Jump to content

“உண்மை புனைவானது” `உயிரணை` நூல் உலகிற்கு உணர்த்தும் செய்தி – மாதவி சிவலீலன்


Recommended Posts

14470846_10207320243424949_1424565558_n-

`மண்ணுக்குள் புதைக்கப்பட்ட மனிதரை எழுப்பும் வல்லமை எனக்கில்லை

ஆனால் கொல்லச் சொன்னவரை  உயிருடன் உலவும் பிணங்களாக்க

என் குரலுக்கு இயலும்` (மலைமகள், பெயரிடப்படாத நட்சத்திரங்கள்)

14518367_10207320243464950_16282859_n

தமிழீழக் கனவோடு போராடச் சென்ற  ஒரு போராளியை மையமாக வைத்து  ஆக்கப்பட்ட `உயிரணை` எனும் இந்த புனைவு இலக்கியத்தின் ஆசிரியர் சாந்தி நேசக்கரம். 143 பக்கங்கள் கொண்ட இந்நூல் பூவரசி வெளியீடாக வந்துள்ளது.

பதின்மூன்று அத்தியாயங்களாகப் பிரிக்கப்பட்ட  கதைப்பகுதியில், முதல் ஐந்தும் மேவுதல் அடுத்த ஐந்தும் கரைதல் இறுதி மூன்றும் அவாவுதல் என்னும் தலைப்புகளில் இடம் பெற்றுள்ளது.

இவை விடுதலை புலிகளின் போராட்ட வரலாற்றில், போராட்டம் உச்சம் பெற்ற காலத்தையும் வீழ்ச்சிக் காலத்தையும் கையறு நிலையில் மற்றவரை வேண்டி நின்ற காலத்தையும் மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

நூலினை 2009ஆம் ஆண்டில் மண்ணில் உயிர் நீத்த அனைவருக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார்.

1999 ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்த ஆதித்தன் எனும் போராளிப் பாத்திரம் சுண்டிக்குளம் யுத்தத்தில் பால்ராஜ் தலைமையில் ஆயுதம் ஏந்தி நிற்கின்ற  நிகழ்வோடு கதை ஆரம்பமாகின்றது. ஜேர்மனிக்கு எதிராக இடம்பெற்ற `நோர்மெண்டி` தரையிறக்கத்தோடு  ஒப்பிட்டு இந்த யுத்தத்தை அவர்கள் கொண்டாடிய காலமது.

RPG கொமாண்டோ படை வீரனாக அடையாளப்படுத்தப்படுகின்ற  இவன் பெற்ற பயிற்சிகள் பெண்படையணிகளுடனான தொடர்பு ,யுத்தங்கள், எல்லைப்படை  விரிவாக்கம், RPGஆழ ஊடுறுவல் எனும் படைப்பிரிவு ஆரம்பம் போன்ற நிகழ்வுகளின் ஊடாக மேவுதல் எனும் அத்தியாயங்கள் கொண்டு செல்லப்படுகின்றன..

அதன் பின்னர் 2002ஆம் ஆண்டில் இடம்பெற்ற  சமாதான உடன்படிக்கை, கல்விக்குழு கிழக்கு மாகாணம் செல்லுதல், புலம்பெயர்ந்தோர் தாயகம் வருகை, அரசியல் வகுப்புகள், பாடசாலைக் கல்வி ,எரிமலைப் பத்திரிகையுடன் தொடர்பு, 2007இல் காயப்படுதல், காயப்பட்ட போராளியாக மருத்துவமனை அனுபவங்கள், போராட்டம் வீழ்ச்சியடைந்த காலங்கள், நந்திக்கடற்கரையில் தனது காதலிக்கு விடை கொடுத்தல் என்பவற்றுடன் தொடர்புடையதாக ஆதித்தன் வாழ்வு அமைந்ததாக கரைதல் எனும் அத்தியாயங்கள் இடம்பெறுகின்றன.

சிங்கள இராணுவத்திடம் `செல்வன்` என்ற தனது இயற்பெயருடன் சாதாரண குடிமகனாக  சரணடைகின்றான். முகாம் வன்முறைகள், சிங்களவர்களின் அறிமுகம், கொழும்பு வாழ்வு, இந்திய வாழ்வு, இலண்டன் பயணம் என்பவற்றுடன் கதை நிறைவு பெறுகின்றது. இது `அவாவுதல்` எனும் தலைப்பில் அமைந்துள்ளது.

