Jump to content

மொழி கடந்த ரசனை


Recommended Posts

மொழி கடந்த ரசனை 26: கண்களில் படரும் ஒளி மேகங்கள்

 

 
 
mozhi_3146806f.jpg
 
 
 

இந்தியப் பாரம்பரிய இசை என்ற ஜீவநதியின் இரு கரைகளாக கர்னாடக இசையும் இந்துஸ்தானி இசையும் விளங்குகின்றன. இக்கரையில் இருப்பவர்களுக்கு அக்கரையைப் பற்றி அதிகம் அக்கறை இல்லாவிட்டாலும் இருகரைகளுமே நதியின் சீரான ஓட்டத்தை வழி நடத்துகின்றன என்பதை இரு தரப்பினரும் நன்றாக உணர்ந்துள்ளனர். திரை இசை இந்தப் பரிமாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

பீம்பலாஸ் என்ற இந்துஸ்தானி ராகம் (கர்னாடக இசையின் ஆபேரியின் சாயல்) தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் பல திரைப் பாடல்களின் மெட்டாக அமைந்து ரசிகர்களை மகிழ்விக்கிறது. இந்துஸ்தானி இசையில் மதியப் பொழுதிலும் முன்சந்திப் பொழுதிலும் பாடும் ராகமாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த ராகம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் கையாளப்பட்டுப் பின்னர் மதன் மோகன் இசை அமைப்பில் ராஜா மெஹதி அலி கான் எழுதிய ‘நயனா மே பத்ரா சாயே, பிஜிலி ஸீ சம்கே ஹாய்’என்று தொடங்கும் லதா பாடிய பாடலால் அதிகப் பிரபலம் அடைந்தது.

இசைத் தமிழ் நீ செய்த அரும் சாதனை நீ இருக்கையிலே எனக்கு ஏன் பெரும் சோதனை என்று தொடங்கும் கே.வி. மகாதேவன் இசை அமைப்பில் டி.ஆர். மகாலிங்கம் பாடிய கண்ணதாசனின் பாடல், பி. நாகேஸ்வர ராவ் இசை அமைப்பில் ‘பாவா மராடாலு’ என்ற தெலுங்கு படத்தில் எஸ் ஜானகி பாடிய ‘நீ மேகாலாலு’என்று தொடங்கும் பாடல் ஆகியவற்றின் மெட்டாக பீம்பலாஸ் ராகம் அமைந்துள்ளது. இந்துஸ்தானிக்கும் கர்னாடக இசைக்கும் பாலமாகத் திகழும் இந்த ராகத்தில் அமைந்த ‘மேரா சாயா’ படப் பாடலின் பொருள்:

கண்களில் படரும் ஒளி மேகங்களில்

தென்படும் உணர்வு மின்னலை விஞ்சும்

இத்தகு என் காதலன் என்னைத் தழுவுவான் அவன்

கண்களில் படரும் ஒளி மேகங்கள்.

கள்ளின் மயக்கத்தில் மூழ்கின எங்கள் கண்கள்

தள்ளாட்டத்தில் ஆட்பட்டோம் நாம் இருவரும்

ஆனால் உன் இமைகளில் விழிப்புடன் இருக்கும் நம் காதல் என்னும் அந்தப் பறவை

வெட்கத்தை ஒரு கோப்பையில் உனக்குத் தரும்

நான் ஒரு காதல் பைத்தியம் கனவுகளின் ராணி

கடந்த ஜென்மத்தில்ருந்து உன் காதல் சரித்திரமாக

நடந்து வரும் எனை இந்த ஜென்மத்திலும் உனதாக்கு

கண்களில் படரும் ஒளி மேகங்களில்

தென்படும் உணர்வு மின்னலை விஞ்சும்

இத்தகு என் காதலன் என்னைத் தழுவுவான் அவன்

கண்களில் படரும் ஒளி மேகங்கள்.

சிதார் இசையின் பின்னணியுடன் சிறப்பான லேக் வியூ அரண்மனைக் கட்டிடங்களின் சூழலில் காட்சியாக்கப்பட்ட இந்தப் பாடல் காட்சி மீண்டும் மீண்டும் பார்த்து, கேட்டு ரசிக்கத் தக்க ஒன்று. லதா மங்கேஷ்கருக்குப் பெரும் புகழ் சேர்த்த இப்பாடலின் வரிகளின் சொற்கள் நுட்பமான பொருள் கொண்டவை. மொழி பெயர்ப்புக்குச் சவால் விடும் வண்ணம் ஒன்றுக்கும் மேற்பட்ட பல உள் அர்த்தங்கள் கொண்டவை.

சான்றாக இதன் இரு வரிகள்:

பாடலின் இரண்டாவது வரியாக அமைந்த

“ஐஸா மே பாலம் மோஹே கர்வா லாகே லே”

பாலம் என்ற சொல்லுக்கு காதலன் என்று பொருள்.

வாலம் (அன்புடையவர்) என்ற சமஸ்கிருத மூலச் சொல்லின் திரிபான இச்சொல் உருது, பாரசீக, இந்திக் கவிதைகளில் காதலன் என்ற பொருளில் தற்போதும் தவறாமல் இடம்பெறுகிறது. அதே போன்று, ‘கர்வா லாகே’என்ற பதம் ‘கர்வம் கொள்கிறேன்’ என்ற பொருள் தருவதாகப் பலர் கருதக்கூடும். ஆனால், தற்போது ஜார்க்கண்ட் என்று அழைக்கப்படும் பகுதியில் மட்டும் வழக்கில் உள்ள அந்தச் சொலவடையின் பொருள் ‘தழுவுதல்’, ‘கட்டி அணைத்தல்’ என்பதாகும். கலா என்றால் கழுத்து. கலே லக்ஜா என்றால் தழுவு என்று பொருள். ‘ல’ எல்லாம் ‘ஆர்’ ஆக மாறும் அங்குள்ள பேச்சு வழக்கின்படி, கலா கர் ஆகி, பின் கர்வா ஆயிற்று.

இதே போன்று அனுபல்லவியின் ஒரு வரியான ‘ஜாக்தே ரஹே ஹி தோஹே’ பல்கோ கீ பியாரி பக்கியா’ என்ற வரியின் ‘தோஹே’ போஜ்புரி மொழிச் சொல். உனது என்று பொருள். ‘பல்கோ’ என்ற சொல் இந்தி, உருது மொழிகளில் கண் இமைகளையும், இமைப் பொழுதையும் குறிக்கும். கண்களுக்குச் சாளரமாக விளங்கும் இமைகளைக் குறிப்பிடும் இந்தச் சொல் பிலிப்பனோ மொழியில் ‘பால்கனி, ‘காலரி’ என்ற பொருளைத் தருவது சிந்திக்கத்தக்கது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-26-கண்களில்-படரும்-ஒளி-மேகங்கள்/article9598605.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 27: அழகான மந்திரவாதியே...

 

 
 
ஏக் ஹஸீனா ஏக் முசாஃபிர்
ஏக் ஹஸீனா ஏக் முசாஃபிர்
 
 

மெட்டுக்கு ஏற்ற வரிகளைக் கவிதையாக்கும் பாடலாசிரியர்களும் துட்டுக்கு இசை அமைக்கும் இசையமைப்பாளர்களும் நுழையாத இடமாக ஒரு சமயம் இந்தித் திரை உலகம் இருந்ததது. பாடலை எழுதும் கவிஞர்களும் அதற்கு இசையமைக்கும் கலைஞர்களும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கையும் எப்போதும் இழக்க விரும்பாத சுய மரியாதையையும் கொண்டிருந்தனர். அதற்குக் குந்தகம் ஏற்படுத்துவதாக அவர்கள் கருதிய சூழலில் இருந்து வெளியேற அக்கலைஞர்கள் சிறிதும் தயங்கவில்லை. ஓ.பி நய்யர் என்ற பெயரில் அனைவரும் அறிந்த இந்தி இசை அமைப்பாளர் ஓம் பிரகாஷ் நய்யர் அத்தகு அரிதான கலைஞர்.

பாகிஸ்தான் நாட்டின் பகுதியாக தற்பொழுது விளங்கும் லாகூர் நகரில் பிறந்த இவர், தனது 70-ம் வயதுவரை, இந்தித் திரையின் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இசைக் கலைஞர், இசை முன்னோடி ஆகிய பல் திறன் பெற்றவராகத் திகழ்ந்தார். ‘லதா மங்கேஷ்கர்’ என்ற விளக்கு இல்லாமல், ‘இனிமையான பாடல்’ என்ற வெளிச்சம் பெற முடியாது என்ற சூழல் அப்போது இருந்தது ஆனால், இந்தியாவின் நைட்டிங்கேலுடன் அவருக்கு நிகழ்ந்த முரண்பாட்டால் லதாவைத் தனது இசையில் பாட நய்யார் அழைக்கவில்லை (இவருடன் ஆஷா போஸ்லே கொண்டிருந்த நட்பை விரும்பாத லதா அவரைக் கடிந்துகொண்டதே இந்த உரசலுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது).

ஆஷாவுக்கு முகவரி தந்த நய்யார்

மெல்லிசைக்கு மாற்றான, மலிவான வரிகள் கொண்ட ‘காபரே’ பாடல்களைப் பாடுவதற்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுவந்த ஆஷா போஸ்லேவை, இந்தித் திரைப் பட பாடல்களின் மாபெரும் அடையாளங்களில் ஒன்றாக மாற வழி வகுத்தவர் நய்யர். மேலை நாட்டு இசையும் இந்தியப் பாரம்பரிய சங்கீதமும் கலந்த வித்தியாசமான இசையமைப்பு பாணியைத் தன் சிறப்பாகக் கொண்ட நய்யர், 1956-ம் ஆண்டு வந்த சி.ஐ.டி. என்ற படம் மூலம் பிரபலம் அடைந்தார்.

நயா தௌர், தும்சா நஹீன் தேக்கா, உஸ்தாத் பாகுன் ஏக் முசாஃபிர் ஏக் ஹஸினா, ஃபி வோஹி தில் லாயா ஹூம், காஷ்மீர் கி கலி மேரே சனம், சாவன் கீ கட்டா பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே போன்ற காலத்தால் அழியாத பல பாடல்கள் தந்த நய்யர், தனது அனைத்துப் படங்களிலும் ஆஷா போஸ்லேக்குத் தவறாது வாய்ப்பளித்து ஆஷாவின் பல தளக் குரல் வண்ணத்தை வெளிக்கொணர்ந்தார்.

ராஜா மெஹதி அலி கான் எழுதிய இரண்டு பாடல்கள் மட்டும் இடம் பெற்ற ‘ஏக் ஹஸீனா ஏக் முசாஃபிர்’(ஒரு வழிப்போக்கன், ஒரு அழகி) என்ற 1962-ல் இந்திய-சீனப் போர் காலகட்டத்தில் இந்தப் படம் வெளிவந்தது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஈடுபடும் பயங்கரவாதச் செயல்களைச் சமாளிக்க ரகசியமாக அனுப்பப்பட்ட நாயகன் பாத்திரம் ஏற்ற ஜாய் முகர்ஜி, சாதனாவுடன் இணைந்து நடித்த இப்படப் பாடல்கள் பிரபலமடைந்தன.

asha_3149116a.jpg

“ஆப் யூ ஹீ ஹம்ஸே மில்த்தே ரஹே தேக்கியே ஏக் தின் பியார் ஹோ ஜாயேகா” என்று தொடங்கும் இந்தப் பாடல் இந்துஸ்தானி இசையின் கேதார் ராகத்தின் சாயலில் அமைந்தது. சிணுங்கல் பொங்கும் தொனியைக் கொண்ட இந்தக் காதல் பாடலின் பொருள்:

(நாயகன்):

இவ்வாறு நீங்கள் என்னைச்

சந்தித்துக்கொண்டே இருந்தால்

நம்மிடையே காதல் உருவாகிவிடும்.

(நாயகி)

அந்த மாதிரி பேசாதே என் அழகான மந்திரவாதியே

என் மனது உன் கண்களில் தொலைந்து போய்விடும்

(நாயகன்)

என் பின்னே என் பின்னே ஏன் நீங்கள் வருகிறீர்கள்

எழில் விழிப் பார்வையை என்னிடம் விரிக்கிறீகள்

(நாயகி)

எப்படிச் சொல்வேன் உங்களிடம் இதுவும் ஒரு ரகசியம்

இது ஒரு நாள் எல்லோருக்கும் தெரியவரும் என

(நாயகன்)

என்ன மாயம் செய்தாய் ஓ மந்திரவாதியே

உன் முகத்தை விட்டு அகல மறுக்கின்றன என் விழிகள்

(நாயகி)

அய்யோ அப்படி நீங்கள் என்னை விடாது பார்த்தால்

முகம் வெட்கத்தில் சிவந்துவிடும் மாதுளம் பூவாக

(நாயகன்)

காதல் நாடகத்தில் நான் ஒரு

அப்பாவி –அதனால்

எத்தனை அல்லல் அடைகிறான்

இப் பாவி

(நாயகி)

தங்கள் அல்லல் கண்டு தாளாமல் நானும்

அங்குபோல ஆகிவிடுவேன் அல்லல் படுவதற்கு.

பட நாயகி சாதனா, தொடர்ந்து இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்கோஸ்லாவின் அடுத்த மூன்று திகில் படங்களிலும் நாயகியாகப் பரிமளித்தார். நாயகன் ஜாய் முகர்ஜி இப்படத்தின் தயாரிப்பாளர் சஷாதார் முகர்ஜியின் மகன். “அமுல் பேபி” என்று அழைக்கப்பட்ட ஜாய் முகர்ஜி பின்னர் தேவ் ஆனந்த் பிரபலமாக்கிய ஆழமற்ற, நாகரிகமான காதல் நடிப்பின் முன்னோடி என்று கூறலாம். ஆஷா போன்ஸ்லே முகமது ரஃபியுடன் சேர்ந்து பாடிய ‘மே பியார் கீ ராஹீ ஹூம்’ என்ற பாடலும் இந்தப் படத்தில் பிரபலமடைந்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-27-அழகான-மந்திரவாதியே/article9607906.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 28: மாலைப் பொழுதிடம் மனதை இழந்தேன்

 

 
 
 
dulhan_3151422f.jpg
 
 
 

இந்தியப் பண்பாட்டுக் கூறுகளுடன் ஓரளவுக்குப் பொருந்தும் விதத்தில் அமைந்தவை விக்டோரியா கால நாவல்கள். தாமஸ் ஹார்டி எழுதிய ‘Tess of the d' Urber villes’ என்ற நாவல் அத்தகு கதை அம்சம் கொண்டது. தியாக உணர்வு மிக்க பெண்கள் அடையும் துயரங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட அந்த நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட ‘துல்ஹன் ஏக் ராத் கீ (மனைவி ஒரு இரவுக்கு மட்டும்)’ என்ற இந்தித் திரைப்படத்தின் கதை இப்படிப் போகிறது:

நற்குணம் கொண்ட ஒரு வாலிபனின் ஏழைக் காதலி, அவன் வெளியூர் சென்ற தருணத்தில் வேலைக்குச் செல்கிறாள். அங்கே செல்வந்தரின் மகனால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். இதனால் ஏற்படும் குற்ற உணர்ச்சியில் அவள் காதலனை விட்டு விலகிச் செல்கிறாள். பின்னர் தன் காதலனைக் காப்பாற்ற, தன்னை வல்லுறவுசெய்த கயவனைக் கொலை செய்கிறாள். சிறைக்குச் செல்லும் முன்பு ஓர் இரவு மட்டும் தன் காதலனின் மனைவியாக வாழ்கிறாள். இதுதான் படத்தின் கதை.

இந்தப் படம் வெளிவந்த சமயத்தில் வெற்றி அடையவில்லை. ஆனால், வித்தியாசமான திருப்பங்களுடன் கூடிய அதன் கதை அம்சத்துக்காகவும், காலத்தால் அழியாத, சிறந்த பாடல்களுக்காகவும் விமர்சகர்கள் மெச்சும் திரைப்படங்களில் ஒன்றாக இன்றும் போற்றப்படுகிறது.

துயர உணர்வையும் காதல் உணர்வையும் மிகச் சிறப்பாக நடிகர் தர்மேந்திரா, தன் உடல் மொழி மூலம் வெளிக்கொணர்ந்திருப்பார். பெரிய கவனம் கிடைக்காமல் போய்விட்ட ரஹ்மான், சிறந்த வில்லனாகப் பரிமளித்திருக்கிறார். எளிமையான, அதே சமயம் ஆழமான பொருள் தரும் வகையில் மெஹதி அலி கான் பாடல் எழுதியிருப்பார். மதன்மோஹன் இசையும் மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் இத்தனை அம்சங்கள் இருந்தும் இப்படம் தோல்வி அடைந்தது. எல்லா இந்திப் படங்களும் வண்ணப் படங்களாகவே வரத் தொடங்கிய அச்சமயத்தில் கறுப்பு வெள்ளைப் படமாக வெளிவந்ததே இதன் தோல்விக்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

kadhalan_3151421a.jpg

இப்படத்தின் மூன்று பாடல்கள் மிகச் சிறப்பானவை. ‘ஏக் ஹஸ்ஸின் ஷாம் கோ தில் மேரா கோகயா’ என்று தொடங்கும் முகமது ரஃபி பாடிய பாடல், மென்மையான காதல் பாடல்களைப் பாடுவதில் ரஃபிக்கு நிகராக எவரையும் கூற முடியாது என்ற கூற்றை உறுதிப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல் இது. காதலன் படத்தில் உன்னி கிருஷ்ணன் பாடிய ‘என்னவளே, என்னவளே என் இதயத்தைத் தொலத்துவிட்டேன்’ என்ற பாடலை நினைபடுத்தும் விதம் அமைந்துள்ள இப்பாடலின் பொருள்:

ஒரு அழகிய மாலைப் பொழுதிடம்

என் மனதை இழந்துவிட்டேன்

என்னுடையதாக இருந்த அது

எவளுடையதாகவோ ஆகிவிட்டது இப்போது

காலத்திடம் கோரியிருந்தேன்

என் வாழ்வில் எவளாவது வந்து கால் பதிக்க வேண்டும்

வெற்றிடமாக விளங்கும் என் வாழ்க்கையில்

விளக்காக ஒளிர வேண்டும் என்று.

