­த­லாகத் தவிர்க்­கிறோம். எனவே இவ்­வா­றான சத்­தி­ர­சி­கிச்­சை­களை 4/5 மாத காலப்­ப­கு­தியில் மேற்­கொள்ள முடியும். 

இந்தக் கட்­டிகள் வள­ராது, எவ்­வித வயிற்­று­வ­லி­யையும் தோற்­று­விக்­காது. மற்றும் ஸ்கேன் பரி­சோ­த­னையில் எவ்வித ஆபத்­து­க­ளு­மற்ற  நீர்க்­கட்­டிகள் என கண்­ட­றி­யப்­படும் போது, கர்ப்­ப­கா­லத்தில் எவ்­வித  சிகிச்­சை­க­ளையும் மேற்­கொள்­ளாது பிர­ச­வத்தை  நிறை­வு­செய்து அதன்பின் மேலும் 3 மாதங்­களின் பின் இக்­கட்­டிகள் தொடர்­பாகப் பரி­சீ­லித்து அவை தொடர்­பான  சிகிச்­சை­களை முன்­வைக்க முடியும். 

கர்ப்­ப­கா­லத்தில் சூலகக் கட்­டிகள் உள்­ள­போது ஏற்­படக் கூடிய சிக்­கல்கள் 

இவ்­வா­றான சூலகக் கட்­டிகள் சிறி­ய­ன­வா­கவும் எவ்­வித சிக்­கலும் இல்­லா­த­ன­வா­கவும் காணப்­படும். எனினும் சில வளர்ந்து வரும் பெரிய கட்­டிகள் வயிற்­று­வலி மற்றும் கட்­டிகள்  முறுக்­குப்­ப­டுதல் வெடிப்­ப­டைதல் போன்­ற­வற்றால் ஏற்­படும் உக்­கி­ர­வ­யிற்­று­வலி மேலும்  சிசு கர்ப்­பப்­பை­யினுள் இருக்கும் நிலையில் ஏற்­படும் அசா­தா­ரண தன்­மைகள் அதா­வது குறுக்­காக இருக்கும் நிலை மற்றும் குறை­மாதப் பிர­ச­வவலி ஆரம்­பித்தல் போன்ற சிக்­கல்கள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­புகள் உள்­ளன. 

 

கர்ப்­ப­கா­லத்தில் சூலகக் கட்­டிகள் உள்­ள­போது  சாதா­ரண பிர­சவம் முடி­யுமா?

கர்ப்பகாலத்தில் சூலகக் கட்­டிகள் உள்ள போது, சாதா­ரண பிர­சவம் முடியும். ஆனால் சில­வே­ளை­களில் இந்த சூலகக் கட்­டிகள் பிர­ச­வப்­பா­தையைத் தடுக்கும் போது, சாதா­ரண பிர­ச­வத்தில் சிக்கல் ஏற்­பட  வாய்ப்­புள்­ளது. எனினும் இச்­சந்­தர்ப்பம் குறை­வா­கவே உள்­ளது. சில­வே­ளை­களில் பெரிய சூலகக் கட்­டிகள் உள்­ள­போது, நாம் சிசே­ரியன் பிர­ச­வத்தைத் திட்­ட­மிட்டு குழந்­தையைப் பிர­ச­விப்­ப­துடன்  அதே­வே­ளையில் சூலகக் கட்­டி­க­ளையும்  அகற்­றுவோம். இதனால் ஒரே சத்­தி­ர­சி­கிச்­சையில் இரு  தேவை­க­ளையும் நிறைவு செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்கும். 

 

கர்ப்­ப­கா­லத்தில் கர்ப்­பப்­பையில் பைபு­ரோயிட்  கட்­டிகள் உள்­ள­போது ஏற்­ப­டக்­கூ­டி­ய ­சிக்­கல்கள் எவை?

கர்ப்பப்பையில் பைபு­ரோயிட் கட்­டிகள்  உள்­ள­போது, கருத்­த­ரிக்க  தாம­த­மா­வ­துடன் கருத்­த­ரித்த பின்­னரும் கூட  இயற்­கை­யான கருக்­க­லை­த­லுக்கு உட்­பட  வாய்ப்­புள்­ளது. மேலும் இவ்­வாறு கர்ப்­பப்­பையில்  கட்­டிகள் உள்­ள­வர்­களில் 5 மாத கர்ப்ப காலத்தில் ஒரு­வி­த­மான தாங்க முடி­யாத வயிற்­று­வலி ஏற்­ப­டு­வது வழக்கம். 

இதன்­போது பெரு­ம­ளவு ஆபத்­துகள் இல்­லா­த­வி­டத்து இந்த வலியால் பெண்கள் அச்­சப்­ப­டு­வது வழக்கம்.  மேலும் இவ்­வகை பைபு­ரோயிட் கட்­டிகள்  உள்­ள­போது   குறை­மாதப் பிர­சவம், சிசு கர்ப்­பப்­பையில் குறுக்­காக  இருக்கும் நிலை, சாதா­ரண பிர­ச­வத்­திற்கு ஏற்­ப­டக்­கூ­டிய சிக்­கல்கள் மற்றும் பிர­ச­வத்­திற்கு   பின்னர் ஏற்­ப­டக்­கூ­டிய அதி­கூ­டிய குரு­திப்­பெ­ருக்கு  போன்­றன தோன்ற வாய்ப்­புள்­ளது. 

 

கர்ப்­ப­கா­லத்தில் பைபு­ரோயிட் கட்­டிகள் எவ்­வாறு அறி­யப்­ப­டு­கின்­றன?

கர்ப்ப காலத்தில் கர்ப்­ப­வதி ஒரு­வரின் வயிற்றைப் பரி­சோ­திக்கும் போது, வயிற்றின் பருமன்  அள­வுக்­க­தி­க­மாக பெரி­தாக இருப்பின் இவ்­வா­றான கட்­டிகள் இருப்­ப­தற்­கான வாய்ப்­புள்­ள­தாக  சந்­தே­கிக்­கப்­ப­டு­கின்­றது. இதனை நாம் ஸ்கேன்  பரி­சோ­த­னையில் உறு­திப்­ப­டுத்­து­கின்றோம்.  இதன்­போது கட்­டியின் பருமன், கட்­டிகளின் எண்­ணிக்கை, கட்டி  இருக்கும் அமை­விடம் என்­பன அறி­யப்­படும். 

 

கர்ப்­ப­கா­லத்தில் பைபு­ரோயிட்  கட்­டி­க­ளுக்கு எவ்­வா­றான சிகிச்­சைகள் உள்­ளன? 

கர்ப்­ப­கா­லத்தில் பைபு­ரோயிட் கட்­டி­க­ளுக்கு வலி நிவா­ர­ணங்­க­ளாக வயிற்­று­நோவைக் குறைக்கும்  மருந்­துகள் பாவிக்­கப்­படும். இத­னைத்­த­விர வேறு எந்த சிகிச்­சை­களோ அல்­லது சத்­தி­ர­சி­கிச்­சை­களோ மேற்­கொள்ள முடி­யாது. அதா­வது கர்ப்ப காலத்தில் பைபு­ரோயிட் கட்­டி­களை எந்தக் காரணத்துக்கும் அகற்ற முடியாது. ஏனெனில் இவ்வாறான சத்திரசிகிச்சைகள் மூலம், கட்டிகளை கர்ப்பகாலத்தில் அகற்ற முற்பட்டால் அதிகூடிய குருதிப் பெருக்கை  ஏற்படுத்தி ஆபத்தில் முடியவாய்ப்புள்ளது. அத்துடன்   பிரசவம் சிசேரியன் ஆக இருப்பின் கூட இதன்போது கட்டியை அகற்ற முற்பட முடியாது. 

இதுவும் ஆபத்தில் முடியும் என்பதால் கர்ப்பகாலத்தில்  அல்லது பிரசவத்தின் போது, இவை அகற்றப்படுவதில்லை. ஆனால் பிரசவம் முடிவடைந்து மூன்று மாத காலப்பகுதியின் பின் தான் இவ்வாறான கட்டிகளுக்கு சிகிச்சைகள் வழங்கப்படும். அதாவது தேவை ஏற்படின் சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்படும். எனவே கர்ப்பகாலத்தில்  கண்டறியப்படும் சூலக மற்றும் பைபுரோயிட் கட்டிகளுக்கு தகுந்த சிகிச்சைகளை மேற்கொண்டு  தீர்வு கண்டு சிக்கல்களை தவிர்க்கலாம். 

http://www.virakesari.lk/article/23942

Link to comment
Share on other sites

உயரமானவர்களுக்கு நரம்பு ரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம்: ஆய்வில் தகவல்

23hyymk02--DVT-Thrombosisjpg

உயரமாக இருப்பவர்களுக்கு நரம்புகளில் ரத்தக்கட்டு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த லண்ட் பல்கலைக் கழக ஆராய்ச்சியாலர்கள் நடம்பு ரத்தக்கட்டு பாதிப்பு உயரமானவர்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கண்டுபிடித்துள்ளனர். அதாவது இந்த ரத்தக்கட்டு நரம்பில் ஆரம்பிக்கும்.

6 அடி 2 அங்குலம் உயரமுடையவர்களுக்கு நரம்பு ரத்தக்கட்டு வாய்ப்புகள் அதிகம் 5 அடி 3 அங்குலம் உயரத்துக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இந்தப் பாதிப்பு குறைவு என்கின்றது இந்த ஆய்வு.

அதே போல் பெண்களில் 5 அடி 1 அங்குலம் உயரத்துக்குக் குறைவானவர்களுக்கு நரம்பு ரத்தக்கட்டு வாய்ப்பு குறைவு, அதே 6 அடி உயரமுள்ள பெண்களுக்கு ரத்தக்கட்டு வாய்ப்பு அதிகம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

இத்தகைய ரத்தக்கட்டுகள் பொதுவாக கால்களில் ஏற்படும், இந்த ரத்தக்கட்டு நுரையீரல் வரை பயணிக்கக் கூடியதாகும் சில வேளைகளில் இருதயம் வரை கூட இது செல்லக்கூடியதாகும். பொதுவாக நடைப்பயிற்சி கெண்டைச் சதை பயிற்சிகள் இது வராமல் தடுக்கக்கூடியவை.

இதற்கு ரத்தத்தை நீர்க்கச் செய்யும் சிகிச்சையே பிரதானமாக அளிக்கப்பட்டு வருகிறது. ஊசிமருந்து மூலமாகவோ, மாத்திரைகள் மூலமாகவோ இத்தகைய சிகிச்சைகள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன.

http://tamil.thehindu.com/world/article19630803.ece

Link to comment
Share on other sites

மாரடைப்பை ஏற்டுத்துமா சொரியாஸிஸ்?

 

கடந்த 5 ஆண்டுகளில் மாரடைப்பிற்கு ஆளானவர்களில் 5 லட்சம் பேர் சொரியாஸிஸால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. நாள்பட்ட சொரியாஸிஸ் நோய் மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்று என்றும் குறிப்பிடப்படுகிறது. இதனை ஒரு நிழல் நோய் என்றும் மருத்துவத்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

news_image_health_298.jpg

தோலிற்கான நோய் எதிர்ப்பு மையத்தில் ஏற்படும் குறைபாடுகளால் தான் சொரியாஸிஸ் ஏற்படுகிறது. இதன் காரணமாக தோல் பகுதி சிவந்து காணப்படுவது, சமச்சீரற்ற நிலை, குருதி கசிந்து வெளியேறும் நிலை, திட்டுதிட்டுக்களாக அல்லது செதில் செதில்களாக இருப்பது போன்றவை இதற்கான வெளிப்படையான அறிகுறியாக எடுத்துக் கொள்ளலாம். நோய் எதிர்ப்பு மையம், இந்த நோய் கிருமிகளை தவறாக கருதி மேலும் மேலும் உற்பத்தி செய்வதாலும் இவை பரவுகின்றன.

சொரியாஸிஸை முழுதாக குணப்படுத்த இயலாது. ஆனால் கட்டுக்குள் வைக்க இயலும். வராமல் தடுக்க இயலும். தொடக்க நிலையிலேயே இதற்குரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் மேலும் பரவாத வகையில் தடுக்க இயலும். குறிப்பாக இவ்வகையான செல்கள் குளிர்காலத்தில் அதிக வீரியத்துடன் செயல்படுகின்றன. அதன் போது கூடுதல் கவனத்துடன் இருந்தால் இதனை கட்டுப்படுத்த இயலும். பெரும்பாலானவர்களுக்கு பிளேக்ஸ் சொரியாஸிஸ் (Plaque psoriasis)  என்ற பாதிப்பு தான் ஏற்படுகிறது. இது உச்சந்தலை, முழங்கை, முழங்கால், முதுகின் பக்கவாட்டுப் பகுதி ஆகிய இடங்களில் ஏற்படுகிறது.

சொரியாஸிஸ் பாதிக்கப்பட்டவர்களில் சரியான தருணங்களில் சிகிச்சையெடுக்காதவர்களும், மருத்துவர்கள் பரிந்துரைத்த வழிமுறைகளை பின்பற்றாதவர்களும் சொரியாஸிஸ் ஓர்த்தோரைடீஸ் என்ற பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். சொரியாஸிஸால் பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதத்தினர் இதற்கு ஆளாவதாக ஆய்வு தெரிவிக்கிறது.நோயின் தீவிரத் தன்மையைப் பொறுத்து சிகிச்சைகள் பெறவேண்டும். இதற்காக பல மருத்துவ சிகிச்சை முறைகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முதலில் மனஅழுத்த பாதிப்பிற்கு ஆளாகாமல் இருக்கவேண்டும். அதையும் மீறி மன அழுத்தத்திற்கு ஆளானால் இத்தகைய நோய்கிருமிகள் பல்கி பெருகும். சில சிகிச்சைகள் ஒத்து வரவில்லை என்றால் அதனை தவிர்த்துவிடவேண்டும். ஏனெனில் இதன் காரணமாகவும் இவை ஏற்படலாம். தோலில் எவ்வகையான பாதிப்பும் ஏற்படா வண்ணம் தற்காத்துக் கொள்ளவேண்டும்.இதனை மருத்துவத்துறையில் கொப்னேர் நிகழ்வு என்று குறிப்பிடுவோம். உடல் எடையை கண்காணித்து கொள்ளவேண்டும். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடவேண்டும்.

வைத்தியர். ஆறுமுகம்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24107

Link to comment
Share on other sites

மருத்துவ சிகிச்சையில் ஆக்சிஜன் சிலிண்டர்களின் தேவை எப்போது? A-Z தகவல்கள்

செயற்கை ஆக்சிஜன் உதவி:

சுற்றுச்சூழல் சீர்கேடு காரணமாக, சில பத்தாண்டுகள் கழித்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை, நாம் முதுகில் சுமக்க வேண்டிய நிலைமை வரலாம் என்பது பொதுக் கருத்து. வேற்றுக் கிரகங்களில் உயிர் வாழ ஆக்சிஜன் சேமிப்பு சிலிண்டர்கள் அவசியம் என்பதும் அனைவருக்கும் தெரியும். ’பிராணவாயு (ஆக்சிஜன்) இன்றி மனிதர்களால் உயிர் வாழ முடியாது…’ ஆரம்பப் பள்ளியில் கற்றுக் கொடுக்கப்படும் முக்கியமான மருத்துவ செய்தி. மரங்கள் நமக்கு செய்யும் பல நன்மைகளில் பிராணவாயுவை அள்ளிக்கொடுப்பது முக்கியமானது. ஆக்சிஜன் இன்றி ஏதுமில்லை என்பது நியதி!

நுரையீரல்

ஆக்சிஜன் உபகரணங்கள்:

தன்னிச்சையாக நடைபெறும் சுவாச நிகழ்வுகளின் மூலம் ஆக்ஸிஜன் உடலுக்குள் சென்று இயக்கத்திற்கு உதவுகிறது. இயற்கையாக கிடைக்கும் ஆக்ஸிஜனை சில நேரங்களில் நுரையீரல் திசுக்களால் முழுமையாக உட்கிரகிக்க முடியாத சூழ்நிலைகளில், ஆக்சிஜன் உட்செலுத்தும் உபகரணங்களின் உதவி தேவைப்படுகிறது. ‘மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் நோயாளிகள் உயிரிழப்பு’ என மனதை உருக்கும் செய்திகளும் அவ்வப்போது வருவதை பார்த்திருக்கலாம்.   

