Jump to content

இலங்கையின் புனிதநகரத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் புனிதநகரத் திட்டத்தை தமிழ்நாட்டில் ஏன் நடைமுறைப்படுத்த முடியாது?

இலங்கையில் பழமையான, புராதனச் சின்னங்களும், கோயில்களும் புனித நகராக அரசால் அறிவிக்கப்படும். அந்தப் புனித நகரத்தின் தொன்மையையும், புனிதத்தையும் குலைக்கும் வகையில் அந்தக் கோயிலைச் சுற்றியும் அதன் அண்மையான பகுதிகளிலும் புதுக் கட்டிடங்களோ, வேற்று மதச் சின்னங்களோ, சிலைகளோ, கோயில்களோ அனுமதிக்கப் படுவதில்லை.

தமிழ்நாட்டின் பல நகரங்களில் நான் பார்த்த அசிங்கமான தோற்றம் என்னவென்றால் பழம்பெரும், புராதனக் கட்டிடக் கலையுடன், தமிழ் முன்னோர்களின் சிற்பக் கலையின் சிறப்பையும், பழம் பெருந்தமிழரசர்களின் சரித்திரத்தையும் பறைசாற்றும் வகையில் அமைந்த கோயில்களுக்கு அருகாமையிலேயே, அந்தக் கோயில்களின் பழமையையும், புனிதத்தையும் பழிப்பது போல் புதுப்புது சிமெண்டினாலான கிறிஸ்தவ, இஸ்லாமியக் கட்டிடங்கள் எழுப்பப் படுகின்றன.

இலங்கையில் போன்று தமிழ்நாட்டின் பழமையான கோயில்களையும், அதன் சுற்றுப் புறப் பகுதிகளையும் புனிதநகராகப் பிரகடனத்தப்படுத்தி, புராதனச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கையில் இதைச் செய்ய முடியுமென்றால் தமிழ்நாட்டு அரசால் அல்லது மத்திய அரசால் இதை நடைமுறைப் படுத்துவது பெரிய காரியமல்ல.

இந்தியாவில் இந்துக்கள் எல்லாம் புத்தரும் இந்து தான் என்று சொந்தம் கொண்டாடி ஆப்கானிஸ்தானின் பாமியன் புத்தர் சிலைக்காகக் கண்ணீர் வடித்தார்கள், ஆனால் இலங்கையில் சிங்கள பெளத்தர்களோ இந்துக் கோயில்களை, எத்தனை ஆயிரமாண்டுகள் பழமையானதாக இருந்தாலும் புனிதநகரமாகப் பிரகடனப்படுத்த மாட்டார்கள், ஏனென்றால் சைவக்கோயில் நிலங்களை ஆக்கிரமித்து, சைவக்கோயில்களுக்கெதிராக புத்த விகாரைகளைக் கட்டி சிங்களவர்களைக் குடியேற்றி, தமிழர்களை அந்தப் பிரதேசங்களில் சிறுபான்மையினராக்குவது தான் நோக்கம்.

அப்படியான புனிதநகர திட்டத்தை அமுல்படுத்துமாறு நான் கூறவில்லை, எல்லா மதங்களுக்கும் சமமான புனிதநகரதிட்டம். இது பழமையான இந்துக் கோயில்களுக்கு மட்டுமல்ல, நாகூர் போன்ற இஸ்லாமியத் தலங்களுக்கும், வேளாங்கண்ணி போன்ற கிறிஸ்தவ புனித நகரங்களுக்கும் பொருந்தும். அங்கும் குறிப்பிட்ட எல்லைக்குள் புதிதாக இந்துமதக் கோயில்கள், வேற்றுமதச் சின்னங்கள், சிலைகள் அனுமதிக்கப்படக் கூடாது.

வெளிநாடுகளில் 100 ஆண்டுகளுக்குக் குறைந்த கட்டிடங்களையே பழமையானதாகக் கருதிப் பாதுகாக்கிறார்கள், நான் சொல்வதெல்லாம் குறைந்தது 1000 ஆண்டுகள் பாரம்பரியமுள்ள கோயில்களின் புனிதத்தையாவது காக்க வேண்டுமென்பது தான்.