அவள் என் வாழ்வில் வந்தவுடன்

எழிலுடன் ஒளிவிடும் இனிதாக

என் வாழ்க்கை ஆயிற்று

என் கண்களின் பார்வையை எவளோ

கவர்ந்து சென்றுவிட்டாள் இன்று

இரவின் பனித்துளிபோல் இருக்கும் அவள் விழிகள்

கொஞ்சம் மூடியும் கொஞ்சம் திறந்தும்

கொஞ்சும் அழகைக் கண்டு

பருவ காலமே இனிதானது

ஒரு அழகிய மாலைப் பொழுதிடம்

என் மனதை இழந்துவிட்டேன்

என்னுடையதாக இருந்த அது

எவளுடையதாகவோ ஆகிவிட்டது இப்போது

இந்தப் படத்தின் ‘சப்னோ மே அகர் மேரே தும் ஆவோ தோ ஸோ ஜாவூம்’ என்று தொடங்கும் பாடல் அலி கான் பாடல்களில் வழக்கமாக இடம்பெறும் கவித்துமான பர்சீய, உருதுச் சொற்கள் கலக்காத பாடல். இந்தி மொழியில் அதிகப் புலமை இல்லாதவர்கள்கூட முழுவதுமாகப் பொருள் உணர்ந்து ரசிக்கத்தக்க அழகான மெல்லுணர்வைத் துல்லியமாக வெளிப்படுத்தும் பாடல். லதா மங்கேஷ்கரின் சிறந்த பாடல்களில் ஒன்றான இப்பாடலின் பொருள்:

என் கனவில் நீ வருவதானால் நான் உறங்குவேன்

கனவில் என் தோள்மீது மாலை

சாற்றுவதனால் உறங்குவேன்

கனவில் என் அருகில் வந்து

எப்போதாவது அமர்ந்துகொள் அன்பே

நான் அப்போது உன் நெஞ்சில்

முகம் புதைத்துக்கொள்வேன் வெட்கத்துடன்

அப்போது நீ ஒரு காதல் கீதம்

இசைத்தால் உறங்குவேன்

கழிந்த சென்ற இதுபோன்ற நினைவுகள்

அழிந்துவிடாமல் என்னை ஆட்படுத்துகின்றன

அலைகள்போல இதயத்தில்

வந்தும் சென்றும் கொண்டிருக்கும் அந்த

எண்ண அலைகளைப் போல

நீயும் வருவதானால் நான் உறங்குவேன்

இந்தப் பாடலின் தொடக்கத்தில் வரும், ‘அகர்’ என்ற உருதுச் சொல் இந்தி, மராட்டி மொழிகளிலும் வெகுவாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு வேற்றுமை உருபு (தமிழில் ஆல், ஓடு ஆகியவற்றுக்கு இணையானது). இச்சொல்லுக்குக் கலவை, பொடி, என்னும் பொருளும் உண்டு. ஊதுவத்தி ‘அகர்பத்தி’ என்று அழைக்கப்படுவது இதன் பொருட்டே. இந்தி மற்றும் பிற இந்திய இலக்கண முறைகளுக்கு மாறாக ‘ஆல்’ என்ற இந்த உருபு, ஆங்கில இலக்கண முறையை ஒட்டி (IF என்று தொடங்குவதுபோல்) வாக்கியத்தின் முதலில் வருவது இங்கு கவனிக்கத்தக்கது. உருது இலக்கண முறையின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இது திகழ்கிறது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-28-மாலைப்-பொழுதிடம்-மனதை-இழந்தேன்/article9619329.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 29: எப்படிச் சமாளிப்பேன் உன் விழிகளை?

எஸ்.எஸ். வாசன்

 
mozhi_3154174f.jpg
 
 
 

உயிருக்கு நிகராக, ஒருவர்மீது ஒருவர் கொள்ளும் உண்மைக் காதலில், காதலன், காதலி ஆகிய இருவருக்குமிடையே எவ்வித வேறுபாடும் இல்லை. எனினும் அதை வெளிப்படுத்தும் தன்மையிலும் அளவிலும், ஆண்,பெண்ணிடையே உள்ள பெரும் இடைவெளியின் அடிப்படைக் காரணம், நம் சமூக, பண்பாட்டு விழுமியங்களைச் சார்ந்தது.

‘இந்த உலகமே எதிர்ப்பினும் உன்னைக் கைவிட மாட்டேன், உன் செல்வம், குடும்பம் அனைத்தையும் நம் காதலுக்காகத் துறந்துவிட்டு என்னோடு வா, நான் பார்த்துக்கொள்கிறேன், அந்த அளவுக்கு உன்னைக் காதலிக்கிறேன்’ என்றெல்லாம் காதலன் கூறுவது போன்று காதலி, இங்கு கூற இயலுவதில்லை.

திரை தாண்டிய இந்த வாழ்வின் யதார்த்தத்தை ராஜா மெஹதி அலி கானின் பாடல், எளிய வரிகளில், மனதை வருடும் மென்மையான மதன்மோகன் இசை அமைப்பில் அழகாக வெளிப்படுத்துகிறது. ‘ஆப் கீ பர்ச்சாயியான்’(உங்களுடைய நிழல்) என்ற படத்தின் ‘அகர் முஜ் ஸே முகபத் ஹை’முஜ்ஜே ஸப் அப்னே கம் தே தோ’ என்று தொடங்கும் இப்பாடல் லதா மங்கேஷ்கரின் அமரத்துவமான பாடல்களில் ஒன்று.

‘ஆலயமணி’ திரைப்படத்துக்காகக் கண்ணதாசன் எழுதிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’என்று தொடங்கும் பாடலின், “அந்தத் தூக்கமும் அமைதியும் நானானால், உன்னைத் தொடர்ந்திருப்பேன் என்றும் துணையாக” என்ற ஆழமான கவித்துவ வரிகளை நினைவுபடுத்தும் விதத்தில் அமைந்துள்ள இந்த இந்திப் பாடலின் பொருள்:

என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்
உன் துன்பம் அனைத்தையும் என்னிடம் தந்துவிடு
இந்த விழிகளின் ஒவ்வொரு
சொட்டுக் கண்ணீரையும் என்னிடம் தந்துவிடு
உன் மீது சத்தியம்
உன்னுடைய துக்கத்தை என் துக்கமாக மாற்றினால்
என் உள்ளத்தில் அமைதி ஏற்படும்.
உன்னுடைய இதய வலிகளை
என் நெஞ்சில் மறைத்துக்கொள்ள உடன்பட்டால் அமைதி ஏற்படும்.
துன்பத்தைத் தரும் அந்த ஒவ்வொரு துகள்களையும்
அன்பே எனக்கு நீ அளித்துவிடு
என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்.
உன் வாழ்க்கை ஊர்தியாக இருக்கும் துக்கங்களை
என் துன்பங்களின் வாகனமாக மாற்றிக்கொள்ளேன்
துக்கங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டு
அதை ஏன் குறைத்துக்கொள்ள மறுக்கிறாய்
தடுமாறும் உன் உள்ளத்தைக்
கொஞ்சம் எனக்குத் தா
என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்.
விழிகள் விடும் கண்ணீரை ஒருபோதும் மறைக்காதே
இந்தக் கண்களிலும் முகத்திலும்
இனிமையும் மகிழ்ச்சியும்
எப்பொழுதும் இருக்க வேண்டும்
உன் துக்கப் பெருமூச்சையும் துன்ப உலகையும்
என்னிடம் தந்துவிடு அன்பே உன் மீது சத்தியம்
என் மீது உனக்குக் காதல் இருக்கிறது எனில்.

இந்தப் பாடலுக்கு நிகரான கழிவிரக்கமும் தியாக உணர்வும் ததும்பும் வேறொரு பாடலை எந்த மொழியிலும் எடுத்துக் காட்டிவிட முடியும் என்று தோன்றவில்லை. ‘ஆப் கீ பர்ச்சாயியான்’படத்தின், ‘மே நிஹாகேன் தேரே சஹேரே ஸே ஹட்டாவும் கைஸே’ என்று தொடங்கும் மற்றொரு பாடலும் இதே அளவு போற்றப்படும் இன்னொரு உணர்வை வெளிப்படுத்தும் பாடல். ‘அன்பே, ஆருயிரே, சந்திரன் போல் இருக்கிறாய்’ என்பது போன்ற வழக்கமான காதல் நிரம்பிய சொற்களைத் தவிர்த்துவிட்டு எழுதப்பட்டுள்ள பாடல் இது. ‘கஜல்’பாடுவதில் ஈடு இணையற்ற முகமது ரஃபியின் மென் குரலில் இன்றும் ஒளிரும் முத்தான கஜலாக மிளிர்கிறது.

இதன் பொருள்:

எப்படி அகற்றுவேன் என் பார்வையை
உன் எழில் முகத்திலிருந்து?
அதனால் நினைவிழந்துவிட்டேன்
எப்படி மீண்டும் இழந்த நினைவை அடைவேன்?
நிழலாய் முகத்தில் படிந்தது உன் நீண்ட கூந்தல்
கழலாய்ப் பெருகும் உன் கண்களின் மதுவை
மெதுவாய்க் குடித்து, மெதுவாய்க் குடித்து
நான் அடைந்த மயக்கத்தை ஐயோ
எப்படிச் சொல்வேன்?
அழகான உன் விழிகள் காட்டும்
அந்தக் குறும்பால் என் பார்வை
வீரியமிழந்து விடாது
உன் கண்ணை விட்டு விலகாது எங்கும்
அங்கும் இங்கும் அகலாது எப்படியோ, எப்படியோ,
உன்னைச் சமாளித்துவிடுவேன்
எப்படிச் சமாளிப்பேன் உன் விழிகளை?
நான் அறியேன்

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-29-எப்படிச்-சமாளிப்பேன்-உன்-விழிகளை/article9638096.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 30: கவிஞரும் பாடலாசிரியரும்

 
mozhi_3158814f.jpg
 
 
 

“ஒரு திரைப்படப் பாடல் அதற்கான காட்சி சூழலில் எப்போதுமே மறைந்துள்ளது. நான் செய்ய வேண்டியதெல்லாம் அதை வெளிக்கொணர்வது மட்டுமே. காதல் எனும் உயர்ந்த உணர்வுக்குக்கூட, ஒரே விதமான பாடல்களை எழுத முடியாது.

ஒவ்வொரு பாடலாசிரியர் உள்ளத்திலும் ஒரு கவிஞன் வாழ்கிறான். ஆனால் ‘பாடலாசிரியர்’ என்பவர் படத்தில் நிகழக்கூடிய ஒவ்வொரு சூழலுக்கும் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பொருந்தக்கூடிய கருத்துகளை எளிமையாக, அனைவரும் புரிந்துகொள்ளும் வரிகளை எழுதும் திறன் பெற்றவனாக இருக்க வேண்டும்.

எதையும் எளிய மொழியில் எழுத முடியும். நம் கிராமியப் பாடல்களைப் பாருங்கள். அவற்றில் நமது தலைசிறந்த கவிதைகளில் இடம்பெற்றிருப்பதைவிட ஆழம் அதிகம் கொண்ட கருத்துகள் பொதிந்திருக்கும்.

எந்த ஒரு பாடலின் வரிகளும் அந்தப் படத்தின் கதைக் கருவையும் காட்சிகளையும் பொருத்தே அமைகின்றன. திரைக்கதை வெளிப்படுத்தும் உணர்வு, நிகழும் தருணம், கதாபாத்திரங்களின் வயது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு எழுதப்படும் பாடல்கள் காலத்தைக் கடந்து நிற்கும்.”

மேலே காணப்படும் கருத்துக்கள் இந்திப் படவுலகில் ‘மக்களின் கவிஞன்’ என்று கொண்டாடப்பட்ட பாடலாசிரியர் ஆனந்த பக்ஷி கூறியவை. ‘ஆராதானா’, ‘பாபி’, ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’, ‘அமர் பிரேம்’, ‘ஏக் துஜே கேலியே’ போன்ற தமிழ் ரசிக உலகம் நன்கு அறிந்த படங்களுக்கான பாடல்களை எழுதியவர்.

எளிமையின் கவிஞன்

இதுவரை இப்பகுதியில் நாம் கண்ட ராஜேந்திர கிஷன், ராஜா மெஹதி அலி கான் ஆகிய பாடலாசிரியர்களிடமிருந்து ஆனந்த் பக்ஷி வேறுபடும் இடம் அவரது எளிமை. நமது வாலியைப் போன்றே, எல்லோருக்கும் தெரிந்த எளிய வார்த்தைகளில் பாடலின் சூழலையும் அதனுள் ஊடுருவிக் கிடக்கும் ஆழ்ந்த உணர்வுகளையும் ஆனந்த பக் ஷியின் பாடல்கள் அழகாக வெளிப்படுத்துகின்றன. இதனுடன் அவரின் பாடல்களுக்கு அமைந்த இனிய மெட்டுகள், இந்தித் திரை உலகிலிருந்து எப்போதும் பிரிக்க முடியாத அம்சமாக அவரின் பெரும்பான்மையான பாடல்களை ஆக்கின.

ராஜேஷ் கண்ணா, அமிதாப் பச்சன், ஜிதேந்திரா போன்ற சூப்பர் ஸ்டார்கள் தங்களின் படங்களுக்கு ஆனந்த பக் ஷி மட்டுமே பாடல் எழுத வேண்டும் எனத் தயாரிப்பாளர்களிடம் நிபந்தனை இடும் அளவுக்கு சுமார் 40 வருடங்கள் கோலோச்சிய பக்ஷியின் பாடல்கள் அவரின் மறைவுக்குப் பின்பும் விரும்பி எடுத்துக்கொள்ளப்பட்டன.

600 படங்கள் 4000 பாடல்கள்

‘ஆஜ் மௌசம் படா பெய்மான் ஹை’ என்ற இவரது பாடல் மீரா நாயரின் ‘மான்சூன் வெட்டிங்’ என்ற படத்திலும் ‘சோளி கீ பீச்சே கியா ஹை’ என்ற பாடல் ‘ஸ்லெம் டாக் மில்லியனர்’ என்ற ஹாலிவுட் படத்திலும் மீண்டும் இடம் பெற்றன.

‘பக் ஷி ஆனந்த் குமார் வைத்’ என்ற இயற் பெயரைக் கொண்ட ஆனந்த் பக் ஷி காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள குர்ரி என்ற இடத்துக்குக் குடிபெயர்ந்த ‘முஹயால் பிராமணர்கள்’ அல்லது ‘ஹுஸ்ஸேன் பிராமணர்கள்’ என்று அழைக்கப்படும் வகுப்பில் பிறந்தவர். மெக்காவில் உள்ள கர்பாலாவைக் கைப்பற்ற நடந்த யுத்தத்தில் முகமது ஹுஸ்ஸேன் பக்கம் நின்று அவருக்காகத் தன் ஏழு புதல்வர்களை இழந்த பிராமண வம்சம் என்பதால் இந்தப் பெயர் அந்தப் பிரிவினருக்கு வந்ததாகச் சொல்லப்படுகிறது.

ஐந்து வயது நிரம்பும் முன்பே தாயை இழந்த ஆனந்த் பக் ஷி, தன் உறவினர் தயவில் கல்லூரி படிப்பை முடித்தவுடன் குடும்ப வழக்கப்படி அன்றைய பிரிட்டிஷ் கடற்படையில் சேர்ந்தார். கவிதையிலும் இசையிலும் ஆர்வம் கொண்ட பக் ஷி, கப்பற் படையில் சேர்ந்ததற்கு, திரை உலக மெக்காவாகத் திகழும் பம்பாய்க்குச் செல்ல அது வழி வகுக்கும் என்று நினைத்ததும் ஒரு காரணம்.

பல சோதனைகள், அடுத்தடுத்த தோல்விகள், தேசப் பிரிவினையின் விளைவால் லக்னோவுக்கு குடி பெயர்ந்தது, பல நாள் மும்பை ரயில் நிலைய நடைமேடைகளில் பட்டினியோடு உறங்கியது ஆகிய எல்லாத் தடைக்கற்களையும் கடந்து மாபெரும் வெற்றியடைந்த ஆனந்த பக் ஷியின் வாழ்க்கை அனுபவங்கள் அவருடைய பாடல்களின் அடித்தளமாக அமைகின்றன. சுமார் 600 படங்களுக்காக அவர் எழுதிய 4000-க்கும் அதிகமான பாடல்கள், சமூகத்தின் அடித்தட்டு, நடுத்தட்டு மற்றும் மேல்தட்டு மக்கள் ஆகிய அனைவருக்கும் உற்சாகமூட்டும் அம்சமாகத் திகழ்கின்றன. வரும் வாரங்களில் அவரது பாடல்களில் சிலவற்றைப் பார்ப்போம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-30-கவிஞரும்-பாடலாசிரியரும்/article9667278.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 31: பூக்கள் மலரும்போதெல்லாம்...

 
mozhi_3163439f.jpg
 
 
 

திரைப்படம் என்பது நிகழ்காலத்தைக் காட்டும் கண்ணாடியாக மட்டுமே அல்ல. இனி எப்போதும் திரும்பாத கடந்த காலத்தின் நினைவுகளை ஆவணப்படுத்தும் அதிசயமாகவும் திகழ்கிறது. ‘வன்முறை நிகழாத நாளே இல்லை’ என்று இன்று மாறிவிட்ட காஷ்மீர் முழுவதும், ஒரு சமயம் புன்சிரிப்பு பொங்கும் இன்முகம் என்ற வண்ணப் பூக்களே பூத்துக் குலுங்கியது. டால் ஏரியையும் அதில் மிதக்கும் படகு வீடுகளையும் அடிப்டையாகக் கொண்ட திரைப்படங்களை உருவாக்குவதே தயாரிப்பாளர்களின் லட்சியமாக அப்போது இருந்தது. அநேகமாக, காஷ்மீர் பள்ளத்தாக்கைத் திரைக்களமாக்கி எடுக்கப்பட்ட எல்லாப் படங்களுமே வெற்றியடைந்தன.

அந்த வரிசையில் வெளிவந்த ‘ஜப் ஜப் ஃபூல் கிலே’ (எப்பொழுதெல்லாம் பூக்கள் மலர்கின்றனவோ) என்ற படத்துக்குச் சில கூடுதல் சிறப்புகள் இருந்தன. பாடகராகப் புகழ்பெற வேண்டும் என்ற கனவுடன் பம்பாய் வந்த ஆனந்த் பக்ஷி, பாடலாசிரியராக வெற்றிபெற்றுத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டது இந்தப் படம் மூலமே. படகு வீடு ஓட்டும் காஷ்மீர் பாமரனுக்கும் விடுமுறைக்கு அங்கு வந்து தங்கும் படித்த செல்வச் சீமாட்டிக்கும் ஏற்படும் மென்மையான காதலைச் சொல்லும் படம் இது. வழக்கமான எதிர்ப்புகளுக்குப் பிறகு, திரை இயல்புக்கு மாறான முறையில் அந்தக் காதல் நிறைவேறும் விதமும் ஹீரோயிசம் இல்லாத நாயகனாக சசிகுமார் வெளிப்படுத்திய யதார்த்தமான உடல் மொழியுடன் கூடிய நடிப்பு, செருக்கான பார்வை, முறுக்கான முகவெட்டு, இயற்கையாகவே வரப்பெற்ற நந்தாவின் வித்தியாசமான நடிப்பு, இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆனந்த் பக்ஷியின் எளிய பாடல் வரிகள், கல்யாண்ஜி-ஆனந்த்ஜியின் மிகச் சிறந்த இசை, முகமது ரஃபியின் குரல் வளம் ஆகியவை ஒன்றிணைந்து சங்கமித்த படம் இது.

இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் ‘மொழி கடந்த ரசனை’யாக இப்படம் பெரும் வெற்றி அடைந்தது. ஆஸ்திரியா நாட்டின் ஒரு திரை அரங்கில் வாரத்தின் இரண்டு நாட்கள் என ஓராண்டு முழுவதும் இப்படம் திரையிடப்பட்டது. இந்தியாவின் பல நகரங்களில் 50 வாரங்களுக்கு மேல் ஓடிப் பொன்விழா கண்ட இந்தப்படம் சென்னையிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. பின்னாளில் ரிஷிகபூரின் சிறப்பு அடையாளமாக மாறிய ‘Boyish Look’ என்ற வெகுளித் தோற்றத்தில் படத்தின் நாயகன் சசிகுமார், அக்கால காஷ்மீர் பாமரனின் பிம்பத்தை அப்படியே திரையில் கொண்டுவந்தார்.

இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மிகப் பெரும் வெற்றியடைந்தன. பாடல்களின் வெற்றியே படத்தின் வெற்றி எனக் கருதப்பட்ட இப்படத்தின் ‘பர்தேசியோன் ஸே அக்கியான் மிலானா’ என்று தொடங்கும் பாடலை மகிழ்ச்சியுடனும் சோகத்துடனும் நாயகன் இரு முறை பட, நாயகியும் ஒரு முறை பாடுகிறாள். இது தவிர ‘யஹான் மே அஜ்னபி ஹூம்’ என்ற முகமது ரஃபி பாடல், ‘ஏக் தா குல், அவுர் ஏக் தீ புல்புல் தோனே சமன் மே ரஹத்தேதே’ என்ற வித்தியாசமான பாடல் ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை.

சாருகேசி ராகத்தின் சாயலில் அமைந்த ‘பர்தேசியோன் ஸே அக்கியான் நா மிலானா’ என்ற சோக ரசப் பாடலின் பொருள்:

வெளியூர் மனிதர்களுடன்

விழிகளைக் கலக்காதே

வெளியூர் மனிதர்கள் ஒருநாள்

விட்டுச் சென்றுவிடுவர்

காதலில் ‘எனது’ என்பது

எப்போதும் இல்லை

கருங்கற்கள் கண்ணீர் விட்டு அழுவதில்லை

இவர்களுக்காக நீ எப்போதும் அழாதே

இவர்களின் காதல் மின்னும்

தாரகை இல்லை

காகிதப் பூக்களே அவை

அதன் ஒரு மொட்டேனும் மலராகுமா?

வெளியூர் மனிதர்களுடன்

விழிகளைக் கலக்காதே

வெளியூர் மனிதர்கள் ஒருநாள் விட்டுச் சென்றுவிடுவர்

இதே பல்லவியில் அமைந்த மகிழ்ச்சியான பாடலின் அனுபல்லவியின் பொருள்.

இந்த அழகான வசந்த காலம் வரும்போதெல்லாம்

ஏதாவது ஒரு சுகமான பதிவைத்

தந்து விடுகிறது

அந்த மாதிரி அனுபவம் ஏற்பட

ஆகும் ஆண்டுகள்

சரியாகவே எவரோ சொன்னார்

பறவை என என்னை

இரவில் வீட்டில், எழுந்து எங்கோ பகலில்

இன்று இங்கே, நாளை அங்கே

எப்போதெல்லாம் இங்கு பூக்கள் மலர்கின்றனவோ

அப்போதெல்லாம் இந்தப் படகோட்டியைப் பார்க்கலாம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-31-பூக்கள்-மலரும்போதெல்லாம்/article9693100.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 32: உன்னை எங்கு அழைத்துச் செல்ல?

 

 
 
mozhi_3165804f.jpg
 
 
 

இந்தியா முழுவதும் வெளியாகிப் பெரும் வெற்றியடையும் பல இந்தித் திரைப்படங்களைப் பற்றிய ஒரு அடிப்படை உண்மை சுவையானது. அவற்றின் திரைக்கதை பெரும்பாலும் வங்காளம், தெலுங்கு, தமிழ், மராட்டி போன்ற இந்தி அல்லாத மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் அல்லது நாடகங்களைச் சார்ந்தே அமைந்திருக்கும். இந்த வரிசையில் வங்காளத்துக்கு அடுத்தபடியாக விளங்குகிறது தெலுங்குப் படவுலகம். ‘மூக மனசுலு’ (ஊமை மனம்) என்ற தெலுங்குப் படம் 1964-ல் வந்தது. மறுபிறப்புக் கருத்தை மையமாகக் கொண்டு, நாகேஸ்வர ராவ், சாவித்திரி, ஜமுனா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம். இந்த வெற்றிப்படமே பின்னர் 1967-ல் தெலுங்குப் படத்தின் இயக்குநரான அடுருத்தி சுப்பா ராவ் இயக்கத்தில் ‘மிலன்’ (சந்திப்பு) என்ற பெயரில் இந்தியில் வெளிவந்தது.

சென்ற பகுதியில் நாம் கண்ட சசிகுமாரின் வெகுளியான தோற்றத்திற்கு முற்றிலும் மாறான முரட்டுத் தோற்றத்தில், ஆனால் அதே பாமரத்தன்மையுடன் கூடிய உடல் மொழியை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கும் சுனில் தத், கே.ஆர். விஜயாவின் முகவெட்டும் சாவித்திரியின் அசாத்திய நடிப்புத் திறனும் இணைந்த நூதன், தெலுங்கு மொழிப் படத்தில் நடித்த அதே பாத்திரத்தில் இந்தியிலும் நடித்த ஜமுனா ஆகியோரின் பங்களிப்பில் உருவான படம் இது. இதன் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு முக்கியக் காரணம் பாடல் ஆசிரியர் ஆனந்த் பக்ஷியா, இசையமைப்பாளர் லக்ஷ்மிகாந்த் பியாரிலாலா அல்லது பாடல்களை உணர்வு சிதையாமல் பாடிய முகேஷ், லதா மங்கேஷ்கர் ஜோடியா என்பது இன்றும் விடை காணாத இயலாத கேள்வி.

கங்கையில் படகு சவாரி செய்யும் தேன் நிலவுப் பயணத்தில் மணமகனுக்கு ஏற்படும் மனக்குழப்பம் அவர்களை ஒரு வயோதிகப் பெண்மணியிடம் இட்டுச் செல்கிறது. சென்ற பிறவியில் படகோட்டியாக இருந்த நாயகனின் காதல் கதையை, பிளாஷ்-பேக் உத்தியில் வெளிப்படுத்துகிறது இப்படம். மீண்டும் மீண்டும் கேட்டாலும் சலிக்காத முகேஷ்-லதா மங்கேஷ்கர் பாடிய ‘சாவன் கா மஹீனா, பவன் கரே சோர், ஜியாரா ரே ஜூமே ஜைஸ்ஸே, பன் மே நாச்சே மோர்’ என்ற பாடல், மொழி, பொருள் கடந்த உணர்வின் அழகான வெளிப்பாடாகத் திகழ்கிறது.

கல்லூரிக்கு தினமும் சென்று வரும்போது பழக்கமான படகோட்டி, கல்லூரிப் பாட்டுப் போட்டிக்காக நாயகிக்குக் கற்றுக்கொடுக்கும் பாடலாக அமைந்த இப்பாடலின் ஒவ்வொரு சொல்லும் உச்சரிப்பு வேறுபாடு அடிப்படையில் பல பொருள் தரும் விதம் எழுதப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்.

படகோட்டி:

கார் மாதம் காற்றைப் போல

கங்கையின் முதலைகள் ஆர்பரிக்கும்

இந்தப் பருவத்தில்

கானகத்தில் நடனமிடும் மயில்போலக்

காதலர்கள் ஆடி மகிழும் பருவம் இது.

ராமன் தரும் இந்தக் கீழைக் காற்று அற்புதம்

நாயகி:

படகைச் சமாளி, படகோட்டியே பார் பாய்மரத்தை

படகோட்டி:

கீழைக் காற்றுக்கு எதிரே எதுவும் நடக்காது

நாயகி:

படகோட்டிக்குத் தெரியுமா நான் காட்டும் பார்வை

படகோட்டி:

உன்னை எங்கு அழைத்துச் செல்ல எனக் கேட்கிறது நதி அலை

நாயகி:

எங்கு விருப்பமோ அங்கு என்னை அழைத்துச் செல்.

சரணம்:

எவளுடைய காதலன் அன்னியன் ஆகிவிட்டானோ

அவனுக்குக் கொணர்ந்தேன் அன்பின் செய்தியை

கருமையான இந்த இடி மேகங்கள்

அருமையாக வனத்தில் ஆடும் மயில் போல.

படகோட்டியிடம் கற்றுக்கொண்ட இப்பாடலின் சரணமாக அமைந்த வரிகள் இவை. பின்னர் நாயகி கல்லூரி விழாவில் மேடையில் பாடும் வரிகள் இடையில் ஏற்பட்ட நிகழ்வுகளின் விளக்கமாக அமைந்தவை. இவ்வரிகள் அவளின் மனதை எடுத்துக்காட்டும் விதத்தில் இருப்பதால் ஒரே பாடலாகக் கேட்கும்பொழுது சற்று வித்தியாசமாகத் தோன்றும்.

உச்சரிப்புக்குப் புகழ்பெற்ற முகேஷ் பாடிய பாடலின் தொடக்கத்தில் வரும் ‘சோர்’ என்ற சொல்லை நாயகி ‘ஷோர்’ என்று உச்சரிப்பார். பின்பு சுனில் தத், “அரே பாபா ஷோர் நஹின், சோர்.. சோர், தோர் என்று திருத்துவது மிகவும் புகழ் பெற்றது. ‘சோர்’ என்றால் முதலை, ‘ஷோர்’ என்றால் சத்தம், இரைச்சல். ‘தோர்’ என்றால் இடி.

பின்னர், ‘பிராப்தம்’என்ற பெயரில், சிவாஜி கணேசன் சாவித்திரி நடிப்பில் வெளிவந்த இப்படம் தமிழில் தோல்வி அடைந்தது. ஆனால் இப்படத்தில் ‘சந்தனத்தின் நல்ல வாசம் எடுத்து என்னைத் தழுவிக்கொண்டோடுது தென்றல் காத்து,’ என்ற புகழ் பெற்ற பாடலிலும், ‘காத்து இல்லை, காற்று’ என்று திருத்தும் உத்தியும் தக்கவைக்கப்பட்டது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-32-உன்னை-எங்கு-அழைத்துச்-செல்ல/article9707093.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 33: நிலவின் கிரணங்களால் ஆன ஊஞ்சல்

 

 
mozhi_3168235f.jpg
 
 
 

இந்தித் திரைப்படப் பின்னணிப் பாடகர்களின் எண்ணிக்கை இந்தியாவின் மற்ற எல்லா மொழிப் பாடகர்களின் கூட்டுத்தொகையைவிட அதிகம். பரப்பிலும் அளவிலும் பாடல்கள் மூலம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய நூற்றுக்கணக்கானவர்களில், முகமது ரஃபி, முகேஷ், கிஷோர்குமார் ஆகியோர் ‘மும்மூர்த்திகள்’ எனக் குறிப்பிடத் தகுந்தவர்கள். ஒன்றுடன் ஒன்று வேறுபட்ட, ஒன்றுடன் ஒன்றை ஒப்பிட முடியாத, ஒன்றை ஒன்று விஞ்சக்கூடிய தனிச் சிறப்பான குரல் வளத்தைக் கொண்டிருந்த அந்த மூவரும் தாம் வாழ்ந்த காலத்தின் சில சிறந்த பாடலாசிரியர்களின் பொருள் மிக்க மன உணர்வுகளை என்றென்றும் அழியாத இசை ஓவியமாகத் தங்கள் குரல்களின் வழியே படைத்தனர்.

முகேஷ் என்ற ஒற்றைச் சொல்லில் முழு இந்தியாவும் அறிந்த முகேஷ் சந்த் மாத்தூர் என்ற மென்மையான குரல் வளம் கொண்ட பாடகர், மகிழ்ச்சி மிக்க கொண்டாட்ட உணர்வை விட, மனத்தை வருடும் சோகம் மற்றும் ஆறுதல் தரும் தாப உணர்வை வெளிப்படுத்துவதில் தனக்கு நிகர் இல்லாதவர். கே.எல். சைகல் பாணியில் தொடக்கத்தில் பாடிப் பிரபலம் அடைந்தவர் முகேஷ். ‘தில் ஜல்த்தா ஹை தோ ஜல்னே தே’ என்ற பாடலை இவர் சைகலின் குரலில் பாடினார். இந்தப் பாட்டைக் கேட்ட சைகல், “நான் இந்தப் பாட்டை எப்பொழுது பாடினேன் என்று தெரியவில்லையே” என்று உடன் இருந்த உதவியாளரிடம் கேட்டாராம்.

அப்படித் திரையுலகில் நுழைந்த முகேஷ் அதன் பின்னர் தனக்கென்று ஏற்படுத்திக்கொண்ட சிறப்பு அடையாளம் ராஜ்கபூரின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. தன் 53-வது வயதில் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரில் ஒரு இசை நிகழ்ச்சியின்போது முகேஷ் மரணம் அடைந்த செய்தியைக் கேட்ட ராஜ்கபூர், “நான் என் குரலை இழந்துவிட்டேன்” என்று கூறினாராம். ‘மிலன்’ படத்தின் நான்கு பாடல்களைப் பாடிய முகேஷுக்கு மட்டுமின்றி அதன் இசை அமைப்பாளரான லக்ஷ்மி காந்த் - பியாரிலால் ஜோடிக்கும் காலத்தால் அழியாத அமரத்துவம் தந்த இப்படத்தின் மேலும் மூன்று பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

‘ராம் கரே ஐஸ்ஸே ஹோ ஜாயே, மேரி நிந்தியா தோஹே லக் ஜாயே’ என்று தொடங்கும் ‘லோரி’ என்ற தாலாட்டு வகைப் பாடல் கங்கை நதிப் படகோட்டிகளின் வட்டார வழக்குச் சொற்களுடன் கூடிய, எளிய மக்களின் ஆற்றாமை உணர்வை எடுத்துக்காட்டும் இனிமையான பாடல்.

பொருள்:

ராமனின் அருளில் இப்படி நடக்கட்டும்.

எனக்கு வரும் தூக்கம் உனக்குக் கிட்டட்டும்

நான் விழித்திருக்கிறேன் நீ தூங்கு நிம்மதியாக

சுகமாக மாறட்டும் துயர் நிறைந்த உன் சோகங்கள்

இறைவனிடம் என்னால் வேண்டிட இயன்றால்

அழகாக ஆக்குவேன் உன் சோர்ந்த விழிகளை

தரட்டும் உனக்குத் தூக்கம் என இறைஞ்சுவேன்.

நீ மட்டும் இல்லை, நான் மட்டும் இல்லை,

இந்த நீள் உலகமே துயரமான ஒரு கவிதையே

தன் நிலை மறந்த தனியனே ஆயினும்

என்றும் தனது வீட்டை மறப்பதில்லை எவனும்

கனவுகள் வரட்டும் உனக்குக் கள்ளத்தனமாய்

இனிய தாலாட்டு ஒன்றை உறக்கத்தில் தரட்டும்

நிலவின் கிரணங்கள் கயிறாய் அமைந்து

உனது மனது அதில் ஊஞ்சலாய் ஆடட்டும்

ராமனின் அருளில் இப்படி நடக்கட்டும்.

எனக்கு வரும் தூக்கம் உனக்குக் கிட்டட்டும்

நான் விழித்திருக்கிறேன் நீ தூங்கு நிம்மதியாக.

படகோட்டியின் உடல் மொழிக்கேற்ற சில சொற்கள் இப்பாடலில் அமைந்திருப்பது இப்பாடலை மற்ற தாலாட்டு வகைப் பாடல்களிலிருந்து வேறுபடுத்துகிறது. ‘தோஹே’ என்ற பிஹாரி வட்டாரச் சொல், ‘உன்னுடைய’, ‘உங்களுடைய’ என்று இரு பொருள் தரும் விதம் நாட்டுப்புறப் பாடல்களில் அமைந்திருக்கும்.

காதலன், காதலி ஆகிய இருவருக்கும் பொதுவான இச்சொல் ‘வாரீகளா’என்பது போன்றது. ‘முத்துக் குளிக்க வாரீகளா மூச்சை அடக்க வாரீகளா?’ என்ற தமிழ்ப் பாடல் இங்கு நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாதது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-33-நிலவின்-கிரணங்களால்-ஆன-ஊஞ்சல்/article9712602.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 34: என் இதயத்தின் வலிமை எடுபடவில்லை

 

 
மிலன் - ஆனந்த் பக்‌ஷி
மிலன் - ஆனந்த் பக்‌ஷி
 
 

மக்களின் மனம் கவர்ந்த ஊடகமான திரைப்படங்களின் வெற்றியில் அதன் திரைக்கதைத் திருப்பங்கள் ஆற்றும் பங்கு மகத்தானது. அப்படிப்பட்ட திருப்பங்களுக்குக் கட்டியம் கூறுவது கருத்தாழம் மிக்க பாடல்கள்தான். ‘மிலன்’ படத்தின் ‘ஹம் தும் யுக் யுக் ஸே கீத் மிலன் கீ காத்தே ரஹே ஹைன்’ என்று தொடங்கும் பாடல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

திருமணம் முடிந்து தேன் நிலவு கொண்டாடும் புதுமணத் தம்பதிகளின் மகிழ்வையும் உணர்வையும் சித்தரிக்கும் பாடல் இது. நாம் ஒவ்வொரு பிறவியிலும் கணவன் மனைவியாகவே வாழ்ந்திருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடுகிறார்கள். இப்பாடலின் முடிவில் ஏற்படும் திருப்பமே இப்படத்தின் குவிமையம். பாடிக்கொண்டு படகில் செல்லும்போது நிகழும் சூறாவளி அவர்களை ஒரு தீவுக்குள் இட்டுச் செல்கிறது. அங்கு நாயகனுக்கு அவனது முன் ஜென்ம நினைவுகள் வருகின்றன. அவற்றுடன் தொடர்புபடுத்தும்படி தன் இனிய குரலில் முகேஷ் பாடியுள்ள ஆனந்த பக்ஷியின் வரிகளின் பொருள்.

நானும் நீயும் யுகயுகமாக இந்தச் சங்கம சங்கீதத்தைப்

பாடிக்கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம்

நானும் நீயும் இவ்வுலகிற்கு வாழ்க்கைத் துணையாக

வந்துகொண்டிருக்கிறோம் வந்துகொண்டிருப்போம்.

எப்பொழுதெல்லாம் நான் காதலனாகப் பிறந்தேனோ

எப்பொழுதெல்லாம் நீ அழகிய காதலியாய் இருந்து

நெற்றித் திலகமிட்டு நீள் கையில் வளையல் அணிந்தாயோ

அப்பொழுதெல்லாம் நான்

பூவாகவோ புழுதியாகவோ ஆகியிருந்தேன்

எப்படி இருந்தாலும் நம் பந்தம் விட்டுப் போகவில்லை.

என் விழிகளின் ஏக்கமாய் எப்பொழுதும் இருந்தது நீயே

திருமணம் முடிந்த இத்தருணம்

உன்னை என்னுடையவள் என இப்போது நான் சொன்னாலும்

அன்னியமாக ஒரு நாள் இருந்தோம் என அகிலம் கூறினும்

கண்ணே, கட்டித் தழுவல் என்ற மாலையை

உன் கழுத்தில் அன்றே பல ஆண்டுகளுக்கு முன்பு

ஒரு நாள் அணிவித்திருந்தேன்

உலகம் நினைத்தது உறவு பிரிந்தது என -அங்கே

பலரும் பார்த்தது நமது காதல் பிரிவை அல்ல

உலர்ந்த மலராய் உடன் இருந்த நிழலை

நானும் நீயும் யுகயுகமாக இந்தச் சங்கம சங்கீதத்தை

பாடிக்கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம்.