அவ்வளவு முக்கியமானதா ஆக்சிஜன்? நிச்சயமாக. பிராணவாயு இல்லாமல் நம்முடைய உடல் இயங்காது. ஆக்சிஜன் சப்போர்ட் எப்போதெல்லாம் தேவைப்படுகிறது? பிராணவாயுவை இயற்கையாக நுரையீரல் ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதற்கு காரணங்கள் என்ன? 

நுரையீரல்கள்:

சுவாசிக்கும் காற்று வாயிலாக பிராணவாயு (O2) நுரையீரலுக்குள் சென்று, பின் குருதி சுற்றோட்டத்தில் கலக்கிறது. சிவப்பணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் துணையோடு உடலின் அனைத்து திசுக்களுக்கும், செல்கள்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பப்பட்டு, நமது உடலை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பிராணவாயு மற்றும் கரியமில வாயு பரிமாற்றத்திற்கு நுரையீரலின் பங்கு முக்கியமானது. மிகப்பெரிய வேலையை செய்யும் நுரையீரலை பேணிக்காப்பது மிகவும் அவசியம். நுரையீரல்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டால், ஒரு கட்டத்தில் ஆக்சிஜன் சப்போர்ட் இன்றி இருக்கவே முடியாது. நுரையீரலை பாதிப்படையச் செய்யும் காரணங்கள் பல.

ஆக்சிஜன்  மாசுபடும் - புகையும் நுரையீரலும்

புகையும் நுரையீரலும்:

நுரையீரல் பாதிப்பிற்கு புகைப்பிடித்தல் மிக முக்கிய காரணமாகிறது. தொடர்ந்து புகைப்பிடிப்பதால் நுரையீரல் திசுக்கள் நிச்சயம் பாதிக்கப்படும். புகைப்பிடிப்பவர்களுக்கு (Active smokers) மட்டுமன்றி அவர்களுக்கு அருகில் இருப்பவர்களுக்கும் (Passive smokers) நுரையீரல் பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வாகனப் புகையிலிருந்து வெளியாகும் நச்சுக்கூறுகள் கொண்ட வேதியல் பொருட்களும், தொழிற்சாலைகள் வரம்பின்றி கக்கும் விஷப்புகையும், காற்றின் தூய்மையை வெகுவாக அழித்துவிட்டன. நுரையீரலை செயல்படாமல் முடக்குவதில், இந்த நூற்றாண்டில் அதிகரித்திருக்கும் காற்று மாசும் முக்கிய காரணம். 

பாடத்திட்ட மாற்றம்:

‘நமது வாயு மண்டலத்தில் உள்ள வாயுக்களின் பங்களிப்பை பற்றி கூறுங்கள்?’ என்ற கேள்விக்கு, நைட்ரஜன், ஆக்சிஜன், கார்பன்-டை-ஆக்சைடு என நீங்கள் விடையளித்தால், பதில் தவறாக மாறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காற்று மாசு அதிகரித்துக்கொண்டே செல்வதால், மேற்சொன்ன வாயுக்களோடு, கார்பன் மோனாக்சைடு, மீதேன், கந்தகம், கார்பன் நுண் துகள்கள், ஃபார்மல்டிஹைடு போன்ற நச்சு வாயுக்களையும் சேர்த்து சொன்னால் தான் பதில் சரியானதாக இருக்கும். அடுத்த தலைமுறைப் பாடத் திட்டத்தில், வாயுமண்டலத்தின் நச்சு வாயுக்கள் பற்றி கூடுதலாக படிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். அவ்வளவு மாசுக்களோடு வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம். பெரும்பாலான நகரங்களில், ‘மாஸ்க்’ இல்லாமல் நடமாடவே முடிவதில்லை.

செயற்கை சுவாசம்

செயற்கை சுவாசம்:

மருத்துவ ரீதியில் குழாய்கள், மாஸ்க் மற்றும் சில உபகரணங்கள் மூலமாக பிராணவாயு உட்செலுத்தப்படும். அவசரகால சிகிச்சையில் தற்காலிகமாகவும், நாட்பட்ட நோய் நிலைகளில் நீண்ட நேரத்திற்கும் பிராணவாயு செயற்கையாக கொடுக்கப்படும். முதல் உதவி சிகிச்சையில் ஆக்சிஜன் மாஸ்க்குகளின் பங்கு மிகவும் அவசியமானது. அதிக இரத்த இழப்பு ஏற்பட்டு அதிர்ச்சி காரணமாக சுவாசிக்க முடியாத நிலைகளிலும் ஆக்சிஜனின் ஆதரவு தேவைப்படுகிறது. சில வகையான தலைவலிகளைக் குறைப்பதற்கும் ஆக்சிஜன் சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக நாட்பட்ட நுரையீரல் நோய்த் தொகுதிகளுக்கு ஆக்சிஜன் உதவி கட்டாயம் அவசியம். 
நுரையீரலில் உள்ள காற்றுப்பைகள், திசுக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் பிராணவாயுவை உட்செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.

நிமோனியா நோயில் காற்றுப்பைகள் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜனை குருதிச் சுற்றோட்டத்தில் கலக்க செய்ய முடியாத போதும், விபத்துக்களில் சுவாசப்பாதைகள் பாதிக்கப்படும் போதும் செயற்கை சுவாசம் தேவை. Cystic fibrosis, Chronic bronchitis, Emphysema ஆகிய நுரையீரல் சார்ந்த நோய்நிலைகளிலும் அவசியம். அறுவை சிகிச்சைகளின் போதும் தேவைப்படும். இதய செயலிழப்பு ஏற்பட்ட சூழ்நிலையில், ஆக்சிஜன் செறிந்த குருதியை இதயத் தசைகளால் வெளித்தள்ள முடியாத போது, ஆக்சிஜனின் ஆதரவு தேவை. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளையும், நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகளையும் உயிர்வாழ வைத்ததில் செயற்கை சுவாசத்தின் பங்கு அளப்பரியது. குறிகுணங்களை வைத்தும், சில பரிசோதனை முடிவுகளை கருத்தில் கொண்டும் ஆக்சிஜன் தேவை மற்றும் பயன்படுத்தப்பட வேண்டிய உபகரணங்களை மருத்துவர் முடிவு செய்வார்.

பிராணாயாமம்:

நுரையீரல் பாதிக்கப்படாமல் இருக்க, அதற்கு சிறந்த முறையில் பாதுகாப்பு வழங்குவது அவசியம். நச்சு மிகுந்த இப்போதைய சூழலில் நுரையீரல்களை பாதுகாக்க, சித்தர்கள் வழிவகுத்த ‘பிராணாயாமம்’ எனும் மூச்சுப் பயிற்சியை செய்வதே சிறந்ததாக இருக்கும். மூச்சுப்பயிற்சி செய்வதால், கூடுதல் பிராணவாயு செல்களுக்கு கிடைத்து, உடல் ஆரோக்கியமாக இருக்கும். நுரையீரலின் செயல்பாட்டையும் பிராணாயாமம் அதிகரிக்கும். 

பிராணாயாமம்

முன்னோர்களின் ஆக்சிஜன் சப்போர்ட்:

தலைவலிகளுக்கு கூட ஆக்ஸிஜன் சப்போர்ட் கொடுக்கப்படும் இன்றைய நிலையில், தொடர்ந்து பிராணாயாமம் செய்து வந்தால், தலைவலிகள் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு. பிராணாயாமம் செய்ய தூய்மையான இடத்தை தேர்ந்தெடுப்பதும் அவசியம். புகைப்படிப்பவர்களுக்கு அருகில் அமர்ந்து பிராணாயாமம் செய்வது விபரீதம். உபகரணங்கள் இல்லா ’ஆக்சிஜன் சப்போர்ட்’ தான் நமது முன்னோர்கள் சுட்டிக்காட்டிய ‘பிராணாயாமம்’ என்று தாராளமாக கூறலாம். 

வரும்முன் காப்பதற்கு மூச்சுப்பயிற்சி சிறந்தது. நுரையீரல்களை பாதிக்கும் காரணிகளை விலக்க வேண்டும். சூற்றுச்சூழலை தூய்மையாக்க இயற்கையின் வழி பயணிப்பதும் அவசியம். உயர்ந்த இடங்களுக்கு செல்லும் போது குறையும் ஆக்சிஜன், நாம் வாழும் சமவெளிப் பகுதிகளில் கிடைக்காமல் போய்விடக்கூடிய நிலைமை வருங்காலத்தில் ஏற்பட்டுவிடக்கூடாது. சிகெரட் புகை… வாகனப் புகை, தொழிற்சாலைகளின் புகை… இப்படி நுரையீரல்களை பாதிக்கப்படும் காரணிகளை வழிமுறைப்படுத்துவது அவசியம். நோய்கள் பாதிக்காத வண்ணம் சுவாச உறுப்புக்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதும் முக்கியம். அனைத்தையும் மீறி நோய்நிலைகளால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும் போது, ஆக்சிஜன் உபகரணங்கள் வழங்கும் செயற்கை சுவாசம் பெரும் உதவியாக இருக்கும்,

 

மனிதநேயத்தோடு சப்ளை நிறுத்தப்படாமல் இருந்தால்!... 

http://www.vikatan.com/news/health/100410-a-to-z-information-about-oxygen-cylinders-needs.html

Link to comment
Share on other sites

கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?

கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்வதன் மூலம் மட்டுமே நமது உடல் எடையை பராமரிக்க முடியும்.

 
கொழுப்பு, கலோரி இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
 
நமது ஆரோக்கிய வாழ்க்கையில் அதிகம் கடந்து வரும் சொற்கள் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை. கடைகளுக்கு செல்லும்போது, நாம் வாங்கும் உணவு பொருட்களில் அவற்றின் கலோரிகள், மற்றும் சத்துகளின் அட்டவணை கொடுக்கப்பட்டிருக்கும். இவர்கள் உணர்த்த விரும்பும் கருத்துகளில் இருந்து நமக்கு சில விஷயங்கள் புலப்படும்.

 கொழுப்பு கலோரி இரண்டுமே உடலில் எரிக்கப்படுகின்றன. அப்படியென்றால் இரண்டும் ஒன்றா? மறுபடியும் கேள்வி! இல்லை இரண்டும் வேறு வேறு. இதன் வித்தியாசத்தை உணர்ந்து கொள்வது மிகவும் அவசியம். இதனை அறிவதன் மூலம் மட்டுமே நமது உடல் எடையை பராமரிக்க முடியும்.

கலோரி என்பது அளவிடுவதற்கு பயன்படும் யூனிட் ஆகும். நாம் உண்ணும் உணவை உறிஞ்சி அது செரித்த பிறகு உடலுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை மதிப்பிடும் அலகு(unit) தான் கலோரி. ஆகவே நம் உடல் உணவை உடைத்து செரிமானம் செய்ததும் கலோரிகள் கிடைக்கிறது. அதிகம் ஆற்றல் கிடைக்கும் போது உடல் அதற்கு தேவையான ஆற்றலை எடுத்து கொண்டு மீதம் உள்ளதை கொழுப்பாக மாற்றி சேமித்து வைக்கிறது.

உணவு வெளியிடும் கலோரிகளை உடல் முழுவதுமாக ஆற்றலாக பயன்படுத்தும் வரையில் உங்கள் எடை சரியாக பராமரிக்கப்படுகிறது. இந்த விகிதத்தில் சமநிலை இல்லாதபோது, அதாவது ஆற்றலை சேமிக்க ஆரம்பிக்கும் போது உடல் எடை அதிகரிக்க ஆரம்பிக்கிறது. எல்லா உணவுகளிலும் கலோரிகள் உள்ளன. அது கார்போஹைடிரேட் அல்லது புரதம் அல்லது கொழுப்பு உணவாக இருக்கலாம்.

1 கிராம் கார்போஹைட்ரெடில் 4 கலோரிகள் உள்ளன. 1 கிராம் புரதத்தில் 4 கலோரிகள் உள்ளன. 1 கிராம் கொழுப்பில் இரண்டு மடங்கு அதாவது 9 கலோரிகள் உள்ளன.

201709091350401402_1_caloriesfat._L_styv

கொழுப்பு என்றால் என்ன?

கொழுப்பு என்பது உடலுக்கு தேவையான 6 ஊட்டச்சத்துகளில் ஒன்று. இது மனித உடலை ஆரோக்கியத்துடன் இருக்க வைக்கிறது. இந்த கொழுப்பு அமிலங்களுக்கு ட்ரிகிளிசரைட் என்ற ஒரு துணை குழு உண்டு. ரசாயன மற்றும் வளர்சிதை மாற்றத்தில் கொழுப்புக்கு முக்கிய பங்கு உண்டு. நரம்பு திசுக்கள் மற்றும் ஹார்மோன்களின் உற்பத்திக்கான தொகுதிகள் உருவாவதற்கு கொழுப்புகள் தேவை.

உடலின் எரிபொருளாகவும் இந்த கொழுப்பு பயன்படுகிறது. ஒரு மனிதன் கொழுப்புகளை உண்ணும்போது அதை உடல் பயன்படுத்தாமல், கொழுப்பு செல்களில் தக்க வைத்து கொள்கின்றன. உணவு இழப்பு ஏற்படும் வேளையில் உடல் இந்த தக்க வைத்த கொழுப்புகளை பயன்படுத்தி கொள்கின்றது. சில வகை கொழுப்புகள் உடலுக்கு அவசியமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.

முற்றிலும் கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது தவறான செயல். அதற்கு மாற்றாக நிறைவுறாத (unsaturated) கொழுப்புகளை பயன்படுத்தலாம். கார்போ, புரதம் மற்றும் கொழுப்பு உடலுக்கு தேவையான முதல் 3 சத்துகள் ஆகும். கார்போ ஆற்றலை கொடுக்கிறது. புரதம் தசை வளர்ச்சிக்கு உதவுகிறது. கொழுப்பு சத்து உடல் காப்பீடாகவும், நரம்பு பூச்சாகவும், ஹார்மோன்களின் மென்மையான இயக்கத்திற்கும் பயன்படுகிறது.

ஆகையால் முழுவதுமாக கொழுப்பு உணவுகளை ஒதுக்குவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். உடலுக்கு தேவையான கலோரிகளின் 15-20% கொழுப்பு சத்துக்களாக இருக்க வேண்டும். அந்த கொழுப்பு சத்தில் நெய், வெண்ணை மற்றும் எண்ணெய் போன்ற கண்ணுக்கு தெரிந்த கொழுப்பு பொருட்களால் பாதி தேவையும் மற்ற உணவு பொருட்களில் மறைந்திருக்கும் கொழுப்பு சத்தால் மீதி தேவையும் பூர்த்தியாகின்றன.

3 பகுதியில் நிறைவுறாத கொழுப்பு அமிலங்களும், 1 பகுதி நிறைவு கொழுப்பு அமிலங்களிலும் நல்ல ஆரோக்கியம் தரும். எந்த உணவை சாப்பிட்டாலும் கலோரிகள் கிடைக்கும். சமவிகித உணவில் ஒரு முக்கிய பொருளாக கொழுப்பு உள்ளது. இந்த கொழுப்பு அதிகரிக்கும்போது செல்களில் சேமிக்க பட்டு உடல் எடையை அதிகரிக்கச்செய்கிறது. ஆகவே கொழுப்பை பற்றி அதிகம் பதற்றம் கொள்ளாமல், ஓரளவுக்கு எடுத்து கொள்வது நல்ல பலனை கொடுக்கும்.

http://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

கழுத்து வலிக்குரிய நிவாரணம்

 

இன்றைய திகதியில் இருசக்கர வாகனங்களில் நாளாந்தம் பயணிக்கும் ஆண் பெண் என இருபாலாருக்கும் கழுத்து வலி, தோள்பட்டை வலி, கை விரல்கள் மற்றும் மணிக்கட்டு வலி, சுண்டுவிரலும் அதன் அடுத்த விரலுட்ன் சிறிது தூரம் வரையிலான வலி என பலவகையான வலிகள் உண்டாகின்றன. இதில் கழுத்து வலி வந்தால் மிகவும் சிரமப்படுகிறோம்.

news_image_health_48.jpg

கழுத்து வலி தைரொய்ட் பிரச்சினையால் வரலாம். பின்பக்க கழுத்து எலும்பு தேய்மானமடைவதால் வரலாம். கழுத்துப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்படும் விபத்தால் வரலாம்.காசநோயின் தாக்கத்தால் வரலாம். இப்படி பல காரணங்களால் கழுத்து வலி வரலாம். 

