Jump to content

சென்னையைக் கலக்கிய கூர்க்கா கொள்ளையர்கள்


Recommended Posts

சென்னை: சென்னை புறநகர்ப் பகுதி மக்களை கடந்த 6 ஆண்டுகளாக கலக்கி வந்த கிரில் கொளளையர்கள் கூண்டோடு பிடிபட்டுள்ளனர்.

சென்னை புறநகர்ப் பகுதிகளில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக கலக்கி வந்தவர்கள் கிரில் கொள்ளையர்கள். வீடுகளின் ஜன்னல் கிரில் கம்பிகளை வளைத்து உள்ளே நுழைந்து திருடிச் செல்வது இவர்களது பாணி.

நகை, பணத்தை மட்டுமே கொள்ளையடிப்பார்கள், ஆள் இல்லாத வீடுகளைத்தான் நோட்டமிட்டுக் கொண்டு நுழைந்து கொள்ளை அடிப்பார்கள்.

புறநகர்ப் பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த கிரில் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். சென்னை தவிர மதுரையில் 11 வீடுகள், வேலூரில் 7 வீடுகள் சென்னைக்கு வெளியிலும் துணிகரத் திருட்டை நடத்தியுள்ளனர்.

தாங்கள் நுழையப் போகும் வீட்டை முன்கூட்டியே நோட்டமிட்டு தெளிவாக அடையாளம் பார்த்துக் கொள்வார்கள் இந்த திருடர்கள். எப்படி நுழையலாம், எப்படித் தப்பலாம் என்பதை தெளிவாக திட்டமிட்ட பின்னரே திருட்டில் குதிப்பர்.

இந்தக் கொள்ளைக் கும்பலைப் பிடிக்க போலீஸார் பல்வேறு தனிப்படைகள் அமைத்த வலை வீசித் தேடசியும் கூட இக்கும்பலைப் பிடிக்க முடியவில்லை. போலீஸாருக்கு பெரும் சவாலாக இருந்தது இக்கும்பல்.

இந்த நிலையில் சமீபத்தில் கூடுதல் ஆணையர் ஜாங்கிட் தலைமையில் புதிய தனிப்படையை அமைத்து இக்கொள்ளைக் கும்பலைப் பிடிக்க ஆணையர் லத்திகா சரண் உத்தரவிட்டார்.

ஜாங்கிட் உடனடியாக களத்தில் இறங்கினார். ஏற்கனவே பவேரியா கொள்ளைக் கும்பலை உத்தரப் பிரதேசம் வரை விரட்டிப் போய் பிடித்து 2 பேருக்குத் தூக்குத் தண்டனையும் வாங்கிக் கொடுத்து கலக்கியவர் ஜாங்கிட் என்பது நினைவிருக்கலாம்.

இந்தக் கும்பல்தான் கும்மிடிப்பூண்டி அதிமுக எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்களைக் கொன்றது.

எனவே கிரில் கொள்ளையர்களையும் வளைத்துப் பிடிக்க துரிதமாக களத்தில் இறங்கிய ஜாங்கிட், இதற்காக புதிய தனிப்படையை அமைத்தார். அந்தத் தனிப்படையை பல்வேறு இடங்களுக்கும் அனுப்பி தீவிர விசாரணையை முடுக்கி விட்டார்.

விசாரணை தீவிரமாக நடந்து கொண்டிருந்த நிலையில் சில நாட்களுக்கு முன் திருமுல்லைவாயிலில் உள்ள ஒரு வீட்டிற்குள் கிரில் கொள்ளையர்கள் புகுந்து விட்டனர். அவர்களை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துள்ளார்.

உடனடியாக அவர் போலீஸுக்குத் தகவல் தர தனிப்படை போலீஸார் மின்னலென விரைந்தனர். வீட்டுக்குள் திருட்டில் மும்முரமாக இருந்த 2 கொள்ளையர்களையும் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இக்கும்பல்தான் கிரில் கொள்ளையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தது.

இந்தக் கும்பலில் மொத்தம் 10 பேர் உள்ளனர். அனைவரும் நேபாள நாட்டு கூர்க்காக்கள். நேபாளத்திலிருந்து தமிழகத்திற்கு வந்து கூர்காக்க்கள் ஆக வேலை பார்த்து வந்தனர். அப்படியே கிரில் திருட்டில் இறங்கினர்.

இருவ>ட.ம் நடத்திய விசாரணையில் இக்கும்பலைச் சேர்ந்த மற்றவர்கள் கொல்கத்தாவில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் படை கொல்கத்தாவுக்கு விரைந்தது. அங்கு மற்றவர்களையும் போலீஸார் வளைத்துப் பிடித்தனர்.

அவர்களிடமிருந்து ஏராளமான நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொள்ளையர்கள் பிடிபட்ட தகவலை முதல்வர் கருணாநிதி திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசியபோது தெ>வித்தார்.

மாநகர காவல்துறை ஆணையர் லத்திகா சரண் இன்று செய்தியாளரக்ளிடம் கிரில் கொள்ளையர்கள் பிடிபட்டது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவுள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2007/01/29/chennai.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.