‘போல் கோரி போல் தேரா கோன் பியா’ (சொல் அழகியே சொல் உன் காதலன் யார்) என்று தொடங்கும் இப்படத்தின் இன்னொரு புகழ் பெற்ற பாடல், ஆழமான கருத்து கொண்ட பாடல் அல்ல. தெலுங்கு, இந்திப் படங்களில் துணை நாயகியாகக் கவர்ச்சியையும் உணர்வுபூர்வ நடிப்பையும் வெளிப்படுத்திய நம் ஜமுனாதேவி, சுனில் தத் ஆகியோர் இடம் பெற்ற பாடல் இது. வழக்கத்துக்கு மாறாகச் சுமார் 7 நிமிடங்கள் ஏராளமான துணை நடிகர்களுடன் கடற்கரையில் படமாக்கப்பட்ட கிராமிய இசைப்பாடல். பாடல் வரிகள் இறைவனுக்கும் காதலனுக்கும் பொருந்தும்படி எழுதப்பட்டுள்ளது இப்பாடலின் கூடுதல் சிறப்பு.

இந்தியில் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட்ட பின்னர் இந்திப் படத்தில் இடம் பெறாமல் சென்றுவிட்ட ‘ஆஜ் தில்பர் கோயி ஜோர் சல்த்தா நஹீன்’ என்று தொடங்கும் லதா மங்கேஷ்கரின் குரலில் உருவான இப்பாடல் சோக உணர்வின் ஒரு புதிய கோணத்தை இனிமையாகச் சொல்லும் பாடல். இது தெலுங்குப் படத்தில் இடம்பெற்றது.

பொருள்:

இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

நின்று சிரிக்கத்தான் முயன்றேன் நிற்காமல் வந்தது அழுகை

வென்றிடவே முயன்றேன் என்றும்போல் வலியை

இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

எனக்கு என்ன ஆயிற்று என என்ன சொல்ல இப்போழுது

உன்னைப் பற்றி ஒன்றும் தெரியாது என் நிலை அறியாமை

இத்தனை அறிந்துகொள் இங்கு ஏதேதோ நடந்துவிட்டது

அத்தனையும் மீறி உன் மீது அன்பு வைத்துள்ளேன்

நானும் ஒரு பெண்தானே, சிரிக்க வேணும் என முயன்றாலும்

நிற்காமல் வந்தது அழுகை.

இருக்கின்ற எல்லையில்லா இந்தப் பெரும் வானில்

ஒருவருக்கு ஒன்று எனக் கிட்டலாம் விண்மீன்கள்

சறுக்கும் நீர்ச் சுழலில் எல்லாப் படகிற்கும் கரை சாத்தியமா

இதைத்தான் எண்ணி மூழ்கியிருந்தேன் நான் ஆறுதலில்

ஆனால் இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

நின்று சிரிக்கத்தான் முயன்றேன் நிற்காமல் வந்தது அழுகை.

ஆயுள் முழுவதும் ஒருவேளை அழுதுகொண்டே இருப்பேன்

ஓயாது சிரிப்பதால் ஒன்றும் பயன் இல்லை என அறிந்தேன்

பாயும் கண்ணீர் எனக்குப் பலத்தை தந்தது அதனால்

பொழியாது போகும் மேகம்போல் ஆனேன் நானும்

ஆனால் இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

நின்று சிரிக்கத்தான் முயன்றேன் நிற்காமல் வந்தது அழுகை

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-34-என்-இதயத்தின்-வலிமை-எடுபடவில்லை/article9717700.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 35: வெற்றுக் காகிதமாய் என் மனது...

 

 
ஆராதனா
ஆராதனா
 
 

பொதுவான இந்திய அடையாளத்தை 50, 60-கள் வரையிலான காலகட்டம்வரை தன்னகத்தே கொண்டிருந்தது இந்திய சினிமா. பின்னர், இந்த நிலை மறைந்து, அந்தந்த பிரதேச, மாநிலங்களில் வழக்கில் உள்ள வாழ்க்கை, மொழியின் அடிப்படையில் திரைப்படங்கள் தயாரிக்கப்படவும் ரசிக்கப்படவுமான போக்கு தொடங்கியது. இதனால் மொழியின் எல்லையைக் கடந்து முன்பு போல இந்திப் படங்கள் தமிழ்நாட்டில் வரவேற்பைப் பெறுதல் என்பது அப்படங்களின் இனிமையான பாடல்கள், வசீகரமான நாயக நாயகிகள் மூலம் மட்டுமே சாத்தியமாயிற்று.

பாடல்களின் பொருள் புரியவில்லை எனினும், ராஜேஷ் கன்னா-ஷர்மிளா தாகூர் ஜோடியின் அழகுக்காகவும் மீண்டும் மீண்டும் கேட்கவும், கேட்கும்போதே தன்னிச்சையாக வாயசைத்து உடன் பாடவும் தூண்டும் விதம் அமைந்த எஸ்.டி. பர்மனின் மிகச் சிறந்த இசை அமைப்பு, கிஷோர் குமார்—லதா மங்கேஷ்கர் பாடகர் இணையின் துடிப்பான குரல் வளம் ஆகியவற்றின் வெளிப்பாடாகத் திகழ்ந்த ‘கோரா காகஜ் தா யே மன் மேரா, லிக் லியா இஸ் பர் நாம் தேரா’ என்ற ‘ஆராதனா’ (ஆராதனை) இந்திப் படப் பாடல் தமிழ்நாட்டையே கொஞ்ச காலம் புரட்டிப் போட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

இந்த ஒரு பாடல் மட்டுமின்றி ‘ஆராதனா’ படத்தின் அனைத்துப் பாடல்களும் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் இன்றளவும் மிகவும் ரசிக்கப்படுகின்றன. 1946-ம் ஆண்டில் வெளிவந்த ‘TO EACH HIS OWN’ என்ற அமெரிக்கப் படத்தின் கதையை, நூற்றுக்கணக்கான இந்திப் படங்களுக்கு எழுதி வெற்றிகரமான திரைக்கதை ஆசிரியராகத் திகழ்ந்த சச்சின் பவ்மிக் என்ற வங்காளக் கலைஞரின் ஆக்கத்தில் சக்தி சாமந்தா இயக்கத்தில் 1969-ல் வெளிவந்தது ‘ஆராதனா’.

இந்தியாவின் உண்மையான முதல் சூப்பர் ஸ்டார் எனக் கருதப்படும் ராஜேஷ் கன்னா, அதுவரை இந்திப் பட உலகில் கவர்ச்சி நாயகனாக வலம்வந்து, தொடந்து 17 வெள்ளி விழாப் படங்களைத் தந்து ஜூபிலி குமார் என்று அழைக்கப்பட்ட ராஜேந்திர குமாரை இந்தப் படத்தில் துணை நடிகராக்கினார். தவிர டாம் அட்லர் போன்ற வசீகரத் தோற்றம் உடைய பல புதியவர்கள் ஆர்வத்துடன் இந்தித் திரையில் நுழைவதற்கும் இப்படம் வழிவகுத்தது.

அடிக்கடி கேட்டு ஆனந்தம் அடைந்த ‘ஆராதனா’ படத்தின் அமரத்துவப் பாடலைப் பொருள் அறிந்து ரசிக்கும்போது அது மேலும் இனிக்கும்.

‘கோரா காக்ஜ் தா யே மன் மேரா,

லிக் லியா இஸ் பர் நாம் தேரா’

வெற்றுக் காகிதமாக இருந்தது என் மனது

ஒற்றிவிட்டேன் எழுதி அதில் உன் பெயரை - ஆண்

வெற்றிடம் மிக்க வெளியாய் இருந்த என் வாழ்வைப்

பற்றிக்கொண்டு அங்கு அமர்ந்தது உன் காதல் - பெண்

கலைந்துவிடக் கூடாதே இக்கனவு என அஞ்சுகிறேன்

தொலையவிடாமல் தினம் தூக்கத்தில் காண்கிறேன்

மையிட்ட கண்கள், மயக்கம் தரும் இந்த சமிக்ஞை

கருமை படிந்த கண்ணாடியாக இருந்த என் மனதை

அருமையான உன் உருவம் ஆக்கியது எழிலாக –ஆண்

நிதானம் தொலைத்தேன் நித்திரை தொலைத்தேன்

இரவு முழுவதும் கண் விழித்து இறைஞ்சிட உன்னை

அன்பே சொல், ஆருயிர்க் காதலியா இல்லையா நான்

வன்மம் பிடித்த எதிரியாய் இருந்த என் மனது

உன்னைக் கண்டதும் நண்பனாய் மாறியது - பெண்

நந்தவனத்தில் மலர்கள் மலர்வதற்கு முன்பு -ஆண்

இந்த இரு விழிகளும் சந்திக்கும் முன்பு – பெண்

எங்கே இருந்தன இந்தப் பேச்சு, சந்திப்பு, இனிய இரவு-

சிதறிய நட்சத்திரமாக இருந்தது என் மனது - பெண்

சிரிக்கும் நிலவாக மாறியது உனதானபின் - ஆண்

வெற்றுக் காகிதமாக இருந்தது என் மனது

ஒற்றிவிட்டேன் எழுதி அதில் உன் பெயரை- பெண்

இப்படத்தின் வேறு சில இனிய பாடல்களும் எளியவை; ஆழமான கருத்தைச் சொல்பவை.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-35-வெற்றுக்-காகிதமாய்-என்-மனது/article9722723.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 36: இலையுதிர் காலத்தின் நிழல் நான்

mozhi_1_3175589f.jpg
 
 
 

உலகத் திரைப்பட விழாவில் நாம் காணும் சிறந்த படங்களின் கதைச்சூழல், நடிப்பு, காட்சியாக்கம் ஆகியவை அந்தந்த நாட்டின் மொழி, கலாசார அடிப்படையில் அமைவது இயற்கையே. ஆனால், அப்படங்களின் வாயிலாக நாம் உணரும் மையக் கருத்து, பொதுவான மனித வாழ்வின் அன்றாட நடைமுறைக்கு ஏற்றதாகவே விளங்கும். அத்தகைய படங்களின் திரைக்கதை, ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் மறு ஆக்கம் செய்யப்படும்போது மேலும் செழுமையடைகிறது.

பாடலாசிரியர், ஆனந்த் பக்ஷியின் கவி வரிகளில் மிளிர்ந்த ‘கட்டி பதங்க்’ (அறுந்த பட்டம்) என்ற இந்திப் படம் இத்தகு புகழுக்குரியது. சக்தி சாமந்தாவின் இயக்கத்தில் ராஜேஷ் கன்னா-ஆஷா பரேக் நடிப்பில், ஆர்.டி. பர்மன் இசையமைப்பில், இதே பெயரில் குல்ஷன் நந்தா எழுதிய ஒரு நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தைப் பற்றிய மேலும் சில தகவல்கள் சுவையானவை.

குல்ஷன் நந்தாவின் நாவலின் மூல வடிவத்தை எழுதியவர், ‘வில்லியம் ஐரிஷ், ஜார்ஜ் ஹோப்லி’ என்ற புனைபெயர்களில் பல அமெரிக்க நாவல்களை எழுதிய கார்னெல் வுல்ரிச் என்ற திரைக்கதை ஆசிரியர். No Man of Her Own என்ற பெயரில் பார்பெரா ஸ்டான்விக் நடிப்பில் 1950-ம் ஆண்டு அமெரிக்கத் திரைப்படமாக வெளிவந்த இந்த நாவல், 60-ல் ‘ஷிஷா தோ நூ கெக்கோன்’ என்ற ஜப்பானியப் படமாகவும். 83-ல் ‘ஜெ யே எப்போசி யுனெ ஒம்ப்ரெ’ (I married a Shadow) என்ற பிரெஞ்சுப் படமாகவும், 96-ல் மீண்டும் ஒரு முறை Mrs Winter bourene என்ற ஹாலிவுட் வெளியீடாகவும் 81-ல் ‘நெஞ்சில் ஒரு முள்’என்ற தமிழ்ப் படமாகவும், 87-ல் ‘புன்னாமி சந்துருடு’ என்ற தெலுங்கு படமாகவும் வெளிவந்தது. சூழலின் கட்டாயத்தால் கன்னியாக இருக்கும்போதே, ஒரு விதவையாக வாழும் பாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்த ஆஷா பரேக், காதல் நாயகியாக ஆடும் திறன் மட்டுமின்றிக் கழிவிரக்க உணர்விலும் நடிக்கும் அவரது நடிப்பாற்றலை வெளிப்படுத்திய இப்படத்தின் இரண்டு பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

‘ந கோயி உமங்க் ஹை, ந கோயி தரங்க் ஹை, மேரி ஜிந்தஹி கியா ஏக் கட்டி பதங்க் ஹை’ என்று தொடங்கும் லதாவின் பாடல் உச்சகட்டக் கழிவிரக்கத்தைப் பெரிய அளவில் வெளிப்படுத்தும் ஓர் அரிய பாடல். எளிய வரிகள். சோகம் கொப்பளிக்கும் மெட்டு ஆகியவற்றுடன் கூடியது இப்பாடலின் பொருள்.

mozhi_2_3175588a.jpg

எந்தக் கனவும் இல்லை

எவ்வித நம்பிக்கையும் இல்லை

என்னுடைய வாழ்க்கை –என்ன அது

ஒரு அறுந்த பட்டம்தான்.

விண்ணிலிருந்து அறுந்து ஒரு முறை வீழ்ந்த

என்னை எப்படி இந்த உலகம் கொடுமைப்படுத்தியது

என்பதைப் பற்றி எதுவும் கேட்காதே.

எவருடைய துணையாகவும் நான் இல்லை

எவரும் எனக்குத் துணையாக இல்லை.

கனவுகளின் தேவனான உனக்கு

நான் எதை அர்ப்பணிப்பேன்?

இலையுதிர் காலத்தின் நிழல் நான்

கண்ணீர்த் துளிகளின் ஒரு கண்ணாடி (நான்)

இதுதான் என் ரூபம் இதுதான் என் அழகு

எந்தக் கனவும் இல்லை

எவ்வித நம்பிக்கையும் இல்லை

என்னுடைய வாழ்க்கை –என்ன அது

ஒரு அறுந்த பட்டம்தான்.

‘காகித ஓடம், கடல் அலை மீது போவது போலே மூவரும் போவோம்.’ ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம் அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்’ என்ற வரிகளில் கலைஞர் கருணாநிதி ‘மறக்க முடியுமா?’ படத்துக்காக எழுதிய அதீத கழிவிரக்க உணர்வை வெளிப்படுத்தும் தமிழ்ப் பாடல் இங்கு நினைவுக்கு வருவது குறிப்பிடத் தகுந்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-36-இலையுதிர்-காலத்தின்-நிழல்-நான்/article9727793.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 37: உன் நினைவு வாட்டாத உலகம் வேண்டும்!

  • 23chrcj_kati_patha_3178114g.jpg
     
  • 23chrcj_kati_patha_3178113g.jpg
     
 
 

காதல் உணர்வை வெளிப்படுத்தும் திரையிசைப் பாடல்கள், அவற்றைக் கேட்டு ரசிக்கும் தொடக்க நிலையில் ஏற்படும் பரவச உணர்வோடு தேங்கிவிடுவதில்லை. அதைத் தாண்டி, அவை எழுதப்பட்ட மொழியைப் பேசும் மக்களின் பண்பாட்டுச் சிறப்புகளையும் எடுத்துக்காட்டும் தடயங்களாகத் திகழ்கின்றன. சங்கத் தமிழ்ப் பாடல்கள் முதல் சமீபத்திய தமிழ்த் திரையிசைப் பாடல்கள் வரை, தலைவி அல்லது காதலி காதலனை எண்ணி ஏங்குவதாகவும் அவன் பொருட்டு எதையும் செய்யத் தயாராக அவள் இருப்பதாகவும் மட்டுமே அமைந்திருக்கும்.

தலைவன் அல்லது காதலன் தன் நிலை தாழ்ந்து, தனது காதலுக்காக எதையும் இழப்பானே அன்றி, அவனது காதலிக்காக ஓரளவுக்கு மேல் இறங்கி வராத சுயமரியாதை உள்ள மனிதனாகவே தமிழ்த் திரைப் பாடல்களில் வலம் வருவான்.

‘உனக்காக, கண்ணே உனக்காக இந்த உயிரும் உடலும் ஒட்டி இருப்பது உனக்காக… இலங்கை நகரத்திலே இன்பவல்லி நீ இருந்தா, இந்து மகா சமுத்திரத்தை இங்கிருந்தே தாண்டிடுவேன்’ என்பது போன்ற வரிகள்கூட, ஒரு காதல் வயப்பட்ட நகைச்சுவை நடிகனின் பகடியாக மட்டுமே வெளிப்படும். கதாநாயகன் இப்படியெல்லாம் தன் காதலை மிகைப்படுத்தும் தமிழ்த் திரைப் பாடல்கள் அரிது. அதற்கு நம் தமிழ் திரைப் பண்பாடு இடம் தராது போலும்.

இதற்கு மாறாக அமைந்திருக்கும் இந்திப் படப் பாடல்கள் வாயிலாக, இந்திப் பட நாயகன் தன் காதலை நாயகியிடம் வெளிப்படுத்தும் வரிகளும் சூழலும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இந்த வேறுபாட்டைத் துல்லியமாக எடுத்துக் காட்டும் விதமாக “ஜிஸ் கலி மே தேரா கர் ந ஹோ பாலுமா” என்று தொடங்கும் ‘கட்டி பதங்க்’ (அறுந்த பட்டம்) என்ற திரைப்படத்தின் பாடல் அமைந்துள்ளது. ராஜேஷ் கன்னாவுக்குத் தன் குரல் பொருந்தாது என்பதால் அதிகம் அவருக்குப் பின்னணி பாடாத முகேஷ் பாடிய, இந்தப் பாடல், காதலனின் உச்சகட்ட யாசக உணர்வாக விளங்கும் ஒப்பற்றதொரு பாடல்.

பொருள்.

உன் வீடு இல்லாத எந்தத் தெருவின் மீதும்

என் கண் கூடப் படாது. (அதில் நுழைய மாட்டேன்)

உன் வீட்டின் வாசற்படிக்கு அருகில் இல்லாத

பாதை எதன் மீதும் நான் கால் பதிக்க மாட்டேன்

வாழ்க்கையில் உள்ளன வசந்தங்கள் அனேகம் - ஏற்றுக்கொள்கிறேன்

எங்கும் பூத்திருக்கின்றன எழில் மலர் மொட்டுகள்

ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், எந்தத் தோட்டத்தின் முள் உன் காலைக் குத்துகிறதோ

அந்தத் தோட்டத்தின் மலரை ஒருபோதும் நான்

கொய்ய மாட்டேன்.

(உலகு உன் மீது சுமத்தும்) இந்த சம்பிரதாயம்

இந்த சத்தியம் எல்லாவற்றையும் உடைத்துவிட்டு

ஓடி வா என்னிடம் ஒளிரும் காதல் மேலாடை அணிந்து- (இல்லையென்றால்) நான் இந்த உலகை விட்டு ஓடிவிடுவேன்

எந்த உலகில் உன் நினைவு என்னை வாட்டுகிறதோ

அந்த உலகில் ஒரு நிமிடம்கூட இருக்க மாட்டேன்.