கழுத்து வலி வந்தால் ஐஸ் அண்ட் ஹீட் தெரபி எனப்படும் வெந்நீர் ஒத்தடம் மற்றும் ஐஸ்க்யூப் ஒத்தடம் கொடுக்கலாம். பிஸியோதெரபி எனப்படும் இயன்முறை மருத்துவ பயிற்சி அளிக்கலாம். வலி நிவாரணிகளையும், வலி தணிப்பிற்கான ஊசிகளையும் பயன்படுத்தலாம். தசைகளை தளர்வுறச் செய்யும் பயிற்சியை அளிக்கலாம். கழுத்து பட்டை அணிந்து வலியை எதிர்கொள்ளலாம். ட்ராக்ஷன் சிகிச்சையை செய்து கொள்ளலாம். இப்படி பல சிகிச்சைகளை மேற்கொண்டு கழுத்து வலிக்கான நிவாரணங்களை முழுமையாகப் பெறலாம். 

அத்துடன் இத்தகைய சிகிச்சைகளின் போது நோயாளிக்கு பூரண ஓய்வு தேவை. 

வைத்தியர். கீதா

தொகுப்பு அனுஷா.

 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24163

Link to comment
Share on other sites

50 வயது ஆண்களில் பத்தில் ஒருவரின் 'இதயம் 10 வயது கூடுதலாக இருக்கும்'

 
50 வயது ஆண்களில் பத்தில் ஒருவரின் 'இதயத்தின் வயது 10 வயது கூடுதலாக இருக்கும்'படத்தின் காப்புரிமைGETTY IMAGES

செப்டம்பர் மாதத்தில் மட்டும் இங்கிலாந்தில் மாரடைப்பு அல்லது பக்கவாதத்தால் 7,400 பேர் இறக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

50 வயதை எட்டிய ஆண்களில் பத்தில் ஒரு ஆணின் இதயத்தின் வயது, அவரின் உண்மையான வயதை விட பத்து வருடங்கள் கூடுதலாக இருக்கும். எனவே அவர்களுக்கு மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படும் ஆபத்து அதிகம் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.

1.2 மில்லியன் எண்ணிக்கையிலான மக்களிடம், 'பப்ளிக் ஹெல்த் இங்கிலாந்து' மேற்கொண்ட ஆய்வில், அவர்களுக்கு இதய ஆய்வு பரிசோதனைகள் செய்யப்பட்டது. அதில் 33,000 பேர் 50 வயதானவர்கள்.

இதய நோய்கள் ஆண்களின் மரணத்திற்கு முக்கிய முதல் காரணமாக இருந்தால், பெண்களின் மரணத்திற்கு இரண்டாவது முக்கிய காரணமாக இருக்கிறது.

இந்த இறப்புகளில் பெரும்பான்மையானவற்றை தவிர்க்கமுடியும், அதில் நான்கில் ஒரு பங்கினர் 75 வயதுக்கும் குறைவானவர்கள்.

"நமக்கு வயதாகும் வரை இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற ஆபத்துகளை கண்டுகொள்ளாமல் இருக்கக்கூடாது," என்று பி.எச்.இ-இன் இதய நோய்கள் பிரிவின் ஜமி வாட்டரால் கூறுகிறார்.

http://www.bbc.com/tamil/global-41151262

Link to comment
Share on other sites

புற்று நோயை பத்தே நிமிடங்களில் குணப்படுத்தும் பேனா

பத்தே நிமிடங்களில் புற்று நோய் திசுக்களை கண்டறியும் கையடக்க கருவி ஒன்றை டெக்ஸாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்துள்ளனர்.

Local_News.jpg

இக் கருவியானது மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் மட்டுமல்லாது துல்லியமாகவும் புற்றுநோய் கட்டிகளை கண்டறிய உதவுவதோடு அறுவை சிகிச்சைகளுக்கும் உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் புற்று நோய் சிகிச்சைக்கு பின்னரோ அல்லது அறுவை சிகிச்சைக்கு பின்னரோ புற்றுநோய் திசுக்கள் உடலை விட்டு வெளியேறாமல் இருந்து விடும் என்ற அச்சம் இனி இல்லை என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

புற்றுநோய் அணுக்களின் தனிப்பட்ட வளர்சிதை மாற்றத்தை இந்த “மாஸ்பெக் பேனா” சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறது.

அறுவை சிகிச்சையின் போது புற்றுநோய் அணுக்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் இப் பேனாவால் ஒரு துளி நீர் உட் செலுத்தப்படும் போது உயிரோடு இருக்கும் புற்றுநோய் செல்களில் உள்ள இரசாயனம் இந்த நீர்த்துளியில் நுழையும் வேளையில் அந்த இரசாயனம் கலந்த நீர்த்துளி ஆய்வுக்காக பேனாவால் உறிஞ்சப்படும்.  

ஓவ்வொரு நொடிக்கும் பல்லாயிரக்கணக்கான இரசாயனங்களை அளவிடக்கூடிய ஸ்பெக்ட்ரோ மீட்டர் என்றழைக்கப்படும் நிறமாலைமானியுடன் பேனா பொறுத்தப்படும்.

பின்னர் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு கிடைக்கப்பெறும் இரசாயன ரேகைகள் ஆரோக்கியமான திசுக்களா அல்லது புற்று நோய் தொற்றுள்ள திசுக்களா என வைத்தியருக்கு தெரியப்படுத்தும் என்கின்றனர்.

http://www.virakesari.lk/article/24277

 

Link to comment
Share on other sites

முதலுதவியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

 

 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இரண்டாவது சனிக்கிழமை, உலக முதலுதவி தினமாக பின்பற்றப்படுகிறது. 

health_news_image_9_9_17.jpg

இன்றைய திகதியிலும் எம்மவர்கள் பலரும் விபத்தில் அடிப்பட்டு, மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைப் பெறுவதற்குள் அவர்களுக்கான கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் பாதுகாப்பான நேரம் என்பது கடந்துவிடுகிறது. ஆனால் அடிப்பட்டவுடன் அவருக்குரிய முதலுதவி வழங்கப்பட்டிருப்பின் இவர்களின் பெரும்பாலானவர்கள் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். அதனால் இன்றிலிருந்தாவது முதுலுதவியைப் பற்றி தெரிந்து கொண்டு, ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற முன் வருவோம்.

ஆபத்தான நிலையில் இருப்பவர்களுக்கு முறையான மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரையிலான இடைப்பட்ட நேரத்தில் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைத்தான் முதலுதவி சிகிச்சை.

ஆபத்தான் நிலையில் இருப்பவர்களுக்கு என்ன கொடுக்கவேண்டும் அல்லது என்ன செய்யவேண்டும் என்பது குறித்து சமயோசிதமாக யோசித்து செயல்படவேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருத்துவர்கள் சிகிச்சையளிக்கும் வரை அவர்களுடன் இருந்து அளிக்கப்பட்ட முதலுதவி குறித்த அனைத்து விவரங்களையும் மருத்துவர்களுடனோ அல்லது மருத்துவத்துறை ஊழியர்களிடமோ பகிர்ந்துகொள்ளவேண்டும்.

அத்துடன் தவறாமல் எம்முடைய வீடுகளில் முதலுதவிப் பெட்டி என்ற ஒன்றை இடம்பெறவைக்கவேண்டும். அதில் காயம் பட்ட இடத்தை சுத்தப்படுத்துவதற்கான துணி, பேண்டேஜ் துணி, நோய் கிருமிகளை அழிப்பதற்கான மருந்து அல்லது களிம்பு (ஓயின்மெண்ட்), டேப் ரோல்கள், நல்ல நிலையில் இருக்கக்கூடிய கத்திரிக்கோல், தீக்காயங்களுக்கான களிம்பு, இதய பாதிப்பு போன்றவற்றிற்கான நிவாரணமளிக்கும் மாத்திரைகள், சிறிய குறிப்பு புத்தகம் மற்றும் பேனா ஆகியவை இடம்பெற்றிருக்கவேண்டும். அத்துடன் அந்த குறிப்பு புத்தகத்தில் அருகாமையுள்ள மருத்துவமனையின் தொலைபேசி எண், அவசர சிகிச்சைக்குரிய எண் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கவேண்டும்.

முதலுதவி அளிப்பவர்கள் எக்காரணம் கொண்டு பதட்டமடையாமல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையான முறையில் பேசிக் கொண்டிருக்கவேண்டும். இதனால் அவர்கள் முதலில் தங்களின் மன அழுத்தம் மற்றும் பதற்றத்திலிருந்து விடுவித்து கொள்வார்கள். சிகிச்சையை எதிர்கொள்வதற்கான மன துணிவைப் பெறுவார்கள். இதுவும் அவர்களை காப்பாற்றுவதற்குரிய முதலுதவி சிகிச்சையே.

டொக்டர் பிரேம் ஆனந்த்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24264

Link to comment
Share on other sites

உணவில் கேடு செய்யும் நுண்ணுயிரிகள் உருவாகாமல் தடுக்க 5 யோசனைகள்!

 

ண்ணும் உணவுகள் சுவையானதா எனப்பார்க்கும் நாம் பாதுகாப்பானதா எனப் பார்ப்பதில்லை. உணவில் நம் கண்ணுக்குத் தெரியாதவை பல உண்டு. உதாரணமாக நுண்ணுயிர்கள். இந்த நுண்ணுயிர்கள்  மிகவும் சிறியவை. நம் உணவில் இருக்கும் நுண்ணுயிர்களை மூன்றாக வகைபடுத்தலாம்.

* நல்ல நுண்ணுயிர்கள்: நல்ல நுண்ணுயிர்கள், உணவைத் தயாரிக்க பெரிதும் உதவுபவை. பால் தயிராகவும், மாவு நொதிக்கவும் காரணமாக இருப்பவை இந்த நுண்ணுயிர்கள்தான்.

* துர்நாற்றம் வீசுபவை: சில நுண்ணுயிர்கள் உணவுகளில் துர்நாற்றம் வீசச்செய்யும். சுவையைக் கெடுக்கும். உணவுக்கு அழுகிப்போன தோற்றத்தை கொடுக்கும். இந்த நுண்ணுயிர்கள் சில நேரங்களில் நோயை உண்டாக்குபவை.

* கெட்ட நுண்ணுயிர்கள்: மிகவும் விபரீதமானவை இந்த நுண்ணுயிர்கள்தான். இவை உணவின் தோற்றதிலோ, நாற்றதிலோ மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை. அதனால், இவற்றை எளிதில் கண்டறிய முடியாது. வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட பல பிரச்னைகளுக்கு இந்த நுண்ணுயிர்கள்தான் காரணம். இந்த வகை நுண்ணுயிர்கள் பல மடங்கு வேகத்தில் வளரும்.

நுண்ணுயிர்கள்

எப்படித் தடுக்கலாம்!

கெட்ட நுண்ணுயிர்களிடமிருந்து தப்பிக்க ஐந்து வழிகள் உண்டு. அவற்றைப் பார்க்கலாம். 

* சுத்தமாக இருங்கள்- உணவு உண்ணும் முன்னர் கைகளை நன்கு சுத்தமாக கழுவுங்கள். பழங்களை கழுவிய பின்னரே உண்ணுங்கள்.

* சமைத்த மற்றும் சமைக்காத உணவுகளைப் பிரித்து வையுங்கள். இது சமைக்காத உணவிலுள்ள நுண்ணுயிர்கள் சமைத்த உணவுக்குப் பரவாமல் தடுக்கும்.

* உணவுப்பொருட்களை அவற்றிலுள்ள நுண்ணுயிர்கள் இறக்கும் அளவிற்கு வேகவைக்க வேண்டும்.

* உணவுப்பொருட்களை பாதுகாப்பான வெப்பநிலையில் வைக்க வேண்டும். பாதுகாப்பான வெப்பநிலை என்பது அதிக சூடாக அல்லது குளிரான நிலையில் இருக்கலாம். 

* சுத்தமான தண்ணீரை சமைக்க பயன்படுத்தவும். அசைவம் வாங்கும்போது புதியனவற்றை வாங்குங்கள். வாங்கியவுடன் சமைத்துவிடுங்கள். 

 

பாதுகாப்பான உணவுகளை உண்டால் நமக்கு வரும் பாதி நோய்கள் காணமல் போகும். 

http://www.vikatan.com/news/health/100465-how-to-prepare-a-good-food.html

Link to comment
Share on other sites

வளர்சிதைமாற்ற நோயா ( Metabolic Syndrome)ல் பாதிக்கப்படும் ஆண்கள்

 

 

இன்றைய திகதியில் அலுவலகத்தில் பணியாற்றும் பெரும்பாலான ஆண்கள் தங்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக் கொண்டதால், அவர்களின் இயல்பான வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் ஏற்பட்டு அது நோயாக உருவெடுத்து, இதய நோய், பக்கவாதம் ஆகிய ஆபத்துகளை உருவாக்குகிறது.

news_image_health_28_8_17.jpg

Metabolic Syndrome எனப்படும் இத்தகைய பாதிப்பிற்கு பெண்களைக் காட்டிலும் ஆண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் இதன் காரணத்தினால் டைப் 2 சர்க்கரைநோய், உயர் குருதி அழுத்த நோய், உடற்பருமன் போன்ற பல்வேறு பாதிப்பிற்கும் ஆளாகிறார்கள்.

ஒவ்வொரு ஆணின் இடுப்பளவும் 90 சென்டி மீற்றருக்கு மிகாமலும், பெண்களின் இடுப்பளவு 80 சென்டி மீற்றருக்கு மிகாமலும் இருக்கவேண்டும். இவற்றுடன் இரத்த சர்க்கரையின் அளவு, கொழுப்பின் அளவு, இரத்த அழுத்த அளவு ஆகியவற்றையும் கண்காணிப்பில் வைத்திருக்கவேண்டும். இதனை அலட்சியப்படுத்தினால் அடிவயிற்றில் அதிகப்படியான கொழுப்பு சேர்ந்துவிடும். மேலும் உடல் எடை அதிகரித்து, உடற் பருமன் பிரச்சனை தோன்றி, சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்த வியாதி ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்பு 6 மடங்கு அதிகரிக்கும். அத்துடன் இதய  பாதிப்பு, பக்கவாதம், இன்சுலீன் சுரப்பியில் சமசீரற்றத்தன்மை, கல்லீரல் பாதிப்பு, கருப்பை பாதிப்பு என பலவகையான பாதிப்புகள் ஏற்படும்.

இதனை முற்றாகத்தடுக்கவேண்டும் என்றால் தினமும் 30 நிமிடத்திலிருந்து 60 நிமிடம் வரை உடற்பயிற்சியை செய்யவேண்டும். சரியான நேரத்திற்கு சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். இதில் பழங்கள், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். உடல் எடையை சீராக பராமரிக்கவேண்டும். சிகரெட் பிடிப்பதை முற்றாக தவிர்க்கவேண்டும். 40 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் சர்க்கரையின் அளவையும், கொலஸ்ட்ராலின் அளவையும் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.

வைத்தியர் சுப்ரமணியம்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/23764

Link to comment
Share on other sites

பார்வைத்திறன் பாதுகாப்பிற்கான புதிய விதிமுறை

இன்றைய திகதியில் பாடசாலை செல்லும் மாணவர்கள் முதல் வீட்டில் ஓய்வாக இருக்கும் முதியவர்கள் வரை கைகளில் கைபேசி, மடிக்கணினி, கணினி என டிஜிற்றல் இலத்திரனியல் சாதனங்களை பார்த்துக் கொண்டு தான் பொழுதுபோக்குகிறார்கள் அல்லது வருவாய் ஈட்டுகிறார்கள். இதனால் இவர்களின் கண்களும், பார்வைத்திறனும் பாதிக்கப்படுகிறது.

news_image_health_13_9.jpg

வறண்ட கண்கள், கண்களில் நீர் கசிவது, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உங்களுடைய கண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து உடனடியாக கண் மருத்துவர்களை சந்தித்து பார்வைத்திறனைப் பற்றிய முழுமையான சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளவும். பலரும் இதனை அலட்சியப்படுத்துவதால் சிலருக்கு சில நேரங்களில் பார்வைத்திறன் பாதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சை மேற்கொண்டபின்னரும் முழுமையான நிவாரணம் கிடைக்காமல் தவிக்கின்றனர்.

