Jump to content

ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த் -‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ரெய்டு தாக்குதல்... கொதிக்கும் விஜயகாந்த்

‘‘பழிக்குப்பழி அரசியலுக்குள் இழுக்கிறார் கலைஞர்!’’

p47bir0.jpg

கல்லூரி, கட்சி அலுவலகம், வீடு என எங்கும் ரெய்டு மயமாகிவிட, அது போதா தென்று தன்னைச் சுற்றியிருப்பவர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் புகுந்து புறப்பட்டதில் கண்சிவந்து போயிருக்கிறார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். ரெய்டில் ஏராள மான சொத்துக்கள் சிக்கியதாகவும் கணக்கில் காட்டப்படாத பணமும், வங்கிக் கணக்கும் முடக்கப்பட்டதாகவும் வெளியில் பரபரப்பாகச் செய்திகள் பரவிக்கொண்டிருக்க, விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம்...

‘‘ரெய்டுக்குக் காரணம் அரசியல் பழிவாங் கல்தான் என்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால், முறையான வரி செலுத்தாததினால்தான் உங்கள் வங்கிக் கணக்கு, லாக்கர்கள் எல்லாம் முடக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறையினர் கூறுகிறார்களே?’’

‘‘இந்த ரெய்டு சமாசாரம் முழுக்க முழுக்க என்னைப் பழிவாங்கறதுக்காகக் கலைஞர் போட்ட திட்டம்தான். தே.மு.தி.க-ங்கிற வார்த்தையே தமிழ்நாட்டுல இருக்கக் கூடாதுனு முடிவு பண்ணி, தப்பான இடத்துல கைய வெச்சிருக்காங்க. இது அரசியல் பழி வாங்கல்தாங்கறதை என்னால பல வகைங்கள்ல நிரூபிக்க முடியும். உதாரணத்துக்கு ஒண்ணை சொல்றேன். காலையில என் வீட்டுக் கதவை ரெய்டுக்கு வர்ற அதிகாரிங்க தட்டும்போதே கலைஞர் குடும்பத்து டி.வி&காரங்களும் வந்து நிக் கிறாங்க. சோதனை போட ஆரம்பிச்சவுடனேயே, ‘பல கோடிக்கான ஆவணங்கள் சிக்கியது’னு செய்தி போடறாங்க. இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்? எனக்குத் தெரிஞ்ச ஒரே அர்த்தம், அவங்களைத் தவிர வேற யாரும் இங்கே இருந்து நாட்டை ஆளக்கூடாதுங்கறதுதான்.

என் வீட்டுல ஏராளமான சொத்துக்கான ஆவணங்களை எடுத்திருக்காங்கன்னு சொல்றாங்க இல்ல... அந்த சொத்தையெல்லாம் என்கிட்ட கொடுக்கச் சொல்லுங்க. அதுக்கான வரியைக் கட்டி நானே வெச்சிக் கறேன். தைரியமிருந்தா இதைச் செய்யச் சொல்லுங்க பார்ப்போம். உண்மை என்னன்னு எனக்குத் தெரியும். கலைஞருக்கும் தெரியும். அதிகாரிங்க ஏராளமான ஆவணங்களை எடுத்திருக்க வாய்ப்பே இல்லை. ஏன்னா, எல்லாத்தையும் அடமானம் வெச்சுத்தான் நான் காலேஜ் ஆரம்பிச்சேன். எனக்கு அந்த வகையில ஏழரை கோடி ரூபாய் கடன் இருக்கு. இதுக்கு என்ன சொல்றாங்க?

ரெய்டுக்கு வந்தாங்க, எதுவோ செஞ்சாங்க, எல்லாம் முடிஞ்சு போச்சு. ஆனா, இன்னிக்கு வரைக்கும் என் வீட்டை உளவு பார்க்கறதுக்காக யூனிஃபார்ம் போடாத போலீஸ்காரங்க மறைஞ்சு நின்னு கவனிக்கறாங்க. இதுக்கு என்ன அர்த்தம்?

