Jump to content

தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார்.


Recommended Posts

தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார்.

அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் தென்னிந்திய மொழிகள் துறைத்தலைவராகப் பணியாற்றிய தமிழறிஞர் து.மூர்த்தி காலமாகிவிட்டார். வார்ஸா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணியாற்றியவர் இவர். தமிழியல் ஆய்வுகளில் ஆர்வம் கொண்ட பேராசிரியர் து.மூர்த்தி மார்க்சியம், பெரியாரியம், தமிழ்த்தேசியம் ஆகிய அரசியல் கருத்தாக்கங்களிலும் ஆழமான பற்று கொண்டவர். ’தமிழியல் புதிய தடங்கள்’ என்ற இவரது நூல் தமிழியல் ஆய்வில் முக்கியமான புத்தகம். 1989 : அரசியல் சமுதாய நிகழ்வுகள், தனிமையில் தவிக்கும் குழந்தைகள் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். ‘பெரியாரும் தமிழ்த்தேசியமும்’ என்ற இவரது குறுநூல் பெரியார் மீது முன்வைக்கப்பட்ட தமிழ்த்தேசிய நோக்கிலான விமர்சனங்களைக் கணக்கிலெடுத்துக்கொண்டு விரிவான பதில்களை முன்வைத்தது. பெரியாரின் மீதும் ஆனைமுத்துவின் மீதும் மாறாத நேசம் கொண்டது. மூர்த்தி மார்க்சிய லெனினிய இயக்கங்களின் ஆரம்பகாலகட்டங்களில் அதன் அனுதாபியாகவும் இருந்தார்.

14875231_10209670959904272_1528093784_n_

 

து.மூர்த்தியுடனான தனது அனுபவங்களைக் குறிப்பிடத்தக்க மனித உரிமைப் போராளி பேராசிரியர்.அ.மார்க்ஸ் தன் ஃபேஸ்புக்கில் எழுதியிருப்பதாவது :

’’தூய தமிழிலேயே இலக்கணமாக உரையாடும் அளவுக்குத் தமிழ்ப் பற்றுடையவர். தந்தை பெரியார் மீதும் அவர் வழி வந்த ஆனைமுத்து அவர்கள் மீதும் மிக்க மரியாதை உடையவர். இறுதிவரை பெரியவர் ஆனைமுத்து அவர்கள் இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்.
கல்லூரிப் பருவத்தில், அன்று அவரது வட ஆற்காடு மாவட்டத்தில் எழுச்சியுடன் இருந்த நக்சல்பாரி இயக்கங்களின் தாக்கத்தால் அரசியலுக்கு ஈர்க்கப்பட்டவர். தோழர் பாலன் காவல்துறையால் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டபோது சென்னை அரசு மருத்துவமனை வாசலில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, கடும் போலீஸ் கெடுபிடிகளுக்கு மத்தியில் தான் காத்திருந்த கதையை அவர் விவரிக்கும்போதெல்லாம் உணர்ச்சி வயப்படும் காட்சியை என்னால் மறக்க இயலாது.
மாநிலக் கல்லூரியில் பட்ட மேற்படிப்பு முடித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் "தமிழ், மலையாளத்தில் உள்ள பொதுவான சொற்கள் குறித்த ஆய்வு" எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கியபோது விரிவுரையாளர்களில் ஒருவராகப் பணி ஏற்றார். அப்போதுதான் எனக்கும் அவருக்கும் நெருங்கிய பழக்கம், 'கைலாசபதி இலக்கிய வட்டம்' எனும் பெயரில் நான், அவர், பேரா. இராம சுந்தரம் ஆகியோர் இணைந்து செய்த பணிகள், நடத்திய ஆய்வரங்குகள் ஏராளம்.
1983 யூலை படுகொலையை ஒட்டி இங்கு ஒரு ஈழ ஆதரவு அலை எழும்பியபோது தஞ்சையில் நாங்கள் நடத்திய ஆதரவுக் கூட்டங்கள் வெளியிட்ட இரண்டு முக்கிய பிரசுரங்கள் தமிழகத்திலும் ஈழத்திலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தன.
ஈழத்தின் புகழ்பெற்ற இடதுசாரித் தலைவர் தோழர் சண் அதற்கு ஒரு மறுப்புரை எழுதும் அளவுக்கு அது கவனம் பெற்றது. டானியல் அவர்களின் பஞ்சமர் நாவலைத் தஞ்சையில் நாங்கள் வெளிய்யிட்ட நிகழ்வும் குறிப்பிடத்தக்க ஒன்று”

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியைச் சேர்ந்த பேராசிரியர் து.மூர்த்தியின் உடல், எந்தவித சடங்குமின்றி வேலூர் சி.எம்.சி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொடையாக வழங்கப்படவிருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/70522-tamil-scholar-moorthi-passed-away.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.