Jump to content

அம்பலத்திற்கு வந்த “ஆவா“ குழு விபரம் -நேரடி றிப்போட்


Recommended Posts

அம்பலத்திற்கு வந்த “ஆவா“ குழு விபரம் -நேரடி றிப்போட்

 
News%2BVedio22.jpg
கடந்த இரண்டு வாரங்களாக யாழ்ப்பாணத்தையும் 
கொழும்பையும் ஆட்டிப்படைத்த “ஆவா குழு“ தொடர்பான முக்கிய விடயங்கள் தமிழ்கிங்டொத்தின் விசேட செய்திப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது. கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் உண்மையிலேயே ஆவா குழு யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது அதன் உறுப்பினர்கள் யார் யார் செயற்படுகின்றார்கள் என்ற விடயங்களை விசாரித்தபோது மிகவும் அதிர்ச்சி அளிக்கும் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாகுழுவோ அல்லது இன்னொரு பிரிவாக செயற்படுவதாக சொல்லப்படும் சன்னாகுழு எனப்படுவதன் தோற்றம் மற்றும் அதனை தோற்றுவித்தன் நோக்கம் என்பன முன்னாள் யாழ்ப்பாண கட்டளை தளபதியாகவிருந்த மேஜர் ஜென்ரல் கத்துருசிங்கவுக்கும் அவருக்கு கீழே செயற்பட்ட புலனாய்வு அதிகாரிக்குமே தெரிந்த விடயங்கள்.

எவ்வாறு சிக்கினர் அப்பாவி இளைஞர்கள்

இந்த ஆவா குழு எனப்படுவது உண்மையிலேயே பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தமிழனுக்காக குரல்கொடுக்கும் ஒரு அமைப்பாக சித்தரிப்பதாகவே மறைமுகமாக ஆரம்பமாகியது சமூக வலைத்தளங்களில் பதிவுகளையிட்டு பிரபலமாகியதிலிருந்து அதனை அவதானித்த அப்பாவி இளைஞர்களான குறிப்பாக 15 முதல் 25 வரையான இளைஞர்களே அவர்களின்பால் ஈர்க்கப்பட்டதாக அப்பகுதி இளைஞர்களிடமிருந்து அறியக்கிடைக்கிறது. இந்த விலைப்பின்னல் பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.
 
 
இதில் செயற்பட்டதாக சொல்லப்படும் இளைஞர்களின் சமூக வலைத்தள பதிவுகளை நோக்குபவர்கள் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் அவர்களுடைய வெளிப்படையான பதிவுகளும் அதனை 400இற்கு அதிகமான இளைஞர்கள் வரவேற்று விருப்பங்களையும் தமது ஊக்குவிப்பு கருத்துக்களையும் இட்டிருக்கிறார்கள்.
 

சாதாரணமாக ஒரு கூட்டத்திற்கோ அல்லது குறிப்பாக நடைபெற்றுமுடிவுற்ற எழுகதமிழ் பேரணிகூட அனைத்துகட்சிகளின் அழைப்பு மற்றும் பொது அமைப்புக்கள்,பல்கலைக்கழக சமூகம் என்பவற்றின் ஆதரவு இருந்த காரணத்தினாலேயே பெருமளவான மக்கள் அச்சமின்றி அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கின்றார்கள்.


ஆனால் எந்த பின்னணியும் செல்வாக்குமில்லாத குறித்த நான்கைந்து இளைஞர்களின் பதிவுகள் குறிப்பாக நடைபெற்று முடிவுற்ற சரஸ்வதி பூசைநிகழ்வைக்கூட ஒருவர் பெரிய வாழை இலைஒன்றில் அதில் பத்திற்கு மேற்பட்ட வாள்கள்,கத்தி,கோடரி போன்ற கூரிய ஆயுதங்களை வைத்து அத்துடன் பிரசாதம் வைத்து கொண்டாடியிருக்கின்றார் அதனையும் நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் பார்வையிட்டும் ஊக்குவித்தும் இருக்கிறார்கள். சாதாரண ஒரு பொதுமகனால் இவ்வாறான ஒரு செயலை செய்யவோ அல்லது அதனை செய்து சமூக வலைத்தளத்தில் தன்னை இவர்தான் என அடையாளப்படுத்தி பிரசுரிக்கமுடிந்திருக்கிறது என்றால் நிச்சயமாக இதன் பின்னணி முக்கியமாக பாதுகாப்பு படையினரின் புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.
2016-10-15111.jpg
 