என்னோட பேங்க் கணக்கையெல்லாம் முடக்கிட் டதா பேப்பர்லதான் படிச்சேன். இன்னும் பேங்க் மேனே ஜருக்கு போன் போட்டாதான் என்னன்னு தெரியும். என் மடியில கனம் இல்லை சார்... நான் போற வழியைத் தீர்மாணிச்சுட்டேன். அந்த வழியில எனக்கு எந்த பயமும் இல்லை.’’

‘‘சரி, உங்கள் வீட்டில் எதுவும் இல்லை, உங்கள் உறவினர்களின் வீடுகளில் சோதனை போடப் பட்டிருக்கிறதே?’’

‘‘விஜயகாந்துங்கிறவன் எப்பவுமே மக்களோட ஒருத்தனா நின்னு போராடுறதுன்னு முடிவு பண்ணிட் டான். அவனோட குடும்பத்தையும் அதுக்குத் தயார்படுத்திட்டான். இது ஒருபக்கம்... ஆனா என்னோட சகோதரி என்ன தப்பு செஞ்சாங்க? அவங் களோட ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க, அங்கயும் ரெய்டு செஞ்சிருக்காங்க. என்னோட பொறந்த ஒரே காரணத்துக்காக அவங்களுக்கு எவ்வளவு பெரிய மனவேதனை. அங்க போய் என்னத் தைப் பெரிசா கண்டுபிடிச்சாங்க? பன்னிரண்டு லட்ச ரூபாய்க்கு நகை வெச்சிருந்தாங்களாம். அவங்க ஒரு டாக்டர். அவங்களுக்குப் பெரிய குடும்பம் இருக்கு. எவ்வளவோ வருமானம் வருது. அதுலயிருந்து அவங்க அந்த நகையை வாங்கியிருப் பாங்க. அவங்க வேற துறையில இருந்தா நான் வருத்தப்படமாட்டேன். புனிதமான, மக்கள் மதிக்கிற மருத்துவத் துறையில இருக்காங்க. அவங்க மனசையும் சங்கடப்படுத்தறதுக்கு இவங்களுக்கு எப்படி தைரியம் வருது சார்.

அரசியல்னா எல்லாத்தையும் மறந்துடுவாங்களா? அந்த இடத்துல பழிவாங்கியே தீரணும்ங்கற வைராக்கி யம் மட்டும்தான் மிஞ்சுமா? மனசு வலிக்குது சார். நான் நினைச்சிருக்கற அரசியலே வேற. நான் செய்ய நெனைக்கற அரசியலே வேற. ஆனா, அவங்க திரும்பத் திரும்ப என்னை வழக்கமான அரசியல் செய்யவும், சும்மாயிருக்கறவனைத் தெருவுக்கு இழுத்து வம்பு பண்ணவும் கூப்பிட்டுக்கிட்டிருக்காங்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாத்துக் கணக்குகளை காட்டத் தயாரா?

கருணாநிதிக்கு சவால்

விஜயகாந்த் ஆவேச பேச்சு

திருச்சி, ஜன.28:

நான் எனது சொத்துக் கணக்குகளை எல்லாம் காட்டுகிறேன். முதல்வர் கருணாநிதி அவரது சொத்துக் கணக்குகளை காட்டத் தயாரா என தேமுதிக தலைவர் விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் அடுத்த ஆட்சி தேமுதிக ஆட்சிதான் என்று கூறியுள்ள அவர், ஒரு விஜயகாந்தை அழிக்க நினைத்தால் ஓராயிரம் விஜயகாந்துக்கள் தோன்றுவார்கள் என அவர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பொன்னுசாமி யின் மகள் பிரியாவெற்றிவேல் திருமண விழா திருச்சி அருகே மணப்பாறை செல்லும் நெடுஞ் சாலையில் உள்ள ஜே.ஜே. கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

திருச்சியில் முன்னாள் அமைச்சர்

கே.பொன்னுசாமியின் மகள்

திருமணத்தை இன்று காலை

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நடத்தி வைத்தார். அருகில்

விஜயகாந்தின் மனைவி

பிரேமலதா, எல்.கே.சுதீஷ்

ஆகியோர் மணமக்களை

ஆசீர்வதிக்கும் காட்சி.