நான் தமிழர்களின் சிற்பக் கலையும், வரலாறும் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதை மதப்பற்று எனத் திரித்தால் அதைப்பற்றிக் கவலையில்லை, ஏனென்றால் மற்றவர்களைப் போல் நாமும் மதப்பற்றுடன் இருப்பதில் தவறேதுமில்லை.

கிறிஸ்தவ நாடுகளிலெல்லாம் நாங்கள் இந்துக் கோயில்களைக் கட்டுகிறோம் அவர்கள் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போது நாங்களும் தமிழ்நாட்டிலோ, ஈழத்திலோ கிறிஸ்தவக் கோயில்கள் கட்டப்படும் போதும் எதிர்ப்புத் தெரிவிக்க முடியாது, ஆனால் உண்மையில் எனக்கு ஆத்திரமூட்டுவது எதுவென்றால், பழமை வாய்ந்த, புராதனச் சின்னங்களான கோயில்களுக்குப் பக்கத்தில் கூட அவற்றின் அழகையும், தொன்மையையும், அதன் புனிதத்தையும் குலைக்கும் வகையில் புதுப் புது மிஸனரிமாரினதும் வேற்றுமதக் கட்டிடங்கள் தோன்றி, பழமையான கோயில்களுக்கு நையாண்டி காட்டிச் சவால் விடுவது தான்.

இலங்கையில் கோயில் மதிலைச் சுற்றியோ, கோயிலுக்கு மிக அருகாமையிலோ கடைகள் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் தமிழ்நாட்டில் பழமையான, புனிதமான கோயில்களுக்கு முன்னால் புஹாரி ஹோட்டல் இருக்கும், அர்ச்சனையை முடித்து விட்டு, கோயில் வாசலைக் கடந்தால் கோழி புரியாணி மூக்கைத் துளைக்கும், இப்படியான செயல்கள் மிகவும் அருவருக்கத் தக்கவை, பள்ளிவாசலுக்கு முன்னால், பன்றியிறைச்சிக் கடை வைத்தால் இஸ்லாமியர்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

இந்தக் கொடுமையிலும், கொடுமை என்னவென்றால், மதுரை மீனாட்சி கோயில் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலக இந்துக்கள் அனைவருக்கும் புனிதமானது, மத வேறுபாடற்று முழுத்தமிழர்களாலும் பாதுகாக்கப் பட வேண்டியது. இலங்கையில் கோயிலுக்கு அண்மையிலேயே கடைகளை அனுமதிக்க மாட்டோம், அங்கு கோயிலுக்குள்ளேயே கடைகள், ஒரு கடையின் ஒரமாக தூண்பக்கமாக நான் கழற்றி விட்டுப் போன சப்பாத்தைப் போடப் போனால் அங்கிருந்து கோழி எலும்பைக் கடித்துச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார் ஒருவர். உண்மையில் எந்தளவுக்கு வேதனைப்பட்டேன் என்பதை விவரிக்க முடியாது, அவர் கோழி சாப்பிடுகிறார் என்பதற்காக அல்ல. இலங்கையில் நாங்கள் கோழியை வீட்டில் சாப்பிட்டால் கூட கோயிலுக்குப் போக மாட்டோம்.

அண்மைக்காலம் வரை கம்யூனிச நாடாகவிருந்த ரஸ்யாவில் கூட, அமெரிக்காவிலிருந்து போகும் புதுப்புது மிசனரிமாரின் கிறிஸ்தவம், பழமை வாய்ந்த ரஸ்யாவின் பழமைவாத, கிழக்கு ஐரோப்பிய கிறிஸ்தவத்துக்கு பங்கம் ஏற்படுத்துவதாகக் கருதி, அமெரிக்க மிசனரி , விவிலிய போதனை (Evangelical Christianity) யைக் கட்டுப்படுத்தத் தொடங்கி விட்டார்கள்.