 

ஆனால் இவர்களின் கருத்துக்களையோ பதிவுகளையோ பார்த்தும் அண்மைக்காலங்களில் நடைபெற்றுவரும் பௌத்த மயமாக்கல் மற்றும் நில ஆக்கிரமிப்பு, இராணுவ அச்சுறுத்தல்கள் என விரக்தியுற்ற சில இளைஞர்கள் இவர்களின் உண்மையான பின்னணி தெரியாமல் இவர்கள்தான் தற்போது எமக்கு தேவையானவர்கள் இவர்களின் பாதை தான் இவற்றுக்கு தீர்வுதரும் என்று எண்ணி அவர்களின் பின்னால் சென்றிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.
 
 

இதில் இன்னொரு முக்கியமான விடயம் கடந்த  மகிந்த ஆட்சி காலத்தில் ஆவாகுழு தலைவர் கைது எனச்சொல்லப்பட்டு கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட இளைஞர் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியதாகவும் அதற்கு 400வரையான இளைஞர்கள் கலந்துகொண்டதாகவும் அப்பகுதி இளைஞர்களிடமிருந்து அறியக்கிடைக்கின்றது.
2016-10-1511111234.jpg

கீழ்குறித்த படம்கூட அந்த இளைஞர் வட்டத்தில் ஒருவரின் பதிவில் காணப்படுகிறது. 
 
 
the%2B132edd44.jpg




அண்மையில் கைதுசெய்யப்பட்ட அலெக்ஸ் அரவிந்தன் என்ற நபர்கூட முன்னைய காலத்தில் இளைஞர்குழுக்களுடன் செயற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள். இவர் ஏற்கனவே ஒரு குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டு பின்னர் த.தே.மக்கள் முன்னணி சட்டத்தரணி ஒருவரின் உதவி நாடப்பட்டு அப்பாவி இளைஞர் என்ற காரணத்திற்காக அவரும் உதவியிருக்கின்றார். அதன்பின்னர் அந்த இளைஞனும் கடந்த தேர்தலுக்கு பின்னர் முன்னணியினரின் தேசியம் சார்ந்த செயற்பாடுகளுக்கு தனது நண்பர்கள் வட்டத்துடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் இவ்வாறு மிகவும் விசுவாசமாக செயற்பட்டது அவர் நேர்மையாக செயற்படுவதாக நம்பி முன்னணி கட்சியினரும் பணிகளில் ஈடுபடுத்தியிருக்கின்றார்கள்.
the%2B132eddfdd33.jpg
 
 
அந்த வகையில் அண்மையில் இடம்பெற்ற எழுகதமிழ் நிகழ்வு ஒழுங்கமைப்பிலும் தீவிர விசுவாசியாக செயற்பட்ட அரவிந்தன் பல்வேறுபட்ட சமூக பணிகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு இளைஞர் குழுக்களுடன் தொடர்பு இல்லை என்றும் அவர் 2015 தேர்தலுக்கு பின்னர் மிகச்கடுமையாக தேசியத்திற்காக பாடுபட்டதாக த.தே.முன்னணி ஊடக சந்திப்பில் அதன் தலைவர் தெரிவித்திருக்கின்றார்.
 
