Jump to content

“என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி


Recommended Posts

“என் வாட்ஸப்ல அந்த நாலாவது மெசேஜ்..!?’’ - செம குஷி டிடி

178864_12121.jpg

டிடியின் புதிய போட்டோ ஷுட் ஆல்பத்தை முழுமையாகக் காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்!

‘வாவ்... நம்ம டி.டியா இது!?’ - பாரம்பர்யம், எத்னிக், க்ளாஸிக், ரெட்ரோ... அத்தனை ‘லுக்’குகளிலும் மிளிர்கிறது திவ்யதர்ஷினியின் புதிய போட்டோ ஷுட்.  மஞ்சள் ஸ்டுடியோ பொட்டிக்கின் விளம்பர போட்டோஸ் அது. அதற்கு நிரஞ்சனி அகத்தியனின் டிசைனிங்கில் ‘அவ்ளோ அழகாக’ இருக்கிறார் டிடி. அதற்கு ‘லைக்ஸ்’ கொடுத்துவிட்டு, ’காபி வித் டிடியில பல பேரை நீங்க கேள்வி கேட்டிருப்பீங்க. இப்போ காபி வித் டிடிக்கு நீங்களே கெஸ்ட்டா வர்றீங்க. பேட்டியை ஸ்டார்ட் பண்ணலாமா..’ என எடுத்த பேட்டி இது.

’’ரொம்ப நாளா நீங்க பேட்டி எடுக்கணும்னு ஆசைப்பட்ட ஒரு பிரபலம்..?
“நாகேஷ் சாரை பேட்டி எடுக்கணும்னு ரொம்ப நாளா ஆசைப்பட்டேன். அது முடியாம போச்சு. இப்போ இருக்கிற பிரபலங்கள்ல, முதலமைச்சரை பேட்டி எடுக்கணும்னு ஆசைப்படுறேன்.” 

உங்ககிட்ட எத்தனை 500,1000 ரூபாய் நோட்டுகள் இருக்கு..?
“நான் எப்போதுமே கையில காசு வெச்சுக்க மாட்டேன். கார்டுதான் யூஸ் பண்ணுவேன். இப்போ என்கிட்ட 4000 ரூபாய் இருக்கு. ஆனால், அதுல எத்தனை 500,1000னு தெரியலையே!” 

’ஸாரி அண்ட் தேங்க்ஸ்’... யாருக்கு சொல்லணும்னு நினைக்கிறீங்க..?
“இந்த இரண்டு வார்த்தைகளையும் நான் மிச்சம் வைக்கிறதே இல்லை. சாரி அண்ட் தேங்க்ஸை உடனே சொல்லிடுவேன்.” 

’’இப்போ ராபிட் ஃபயர் ரவுண்ட்..!’’

*விஜய் டிவி: “ஸ்டார் மேக்கர்ஸ்”
*சிவகார்த்திகேயன்: “அவரோட வெற்றி எங்களுக்கு பெருமை”

*கடவுள்: “கடவுள் இருக்கான் குமாரு”
*பொம்மை: “குழந்தைகள்”

*சோஷியல் மீடியா: “வெரி பவர்ஃபுல்”
*மீம்ஸ்: “யார் மனசையும் கஷ்டப்படுத்தாம இருந்தால் நல்லது”
*ஜெயலலிதா: “அயர்ன் லேடி”

178868_12369.jpg

டிடியின் புதிய போட்டோ ஷுட் ஆல்பத்தை முழுமையாகக் காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்!

நீங்க சின்ன வயசுல இருந்து பத்திரமா பாதுகாத்திட்டு வர்ற ஒரு பொருள்...?
“எனக்கு ஒரு வயசு இருக்கும்போது எனக்காக எங்க அப்பாவே டிசைன் பண்ணி தைச்ச டிரெஸ். இன்னைக்கு வரைக்கும் பத்திரமா வச்சிருக்கேன்.” 

நீங்க மாத்திக்க நினைக்கிற கெட்ட பழக்கம் ஒண்ணு..?
“நிறைய இருக்கு. ஒண்ணு சொல்லணும்னா, இப்போ போன் ரொம்ப பார்க்க ஆரம்பிச்சிருக்கேன். அதை மாத்திக்கணும்.” 

