Jump to content

காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்!


Recommended Posts

காலத்தின் வாசனை: திண்ணைகளின் பொற்காலம்!

 

 
திண்ணை வீடுகள்
திண்ணை வீடுகள்

திண்ணை என்பது வெறும் கல்லையும் மண்ணையும் இழைத்துக் கட்டப்பட்ட உட்காருமிடம் அல்ல. அது மனித நேயத்தின் அடையாளம். திண்ணை என்பது வீட்டில் வசிப்போருக்கு மட்டும் உரியதல்ல; மழையிலும் வெயிலிலும் யாத்திரை செல்லும் தேசாந்திரிகள் உட்கார்ந்து இளைப்பாறிச் செல்லக் கட்டப்பட்டவை. அந்தக் காலத்தில் திண்ணைகளில் வீட்டாரின் அனுமதி இன்றிப் படுத்துறங்கும் பண்டாரங்களையும் பரதேசிகளையும் காணலாம். திண்ணையில் இருக்கும் அந்நியரின் பசி தீர்த்த பின்னர் தாம் புசிக்கும் நல்லோர் வாழ்ந்த காலம் அது.

தெருவை மட்டுமல்ல; வாழ்க்கையையே வேடிக்கை பார்க்கும் மனோபாவத்துக்கு உட்படுத்துவதாகத் திண்ணைகள் இருந்தன. ‘திண்ணையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்தபடி ஒரு வாழ்நாளையே கழித்துவிடலாம்’ என்பார் எழுத்தாளர் தி.ஜானகிராமன். மிட்டா மிராசுகள், ஊர் பெருந்தனக்காரர்கள் வீட்டுத் திண்ணைகள் ஆளுயரத்துக்கு மேல் இருக்கும். கீழே பண்ணையாட்கள் கைகட்டி வாய்பொத்தி நிற்க அதிகார பீடத்தின் அடையாளங்களாகவும் அவை இருந்தன. காலப்போக்கில் முதியோர்களின் கடைசிப் புகலிடமாகவும் அவை மாறிப்போனது உண்டு.

திண்ணைப் பள்ளிக்கூடங்கள்

தமிழ்த் தாத்தா உ.வே.சா. திண்ணைப் பள்ளிக் கூடத்தில் படித்தவர்தான். திண்ணைப் பள்ளிக்கூடத்தின் தாழ்வாரத்தில் மேற்கூரை நெடுகவும் கயிறுகள் வரிசையாகத் தொங்கும். இரவில் படிக்க வரும் மாணாக்கர்கள் தங்களின் லாந்தர் விளக்குகளை அந்தக் கயிறுகளில் கட்டித் தொங்கவிட்டுப் படிக்க உட்காருவார்கள்.

நீண்ட திண்ணைகளில் நெடுக சிமெண்ட்டைக் குழைத்து ஒரு செங்கல் நீளம் கட்டிப் பூசியிருப்பார்கள். அது வழவழப்பாக ஜில்லென்று இருக்கும். இதற்கு மாப்பிள்ளைத் தலைகாணி என்று பெயர். இந்தத் திண்ணைகளில் விடிய விடிய சீட்டுக் கச்சேரி நடக்கும். அரட்டை, வெற்றிலைக் குதப்பல், ஊர்வம்பு அரங்கேறும் இடமே திண்ணைதான். திண்ணைப் பேச்சு, திண்ணைத்தூங்கிக் கூட்டம் இதெல்லாம் தஞ்சாவூர் ஜில்லாவின் கேலிப் பிரதாபங்கள்.

குறடும் ரேழியும்

திண்ணைக்கு முன்புறமுள்ள இடத்துக்குக் குறடு என்று பெயர். திண்ணையில் உட்கார்ந்து வேதம் படிக்கும் அந்தணர் முன்பு குறட்டில் குடியானவர்கள் தங்களது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை வைத்து வணங்கிச் செல்வார்கள். திண்ணையிலிருந்து வீட்டு வாசலுக்குள் நுழையும் இடைப்பட்ட பகுதி ரேழி என்று அழைக்கப்படும்.

குடியானவர்களின் குடிசை வீடுகளில் சாணி மெழுகிய திண்ணைகளின் குளுமை சொல்லிமாளாது. தஞ்சாவூரில் விட்டில் மந்திர் திண்ணை பிரபலமானது. மேலவீதியில் உள்ள பாக்கு மரத்து ஐயர் வீட்டுக்குச் சொந்தமான இந்தத் திண்ணை, வீட்டின் காம்பவுண்டுச் சுவருக்கு வெளியே நீளமாகக் கட்டப்பட்டிருக்கும். தெருவாசிகளுக்கும் தேசாந்திரிகளுக்கும் அந்த வீட்டாரின் நன்கொடையாக அந்தத் திண்ணை இன்றும் உள்ளது. அங்கே அரசியல் கூட்டங்கள் நடந்தது உண்டு. மேலவீதி வழியே சுவாமி புறப்பாடு ஆகிவரும் ஊர்வலத்தில், நாகசுரம் முதலான வாத்தியங்களை வாசித்தபடி வரும் பெரிய வித்வான்கள் இந்தத் திண்ணைக்கு முன்னால் நின்று வாசித்துவிட்டுச் செல்வார்கள். அக்காலத்தில் சங்கீத ஜாம்பவான்கள் இந்தத் திண்ணையில் உட்கார்ந்து சாதகம் செய்ததால் இப்படியொரு மரியாதை இந்தத் திண்ணைக்குக் கிடைத்துவந்தது.

நல்ல, பெரிய, அகன்ற திண்ணைகளில் படுத்தும் உட் கார்ந்தும் விசிறியபடியே ஓய்வெடுக்கும் முதியவர்களையும், குழந்தைகளுக்குத் தலைபின்னிவிடும் தாய்மார்களையும், கதை சொல்லும் பாட்டிமார்களையும் இனி காண முடியாது. நவீன வாழ்க்கையிடமிருந்து விடைபெறும் திண்ணைகளைக் கண்டு மனம் கனக்கவே செய்கிறது.

- தஞ்சாவூர்க் கவிராயர்,

http://tamil.thehindu.com/opinion/reporter-page/காலத்தின்-வாசனை-திண்ணைகளின்-பொற்காலம்/article9213838.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.