 
 

இவற்றை வைத்து பார்க்கும்போது இலங்கை புலனாய்வுத்துறையின் அனுசரணையோடு இயங்கிய ஆவா மற்றும் சின்னா தலமையிலான குழுவால் தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும் எழுகதமிழ் நிகழ்வு விடயங்களையும் மற்றும் இவர்களின் செயற்பாடுகளுக்கு முன்னாள் புலிகள் யாராவது வந்து ஒத்துழைப்பு வழங்குவார்களா மீள ஒன்றுணைய முற்படுகின்றார்களா என்பதையும் அவதானிக்கும் முகமாக இவர் உள்நுழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இது அவரோடு செயற்பட்ட இளைஞர்களுக்கு கூட தெரிந்திருக்கவாய்ப்பில்லை என்றும் தெரியவருகின்றது.

இது த.தே.மக்கள் முன்னணிக்குள் மட்டுமல்ல த.தே.கூட்டமைப்பில் தேசியவாதிகளாக இனங்காணப்பட்டுள்ளவர்களுடனும் மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகிய அமைப்புக்களிடையேயும் இந்த ஆவாகுழு உறுப்பினர்கள் ஊடுருவியிருக்கலாம் என்ற அச்சம் ஊடகப்பரப்பில் பேசப்பட்டுவருவது கவனிக்கவேண்டிய ஒன்றாகும்.
 
the%2B132ehu.jpg
the%2B132eddfdr.jpg

இந்த ஆவாகுழு எனச்சந்தேகிக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்களில் சிலருக்கு உண்மையிலேயே அந்த குழுவின் செயற்பாடு எப்படிப்பட்டது அது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது போன்ற விபரங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது அவர்களது பதிவுகளை ஆழமாக பார்க்கும்போது புரிகின்றது.
 
the%2B136.jpg
 
 
 இந்த கைது எப்படி இடம்பெற்றது?

நாம் முன்னர் தெரிவித்ததுபோல அரச புலனாய்வால் உருவாக்கப்பட்ட அமைப்பை ஏன் அரசே கைதுசெய்ய வேண்டும் என்ற சாதாரண கேள்வி எழலாம் ஆனால் இதனை தோற்றுவித்தது மகிந்த ஆட்சிகாலத்திலுள்ள நிர்வாக கட்டமைப்பு. வடக்கில் வன்முறைகள் தலைதூக்கியபோது அவர்களை கைதுசெய்ய எந்த நடவடிக்கையையும் அரசு செய்யவில்லை இரு மாணவர்களின் கொலை அதன் பின்னரான இருபொலீசார்மீதான வாள்வெட்டு என்பவற்றின் பின்னர் அரசுக்கு இது பெரும் தலையிடியாக தோன்றவே அதன் உண்மையை வெளிப்படுத்தினார் அமைச்சர் ராஜித சேனாரத்தின இது கோத்தபாஜ காலத்தில் மகிந்த கத்துருசிங்கவால் குறிப்பாக வடக்கில் தேசியத்திற்காக குரல் கொடுப்பவர்களை கண்காணிப்பது.
 
2016-10-1511111.jpg
 
the%2B14.jpg
 
the%2B1326.jpg
 
2016-10-1511.jpg
 

ராஜித இந்த கருத்தை கூறியும் அதற்கான நடவடிக்கை எதனையும் அரசு செய்யவில்லை காரணம் அரச புலனாய்வு கட்டமைப்பு யாழில் மாறவே இல்லை இதன்காரணமாகவே உடனடியாக மாற்றபட்டிருக்கிறார் புலனாய்வுப் பணிப்பாளர் இதன் அடிப்படையிலேயே மேற்படி கைதுகள் இடம்பெற்று வருகின்றது..
the%2B132eddf.jpg
 
 

உண்மையாக அரசின் நோக்கம் என்ன?

மகிந்தவின் காலத்தில் முன்னாள் போராளிகளும், தமிழ் இளைஞர்களும் குறிப்பாக தெருச் சண்டியர்களும் புலனாய்வாளர்களின் முகவர்களாக மாற்றப்பட்டனர். முன்னாள் போராளிகள் பலர் மிரட்டியும் முகவர்களாக்கப்பட்டனர். அவ்வாறுதான் புலனாய்வு பிரிவுக்குள் தமிழ் இளைஞர்கள் உள்வாங்கப்பட்டனர் சிலர் விரும்பியும் வேலை செய்தனர்.

