Jump to content

நான் எப்படி புகைப்பதை நிறுத்தினேன்?


Recommended Posts

cigar_3061339f.jpg
 

புகைத்தல் வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய்

புது வருஷத்தைத் தொடங்கும்போது “இந்த வருஷமாவது சிகரெட் பிடிக்கிறதை நிறுத்திடணும்” என்று வைராக்கியத்துடன் கிளம்புபவர்கள் பொங்கல் முடிவதற்குள் புகைபிடிப்பதை மீண்டும் தொடர்வதைப் பார்த்திருப்போம். பலரும் சொல்வதைப் போல் புகைப் பழக்கத்தை நிறுத்துவது சற்று சிரமமான காரியம்தான். ஆனால், மனது வைத்தால் முடியாதது எதுவும் இல்லை. எனது அனுபவமே அதற்கு உதாரணம்.

அப்பா ஆசிரியர். ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டவர். ஆயுளுக்கும் பள்ளிக் கூடத்தில் தொண்டை வறளக் கத்தியதும், ஓய்வுநேரத்தில் புகைத்த கோபால் பீடிகளும் அவருக்குத் தீராத இருமலைத் தந்தன. பள்ளியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, திடீரென்று ஆஸ்துமா தாக்குலுக்கு ஆளாகி, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவமனையில் இருந்த நாட்களில் புகைக்க வழியில்லை. கொர்...கொர்… என்று மூச்சுத் திணறல்களுக்கு இடையே பீடி வேண்டும் என்று கேட்டார். நான் முடியாது என்று மறுக்க, இருமிக்கொண்டே திட்டினார். அதில் கோபத்தைவிட கெஞ்சல்தான் அதிகம் இருந்தது. கடைசியில் மனது கேளாமல், நர்ஸ்களுக்குத் தெரியாமல் பீடியும் தீப்பெட்டி யும் கொடுத்தேன். அடுத்த நாள் அவர் இறந்துபோனார்.

தவறான நம்பிக்கைகள்

புகைப் பழக்கம் ஒரு மனிதனை இவ்வளவு தவிக்க வைக்குமா என்று ஆச்சரியமாக இருந்தது. பீடி - சிகரெட்டுகள் மீது, புகைப்பவர்கள் மீது கோபமும் வெறுப்பும் வந்தது. புகையை இவ்வளவு வெறுத்த நான் எப்படி, எப்போது, யாரிடமிருந்து பழகினேன் என்று நினைவில்லை. எப்படியோ பழகிவிட்டேன். சுமார் 40 ஆண்டுகளாகப் புகைத்துவந்திருக்கிறேன். புகைப்பதை வெறுத்தவன் படிப்படியாக புகைப்பதைப் போற்றுபவன் ஆகிப்போனேன். புகைப்பது ஒரு ஸ்டைல், ஆண்மகனின் அடையாளம், புகைப்பது மூளையைச் சுறுசுறுப்பாக்கும், பதற்றத்தைக் குறைக்கும், கவலையை மறக்கடிக்கும்... இப்படிப் பலவித தவறான நம்பிக்கைகளால் கட்டுண்டு கிடந்தேன்.

குடும்பத்தினர் அல்லது நண்பர்களின் அறிவுரைகள், அல்லது பொருளாதாரச் சிக்கல்கள், அல்லது உடல் ஆரோக்கியம் கெடுதல் போன்ற காரணங்களால் புகைப்பதை விட்டொழிக்கும் ஆசை அவ்வப்போது தலை தூக்கும். முயற்சிசெய்வோம், தோற்போம், அல்லது தற்காலிக வெற்றி பெறுவோம், மீண்டும் புகைக்கத் தொடங்குவோம்.

புகைப் பழக்கம் ஒரு நோய்

புகையிலைப் பழக்கத்துக்கு அடிமையாகி யிருக்கும் நாடுகளில் முதன்மையானவை ஆசிய நாடுகள்தான். குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் போன்றவை. இந்த நாடுகளில் உள்ள மக்களின் மொழிகளில் புகைப் பழக்கத்துக்கு எதிரான தகவல்கள் கிடைக்காதிருப்பது துரதிர்ஷ்டம்தான். இங்கே கிடைப்பவை எல்லாம் பெரும்பாலும் மிரட்டல்கள்தான். பொது இடங்களில் புகைக்கக் கூடாது போன்ற சட்டங்களால் புகைப் பழக்கத்தை ஒழித்துவிட முடியாது. புகைத்தல் என்பது வெறும் பழக்கமல்ல, அது ஒரு நோய். புகைப்பவன் ஒரு நோயாளி. தான் நோயாளி என்று அறியாத நோயாளி. புகைப்பவரை ஒரு நோயாளியைக் கையாள்வதுபோல எச்சரிக்கையாகக் கையாள வேண்டும்.

