Jump to content

அன்பிற்கும் உண்டோ...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அன்பிற்கும் உண்டோ.....

பத்து வருடங்கள் முன்

அப்பொழுது என் மகளுக்கு வயது பதினைந்து

அழகான வா்ணக் காகிதத்தில்

அன்பான வாிகளிட்டு

அளித்தாள்  தந்தையா் தின வாழ்த்து

அத்தனையும் நனவாகி அதுவே

இறுதி என்று தொியாத இறுமாப்பில்

முத்தமொன்று கூட முழுதாய்க்

கொடுக்காமல் முறுவலித்தேன்

இப்பொழுதும் ஆண்டு தோறும்

வருகிறது தந்தையா் தினம்

எனக்காக மலா் வைத்து அஞ்சலிக்க

மகளும் வருகின்றாள்

காற்றில் முத்தமிட்டு கண்ணீருடன்

விடை பெறுகின்றாள்

எனக்காக என் அன்பிற்காக

ஏங்கும் மகளுக்காகவேனும்

நான் மறந்திருக்க வேணும்

புகையெனும் மாயப் பேயை

எண்ணுகின்றேன் ஆனாலும்

எடுத்தியம்ப முடியவில்லை

மனைவியின் வேண்டுகோளைப்

புறக்கணித்த என்னால் இன்று

மகளின் ஏக்கத்தை

மறுதலிக்க முடியவில்லை

காலம் கடந்த ஞானம்

ஆயினும் மகளே உன் அருகாமையை

இழந்து விட்ட சோகம்

உனக்கு மட்டுமல்ல எனக்கும்தான்

மகளே எனக்காக நீ எழுதித் தருவாயா

இன்னோா் தந்தையா்தின வாழ்த்து

உனக்காக நான் பாடுகின்றேன்

மனதோடு அன்புத் தாலாட்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக இருக்கின்றது சகோதரி....! தந்தை மகள் பாசம் என்பது நிறமில்லாத நீரில் நிறத்தோடு சுவை கூட்டும் தேயிலை போன்றது.....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்மணி அக்கா... 
"சிகரட் பிடிப்பதால்.... "  குடும்பத்தின் தலைவனை இழந்த சோகமான  கண்ணீர் கவிதையை...
வாசிக்க மனது, கனத்து விட்டது. 

உங்கள் கணவரின், கவிதையை.... நீங்கள் சொல்லிய விதம்,
எம்மைப் போன்ற.. புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு பாடமாக அமைய வேண்டும்.
சிந்திக்க வைத்த... வித்தியாசமான கவிதை. நன்றி.... அக்கா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தெழுதிய சுவி தமிழ்சிறி இருவருக்கும் நன்றிகள். புகைப்பவா்களைச் சிந்திக்க வைக்கலாம். ஆனால் நிறுத்துவதென்பது? இழப்பின் பின் எமக்கு ஏற்படும் ஏக்கத்தையும் வலிகளையும் எழுத்தில் வடிக்க முடியாது. பிள்ளைகளின் ஒவ்வொரு வளா்ச்சிப் படிகளிலும் பிாிவின் வலி மிகப் பொிது. சிந்திப்பதோடு நிற்காமல் செயற்படுத்த முயற்சி செய்யுங்கள். நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனத்த கவிதை

3 hours ago, Kavallur Kanmani said:

அன்பிற்கும் உண்டோ.....

பத்து வருடங்கள் முன்

அப்பொழுது என் மகளுக்கு வயது பதினைந்து

அழகான வா்ணக் காகிதத்தில்

அன்பான வாிகளிட்டு

அளித்தாள்  தந்தையா் தின வாழ்த்து

அத்தனையும் நனவாகி அதுவே

இறுதி என்று தொியாத இறுமாப்பில்

முத்தமொன்று கூட முழுதாய்க்

கொடுக்காமல் முறுவலித்தேன்

இப்பொழுதும் ஆண்டு தோறும்

வருகிறது தந்தையா் தினம்

எனக்காக மலா் வைத்து அஞ்சலிக்க

மகளும் வருகின்றாள்

காற்றில் முத்தமிட்டு கண்ணீருடன்

விடை பெறுகின்றாள்

எனக்காக என் அன்பிற்காக

ஏங்கும் மகளுக்காகவேனும்

நான் மறந்திருக்க வேணும்

புகையெனும் மாயப் பேயை

எண்ணுகின்றேன் ஆனாலும்

எடுத்தியம்ப முடியவில்லை

மனைவியின் வேண்டுகோளைப்

புறக்கணித்த என்னால் இன்று

மகளின் ஏக்கத்தை

மறுதலிக்க முடியவில்லை

காலம் கடந்த ஞானம்

ஆயினும் மகளே உன் அருகாமையை

இழந்து விட்ட சோகம்

உனக்கு மட்டுமல்ல எனக்கும்தான்

மகளே எனக்காக நீ எழுதித் தருவாயா

இன்னோா் தந்தையா்தின வாழ்த்து

உனக்காக நான் பாடுகின்றேன்

மனதோடு அன்புத் தாலாட்டு.

கனத்த கவிதை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிமனதை உறுத்தும் கவிதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கவிதையைப் படித்து பதிவிட்ட ஈழப்பிாியனுக்கும் குமாரசாமிக்கும் விருப்ப புள்ளியிட்ட வந்தியத்தேவன் உடையாா் அனைவருக்கும் நன்றிகள்

விருப்ப புள்ளியிட்ட ஆதவன் மருதங்கேணி தமிழினி நுணாவிலான் அனைவருக்கும் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில பாதாளங்களில்  எங்களை அறியாமலே  விழுந்து  விடுகின்றோம் . முயற்சிக்கிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.