கம்யூனிசம் பேசிய, அதில் வளர்ந்த ரஸ்யாவின் தலைவர்கள் தமது பழமையான கிறிஸ்தவத்தை, இன்னொரு கிறிஸ்தவத்திடமிருந்து பாதுகாக்க முனைவதும் மதவெறியா? இல்லை அவர்கள் தமது நாட்டின் பழமையைப், பாரம்பரியத்தைப் பேணவிரும்புகிறார்கள். அப்படித் தான் இதையும் நினைத்துச் செயல் படவேண்டும்.

இருந்தாலும், எந்தத் தமிழர்களும் வத்திக்கானின் St. Paul Church க்கு அல்லது ஜேர்மனியில் கொலோன் தேவாலயத்துக்குப் பக்கத்திலோ, மெக்காவிலோ இந்துக் கோயிலைக் கட்டுவதற்கு யாரும் அனுமதிக்கப் போவதில்லை,

அதனால் தமிழ்நாட்டின் புராதனமான கோயில்களும் புனித நகரங்களாகப் பிரகடனப் படுத்தப்பட்டு, புதிய கட்டிடங்கள், வேற்று மதச் சின்னங்கள் அகற்றப் பட வேண்டும், அல்லது இனிமேலாவது கட்டப்படாமல் தடை செய்யப்பட வேண்டும்.

இதற்கு உங்களின் கருத்து என்ன? இதை நடைமுறைப் படுத்துவது மதவெறிக்காக அல்ல, புராதனச் சின்னங்களை, எகிப்தியர்கள் சிலைகளை வெறுக்கும் முஸ்லீம்களாக இருந்தாலும் பிரமிட்டுக்களை பாதுகாப்பது போல், தமிழர்களும் தமது பாரம்பரியத்தை, தமிழர்களின் சரித்திரத்தை, தமிழர்களின் கட்டிடக் கலையை, அழகும், புனிதமும் கெடாமல் பாதுகாப்பதற்காகத் தான்.

இணையத்தில் சுட்டது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

******** அது தமிழ்தேசியவிடுதலைப் போருக்கு ஆதரவாகத் தான் எழுதுவதாக நான் உணருகின்றேன்.

யாழ்களத்தின் விதிகளில் ஒன்றே, குறித்த கட்டுரை ஒன்றை இணைக்கின்றபோது, அது எங்கிருந்து பெறப்பட்டது என்பதைச் சொல்ல வேண்டும் என்பதே! அது தான் எந்த எழுத்தாளனையும் ஊக்குவிக்கும்.

குறித்த கருத்து நீக்கப்பட்டதால் அதற்கான பதிலும் நீக்கப்பட்டுள்ளது.-யாழ்பாடி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் சுட்டது என்றால் அது தொடுப்பாகுமோ? யாழ் களத்தின் நிபந்தனை மூன்றை மீறியதாகவே இது உள்ளது.

பிற தளங்களைப் பிடிக்காவிட்டால் அங்கிருந்து இடுகைகளை எடுக்கக்கூடாதே. அப்படி இட்டால் அவர்களுக்கான தொடுப்பை மறுத்தலாகாதே.

கறுப்பி பதிந்ததை ஆரூரன் உணர்வுகள் வலைப்பூவில் பின்வரும் தொடுப்பில் இட்டிருந்தார்.

http://unarvukal-unarvukal.blogspot.com/20...g-post_284.html

இப்பவாவது தொடுப்புப் போடுவாரோ? இல்லை நிபந்தனை மூன்றை மீறுவாரோ?