புகைப்பதை நிறுத்துவதற்கான பயனுள்ள ஆலோசனைகள், தகவல்கள் இணையத்தில் ஆயிரக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. நேரடியாக மிரட்டாமல், உளவியல்ரீதியாகப் புரியவைக்கும் மென்மையான மொழியில், ஆலோசனைகள் கிடைக்கின்றன.

ஒரு மாதத்துக்கு முன்னர், ஒரு மாலை நேரத்தில் புகைப்பதை நிறுத்துவது என முடிவுசெய்தேன். சிகரெட் பாக்கெட்டில் இரண்டு சிகரெட்டுகளும், மேசையில் லைட்டர்களும் ஆஷ்ட்ரேவும் இருந்தன. மூன்றையும் துணைவியார் கையில் கொடுத்து, குப்பையில் போடச் சொன்னேன். 28 ஆண்டு கால மண வாழ்க்கையில் நம்பவே முடியாத வியப்பை அவருடைய பார்வை வெளிப்படுத்தியது. ஒரு திடீர் கணத்தில் தூண்டலால் உந்தப்பட்டு எடுத்த முடிவுதான் அது. ஆனால், அந்த முடிவில் உறுதியாக நின்றேன். ஃபேஸ்புக்கில் அதைப் பற்றி எழுதினேன். ஏராளமானோர் வாழ்த்தினார்கள். பலர் தானும் விட்டொழிக்க முன்வந்தார்கள். அதன் பிறகு சிகரெட்டின் தீமைகள் குறித்துத் தொடர்ந்து எழுதினேன். பலருக்கு தொலைபேசி வழியிலும், உரையாடல் வழியிலும் ஆலோசனைகள் வழங்கி ஊக்குவித்தேன். சிலர் என்னோடு சேர்ந்து முற்றிலுமாக நிறுத்தியிருக்கிறார்கள்.

புகையை வெல்ல…

தினமும் புகைக்கும் சிகரெட் எண்ணிக்கையைப் படிப்படியாகக் குறைத்து விட்டொழிப்பேன் என்று நினைக்காதீர்கள். புகைப்பதை நிறுத்துவது என்று முடிவுசெய்தால் ஒரேயடியாக விட்டொழிக்க வேண்டும். உறுதியெடுத்த அந்தக் கணமே கையில் இருக்கிற சிகரெட்டுகளை உடைத்துத் தூக்கியெறிவது அவசியம்.

சிகரெட்டை நிறுத்துவதென முடிவுசெய் வதற்குக் கால அவகாசம் தேவை என்றால், உங்கள் பிறந்தநாள், மணநாள், அல்லது பிள்ளைகளின் பிறந்தநாள் போன்ற ஏதேனுமொரு விசேஷ நாளில் விட்டொழிக்க முடிவுசெய்யலாம். சிகரெட்டை விட்டொழித்த நாள்தான் மிகச் சிறந்த விசேஷ நாள் என்பதை மறந்துவிடக் கூடாது. எதற்கும் அவசரத்துக்கு இருக்கட்டும் என்று சிகரெட்டைக் கையிருப்பில் வைத்திருக்காதீர்கள். லைட்டர், தீப்பெட்டி, ஆஷ்ட்ரே எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடுங்கள்.

உறுதிமொழியும் ஆதரவும்

புகைப்பதை நிறுத்தப்போகிறேன் என்ற செய்தியை உங்கள் மீது அக்கறையுள்ள, உங்களுக்கு நெருக்கமாக உள்ளவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். அது ஒருவகையில் உறுதிமொழி எடுத்துக்கொண்டதுபோல் ஆகும். உங்கள் மீது அக்கறை உள்ளவர்கள் உங்கள் முயற்சிக்கு ஆதரவும் அளிப்பார்கள்.

சிகரெட் பிடிப்பதால் பிரச்சினைகள் தீர்வ தில்லை. உண்மையில், பிரச்சினையை எதிர்கொள்ள நாம் புகைக்கும் சிகரெட்டே பல பிரச்சினைகளுக்குக் காரணமாகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள். புகைப்பதை நிறுத்திய முதல் இரண்டு நாட்களைவிட அதற்கடுத்த நாட்களில்தான் சிகரெட் ஏக்கம் அதிகமாக இருக்கும். ஒரே ஒரு சிகரெட் புகைத்தால் என்ன குறைந்துவிடும் என்ற எண்ணம் அடிக்கடி வரும். அது ஆபத்து. அந்த ஒரு சிகரெட் ஒருபோதும் ஒன்றோடு நிற்காது.