உங்ககிட்ட மாறாமல் இருக்கும் நல்ல பழக்கம் ஒண்ணு..?
“நல்ல விஷயங்களை பார்த்தா கண்டிப்பா பாராட்டிடுவேன். அது என்கிட்ட மாறாம இருக்கு. இனிமேலும் மாறாமா இருக்கணும்.” 

டிடிக்கு இன்னொரு முகம் இருக்கா..?
“நான் ரொம்ப அமைதியான பொண்ணு. வீட்டுக்குள்ள இருக்கும்போதல்லாம் பேசவே மாட்டேன். வெளியப்போனாலும் அப்படித்தான். என்னை பார்க்கிற பல பேர், 'ஏன் ரொம்ப அமைதியாவே இருக்கீங்க, ஏன் பேசவே மாட்டிக்கிறீங்க' னு கேட்பாங்க. இன்னைக்கு பெட்ரோல் பங்க்ல ஒருத்தர், என் கார் கண்ணாடியை தட்டினார். நான் கண்ணாடியை இறக்குனதும், ‘என்ன மேடம், டிவில அப்படி பேசுறீங்க. நேர்ல பேசவே மாட்டிக்கிறீங்க’னு கேட்டார். பெட்ரோல் பங்க்ல நான் யார்கிட்ட என்ன பேச முடியும். ஆனாலும் நான் அவங்க பேசுறதை எல்லாம் கேட்டுட்டு இருப்பேன்.” 

178869_12581.jpg

டிடியின் புதிய போட்டோ ஷுட் ஆல்பத்தை முழுமையாகக் காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்!

உங்ககிட்ட கேட்கக்கூடாத கேள்வி..?
“ ஏன் ரொம்ப அமைதியாவே இருக்கீங்க, ஏன் பேசவே மாட்டிக்கிறீங்கனு யாரும் என்கிட்ட கேட்கக்கூடாதுனு நினைப்பேன். ஏன்னா, அதுக்கு ஒரு பதில் சொல்லணும்ல.”

’’உங்களோட அவுட்ஃபிட் எல்லாத்தையும் பல பெண்கள் க்ளோஸா வாட்ச் பண்றது உங்களுக்கு தெரியுமா..?

“யா... டிவியில நான் போட்டுட்டு வர அவுட்ஃபிட்டை பல பெண்கள் வாட்ச் பண்றாங்க. அதே மாதிரி டிரெஸ் எங்களுக்கும் வேணும்னு கேட்கிறாங்க. இதெல்லாம் பார்க்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு. அவங்களுக்காகவே நான் ரொம்ப காஸ்ட்லியான டிரஸ்களை செலக்ட் பண்றது இல்லை. அப்புறம் அவங்களும் நிறைய செலவழிக்கணும். இப்போ மஞ்சள் ஸ்டுடியோ விளம்பரத்துக்காக நான் கட்டியிருக்கிற ஸாரி, ரொம்ப நல்லா இருக்குனு பாராட்டு குவியுது. அந்த சேலைகளும் ரொம்ப காஸ்ட்லி இல்லை. மஞ்சள் ஸ்டுடியோ டிசைனர் நிரஞ்சனி எனக்கு ரொம்ப நல்ல பழக்கம். அவங்களோட டிசைன்ஸ்ல கலர் காம்பினேஷன் ரொம்ப நல்லா இருக்கும். அந்த டிசைனுக்குத்தான் இப்போ டிமாண்ட்!’’ 

இப்போ உங்க வாட்ஸ்அப்பை ஓப்பன் பண்ணி, அதுல நாலாவதா இருக்கிற மெசேஜ் என்னன்னு சொல்லுங்க..?
“நாலாவதா ஒரு குரூப்தான் இருக்கு. அதுல கடைசி மெசேஜ், நடிகர் ஜெகன்தான் அனுப்பியிருக்கார். ‘ஹவ் ஸ்டுப்பிட்’ -இதுதான் அவர் அனுப்பிச்சது. சூப்பர் மெசேஜ்ல!’’ 

டிடியின் புதிய போட்டோ ஷுட் ஆல்பத்தை முழுமையாகக் காண.. இந்த லிங்க்கை க்ளிக் செய்யவும்!

http://www.vikatan.com/cinema/tamil-cinema/interview/72119-anchor-divyadarshini-interview.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.