இங்கு உண்மைக் கதாபாத்திரங்களும்  உண்மைச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. ஆனால் அன்றைய போராட்டக் காலத்து முழுச்சம்பவங்களும் பதிவு செய்யப்படாத போதும் ஆதித்தன் வாழ்வில் எவை முக்கியமானவையாகச் சொல்லப்பட வேண்டியதாக இருந்ததோ அவை சொல்லப்பட்டுள்ளன.

2009ஆம் ஆண்டின் இறுதி யுத்தத்தின் பின்னர் யுத்த காலங்களை மையப்படுத்தியதாக பல இலக்கிய நூல்கள் வெளிவந்தவையாகவுள்ளன. அவை போராட்டம்  சார்ந்தவையாக போர்க்கால வாழ்வைச் சார்ந்தவையாகப் பிரபல்யம்  பெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஊழிக்காலம், நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு, ஆறாவடு, ஆதிரை, போராளியின் காதலி, ஆயுத எழுத்து, Box கதைப்புத்தகம், பார்த்தீனியம், கூர்வாளின் நிழலில் போன்ற புனைவு இலக்கிய வரிசையில் உயிரணை எனும் இந்நூலும் இடம்பெறுகின்றது.

இலக்கியகாரர்கள், இலக்கிய ஆய்வாளர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் எமது ஆக்க இலக்கியகாரர்களைக்  கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். ஏனெனில் இவர்கள் கூறும் கதைக்கருவும் சொல்லும் மொழியும் வலிமை மிகுந்தவை.

போரியல்  வாழ்வோடு பின்னிப்பிணைந்து  வாழ்ந்த எழுத்தாளர்கள் தங்கள் அனுபவங்களோடு நின்று இங்கு கதை சொல்லியுள்ளனர். இந்த அனுபவ மொழி என்பது வீரியம் மிக்கது. சொல்ல வந்த எண்ணங்களுக்கு அந்த மொழி செயல் வடிவம் கொடுத்திருக்கின்றது. ஆனால் போராட்ட காலம் என்பது பெரும் ஆழக்கடல். அங்கு அவர்கள் எதை எடுத்தார்களோ அதைப் பற்றிச் சொல்லியுள்ளார்கள்.

பெரும் யானையின் காலைப் பார்த்தவன் காலைப்பற்றித் தான்  சொல்ல முடியும். காதைப் பார்த்தவன் சுளகுக் காது பற்றித் தான் சொல்வான். உடம்பைப் பார்த்தவன் உடம்பு பற்றி மட்டுமே கதைப்பான். வாலைத் தொட்டவன் அதைப்பற்றியே கூறுவான். ஆனால் சொல்லப்பட்ட அனைத்திலும் உண்மையிருக்கின்றது. அழகியல் இருக்கின்றது. வாசகரைக் கவரும் லாவன்யம் இருகின்றது. வாசகர்கள் இன்று அனைத்தையும் அறியும் ஆவலில் இருகின்றார்கள் . அந்த ஆவல் தேடலை நோக்கி அவர்களைப் பயணிக்க வைக்கின்றது.இதன் அடிப்படையில்  நின்று கொண்டு ஆதித்தன் எனும் கதாபாத்திரத்தைப் பார்க்கலாம்.

சாந்தி நேசக்கரம் ஒரு பெண் எழுத்தாளர். களப்பணியாளர். இவர் ஆண் கதாபாத்திர வாழ்வைச் செம்மையுற தன் தேவைக்குத் தக்க வகையில் வடிவமைத்திருகின்றார். போராளிகளுடனான உரையாடல்கள் மூலம் பெற்ற அனுபவமே இந்த இலக்கிய முயற்சியின் வெற்றிக்குக் காரணமாக அமைகின்றது.  அந்த வகையில் இங்கு முக்கியமாக பதியப்பட்ட விடயங்கள் என்னவென்பது கவனிக்கப்படவேண்டியவையாக உள்ளன.

எம் வாழ்நாட்களில் வாழ்ந்த மனிதர்கள், போராளிகள் இங்கு கதைமாந்தர்களாக இடம்பெறுகின்றனர். அண்ணை, தலைவரெனக் கொண்டாடப்படும் பிரபாகரன், பால்ராஜ், தீபன், மில்லர், திலீபன், அப்பையா, சங்கர், சூசை, கடாபி, அக்பர், போன்றோர் குறிப்பிடத்தக்கவர்களாவர்.

