Jump to content

ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் இருக்கும் துளை எதற்கு?


Recommended Posts

ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் இருக்கும் துளை எதற்கு?

iphone.jpg

ஆப்பிள் ஐபோன் நிறைய பேர் வாங்க நினைக்கும் உயர் ரக ஸ்மார்ட் போன் மாடல்களில் ஒன்று. முதல் நாள் க்யூவில் நின்று வாங்கி செம ஸ்டைலாக பயன்படுத்தி கொண்டிருக்கும் உங்களுக்கு ஐபோனில் இருக்கும் இந்த விஷயம் தெரியுமா? ஐபோனில் கேமராவுக்கும் ஃப்ளாஷுக்கும் நடுவில் ஒருதுளை இருக்கும் அதனை பார்த்திருக்கிறீர்களா? அது எதற்கு என்று தெரியுமா?

ஐபோனில் கேமரா மற்றும் ப்ளாஷ்க்கு நடுவிலும், முன்புற கேமராக்கு அருகிலும், கீழ் புறத்திலும் மூன்று துளைகள் இருக்கும். இது மூன்றும் இரைச்சலை குறைக்கும் மைக்ரோபோன்கள் தான் இவை.

1. பின்பக்கத்தில் இருக்கும் மைக்ரோஃபோன் ஹச்.டி வீடிக்களை பதிவு செய்யும் போது ஏற்படும் இரைச்சலை குறைக்க உதவுகிறது. 

2. முன்பக்கத்தில் இருக்கும் மைக்ரோபோன் ஃபேஸ் டைம், ஸ்கைப் கால்களின் போது உரையாடல்களில் உள்ள இரைச்சலை நீக்கி தெளிவான ஆடியோகளை வழங்க பயன்படுகிறது. 

iphone6s-plus-rosegold-select-2015.jpg

3. கீழ் புறத்தில் இருக்கும் மைக்ரோபோன் சிறியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறிக்கு ஒரு நபர் வழங்கும் கட்டளைகள் தெளிவாக புரிய வைக்க இது உதவுகிறது. அதுமட்டுமின்றி புகைப்படம் எடுக்கும் போது வரும் இரைச்சலை குறைக்கவும் உதவுகிறது.

இந்த மூன்று துளைகள் போன்ற அமைப்பு ஐபோன்களில் தெளிவாகவும் துள்ளியமாகவும் வடிவமைக்கப்பட்டிருக்கும். மற்ற போன்களிலும் இந்த வசதி இருக்கும் ஆனால் ஒரே ஒரு மைக்ரோ போன் அளவில் தான் அவை இருக்கும். ஐபோன் க்ரேஸ் உள்ளவர்களிடம் இனி இந்த கேள்வியை கேட்டு பதில் பெறுங்கள். தெரியவில்லை என்றால் நீங்கள் சொல்லி கெத்து காட்டுங்கள்.

http://www.vikatan.com/news/information-technology/69535-small-hole-between-your-iphone-camera--flash-did-you-know-why.art

Link to comment
Share on other sites

ஓ அப்படியா? நான் நினைத்தேன் அந்த ஓட்டைக்காலதான் ஐபோன் மூச்சு, மற்றும் *சு எல்லாம் விடுது என்று. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.