நைனிடால் ஏரியின் அழகைச் சிறப்பாக வெளிப்படுத்தும் விதமாகக் காட்சிப்படுத்தப்பட்ட இப்பாடல் முகேஷின் மிக மென்மையான குரலில் ஒரு காதலனின் கெஞ்சலைக் கண் முன் கொண்டுவருகிறது. இப்பாடல் படமாக்கப்பட்ட அப்பகுதியின் அனைத்து இளம் பெண்களும் ராஜேஷ் கன்னாவின் உடல் மொழியில் மயக்கம் கொண்டு அவரின் தீவிர ரசிகைகள் ஆயினர் என்று அப்போது பேசப்பட்டது. பாடல் ஆசிரியர் ஆனந்த் பக்ஷி எளிய வரிகள் மூலம் இப்பாடலில் காதலின் ஆழத்தை எட்டியிருப்பது குறிப்பிடத் தகுந்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-37-உன்-நினைவு-வாட்டாத-உலகம்-வேண்டும்/article9734146.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 38: மழையே தீயைக் கொண்டு வந்தால்...

 
 
  • அமர்பிரேம்
    அமர்பிரேம்
  • 30CHRCJ_AMAR_PREM__3180862g.jpg
     
 

திரைப்படங்களில் அன்பு, காதல் போன்ற உணர்வுகளை அழுத்தமாக வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் உயர்குடி மக்களாகவோ அல்லது உயர்ந்த பண்புகளை உடைய ஏழைகளாகவோ மட்டும் இருப்பார்கள். பொதுவான இந்தத் திரை மரபை உடைத்துக்கொண்டு முரடன், அடிமட்ட அசடு, விலைமாதர் போன்றவர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்கும் தூய்மையான அன்பு, காதல் ஆகிய உணர்வுகளை யதார்த்த நடைமுறைகளின் வரம்புகளை மையமாக கொண்ட கதையம்சத்துடன் படமாக எடுப்பது கத்தி மேல் நடக்கும் உத்திக்கு ஒப்பானது. இந்தச் சவாலான முயற்சியின் முழு வெற்றியாக விளங்குகிறது ‘அமர்பிரேம்’(அமரத்துவக் காதல்) என்ற இந்திப் படம்.

அன்பு மறுக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கும் அருகில் இருந்த விலைமாதுவுக்கும் இடையில் அரும்பிய தாய்-மகன் உறவை ‘ஹிங்க் கச்சோரி’ என்ற பெயரில் வங்காளச் சிறுகதை எழுத்தாளர் விபூதி பூஷண் எழுதினார். அந்தக் கதை அம்மொழியில் ‘நிஷி பத்மா’ (இரவுப் பூக்கள்) என்ற பெயரில் திரைப்படமாக வெளிவந்தது. இந்தியாவின் சிறந்த குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான உத்தம் குமார், வங்காள நடிகை சபீதா சட்டர்ஜி நடித்த இப்படத்தின் திரைக்கதையை எழுதி இயக்கியவர் அரவிந்த முகர்ஜி என்பவர். இந்திப் படத்தின் திரைக்கதையை இவரே எழுதிய போதும் சில மாற்றங்களுடன் அதை இயக்கியவர் சக்தி சாமந்தா. ரமேஷ் பந்த் என்பவர் வசனம் எழுதினார். இப்படத்துக்கு இசை அமைத்த ஆர்.டி. பர்மன் இவரின் மெட்டுக்களுக்கு கருத்தாழம் மிகுந்த பாடல்களை இயற்றிய ஆனந்த பக்ஷி எனப் பலரும் ஒன்றிணைந்து படத்தை வெற்றிப் படமாக்கினார்கள்.

எல்லாவற்றையும்விட கதாபாத்திரமாக தோன்றுவதுடன் நில்லாமல் அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ராஜேஷ் கன்னா, ஷர்மிளா தாகூர் ஆகியோரின் மிகை இல்லாத, அளவான கச்சிதமான உடல் மொழி, வசன உச்சரிப்பு ஆகிய நடிகர்களின் வெளிப்பாட்டுத் திறமைகள் இந்தியாவின் ஒப்பற்ற ஒரு திரைப்படமாக இதை ஆக்கின.

‘மேற்கத்திய இசையின் அடிப்படையில் மட்டுமே திரைப்பாடல்களுக்கு இசை அமைக்க இவருக்குத் தெரியும்’ என்ற கருத்து நிலவிய சூழலில் இப்படத்தின் மூன்று சிறந்த பாடல்களை பைரவி, தோடி, கலாவதி ஆகிய மூன்று முக்கிய இந்துஸ்தானி ராகங்களில் மெட்டமைத்து ஆர்.டி.பர்மன் தனது பாரம்பரிய இசை ஞானத்தை நிரூபித்தார்.

குறிப்பிட்டுச் சொல்லத்தக்க சிறப்புடைய ‘அமர் பிரேம்’ படத்தின் மூன்று பாடல்களில் ‘சிங்காரி கோயி பட்கே தோ சாவன் உஸ்ஸே புஜாயே’ என்று தொடங்கும் பாடல், விரக்தி, சோகம், ஆற்றாமை, கோபம் ஆகிய பல உணர்வுகளை எளிய வரிகளில் ஒருசேர வெளிப்படுத்தும் பைரவி ராகத்தில் அமைந்த இனிய பாடல்.

பொருள்:

திடுமென எழும் தீப்பொறியை

சடுதியில் வரும் மழை அணைத்துவிடும்

மழையே தீயை கொண்டுவந்தால்

அதை யார் அணைக்க முடியும் - யாரால் இயலும்

இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளை

வசந்த காலம் மீண்டும் புதுப்பிக்கும்

வசந்த காலத்திலேயே உதிர்ந்து நிற்கும் தோட்டத்தை

எவரால் மலரச்செய்ய முடியும்

என்னிடம் கேட்காதே எப்படி என் கனவு இல்லம் இடிந்து போயிற்று என்பதைப் பற்றி

அதில் உலகத்தின் பங்கு எதுவும் இல்லை

அந்தக் கதை என் சொந்தக் கதை

(உள்ளத்தில்) எதிரி கோடாரியைப் பாய்ச்சினால்

மனம் ஆறுதல் பெற நண்பர்கள் உடன் இருப்பர்

நெருங்கிய நண்பர்களே உள்ளத்தைக் காயப்படுத்தினால்

எவர் என்ன செய்ய முடியும்.

என்ன ஆகிறது என எனக்குத் தெரியவில்லை

என்ன செய்கிறேன் என்பதும் அறியேன்

சூறாவளியை எதிர்கொள்ள எந்தச் சக்தியாலும்

இயலாது என்பதை ஏற்றுக்கொள்கிறேன்

இயற்கையின் குற்றம் அல்ல அது

(எனில்) வேறு எதோ சக்தியுடைய குற்றம்

கடலில் செல்லும் படகு தடுமாறினால்

படகோட்டி (எப்படியாவது) கரை சேர்த்திடுவான்

படகோட்டியே படகை கவிழ்த்துவிட்டால் - அதில்

பயணம் செய்பவரை எவர் காப்பாற்றுவார்

ஓ.. யார் காப்பாற்றுவார்.

ஹூக்ளி நதிக்கரை போன்ற ஸ்டுடியோ செட்டில் படமாக்கப்பட்ட இப்பாடலை இயக்குநர் சாமந்தா கல்கத்தாவின் ஹூக்ளி நதி மீது உள்ள ஹவுரா பாலத்தில்தான் படமாக்க விரும்பினார். ஆனால், கூட்டத்தைக் கட்டுப்படுத்த எங்களால் முடியாது எனக் காவல் துறையினர் தடுத்துவிட்டனர்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-38-மழையே-தீயைக்-கொண்டு-வந்தால்/article9742606.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

மொழி கடந்த ரசனை 39: வீண் பேச்சால் விரயமாகிவிடும் இரவு

 

 
07chrcjamar%20prem

தம்மிடம் உள்ள குறைகளைப் பார்க்காமல் மற்றவர்களின் செயல்களை எள்ளி நகையாடுவது இந்த உலகின் மிகப் பழைய மரபு. “வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற அழகான யதார்த்தம் தொனிக்கும் வரிகளை எழுதிய அற்புதக் கலைஞன் கவி. கா.மு. ஷெரீப். ‘நான் பெற்ற செல்வம்’ படத்தில், இசை மேதை ஜி.ராமனாதன் இசையில் டி.எம்.சௌந்திரராஜன் குரலில் இடம்பெற்ற இப்பாடலை அப்படியே எதிரொலிக்கிறது ‘அமர் பிரேம்’ படத்தின் மற்றொரு பாடல். ஆனந்த பக்ஷ்யின் இசையில் உருவான ‘குச் தோ லோக் கஹேங்கே கஹனா லோகோங்கா காம் ஹை’ என்ற அப்பாடல் உலகின் பார்வையை விமர்சிக்கிறது.

உணர்ச்சி பொங்கும் அகன்ற விழிகளும் எல்லையற்ற அழகுடன் கூடிய பொலிவான தோற்றமும் இயற்கையாகவே அமைந்த ஷர்மிளா தாகூரின் உடல் மொழியும் உலகத்தை பற்றிச் சிறிதும் கவலையற்ற ஒரு கோடீஸ்வரனின் விட்டேற்றியான இயல்பை அனாயாசமாக வெளிப்படுத்தும் ராஜேஷ் கன்னாவின் நடிப்புத் திறனும் ‘அமர் பிரேம்’ படத்தைத் திரைக்கு அப்பாற்பட்ட காவியமாக ஆக்கியது. இப்படத்தில் தன் மீது உண்மையான அன்பு செலுத்தும் தேவதாசி பெண்ணுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றும் அவளின் நேசமுள்ள நண்பனின் பாத்திரத்தில் நடிக்கும் ராஜேஷ் கன்னா, இப்பாடலுக்கு முன்பும் பின்பும் கழுத்தைச் சாய்த்து ஒரு விசேஷக் கண்ணசைவுடன் சொல்லும் ‘Pushpa, I Hate Tears’(புஷ்பா நான் கண்ணீரை வெறுப்பவன்) என்ற ஆங்கில வசனம், பின்னர், ஏராளமான ரசிகர்கள் தங்கள் பேச்சில் மேற்கோள் காட்டும் ஒரு பிரபல சொலவடையாக மாறியது.

பாடலின் பொருள்

ஏதாவது சொல்லத்தான் செய்யும் இந்த உலகம்

எல்லோரையும் குறை சொல்வதுதான் அதன் குணம்

விட்டுத்தள்ளு வீண் பேச்சால் விரயமாகிவிடும் இரவு

எழுச்சி மிகு எல்லா காலைப் பொழுதுகளும் உடனே

மகிழ்ச்சியற்ற இரவாக மாறும் விதம் இங்குள்ள

உலகில் உள்ளன சில சடங்கு சம்பிரதாயங்கள்

சீதாவே களங்கப்பட்ட இங்கு சிறியவள் நீ எம்மாத்திரம்

பிறகு ஏன் இந்தப் பேச்சால் ஈரமானது உன் விழிகள்

(விலைமாதர்கள் ஆடிப் பாடி செல்வந்தர்களை மகிழ்விக்கும் இந்தக் கோதி பகுதிக்கு வந்து)

என்னை இழக்கிறேன் இந்த அற்ப சுகத்தில் என

வன்மத்துடன் வசை பாடும் பலர் இந்த வாசலுக்கு

வாடிக்கையாளராக மறைந்து வருவதை அறிவேன்

உண்மைதான் பொய் இல்லை உண்டா இல்லையா

உரைப்பாய் நீ

ஏதாவது சொல்லத்தான் செய்யும் இந்த உலகம்

எல்லோரையும் குறை சொல்வதுதான் அதன் குணம்.

முறையாக எவரிடமும் சங்கீதம் கற்காத கிஷோர் குமார் இப்பாடலில் காட்டும் ஏற்ற இறக்கங்கள், உணர்வு பொங்கும் உச்சரிப்புக்கள் அவரைப் போன்றே முறையான இசை கற்காத, குரல் வித்தையைக் காட்டும் நம் டி.எம்.சௌந்தரராஜன் ராஜனின் குரு என்று சொல்வது மிகை அல்ல.

‘அமர் பிரேம்’ படத்தில் லதா மங்கேஷ்கர் பாடியுள்ள ‘ரெர்னா பீத்தி ஜாயே ஷாம் நா ஆயே’ எனத் தொடங்கும் மற்றொரு பாடல் இந்திய இசையின் இனிமையை எடுத்துக்காட்டும் ஒரு அழகான பாடல். குர்ஜாரி தோடி ராகத்தில் அமைந்த ஆர்.டி. பர்மனின் இந்தப் பாடலுக்கு ஆனந்த் பக்ஷி எழுதியுள்ள எளிய வரிகள் ஆழமான கருத்து மிக்கவை. இந்தி மொழியில் ‘ஷாம்’ என்ற சொல் மாலைப் பொழுதை மட்டுமின்றி மாலை வேளையில் குழல் ஊதி கோபியரை மயக்கும் கிருஷ்ணனையும் குறிக்கும். இந்தப் புரிதலுடன் இந்தப் பாடல் கேட்கப்படும் பொழுது கூடுதல் ரசனை ஏற்படும்.

பாடலின் பொருள்

இரவு கழிந்து கொண்டே போகிறதே

இந்தக் கண்ணன் இன்னும் வரவில்லை

இமைகளில் உறக்கம் ஏற்படவில்லை

இந்தக் கண்ணன் இன்னும் வரவில்லை

மாலையில் (ஷாம் கோ) மறந்துவிட்டது

(ஷாம் கா) கண்ணனின் வார்த்தை

வண்ண தீபங்கள் ஏற்றி விழித்திருக்கிறாள் ராதா

விரக தாபத்தில் வேகிறாள் அவனின் தாசி

உடலும் உள்ளமும் வேட்கையில் அலைய

உற்றாய் பாயும் கண்ணீரில் விழிகள் நனைய

இரவு கழிந்து கொண்டே போகிறதே

இந்தக் கண்ணன் இன்னும் வரவில்லை.

கடினமான ஹிந்துஸ்தானி பத்ததியில் (ஒரே மூச்சில் நீண்ட ஸ்வரத்தையும் குறுகிய ஸ்வரத்தையும் ஒருங்கிணைத்து பாடுவது) லதா பாடிய இப்பாடலும் ராஜேஷ் கன்னாவின் மிதமான இயற்கையான மற்றும் எழிலான நடிப்பும் இப்பாடலை அமரத்துவம் ஆக்கியது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/மொழி-கடந்த-ரசனை-39-வீண்-பேச்சால்-விரயமாகிவிடும்-இரவு/article9751904.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 40: கவிதை எனக்குக் கட்டற்று வருகிறது..

 

 
bobbyjpg

'பாபி' படத்தில் ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா

சில திரைப்படங்கள் காலம்தோறும் மாறிவரும் மக்களின் ரசனையைத் துல்லியமாக கணித்து உருவாக்கப்பட்டவை. அவை ‘ட்ரென்ட் செட்டர்கள்’ என்ற முன்னோடிகளாக விலங்கி, திரையுலகில் புதிய போக்கையே உருவாக்கக்கூடியவை.

புராண நிகழ்வுகள், ராஜா ராணி கதைகள் மட்டுமே திரைப்படமாக எடுக்கப்பட்டு வந்த கால கட்டத்தில், வங்களா மொழியில் முதலில் எடுக்கப்பட்டு பின்னர் இந்தி, தமிழ்,தெலுங்கு உட்பட பல இந்திய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்ட ‘தேவதாஸ்’அப்படிப்பட்ட ட்ரெண்ட் செட்டர்தான்.

தமிழ்த் திரை உலகை சினிமா தோன்றிய காலம் முதல் ஆட்சி செய்து வந்த புராண, பக்தி படங்களுக்கு மாற்றாக, சமூக அவலங்களைப் படமாக்க வெகுகாலம் வரை எவரும் துணியவில்லை. அத்தருணத்தில், சிவாஜி கணேசன் எனப் பின்னர் சரித்திரத்திரத்தில் இடம் பெற்ற வி.சி கணேசன் என்ற இளைஞனின் ஆவேச நடிப்பில் முற்றிலும் மாறுபட்ட சமூக கதையைப் படமாக்கிய ‘பராசக்தி’, தமிழ்த் திரை உலகின் ட்ரெண்ட் செட்டராக விளங்கி , சமூகச் சீர்திருத்தக் கருத்துகளை துணிவுடன் பேசத்தொடங்கிய பல படங்கள் அடுத்தடுத்து வர அடிகோலியது.

இதே வரிசையில் இந்திப் படவுலகில் 1973 ல் வெளிவந்த ‘பாபி’ திரைப்படம், எதிர் காலத்தில் வெளிவந்த இந்தி மொழி படங்களுக்கு மட்டுமல்ல; தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களுக்கும் ஒரு புத்தம் புதிய உத்வேகத்தைக் கொடுத்தது எனலாம்.

ராஜ்கபூர் தயாரித்து இயக்கிய ‘பாபி’, அதுவரை எந்தத் திரைப்படமும் எட்டாத அளவு இளைஞர்களின் வரவேற்பைப் பெற்றதற்கு பல காரணங்கள் இருந்தன. மொழி, நடிப்பு கதை போன்ற அம்சங்களைத் தாண்டி இந்தியா முழுவதும் அப்படம் பெற்ற மகத்தான வெற்றியின் முக்கிய காரணங்களில் அறிமுகக் கதாநாயகியும் ஒருவர். 16 வயதே நிரம்பிய டிம்பிள் கபாடியா என்ற மும்பை குஜராத்தி வணிகரின் செல்ல மகள்தான் இந்த டிம்பிள். அவரது அழகும் இளமையும் பாபி படத்துக்கு ஈர்ப்பு மிக்க அம்சமாகத் திகழ்ந்தன.

கல்லூரி மாணவன் பாத்திரத்திற்கு பொருத்தமான உடல் மொழியுடன் கூடிய ரிஷிகபூர், சாமானிய மொழியில் ஆனந்த பக்ஷி எழுதிய பாடல் வரிகள் ,அழுத்தம் இல்லாவிடினும் எல்லோரும் ரசிக்கும் வண்ணம் அமைந்த லக்ஷ்மிகாந்த் பியாரிலால் இசை அமைப்பு, கோவா கிறிஸ்தவ மக்களின் வட்டார வாழ்வியலை உள்ளடக்கிய காட்சி அமைப்புகள் ஆகிய அனைத்தும் இணைந்து, இதுவரை வெளிவந்த அனைத்து இந்தித் திரைப்படங்களிலும் தலைசிறந்த 25 படங்களில் ஒன்று என்று புகழப்படுகிறது.