இதனை தடுக்கவேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்களின் கண்களுக்கான ஆரோக்கிய விதிமுறைகளை பின்பற்றவேண்டும்.

ஒரு நாளைக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் அல்லது 8 கோப்பை அளவிற்கு தண்ணீர் அருந்தவேண்டும். விற்றமின் ஏ சத்துள்ள ப்ரெஷ் பழங்களை சாப்பிடவேண்டும். பழங்களை சாறாக அருந்துவதை விட அப்படியே சாப்பிடுவது தான் நன்மை பயக்கும் என்பதையும் மறந்துவிட வேண்டாம். அலைபேசி, மடிக்கணினி, கணினி போன்றவற்றில் உள்ள டிஜிற்றல் திரையை தொடர்ச்சியாக நீண்ட நேரம் பார்வையிடாதீர்கள். ஒவ்வொரு 20 நிமிடத்திற்கு ஒரு முறை கண்களை அதிலிருந்து அகற்றி, இருபதடி தூரமுள்ள இடத்தில் உள்ள பொருள்கள் மீது 20 விநாடி வரை பார்வையைச் செலுத்துங்கள். இது ஒரு பயிற்சி மற்றும் பார்வைதிறன் பாதிக்கப்படாமல் இருப்பதற்கான புதிய விதிமுறை. அதே போல் கொம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் பணியாற்றவேண்டிய கட்டாயம் இருந்தால் மறவாமல் அதற்குரிய கண்ணாடியை அணிந்து வேலை செய்யவேண்டும். இதனை பின்பற்றினால் உங்களின் கண்களின் ஆரோக்கியமும், பார்வைத்திறனும் பாதிக்கப்படுவது தடுக்கப்படும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24448

Link to comment
Share on other sites

நெஞ்செரிச்சல்... காரணங்கள், விளைவுகள், தீர்வுகள்! #HealthAlert

 
 

யிற்றில் சுரக்கும் அமிலமானது உணவுக்குழாயில் திரும்ப மேல் நோக்கி வருவதால் ஏற்படக்கூடியதுதான் நெஞ்செரிச்சல். இது, சில உடல் உபாதைகளுக்கான ஓர் அறிகுறி. எனவே, நெஞ்செரிச்சலை நிராகரிக்காமல், உடனுக்குடன் தீர்வு காண்பது நல்லது. இல்லையென்றால், அதுவே ஒரு நோயாகக்கூட மாறலாம். அதனால் ஏற்படும் சில பிரச்னைகள் குறித்தும், அதற்கான  காரணங்கள், விளைவுகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து இதயநோய் சிறப்பு மருத்துவர் டாக்டர் குகன்நாத் விரிவாகச் சொல்கிறார் இங்கே...  
 

நெஞ்செரிச்சல்

ஏன் ஏற்படுகிறது?

நாம் உண்ணும் உணவு, உணவுக்குழாய் (Esophagus) வழியாக வயிற்றுப்பகுதியைச் சென்றடையும். உணவுக்குழாயின் மேல்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் (இரைப்பைக்கு மேல்) திறந்து, மூடும் வடிவிலான தசைகள் இருக்கும். மேலே உள்ள தசை, நாம் சாப்பிடும்போது உணவு மூச்சுக்குழாய்க்குள் போய்விடாமல் இருக்க உதவக்கூடியது. அதேபோல் கீழே உள்ள தசை, இரைப்பைக்குச் சென்ற உணவு அதன் அமிலத்தன்மை காரணமாக மேல்நோக்கிச் சென்றுவிடாமல் இருக்க உதவும்.

டாக்டர்.குகன்நாத்ஆனால், செரிமானத்தின்போது வெளியாகும் அமிலமானது, உணவுக் குறைபாடு காரணமாகவோ, இரைப்பை அழற்சி காரணமாகவோ இரைப்பையின் அருகில் இருக்கும் மூடிகளின் கட்டுப்பாட்டை மீறி மீண்டும் மேல்நோக்கி உணவுக் குழாயில் பயணிக்கத் தொடங்கும். இந்த நிகழ்வின்போது உணவுக்குழாயின் இருபக்கங்களிலும் அமிலம் தேங்கிவிடும். இதன் காரணமாகத்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
காரணங்கள்...
உடல் பருமன், புகைபிடித்தல். மது அருந்துதல், நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல், அதிக உணவு உட்கொள்ளுதல், மருத்துவரின் பரிந்துரையின்றி எடுத்துக்கொள்ளும் மருந்துகள் (உதாரணமாக ஆஸ்பிரின், வலி நிவாரணிகள்) போன்றவை நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கான முக்கியக் காரணங்கள். சிலருக்கு, இரவுத் தூக்கத்தின்போது நெஞ்செரிச்சல் ஏற்படும். உணவு உண்டவுடன் செரிமானத்துக்கு நேரம் தராமல் உறங்குவதால், வயிற்றில் உருவாகும் அமிலம் உணவுக்குழாயை நோக்கி நகர்ந்து பிரச்னையை ஏற்படுத்தும். 


ஆபத்துகள்

`Gerd’ எனப்படும் செரிமானக் கோளாறுகளுக்கு, நெஞ்செரிச்சல் மிகமுக்கியமான அறிகுறி. இதில் Gerd 1,2,3 என மூன்று வகைகள் உள்ளன. முதல் இரண்டு வகைகளையும் மருந்து மற்றும் வாழ்வியல் மாற்றங்கள் மூலம் சரிசெய்துவிடலாம். மூன்றாவது வகை, ஆபத்தானது. இரைப்பைக்கு மேலிருக்கும் சுருங்குத் தசைகள் முற்றிலுமாக அழிந்துவிடுவதையே இதுகுறிக்கும். நெஞ்செரிச்சலைத் தொடர்ந்து உதாசீனப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு இது. இதற்கு லேப்ரோஸ்கோப்பிக் அறுவைசிகிச்சை செய்யவேண்டியது அவசியம்.

அக்கறை எடுத்துக்கொள்ளாமல் விடப்படும் நெஞ்செரிச்சல்கள், அதன் தொடர்ச்சியாக பித்தப்பைக் கட்டி, அல்சர், குடலிறக்கம், இரைப்பை வாதம், சுருக்கத் தசைகள் அழிவு போன்ற பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கும். மேலே குறிப்பிட்டுள்ள காரணங்களை கவனத்தில் கொண்டு அவற்றைத் தவிர்க்கவில்லையென்றால், பேரட்’ஸ்  ஈஸோஃபேகஸ் (Barrett's esophagus) என்ற பாதிப்பு ஏற்படும். இந்தப் பாதிப்பு வந்தவர்கள், ஆண்டுக்கு ஒருமுறை எண்டோஸ்கோப்பி செய்து, புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை அறிய வேண்டும். கவனிக்காமல்விடும் பட்சத்தில், இது புற்றுநோய் பாதிப்பாக மாறும்.

இரைப்பை


சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், கொழுப்பு, முதுமை போன்றவற்றால் இதய பாதிப்பு காரணமாக ஏற்படும் நெஞ்சுவலியை சிலர் நெஞ்செரிச்சல் என்று தவறாக எண்ணிக்கொள்வதுண்டு. இதுபோன்ற பாதிப்புகள் உள்ளவர்கள், அவ்வப்போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக்கொள்வது நல்லது. 10 நாள்களுக்கும் மேலாக நெஞ்செரிச்சல் தொந்தரவு இருக்குமேயானால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
 

எப்படிக் கண்டறிவது?

உணவு உண்ணும்போது, உணவை விழுங்குவதற்குச் சிரமப்படுவது, குரல்வளம் மற்றும் தொண்டையில் வாரக்கணக்கில் சிக்கல் நீடிப்பது, (ஒரு வாரத்துக்கும் மேல் கரகரப்பான குரலில் பேசுவது, அதிகம் தண்ணீர் தாகம் எடுப்பது முதலியவை) இரவு தூங்கும்போது மூச்சுவிட முடியாமல் திணறிக்கொண்டு இருமுவது போன்றவை இதன் அறிகுறிகள்.
குண்டாக இருப்பவர்கள், அதிகம் சாப்பிடுபவர்கள், இறுக்கமான ஆடை அணிபவர்கள் மற்றும் புகை சூழ்ந்த பகுதியில் இருப்பவர்களுக்கு ஒரு வாரத்தில் இரண்டு முறைக்கும் மேல் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக, இரவு நேரத்தில் நெஞ்செரிச்சல் ஏற்பட்டால், மரபுரீதியாக ஏற்படும் பிரச்னைகளில் இதுவும் ஒன்று என்பதைக் கருத்தில்கொள்ள வேண்டும். ஆகவே, குடும்பத்தில் யாருக்கேனும் உணவுக்குழாய் சிக்கல்களோ, உணவுக்குழாயில் புற்றுநோயோ இருந்தால் மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.


எப்படித் தவிர்ப்பது?

சாப்பிட்டவுடன் உறங்குவதைத் தவிர்க்கவும். இரவுநேரத்தில், உணவுக்கும் உறக்கத்துக்கும் மூன்று மணிநேர இடைவெளி விட வேண்டும். அதிகமாக சாப்பிடக் கூடாது. நொறுக்குத்தீனிகளை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். பாதி வயிறு உணவும், மீதித் தண்ணீருமாக இருக்க வேண்டும். மது அருந்துதல் மற்றும் புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், அதைவிட்டு முழுமையாக வெளிவர வேண்டும்.  குறிப்பாக இரவில் குறைவாக உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்


சாக்லேட் அதிகம் சாப்பிடாமலிருப்பது, டீ -காபி அதிகம் அருந்தாமல் இருப்பது, ஃப்ரைடு உணவுகள், காரம் மற்றும் மசாலா வகை உணவுகளை தவிர்ப்பது, அமிலம் இருக்கும் உணவை (சிட்ரஸ், கால்சியம்) உட்கொள்ளாமலிருப்பது நல்லது. கூடியவரை இரவு நேரத்தில், இவற்றை அறவே தவிர்த்தல் நல்லது. வேறு சில மருத்துவச் சிகிச்சைகள் எடுப்பவர்கள், இந்த நெஞ்செரிச்சல் பிரச்னையை மருத்துவர்களிடம் கூறி அதற்கேற்ப மருந்துகளை உட்கொள்வது நல்லது.


சிகிச்சை

 

அமிலத்தன்மையைக் குறைக்கும் உணவை உட்கொள்ள வேண்டும். நெஞ்சில் எரிச்சல் ஏற்பட்டவுடன் சிலர் ஜெலுசில் (Gelusil), ரானிடிடின் (Ranitidine) போன்ற மாத்திரைகளை உட்கொள்வார்கள். இது தவறில்லை என்றாலும், பத்து நாள்களுக்கும் மேல் தொடர்ச்சியாக ஜெலுசில் எடுத்துக்கொள்வது நல்லதல்ல. நிறைய தண்ணீர் குடித்துவர வேண்டும். சரியான அளவு தூக்கம் அவசியம்.

http://www.vikatan.com/news/health/102350-heartburn---reasons-and-solutions.html

Link to comment
Share on other sites

டயாபடீக் நியுரோபதிக்கான சிகிச்சை

 

 

வீடு அல்லது அலுவலகம் எதுவாகயிருந்தாலும் இன்றைய உலகம் இணைய உலகமாக மாறிவிட்டது. மக்களும் தங்களின் கண்களின் பயன்பாட்டை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன் கண்களுக்கான தற்காப்பையோ அல்லது பாதுகாப்பையோ குறித்து அதிகம் அக்கறைக் கொள்வதில்லை. விளைவு முதுமையைத் தொடும் முன்னரே பார்வைத்திறன் குறைபாடால் பாதிக்கப்படுகிறார்கள். அதிலும் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தாமல் இருப்பவர்களில் 90 சதவீதத்தினருக்கு மேல் பார்வை திறன் பாதிப்பை சந்திக்கிறார்கள்.

news_image_health_16_9_17.jpg

சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ளாவிட்டால் நரம்பு மண்டலம், இரத்த குழாய், இதயம் என ஒவ்வொரு உறுப்பாக பாதிப்படையத் தொடங்குகிறது.  நரம்பு மண்டலம் பாதிக்கப்படுவதைத்தான் டயாபடீக் நியுரோபதி என்கிறோம்.

உலகில் உள்ள எந்த பிம்பத்தைக் காணவேண்டும் என்றாலும் அதற்கு விழித்திரை அவசியம். இந்நிலையில் சர்க்கரையின் அளவை கட்டுக்கள் வைத்திருக்காவிட்டால், விழித்திரைக்கு செல்லும் நுட்பமான இரத்தக்குழாய்கள் பாதிக்கப்பட்டு, இரத்த கசிவு ஏற்படும். அத்துடன் புதிதாக நுண்ணிய இரத்த குழாய்கள் வளரத் தொடங்கும். இதன் காரணமாக பார்வைத்திறன் குறைய ஆரம்பிக்கும். இதனை கவனிக்காவிடில் ரெட்டினா முழுவதும் மறைக்கப்பட்டு பார்வை பறிபோகும் நிலையும் உருவாகும். 

அதனால் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பவர்களும், வைக்க தடுமாறுகிறவர்களும் அவசியம் பார்வையில் ஏதேனும் சிறு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட உடனடியாக indirect ophthalmoscopy என்ற பரிசோதனையை செய்து கண் ரத்த அளவை உறுதிசெய்து கொள்ளவேண்டும். இத்தகைய பாதிப்பில் தற்போது ஒன்பதிற்கும் மேற்பட்ட நிலைகள் கண்டறியப்பட்டிருக்கிறது. இதில் நீங்கள் எந்த நிலையில் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ற சிகிச்சையை செய்து கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு சத்திர சிகிச்சை கூட அவசியப்படலாம். ஆனால் சத்திர சிகிச்சைக்கு பின்னரும் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருந்தால் மட்டும் பார்வையை மேலும் பறிபோகாமல் பார்த்துக் கொள்ளமுடியும்.

டொக்டர் அமர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24551

Link to comment
Share on other sites

நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும்

முறைகளும்

நம் உயிர் மூச்சின் சுவாசத்துக்கு காரணமான நுரையீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

 
 
 
 
நுரையீரல் பாதிப்புகளும், தடுக்கும் முறைகளும்
 
உயிர் மூச்சு, மூச்சுக்கு முன்னூறு தரம், மூச்சு முட்ட, மூச்சு பேச்சு என்பன மூச்சைப்பற்றி நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நம் உயிர் மூச்சின் சுவாசத்துக்கு காரணமான நுரையீரல் பாதிப்புகளில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நுரையீரல், நம் உடலின் முக்கிய உள் உறுப்பு. காற்றில் உள்ள பிராணவாயுவை ரத்தத்தில் சேர்ப்பதும், கரியமில வாயுவை பிரித்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணி. மூக்கின் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று, மூச்சுக்குழல் வழியாக நுரையீரலுக்கு செல்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நுரையீரலைப்பற்றி நாம் தெரிந்து கொள்ளாதவை நிறைய உண்டு. இதுகுறித்து மருத்துவ பணிகள் துணை இயக்குனர் (நெஞ்சகநோய்) எம்.ராமச்சந்திரன் கூறியதாவது:-

மூச்சுக்குழாய், மார்பு பகுதியில் 2-ஆக பிரிந்து நுரையீரலுக்கு செல்கிறது. வலது நுரையீரல் 3 பாகமாகவும், இடது நுரையீரல் 2 பிரிவாகவும் உள்ளது. 2-ஆக பிரியும் மூச்சுக்குழாய்கள் பல நுண்கிளைகளாக பிரிந்து மில்லியன் கணக்கான நுண்காற்று பைகளாக அமைந்துள்ளன. அவை மென்மையான தசைகளை கொண்டவை.