இவர்கள் நாட்டிற்காக  மண்ணிற்காக அண்ணைக்காக எதனையும் செய்யக்கூடியவர்களாக விளங்கினர். இவர்கள் தலைவனை எவ்வளவு தூரம் நேசித்தனரென்பதனை அண்ணையின்ரை பொடியள் / RPG கொமாண்டோக்கள்/  அண்ணை என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டவர்/ எல்லாத் திறன்களையும் தன்னோடு ஒருங்கே அமையப்பெற்ற தலைவனைத் தந்த காலத்தின் கைகளுக்கு நன்றி போன்றதான வரிகள் இவற்றை நிறுவுகின்றன. பானு எனும் தளபதி பற்றிய பதிவு மனத்தளம்பல் நிலையில் அவரது நிலைப்பாடு பற்றியதான முரணைத் தருவதாகவுள்ளது.

இது மட்டுமன்றி மாவீரர்கள் போற்றுதலுக்குரியவர்களாக  அடிக்கடி ஆதித்தனால் நினைவு கூறப்படுகின்றனர். “ உலகநாடுகளில் இருந்தெல்லாம் பெற்ற நவீன ஆயுதங்கள் அதிகரித்த ஆட்பலம்  என்பவற்றை போராளிகளின்  உயிர்த் தியாகங்கள் மூலமே முறியடிக்க வேண்டியிருக்கின்றது.“என ஒரு இடத்தில் குறிப்பிடுகின்றார்.

`சாதனையெல்லாம்  மடிந்து போன மாவீரர்களுக்குச் சமர்ப்பணம்`, `மக்கள் வாழ வேண்டுமென்பதற்காக விழி மூடப்போகும் வீரர்கள்` போன்ற வரிகள் இறந்த போராளிகளின் தியாகம் பற்றிப் பேசுகின்றன. உண்மையிலே மாவீரர்களின் மரணத்தை யாருமே கொச்சைப்படுத்தக்கூடாது.

இங்கே `கம்பன்` எனும் பாத்திரம் காயப்பட்ட போது தனக்குத் தானே குண்டு வைத்து எதிரியின் கையில் பிடிபடாமல் தன்னையே அழித்துக் கொல்கின்றான்.  சங்க இலக்கியத்தில் மறக்காஞ்சியென அழைக்கப்படும் இச்செயலையொத்த பல நிகழ்வுகளைப் போராட்ட  வாழ்வில் போராளிகள் செய்து மரணித்துள்ளனர்.

மாலதி சோதியா படையணிகளும் இம்ரான் சாள்ஸ் படையணிகளும் அவர்களுடன் RPG படையணிகளும் கொண்ட தொடர்பு முக்கியமானதாகும். ஏனெனில் எமது சமுகம் ஆண் பெண் உறவு சம்பந்தமாக வைத்திருந்த கற்பிதங்கள் தளர்ச்சியடைய இப்போராட்டங்களும்  காரணமாக அமைந்திருந்தன.

“விடியற்புறம் ஏதோ சத்தங்கள் கேட்டன. எழுந்து பார்த்த்தான் ஆதித்தன். இவர்கள் கால்களுக்கு அண்மையாக மாலதி படையணியின் பெண் போராளிகள் படுத்திருந்தனர்.“  என ஒரு சம்பவம் இடம்பெறுகின்றது.

பெண்களைக் காமப்பொருளாகவும்  அடிமைகளாகவும் வரையறுத்திருந்த எண்ணப்பதிவு சிதைந்து யாவரும் போராளிகளாகக் கணிக்கப்பட்ட நிலைமை அங்கே சொல்லப்பட்டிருக்கின்றது.

அவனை அவளும் அவளை அவனும் நம்புகின்ற  தன்மை தானாகவே உருவாகியுள்ளது. உலகமே வியந்து பார்த்த விடயமெனக் கொள்ளத்தக்கதாக, அன்று பெண் போராளிகள் களமாடினர்.

இது தவிர ஆதித்தன் வாழ்வில் காதலியாகக் கௌரியும் தோழியாக தேசப்பிரியாவும் இடம்பெறுகின்றனர். தான் வீட்டிற்குத் திரும்பிப் போகும் போது வீட்டு வாசலில் தன்னை வரவேற்பாள் என எண்ணியிருக்கத் தன் காதலியான கௌரியைக் களத்தில் சந்திக்கும் ஆதித்தன் மனவுணர்வை நாம் சாதாரணமாகக் கடந்து போய் விட முடியாது.

இந்நூல் முக்கியமாக இன்னொரு விடயத்தைப் பதிவு செய்கின்றது. அதாவது வெளிநாட்டு கொமாண்டோக்கள் வந்து நூறு போராளிகளுக்கு விசேட பயிற்சியளித்திருக்கின்றார்கள். .