அறிமுகம் ஆன முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது பெற்ற டிம்பிள் கபாடியா, படம் வெளிவருவதற்கு முன்பே சூப்பர் ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் மனைவியாகி நடிப்பைத் துறந்தார். பின்னர் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த டிம்பிள், முன்பு தனக்கு இருந்த ‘இந்தியாவின் கவர்ச்சி பொம்மை’ என்ற பிம்பத்துக்கு முற்றிலும் மாறான குணசித்திர நடிப்பில் முத்திரை பதித்தார். ‘ருத்ராலி’ என்ற படத்தில் இறந்தவர்களுக்காகக் கூலிக்கு ஒப்பாரி வைக்கும் பாத்திரத்தில் இவரது வித்தியாசமான நடிப்பு குறிப்பிட்டு சொல்ல தக்கது.

சுமார் 6 கோடி ரஷ்ய மக்கள் பார்த்து ரசித்த இப்படம் சோவியத் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட மகத்தான 20 அயல் மொழிப்படங்களில் ஒன்றாகப் பாராட்டுப் பெற்றது.

இத்தனை சிறப்புடைய இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெற்றியடைந்தன எனினும், ‘மே ஷாயர் தோ நஹீன்’, ‘ஜூட் போலே கவ்வா காட்டே’ ‘ந மாங்கூம் பங்களா காடி’ ‘ஹம் தும் ஏக கம்ரே மே பந்த் ஹோ’ ஆகிய நான்கு பாடல்கள் குறிப்பிடத் தகுந்தவை.

‘மே ஷாயர் தோ நஹீன் மகர் ஏ ஹஸ்சீ ஜப் ஸே தேக்கா மைனே துஜ்கோ முஜ்கோ ஷாயரி ஆ கயீ” என்று தொடங்கும் பாடலின் பொருள்.

நான் கவிஞன் ஒன்றும் இல்லை –ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்ததிலிருந்து

கவிதை எனக்குக் கட்டற்று வருகிறது.

நான் எவருடைய காதலனும் (இதுவரை) இல்லை- ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்தவுடன்

எனக்கும் வந்துவிட்டது எங்கிருந்தோ காதல்

காதல் என்ற பெயரை காதால் கேட்டிருக்கிறேன் –ஆனால்

காதலைப் பற்றி கடுகளவும் எனக்கு (இதுவரை) தெரியாது.

குழம்பிக்கொண்டிருந்தேன் குழப்பம் மேலிட- இப்போதுவரை

எதிரியைப் போல (நினைத்து) நண்பர்களுடன் இருந்தேன்

நான் உன் எதிரி அல்ல எழில் நகை அன்பே

புன் முறுவல் பூக்கும் அழகி உனைப் பார்த்தவுடன்

நட்பு வந்துவிட்டது உன்னுடன் எனக்கு

யோசிக்கிறேன், இறைவனிடம் யாசிப்பதாய் இருந்தால்

கையை உயர்த்தி ‘தூவா’வில்(பிரார்த்தனையில்) எதைக் கேட்பது என

எப்பொழுது உன்னைக் காதலிக்க தொடங்கி விட்டேனோ

அப்போதே இத்தகு பிராயச்சித்தங்கள் தொடங்கி விட்டன

நம்பிக்கை இல்லாதவன் என்று இல்லை நான் – ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்தவுடன்

பக்தியும் வழிபாடும் பல மடங்கு பெருகிவிட்டது

நான் கவிஞன் ஒன்றும் இல்லை –ஆனால்

புன்முறுவல் பூக்கும் அழகி உன்னைப் பார்த்ததிலிருந்து

கவிதை எனக்குக் கட்டற்று வருகிறது.

பிரபல இந்தி பின்னணி பாடகர்கள் மட்டுமே பாடிவந்த அச்சூழலில் இளமை குரல் வளம் மிக்க ஷேலேந்திர சிங் என்ற பாடகர் பாடிய இந்தப் பாட்டு பெரும் புகழ் அடைந்தது.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19307824.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 41: காதலில் பேரம் கிடையாது!

 

 
28chrcjbobby

'பாபி' படத்தில் ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா

மொழி தெரியாவிடினும் உலகம் முழுவதும் இந்திப் படங்களும் அதன் பாடல்களும் பெரிதும் ரசிக்கப்படுகின்றன. இதன் முக்கியக் காரணம், அவை வடிவம் பெறும் மும்பையின் பன்முகக் கலாச்சாரச் சங்கமமே என்பது மிகை அல்ல. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பிழைப்புக்காக அங்கு வந்து குடியேறிய பிற பகுதி மக்களின் மொழி, உடை, உணவு மட்டுமின்றி அவர்களின் பாரம்பரிய இசைப் பாடல்களும் அன்றாட வாழ்வில் அங்கே சங்கமித்தன.

அவற்றை இசைக் கலைஞர்களும் கவிஞர்களும் எடுத்தாண்டார்கள். இதனால் சாமானியர்களும் புரிந்துகொள்ளும் எளிய பாடல் வரிகள் திரையில் காட்சிகளாக விரிந்தன. அதன் காரணமாக அதன் ரசனை மொழி எல்லையை எளிதாகக் கடந்து சென்றது.

‘பாபி’ திரைப்படத்தின் வரலாறு காணாத வெற்றியின் சிறப்பு அம்சமாக இந்தக் கலாச்சார கலவை விளங்கியது. ‘பம்பாய்’ என்ற இன்றைய மும்பையைத் தங்களின் இன்னொரு தாயகமாகக் கருதும் கோவா மக்களின் வாழ்க்கையை மிகையின்றிப் படம்பிடித்துக் காட்டிய படமிது. இதில் அவர்களின் தனித்துவமான இசை மெட்டுக்களில் ஒன்று, அதற்கேற்ற பாடல் வரிகளுடன் படமாக்கப்பட்டுள்ளது.

‘பாபி’ படத்தின் மற்ற எல்லாப் பாடல்களையும் எழுதிய ஆனந்த் பக்ஷி இந்தப் பாடலை எழுதவில்லை. வித்தல்பாய் பட்டேல் என்பவர் எழுதிய ‘நா சாஹூம்சோனா சாந்தி, நா சாஹூம் ஹீரா மோதி’ என்று தொடங்கும் பாடல் ஒரு சிறந்த திரைப்பாடலாக மட்டுமின்றி கோவா மக்களின் வாழ்வியல் கோட்பாட்டை எடுத்துக்காட்டும் விதமாக இருப்பதைப் பாருங்கள்.

பொருள்.

தங்கமும் வெள்ளியும் வேண்டாம் எனக்கு

வைரமும் பவளமும் விரும்பவில்லை நான்

இவையெல்லாம் எனக்கு எந்தப் பயனும் தராது

பங்களா, தோட்டம் வேண்டாம் எனக்கு

குதிரையும் வண்டியும் கேட்கவில்லை நான்

இவையெல்லாம் பெயரளவுக்குத்தான் பெருமை

உள்ளத்தைத் தருகிறேன் பதிலுக்கு உன் அன்பு

உள்ளத்தை நீ எனக்குத் தா

ஹே ஹேஹே காதலில் பேரம் இல்லை ஐயா

‘காஜி’ ‘சாது’ பற்றி நான் ஒன்றும் அறியேன் ‘காபா’ ‘காசி’பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது

நான் காதல் தாகம் எடுத்த இளைஞன் மட்டுமே

என் கனவுகளின் ராணியே ஏற்படலாம் உனக்கு

காதலில் வீழ்ந்து உன்மத்தனான என்னால் பிணக்கு

தங்கமும் வெள்ளியும் வேண்டாம் எனக்கு

வைரமும் பவளமும் விரும்பவில்லை நான்

இதெல்லாம் எனக்கு எந்தப் பயனும் தராது.

உள்ளத்தைத் தருகிறேன் பதிலுக்கு உன் அன்பு

உள்ளத்தை நீ எனக்குத் தா

ஹே ஹேஹே காதலில் பேரம் இல்லை ஐயா.

இந்தியா முழுவதும் ஆங்கில ஆட்சிக்குள் வந்த பிறகும் போர்த்துக்கீசிய கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோவா பிரதேசம் இந்திய விடுதலைக்குப் பின்னரும் வெகு நாட்களாகத் தனித்தே இருந்தது. நேருவின் முயற்சியால் ஒரு இந்திய யூனியன் பிரதேசமாக்கப்பட்டு சமீபத்தில் தனி மாநிலமாக அறிவிக்கப்பட்ட கோவா பகுதியின் மொழி, இசை உணவுப் பழக்கங்களில் போர்த்துக்கீசிய கலாச்சாரப் பாதிப்புக்கள் அதிகம் உண்டு.

இந்தப் பாடலில் கோவா கார்னிவெல் என்று அழைக்கப்படும் வருடாந்திர விழாவில் பாடப்படும் அந்த மெட்டு அப்படியே தக்கவைக்கப்பட்டிருக்கிறது. கோவா இசையின் இன்னொரு மெட்டு ‘ஓ மாரியா ஓ மாரியா’ என்ற கமலின் பாடலில் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

மும்பையில் இன்றும் அதிகமாக வாழும் கோவானியர்கள் என்று பொதுவான பெயரில் அழைக்கப்படும் கோவா கிறிஸ்தவர்கள் பொன், பொருள், ஆடம்பரத்தைவிட மகிழ்ச்சியான அன்பு, காதல் ததும்பும் சராசரி வாழ்க்கையை விரும்புபவர்களாக விளங்குவது கவனிக்கத்தக்க ஒரு முக்கிய அம்சம்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19370586.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 42: பூட்டிய அறையில் மாட்டிக்கொண்டோம்

 

 
04chrcjBOBBY%20NEW

தி

ரைப்படங்களின் பிரிக்க முடியாத அம்சமாகப் பாடல்கள் விளங்குகின்றன. கதைக்கருவின் தேர்வைப் பொருத்துத் திரைக்கதையில் கையாளப்படும் முக்கிய உணர்வுகளான காதல், மகிழ்ச்சி, சோகம் போன்றவற்றுக்கு உயிர்கொடுக்கும் முக்கியக் கலையம்சங்கள் இசையும் பாடல்களும். கவித்துவம் மிக்க வரிகள், பாடல் இடம்பெறும் பொருத்தமான சூழல் ஆகியவை மூலம் நடிகர்களின் நடிப்பைக் கடந்து வெற்றியடையும் அத்தகைய சில பாடல்கள் சாகா வரம் பெற்றவை. அப்படிப்பட்ட பாடல்கள் திரைப்படங்கள் வெளிவந்து மறக்கப்பட்ட பல வருடங்களுக்குப் பிறகும் மீண்டும் மீண்டும் கேட்கப்பட்டு ரசிக்கும் விதத்தில் அமைந்திருக்கும்.

காதல் வயப்படும் நாயகன்- நாயகியின் காதலை வெளிப்படுத்தும் திரைக்காட்சிகள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டு வந்திருக்கின்றன. நந்தவனத்தில் மரத்தைச் சுற்றிவந்து பாடிய கதாபாத்திரங்கள் மெல்ல மெல்ல கார், படகு, மாளிகை, விருந்து மண்டபம் என்று முன்னேறினர். பாடல் வரிகளும் மாறிவரும் இளைஞர்களின் ரசனைக்கு இணையாகப் புதிய புதிய வடிவங்களில் எழுதப்பட்டன. இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளின் மணி மகுடமாகத் திகழ்ந்தன ‘பாபி’ படப் பாடல்கள்.

குறிப்பாக, ‘ஹம் தும் ஏக் கம்ரே மே பந்த் ஹோ, அவுர் சாவி கோஜாய்’ என்று தொடங்கும், ஷைலேந்திர் - லதா பாடிய இந்தப் பாடல், இதற்கு முன்பு மட்டுமின்றி இதற்குப் பின்னரும் இது போன்ற ஒரு அழகிய பாடல் இதுவரை வரவில்லை என்று சொல்லும்படி விளங்குகிறது. காதலில் வீழ்ந்த பதின்பருவக் காதலர்களாக இப்பாடலைப் பாடும் ரிஷி கபூர்- டிம்பிள் கபாடியா ஜோடியைப் பார்க்கும் ரசிகர்கள், அது திரைக்காட்சி அல்ல, நம் முன் நடக்கும் ஒரு நிஜக் காட்சி என்றே நினைப்பார்கள். அதற்கேற்ற விதத்தில் அவர்களின் உடல் மொழி அமைந்துவிட்டது.

கேட்டவரும் பார்த்தவரும் திருப்பிப் பாடும்விதமாக, எளிய, வித்தியாசமான மெட்டுடன் கூடிய பாடல். இளைஞர்களை ஈர்க்கும் வரிகளும் இசைக் கோவையும் கூடிய பாடலாக இது அமைந்துவிட்டது. அக்கால திரை நாயகர்களுக்கு இல்லாத ஒரு கல்லூரி மாணவனின் அச்சான முகவெட்டு ரிஷிகபூரிடம் அமைந்திருந்தது. முழுவதுமான இந்தியத்தன்மை இல்லாத, தென் அமெரிக்க அழகிகளின் சிறு சாயலும் சன்ட்ரா பார்பெராவுடன் ஒப்பிடத் தக்க முக வசீகரமும் ஒருங்கே சங்கமிக்கும் டிம்பிள் கபாடியாவின் தனித்த எழில் தோற்றமும் இப்படலை எட்டாத உயரத்துக்கு இட்டுச் சென்றன.

பொருள்.

வெளியிலிருந்து யாரும் உள்ளே வர முடியாது

உள்ளேயிருந்து யாரும் வெளியே போக முடியாது

இப்படி ஆகிவிட்டால் எப்படி இருக்கும் நினைத்துப்பார்

-(ரிஷி கபூர்) இவ்வரிகளைப் பாடியவுடன் டிம்பிள் அதுவரை திறந்திருந்த அந்த அறையின் எல்லாக் கதவுகளையும் மூடிவிட்டு அவர் மீது ஒரு பார்வையை வீசுவார். மூடிய அறையில் இருவருக்கும் ஏற்படப் போகும் நேர்மறைக் காதல் உணர்வை எதிர்மறை வரிகளில் விளக்கும் விதம் ஆனந்த பக்ஷி எழுதிய தொடக்க வரிகள் அழகுடன் காட்சியாக்கப்பட்டிருக்கும்)

நானும் நீயும் பூட்டிய அறையில் மாட்டிக்கொண்டோம்

சாவி வேறு எங்கோ தொலைந்துவிட்டது.

இப்படி ஆகிவிட்டால் எப்படி இருக்கும் நினைத்துப் பார் - ரிஷி

உன் பார்வையின் கிறக்கத்தில் பாபி (நாயகியின் திரைப் பெயர்) தொலைந்துவிட - டிம்பிள்

பூட்டிய அறையில் எப்படி இருக்கும் நினைத்துப் பார்

(ஒரு மலைப் பள்ளத்தாக்கில் நாம் இருக்க நேர்ந்த சமயம்)

முன்னால் (மேலே)பயங்கர இடியுடன் கூடிய கரு மேகம்

அய்யோ எனக்குப் பயமாய் இருக்கிறது — டிம்பிள்)

பின்னால் ஒரு வழிப்பறிக் கொள்ளைக்காரன் – ரிஷி

(ம்ம்... ஏன் என்னை இப்படிப் பயமுறுத்துகிறாய் — டிம்பிள்)

மேலேயும் போக முடியாது கீழேயும் இறங்க முடியாது

நினைத்துத் பார் என்னவாகும் நிலை இப்படி என்றால் -ரிஷி

(அதுவும் இன்றி)

நானும் நீயும் எங்கோ சென்று கொண்டிருக்கிறோம்

அப்பொழுது (செல்லும்) பாதையை மறந்துவிட்டோம்

நினைத்துப் பார் என்னவாகும் நிலை இப்படி என்றால்-ரிஷி

அரவணைப்பு என்னும் உனது ஊஞ்சலில்

ஊஞ்சலாடுவாள் உன் அன்பு பாபி — டிம்பிள்

ஊரைவிட்டுத் தொலைவில், உயரமான மலைக்கு அடியில்

உல்லாசமாகப் பாடிக்கொண்டு சேர்ந்த ஒரு மரத்தின் கீழே

இருட்டிய அப்பொழுதில் என்னையும் காற்றையும் தவிர

எதுவும் தெரியாத அந்த ஏதோ ஒரு இடத்தில்

எப்படி இருக்கும் நிலை இப்படி ஆகிவிட்டால் - ரிஷி

(அதோடு)

நீயும் நானும் ஒரு காட்டில் போய்க்கொண்டிருக்கிறோம்

பாய்ந்து வருகிறது எதிரில் ஒரு சிங்கம்

நினைத்துப் பார் என்னவாகும் நிலை இப்படி என்றால் -ரிஷி

சிங்கத்திடம் சொல்லுவேன் உன்னை விட்டு விட்டு

என்னை இரையாக்கிக் கொள் என்று –பாபி

நானும் நீயும் இப்படியே சிரித்து மகிழ்ந்துகொண்டிருக்கும்

தேனிலவு நேரத்தில் திடீரென என் கண்கள் மூடி விட—ரிஷி

உன் மீது சத்தியம் உனக்கு முன்பு பாபி இறந்துவிடுவாள் - டிம்பிள்

காதலின் ஆழத்தை வழக்கமான உருவகங்களும் கனமான வார்த்தை பிரயோகங்களும் இல்லாமல், கல்லூரி மாணவர்களுக்கேற்ற காதல் பாடலாகக் காலம் காலமாக இப்பாடல் விளங்கி வருவதற்கான காரணம் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19413563.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 43: நான் அம்மா வீட்டுக்குப் போகமாட்டேன்

 

 
11chrcjBOBBY%20SONG%202

மீனவப் பெண் தோற்றத்தில் டிம்பிள்

‘மை

யிக்கே’ என்ற உருது சொல்லுக்கு ‘அம்மாவின் வீடு’(மா-அம்மா, கா-உடைய) என்று பொருள். ‘மாமியார் வீடு’, ‘தன் மனைவியின் பிறந்த வீடு’ என்ற பொருள்படும் இச்சொல், உருது, இந்தி பேசும் மக்களின் வாழ்வில், குறிப்பாக, சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட இளம் மனைவிகள் பயன்படுத்தும் தருணங்களின் பின்னணி சுவையானது.

நம் தமிழ் கலாச்சார வழக்கம் போல் அல்லாது, வட இந்தியக் குடும்பங்களில், பெண்கள் தனது முதல் பிரசவத்துக்குக்கூடத் தாய் வீட்டுக்குச் செல்ல மாட்டார்கள். தன் மாமியாரை அம்மாவாக, மாமனாரை அப்பாவாக நினைத்துப் புகுந்த வீட்டுக்குள் ஒன்றிப்போகும் அவர்கள், கணவனுடன் பிணக்கு ஏற்படும் பொழுது மட்டும், “நான் மைக்கே (அம்மா வீட்டுக்கு) போய்விடுவேன் பார்த்துக்கொண்டே இரு” எனப் புருஷனை மிரட்டுவார்கள். பாதி கொஞ்சலும் பாதி கோபமும் கலந்து விடுக்கும் இந்த எச்சரிக்கைகள், முக்கால்வாசி நேரங்களில், அதற்கு மேலே எடுத்து செல்லப் படாமல் சமரசம் ஆகிவிடும். இந்தச் செல்லப் பிணக்கை மையமாக வைத்து, டிம்பிள் கபாடியாவும் ரிஷிகபூரும் குழுவினருடன் பாடுவதாக, ஆனந்த பக்ஷி ‘பாபி, படத்துக்கு எழுதிய ‘ஜூட் போலே கவ்வா காட்டே’ என்று தொடங்கும் இப்பாடல் இளமையும் இனிமையும் விஞ்சி நிற்கும் விருந்து. இத்தகைய மிகச் சில இந்திப் பாடல்களில் (தமிழில் இப்படிப்பட்ட பாடல் இல்லையென்றே சொல்ல வேண்டும்) நடன வகைப் பாடல்களில் ‘நம்பர் ஒன்’ ஆகத் திகழும் இப்பாடலின் பொருள்.

