Jump to content

ஆள் மாற்றிடும் 'அட்டகத்தி' வியூகம்!


Recommended Posts

ஆள் மாற்றிடும் 'அட்டகத்தி' வியூகம்!

 

 
attakathi_2440799f.jpg
 

நானும் புருஷோத்தும் பெரம்பூரை அடுத்த அகரம் அமிர்தம்மாள் காலனியில் அறை எடுத்து தங்கியிருந்தோம். புருஷோத் அருகில் உள்ள ஒரு ஹார்டுவேர் கம்பெனியிலும், நான் ஒரு பத்திரிகையிலும் வேலை செய்ய நாட்கள் நகர்ந்தன.

வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமுமே இல்லை என்று அடிக்கடி புருஷோத் சொல்லிக்கொண்டே இருப்பான். அந்த மாதிரி நீண்...ட பிரசங்கம் நடத்திய ஒரு மாலைப்பொழுதில் வந்த ஃபோன் கால் புருஷோத்தை புரட்டிப்போடும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

''ஹலோ... கார்த்தி இருக்காரா?'' என்றது எதிர்முனையில் ஒரு பெண்ணின் குரல்.

''நான் அவர் தம்பி பேசுறேன். அண்ணன் ரெடியாகிறார். நீங்க?''

''நான் காயத்ரி.. திண்டுக்கல்... என் அண்ணாவும் உங்க அண்ணாகூட தான் ஆர்மியில வேலை செய்றார். அண்ணா கிளம்பிட்டார். உங்க அண்ணாவை சென்ட்ரல் வந்து பிக்கப் பண்ணிக்க சொன்னார்.''

''ஓ.கே. சொல்லிடறேன்.''

இந்த உரையாடலுக்குப் பிறகு முகம் முழுக்க புன்னகையுடன் இருந்தான் புருஷோத். அதைத் தொடர்ந்த செல்போன் அழைப்புகளால் பின்னாளில் காதலாகி கசிந்துருகினான்.

இரவு எட்டு மணிக்கு அறைக்கு வரும் புருஷோத் ஒன்பது மணிக்கு பேச ஆரம்பிப்பான். காலை ஆறு மணிக்குதான் போனை வைப்பான். வேலை செய்யும் நேரத்தை விட செல்போனில் பேசும் நேரம் அதிகமாகிவிட்டது அவனுக்கு.

இ-மெயிலில் புகைப்படங்கள் அனுப்புவது, முத்தம் தந்தே செல்போனை ஈரமாக்குவது, மெசேஜ் மூலம் கொஞ்சுவது என்று மூன்றே மாதத்தில் முற்றிலுமாக மாறிப்போனான்.

திருமணம் குறித்த சிந்தனைகள் எல்லாம் பெருக்கெடுத்து ஓட ஓரம்பித்த தருணத்தில் குழந்தைகள் விளையாட்டு பொம்மைகளை உடைப்பதைப் போல, அவள் காதலை உடைத்துவிட்டுப் போய்விட்டாள்.

எனக்கு நிறைய பெண் தோழிகள் இருக்காங்க என்று புருஷோத் இஷ்டத்துக்கும் அள்ளிவிட்டான். தன்னை 'அட்ட'ன்னு பொண்ணு நெனைச்சிடக்கூடாது. கெத்தா நினைக்கணும் என்பதற்காகவே அந்த பில்டப். அதையே காரணமாகக் கொண்டு சொல்லாமல் கொள்ளாமல் செல்போன் தொடர்பை துண்டித்துக்கொண்டாள் காயத்ரி.

அதற்காக புருஷோத் வருத்தப்பட்டிருக்கிறான். ஆனால், கலங்கவோ கண்ணீர்விடவோ இல்லை. காரணம் கேட்டால், தன் நடத்தைகளுக்கு ஷாலினியை துணைக்கு அழைத்துக்கொள்வான்.

''ஷாலினி என்ன சொல்லியிருக்காங்க தெரியுமா?''

''யார்றா.. அஜித் மனைவியா?''

''இல்லை. டிவியில வருவாங்களே டாக்டர் ஷாலினி.''

மனநல மருத்துவர் ஷாலினி ஏதாவது ஒரு சேனலில் உட்கார்ந்துகொண்டு காதல் பற்றியும், ஆண் பெண் பற்றியும் பேசிக்கொண்டிருந்த காலகட்டம் அது.

''என்ன சொன்னாங்க?''

''ஒரு பையன், பொண்ணை முதன் முதலா பார்க்கும்போது தெரிஞ்சோ தெரியாமலோ கழுத்துக்கு கீழே பார்க்கிறான். அதே மாதிரி பொண்ணு பையனைப் பார்க்கும்போது அவனோட தோள்களைப் பார்க்கிறா? இது ஏன்?''

''நீயே சொல்லுடா.''

''தான் குழந்தையை சுமக்குற அளவுக்கு தெம்பு இருக்கான்னு பையன் யோசிப்பான். தன் குடும்பத்தை காப்பாத்துற அளவுக்கு வலிமை இருக்கான்னு பொண்ணு யோசிப்பா.''