இவர்களில் ஒருவர் ஆப்கானிஸ்தானில் வானில் இருந்து தரையிறங்கும் போது காயப்பட்ட சம்பவம் சொல்லப்படுகின்றது. எனவே அங்கு எந்நாட்டினர் சென்று சண்டையிட்டனரோ அவர்களில் ஒரு பிரிவினரே இவர்களுக்கு உதவியுள்ளானர். ஆனால் இவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களெனும் குறிப்பைச் சாந்தி  கூறவில்லை. இதனை நாமே ஊகிக்கவேண்டியுள்ளது.

இவர்களின் வருகையின் பின் பயிற்சி முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் போராளிகளின்  பாதுகாப்பில் காட்டிய அக்கறை,போராட்டத்தை அவர்கள் நேசித்த விதம் போன்றவை ஆசிரியரால் சொல்லப்பட்டிருக்கின்றது. இந்நிகழ்வு புலிக்களுக்கு உதவிய நாடு எதுவென்பதையும் தோற்கடித்த நாடுகள் எவையென்பதையும் ஆராயச் சந்தர்ப்பம்  தருகின்றது.

சமாதானக் காலத்தில் போராளிகள் கிழக்கு மாகாணத்திற்குச் செல்கின்றார்கள். அங்கு தற்செயலாக சிங்களப்பிரிகேடியர் குடும்பத்தைச் சந்திக்கின்றனர். பின்னர் முஸ்லீம் ஒருவருடன் உரையாடுகின்றனர். வன்முறையற்ற சமாதான நாட்டை விரும்புவதாக அவர்கள் கூறுகின்றனர்.

இதனூடாக  தனிமனிதன் போரையோ வன்முறையையோ விரும்பவில்லையென்பதை  உணரமுடிகின்றது. மனிதரை மனிதராகப் பார்க்கும் உளவியல், கருணை என்பன இருந்திருந்தால் இனங்களிடையே புரிந்துணர்வு  கட்டியமைக்கப்பட்டிருக்கும்  என்கின்ற ஆதங்கத்தை இது உண்டாக்குகின்றது.

இதனைப் போரின் முடிவில் சிங்களவர் மத்தியில் வைத்தியசாலையில் ஆதித்தன் இருக்கின்றபோது  சந்தித்த சிங்கள மக்களின் உறவுநிலை மூலமும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார்.  .

சிங்கள மக்களின் உதவியுடன் தப்பி வந்த பல போராளிகள், மக்கள் எம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் சிங்களமக்களை நல்லவர்கள் என்றே கூறுகின்றனர். அங்கு மனிதம் நிற்கின்றது..

அப்படியாயின் இவ்வளவு காலமும் நாம் யாரோடு போரிட்டோம். யார் எம்மைப் போருக்குள் திணித்தது?மக்களின் மனங்களை வெல்லத் தவறியதாலேயே ஆயுதங்கள் பேசிக் கொண்டன. ஆயுதம் பேசாமல் மனிதம் பேசியிருந்தால்  இந்த மனித அவலம் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ? என்பதெல்லாம் எம்மைச் சிந்திக்க வைக்கின்றது.

`விருப்பம் இல்லாத யாரையும் கட்டாயப்படுத்த மாட்டம்` எனப்போராடச் சென்றவர்களளைப்  பார்த்துச்  சொல்லி வந்த தலைமை பின்னர் கட்டாயப்படுத்திப்  பிள்ளைகளைப் பிடித்துப் போராட வைத்த போதே போராட்டம்  சரிவைச் சந்திக்கத் தொடங்கி விட்டதென்பது உண்மை.

இது பற்றித் தமிழினியும் தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். இது ஏனைய இயக்கங்களுக்கும் பொருந்தும். ஏனெனில் மக்களுக்காகப் போராடியவர்கள் பின்னர் மக்களுடன் போராட வேண்டியேற்பட்டு, இவர்கள் பொதுமக்களுடன் முரண்பட வேண்டியேற்பட்டது. அத்துடன் `ஒரு  பக்கத்தில் களநிலைமை இறுகிக் கொண்டு போக ஆயுதம் தாங்கிக் களங்களில் நின்ற பல போராளிகளும்  தலைமறைவாகிக்  கொண்டிருந்தார்கள்` எனும் கூற்றும் இயக்கத்தின் கட்டுக் கோப்பு எங்கே உடைந்தது என்பதைப் புலப்படுத்துகின்றது.

நந்திக்கடற்கரையில்  எங்கள் சரித்திரம் சொல்ல நீங்கள் தப்பிப் போங்கள் எனச் சொல்லிக் கௌரி விடைபெற்றுப் போக, அவள் போன திசையில் பெரும் வெடியோசை கேட்கின்றது. அந்த வெடியோசைக்குள் சங்கமமாகியவர்கள் யார்யாரென்பது அவிழ்க்கப்படாத முடிச்சாக எம் முன்னே கிடக்கின்றது. .