புகைப் பழக்கத்தை நிறுத்தும்போது உடல் நிகோடினுக்காக ஏங்கும். அதை நிவர்த்திசெய்ய நிகோடின் கலந்த பபுள் கம் அல்லது மின்னணு சிகரெட்டுகள் போன்றவை இப்போது பரவலாக விளம்பரம் செய்யப்படுகின்றன. இது எப்படி என்றால், கஞ்சா போதையிலிருந்து வெளியேற அபின் சாப்பிடலாம் என்பதுபோல. தேவையில்லை. நம் மனவுறுதியைக் காட்டிலும் வேறு எதுவும் துணையில்லை.

புகைக்காமல் இருந்தமைக்காக உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள், பெருமைப் படுங்கள். சிகரெட் வாங்காமல் சேமித்த பணத்தைக் கொண்டு உங்களுக்கு நீங்களே பரிசளித்துக்கொள்ளுங்கள். அந்தப் பணத்தில் குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுங்கள். அந்த சந்தோஷமே தனி!

- ஆர்.ஷாஜஹான், எழுத்தாளர்.

தொடர்புக்கு: shahjahanr@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/நான்-எப்படி-புகைப்பதை-நிறுத்தினேன்/article9279634.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புகை பிடிப்பவரா பார்த்து திருந்தாவிட்டால்  அதனை தடுக்கவும் இயலாது நிறுத்தவும் இயலாது 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

புகைப்பதை நிறுத்தும் மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?

cigar1_3088987f.jpg
 
 

திடமான மனவுறுதி இருந்தால், ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடலாம்

புகைப் பழக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் பலரும் புகையை வெல்வதற்குச் சொல்லும் முக்கியமான வழி மனவுறுதி. சமீபத்தில் ‘தி இந்து’வில் வெளியான ஷாஜஹானின் கட்டுரைகூட இதை ஆழமாகச் சொல்லியிருந்தது. ஆனால், அந்த மனவுறுதி இல்லாமல் அவதிப்படுபவர்கள்தான் நம்மிடம் அதிகம். அந்த மனவுறுதியை எங்கிருந்து பெறுவது?

ஒரு மருத்துவராக, புகைப் பழக்கத்தை ஒருவரின் தனிப்பட்ட பழக்கமாக அணுகுவதைக் காட்டிலும், சமூகப் பிரச்சினையாக அணுகுமாறு நான் எல்லோரிடமும் கேட்டுக்கொள்வேன். இன்றைக்குப் புகைப் பழக்கம் நம் சமூகத்தில் எப்படி ஊடுருவியிருக்கிறது என்பதைக் கவனித்தால், இதன் பின்னணியை எளிதில் உணர்ந்துகொள்ள முடியும்.

நான்காயிரம் நச்சுகள்

உலக அளவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்தான் புகைப்பவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்தியாவில் மட்டும் 12 கோடிப் பேர் புகைபிடிக்கிறார்கள். இதில் ஆண்களில் 30%, பெண்களில் 5% பேர் புகைப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர். இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புகைபிடிப்பதால் மட்டுமே இறக்கிறார்கள் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கெடுப்பு.

மனித உடலில் நுழைவதன் மூலம், ஒரே நேரத்தில் பல உறுப்புகளைத் தாக்கும் வல்லமை கொண்ட பொருட்களில் புகையிலையே முன்னிலையில் இருக்கிறது. புகையிலையில் நச்சுகளின் எண்ணிக்கை நாலாயிரத்துக்கும் மேல். அவற்றில் மிக அபாயகரமான நச்சு நிகோடின்! இது ஒரு போதைப் பொருள். பீடி,சிகரெட்,சுருட்டு, வெற்றிலைச் சீவல், மூக்குப் பொடி, பான்மசாலா எனப் பல வேடங்களில் இது உடலுக்குள் செல்கிறது. கொரோனரி ரத்தக் குழாயைச் சுருங்கவைத்து, மாரடைப்பைக் கொண்டுவரக் கூடியது நிகோடின். புகை பிடிப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகை பிடிக்காதவர்களைவிட ஐந்து மடங்கு அதிகம் என்கிறது உலக இதய நோய்க் கழகம்.