பொய்(நீ) சொன்னால்(உன்னை) காகம் கொத்தும்

கறுப்பு காகத்திடம் (அதனால்) கலக்கம் கொள்

நான் அம்மா வீட்டுக்குப் போகத்தான் போகிறேன்

ஏன் ஏன் என நீ பார்த்துக்கொண்டே இரு –டிம்பிள்

நீ உன் அம்மா வீட்டுக்குப் போய்விட்டால் தடி

எடுத்துக்கொண்டு தடாலடியாக(அங்கு) வருவேன்-ரிஷி

தடியை எடுத்துக்கொண்டு நீ அங்கு வந்தால்

அடியோடு நான் கிணற்றில் வீழ்ந்திடுவேன்-டிம்பிள்

கயிற்றால் வெளியே உன்னை இழுத்திடுவேன் –ரிஷி

அருகில் உள்ள மரத்தில் நான் ஏறி விடுவேன் –டிம்பிள்

கோடாலியால் அந்த மரத்தை அறுத்திடுவேன்-ரிஷி

(இந்தச் சமயத்தில், டிம்பிள் உடன் நடனமாடும் தன் தோழிகளில் ஒருத்தியிடம் சென்று) காதலிக்கும் கன்னிகளே கோடாலி தூக்கும் இவரைப் போன்றவர்களிடம் கலக்கம் கொள்க - டிம்பிள்

நான் அம்மா வீட்டுக்குப் போகத்தான் போகிறேன்

ஏன் ஏன் எனப் பார்த்துக்கொண்டே இரு –டிம்பிள்

நீ பிறந்த வீட்டுக்குப் போகத்தான் போகிறாய் எனில்

நான் இன்னொரு திருமணம் செய்து கொள்வேன்-ரிஷி

நீ இன்னொரு திருமணம் செய்து கொண்டால்

அய்யோ எனக்கு சக்களத்தி வந்துவிடுவாளே!

நான் அம்மா வீட்டுக்குப் போகமாட்டேன்

போகவே மாட்டேன் நீ பார்த்துக்கொண்டே இரு- டிம்பிள்

உன் காலடியில் விழுந்து கிடப்பேன் உன்னுடன்

வாழ அளித்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்

நான் அம்மா வீட்டுக்குப் போகமாட்டேன்

போகவே மாட்டேன் நீ பார்த்துக்கொண்டே இரு, மாட்டேன்.

-இப்படி டிம்பிள் பாடியவுடன்

பொய்(நீ) சொன்னால்(உன்னை) காகம் கொத்தும்

கறுப்புக் காகத்திடம் (அதனால்) கலக்கம் கொள்

என்று ரிஷிகபூர் பாடி, மீண்டும் செல்லமாக

‘உன் சக்களத்தியைக் கொண்டு வருவேன்

நீ பார்த்துக்கொண்டே இரு’ என்று பாடுவார்.

உடனே டிம்பிள்..

பொய்(நீ) சொன்னால்(உன்னை)காகம் கொத்தும்,

நான் அம்மா வீட்டுக்குப் போக மாட்டேன்,

போகவே மாட்டேன் என்று பாடுவதுடன் இந்தப் பாடல் நிறைவுபெறும்.

11chrcjBOBBY%20SONG

‘ஜூட்டு போலே’ பாடல் காட்சியில் சினிமா நடனக் கலைஞர் ஒருவருடன் டிம்பிள்

மீனவர்கள் குடியிருப்பைப் பின்புலமாகக் கொண்டு பொருத்தமான இசை, பாடல் வரிகள் மட்டுமின்றி அதற்கேற்ற உடை, ஒப்பனை, அலங்காரம் அமைந்தது இப்பாடலின் சிறப்பு. பாட்டின் இறுதியில் ஆடி ஓடி நடனமாடும் நடிகர் பிரேம்நாத் அணிந்திருக்கும் பேண்ட்டின் ஜிப்பு சரியாகப் போடப்படாமல்(கோவானிய மீனவ முதியோர்களதுபோல) அரை குறையாக இருக்கும். இயக்குநர் ராஜ்கபூர் நுட்பமான, சிறிய அம்சங்களையும் காட்சிக்குத் தக்க அமைக்கும் திறமைக்குச் சான்றாக இது போற்றப்பட்டது.

திரைப்படம் வெளிவந்து பல வருடங்கள் வரை, ‘ஜூட் போலே கவ்வா காட்டே’ என்பது இளம் காதலர்கள் தங்களுக்குள் அடிக்கடி பயன்படுத்தும் ஒரு சொலவடைபோன்று விளங்கியது. ‘பாபி’ திரைப்படம் முழுவதுமாக எடுக்கப்பட்டு வெளிவருவதற்கு முன்பே சூப்பர்ஸ்டார் ராஜேஷ் கன்னாவின் ஆசை மனைவியாக ஆகிவிட்ட டிம்பிள், இப்பாடல் காட்சியாக்கும் பொழுது இரண்டு மாத கர்ப்பமாக இருந்தார் எனவும் ராஜேஷ் கன்னாவிடம் அனுமதி பெற்ற பின்னரே இப்பாடல் காட்சியாகப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

மேலும், தன் மகன் ரிஷிகபூரை முன்னணி கதாநாயகனாக ஆக்கும் நோக்கத்துக்காகவே இயக்குநர் ராஜ்கபூர் இப்படத்தை எடுத்தார் என்ற விமர்சனம் எழுந்தது. அப்போது ரிஷிகபூர் அதற்குப் பதிலாக இப்படிச் சொன்னார். “உண்மையில், ‘மேரா நாம் ஜோக்கர்’ படத்தின் மூலம் அப்பா அடைந்த பெரும் நஷ்டத்தை ஈடுகட்டவே டீன் ஏஜ் காதல் கதை கொண்ட இப்படத்தை எடுத்தார். அதற்குப் பொருத்தமான நாயகனாக இருந்த ராஜேஷ் கன்னா கேட்ட ஊதியத்தைத் தர தன்னால் இயலாது என்பதற்காகவே அப்பா எனக்கு அந்த வாய்ப்பைத் தந்தார்”.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19465898.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 44: காதலர்கள் வாழும் கோயில்

 

 
18chrcjbobby%20song

‘பே-ஷக் மந்திர், மஜீத், தோடோ புலேஷா ஏ கஹத்தா’ பாடல் காட்சி

ஒவ்வோர் அம்சத்திலும் வித்தியாசங்களைக் கொண்டிருந்தது ‘பாபி’ திரைப்படம். இளைஞர்களை ஈர்க்கும் இசை மட்டுமின்றி, அதுவரை திரையில் கேட்டிராத உச்ச ஸ்தாயியில் இனிமையுடன் பாடும் தனிச் சிறப்பான குரல் வளம் கொண்ட நரேந்திர சஞ்சல் என்ற பின்னணிப் பாடகர் அப்படத்தில் அறிமுகம் ஆனார். பாரம்பரியம் மிக்க பக்தியான குடும்பத்தில் பிறந்த இந்த பஞ்சாபிப் பாடகர், சிறு வயது முதல் ‘பீண்ட்’ அல்லது ‘பேட்’ எனப்படும் அர்ப்பணிப்பு வகை ஆரத்தி பாடல்கள் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். இடைவிடாத கடும் முயற்சிகளையும் போராட்டங்களையும் தொடக்கத்தில் எதிர்கொண்ட இவர், ‘பாபி’ படத்தில் பாடிய ‘பே-ஷக் மந்திர், மஜீத், தோடோ புலேஷா ஏ கஹத்தா’ என்று தொடங்கும் பாடல், இவரை அந்தப் பாடலின் மூலம் புகழின் உச்சிக்கு இட்டுச் சென்றது. இவரது முதல் இந்திப் படப் பாடலான இது, பிலிம்பேர் விருதையும் பெற்றுத் தந்தது. பின்னர் ராஜ்கபூர் நினைவுப் பரிசும் அவருக்கு அளிக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பெரும் புகழ்பெற்ற மற்ற ‘பாபி’ படப் பாடல்கள் அளவுக்கு, இப்பாடல் புகழ் அடையாமல் போனதற்கு சில முக்கியக் காரணங்கள் இருந்தன. முதலாவதாக, ‘ஆடு கத்துவதைப் போல் இருக்கிறதே’ என்று கிண்டலடிக்கப்பட்டது சஞ்சலின் பின்னணிக் குரல். (வெகு காலத்துக்குப் பிறகு, ஏறக்குறைய அந்தக் குரலின் சாயல் உடைய மாணிக்க விநாயகம் தமிழில் புகழ் அடைந்தார்). இரண்டாவதாக, ஆழ்ந்த கருத்துச் செறிந்த அப்பாடலின் பொருள் அனைவரையும் முழுமையாக அச்சமயம் சென்றடையவில்லை. பொருள் உணர்ந்து கேட்கும்போது அது ஏற்படுத்தும் தாக்கத்தின் அளவு வேறு!

பல இந்திப் படங்களில் நாம் ஒரு காட்சியைப் பார்க்கலாம். குளிர் காய நெருப்பை மூட்டி சுற்றிலும் ஒரு குழுவாக அமர்ந்து பலர் பாடுவார்கள். அவ்வகைப் பாடல்களின் சூழல், அவர்களிடம் தஞ்சம் அடைந்திருக்கும் காதலர்களின் நிலையை விளக்குவதாக அமைந்திருக்கும். அப்படிப்பட்ட சூழலில் நரேந்திர சஞ்சலே பாடகராக நடித்து, பாடிய ‘பாபி’ படத்தின் மற்றொரு முக்கியப் பாடலின் பொருள்.

‘புலேஷா’ இப்படிச் சொல்லுகிறார்

ஆலயங்களையும் பள்ளிவாசல்களையும்

அவசியம் ஏற்படின் தயக்கமின்றித் தகர்த்து கொள்க

ஆனால் காதல் ததும்பும் உள்ளங்களை உடைக்காதீர்

அவற்றில்தான் காதலர்கள் வாழ்கிறார்கள்

காதலை எடை போடும்(அன்பு) தராசில்

பொற்காசுகளை எடை போட்டுப் பார்க்காதீர்கள்

அய்யோ... என் மேல் கோபம் கொள்ளாதீர்கள்

நான் சொல்லவில்லை இதையெல்லாம்

‘புலேஷா’ இப்படிச் சொல்லுகிறார்.

காதல், கனல் நெருப்பு இரண்டும் ஒன்றே.

தண்ணீரால் நெருப்பை அணைக்க முடியும்

ஆனால், காதலர்கள் விடும் கண்ணீர் என்ற தண்ணீர்

காதல் என்ற தீயை அதிகமாக்குகிறது

உன் எதிரில் உட்கார்ந்து கண்ணீர் உகுக்கும்

காதல் உள்ளத்தை (காதலியை) உடைத்துவிடாதே

அய்யோ இதெல்லாம் நான் சொல்லவில்லை

என்னை ஒன்றும் செய்யாதீர்கள்

நான் சொல்லவில்லை ‘புலேஷா’ சொல்லுகிறார்.

இப்படிப்பட்ட உயர்ந்த வாழ்க்கைத் தத்துவத்தை புலேஷாவின் கருத்தாகப் பாடல் வரிகளில் ஆனந்த் பக்ஷி எழுதியிருப்பதன் அடிப்படை இங்கு மிகவும் கவனிக்கத்தக்கது.

பஞ்சாபி மொழியில் கூட்டாக அமர்ந்து பாடும் பல ‘காஃபி’ வகைப் பாடல்களை எழுதியுள்ள புலேஷா 17 -ம் நூற்றாண்டில் தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் பகுதியில் வாழ்ந்த சூஃபி கவிஞர். உஸ்பெகிஸ்தான் பகுதியைத் தாயகமாக கொண்ட இவருடைய முன்னோர்கள் அன்றைய ஒன்றுபட்ட இந்தியாவில் குடியேறியனர். முகலாய ஆட்சியின் உச்சகட்ட காலமான அச்சமயத்தில் சீக்கியர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே கடும் பகை நிலவியது. இந்து, முஸ்லிம் சமயங்களில் உள்ள சிறந்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு சூஃபி மார்க்கம் என்ற சகோதரத்துவத்தை வளர்க்கும் இயக்கம் அப்போது தோன்றியது. சூஃபி மார்க்கத்தில் இறைவனை அடையும் வழியாக நான்கு முக்கிய நிலைகள் கூறப்படுகின்றன. அவை, ஷரியத் (பாதை), தரிகத் (பின்பற்றுதல்), ஹக்கீகத் (உண்மை), மர்ஃபத் (ஒன்றுகூடுதல்). இந்த அம்சங்களை வலியுறுத்திப் பாடல்கள் இயற்றிய சூஃபி மார்க்கக் கவிகளில் முக்கியமான புலேஷா எழுதிய பல பாடல்கள் அழியா வரம் பெற்றன. அவ்வகைப் பாடல்களின் கருத்தை ஒட்டி அமைந்த இப்பாடல் எச்சமயத்திலும் எவராலும் பாடத்தக்கது. ‘புலே கீ ஜான’ (புலேவுக்கு என்ன தெரியும்) என்ற இவரது பாடல் மேற்கத்திய, இந்திய சங்கீத உலகில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

 

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19509778.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மொழி கடந்த ரசனை 45: கவிதைகள் கட்டற்று ஓடும்...

 

25chrcjmahendra%20kapoor%20singer

மகேந்திர கபூர்

25chrcjhamraaz%20movie

‘ஹம்ராஜ்’படப் போஸ்டர்

ந்தித் திரைப்பட உலகில், பாடலாசிரியர்களின் எண்ணிக்கை வியப்புதருபவை. திரைப்படம் பேசத் தொடங்கியது முதல் இன்றுவரை எழுதப்பட்ட பல்லாயிரக்கணக்கான இந்திப் படப் பாடல்களை எழுதியவர்கள் நூற்றுக்கணக்கான பாடல் ஆசிரியர்கள். அவர்களைப் பட்டியலிட்டு, அவர்களின் மிகச் சிறந்த சில பாடல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த நினைத்தால் அதற்குப் பல வருடங்கள் பிடிக்கும். இந்திப் படவுலகின் தலைசிறந்த பாடலாசிரியர்களில் இதுவரை ராஜேந்திர கிஷன், ராஜா மெஹதி அலிகான், ஆனந்த் பக்ஷி ஆகிய மூன்று கவிஞர்களின் கவித்திறனை மட்டுமே நாம் கண்டிருக்கிறோம்.

எதிர் வரும் காலங்களில், சாகிர் லுத்வானி, சாகிர் பதாயினி, மஜ்ரூர் சுல்தான்பூரி, ஹஸ்ரத் ஜெய்பூரி, இந்திவர், அஞ்சான் ஆகிய ஆறு கவிஞர்கள் எழுதிய காலத்தால் அழியாத சில கவிதைப் பாடல்களை நாம் பார்க்கலாம். அதற்கு முத்தாய்ப்பாக இந்தக் கவிஞர்களின் சிறந்த பாடல்களிலிருந்து தலா ஒன்றை ‘ஜலக்’ என்று இந்தியில் அழைக்கப்படும் ‘மாதிரி’யாகப் பார்ப்போம். இந்த வரிசையில் சாகிர் லுத்வானியின் ‘ஹம்ராஜ்’படப் பாடல் முதலில் உங்களுக்குப் படையல். ‘மக்கள் கவிஞர்’என்று போற்றப்பட்ட சாகிர் பாடல்கள் இயற்கை உணர்வை வெகு இயல்பாக உணரச் செய்பவை. சிறந்த இசை அமைப்புக்காக, குடியரசு தின விழாவில் தங்கப்பதக்க விருது பெற்ற ‘ஹம்ராஜ்’ படத்தின் இசை அமைப்பாளர் ரவி எனப் புகழ்பெற்ற ரவிஷர்மா. இப்படத்தில். மகேந்திர கபூர் பாடியுள்ள ‘தும் அகர் சாத் தேனே கி வாதா கரோ, மே யூஹி மஸ்த் நக்மே லுட்டாத்தே ரஹூம்’ என்று தொடங்கும் பாடலின் பொருள்.

என்னுடன் நீ இணைந்து நிற்பது நிச்சயம் என்றால்

கண்ணே இது போன்ற கவிதைகள் கட்டற்று ஓடும்

என்னைப் பார்த்து நீ சிரித்துக்கொண்டே இரு

உன்னைப் பார்த்து நான் பாடிக்கொண்டே இருப்பேன்

எத்தனை அழகு இங்குக் கொட்டி கிடக்கிறது பார்

ஆனால், இதுவரை அவை ஒன்றைக் கூட

நான் ஏறெடுத்தும் பார்க்கவில்லை

உன்னைப் பார்த்த என் விழிகள் இப்படிச் சொல்லும்

நாங்கள் இம்முகம் விட்டு அகல விரும்பவில்லை

நீ என் விழிகளின் அருகில் இருந்தால் போதும்

நான் விரும்பும் யாவும் என் பார்வையில் தெரியும்

நான் வெகு காலம் என் கனவில் செதுக்கியிருந்த

பளிங்குச் சிற்பம் போன்றே இருக்கும் ஓவியம் நீ

உனது காதலனாக நான் இருப்பது உன் விதி என்று

ஒரு கணமும் நீ எண்ணாதே

நீ எனக்குக் காதலியாய் இருப்பது என் பிறவிப்பயன்

என எப்பொழுதும் நான் நினைக்கிறேன்

என்னுடன் நீ இணைந்து நிற்பது நிச்சயம் என்றால்

கண்ணே இது போன்ற கவிதைகள் கட்டற்று ஓடும்.

‘ஹம்ராஜ்’ படத்தின் கதாநாயகன் சுனில் தத் தனது கம்பீரமான உடல் மொழிக்கேற்ற இனிமையான குரல் வளம் கொண்டவர் மகேந்திர கபூர். தனது அளவு கடந்த காதலை

யாசக உணர்வில் வெளிப்படுத்தும் அரிய பாடல்களில் ஒன்றான இதன் பின்னணி சுவையானது. பாடல் ஆசிரியர் சாகிர் இறுதிவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால், பெண் கவிஞர் அமிர்தா, திரை இசை பாடகி சுதா மல்ஹோத்ரா ஆகியோர் அவரது வாழ்வில் காதலிகளாக வலம் வந்தனர். அவர்கள் மேல் காதல் வயப்பட்டு சாகிர் பாடிய பல காதல் கீதங்களில் இதுவும் ஒன்று.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19553463.ece

Link to comment
Share on other sites

  • 5 months later...