''அதுக்கும், நீ சொல்றதுக்கும் என்னடா சம்பந்தம்?''

''ஒரு பொண்ணு போய்டுச்சேன்னு அப்டியே விழுந்திடமாட்டேன். அடுத்து முயற்சி பண்ணுவேன். இதெல்லாம் தப்பே இல்லை. 'ஒரு மனுஷன் அவன் வாழ்க்கையில ஒரே பொண்ணை காதலிச்சா நல்ல விஷயம். ஆனா, ஒன்றுக்கும் மேற்பட்ட காதல் சாத்தியம். ஏழு பேரை கூட உண்மையா காதலிக்க முடியும்'னு ஷாலினி சொல்றாங்க.''

''அடுத்த காதலுக்கு ரெடியாகிட்ட போல?''

''நான் ரெண்டுதான் பண்ணியிருக்கேன். அப்படி பார்த்தா இன்னும் அஞ்சு காதல் பாக்கி இருக்கு''

அவன் எந்த நேரத்தில் இப்படி சொன்னான் என்று தெரியவில்லை. காயத்ரி அவன் வாழ்வில் இல்லையென்ற பிறகு விமலா வந்தாள்.

புருஷோத் அண்ணன் கார்த்திக்கு நிச்சயதார்த்தம் நடந்த தருணம் அது. கல்யாண வீட்டில் அழகான பெண்கள் இல்லாமலா? அந்த கூட்டத்தில் ஒரே ஒரு பெண் மட்டும் அங்குமிங்கும் ஓடியாடி வேலை செய்துகொண்டிருந்தாள்.

புருஷோத் வந்ததில் இருந்து அந்த பெண்ணையே கவனித்துக்கொண்டிருந்தான். குழந்தைகளைக் கொஞ்சுவது, வருபவர்களை உபசரிப்பது என பம்பரமாய் சுழன்ற அப்பெண் அண்ணிக்கு சொந்தம் என்று தெரிந்துகொண்டதும், சகஜமாக கலாய்க்க ஆரம்பித்தான்.

ஒரு வார்த்தை கூட அந்தப் பெண்ணிடம் பேசவேயில்லை. அடுத்த நாள் அந்தப் பெண்ணே புருஷோத்திடம் செல்போனில் பேசினாள்.

''ஹலோ. நான் விமலா பேசுறேன்.''

''பேசுங்க.''

''எதுக்கு என்னை கலாய்ச்சிட்டே இருந்தீங்க?''

''இதுக்குதான். இப்படி பேசணும்னுதான் பண்ணேன்'' என்றான்.

விமலா, புருஷோத்துக்கு தேவதையாகிப் போனாள்.

ஒரு முறை பெரம்பூரில் இருந்து அரக்கோணம் செல்லும்போது எதேச்சையாக இருவரும் சந்தித்துக்கொண்டார்கள். இவர்கள் ரொமான்ஸ் தாங்க முடியாமல் பொறாமையில் பொங்கி, நான் அடுத்த பெட்டிக்கு மாறியது தனிக் கதை.

ஒரு கட்டத்தில், விமலா வீட்டுக்கும், புருஷோத் அண்ணி வீட்டுக்கும் ஏதோ பங்காளிப் பிரச்னை. இரு குடும்பங்களுக்கும் பேச்சுவார்த்தை இல்லாமல் போக, அந்த கோபத்தை புருஷோத் மீது கொட்டிவிட்டாள் விமலா.

அர்த்தமே இல்லாத காரணத்துக்காக புருஷோத்தின் அந்தக் காதலும் புஸ் ஆனது. அதற்குப் பிறகு வனிதா வந்தாள். அதற்கடுத்து கோசலா வந்தாள்.

ஒன் சைட், டூ சைட் எதுவும் பிரச்சினை இல்லை. பிடிச்சா கல்யாணம் பண்ணிப்போம். இல்லைன்னா பிரிஞ்சிடுவோம் என்று தெளிவாய் இருந்தான். இத்தனை காதலை சந்தித்ததற்காக புருஷோத் பெருமைப்பட்டானே தவிர, வருத்தப்படவில்லை. அந்த தெளிவு எப்படி கிடைத்தது? என்றபோதுதான் ஆச்சர்யமாக இருந்தது.

'அட்டகத்தி' படம் பார்த்த போது புருஷோத்தை தவிர்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு காட்சியிலும் புருஷோத்தே திரையில் ஆக்ரமித்துக் கொண்டிருந்தான்.

காதல் புனிதமானது. தெய்வீகமானது. காதலில் தோற்றவர்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்றெல்லாம் கூட தமிழ் சினிமா பல்வேறு பிம்பங்களைக் கட்டமைத்திருக்கிறது.