இணைப்பினை பதிந்தமைக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ் ஏரியாவுக்கு வந்து, ஒரு காலில் சீலையும், ஒரு காலில் ஓலையும் கட்டி விட்டு - ஓலைக்கால், சீலைக்கால் என பழக்கியதாக எங்கள் ஊரில் சொல்வார்கள். இரு இனங்களும் தம்மை தாமே நக்கல் அடிப்பதில் வல்லவர்கள் போலும்.
    • எமது தமிழ் அரசியல்வாதிகளின் கொள்கைகள் சரியானதே. தமிழருக்கு சரியான சிங்கள மக்களுக்கு இணையான அரசியல் உரிமைகள் வேண்டும். அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் என பலவற்றை இன்னும் சொல்லலாம். இந்த விடயத்தில் கிட்டத்தட்ட அனைத்து தமிழ் கட்சிகளும் ஒரே கோட்டில் நிற்கின்றன என நான் நினைக்கின்றேன். இப்போது அதுவல்ல பிரச்சனை. தேர்தல் அரசியலில்....பிரச்சார மேடைகளில்... வெட்டுறம்... கொத்துறம்..... அடிக்கிறம்... வெட்டி தாக்கிறம்... புடுங்குறம்... பொங்கிறம்.. படைக்கிறம்... எங்கடை... உரிமைகளை.. வெண்டெடுக்கிறம்... அமெரிக்கவோட... கதைக்கிறம்... லண்டனோடை... கதைக்கிறம்... குயின்னோடை ... கதைக்கிறம்... ஐரோப்பாவோடை... கதைக்கிறம்.... என கழுதை கத்து கத்தி தேர்தலில் வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை வாழும் அந்த விஐபிக்களை ஒரு கேள்வியும் கேட்கமாட்டீர்கள். இவர்களை தேடிவரும் வெளிநாட்டு ராஜதந்திரிகளுடன் என்ன பேசினீர்கள் எனவும் கேட்கமாட்டீர்கள். வீரம் பேசும் அந்த அரசியல்வாதிகளை நம்பி வாக்கு செலுத்தும் ஒரு வாக்காளனை பார்த்து கேள்வி கேட்க உனக்கு என்ன தகுதி என கேட்பீர்கள். அந்த வாக்காளனை பார்த்து ஏதாவது சுலபமான வழி இருக்கின்றதா என கேட்ப்பீர்கள். ஆக மிஞ்சிப்போனால் நீயே தேர்தலில் நின்று பாராளுமன்றம் போய் ஏன் நல்லது செய்யக்கூடாது என்றும் கேட்பீர்கள். தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலுக்காக அரசியல் செய்வதை விட்டு வெளியே வரட்டும். அல்லது இனிவரும் காலங்களில் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தலை புறக்கணிக்கட்டும்.
    • ஆனால் இரெண்டே வருடத்தில் ஜொக்காவையும் உருவி விட்டு துரத்துவார்கள்🤣
    • நிச்சயமாக. குர்தீக்களை ஒன்றுக்கு ரெண்டு தரமும், ஆப்கானிஸ்தானில், வியட்நாமில் தம் சகபாடிகளை வச்சு செஞ்ச அமேரிக்காவும், ஆப்கான், வார்சோ, கிழக்கு ஜேர்மனி சகபாடிகளை வச்சு செஞ்ச ரஸ்யாவும், டிரம்ப் புட்டின் காலத்தில் இதை செய்ய நிறையவே சாத்திய கூறுகள் உள்ளது. #ஒரு வல்(லூறு)லரசின் மனது இன்னொரு வல்(லூறு)லரசிற்குத்தான் புரியுமாமே🤣. என்னை போன்ற நனைந்த பிஸ்கோத்துகள்தான், உக்ரேனிய இனவழி தேசிய சுயநிர்ணயம், பலஸ்தீனருக்கு நாடு, ஈரானில் பெண்ணுரிமை என அலம்பிகொண்டிருப்பது. அவர்களுக்கு இவை எல்லாமே just transactional. அதுவும் டிரம்ப் - நல்ல விலை படிந்தால் - ஜேர்மனி, நேட்டோ, அமெரிக்காவையே கூவி விற்று விடுவார்🤣🤣🤣. 
    • க‌னிமொழி போர‌ வார‌ இட‌ங்க‌ளில் எல்லாம் ம‌க்க‌ள் விர‌ட்டி அடிக்கின‌ம் ஆனால் அவா முன் நிலையில்................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.