புகையிலையும் புற்றுநோயும்

மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை நிறுத்திப் பக்கவாதம் உருவாவதற்கான சூழலை உருவாக்குவதிலும் நிகோடின் முன்னிலை வகிக்கிறது. ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தி, கால் விரல்களை அழுகவைத்து, காலையே வெட்டி எடுக்க வேண்டிய நிலைமைக்குத் தள்ளுவதும் உண்டு. நுரையீரல் புற்றுநோய்க்கு மூலகாரணங்களில் ஒன்று புகைப் பழக்கம். புகை பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு, புகை பிடிக்காதவர்களைவிட 25 மடங்கு அதிகம். தவிரவும், வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, கணையம், சிறுநீர்ப்பை, புராஸ்டேட் என்று பல இடங்களில் புற்றுநோயை உருவாக்கும் காரணங்களிலும் புகை முன்னணியில் இருக்கிறது. ‘சிஓபிடி’(Chronic Obstructive Pulmonary Disease) என அழைக்கப்படும் ‘நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோயை’வளர்ப்பதில் முதலிடம் வகிப்பதும் இதுதான். முன்பெல்லாம் இது 50 வயதைத் தாண்டியவர்களுக்கே வந்தது. இப்போது 30 வயதிலும் வருகிறது. இதற்கு பிரதான காரணமாகக் குறிப்பிடப்படுவது, 13 வயதிலேயே புகைக்கும் பழக்கம் பலரிடமும் உருவாகிவிடுகிறது என்பதாகும். ஆக, இது ஒரு சமூகப் பிரச்சினை.

ஒருவர் புகைப்பதை அவருடைய தனிப்பட்ட சுதந்திரம் என்று நாம் அப்படியே கடக்க முடியாது. புகையிலிருந்து அவரை மீட்க நம்முடைய கரிசனம் அவசியம். ஏனென்றால், நடுவயதில் ஒருவர் புகைப்பதை நிறுத்தினாலும் ஆயுள் நீடிக்கும். புகைக்கும் பழக்கத்துக்கு விடை கொடுத்தால், ஒருவருக்கு ஏற்கெனவே உள்ள மாரடைப்புக்கான வாய்ப்பில் 30% ஒரே வருடத்தில் குறைந்துவிடுகிறது. புகைப்பதை நிறுத்திய 5 ஆண்டுகளில் பக்கவாத வாய்ப்பு பெரிதும் அகல்கிறது. வாய், தொண்டை, உணவுக் குழாய், இரைப்பை, சிறுநீர்ப்பை ஆகிய இடங்களில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு பாதியாகக் குறைந்துவிடுகிறது. புகைப்பதை நிறுத்திய 10 ஆண்டுகளில், நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் பாதியாகிவிடுகிறது.

புகைப்பதை நிறுத்த வழிகள்

நம் முன்னே நிற்கும் பெரும் சவால், “நான் புகைப்பதை நிறுத்தத்தான் நினைக்கிறேன். அதற்கு நான் என்ன செய்வது?” என்ற கேள்வி. சரியான வழிகாட்டுதல் இல்லாமல், இந்தப் பழக்கத்தைத் தொடர்கிறவர்களே அதிகம். திடமான மனவுறுதி இருந்தால், ஒரே நாளில் புகைப்பதை நிறுத்திவிடலாம் என்ற உண்மையை ஆழமாக நம்புவதே புகையிலிருந்து விடுதலை அடைவதற்கான அடிப்படை நிலை.

புகையிலிருந்து விடுபட்டவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனுபவத்தைச் சொல்கிறார்கள். முதலில் சிகரெட்டுகளின் எண்ணிக்கையைக் குறைத்து, பிறகு புகைக்கும் நேர இடைவெளியைக் கூட்டி, புகைக்கும் நினைப்பு வரும்போதெல்லாம் கவனத்தை வேறு திசைக்குத் திருப்பும் நடவடிக்கைகளில் இறங்கி - இப்படி என்னென்னவோ வழிகளைக் கையாண்டு விடுதலையானவர்கள்கூட உண்டு. “எப்போதெல்லாம் புகைக்கும் எண்ணம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் என் மனைவியுடனோ, பிள்ளைகளுடனோ பேசிவிடுவேன். செல்பேசியிலாவது. அவர்கள் முகமே என் நினைப்பை மாற்றிவிடும்” என்று சொன்னார் ஒரு நோயாளி. இப்போதெல்லாம் புகைப்பதை மறக்கச் செய்யும் மாத்திரைகள்கூட வந்துவிட்டன. மருத்துவர்களின் ஆலோசனையோடு இந்த மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம். இன்னும் நாள்பட்ட புகை நோயாளிகளை விடுவிக்க நிகோடின் கலந்த சூயிங்கம், பட்டைகள் போன்றவைகூட வந்துவிட்டன. உதாரணமாக, பிளாஸ்திரி போன்ற நிகோடின் பட்டைகளை முடி இல்லாத முன்கையில்/தொடையில் ஒட்டிக்கொண்டால், மிகக் குறைந்த அளவிலான நிகோடின் தோல் வழியாக ரத்தத்துக்குச் சென்று, புகைக்கும்போது ஏற்படும் அதே உணர்வைக் கொடுக்கும். இதனால், புகைக்கும் ஏக்கம் குறையும். அதேசமயம், கையில் சிகரெட்டைத் தொடவில்லை எனும் உண்மை நாளடைவில் மனஉறுதியை உண்டாக்கி, அதுவும் வேண்டாம் என்று புகையிலிருந்து முழுவதுமாக விடுவிக்கும்.

