Jump to content

என்னங்க


MEERA

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

என் மனைவி என்னை 

பாத்ரூமில் நின்று ”என்னங்க” 
என்று அழைத்தால்
பல்லி அடிக்க 
என்று அர்த்தம்.

சாப்பிடும் ஹோட்டலில் ””என்னங்க”
என்று அழைத்தால்
பில்லை கட்டு 
என்று அர்த்தம்.

கல்யாண வீட்டில்
”என்னங்க” என்றால்
தெரிந்தவர் வந்திருக்கிறார்
வா
என்று அர்த்தம்.

துணிக்கடையில் நின்று ”என்னங்க” என்றால் 
தேடிய புடவை
கிடைத்து விட்டது 
என்று அர்த்தம்.

வண்டியில் செல்லும் போது ”என்னங்க” என்றால்
பூவாங்க வேண்டும்
என்று அர்த்தம்.

மருத்துவமனை சென்று ”என்னங்க” என்றால்
மருத்துவரிடம்
என்ன பேசவேண்டும் 
என்று அர்த்தம்.

வெளியே பார்த்து ”என்னங்க” என்றால்
அறியாத ஆள் 
வாசலில் 
என்று அர்த்தம்.

பீரோவின் முன் நின்று ””என்னங்க” என்று அழைத்தால்
பணம் வேண்டும்
என்று அர்த்தம்.

சாப்பாட்டை எடுத்து வைத்து ”என்னங்க” என்றால் 
சாப்பிட வர்றியா இல்லை லேப்டாப்பை உடைக்கவா என்று அர்த்தம்.

சாப்பிடும்போது
என்னங்க என்றால்
சாப்பாடு சுவைதானா
என்று அர்த்தம்.

கண்ணாடி 
முன் நின்று 
என்னங்க என்றால்
நகை அழகா
என்று அர்த்தம்.

நடக்கும்போது
என்னங்க என்றால்
விரலை பிடித்துகொள்ளுங்கள்
என்று அர்த்தம்.

கடைசி மூச்சின்போது
என்னங்க என்றால்
என்னையும்
அழைத்து செல்லுங்கள்
என்று அர்த்தம்.

என்னங்க என்ற
வார்த்தை இல்லை
என்றால்
எல்லாம் போனது 
என்று அர்த்தம்....?

அவன் இன்றி ஓர் அணுவும் 
அசையாது இவ்வுலகில்
இவள் இன்றி என்
இவ்வுலகமே இராது.

இவள் என் மனைவி.

 

 

(முகநூலில் சுட்டது- மனைவியை அல்ல)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க , இஞ்சேருங்கோ மற்றும் இஞ்சேரப்பா  எல்லாம் எங்கள் மனைவியரின் தாய் வீட்டுச் சீதனம். இன்றைய தலைமுறையில் இந்தச் சொல்லாடல்களைக் காண முடிவதில்லை மீரா....!

நல்லதொரு பதிவு. நன்றி மீரா...! அதுவும் இன்று எமது 31வது திருமணநாள்...! tw_blush:

Link to comment
Share on other sites

3 hours ago, suvy said:

இன்று எமது 31வது திருமணநாள்...! tw_blush:

வாழ்த்துக்கள் சுவி + திருமதி சுவி 

Bilderesultat for kissing

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

gIDmlJqwTROIjEEbecw6+ha_yellowanniversary.jpg

சுவி தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருமணநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடா..... "என்னங்க...." என்பதற்குள் எத்தனை அர்த்தம்  அடங்கியுள்ளது. :grin:

########  ########  ########

Happy-Anniversary-With-Red-Rose.gifHappy Anniversary With Shining Pearls

சுவி அண்ணர் தம்பதியினருக்கு... 
இனிய..... 31´வது திருமண நாள் வாழ்த்துக்கள்.
:)

Link to comment
Share on other sites

பாவியளா - அந்தாள கொஞ்சம் நின்மதியா என்ஜோய் பண்ண விடுங்கப்பா. :grin:

உங்களுக்கு தலைவர் நாளைக்குத்தான் (இண்டைக்கு ரொம்ப பிஸியாம்)  நன்றி சொல்லுவார். :grin::grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி நைநாவுக்கு இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி... நன்றி .... என்னங்க எல்லாரும் என்னங்கவுக்கு  நாலு வரி எழுதுங்க....! tw_blush:

ஸாரி மீரா சற்று ஃபீலாயிட்டோம் .....!  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது உங்கட சொந்தக் கதையா மீரா?...அண்மையிலா உங்களுக்கு திருமணம் நடந்தது?
சுவியண்ணா தம்பதிகளுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

சங்கத்தலைவனுக்கு  திருமணநாள் வாழ்த்துக்கள்...!!!

