Jump to content

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஒக்கடு மிகிலாடு’


Recommended Posts

இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘ஒக்கடு மிகிலாடு’
 
 

article_1477976811-11.jpg

இலங்கை இனப் பிரச்சினையை மையமாக வைத்து சில திரைப்படங்கள் தமிழில் தயாரிக்கப்பட்டு வெளிவந்தன. ஆனால், அவற்றிற்கு தணிக்கை கெடுபிடி மிகவும் அதிகமாக இருந்ததால் பல வெளிப்படையான காட்சிகள் அந்தப் திரைப்படங்களில் இடம்பெறவில்லை. முன்னணி நட்சத்திரங்களும் நடிக்காததால் அந்த திரைப்படங்களைப் பற்றிய அதிகமான கவனமும் ரசிகர்களிடம் ஏற்படவில்லை.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “கன்னத்தில் முத்தமிட்டால்” திரைப்படம் மட்டுமே ரசிகர்களைச் சென்று சேர்ந்தது.  

இப்போது தெலுங்கில் மஞ்சு மனோஜ் நடிக்க “ஒக்கடு மிகிலாடு” என்ற திரைப்படத்தைத் தயாரித்து வருகிறார்கள். அஜய் ஆன்ட்ரூ நுத்தகி என்பவர் இயக்கும் இந்த திரைப்படம் “விடுதலைப் புலிகள், இலங்கை அரசு ஆகியோருக்கு இடையே நடைபெற்ற போராட்டத்தைப் பற்றிய திரைப்படம்” என படக்குழுவினரே வெளிப்படையாக அறிவித்திருக்கிறார்கள்.   

மஞ்சு மனோஜ், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாராம். மஞ்சு மனோஜின் அப்பா தெலுங்கு நடிகர் மோகன் பாபு, ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.  

இத்திரைப்படத்தின் முதல் பார்வையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டார்கள். அதை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட திரைப்படத்தின் நாயகன் மஞ்சு மனோஜ், “தமிழ்ப் புலிகள் மற்றும் இலங்கை, உண்மைக் கதையின் அடிப்படையில்...” எனக் குறிப்பிட்டுள்ளார்.  

இத்திரைப்படத்தில் நாயகியாக ரெஜினா நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படத்தை தமிழிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளார்கள். 

http://www.tamilmirror.lk/185117

Link to comment
Share on other sites

பிரபாகரனாக நடிக்கும் தெலுங்கு நடிகர்.!

 

 

news_image_1.jpg

தமிழிழ விடுதலைக்காக போராடிய போராளி வேலுபிள்ளை பிரபாகரன் கேரக்டரில் தெலுங்கு நடிகர் மஞ்சு மனோஜ் ஒரு படத்தில் நடிக்கிறார். 

தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகனான இவர் ‘என்னை தெரியுமா?’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கும் அறிமுகமானவர். இவர் தற்போது அஜய் ஆண்ட்ரூஸ் என்பவர் இயக்கி வரும் ‘ஒக்கடு மிகிலடூ’ என்ற படத்தில் வேலு பிள்ளை பிரபாகரன் கேரக்டரில் நடித்து வருகிறாராம். இதன் பர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது. 

பிரபாகரன் பற்றி தமிழ் ரசிகர்களுக்கு தெரியவேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ இப்படம் தெலுங்கில் மட்டும் வெளியாகும் என்கிறார்கள் படக்குழுவினர்.

தகவல் : சென்னை அலுவலகம்

http://www.virakesari.lk/article/13002

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.