மகிந்த ஆட்சியை விட்டு போவார் என யாரும் நம்பியிருக்கவில்லை. ஆனால் எல்லாம் தலைகீழ் ஆனாதும், புதிதாக இணைந்தவர்கள், புலனாய்வு துறைக்குள் புதிதாக உருவாக்கப்பட்ட அணிகள் என அனைத்தையும் என்ன செய்வது என்று பழைய புலனாய்வுக் கட்டமைப்பினருக்கு தெரியவில்லை. புதிய அரசாங்கம் பொறுப்பு ஏற்றவுடன் செய்த முதல் வேலை புலனாய்வுத் துறையை சீர்படுத்தியதுதான். பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவு, தேசிய பாதுகாப்பு பிரிவு, நிதி குற்றவியல் பிரிவு என மூன்றாகப் பிரித்து இராணுவ தர அடிப்படையில் உத்தியோகபூர்வமாக அரசால் நியமிக்கப்பட்டவர்களை மட்டும் புலனாய்வுத்துறைக்குள் வைத்துக்கொண்டு மீதிப் பேரை வீட்டுக்கு அனுப்பியதுதான்.

மகிந்தவின் காலம்வரை நாட்டின் முழு அதிகாரமும் இராணுவததின் வசமும், புலனாய்வாளர்களின் வசமும் தான் இருந்தது. இந்த அரசாங்கம் அனைத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்து விசாரணைகளை மூன்றாகப் பிரிக்கப்பட்ட புலனாய்வு பிரிவுக்குள் உள்ளீர்த்தது. இதில் சில பழைய புலனாய்வாளர்கள் தர அடிப்படையில் புலனாய்வாளர்கள் புலனாய்வு விசாரணை அதிகாரிகள் ஆனார்கள். பொலிஸார் புலனாய்வாளர்கள் ஆனார்கள்.
 
பொலிஸ்காரனின் பலம் ஓங்கியதும் மீளவும் பழைய புலனாய்வாளர்கள் வேலைகளை ஆரம்பித்தனர். ஆனால் மகிந்த காலத்தில் அனுபவித்த விடயங்கள் எதுவும் இப்போது இல்லை, எனவே அதிகம்பேர் மகிந்த விசுவாசியாகத்தான் தொழிற்பட்டனர். எனவே வடக்கில் எப்படியாவது குழப்பங்களை உண்டு பண்ணி, நடக்கும் நிகழ்வுகள் அனைத்தையும் நாட்டைபிரிக்கும் செயல் என தெற்கிற்கு காட்டி, மகிந்தவை மீளக்கொண்டுவர வேலைபார்த்தார்கள். அதன் ஒரு வேலைத்திட்டம்தான் ஆவா குழுக்கள் இதையெல்லாம் அறிந்துகொண்ட தற்போதைய அரசில் விசுவாசமுள்ள புலனாய்வு அதிகாரிகள் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவே, பழைய தலைவரை மாற்றி, புதிய தலைவரை கொண்டு வந்ததும், அவர் வந்தவுடன் கைதுகள் ஆரம்பமாகியுள்ளது.
 
கைதுகள் இடம்பெறுவதும் அதில் சம்பந்தப்பட்டவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தில் உள்ளே தள்ளுவதுமாக இல்லாமல் உண்மையாகவே இந்த இளைஞர்கள் என்ன செய்தார்கள் அவர்களின் பின்னணி என்ன அந்த வலையமைப்பின் தலைமைப்பீடம் யாரால் கையாளப்பட்டது என ஆராய்ந்து அந்த முடிவுகள் தமிழ்மக்களுக்கு தெரியப்படுத்தப்படுமா என்பது இலங்கை வரலாற்றில் நடைபெறாத ஒன்றாகவே இருக்கப்போகின்றது.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.