படம்: திருச்சி சார்லஸ்.

திருமணத்தை தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையேற்று நடத்தி வைத்தார். மணவிழாவில் தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச் சந்திரன், முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், தேமுதிக மாநில இளைஞரணி தலைவர் எல்.கே.சுதீஷ், திருச்சி மாவட்ட தேமுதிக தலைவர் நடராஜன், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் விஜயராஜன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆரோக்கிய சாமி உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர் களும் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில் விஜயகாந்த் பேசியதாவது: இந்திய வரலாற்றில் முதன் முறையாக தேமுதிக கட்சி அலுவலகத்தில் தான் வருமானவரி சோதனை நடந்துள்ளது. ஹிட்லர் ஆட்சியில் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் சோதனை நடந்ததுபோல் இப்போது தேமுதிக அலுவலகத்திலும் நடந்துள்ளது.

இதற்கு முழுக்க முழுக்க திமுக தான் காரணம். வருமானவரித்துறை அதிகாரிகள் இதே போல் அறிவாலயம் மற்றும் கூட்டணி கட்சி அலுவலகத் திற்கு போக வேண்டியது தானே. நான் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தேன். வருமான கணக்கிற்கும், தேர்தல் நேரத்தில் நான் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த கணக்கிற்கும் வித்தியாசம் என்று இப்போது குற்றம் சாட்டுகிறார்கள்.

கொலை செய்த மந்திரிகள், எம்எல்ஏக்கள் வெளியே சுற்றி கொண்டு உள்ளனர். சென்னை மாநகராட்சி தேர்தலில் ரவுடிகளை பரோலில் எடுத்து கத்தி, அரிவாள் கொண்டு தேர்தல் நடத்தி 99 கவுன்சிலர்களை ஜெயிக்க வைத்தார்கள்.

தேர்தல் ஆணையர் சந்திரசேகரன், போலீஸ் டிஜிபி முகர்ஜி, போலீஸ் கமிஷனர் லத்திகாசரண் இவர்களை இன்னும் மாற்றம் செய்யாமல் இருப்பது நியாயமா? சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கிறது என்று சட்டசபையில் சொல்கிறார்கள். திட்டங்களை நாங்கள் குறை சொல்லவில்லை. ஏழை மக்களுக்கு வளர்ச்சி திட்டங்கள் கொடுக்க வேண்டும்.

ஆனால் நிரந்தர ஏற்பாடு இன்னும் செய்யவில்லை. அவர்கள் நடத்தும் கேபிள் இணைப்புக்கு வருமானம் பார்க்கவே இலவச டிவி கொடுக்கிறார்கள். அதே போல இலவச சமையல் எரிவாயு திட்டம் ஏழைகளுக்கு உதவாது. மாதந்தோறும் 300 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க ஏழைகள் எங்கே போவார்கள்.

ரிலையன்சுடன் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு அதிலும் பங்கு கிடைக்கும் என்பதால் சமையல் எரிவாயு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். அடுத்து ஆட்சியில் அமரப்போவது தேமுதிக தான். இதில் எந்த மாற்றமும் இல்லை. திமுகவினர் தேமுதிகவில் உள்ளவர்களுக்கு 20 லட்சம், 30 லட்சம் ரூபாய்களுக்கு ஒப்பந்தம் (காண்டிராக்ட்) தருவதாக ஆசை காட்டினார்கள். திருச்சியில் உள்ள ஒரு மந்திரி கூட இதற்காக முயற்சி செய்து ஏமாந்து விட்டார்.

தேமுதிக தொண்டர்களை யாரும் விலைக்கு வாங்க முடியாது. கோடி கோடியாக சம்பாதித்தாலும் கடைசியில் 6 அடிக்கு 3 அடி தான் கிடைக்கும். வேறு என்ன கொண்டு போக முடியும். உங்களுக்கு (கருணாநிதி) 40 குடும்பங்கள் உள்ளன. எவ்வளவு சொத்துக்கள் உள்ளது என்பது மக்களுக்கு தெரியும். மக்களுக்கு உங்களை பற்றியும் தெரிகிறது, என்னை பற்றியும் தெரிகிறது. காசுக்கு ஆசைப்பட்டால் தனித்து போராடாமல் சூட்கேஸ் வாங்கிக்கொண்டு போய் இருப்பேன். அந்த மாதிரி அரசியல் எனக்கு வேண்டாம்.