புகைக்கும் பழக்கத்திலிருந்து விடுவிக்க அரசாங்கம் நிறையவே நடவடிக்கைகளை எடுக்கிறது. எனினும், வெறுமனே “புகைக்காதீர், புகை நமக்குப் பகை” என்றெல்லாம் வெற்றுப் பிரச்சாரத்தில் ஈடுபடுவதைக் காட்டிலும், புகையை வெல்வதற்கு ஆக்கபூர்வமான வழிகள், சிகிச்சை முறைகள் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடத்தில் கொண்டுசெல்வது பலன் அளிக்கும். புகைப்பதிலிருந்து விடுபடுவதற்கான சிகிச்சைகளையும் மாத்திரைகளையும் சிறு நகரங்களிலுள்ள அரசு மருத்துவமனைகள் வரை கொண்டுசெல்வது கூடுதல் பலன் அளிக்கும்!

-கு.கணேசன்,

பொதுநல மருத்துவர்,

தொடர்புக்கு: gganesan95@gmail.com

 

http://tamil.thehindu.com/opinion/columns/புகைப்பதை-நிறுத்தும்-மனவுறுதியை-எங்கிருந்து-பெறுவது/article9373479.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் இருபது வருடங்களாக புகைத்தவன்.......புகைத்தலை விட்டு பத்தொன்பது வருடங்களாகின்றது. எல்லாம் மனம்தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

40  வருடங்களுக்கு மேலாக... சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது.
விட வேண்டும் என்று... ஒவ்வொரு வருட இறுதியிலும், புது வருட சபதம் எடுப்பேன்.
அந்தச் சபதம் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது.
2017 ´ம்  ஆண்டிருந்து புகைப்பதை.. கைவிட வேண்டும் என்று.. புதிய சபதம் எடுக்க இருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

30 minutes ago, தமிழ் சிறி said:

40  வருடங்களுக்கு மேலாக... சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளது.
விட வேண்டும் என்று... ஒவ்வொரு வருட இறுதியிலும், புது வருட சபதம் எடுப்பேன்.
அந்தச் சபதம் மூன்று நாட்களுக்கு மேல் தாக்குப் பிடிக்காது.
2017 ´ம்  ஆண்டிருந்து புகைப்பதை.. கைவிட வேண்டும் என்று.. புதிய சபதம் எடுக்க இருக்கின்றேன்.

வாழ்த்துக்கள்

(ஓ கையில சிகரெட்டை வைத்துக் கொண்டு வாழ்த்து சொல்லக்கூடாதோ)

எனக்கும் 29 வருடமா இந்த பழக்கம் இருக்கு. சென்ற வருடம் இங்கு வந்தபோது 680 ரூபாக்கு வாங்கிய ஒரு பாக்கெட் இப்போது 990 ரூபா. எனக்கு சிக்ரெட்ட்டை விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை - ஆனால் சிகரெட்டுக்குத்தான் என்னை விட விருப்பம் இல்லையாம். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஜீவன் சிவா said:

வாழ்த்துக்கள்

(ஓ கையில சிகரெட்டை வைத்துக் கொண்டு வாழ்த்து சொல்லக்கூடாதோ)

எனக்கும் 29 வருடமா இந்த பழக்கம் இருக்கு. சென்ற வருடம் இங்கு வந்தபோது 680 ரூபாக்கு வாங்கிய ஒரு பாக்கெட் இப்போது 990 ரூபா. எனக்கு சிக்ரெட்ட்டை விடுவதில் எந்த பிரச்சனையும் இல்லை - ஆனால் சிகரெட்டுக்குத்தான் என்னை விட விருப்பம் இல்லையாம். :grin:

முடியல..... :grin:  Smiley smoking 030.gif

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.