இதில் பல நுண்ணிய ரத்தக்குழாய்கள் இருப்பதால், நுரையீரல் தமனி மூலமாக வந்த ரத்தத்தில் உள்ள கரியமில வாயுவை வெளியேற்றி, புதிய பிராண வாயுவை ஏற்றுக்கொண்டு சிறைகள் மூலமாக இதயத்துக்கு செல்கிறது.

இந்த நுண்ணிய பைகளில் தான் காற்று பரிமாற்றம் நிகழ்கிறது. சில நேரங்களில் நுண் பைகள் பாதிக்கப்படும்போது, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையும் பாதிக்கப்படுகிறது. மூக்கின் உள்ளே இருக்கும் ரோமங்கள் தூசிகளை வடிகட்டும். அதையும் தாண்டி தூசி மூச்சுக்குழலுக்குள் சென்றால் இருமல், தும்மல் ஏற்பட்டு தூசி வெளியேற்றப்படுகிறது.

நுரையீரலை சுற்றி வெளி படலம், உள்படலம் என 2 உறைகள் உள்ளன. இவற்றுக்கு இடையே ஒரு இடம் உண்டு. அதற்குள் இருக்கும் ‘ஃப்ளூரல்‘ திரவம், சுவாசத்தின்போது நுரையீரல்களின் அசைவினால் ஏற்படும் உராய்வை தடுக்கிறது.

மூளையில் உள்ள முகுளப்பகுதி தான் சுவாசத்தை நிமிடத்துக்கு 18 முதல் 20 வரை என சீராக வைக்கிறது. நாம், ஒரு நாளைக்கு சராசரியாக மூச்சுக்காற்றை 22 ஆயிரம் முறை உள்ளே இழுத்து விடுகிறோம். அவ்வாறு உள்ளே இழுத்து வெளியேவிடும் காற்றின் அளவு, சராசரியாக 9 ஆயிரம் கன அடி ஆகும்.

நுரையீரலில் 6 லிட்டர் காற்றை நிரப்பலாம். மூச்சுக் காற்றை இழுத்து விடும்போது 5 லிட்டர் காற்று வெளியேறும். ஒரு லிட்டர் காற்று நுரையீரலுக்கு உள்ளேயே இருக்கும்.

201709180820355246_1_lungcaretips._L_sty

மனிதனின் மிக முக்கியமான உள்உறுப்பான நுரையீரலுக்கு, புகையிலை, முக்கிய எதிரி. புகை பிடிக்கும்போது 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நச்சுப்பொருட்கள் நுரையீரலுக்குள் செல்கிறது என ஆய்வறிக்கை கூறுகிறது. அதுமட்டுமின்றி அடுப்பின் புகை, காற்றின் மாசு ஆகியவை ஆஸ்துமா மற்றும் சுவாசக்குழாய் பிரச்சினைகளுக்கு காரணமாக அமைகிறது. வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளின் உண்ணி, அறையில் வாசம் வீச தெளிக்கும் வாசனை திரவியம், மெழுகுவர்த்தி புகை போன்றவையும் தீங்கு விளைவிக்கிறது.

ஒரு வாரத்துக்கு மேல் இருமல் இருந்தாலும், சுவாசிப்பதில் பிரச்சினை இருத்தல், உடற்பயிற்சி செய்யாதபோதும், மூச்சுவிட சிரமமாக இருத்தல் போன்றவை நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகளாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகளை உண்பது நல்லது. காய்கறிகள், வைட்டமின்-சி நிறைந்த ஸ்ட்ராபெரி, கிவி, ஆரஞ்சு, பப்பாளி போன்ற பழங்களை உண்பது சுவாச மண்டலத்தை பாதுகாக்கும். அதேபோல் மீன் உணவு, மீன் எண்ணெயில் உள்ள ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலம், நுரையீரலின் தசைகள் வீக்கமடையும் பிரச்சினைகளில் இருந்து காக்கிறது.

நாள்தோறும் உடற்பயிற்சி செய்வது நுரையீரலின் செயல்திறனை அதிகரிக்கிறது. அதேபோல் மூச்சுக்காற்றை உள்ளே இழுத்துவிடும் சுவாசப்பயிற்சி, நச்சை வெளியேற்றும். சுவாச பாதையை சுத்தப்படுத்தும். உடலுக்கு அதிகமான பிராணவாயு கிடைக்க வழிவகை செய்யும். நுரையீரலின் செயல்திறனை நன்கு வைத்திருக்க உதவும். நுரையீரலை பலப்படுத்தும். குறிப்பாக மன அழுத்தத்தை குறைக்கும்.

“பிராங்கோஸ்கோபி“ எனும் பெயர் கொண்ட கருவி, நுரையீரல் பாதிப்புகளை நீக்கும் அதிநவீன சாதனம். இந்த கருவியின் துணை கொண்டு பாதிப்புகளை கண்டறியலாம். நுரையீரலின் உள்நோய்கள் மற்றும் புற்றுநோயின் தாக்கத்தை தெரிந்து கொள்ளலாம். சளியை பிரித்து எடுக்கலாம். கட்டிகளை கண்டறிய மாதிரி எடுக்கலாம். குரல்நாணின் பிரச்சினைகளை கண்டறிவது உள்பட பல சிகிச்சைகளை அளிக்கலாம்.

பஞ்சாலை, கட்டுமானம், ரசாயனம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் மாசு, தூசு, புகை நிறைந்த இடங்களில் வேலை செய்பவர்கள் பணி நேரத்தில் தகுந்த பாதுகாப்பு சாதனங்களை அணிந்து கொள்ள வேண்டும். நுரையீரல் பாதிக்காத வகையில் நாம் உடல் ஆரோக்கியத்தை பேணுவது நல்லது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

http://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2017/09/18082033/1108499/Lung-damage-and-prevention.vpf

Link to comment
Share on other sites

Hyperemesis Gravidarum என்ற பிரச்சினைக்குரிய சிகிச்சை

 

 

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் கடுமையான வாந்தி, மயக்கம் மற்றும் தலைச்சுற்றலுக்கு ஆளாகும் பாதிப்பிற்குத்தான் Hyperemesis Gravidarum என்று மருத்துவத்துறை பெயரிட்டிருக்கிறது.

news_image_health_12_9_17.jpg

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கருவுற்று 6ம் மாதத்திற்கு பிறகும் பிரசவத்தின் நெருக்கத்திலும் கடுமையான வாந்தியும், மயக்கமும், தலைச்சுற்றலும் இருக்கும். இதனால் உடலில் இயல்பாக இருக்கவேண்டிய நீர்ச்சத்து இல்லாத நிலை ஏற்படும். நீரிழிப்பின் காரணமாக உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான தாது சத்துகள் மற்றும் உப்புச்சத்து அதிகளவில் வெளியேறிவிடும். இதன் காரணமாக கர்ப்பிணிப்பெண்களின் உடல் எடை தொடர்ந்து குறைந்துகொண்டேவரும். இதனால் வயிற்றில் இருக்கும் சிசுவின் வளர்ச்சியைக் கூட பாதிக்கும்.

இத்தகைய பாதிப்பு முன்னர் உலகளவில் ஒரு சதவீதத்தினருக்கு மட்டுமேயிருந்ததாம். ஆனால் தற்போது இந்த சதவீதம் அதிகரித்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

அதனால் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ளவேண்டும். அலட்சியப்படுத்தினால் குறை பிரசவம் ஏற்பட வாய்ப்பு அதிகம். அத்துடன் இரத்த உறைதலில் பிரச்சனை, மன நிலை மாற்றம் ஆகியவையும் ஏற்படும்.

இதற்கான நிவாரணமாக மருத்துவர்கள் பரிந்துரைப்பது என்னவெனில், கர்ப்பிணிப் பெண்கள் தங்களுக்கு பிடித்த உணவை ஒரே சமயத்தில் அதிகளவில் சாப்பிடாமல், பிரித்து பிரித்து சாப்பிட்டால் நல்லது. இஞ்சியை எந்த வடிவிலாவது உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு இதற்கெனவேயிருக்கும் விசேட அக்குபிரசர் சிகிச்சையையும் மேற்கொள்ளலாம். உடலிலுள்ள கரையக்கூடிய விற்றமின்கள் இதன் காரணமாக அதிகளவில் வெளியேறுவதால், தயாமின் அளவு செறிவாக இருக்கும் உணவுப் பொருளை உண்பதை பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும்.

டொக்டர் பத்மா

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24596

Link to comment
Share on other sites

பிளாஸ்ரிக் போத்தல்களை பயன்படுத்துபவரா நீங்கள்...!

எம்முடைய இல்லங்களில் இருக்கும் மாணவர்கள் அல்லது மாணவியர்கள் தங்களது பாடசாலைக்கு செல்லும் போது தங்களுடன் பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீரை எடுத்துச் செல்வது வழக்கம். ஒரு சில குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் அந்த போத்தல்களை மாற்றுவது கிடையாது. 6 மாதம் அல்லது ஒரு வருடம் கூட அதனை எடுத்துச் செல்கிறார்கள்.

news_image_health_18_9_17.jpg

ஆனால் இது போன்று தொடர்ச்சியாக பிளாஸ்ரிக் போத்தல்களை தண்ணீருக்காக பயன்படுத்தும் போது, அவற்றால் காய்ச்சல் ஏற்படுகிறது என்று தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது. அத்துடன் இவ்வகையான பிளாஸ்ரிக் போத்தல்களில் தண்ணீரை தொடர்ச்சியாக எடுத்துச் செல்லும் அதில் பாக்டீரியாக்கள் தங்கிவிடுகின்றன என்றும். இவை தான் உடலுக்கு ஆரோக்கிய சீர்கேட்டை ஏற்படுத்துகிறது என்றும் கண்டறிந்திருக்கிறார்கள். அத்துடன் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு புதிய பிளாஸ்ரிக் போத்தல்களை பயன்படுத்தலாம் என்றும். தொடர்ச்சியாக 3 மாதத்திற்கு மேல் ஒரு போத்தல்களை பயன்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

பிளாஸ்ரிக் போத்தல்களில் குடிநீரை அருந்துவதை தவிர்ப்போம். ஆரோக்கியம் காப்போம்.

டொக்டர் நந்தகுமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24623

Link to comment
Share on other sites

மாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது எப்படி?

மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.

 
மாரடைப்பு ஏற்படாதவாறு காத்துக்கொள்வது எப்படி?
 
உங்களுக்கோ, உங்களைச் சார்ந்தவர்களுக்கோ மாரடைப்பு பாதிப்பு ஏற்பட்டால் அதன் விளைவு பயத்தினையே தருகின்றது. இதிலிருந்து மீண்டு வருங்காலத்தில் இவ்வாறு ஏற்படாதவாறு காத்துக் கொள்வதும் மிக மிக முக்கியம் ஆகின்றது.

ஆக்ஸிஜன் நிறைந்த ரத்தம் இருதயத்திற்கு கிடைப்பது தடைபடும்போது மாரடைப்பு ஏற்படுகின்றது. இதற்கு முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது இருதயத்திற்கு சக்தி தரும் ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புதான். இந்த அடைப்பில் கொழுப்பு, கால்ஷியம் மற்றும் சில பொருட்கள் கலந்து இருக்கலாம்.

பொதுவாக மாரடைப்பு என்றாலே இடது தோள் வலி, நெஞ்சை அழுத்தி பிடிக்கும் உணர்வு, திடீரென பலமின்மை, சில சமயம் நினைவின்மை, மூச்சு வாங்குதல், வியர்த்து கொட்டுதல், வெளிர்ந்த சருமம், வயிற்றுப் பிரட்டல், வாந்தி, வலி, கால், கைகளில் வீக்கம் என பல அறிகுறிகளை காட்டி விடும். இன்று மருத்துவ முன்னேற்றத்தின் காரணமாக நன்கு குணம் காண முடிகின்றது.

இருப்பினும் அந்த பயம் பாதித்தவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருந்து கொண்டே இருக்கின்றது. முறையான மருந்தும், குறிப்பிட்ட காலந்தவறாத மருத்துவ செக்-அப்களும் இருந்தால் இயல்பான வாழ்க்கை என்பது நிச்சயம் சாத்தியமே.

* ஆனால் வருமுன் காப்பது மிக மிக நல்லது அல்லவா. ஆகவே உங்கள் கொலஸ்டிரால் அளவினை நன்கு கண்காணித்துக் கொள்ளுங்கள். நல்ல கொலஸ்டிரால் குறையவும் கூடாது. கெட்ட கொலஸ்டிரால் கூடவும் கூடாது.

* உங்கள் ரத்த அழுத்தத்தினை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். கெட்டகொழுப்பு உயர் ரத்த அழுத்தத்தினையும் ஏற்படுத்தும் என்பதனை கவனத்தில் கொள்ளுங்கள்.

* கண்டிப்பாய் புகை பிடிப்பதனை நிறுத்துங்கள். இது உயர் ரத்த அழுத்தத்தினை ஏற்படுத்தும். ரத்த குழாய் அடைப்புகளை ஏற்படுத்தும்.

* ஊறுகாய், அப்பளம், உப்பு சேர்த்த சாதம் இவை வேண்டாமே. பொதுவில் உப்பின் அளவினைக் குறையுங்கள்.

* நிதானமாய் உடற்பயிற்சியினை ஆரம்பித்து நன்கு முடியும் வரை செய்யுங்கள்.

* மன அழுத்தம் இதயத்தினை வெகுவாய் பாதிக்கும்.

http://www.maalaimalar.com/

 

 

பெண்களின்  சிறுநீர்  தொற்று அறிகுறிகள் என்னென்ன?

பெண்கள் சந்திக்கும் உடல்சார்ந்த பிரச்னைகளில் ஒன்று, யூரினரி இன்ஃபெக்‌ஷன். ஆனால், அதுகுறித்த சரியான தெளிவு பெரும்பாலான பெண்களிடம் இல்லை.

 
 
 
 
பெண்களின் யூரினரி இன்ஃபெக்‌ஷனுக்கான அறிகுறிகள் என்னென்ன?
 
குத்துவலி மற்றும் நீர்க்கடுப்பு: தீங்கு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் உடலில் தங்க ஆரம்பிக்கும்போது, இடுப்புக்குக் கீழே வலி எடுக்கும். தொண்டை எரிச்சல், நீர்க்கடுப்பு போன்றவையும் அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும் இடத்தில் அதிகமாக எரிச்சல் உண்டாகும்.

கட்டுப்படாத வலி: அடிக்கடி சிறுநீர் கழிக்கும் எண்ணம் உண்டாகும். இதனால், மற்ற வேலைகளில் கவனம் சிதறி, மன அழுத்தத்தோடு இருப்பார்கள்.

சொட்டுச் சொட்டாக வெளியேறுதல்: மீண்டும் மீண்டும் சிறுநீர் கழித்தாலும் நிவாரணம் கிடைக்காது. சொட்டுச் சொட்டாக நீர் வெளியேறும். அப்போது, கடுமையான வலியை உணர்வார்கள்.

சிறுநீரின் நிறம் மாறுதல்: மஞ்சள் நிறமாகவோ, கலங்கலாகவோ சிறுநீர் வெளியேறினால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அப்போது வலி அதிகமாக இருக்காது. ஆனால், நிறத்தை வைத்துத் தெரிந்துகொள்ளலாம். சில சமயம், நீர் திட்டுத்திட்டாக வெளியேறும். அப்போது மட்டும் நீர்க்கடுப்பு இருக்கும்.

துர்நாற்றம் வீசுதல்: சிறுநீர் கழிக்கும்போது வெளிப்படும் துர்நாற்றத்தை வைத்தே தொற்றைக் கண்டறிய முடியும். சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், உள்ளேயே தேங்கிக் கிடப்பதால் துர்நாற்றம் உண்டாகலாம். புகைப்பழக்கமுள்ள ஆண்களுக்குச் சிறுநீர் கழிக்கும்போது துர்நாற்றம் வெளிப்படும். அதிகமாக மருந்து, மாத்திரைகளைப் பயன்படுத்துவதாலும் இப்படி நாற்றம் வீசுவது உண்டு. ஆனால், நாற்றத்தோடு வலியும் இருந்தால், உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

சோர்வாக உணர்தல்: பெண்களில் ஒரு குறிப்பிட்ட வயதுடையவர்கள் மற்றும் முதியவர்களுக்கு முதுகுவலியும் மன அழுத்தமும் இருக்கும். மாதவிடாய் சமயத்தில் எப்படிச் சோர்வாக இருப்பார்களோ, அதேபோல உணர்வார்கள்.