மொழி கடந்த ரசனை 46: ‘காதல் தீயை ஏற்றிவிடுவேன்’

 

 

 
01chrcjDard%201947%20main

தர்த் (1947)

உருது, இந்தி மொழிகளில் சிறந்த நிபுணத்துவம் பெற்ற பாடலாசிரியர் ஷக்கீல் பதாயூனி. கங்கை நதிக்கரையில் உள்ள மேற்கு உத்திரப்பிரதேச நகரமான பதாயூன் என்ற ஊரில் பிறந்தவர். தன் பெயரின் ஒரு பகுதியாக சொந்த ஊரை இணைத்துக்கொண்ட ஷக்கீல், இளம் வயதிலேயே அரபி, பாரசீகம், உருது ஆகிய மொழிகளைக் கற்கும் நல்வாய்ப்பைப் பெற்றார். பின்னர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அவர் படித்த காலத்தில், நாடெங்கும் ‘முஷாயாரா’ என்ற உருதுக் கவியரங்க நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் செல்வாக்குபெற்று விளங்கின. அவற்றில் தொடர்ச்சியாகப் பங்குபெற்று, பல பரிசுகள் வாங்கினார். அவரின் உறவுப் பெண் சல்மா என்பவரைக் காதலித்துக் கைப்பிடித்த ஷக்கீலின் உருதுக் கவிதைகள் புகழ்பெற்றவை.

இந்தித் திரைப்படங்களுக்குப் பாடல் எழுதும் விருப்பத்துடன் பம்பாய் நகரத்துக்கு வந்த ஷக்கீல், இசையமைப்பாளர் நௌஷாத்தின் அன்புக்குப் பாத்திரமாக ஒரு வரிக் கவிதையே போதுமானதாக அமைந்துவிட்டது. இசையமைப்பாளராக மட்டுமின்றி சிறந்த உருது மொழிப் புலவராகவும் விளங்கிய நௌஷாத், ஷக்கீலிடம் “உனது கவித்திறன் ஒரே வரியில் வெளிப்படும் விதமாகக் கவிதை ஒன்றை எழுதிக் கொடு” என்று கேட்டார். உடனே, ‘ஹம் தர்த் கா அஃப்சானா துனியா கோ சுனா தேங்கே, ஹர் தில் மே முஹபத் கீ ஏக் ஆக் லகா தேங்கே’ என்று எழுதினார் ஷக்கீல்.

01CHRCJSHAKEELBADAYUNI

ஷக்கீல் பதாயூனி

இதன் பொருள், ‘நான் வேதனையின் பாடலை உலகத்துக்கு எடுத்துச் சொல்வேன். ஒவ்வொரு உள்ளத்திலும் காதல் என்ற தீயை ஏற்றிவிடுவேன்’. இங்கு ‘தர்த்’ என்றால் வேதனை என்ற பொருள் மட்டுமின்றி, நௌஷாத் அப்போது இசையமைத்துக் கொண்டிருந்த திரைப்படத்தின் தலைப்பும் ‘தர்த்’ என்றே இருந்தது.

எனவே, ‘நீங்கள் இசையமைத்துவரும் படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்புத் தரும் பட்சத்தில் அதைப் புகழடைய செய்வேன்’ என்ற பொருளும் அதில் சிலேடையாக அமைந்துவிட்டதை எண்ணி மகிழ்ந்த நௌஷாத், ஷக்கீலுக்கு உடனே வாய்ப்பளித்தார்.

‘தர்த்’ படத்துக்கு ஷக்கீல் எழுதிய அனைத்துப் பாடல்களும் பாராட்டப்பட்டு, தாம் எழுதிய முதல் படப் பாடல் மூலமே வெற்றிபெற்ற பாடலாசிரியராக ஷக்கீல் இந்தித் திரையுலகைத் தன் பக்கம் ஈர்த்தார். பின்னர் 24 வருடங்கள் நீடித்த நௌஷாத்-ஷக்கீல் கூட்டணியில் பல புகழ்பெற்ற பாடல்கள் உருவாயின.

ஷக்கீல் எழுதி, பின்னர் ‘டுன் டுன்’ என்ற பெயரில் நகைச்சுவை நடிகையாக வலம்வந்த உமாதேவி பாடிய ‘தர்த்’ படத்தின் ஒரு பாடல், அதன் இசை, பொருள், குரல் இனிமை ஆகியவற்றால் இன்றளவும் ரசிக்கப்படுகிறது. ‘அஃப்சானா லிக் ரஹீஹூம் தில்-ஏ-பேக்ரார் கா’ என்று தொடங்கும் அந்த அமரத்துவப் பாடலின் பொருள்.

பாடிக்கொண்டிருக்கிறேன் உள்ளத்தின் பரிதவிப்பை

விழிகளில் உன் வரவின் ஒளியைத் தேக்கிகொண்டு

நீ இல்லாத பொழுது வசந்தத்தில் இல்லை ஒன்றும்

(அச்சமயங்களில்)

அருகில் உள்ள வசந்தத்தின் எழிலை நோக்காமல்

அமைதியாய் இருக்கவே மனம் விரும்புகிறது

அருகில் உள்ள வசந்தத்தின் எழிலை நோக்காமல்

எனக்குச் செல்வம் எல்லாம் பெறும் வழி இருந்தும்

பிணக்கு காட்டும் காதலன் கிட்டும் விதியே உண்டு

பாடிக்கொண்டிருக்கிறேன் உள்ளத்தின் பரிதவிப்பை

உன் வரவின் ஒளியை விழிகளில் தேக்கிக்கொண்டு.

ஷக்கீல் பதாயினி போன்றே ‘தர்த்’ படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னனிப் பாடகி உமாதேவியும் தன் முதல் பாட்டிலியே புகழின் உச்சத்தை எட்டினார்.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19594555.ece

Link to comment
Share on other sites

மொழி கடந்த ரசனை 47: உன் விழிகள் என்னிடம் திரும்பி வரும்

 

 
08chrcjMere%20Sanam%20song%20scn

'ஜாயியே ஆப் கஹான் ஜாயேகா' பாடல் காட்சி

இந்திப் பட பாடலாசிரியர்களின் ‘ஜலக்’ வரிசையில் மூன்றாவதாக நாம் காண இருக்கும் மஜ்ரூ சுல்தான் பூரியின் இயற்பெயர் அஸ்ரூர் உல் ஹசன் கான் என்பதாகும். உத்தர பிரதேசத்தில் உள்ள சுல்தான்பூர் என்ற ஊரில், மதப்பற்று மிக்க பஷ்ட்டுன் குடும்பம் ஒன்றில் பிறந்த மஜ்ரூ, இளம் வயதிலேயே மதராசா பள்ளிக்கு அனுப்பட்டார். இவரின் தந்தை ஆங்கில அரசில் ஒரு போலீஸ் அதிகாரியாய் பணிபுரிந்தார். இருந்தும் மஜ்ரூவை மதராசா பள்ளியில் சேர்த்தது பின்னர் அரபு, உருது பாரசீக மொழிகளில் அவர் புலமை பெற்று விளங்குவதற்கு வழிவகுத்தது.

‘ஹக்கீம்’ என்று அழைக்கப்படும் யுனானி முறை மருத்துவராக வாழ்க்கையை தொடங்கிய மஜ்ரூ, தொடக்கம் முதலே முஷாயரா என்ற உருது கவியரங்குகளில் ஆர்வம் கொண்டு அதில் கலந்து கொண்டார். மருத்துவத்தில் அடையாத வெற்றியையும் புகழையும் கவிதைகள் பெற்று தரும் என்று நினைக்கவில்லை. தனது கவிதைகளுக்காக அவர் போற்றப்பட்ட தருணத்தில், மருத்துவத்தை விடுத்து மும்பைக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அறிமுகமான ஏ.ஆர் கர்தர் என்ற படத் தயாரிப்பாளர் மஜ்ரூவுக்கு பாடல் எழுதும் வாய்ப்பைத் தந்தார்.

ஆனால், இடதுசாரி மற்றும் முற்போக்கு சிந்தனை உடைய மஜ்ரூ சினிமாவுக்கு பாடல் எழுதமாட்டேன் என மறுத்துவிட்டார். அப்படிப்பட்ட மஜ்ரூவின் குருவாக விளங்கியவர் பிரபல உருது கஜல் பாடகரான ஜிகர் மொராதாபாதி. அவரது தலையீட்டால் தன் முடிவைப் பின்னர் மாற்றிக் கொண்ட மஜ்ரூ, தொடர்ந்து அறுபது ஆண்டுகளுக்கு இந்தி திரைப்பட உலகின் புகழ் மிக்க பாடல் ஆசிரியராக விளங்கினார்.

‘மக்கள் கவிஞர்’ என்று போற்றப்பாட்ட மஜ்ரூ, இந்தி திரை உலகின் அனைத்து இசை அமைப்பாளர்களுடனும் இணைந்து பணிபுரிந்தவர். இருப்பினும் ஓ.பி. நய்யார் என்று அழைக்கப்பட்ட ஓம்பிரகாஷ் நய்யாரும் மஜ்ரூவும் சேர்ந்து பணி ஆற்றிய படங்களில் அமைந்துவிட்ட சில பாடல்கள் காலத்தை கடந்து நிற்பவை. மொழி புரியாதவர்கள்கூட இன்றும் கேட்டு மெய் சிலிர்க்கும் அத்தகு பாடல்களில் ஒன்று, ‘ஜாயியே ஆப் கஹான் ஜாயேகா, யே நஜர் லௌட் கே ஃபிர் ஆயேகி’ என்று தொடங்கும் இனிமையான பாடல் 1965-ல் வெளியான ‘மேரெ சனம்’ படத்தில் இடம்பெற்றது.

08chrcjMere%20Sanam%20movie

மேரே சனம் படத்தில்

 

உச்ச ஸ்தாயியில் அனாயாசமாகச் சஞ்சரிக்கும் திறன் பெற்ற ஆஷா போன்ஸ்லேயின் குரல், பாட்டின் தொடக்கத்தில் உள்ள முகமது ரஃபியின் சிறு ஆலாபனை, மேற்கத்திய இசையும் இந்தியப் பாரம்பரிய இசையும் சங்கமிக்கும் வித்தியாசமான ஒ.பி. நய்யாரின் இசை அமைப்பு, இவை எல்லாவற்றையும் விஞ்சும் இப்பாடல் காட்சியில் தோன்றும் ஆஷா பரேக் என்ற இந்திபட நடிகையின் எழிலார்ந்த தோற்றத்துக்குப் பெருமை சேர்ப்பதுபோல் அவரால் வெளிப்படுத்தப்பட்ட நளினமான, வெட்கமும் காதலும் இரண்டறக் கலந்த இயற்கையான நடிப்பு ஆகிய அனைத்தும் இப்பாடலை அமரத்துவமாக்கிவிட்டன.

பாட்டின் பொருள்:

செல்லுங்கள் நீங்கள் எங்கு செல்வீர்கள்

(உங்களுடைய இந்த விழிகள்)

மீண்டும் திரும்பி (என்னிடம் வந்துவிடும்)

தொலைவுவரை என் குரல் உங்களைப் பின் தொடரும்

செல்லுங்கள் நீங்கள் எங்கு செல்வீர்கள்

எங்கு உங்களுக்கு என் காதல் நினைவு வருகிறதோ

அங்கே ஒரு முள் உங்களைக் குத்தும் பாருங்கள்

என் அலைபாயும் முகம் நோக்கி நீங்கள் திரும்பும்

அப்பொழுது ஒரு மரக்கிளை என் பக்கம்

போகச் சொல்லி உங்கள் வழியைத் தடுக்கும்

அமைதி கிட்டாது உங்களுக்கு எங்கும் என்

அன்பான உள்ளத்தைத் தவிர,

என்னைத் தவிர எவரும் இல்லை

உங்களிடம் காதல் கொள்ள

செல்லுங்கள் நீங்கள் எங்கு செல்வீர்கள்

(உங்களுடைய இந்த விழிகள்)

மீண்டும் திரும்பி என்னிடம் வந்துவிடும்.

ஊடல் வகைச் சார்ந்த இந்தப் பாடலை கேட்கும்பொழுது, “என்னைவிட்டு ஓடிப்போக முடியுமா இனி முடியுமா, நாம் இருவரல்ல ஒருவர் இனி தெரியுமா” என்று ‘குமுதம்’ படத்துக்காக மருதகாசி எழுதிய வரிகளும், விஜயகுமாரியின் குறும்பு பார்வையும் எஸ். எஸ். ராஜேந்திரனின் அசட்டு ஆமோதிப்பு நடிப்பும் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க இயலாது

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19637768.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

மொழி கடந்த ரசனை 48: ஒரு சுகமான பயணம்

 

15chrcjAndaaz1971
15chrcjAndaaz%201
15chrcjAndaaz1971
15chrcjAndaaz%201

கல்லையும் உருகவைக்கும் சக்தி பெற்றது காதல். அது ஆங்கில வழிக் கல்வியில் படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞனை, சிறந்த உருது - இந்தி கவிஞனாக ஆக்கியதில் வியப்பில்லை. ஜலக் வரிசையில் நான்காவதாக நாம் காணும் ஹஸ்ரத் ஜெய்பூரிதான் நாம் குறிப்பிட்ட அந்த இளைஞன்.

இக்பால் ஹுசேன் என்ற இயற்பெயர் உடைய இந்த முஸ்லிம் இளைஞன், அருகில் வசித்த ராதா என்ற இந்துப்பெண் மீது கொண்ட தீராத காதல் கொண்டார். பின்னர் அவளையே மனைவியாக அடைந்த பெருமிதமும் ஹஸ்ரத் ஜெய்பூரி எழுதிய புகழ்பெற்ற பல பாடல்களின் பாடுபொருட்களாக அமைந்தன. ஆங்கிலக் கல்வியை விட்டு, சிறந்த கவிஞராக இருந்த தன் தாய் வழிப் பாட்டனார் ஃபிடா ஹுசேனிடம் உருது மற்றும் பெர்சிய மொழிகளைக் கற்றார் ஹஸ்ரத். இந்தி மொழி மீதும் பற்றும் தேர்ச்சியும் உடையவராகத் திகழ்ந்தார்.

“இந்தியும் உருதுவும் இணை பிரியாத இரண்டு சகோதரிகள்” என்ற அவரது கோட்பாட்டுக்கு ஏற்ப அவரது பாடல்கள் அந்த இரண்டு மொழிகளின் சங்கமமாக விளங்குகின்றன. திரை வாய்ப்புகளைத் தேடி மும்பை வந்த ஹஸ்ரத், நம் ரஜினியைப் போன்று பேருந்து நடத்துநராகச் சில வருடம் பணிபுரிந்தார். தன் உருதுக் கவிதைகளை அரங்கேற்றம் செய்வதற்காக ஹஸ்ரத் அவ்வப்போது செல்லும் ‘முஷாயரா’ கவியரங்கம் ஒன்றுக்கு வந்திருந்தார் ராஜ்கபூரின் தந்தை பிரித்வி ராஜ்கபூர். அந்தக் கவியரங்கில் ஹஸ்ரத்தின் காதல் கவிதை ஒன்றைக் கேட்டார். உடனே தன் மகன் அப்போது எடுத்துக்கொண்டிருந்த ‘பர்சாத்’ (மழை) என்ற படத்தில் ஒரு பாட்டு எழுதும் வாய்ப்பைத் தந்தார். சங்கர் - ஜெய்கிஷன் இசை அமைப்பாளராக இருந்த அந்தப் படத்தில் தொடங்கி, ராஜ்கபூர் - ஹஸ்ரத் ஜெய்பூரி- சங்கர்-ஜெய்கிஷன் ஆகிய மூவர் கூட்டனி, சுமார் 31 வருடங்கள் இந்தித் திரை உலகில் தனக்கான அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தது.

‘ஜிந்தகி ஏக் சஃபர் ஹை சுஹானா, யஹான் கல் கியா ஹோ, கிஸ்னே ஜானா’ என்று தொடங்கும் ‘அந்தாஜ்’ (பாணி) திரைப்படத்தில் ஹஸ்ரத் எழுதிய இப்பாடல், சிறந்த பாடல் வரிகளுக்காக, ஃபிலிம்ஃபேர் விருது பெற்றது. விபத்தில் தன் அன்புக் கணவனை இழந்து ஆசிரியராக ஒரு பள்ளியில் பணி புரியும் ஓர் இளம் விதவையையும் தன் அன்பு மனைவியைப் பறிகொடுத்த ஒரு நல்ல மனிதரையும் (விதவை வேலை பார்க்கும் பள்ளியில் படிக்கும்) அவருடைய செல்ல மகள் இணைத்து வைப்பதைக் கதையாகக் கொண்டது இப்படம். மும்பை கேட் வே ஆஃப் இண்டியா, மெரீன்ஸ் லயன்ஸ், சௌப்பாத்தி பீச், ஆகிய பகுதிகளில் படமாகப்பட்ட இப்பாடல் அந்த நாளைய அழகான ‘பம்பாய்’ நகரின் அழிக்க இயலாத ஆவணமாகத் திகழ்கிறது.

துவண்டு கிடப்பவர்களைத் துள்ளி எழச் செய்யும் கிஷோர்குமாரின் உற்சாகம் கொப்பளிக்கும் குரல், வெறும் பதினைந்து நிமிடமே படத்தில் தோன்றும் ராஜேஷ் கன்னாவின் வசீகரம், ‘டிரீம் கேர்ள்’ என்று மெச்சப்பட்ட கட்டழகி ஹேம மாலினியின் எழில் தோற்றம், உடல்மொழி ஆகிய அனைத்தையும் சம அளவில் உள்ளடக்கிய இப்பாடல் இன்றளவும் ஒரு ஹிட் பாடலாக விளங்குகிறது.

இப்பாடலின் பொருள்.

வாழ்க்கை என்பது ஒரு சுகமான பயணம்

வரவிருக்கும் நாளய நிகழ்வை இங்கு எவர் அறிவார்

(எனவே அதைப் பற்றிக் கவலைப் படாமல்)

வெண்ணிலவையும் விண்மீன்களையும் விஞ்ச

வேண்டியதைச் செய்வோம் நாம். அந்த

ஆகாயத்துக்கும் அப்பால் உயருவோம் நாம்

ஆயாசத்துடன் நம் பின்னே நிற்கும் இந்த உலகம்

சிரித்துப் பாடி பொழுதை போக்கிச் செல்லும் எங்கும்

எடுத்துக்கொள்ளாமல் இந்த உலகம் சொல்லுவதை

அடுத்து வரும் நாளை அடக்கு புன்னகையில்

சாவு வரும் சந்தித்தே தீரவேண்டும் அதை ஒரு நாள்

ஆவியாய் நம் உயிர் அகன்றே விடும் ஒரு நாள்

அஞ்சுவது ஏன் அதைப் பற்றி (சாவு) நாம் பேசுவதற்கு

வரவிருக்கும் நாளைய நிகழ்வை எவர் அறிவார் இங்கு

வாழ்க்கை என்பது ஒரு சுகமான பயணம்.

மகிழ்ச்சியாக ஒரு முறை, சோகமாக ஒரு முறை என திரையில் பலமுறை ஒலிக்கும் இப்பாடல் ‘யோடிலிங்க்’ என்ற, கீழ் ஸ்தாயிக்கும் உச்ச ஸ்தாயிக்கும் இடையில் பலவித சுருதியில் பாடும் அரிய வகையில் அமைந்திருப்பது இங்கு குறிப்பிடத் தகுந்தது.

(நிறைவடைந்தது)

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article19689565.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.