அதிமுக அரசு மிடாசில் சரக்கு (மதுபானம்) எடுத்தது என்று சொன்ன திமுகவினரும் இன்று மிடாசில் தான் சரக்கு எடுத்து வருகிறார்கள். நியாயமாக நடந்து கொள்ளுங்கள். தனி மனித வருமானத்தை ஏற்படுத்துங்கள். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தாருங்கள்.

மூன்று மாதத்திற்கு படித்த பட்டதாரி இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து விட்டு அதன் பின்னர் பணம் இல்லாமல் திண்டாடப்போகிறீர்கள். திமுக, அதிமுக ஆட்சியில் ஒன்னரை லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவில்லை.

விவசாயிகளுக்கு கூடுதலாக கொள்முதல் நிலையங்களை திறப்பதைவிட அவர்களின் விலைப்பொருட்களுக்கு கூடுதல் விலை நிர்ணயம் செய்யுங்கள். அரிசி கடத்தப்படவில்லை என்று சொல்கிறீர்கள். கள்ளன் (திருடன்) பெரிசா? தாழ்பாள் பெரிசா? என்ற நிலை தான் உள்ளது.

என் சொத்து கணக்கை தருகிறேன். உங்கள் (கருணாநிதி) கணக்கை தாருங்கள். நடப்பது நடக்கட்டும், என்னை அழிக்க நினைத்தால் ஓராயிரம் விஜயகாந்த் தோன்றுவார்கள். மக்களால் உருவாக்கப்பட்ட கட்சி தேமுதிக. உங்களை (மக்களை) நம்பித்தான் கட்சி நடத்துகிறேன்.

விஜயகாந்த் எதையாவது கொடுப்பான் என்று நம்பியா வந்தீர்கள்? ஒவ்வொரு மாநாட்டிற்கும், நிகழ்ச்சிக்கும் ஆதாயம் எதிர்பார்த்தா வந்தீர்கள்? என் வாழ்க்கை முழுவதும் உங்களுக்காகவே வாழ்வேன்.

விஜயகாந்த்தை மட்டும் உங்களால் (கருணாநிதி) பயமுறுத்த முடியாது. காசு ஆசை எனக்கு இல்லை. எனக்கு இது சோதனை காலம். ஆனாலும் சோதனைக்காலத்தில் தான் சாதிக்க முடியும். இளைஞர்கள் போராடும் காலம் இது. மகளிர்கள், தாய்மார்கள், சகோதர, சகோதரிகள் போராட வேண்டும்.

இந்த ரத்தத்தை உங்களால் (கருணாநிதி) தடுக்க முடியுமா? நாமா, அவர்களா என்று தப்பான வழியில் இல்லாமல் அறவழியில் பார்ப்போம். தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை நாம் உருவாக்க வேண்டும். தனியாக நின்று சாதிப்போம்.

ஜனாதிபதி அப்துல்கலாம், படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். சாக்கடையாக உள்ளதை சீர் செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே அரசியலை சீர் செய்ய உங்களைப் போன்ற சுத்தமான இளைஞர்களை அரசியலுக்கு வரவேற்கிறேன். தேமுதிக அடுத்து ஆட்சிக்கு வரும். அப்போது 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும். இந்த திருமணம் மண்டல மாநாடு போல் நடந்துள்ளது. இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

http://www.maalaisudar.com

Link to comment
Share on other sites

கருணாநிதிக்கு (நீதி) இருக்கிற சொத்து எங்கை இருந்து வந்ததாம் அரசியல்லை இருந்து சுத்து மாத்து செய்த காசு தானே

இது அவங்கள் உழைத்த காசு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.