இந்த ஆறு அறிகுறிகள், பெண்களுக்கு அடிக்கடி வரக்கூடியவை. இவற்றில் ஏதாவது ஒன்று வருடத்துக்கு மூன்று முறை வந்தாலே மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக்கொள்ள வேண்டும். முதலில் யூரின் டெஸ்ட் எடுப்பார்கள். தேவைப்பட்டால் ஸ்கேன் செய்வார்கள். எந்தக் கிருமியால் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதைக் கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சையை அளிப்பார்கள்.

201709211130213402_1_UrinaryInfection._L

எப்படி விரட்டலாம்?

வெளியூர்ப் பயணம் செய்யும்போது இரவில் சிறுநீர் கழிக்க நேரிடுமே என்று பல பெண்கள் தண்ணீரே குடிக்க மாட்டார்கள். வழியில் கழிவறைகள் இருக்காது; இருந்தாலும் அவை சுகாதாரமாக இருக்காது என்று இப்படிச் செய்வார்கள். கழிவறைகளால் மட்டுமே தொற்று ஏற்படுவதில்லை; தண்ணீர் குடிக்காமல் இருந்தாலும் தொற்று ஏற்படும்.

வெளியூர்ப் பயணங்களின்போது நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை தண்ணீர் அருந்த வேண்டும். அது தீங்கு செய்யும் கிருமிகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.

* நான்கு மணி நேரத்துக்கு மேல் ஒரு நாப்கினைப் பயன்படுத்தக் கூடாது. மாற்றிவிட வேண்டும்.

* காட்டன் உள்ளாடைகளைப் பயன்படுத்துவது நல்லது.

* ஆன்டிசெப்டிக் தயாரிப்புகளை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. சுத்தமாக இருக்க நினைத்து நல்ல பாக்டீரியாக்களை அழித்துவிடக் கூடாது. ஆன்டிசெப்டிக்குக்குப் பதில், இளஞ்சூடான நீராலேயே சுத்தப்படுத்தலாம்.

* கோடைக்காலங்களில் ஜீன்ஸ் போன்ற இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்கவும்.

* செயற்கை பானங்களைத் தவிர்த்து, இயற்கையாகக் கிடைக்கும் மோர், இளநீர் போன்றவற்றை அருந்த வேண்டும்.

* காபி, சோடா, ஆல்கஹால் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். சுயமருத்துவம் கூடாது.

* ஆரம்பத்தில் வலி குறைந்ததும் மாத்திரைகளை நிறுத்திவிடாமல், மருத்துவர் சொன்ன தேதி வரை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.

http://www.maalaimalar.com/Health/WomenMedicine/2017/09/21113016/1109124/Symptoms-of-Womens-Urinary-Infection.vpf

Link to comment
Share on other sites

நாட்பட்ட சிறுநீரக சிக்கலுக்கு அடிகோலும் தூக்கமின்மை

 

அண்மைய ஆய்வின் படி தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள், நாட்பட்ட சிறுநீரக சிக்கலுக்கு ஆளாகிறார்கள் என்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால்  தூக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இது தொடர்பாக அந்த ஆய்வில்,‘ ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் தொடர்ச்சியாக 6 மணி நேரம் வரை இரவில் உறங்கவேண்டும். அதிலும் நீரிழிவு, இரத்த அழுத்தம், உடற் பருமன் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இதில் போதிய அளவு அக்கறை எடுத்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் நாட்பட்ட சிறுநீரக பாதிப்பிற்கு ஆளாக நேரிடும் ’ என்கிறது.

news_image_health_209.jpg

உடலில் சேரும் தேவையற்றவற்றை உடலிலிருந்து வெளியேற்றுவது சிறுநீரகம் தான். இதன் பணியை உடற்பருமன், சர்க்கரை நோயாளிகள், இரத்த அழுத்தம் உள்ளவர்கள் அதிகரித்துக் கொள்கிறார்கள். இதனால் சிறுநீரகத்தின் பணிச்சுமை கூடுவதுடன் விரைவில் அதன் செயல்பாட்டில் தளர்வையும் ஏற்படுத்திவிடுகிறார்கள். இதன் காரணமாக சிறுநீர் பிரிவதில் இயல்பாகவே தடை ஏற்படுகிறது. இதனைத் தொடர்ந்து சிறுநீரகம் தன்னுடைய பணியை இயல்பாக மேற்கொள்ள முடியாமல் தடுமாறத் தொடங்குகிறது.

குமட்டல், வாந்தி, பசியின்மை, தூக்கமின்மை, சோர்வு, பலவீனம். கூர்மையாக சிந்திப்பதில் தடை, நீர்க்கட்டு, தசை பிடிப்பு, தொடர் அரிப்பு, நெஞ்சு வலி, மூச்சு திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சிறுநீரகத்தின் செயல்பாடு குறித்த பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும்.

பின்னர் தினமும் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் அளவிற்கு தண்ணீர் அருந்தவேண்டும். உடற் பயிற்சி, உணவுக் கட்டுபாடு, சத்தான உணவை சாப்பிடுவது போன்றவற்றையும் கடைபிடிக்கவேண்டும். சிகரெட், மது ஆகியவற்றை முற்றாகத் தவிர்க்கவேண்டும். சர்க்கரையின் அளவை பரிசோதித்து அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். சிறுநீரகத்தின் செயல்பாடுகளை அவ்வப்போது அதற்குரிய பரிசோதனைகளின் மூலம் சீராக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும். முக்கியமாக தூக்கமின்மையால் பாதிப்படையாமல் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24737

Link to comment
Share on other sites

பல் போனால் சொல் போகும்... பற்களை பாதுகாப்பது எப்படி? ஏ டூ இசட் தகவல்கள்!

 
 

ரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை  'உடலின் நுழைவாயில்' என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். 'பல்'லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம்.

பல் ஆரோக்கியம்

பற்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி? பற்களில் ஏற்படும் பாதிப்புகளை தடுப்பது எப்படி? பல் மருத்துவர் செந்தில் குமரன் விரிவாக ஆலோசனை தருகிறார். 

பல்லின் அமைப்பு...

"பற்களை மொத்தம் 8 வகையாகப் பிரிக்கலாம். அதிலும், இடப்பக்கம் எட்டும் வலது பக்கம் எட்டும் என மேல் அடுக்கு 16 அதன் கண்ணாடி பிரதிபலிப்பைப் போல கீழ் அடுக்கு 16 என, ஒரு வளர்ச்சியடைந்த மனிதனுக்கு  மொத்தம் 32 பற்கள் உள்ளன. செந்தில் குமரன் பல் மருத்துவர்

'பல் போனால் சொல் போகும்' என்னும் பழமொழிக்கேற்ப, நாம் பேச உதவுபவை பற்கள்தான். நாம் பேசும்போது குரல்வளையில் இருந்துவரும் காற்றானது பற்களின் இடுக்குகளில் மோதி வெளிவரும்போது குரல் பிறக்கிறது. பல் ஆரோக்கியம் என்பது முக அழகுக்காக மட்டுமல்ல... இதயநோய்கள், சர்க்கரை நோய்கள், வயிற்றுக்கோளாறுகளுக்கும் பற்களுக்கும் தொடர்பு உண்டு. உள்ளுறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகளுக்கான அறிகுறிகள் பெரும்பாலும் வாய் மற்றும் பற்களில்தான் பிரதிபலிக்கும். 

பற்களை எப்படி சுத்தமாக வைத்துக்கொள்வது?  

பற்களை சுத்தமாக வைத்திருக்க சில செயல்களை தினசரி பின்பற்றவேண்டும். அவை, 

* தினசரி காலை எழுந்தவுடன், இரவு உணவுக்குப்பின் பல் துலக்க வேண்டும்.

* எப்போது சாப்பிட்டாலும், வெந்நீர் அல்லது கல்லுப்பு கலந்த வெந்நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். 

*  பற்களைத் துலக்கும் முன் பிரஷை, குழாயைத் திறந்துவிட்டு நேரடியாகத் தண்ணீரில் கழுவ வேண்டும். கப்பில் பிடித்துவைத்த நீரில் கழுவக்கூடாது.  

செய்யக்கூடாதவை!

* நீண்ட நேரம்  பற்களைத் தேய்க்கக் கூடாது. அழுத்தியும் தேய்க்கக்கூடாது.

* இனிப்புகள், குளிர்ந்த மற்றும் சூடான உணவுகளை அதிகமாக உட்க்கொள்ளக்கூடாது.

* தூங்கி எழுந்ததும் பல் துலக்காமல் காபி, பால் போன்றவற்றைப் பருகக்கூடாது. இவை, பற்களில் உள்ள உணவுத் துணுக்குகளை வயிற்றுக்குள் கொண்டு சென்று விடும். அதனால் பல வயிற்று உபாதைகள் ஏற்படும்.

* கடினமான பொருள்களை கடிக்கக்கூடாது. பற்களை, குளிபானங்களைத் திறக்கும் ஓப்பனர்களாகப் பயன்படுத்தக்கூடாது. 

* புகைப்பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.

பல் துலக்கும் முறை...

பற்களை துலக்கும்போது, பிரஷை மேலும் கீழுமாக தேய்க்க வேண்டும். பக்கவாட்டில் தேய்ப்பது பல்லில் உள்ள எனாமலை நீக்கிவிடும். மேலும், நீண்ட நேரம் பற்களைத் தேய்க்கக்கூடாது. பிரஷை 45 டிகிரி கோணத்தில் வைத்துத் தேய்க்க வேண்டும். முன்னே இருக்கும் பால் பற்களையும் பக்கவாட்டில் உள்ள அரவைப் பற்களையும் இரண்டுமுறை மேலும் கீழுமாகத் தேய்க்க வேண்டும். கடவாய்ப் பற்களை ரொட்டேசன் முறை எனப்படும் சுற்றித் தேய்க்கும் முறையில் துலக்க வேண்டும். பற்களின் உட்புறமாகவும் தேய்க்க வேண்டும். அல்ட்ரா சாஃப்ட், சாஃப்ட் மற்றும் மீடியம் பிரஷ்களைக் கொண்டு பல் துலக்கலாம். கடினமான பிரஷைத் தவிர்க்க வேண்டும். பிரஷ்ஷை அழுத்திப் பிடித்துப் பல் துலக்கக் கூடாது. 

பிரஷ் செல்லமுடியாத  இடத்தில், பற்களுக்கு இடையே உள்ள கிருமிகள் மற்றும் உணவுத் துணுக்குகளை மெல்லிய நூல் வடிவில் உள்ள டென்டல் ஃப்ளாஸ் (Dental Floss) மூலம் சுத்தம் செய்ய வேண்டும். பற்களைச் சுத்தம் செய்வதுபோல் நாக்கை சுத்தம் செய்வதும் அவசியம். பிரஷின் பின்புறம் இருக்கும் டங்க் கிளீனர் (Tongue Cleaner) பயன்படுத்தி மெதுவாக நாக்கைச் சுத்தம் செய்ய வேண்டும். இறுதியாக மவுத்வாஷ் பயன்படுத்தி வாயைக் கொப்பளிக்க வேண்டும். 

பல் துலக்கும் முறை


வாய் மற்றும் பற்களில் ஏற்படும் நோய்கள்...

பல் சொத்தை, பற்கூச்சம், பல் வலி, வாய்ப்புண், வாய் துர்நாற்றம், ஈறுகளில் வீக்கம், வாய்ப் புற்றுநோய் போன்றவை பற்களில் ஏற்படும் பொதுவான நோய்கள்.

பல் சொத்தை

காரணம்: நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். எச்சிலில் உள்ள ஆசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரண்டும் சேர்ந்து பல் சொத்தையை உருவாக்கும். 

தீர்வு: பல் சொத்தை உள்ளது என்று தெரிந்த உடனே மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். ஃபில்லிங் மெட்டீரியலைக் கொண்டு அடைத்தல், ஆர்சிடி (Root Canal Treatment) என்னும் வேர் சிகிச்சை மூலம் பல் சொத்தையை ஆரம்ப கட்டத்திலேயே சரிசெய்யலாம். பல் சொத்தை அதிகமாக இருந்தால் அந்த பல்லை அகற்ற வேண்டும். இதனால், அடுத்தப் பல்லுக்குப் பரவுவது தடுக்கப்படும். அகற்றிய பல்லுக்குப் பதிலாக செயற்கை பற்களைப் பொருத்திக்கொள்ளலாம். 

தவிர்க்க: இனிப்பு சாப்பிடுவதால் மட்டும்தான் பல் சொத்தை உண்டாகும் என்றில்லை. எந்த வகை உணவாக இருப்பினும் அதை உண்ட பின்னர் அந்த உணவுத் துகள்கள் பற்களில் படியாதவாறு வாயைக் கொப்பளித்தல், பல் துலக்குதல் போன்றவற்றைப் பின்பற்றினால் பல் சொத்தை ஏற்படாது தடுத்துவிடலாம். 

பல் கறைகள்

காரணம்: புகையிலைப் பொருள்களை நீண்ட நேரம் வாயில் வைத்திருப்பது, மதுப்பழக்கம், டீ, காபி போன்றவற்றை அதிக அளவு குடிப்பது, சரியாகப் பல் துலக்காதது  போன்ற செயல்களால் பற்களில் கறை உண்டாகும். சிலருக்கு பிறப்பு முதலே கறை இருக்கும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம்.

தீர்வு: நல்ல தண்ணீரைக் குடிநீராகப் பயன்படுத்த வேண்டும். வொயிட் க்ளீனர் எனக்கூடிய பற்களை வெண்மையாக்கும் முறையை மருத்துவரின் ஆலோசனை பெற்று செய்துகொள்ளலாம்.

தவிர்க்க: மது மற்றும் புகையிலைப் பொருள்களின் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும். டீ, காபி, குளிபானங்கள் குடித்தபின்னர் வாயைக் கொப்பளிக்க வேண்டும். 

பல் வலி

காரணம்: பல் சொத்தை வளர்ந்து பெரிதாகும்போது பல்லின் வேரைத் தாக்கும். அப்போது பல் வலி ஏற்படும். 

தீர்வு: பல் வலிக்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். உதாரணமாக, சர்க்கரை நோயாளிகளுக்கு, ரத்த சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்த முடியாத அளவுக்குச் சென்றால் பல்வலி ஏற்படலாம். அந்த தருணத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்க முயற்சிக்க வேண்டும். 

தவிர்க்க: தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான நீருடன் கல்லுப்பு சேர்த்து வாய்க்கொப்பளிக்கவும்.

வாய்ப்புற்றுநோய் 

காரணம்: புகைப்பிடித்தல், பான்மசாலா, புகையிலை போன்றவற்றை வாய்க்குள் நீண்ட நேரம் வைத்திருப்பதால் 'ஓரல் கேன்சர்' எனப்படும் வாய்ப்புற்றுநோய் உண்டாகும். ஆரம்பத்தில் வாயின் உள்பகுதியில் புண் உண்டாகும். அதுவே கொஞ்சம் கொஞ்சமாக உதடு, கன்னம், தொண்டை, உணவுக் குழாய் என பல பகுதிகளைத் தாக்கவும் வாய்ப்புண்டு.

தீர்வு: ஆரோக்கியமான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி, மது, புகைப்பழக்கம், புகையிலைப் பழக்கத்தை தவிர்த்தல் போன்ற செயல்களின் மூலம் புற்றுநோயின் தாக்கத்தைக் குறைக்க முடியும். மருத்துவரின் ஆலோசனை பெற்று, தகுந்த சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.

தவிர்க்க: புகையிலை, பாக்கு போன்ற பழக்கங்களை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். வாயில் சிறிய புண் ஏற்பட்டாலும் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும்.