கதை நல்லாயிருக்கு மீரா 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

நல்ல பிள்ளை மாதிரிக் குடும்ப சமேதராக..கோவிலுக்கு ஒரு முறை போய் வரவும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னங்க என்னங்க
உங்களுக்கு திருமண வாழ்த்துக்களுங்க.
என்னங்க சுவி கேட்குதாங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

இது உங்கட சொந்தக் கதையா மீரா?...அண்மையிலா உங்களுக்கு திருமணம் நடந்தது?
சுவியண்ணா தம்பதிகளுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

இல்லை ரதி, முகநூலில் இருந்து சுட்டேன்.

11 hours ago, suvy said:

என்னங்க , இஞ்சேருங்கோ மற்றும் இஞ்சேரப்பா  எல்லாம் எங்கள் மனைவியரின் தாய் வீட்டுச் சீதனம். இன்றைய தலைமுறையில் இந்தச் சொல்லாடல்களைக் காண முடிவதில்லை மீரா....!

நல்லதொரு பதிவு. நன்றி மீரா...! அதுவும் இன்று எமது 31வது திருமணநாள்...! tw_blush:

சுவியண்ணா தம்பதிகளுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்.

மனைவி "செல்லா" என்று தான் அழைப்பது, மகன் இரண்டு தடவைகள் கூப்பிட்டு உடன் பதில் இல்லை என்றால் "செல்லா" என்பார். அவனுக்கும் தெரிகிறது செல்லா என்றால் அப்பா அலேட் ஆகிவிடுவார் என்று. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

திருமணநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா.

'என்னங்க' எல்லாம் பழசு. பெயர் சொல்லிக் கூப்பிடுவது தான் படித்த, நவீன பெண்களுக்கு அழகு :cool:. டேய் என்றும் அதி நவீனமாகக் கூப்பிட ஆரம்பித்துள்ளனர். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவியண்ணா தம்பதிகளுக்கு இனிய திருமண நல் வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா தம்பதியினருக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

2 hours ago, இணையவன் said:

திருமணநாள் வாழ்த்துக்கள் சுவி அண்ணா.

'என்னங்க' எல்லாம் பழசு. பெயர் சொல்லிக் கூப்பிடுவது தான் படித்த, நவீன பெண்களுக்கு அழகு :cool:. டேய் என்றும் அதி நவீனமாகக் கூப்பிட ஆரம்பித்துள்ளனர். :rolleyes:

உங்கள் வீட்டில் இப்ப டேய் தான் புழக்கத்தில் இருக்கோ இணையவன் ???

