Jump to content

`கொசோவோ'க்கு பூரண சுதந்திரம்


Recommended Posts

-வெளிநாட்டு செய்திச் சேவை-

நேட்டோவின் தாக்குதலில் சேர்பிய படைகள் தோற்கடிக்கப்பட்டு 8 வருடங்களுக்குப் பின்னர் கொசோவோ முழுமையாக சுதந்திர நாடாக மிளிர்வதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

கொசோவோ இதன் மூலம் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கும் சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள், சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்றவற்றில் உறுப்புரிமை பெறுவதற்குமான உரிமையை பெற்றுள்ளது.

மேலும், முன்னாள் யுகொஸ்லாவியா, சேர்பியா போன்றவற்றிற்கு உரிய பொருளாதார சொத்துகள் மற்றும் கடன்கள் மீதான தனது உரிமையையும் கொசோவோ பெறுகின்றது.

எனினும் ஐக்கிய நாடுகளின் இந்த திட்டம் சேர்பியாவை சீற்றமடையச் செய்யலாம் என சுட்டிக் காட்டப்படுகின்றது.

வியன்னாவில் இது குறித்து யோசனைகள் ஆராயப்பட்ட வேளை சேர்பியாவின் முக்கிய நேச நாடான ரஷ்யா இதனை எதிர்த்துள்ளது.

சேர்பியாவின் ஒரு பகுதியாக இன்னமும் விளங்குகின்ற கொசோவோவினை 1999 இலிருந்து ஐக்கிய நாடுகள் நிர்வாகம் செய்து வருகின்றது.

1999 இல் நேட்டோ படையினர் சேர்பிய படையினரை அங்கிருந்து வெளியேற்றின.

ஐக்கிய நாடுகளின் விஷேட பிரதிநிதியும் பின்லாந்து ஜனாதிபதியுமான மார்ட்டி அஹ்டி சரி அமெரிக்கா, ரஷ்யா அடங்கிய ஆறு நாடுகளுக்கு தனது யோசனைகளை தெளிவு படுத்தியுள்ளார்.

குறிப்பிட்ட யோசனை சேர்பியாவிற்கு சில விட்டுக் கொடுப்புகளை வழங்குகின்றது. இதன் படி பெல்கிரேட், சேர்பிய பகுதிகளுக்கு நிதி வழங்கலாம் எனினும் இது பிரிஸ்டினா ஊடாக செல்ல வேண்டும்.

கொசோவோவில் உள்ள 175,000 சேர்பியர்களும் சுயாட்சி அரசாங்கத்தையும் உள்ளூர் பொலிஸை கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் பெல் கிரேட்டுடன் நேரடி தொடர்புகளை வைத்திருப்பதற்கான அதிகாரத்தையும் பெறுவர்.

சேர்பிய மத வழிபாட்டுத் தலங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்படும்.

ரஷ்யாவை தவிர, ஏனைய நாடுகள் இதனை வரவேற்றுள்ளன. பிரான்ஸ் இந்த யோசனைகள் சரியான திசையிலானவை எனக் குறிப்பிட்டுள்ள கொசோவோவில் உள்ள சேர்பிய சிறுபான்மையினரை கருத்தில் எடுக்க வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

எனினும் மொஸ்கோவின் எதிர்ப்பு காரணமாக இந்த யோசனைகளுக்கு பாதிப்பு ஏற்படலாம்.

பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற வகையில் ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தலாம்.

ரஷ்யா இதனை பாதுகாப்புச் சபையின் சுலபமாக அனுமதிக்காது. அவர்கள் கொசோவோ ஏனைய பகுதிகளுக்கு முன்னுதாரணமாக அமைவதை விரும்பாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/news/2007/1/28/...s_page20218.htm

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.