வாய் புற்றுநோய்

வாய் துர்நாற்றம் 

காரணங்கள்: வயிற்றில் கோளாறுகள் ஏற்படும்போது, அதில் உள்ள அமிலங்கள் வாயில் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். அல்சர் நோய் உள்ளவர்களுக்கு வாய் துர்நாற்றப் பிரச்னை இருக்கும். உடலில் நீர் வறட்சி ஏற்பட்டாலோ, நாக்கில் எச்சில் சுரக்காமல் போனாலோ,  தொண்டையில் உள்ள டான்சில் சுரப்பி, சுரத்தலில் தடைகள் ஏற்பட்டாலோ, உணவுக் குழாய், உணவு மண்டலத்தில் பிரச்னைகள் இருந்தாலோ, உணவு செரிமானம் ஆகாமல் உணவுக்குழாயில் தங்கினாலோ, அசிடிட்டி ஏற்பட்டாலோ வாய் துர்நாற்றம் ஏற்படலாம். பற்களின் இடுக்குகளில் கிருமிகள் சேர்வதாலும் வாய் துர்நாற்றம் ஏற்படும். சில நேரங்களில் கல்லீரல், சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்பட்டாலும் வாய் துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு.

தீர்வு: மவுத் வாஷர் திரவங்களை பயன்படுத்தி, வாய் துர்நாற்றத்தைப் போக்கலாம். தினசரி காலையில் வெதுவெதுப்பான நீருடன் உப்பு சேர்த்து வாய் கொப்புளிக்க, வாய் துர்நாற்றம் போகும். அல்சர் உள்ளவர்கள், அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். வயிற்றில் நீர் இருந்தால் அமிலங்களின் தாக்கம் குறையும்.

தவிர்க்க: காலை, இரவு என இரு வேளைகளும் பல் துலக்க வேண்டும். பல் இடுக்குகளில் உள்ள உணவுப் பொருட்களை நீக்க, நூலை வைத்து சுத்தப்படுத்தும் பழங்கால முறையை பின்பற்றலாம். அதிகப் புளிப்பு மற்றும் அதிகக் கார உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும்.  அசைவ உணவுகளை உண்ட பின்பு, பல்துலக்க வேண்டும். இவற்றையும் தாண்டி துர்நாற்றம் இருந்தால்  மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

ஈறுகளில் வீக்கம்...

காரணம்: பற்கள் மீது பாக்டீரியாக்கள் படிவதால் ஈறுகளில் வீக்கம் ஏற்படும். முறையாக பற்களைப் பராமரிக்காவிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது ஈறுகள் வீங்கிவிடும். வைரஸ் கிருமி தொற்று, மனஅழுத்தம், சர்க்கரைநோய், குடிப்பழக்கம், புகையிலைப் பழக்கம், கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் போன்றவற்றாலும் ஈறுகளில் வீக்கம் ஏற்படும்.

தீர்வு: மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று அவரது ஆலோசனையைப் பின்பற்றவேண்டும். நோய்களால் ஈறுகளில் வீக்கம் ஏற்படின், அவற்றுக்கான சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும். 

தவிர்க்க: தினசரி அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரே சமயத்தில் அதிக அளவு குடிக்காமல், சிறிது இடைவெளி விட்டு சிறிது சிறிதாக குடிக்கலாம். இளஞ்சிவப்பு  அல்லது பிங்க் நிறத்தில் ஈறுகள் இருப்பின் அவை ஆரோக்கியமானதாகும். கறுப்பு நிறத்தில் இருப்பதும் ஆரோக்கியம் தான். அடர் சிவப்பு நிறத்தில் இருந்தால் ஈறுகள் பாதிப்படைந்துள்ளன என்று புரிந்து கொள்ளலாம்.  

பற்கூச்சம்

காரணம்: எனாமல் தேய்வதாலும், அதிகக்  குளிர்ச்சி அல்லது சூடான உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் பற்கூச்சம் ஏற்படும். 

தீர்வு: தினசரி மவுத் வாஷ் பயன்படுத்தலாம். மருத்துவரின் ஆலோசனையின்படி, பிரஷ் மற்றும் பேஸ்ட்களைப் பயன்படுத்தலாம். 

தவிர்க்க: சாப்ட் அல்லது மீடியம் பிரஷ்ஷால் பல் துலக்கலாம். அழுத்தித் தேய்க்கக் கூடாது. வாயைச் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். அதிக அளவு சூடான மற்றும் குளிர்ச்சியான உணவுகளைத் தவிர்க்கலாம்.

குழந்தைகளுக்கு கூடுதல் கவனம்

குழந்தைகளின் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க... 

* குழந்தைகளுக்கு தினமும் ஒருமுறை பற்களை சுத்தம் செய்ய வேண்டும். குறைந்தபட்சம், தண்ணீர் வைத்து பற்களைத் தேய்த்துவிட வேண்டும்.

* அதிக நேரம் பால் புட்டியை வாயில் வைத்திருப்பதை குழந்தைக்கு பழக்கப்படுத்தாதீர்கள்.

*  சிலர், குழந்தைகளை பால் புட்டியை வாயில் வைத்தபடியே தூங்கவைப்பார்கள். அப்படி செய்வதால், பாலில் உள்ள இனிப்பானது பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து, குழந்தைகளின் பால் பற்களில் பிரச்னைகளை ஏற்படுத்தும். ஆகையால், இந்த பழக்கத்தைப் பெற்றோர் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 

* 7 முதல் 12 வயது குழந்தைகளுக்கு பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கும். இந்த காலகட்டத்தில் அவர்கள் விரல்களைச் சூப்பினால், சீரான பல் வரிசை ஏற்படாது. எத்திய நிலையில், சீரற்று வளர்ந்துவிடும். 

* குழந்தைகளுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும் பருவத்திலேயே, பெற்றோர்கள் அவர்களை பல் துலக்கப் பழக்க வேண்டும். 

* 12 வயது வரை குழந்தைகளுக்கு பால் பற்கள் விழாது இருந்தால், மருத்துவரின் ஆலோசனை பெற்று, பல் பரிசோதனை செய்வது சிறந்தது. 


பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்...

சிறுதானியங்கள், பிரவுன் பிரட், அரிசி, கோதுமை, நட்ஸ் போன்றவற்றை நன்கு மென்று சாப்பிட வேண்டும். பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகள் போன்றவை தினசரி உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும். பால், பால் பொருள்கள், பருப்பு வகைகள் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மீன், இறைச்சி, முட்டை, சோயா போன்றவற்றை வாரம் இருமுறை எடுத்துக்கொள்ளலாம். பல்லில் பிரச்னை இருக்கும்பட்சத்தில் இனிப்பு உணவுகள் மற்றும் சிட்ரஸ் பழங்களைத் தவிர்க்க வேண்டும்.
தயிர், கீரை வகைகள், நட்ஸ், தேங்காய் போன்ற உணவுகள் பற்களுக்கு பலம் தரும். அதிலும், கேரட், ஆப்பிள் போன்றவற்றை நறுக்காமல் கடித்துச் சாப்பிடுவது சிறந்தது. 

வெண்மையா, மஞ்சளா எது ஆரோக்கியம்?

வெண்மையோ, மஞ்சளோ எந்த நிறத்தில் இருந்தாலும் சுத்தமாக இருப்பதே பற்களுக்கு ஆரோக்கியம். பற்களின் நிறம் நம் தோலின் நிறத்தைப் பொறுத்து மாறுபடும். ஒயிட்னிங் மூலமாக, அதன் பொலிவை அதிகரிக்கலாம் தவிர, மஞ்சள் பற்களை முழுவதும் வெண்மையாக்க முடியாது. பல் மருத்துவரின் ஆலோசனைப்படி, பற்களை சுத்தம் செய்யும் வழிமுறைகள், பிரத்யேக பேஸ்ட், பிரஷ் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். 

மஞ்சள் பற்கள்

கர்ப்பகாலத்தில்!

கர்ப்பினிகளுக்கு சில சமயங்களில் ஈறுகளில் வீக்கம், ரத்தக் கசிவு, பல் பாதிப்புகள் போன்றவை ஏற்படக்கூடும். இதற்குக் காரணம், ஹார்மோன் மாற்றங்கள். இப்படியான பல் பிரச்னைகள் கர்ப்பக்காலங்களில் ஏற்படின், உடனடியாக மருத்துவனை அணுகுவது நல்லது.  

க்ளிப் அணிந்த பற்களுக்கு...

பல் வரிசையை சீர்செய்வதற்காக அணியப்படுவது க்ளிப். அதை அணிந்திருக்கும் காலகட்டத்தில் பற்களை கவனமாகப் பராமரிக்க வேண்டும். க்ளிப் அணிந்திருப்பவர்களுக்குப் பல் துலக்க பிரத்யேகமான ஆர்த்தோ பிரஷ்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. அவை, க்ளிப்புகளுக்கு இடையில் படிந்திருக்கும் சிறிய உணவுத் துகள்களை நீக்க உதவும். மேலும், க்ளிப் அணிந்திருப்பவர்கள் கடினமான உணவுகளை தவிர்க்க வேண்டும். உணவு மென்மையானதாக இருப்பது நல்லது.  

சிறுவயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல் வரிசையைச் சீராக்க  க்ளிப்கள் அணிவிக்கிறார்கள். அவற்றை நிரந்தரப் பற்கள் முளைத்த பிறகு, மருத்துவரின் ஆலோசனை பெற்று, தேவைப்படும்பட்சத்தில் அணிவது நல்லது. ரிமூவபிள், ஃபிக்ஸ்ட் என இரண்டு வகையான க்ளிப்கள் உள்ளன. 

க்ளிப் பற்கள்

பற்களின் ஆரோக்கியத்தைப் பதம்பார்க்கும் எட்டு பழக்கங்கள்!

* அதிகப்படியான இனிப்பு உணவுகளை சாப்பிடக்கூடாது. மேலும், அவற்றை நீண்டநேரம் வாயில் வைத்திருப்பதால் பல் சொத்தை, பல்வலி, பற்சிதைவு போன்றவை ஏற்படும்.

* சோடா, கார்பனேட்டட் பானங்கள், டீ, காபி போன்றவற்றை  அதிகம் பருகக்கூடாது. இவற்றில் உள்ள அமிலத்தன்மை பல்லின் எனாமலை பாதிக்கும். மாறக, இளநீர், பழச்சாறு பருகலாம்.

* புகைப்பழக்கம், பாக்கு போடுபவர்களுக்கு ஈறுகளில் பாதிப்பு ஏற்படும். அவை, பற்கள் விழுவதற்கான  வாய்ப்புகளை அதிகமாக்கும். மேலும், பற்களில் கறையையும் உண்டாக்கும்.

* குழந்தைகள் பால் குடித்தபின்னர், பற்களை சுத்தம் செய்யாமல் விட்டால் பால் பற்களைப் பாதிக்கப்படும்.

* பற்களை பாட்டில்களின் ஓப்பனராகப் பயன்படுத்துவது. பாலித்தின் பாக்கெட்டுகளை பற்களால் கடித்து கிழிப்பது போன்ற செயல்களால்பல் ஆரோக்கியம் பல்லின் உறுதித் தன்மையில் பாதிப்பு ஏற்படும்.

* நகம் கடித்தல், கோபம் அல்லது மனஉளைச்சலின்போது பற்களைக் கடித்தல் போன்ற பழக்கங்கள் பற்சிதைவை உண்டாக்கக்கூடும். பற்கள் தேயக்கூடும்.

* சீரற்ற முறையில் பல் துலக்குவதால் பற்களின் எனாமல் பாதிக்கப்படும்.

* குளிந்த மற்றும் சூடான உணவுகளை உண்ணுவது பற்கூச்சத்தை ஏற்படுத்தும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

* உணவு உண்ட பின்னும் குளிர்பானங்கள் அருந்திய பின்னும் ஃபுளூராய்டு டூட்பெஸ்ட் பயன்படுத்தி பல் துலக்க வேண்டும். இதில் உள்ள மினரல், பற்சிதைவில் இருந்து நம்மைக் காக்கும். வாய் துர்நாற்றத்தை சரிசெய்யும்.

* சாப்பிபிட்ட பின்னர், இளஞ்சூடான நீரால் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இது பற்களுக்கு இடையே ஒட்டிக்கொண்டுள்ள உணவுத் துணுக்குகளை நீக்க உதவும். மேலும், வாய் துர்நாற்றம் ஏற்படாது இருக்க உதவும்.

* 'பாயில் இன்ஃபெக்சன்' ஏதேனும் ஏற்பட்டிருப்பின், பல்துலக்கும் பிரஷ்ஷை மாற்றலாம்.

* ஒரு நாளைக்கு  குறைந்தது இரண்டரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இது வாய் துர்நாற்றத்தைத் தடுக்கும். 

* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை டூட் பிரஷ்ஷை மாற்ற வேண்டும்.

* பல் மற்றும் ஈறுக்களுக்கு இடையே பிளாக் (Plaque) என்னும் மஞ்சள் நிறக் கறை படிந்து இருந்தாலோ பல் துலக்கும்போது அவற்றில் இருந்து ரத்தம் வந்தாலோ உடனடியாக மருத்துவரின் ஆலோசனைப் பெற வேண்டும்.

மருத்துவர் பரிந்துரை!

 

பொதுவாக பற்களில் வலி வந்தபிறகுதான் மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும் என்பதில்லை. பிரச்னைகள் இருந்தாலும், இல்லை என்றாலும், கட்டாயமாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவரை அணுகி  பற்களில் பாதிப்பு இருக்கிறதா என பரிசோதனை செய்து கொள்வது அவசியம். இது உங்களின் புன்னகையை மட்டுமல்ல உங்களின் தன்னம்பிக்கையையும் மெருகூட்டும்.

http://www.vikatan.com/news/health/102466-importance-of-oral-hygiene-and-dental-care.html

Link to comment
Share on other sites

டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம்

 

 

டைப்  2 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட வயதானவர்களுக்கு கால்களில் எலும்பு முறிவு ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

 

ஒருவருக்கு சர்க்கரை நோய் ஏற்பட்டால், அதனை ஆயுள் முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் தற்போதுள்ள மருத்துவ சிகிச்சையாக கருதப்படுகிறது. அதே சமயத்தில் டைப்  2 நீரிழிவு நோயாளிகளுக்கு அவர்களின் சர்க்கரை அளவு குறைபாட்டின் காரணமாக, கால் எலும்புகளின் பாதுகாப்பிற்காக இயற்கையாக அமைந்துள்ள பாதுகாப்பு வளையத்தை பாதித்து, அதன் உறுதித்தன்மையை சேதப்படுத்துகிறது. இதன் காரணமாக சர்க்கரை நோய் பாதித்த முதியவர்களின் கால் எலும்புகள் இயல்பான வலுவினை இழக்கத் தொடங்குகின்றன. இதன் காரணமாகவே இவர்கள் எலும்பு முறிவுக்கு ஆளாகிறார்கள்.

news_image_health_239.jpg

டைப் 2 நீரிழிவு நோயாளிகள், தங்களுக்கு மருத்துவர்கள் அறிவுறுத்திய சத்தான உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்க தவறுவதே இதற்கு முக்கிய காரணமாகும். அத்துடன் அவர்கள் தங்களின் உடல் எடை சீராக பராமரிக்காமல் இருப்பதும். போதிய அளவிற்கும் குறைவாகவே உடற் பயிற்சி செய்வதும் இதற்கு காரணமாகின்றன. இதனால் தான் மருத்துவர்கள் டைப் 2 சர்க்கரைநோயின் அறிகுறியை கண்டறிந்ததும் வாழ்க்கை நடைமுறை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கிறார்கள். ஆனால் நோயாளிகள் யாரும் அதனை அக்கறையுடன் பின்பற்றுவதில்லை. இதனால் இவர்கள் முதுமையின் போது எலும்பு முறிவிற்கு ஆளாகிறார்கள்.

அதிக பசி, பலவீனம், சோர்வு, உடல் எடையிழத்தல், அதிக தாகம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், நா வறட்சி, தோல் அரிப்பு, கால் பகுதிகளில் எரிச்சல், பார்வை குறைபாடு இவையெல்லாம் டைப் 2 சர்க்கரை நோயின் அறிகுறிகளாக எடுத்துக் கொண்டு உடனடியான பரிசோதனை மற்றும் தொடர்ச்சியான பரிசோதனையை மேற்கொண்டு அதற்கான நிவாரணத்தையும் , இதனை கட்டுப்படுத்துவதற்கான சிகிச்சையையும் மருத்துவ நிபுணர்கள் மூலம் தெரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் பாதங்களில் வலி, கால்களில் உணர்வின்மை, சிறிய வெட்டுகள், தோல்களில் கருப்பாகுதல் போன்றவைகள் எல்லாம் டைப்  2 சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவர்களின் சென்று முறையான ஆலோசனைப் பெறவேண்டும்.