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ராமநாதன் அருணாசலம் காலத்தில் இருந்தே பிழைகள் விடப்பட்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.  இவை எல்லோருக்கும் தெரிந்தவைதான். 
    • 1976 ஆம் ஆண்டு நடந்த வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில்த்தான் தமிழர்கள் தனி ஈழமே தீர்வென்று முதன்முதலில் கூறினார்கள். அதனை படிக்கும் ஒருவருக்கு தனிநாட்டிற்கான நிலைப்பாட்டிற்கு தமிழர்கள் ஏன் வந்தார்கள் என்பதற்கான காரணங்களை அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள். அவர்களின் பிரதேசத்தில் நடக்கும் அரச ஆதரவிலான நில ஆக்கிரமிப்பு, கல்வியில் ஏற்றத்தாழ்வு, மொழிப்பிரச்சினை போன்ற விடயங்கள் இன்றும் அவர்களுக்கு இருக்கிறது.   இன்று அவர்களின் பிரச்சினைகளை தேசியப் பிரச்சினை என்று மறைத்துவிட்டு, தற்போது அந்தத் தேசியப் பிரச்சினை குறித்தும் நாம் பேசுவதில்லை. 
    • முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்  ஏன் தமிழ் மக்களால் இன்றுவரை அதே உணர்வுடன் அனுஸ்ட்டிக்கப்படுகிறது என்று பார்த்தோமானால், அவர்களுக்கு அரசியலில் சுதந்திரமாகச் செயற்படுவதிலிருக்கும் பிரச்சினைகள், கல்விகற்பதில் இருக்கும் பிரச்சினைகள், தமது நிலத்தினை காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள், மதத்தினைப் பின்பற்றுவதில் இருக்கும் பிரச்சினைகள், தமது பொருளாதார நலன்களைக் காத்துக்கொள்வதில் இருக்கும் பிரச்சினைகள் என்பவற்றை விலக்கிவிட்டுப் பார்த்தாலும், இன்று அவர்களின் நிலத்திலிருக்கும் பிரச்சினைகளின் சேர்க்கையுமே அவர்களின் உணர்வுகளை இன்றுவரை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன என்பதை நாம் உணர்கிறோம். முள்ளிவாய்க்கால நினைவுகூர்தல் என்பது அச்சமூகத்தின் ஒட்டுமொத்த உணர்வுகளின் வெளிப்பாடு.
    • சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சிய பெண்களை வீதியில் இழுத்துச் சென்ற பொலீஸ் அதிகாரி செய்தது முழுவதுமான இனவாதத்தால் பீடிக்கப்பட்டிருப்பவர் ஒருவரது செயல். அவர் முன்வைத்த அறிக்கையில்க் கூட புலிகளை நினைவுகூர்கிறார்கள் என்றே எழுதுகிறார். திருகோணமலையில்,  சில தமிழர்களை நாம் கண்டு பேசினேன். "ஏன் நீங்கள் பொதுவெளியில்ச் செய்யவில்லையா?" என்று கேட்டபோது, "இல்லை, பொதுவெளியில்ச் செய்ய எத்தனித்த பலமுறையும் எம்மை சித்திரவதைச் செய்து, தடைசெய்தார்கள். ஆகவேதான் வீடுகளில் செய்கிறோம்" என்று கூறினார்கள். அவர்களது ஊர்களில் இருக்கும் கோயில்களில்க் கூட புலநாய்வுத்துறையினர் வந்துநிற்கிறார்கள். முள்ளிவாய்க்கால் வாரத்தில் கோயிலில் எதுநடந்தாலும் ஏன் செய்கிறீர்கள் என்று கேள்வி கேட்கிறார்கள்.  வடக்கில் பணிசெய்யும் பல சிங்களவர்கள் ஒரு பொதுவிடயத்தைக் கூறுகிறார்கள். அதுதான், தாம் தங்கியிருக்கும் வீடுகளில் ஏதோவொரு பணிக்காக வரும் தாய்மார்கள் தமது தலைகளையும், முக‌ங்களையும் ஆசையாக வருடி, எனக்கும் உங்களைப்போன்றே மகனோ அல்லது மகளோ இருந்தார்கள் என்று கூறிக் கண்கலங்குகிறார்கள். இது வடக்கில் மட்டுமல்ல, இலங்கையின் எந்தப் பாத்திற்குச் சென்றாலும் தாய்மார் காட்டுகின்ற உணமையான உணர்வு, இதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.  வடக்கிலும் கிழக்கிலும் தமிழர்களின் பிரதேசங்களில் விகாரைகளை அமைப்பதற்காக ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை நாம் அடாத்தாக பிடித்துக்கொள்கிறோம். இதுகுறித்து நாம் பேசுவதில்லை. ஆனால், அவசியமாக இதுகுறித்து நாம் ஆராய வேண்டும், பேச வேண்டும். அவர்களின் பிரதேசத்தில் எங்காவது மேடான பகுதியிருந்தால் உடனேயே அங்கு விகாரையொன்றை நாம் கட்டிவிடுகிறோம் என்று தமிழர்கள் கூறுவதில் நியாயமிருக்கிறது. எனது வீட்டின் பின்காணியிலும் மேடான பகுதியொன்று இருக்கிறது. ஆனால், நான் ஒரு சிங்களவன் என்பதால் அதனை யாரும் அடாத்தாக ஆக்கிரமித்து விகாரை கட்டப்போவதில்லை என்பது எனக்குத் தெரியும். 
    • இன்று வடகரோலினா றாலி (Raleigh)நகரில் நடந்த தமிழ்மக்களை இன அழிப்பு செய்து 15வது நினைவேந்தலில் கலந்து கொண்டேன். முள்ளிவாய்கால் கஞ்சி என்று முடிவில் கஞ்சியும் தந்தார்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.