'தேவதாஸ்' படத்தில் ஆரம்பித்து இப்போது வரைக்கும் காதல் தான் பிரதானமாக இருக்கிறது. காதல் பூவைப் போல. ஒரு முறை உதிர்ந்துட்டா மறுபடி ஒட்டவைக்க முடியாது என்று விக்ரமன் ஃபீலிங்க்ஸில் பியானோ வாசிக்கும் அளவுக்கு 'பூவே உனக்காக' படத்தில் வசனம் எழுதி இருக்கிறார். இப்படிப்பட்ட வழித் தோன்றல்களில் 'அட்டகத்தி' தனித்துத் தெரிந்தது.

காதல் ஒரு உணர்வுதான். ஆனால், அதற்காக அழுது புலம்பி வாழ்வை இழக்க வேண்டாம் என்பதை அழுத்தமாக அதேசமயம் கலகலப்பாக சொன்ன விதத்தில் இயக்குநர் ரஞ்சித் கவனம் ஈர்த்தார்.

'அட்டகத்தி' ஹீரோ தினேஷ் பார்க்கிற பெண்களுக்கெல்லாம் ரூட் விடுகிறார். பின்னால் சுற்றுகிறார். உண்மையாய் இருக்கிறார். ஆனால், அந்த காதல் கைகூடவில்லை என்பதற்காக உடைந்துபோய்விடவில்லை. உடனே அடுத்த காதலுக்கு தாவிச் செல்கிறார்.

''ஒன் சைட் லவ் ஃபெயிலியர், காதல் தோல்வியில் தற்கொலை பண்ணிக்குறது எல்லாம் முட்டாள்தனம்டா'' என்று நண்பர்களிடம் சொல்கிறார் தினேஷ்.

காதலில் மூக்குடைபட்டதும், 'இப்போ என்னால எப்படி மச்சி போண்டா சாப்பிட முடியும்?' என போண்டாவைத் துப்பி ஃபீலிங்ஸ் காட்டிவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். ஆனால், நண்பர்களை அனுப்பிவிட்டு மீண்டும் கடைக்கு வந்து தனியாக போண்டாவை வாங்கி வாய்க்குள் தள்ளுகிறார்.

பக்கத்துவீட்டுப் பெண் ஐஸ்வர்யா பார்க்கிறாள் என்பதற்காக கராத்தே மாஸ்டரை பின்னி எடுப்பது, அதற்குப் பிறகு அதே மாஸ்டரிடம் அடிவாங்கி, ''வேணும்னே பழிவாங்கிட்டான்டா... மூச்சுவிட முடியலடா'' என கலங்குவது, 'அந்தப் பொண்ணு வருதுடா' என்று நண்பர்கள் சொன்னதும், உடனே கண்ணீர் துடைத்து கெத்து காட்ட தயாராவது என எல்லா பிரயத்தனங்களையும் அசால்ட்டாக செய்திருப்பார்.

பஸ்ஸில் எக்ஸ்போர்ட் வேலைக்கு செல்லும் இரு பெண்களையும் சைட் அடிப்பது, அதில் யாரைத் தேர்ந்தெடுப்பது என குழம்புவது, பக்கத்தில் இருந்தவன் அடிவாங்கியதும் என்னா அடி என பதறுவதுமாக தினேஷ் செம ஸ்கோர் செய்தார்.

நந்திதா தன்னைக் காதலிக்கவில்லை. தீனா என்கிற இன்னொரு நபரைத்தான் காதலித்தாள் என்று தெரிந்தபிறகு மழையில் நனைந்தபடி ''எனக்கு மட்டும் ஏன் இப்படில்லாம் நடக்குது?'' என பஸ் நிறுத்தத்தில் அழுது புலம்புகிறார். அந்த அழுகையும் சில நிமிடங்களே நீடிக்கிறது.

அதற்குப் பிறகு சைக்கிளில் மோதி விழுந்த பெண்ணின் விழியில் நுழைந்து இதயம் திருடுவது என்று படம் முழுக்க காதலில் விழுபவராகவே இருக்கிறார்.

கடைசியில், சைக்கிளில் விழுந்த பெண்ணை காதல் கல்யாணம் செய்துகொண்டு ஒரு குழந்தைக்கு அப்பாவாகிறார்.

புருஷோத்தின் வாழ்க்கையும் கிட்டத்தட்ட இதுபோலதானே. சொல்ல மறந்துவிட்டேன்.

புருஷோத் இப்போது ஏடிஎம் கஸ்டமர் சர்வீஸ் இன்ஜனீயராக இருக்கிறான். பெரம்பூர் - கோயம்பேடு ஏடிஎம் சென்டர்களில் புருஷோத்தை பார்த்தால் கை குலுக்கி கங்கிராட்ஸ் சொல்லுங்கள்.

புருஷோத் -கோசலா தம்பதியினர் புரமோஷன் ஆகியிருக்கிறார்கள். இன்னும் ஏழு மாதங்களில் ஜூனியர் புருஷோத்தை பார்க்கலாம்.

மான்டேஜ் மனசு இன்னும் சுழலும்...

http://tamil.thehindu.com/opinion/blogs/மான்டேஜ்-மனசு-3-ஆள்-மாற்றிடும்-அட்டகத்தி-வியூகம்/article7322245.ece?ref=relatedNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.