இவர்கள் பச்சை காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட்டு இந்த டைப் 2 பாதிப்பினை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். இரத்த சர்க்கரையின் அளவை கண்காணித்துக் கொண்டு, அதனை கட்டுக்குள் வைத்திருக்கவேண்டும். சீரான இடைவெளியில் சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். இதயம் ஆரோக்கியமாக இயங்க உடல் எடையை உறுதியாக பராமரிக்கவேண்டும். தினமும் அல்லது வாரத்திற்கு 5 நாள் என முறை வைத்துக் கொண்டு, 30 நிமிட அளவிற்கு உடற்பயிற்சி செய்யவேண்டும். இவைகளை செய்தால் டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்கலாம். முதுமையின் காரணமாகவும், டைப்  2 பாதிப்பின் காரணமாகவும் ஏற்படும் எலும்பு முறிவிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

டொக்டர் அகர்வால்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24863

Link to comment
Share on other sites

மூட்டு வலியா...? இதை தவிர்க்கலாம்..

இன்றைய திகதியில் கொர்பரேட் நிறுவனங்கள், தங்களுடைய கம்பனிகளில் வேலைசெய்யும் ஊழியர்களின் பணித்திறன் பாதிக்கபடாமல் இருப்பதில் கவனமுடன் இருக்கிறார்கள். இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஊட்டச்சத்து நிபுணர்களை பணிக்கு அமர்த்தி, என்ன சாப்பிடவேண்டும் என்ற பரிந்துரையை முன்வைக்கிறது.

இது குறித்து ஊழியர்களிடத்தில் மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், அவர்களின் பரிந்துரையில் இடம்பெற்ற சில விடயங்கள் கவனத்துக்குரியது தான். அதிலும் குறிப்பாக சிலரின் மூட்டு வலிக்கு காரணமாக திகழும் உணவு பொருள்களின் பட்டியலில் நைட்ஷேட் உணவுப் பொருளுக்கான வகைகள் தவிர்க்கவேண்டும் என்பது ஆய்வுக்குரியது.

news_image_health_22_9_17.jpg

நைட்ஷேட் உணவு வகைகள் என்ற பட்டியலில் உருளைக்கிழங்கு அதிலும் குறிப்பாக முளைவிட்ட உருளைக்கிழங்கு, தக்காளி, சிவப்பு மிளகாய் ஆகியவைகளை தவிர்க்கவேண்டும் என்று வலியுறுத்துகிறது.

இதற்கான காரணம் குறித்து ஊட்டசத்து நிபுணரான கிருஷ்ணமூர்த்தியிடம் கேட்டபோது,‘பொதுவாக ஒரு சிலருக்கு மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனை இருப்பவர்கள் தொடர்ந்து மேற்கூறிய உணவுப் பொருள்களை மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு செய்முறைகளில் அல்லாமல், வேறு வகையிலோ அல்லது தவறாகவோ பயன்படுத்தினால் மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் குணமடையாது. இந்த தாவர வகைகள் அனைத்தும் இரவில் வளர்ச்சியடைவதால் நைட் ஷேடு உணவுப் பொருள்கள் என்று வகைப்படுத்துகிறார்கள்.

ஆனால் அதிலும் விதிவிலக்குகள் உண்டு. குறிப்பாக முளை விட்ட உருளைக் கிழங்கை வாங்கி அவற்றைப் பொரித்து சாப்பிடுவது, தக்காளி நன்கு பழுக்காத நிலையில் அவற்றை சமையலுக்கு பயன்படுத்துவது, அதிக விதையுள்ள கத்திரிக்காயை பொரித்தோ அல்லது வறுத்தோ சாப்பிடுவது இப்படி செய்யும் போது, அவை உடலில் தீங்கும் விளைவிக்கும் கால்சிட்ரோல் (calcitriol) என்னும் ஹோர்மோனை சுரக்கச் செய்து, தேவைக்கும் அதிகமான கால்சிய சத்தினை உறிஞ்சுவதற்கு தூண்டுகிறது. இதனால் உடலில் உள்ள தோள் மூட்டுகளில் இவை தங்கி வலியை ஏற்படுத்துகிறது.குறிப்பாக ஓர்த்தரைடீஸ் என்ற பாதிப்பை இது ஏற்படுத்துகிறது.

அதற்காக இத்தகைய உணவுப் பொருள்களை முற்றாக தவிர்க்கவேண்டும் என்கிறார்கள். ஆனால் இவற்றை அளவுடன் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதாகத்தான் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். குறிப்பாக மூட்டு வலி மற்றும் வயிறு எரிச்சல் உள்ளவர்கள் மட்டும் இத்தகைய உணவுப் பொருள்களை ஓரளவிற்கு மட்டுமே பயன்படுத்த முன்வரவேண்டும்.’ என்றார்.

தொகுப்பு அனுஷா. 

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/24901

Link to comment
Share on other sites

இதய நோய் இல்லாத இதய நோயாளிகள்! - நீங்களும் பாதிக்கப்படலாம்!! 

 

 
heart-disease-symptoms

 

ஆரோக்கியமான இதயம் உள்ளவர்கள் பலரும்கூட தங்களுக்கு இதய நோய் உள்ளது என்ற தவறான எண்ணத்தோடு கவலையுற்று வெவ்வேறு மருத்துவர்களைச் சந்தித்து தங்கள் பொருளையும், நேரத்தையும் வீணாக்குகிறார்கள். மேலும் இதய நோய் என்று தெரிந்தவுடனேயே விரைவில் நாம் இறந்துவிடுவோம், எப்போது வேண்டுமானாலும் மரணம் சம்பவிக்கலாம் என்று தேவையில்லாத கவலை கொள்கிறார்கள்.

இதய நோய் உள்ளவர்கள் மருத்துவர்களின் அறிவுரைகளைப் பின்பற்றியும், மருந்துகள் உட்கொண்டும், சிறிய அறுவை சிகிச்சை செய்தும் மற்றவர்களைப் போன்று நீண்டநாள் நலமாக வாழலாம் என்பதை மறக்காதீர்கள். 

வேலை செய்யும் போதோ, நடக்கும் போதோ, ஓடும் போதோ, மாடி ஏறும் போதோ இதய படபடப்போ, மார்புவலியோ, மூச்சு வாங்குதலோ ஏற்பட்டாவது இயல்புதான். இவை இதய நோய் இல்லாதவர்களுக்கும் வரலாம். ஆனால் தேவையில்லாத அச்சத்தால் நாம் என்ன செய்கிறோம் அப்படி வரும்பொழுது உடனே குடும்ப மருத்துவரின் ஆலோசனையை நாடுவோம். அவர் சில அடிப்படை டெஸ்டுகளை செய்த பின்னர் இதயத்தில் எந்தவித நோயும் இல்லையென்று கூறினாலும், அதை நம்பாமல் குடும்ப மருத்துவரிடம் ஒரு நல்ல இருதய மருத்துவரிடம் அனுப்பும்படி கேட்டுக் கொள்வோம், அவ்வாறு கேட்டால் குடும்ப மருத்துவரின் மனம் புண்படும் என்று நினைக்கும் சிலர் அவர்க்குத் தெரியாமலேயே ஒரு இதய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவோம். அந்த இதய மருத்துவர் வேறு சில ஸ்பெஷல் டெஸ்டுகளை  எடுத்துப் பார்த்துவிட்டு இதயத்தில் ஏதும் பாதிப்பு இல்லை என்று கூறினாலும் அதையும் நம்பாமல் வேறு ஒரு இதய மருத்துவரின் ஆலோசனையை நாடுவோம், பல இதய மருத்துவர்களின் ஆலோசனைகளை வருடக் கணக்கில் பெற்றுக் கொண்டே இருப்போம்.

இவ்வாறு இல்லாத இதய நோயை இருப்பதாக நினைத்துக் கொள்பவர்களே இதய நோய் இல்லாத இதய நோயாளிகள். இவர்களுக்கு மனநோய் இருப்பதற்கான வாய்ப்பும் உண்டு, ஆகையால் மனநல மருத்துவரின் உதவியோடு இவர்களின் ஆழ்மனதில் இருக்கும் இதய நோய் பற்றிய அச்சத்தை அறவே நீக்கிவிட வேண்டும். நீக்காவிட்டால் பல  இன்னல்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும். 

இதய நோய் பயம் ஏற்படக் காரணங்கள்:

6906113_web-300x300.jpg

இதய நோய் இருக்குமோ என்கிற பயம் வருவதற்கான முக்கிய காரணங்கள் நான்கு அவை:

  1. இதய நோய் பற்றிய செய்திகள்.
  2. மாரடைப்பால் திடீரென்று இறந்தவர்கள்பற்றிய செய்திகள்.
  3. மருத்துவர்களின் அறிவுரைகள்.
  4. பரிசோதனை முடிவுகள்.

பத்திரிக்கைகள், ஊடகங்கள், வானொலி என அனைத்திலும் இதய நோய் பற்றிய செய்திகளையும், நோய் அறிகுறிகளையும், நோய் வருவதற்கான வாய்ப்புகளையும் பற்றி மாறி மாறிப் பேசி, அனைவரது இதயத்திலும் இந்தப் பயத்தை வர வைத்துவிட்டார்கள். பொதுவாக அவர்கள் கூறும் அறிகுறிகள் என்னவென்றால்; மார்பு வலி, மூச்சிறைத்தல், இதய படபடப்பு, இடது கை வலி, மிகச் சாதாரண வேலைகளைச் செய்தாலும் மிக அதிகமாகச் சோர்வடைவது போன்றவைதான். இந்த உபாதைகள் இதய நோய் இல்லாதவர்களுக்கும் வரக்கூடிய ஒன்று என்பதை இவர்கள் குறிப்பிடுவதில்லை. 

திடீரென்று ஒருவர் இறந்த செய்தியை கேட்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. அது நமக்கு நெருங்கியவரோ அல்லது பெயர் மட்டும் தெரிந்த ஒரு நபரோ அவர் திடீரென்று மார்பு வலியால் இறந்திருந்தால் தனக்கு சாதாரணமாக வாயு கோளாறால் லேசாக மார்பு வலி வந்தாலும் உடனே அது இதய நோய் என்று பயப்பட தொடங்கிவிடுகிறோம். அதிலும் இறந்தவர் ஏறக்குறையச் சம வயதினர் என்றால் அந்தப் பயம் மிக அதிகமாகிவிடுகிறது. 

cardiaca-279x300.jpg

இதய நோய் இல்லாத ஒருவர் இதய நோயாளியாக மாறுவதற்கு சில சமயங்களில் மருத்துவர் அளவுக்கு மீறிய ஈடுபாட்டுடன் வழங்கும் அறிவுரைகளும் காரணமாகி விடுகிறது. உதாரணத்திற்கு ஒருவருக்கு முதன் முதலாக ரத்த அழுத்த நோயோ, சர்க்கரை நோயோ, அதிக கொழுப்பு சத்து நோயோ இருந்தால் மருத்துவர் இதைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளாவிட்டால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புண்டு என்று அறிவுரை சொல்லியிருப்பார், ஆனால் நாம் அதை எப்படிப் புரிந்து கொள்கிறோம்? நமக்கு இதய நோய் வந்துவிட்டதாகவே முடிவு செய்து விடுகிறோம். அன்றிலிருந்து இதயம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு உடல் வேதனை ஏற்பட்டாலும் இதய நோய் என்று பயந்து இதய நோய் இல்லாத இதய நோயாளியாக மாறிவிடுகிறோம்.

விவரமில்லாதோர் மார்பு வலியோ, இதய படபடப்போ இருந்தால் தாங்களே ஒரு பரிசோதனை கூடத்தில் ECG எடுத்துக் கொண்டு, அந்த ரிப்போர்ட்டில் இதய நோய் இருப்பது போல் தெரிகிறது என்று அங்கு இருப்பவர்கள் எழுதிக் கொடுத்துவிட்டால் அவ்வளவுதான், உடனே இதய மருத்துவரிடம் அந்த ரிப்போர்ட்டை எடுத்துச் செல்வர், அவர் பரிசோதித்த பிறகு, இதய நோய் அபாயம் எதுவும் இல்லை என்று கூறினால் அதை நம்பாமல் அவர் ஏன் அப்படி எழுதிக் கொடுத்தார் என்று கேள்வி எழுப்புவோம். அதற்கு அவர் உங்கள் உடலைப் பரிசோதனை செய்யாமல் எழுதியது அது, நான் உங்களை முழுமையாகப் பரிசோதித்துவிட்டு சொல்கிறேன் என்று பெரிய விளக்கம் கொடுத்த பிறகும்கூட அந்த அச்சம் போகாது. மீண்டும் எப்போதெல்லாம் மார்பு வலிக்கிறதோ அப்போதெல்லாம் ECG எடுத்துக்கொண்டிருப்போம்.

images.jpg

இதய நோய் பயத்தால் குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால், அந்தக் குடும்பமே அதனால் பாதிப்பிற்குள்ளாகும் என்பதை மறந்துவிடாதீர்கள். இன்றைய சூழலில், இன்றைக்கு இருக்கும் அறிவியல் வளர்ச்சியில் சாதாரண சிகிச்சை முறையோ அல்லது சிறிய அறுவை சிகிச்சையோ உங்களைச் சரி செய்ய போதுமானது, இதய நோய் என்றாலே விரைவில் மரணம் என்கிற பயத்தில் இருந்து நாம் வெளிவர வேண்டும். ஏனென்றால், இதய நோயே இல்லாத இதய நோயாளியாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.

 

 

http://www.dinamani.com/health/health-news/2017/sep/28/fear-of-getting-a-heart-problem-itself-a-big-problem-2781319.html

Link to comment
Share on other sites

முதுகு வலியைத் தவிர்க்க...!

 

இன்றைய திகதியில் பெண்கள் தான் அதிகளவில் முதுகு வலியால் தவிக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு. ஆனால் முதுகு வலிக்கு கோர் தசைகள் எனப்படும் தசைகள் வலுவிழப்பதால் தான் வலிகளுக்கு காரணம் என்கிறார்கள் இயன் முறை மருத்துவ நிபுணர்கள்.

health.jpg

எம்முடைய உடலில் நான்கு வகையாக பிரிக்கப்பட்டிருக்கும் கோர் தசைகளை இயன் முறை மருத்துவ பயிற்சி மூலம் வலுவாக்கினால் வலிகள் சிறிது நேரத்தில் மறைந்துவிடும். அத்துடன் சக்தி கூடிய நிலையிலும் காணப்படுவீர்கள்.

உடனே எம்மில் பலரும் கோர் தசைகளா..! அவை எங்கேயிருக்கின்றன என்று சந்தேகம் கேட்பீர். எம்முடைய வயிற்றுப் பகுதி தசைகள், கீழ்ப் பகுதியில் உள்ள தசைகள், உதரவிதானப்பகுதியிலுள்ள தசைகள் மற்றும் இனப்பெருக்க உறுப்புகளுடன் தொடர்புள்ள சில தசைகள் ஆகியவை சேர்ந்தது தான் கோர் தசைகள்.

பெண்கள் இத்தகைய கோர் தசைகளின் வலிமையை எளிதில் இழந்துவிடுகிறார்கள். அதற்கு பல காரணங்கள் இருந்தாலும், திருமணத்திற்கு பின்னர் கருவுற்றிருக்கும் தருணத்தில் கிட்டத்தட்ட 9 மாதக்கால அளவிற்கு குழந்தையை தாங்கிக் கொண்டேயிருக்கும் வயிற்றுப் பகுதி தசைகள், பிரசவத்திற்கு பின்னர், தன்னுடைய இயல்பான நீட்சித்தன்மையை இழந்துவிடுகின்றன. இந்த நான்கு தசைகளும் வலுவிழப்பதால் தான் முதுகு வலிகள் ஏற்படுகின்றன. இதற்கு மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கும் உடற்பயிற்சியை முறையாகவும், தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தால் முதுகு வலியும் குறையும். தசைகளும் வலுவடையும்.

டொக்டர் செந்தில்குமார்

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/25069

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.