இவை தவிர முகாம் வாழ்வு , முகாம் அருகே பெண்களின் வெட்டப்பட்ட தலைகள் போன்ற குறிப்புகளும், கள வாழ்வு அனுபவங்கள் கொழும்பில் தப்ப உதவியது போன்றதான விடயங்களும் இந்நூலில் பதியப்பட்டிருக்கின்றன..

மேற்குறிப்பிடப்பட்ட  விடயங்களெல்லாம் ஆதித்தன் எனும் பாத்திரத்தினூடாகச்  சாந்தி நேசக்கரம் கூறியுள்ளார். அவனது வாழ்வாக நாம் நூலை வாசிக்கும் போது இலக்கியம் வெற்றி பெறுகின்றது. எனினும் இதனை உண்மைக் கதை தழுவியது என ஆசிரியரால் குறிப்பிடப்பட்டிருக்கலாம்.  அதன் போது இது வரலாற்றுப் பதிவோடு சேர்ந்து வலுப்பெற்றிருக்கும். ஏனெனில் இன்று ஈழத்தை மையப்படுத்தி வருகின்ற எந்த இலக்கியமும் போராட்ட வாழ்வைத் தவிர்த்து எழுதாத சூழலை நேர்மையாகச் சிந்திக்கும் ஆக்க இலக்கிய கர்த்தாவிற்கு ஏற்படுத்தியுள்ளது.

இது சிறுபுனைவு. அதனால் ஆவணப்படுத்தப்பட வேண்டிய பல விடயங்கள் ஆழப்பார்க்கப்படவில்லை. ஆனால் கச்சிதமாகக் கதை நகர்த்தப்பட்டுள்ளது. ஈழத்தமிழர்களது போராட்ட வாழ்வு சோகமானது. போராளிகள் வாழ்வு, போரைப் புறக்கணித்தோர் வாழ்வு, மக்கள் வாழ்வு, சிங்களவர், முஸ்லீம்கள் வாழ்வு யாவுமே பாதிக்கப்பட்டுப் புரட்டிப் போடப்படுள்ளது.

வென்றவர்கள் வரலாறு எழுதும் போது நாம் இலக்கியம் எழுதிக்கொண்டிருக்கின்றோம்.  இன்று எம் மக்களிடையே நடைபெறும் உளவியல் யுத்தத்தை வெல்லக்கூடிய சாத்தியப்பாடுகள் நோக்கி நாம் நகர வேண்டியவர்களாக உள்ளோம்.

கம்பராமாயணத்தில் கம்பன் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாயத்தையும் தெளிவுபடச் சொல்வான். அது போன்றே  ஒவ்வொருவரிடமும் நியாயம் உள்ளது. அதனை நாம் மதிக்க வேண்டும். இப்போது யாரும் எதுவும் கதைக்கலாம் எழுதலாமெனும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் உண்மைகள் மனச்சாட்சியுடன் கதைக்கப்பட வேண்டும்  சுயநலமற்ற பதிவுகள் இடம்பெற வேண்டும். எம்மிடையே குவியலாகக் கதைகள் உண்டு. அதை அசைமீட்டுப் பார்க்கும் போது நாம் எதனை உள்வாங்கினோமோ அதனையே மீட்டுப் பார்ப்போம். அந்த வகையில் சாந்தி நேசக்கரம் உண்மையைப் புனைவாக்கியுள்ளார். இவர் இன்னும் உண்மைகளோடு கூடிய பல புனைவுகளைத் தரவேண்டும்.

நூலின் அமைப்புப் பற்றியும் குறிப்பிடப்படுவது அவசியமாகும். நூலில் பக்கத்திற்குப் பக்கம் இடம்பெறுகின்ற  எழுத்துக்களின் பிரிப்பும், சொற்களின் பிரிப்பும் முகம் சுழிக்க வைக்கின்றது. இவை கருத்துப் பிழைகளுக்கு வழியமைக்கின்றது. இவற்றை நூலாசிரியர் கவனத்தில் கொண்டிருக்க வேண்டும். பதிப்பு முயற்சிகள் நேர்த்தியாக அமைந்தால் நூல்கள் இன்னும் கனதி பெறும். இதனை ஆசிரியர் வருங்காலத்தில் கருத்தில் கொள்வது நன்மையத் தரும்.

 

http://www.thisaikaddi.com/?p=3865

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி இங்காலயும் வாங்க அக்கா இந்த புத்தகம்  இன்னும் கிடைக்கவில்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.