Jump to content

விக்னேஸ்வரனின் லண்டன் விஜயமும் - காத்திருக்கும் சர்ச்சைகளும்


Recommended Posts

சமகால அரசியலில் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன். அவரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமளவுக்கு இன்று அவரின் அரசியல் பயணம் சென்றுகொண்டிருக்கின்றது.தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அவரே அண்மையில் தெரிவித்திருந்தமை யாவரும் அறிந்த ஒன்றே. இன்று அவருக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எழுக தமிழ் பேரணிக்கு பின்னர் அதிகளவு பேசப்படும் ஒருவராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் காணப்படுகின்றார். எழுக தமிழ் பேரணியின் போது அவர் தெரிவித்த கருத்து தென்னிலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவரை ஒரு இனவாதியாக பலரும் விமர்சித்திருந்தனர்.

"பௌத்தர்கள் வாழாத இடங்களில் பௌத்த விகாரைகளும் புத்த சிலைகளும் ஏன்? எம்மை மதத்தின் ஊடாக ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவா? எமது பிரதேசங்களின் குடிப்பரம்பலை மாற்றத்தான் இவை நடைபெறுகின்றனவா என்பது எமது முதலாவது கரிசனை".

சிறையில் உண்ணாவிரதம் இருக்கும் எமது இளைஞர்களின் குரல்கள் எவருக்குங் கேட்காதது ஏன்? அவர்கள் இறந்தாலும் பரவாயில்லை என்ற ஒரு காழ்ப்புணர்ச்சி எங்கோ ஒரு அதிகார பீடத்தின் அடி மனதில் ஆழப் பதிந்துள்ளதா..? என பேரணியின் போது முதலமைச்சர் தெரிவித்திருந்தார்

இதனை ஒரு இனவாதமாக சித்தரித்து மன்னிப்பு கோர வேண்டும், பதவி விலகவேண்டும், கைது செய்ய வேண்டும் என தென்னிலங்கையிலிருந்து விக்னேஸ்வரனுக்கு எதிராக வார்த்தைகளால் வாள் வீசப்பட்டன.

அந்த மாபெரும் பேரணி இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த அதேவேளை, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இன்னும் அந்த சர்ச்சைக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.

இவ்வாறான நிலையில் தற்போது வடமாகாண முதலமைச்சர் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது இலங்கை அரசியலில் நீண்ட நாட்களுக்கு பேசப்படும் ஒன்றாக இருக்கும் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

யாழ்ப்பாண மாநகரசபைக்கும் லண்டனில் உள்ள கிங்ஸ்டன் நகர சபைக்கும் இடையிலான உடன்படிக்கை ஒன்றில் வடமாகாண முதலமைச்சர் எதிர்வரும் 18ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளார்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனின் லண்டன் விஜயமே தற்போது பாரிய சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. வடக்கு மாகாண சபைக்கு அறிவிக்காமல், அதன் அனுமதி பெறாமல் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாண மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் கலைக்கப்பட்டு தற்போது மாகாண உள்ளூராட்சி அமைச்சின் கீழேயே இயங்கி வருகிறது.

வடமாகாண உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் யாழ்ப்பாண மாநகரசபையின் சார்பில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட உள்ளனர்.

வடமாகாணசபைக்கும் கிங்ஸ்டன் நகரசபைக்கும் இடையில் ஒப்பந்தம் செய்யப்படவில்லை, மாறாக யாழ். மாநகரசபைக்கும் கிங்ஸ்டன் நகரசபைக்கும் இடையில் தான் செய்யப்பட உள்ளது.

எனவே வடமாகாணசபைக்கு அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என முதலமைச்சர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், முதலமைச்சர் என்ற அந்தஸ்துடனேயே அவர் குறித்த உடன்படிக்கையில் கைச்சாத்திடவுள்ளார். எனவே அவர் இதனை வடமாகாண சபைக்கு அறிவித்திருக்க வேண்டும்.

எனினும் முதலமைச்சர் இது வரையில் அவ்வாறான அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை என வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

ஆனால் குறித்த உடன்படிக்கை தொடர்பில் லண்டன் கிங்ஸ்டன் நகரசபையில் விபரம் சமர்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், குறித்த உடன்படிக்கை தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அனைத்தையும் இரகசியமாகவே வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

வடமாகாண முதலமைச்சரின் லண்டன் விஜயத்தில் மேலும் இருவர் இணைந்துள்ளதாகவும் அவர்கள் குறித்த தகவல்களும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க எழுக தமிழ் பேரணியின் பின்னர் வடமாகாண முதலமைச்சருக்கு புலம் பெயர் அமைப்புகளினதும், புலம் பெயர் மக்களினதும் ஆதரவு அதிகரித்துள்ளதாக தென்னிலங்கை அரசியல் வாதிகளினால் பெரிதும் பேசப்பட்டமை யாவரும் அறிந்த ஒன்றே.

இவ்வாறான நிலையில், முதலமைச்சரின் லண்டன் விஜயத்தின் போது அங்கிருக்கும் புலம் பெயர் அமைப்புகளை சந்திக்க கூடும் எனவும், அதன் காரணமாகவே தனது பயணம் தொடர்பில் இரகசிய தன்மை பேணப்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமாகாண முதலமைச்சரின் இந்த விஜயம் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடுவதற்காக இருந்தாலும் அதனை புலம் பெயர் அமைப்புகள் சாதகமாக பயன்படுத்திகொள்ளும் என தென்னிலங்கை அரசியல் வாதிகள் அச்சம் கொண்டுள்ளனர்.

தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் தலைவராக தற்போது வடக்கு முதல்வர் இருப்பதன் காரணமாக அவரை சந்திப்பதற்கு புலம் பெயர் அமைப்புகள் முயற்சிக்கும் எனவும் கூறப்படுகின்றது.

ஆரம்பத்தில் வடக்கு மாகாண முதலமைச்சராக விக்னேஸ்வரனை நியமித்த போது கண்டணம் வெளியிட்ட புலம் பெயர் அமைப்புகள், தற்போது தமிழ் மக்களுக்காக விக்னேஸ்வரன் குரல் கொடுக்க தொடங்கிய நிலையில், புலம் பெயர் அமைப்புகள் மத்தியில் அவருக்கான ஆதரவு பெருகியுள்ளது.

அத்துடன், விடுதலைப்புலிகளின் தலைவரின் தலைமைத்துவ வெற்றிடத்தை விக்னேஸ்வரன் நிரப்புவார் என்ற நம்பிக்கை இன்று புலம்பெயர் அமைப்புகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்புகளும், சர்ச்சைகளுடனான வடக்கு முதலமைச்சரின் இந்த விஜயத்தின் போது புலம் பெயர் அமைப்புகளுடன் சந்திப்பு ஏதும் இடமபெறுமாயின் அது கொழுமப்பு அரசியலில் அணு குண்டு வெடிப்பதற்கு ஒப்பானதாகிவிடும்.

மேலும் வடக்கு முதல்வரின் லண்டன் விஜயம் அரசியலில் அநாதையாக்கப்பட்ட பலருக்கும் வாய்ப்பாக அமையக் கூடும் எனவும் அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

எவ்வாறாயினும், தன் இன மக்களுக்காக குரல் கொடுத்த ஒரு தலைவனை தென்னிலங்கை அரசியல் வாதிகள் இனவாதியாக சித்தரித்த நிலையில், வடக்கு முதல்வரின் இந்த விஜயத்தினை வைத்து பெரும் அரசியல் இலாபம் தேட முயற்சிப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

http://www.tamilwin.com/politics/01/120825?ref=editorpick

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.