Jump to content

விசாரணை


Recommended Posts

எனக்கு முன்னால் இருந்த நாற்காலியில் முழுக்கை நீல நிற மேலங்கியுடன், மெல்லியதேகமும் நிமிர்ந்த பார்வையும் கொண்ட அவனின் கண்களை உற்று நோக்கினேன். எனது தேடலுக்கு எந்தவித பலனும் இல்லாமல் அவனது கண்கள் இருந்தன.

மெல்லிய நீல வர்ண பூச்சுடன் இருந்த ஒரு தனியறையில் என்னையும் அவனையும் தவிர வேறு ஒருவரும் இல்லை. எமது உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு கொண்டு இருந்தன. அவற்றில் 50 வீதத்துக்கும் அதிகமாக மௌனமே பதியப்பட்டிருந்தது. வாசலில் இரண்டு காவலர்கள் விசாரணை முடிவுக்காக அசைவின்றி காத்திருந்தார்கள்.

"நான் அதை செய்யவில்லை" என்பதை தவிர அவனிடம் இருந்து வேறு எந்த பதிலும் எனக்கு உருப்படியாக கிடைக்கவில்லை. 

அம்மான் கரும்புலிகளுக்காக ஆற்றிய உரையை பொதுவெளி இணைய பாவனையில் இருந்த ஒரு கணினியில் தரவேற்றம் செய்திருந்த குற்றத்திற்கான சந்தேகத்தின்  பெயரில் அவனை கைது செய்திருந்தார்கள். அந்த துறை சார் நிர்வாகத்தில் துணைப்பொறுப்பாளர் இவன். 

அவன் புலம்பெயர் நாட்டில் இருந்து போராளியாக தன்னை இணைத்து கொண்டவன். அவனது குடும்பமே இயக்கத்துக்காக பல்வேறு பணிகளில் செயற்பட்டு கொண்டிருந்தார்கள். அவனது குடும்பத்தின் மீதிருந்த நம்பிக்கையும், மதிப்பும் அவன் அந்த குற்றத்தை செய்திருப்பதற்கான வாய்ப்புகளை மழுங்கடித்திருந்தன.

இருந்தாலும் விசாரணை அனைவருக்கும் பொதுவானது.

இதே சம்பவத்தில்,  இவனது பொறுப்பாளர் கைது செயற்பட்டு, ஆரம்பகட்ட விசாரணையின் பின்னர், தண்டனைக்காக பாலம்பிட்டி களமுனைக்கு அனுப்பப்படிருந்தான். களமுனையில் விழுப்புண் அடைந்த நிலையில் அவன் அனுப்பிய கடிதம் எங்களை வந்து சேரும் போது அவன் வீர மரணத்தை தழுவி இருந்தான். அவனது கடிதம், மற்றும் கணினி துறைசார் வல்லுநர்களின் ஆராய்ச்சிக்கு பிறகே குற்றவாளியாக இவன் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தான்.

 பொறுப்பாளர்- துணை பொறுப்பாளர்களுக்கு இடையே இருந்த ஈகோ, தன்னைவிட கல்வியறிவில், துறைசார் அறிவில் குறைந்த ஒருவன் தன்னைவிட  உயர்பதவியில் இருந்ததை ஒப்புக்கொள்ள மறுத்த மனதினால் எழுந்த வினையே இவனை அப்படி ஒரு காரியத்தை செய்ய தூண்டி இருந்ததாக முன்னைய விசாரணையாளர்கள் அறிக்கை என் முன்னே இருந்தது. 

இவன் தான் அந்த குற்றத்தை செய்திருந்தான் என்பதை கணினியே காட்டி கொடுத்த விண்டோஸ் log அறிக்கையும் சேர்த்தே இணைத்திருந்தார்கள். 

முழு அறிக்கையையும், சான்றாக கிடைத்த விண்டோஸ் log கோப்பையும் அவனிடம் கொடுத்தேன். வாசித்து முடித்த பின்னரும் அவன் கண்களில் எந்தவித சலனமும் இல்லை. 

எதற்காக இப்படி செய்தாய்.? உன்னால் ஒரு அருமையான போராளி தணடனை பெற்று களத்தில் காவியமானது கூட உன் மனதை சுடவில்லையா.? நான் ஐந்தாம் முறையாக அவனிடம் கேட்டேன்.

மீண்டும் அதே பதில் நான் இதை செய்யவில்லை. உண்மையில் அவன்தான் குற்றவாளி என்று நீக்கமற உறுதி செய்திருந்தாலும் அதை வெளியே சொல்லக்கூடிய தைரியத்தை அவனது ஈகோ தின்று விட்டு இருந்தது.

இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றுமே இருக்கவில்லை. உனக்கான தண்டனையை நாளை இறுதி செய்வோம் என்று கூறிவிட்டு எழுந்தேன். பயம் அவன் கண்களில் லேசாக தெரிந்தது. காட்டி கொள்ளாமல் மேசையில் இருந்த குவளையில் தண்ணீரை மென்று குடித்தான்.

வெளியே வந்த நான், காவலர்களிடம் அவனது கழுத்தில் இருக்கும் சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு, 1-9 முகாமின் தனியறையில் காவலில் வைக்கும்படி கூறினேன். ஏனைய போராளிகள் அவனது முகத்தை காணாமல் இருக்க முகமூடி அணிவிக்கும்படி கூறினேன். 

அம்மானிடம் சென்று விசாரணை  முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு  வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன்.

அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது.

அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை  செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது.

அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின்  பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது. 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு...  இந்த கட்டளை நிறைவேற்றப்படவில்லை என நினைக்கிறேன். tw_anguished:

ஒரு பாரிய அமைப்பை கட்டி காப்பதும் லேசல்ல ...பொறுப்புக்களை சுமப்பதும் லேசல்ல...
இம்மாதிரியான நிகழ்வுகள் எம்மை புடம் போட்டு, தேவையான பட்டறிவுகளை நாம் பெற்றிருந்தால் ...
இவர் போன்ற பல நிரபராதிகளின் ஆத்மாக்கள்  சாந்தியடையட்டும்...

Link to comment
Share on other sites

சரி, பிழை பின்னர், ஆனால் உங்களைப்போல் மற்றவர்களும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் பகலவன். 

Link to comment
Share on other sites

On 03/10/2016 at 6:13 PM, Sasi_varnam said:

சயனைட் வில்லைகளை கழற்றி விட்டு...  இந்த கட்டளை நிறைவேற்றப்படவில்லை என நினைக்கிறேன். tw_anguished:

ஒரு பாரிய அமைப்பை கட்டி காப்பதும் லேசல்ல ...பொறுப்புக்களை சுமப்பதும் லேசல்ல...
இம்மாதிரியான நிகழ்வுகள் எம்மை புடம் போட்டு, தேவையான பட்டறிவுகளை நாம் பெற்றிருந்தால் ...
இவர் போன்ற பல நிரபராதிகளின் ஆத்மாக்கள்  சாந்தியடையட்டும்...

உண்மைதான் சசி அண்ணா. ஒருவித அலட்சியம் ஒரு உயிரை விலையாக கொடுக்க வைத்துவிட்ட்து.

On 03/10/2016 at 7:11 PM, கலைஞன் said:

சரி, பிழை பின்னர், ஆனால் உங்களைப்போல் மற்றவர்களும் தமது அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முன்வரவேண்டும் பகலவன். 

அனுபவத்துக்கு அப்பால் சில விடயங்களை சொல்லாமல் விட  அதே  எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கொல்கிறது.

 

சசி அண்ணா, கலைஞன் வருகைக்கும் பதிவுக்கும் நன்றிகள்.

 

விருப்பளித்த நுணாவிலான்,சுவி அண்ணா, வந்தியதேவன், ஜீவன், நவீனனுக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சே....வாசித்த நமக்கே மனக்கிலேசம் வருகிறது. உங்களுக்கு எப்படி இருக்கும்.

நீங்கள் ஒரு உன்னத நோக்குக்காக செயல்பட்ட போது செய்த கடைமை அது.

கீதா உபதேசத்தை நினைவில் கொள்ளுங்கள்.

கடமையை செய் பலனை எதிர்பாராதே.

Link to comment
Share on other sites

மிக்க நன்றி கோசான். நீங்கள் களத்தில் அதுவும் என் திரியில் எழுதியது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தொடர்ந்தும் எழுதவேண்டும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பல சம்பவங்கள் நடந்திருக்கலாம்.
போராட்டத்திலிருந்து மக்களை ஒதுக்கி வைத்ததும்
இப்படியான நிகழ்வுகள் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன்! உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

சார் கோசான் அவர்கள்! திண்ணையைலிருந்து நடுவீட்டுக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு அனுபவப் பகிர்வு...பகலவன்!

நீண்ட காலங்களின் பின்னர் நகைச்சுவை கலக்காத உங்கள் பதிவொன்றை வாசித்தேன்! 

கண்ணில் நீர் சுரக்க வைக்கின்ற பகிர்வு!

கீதோபதேசம் வெளிப்படையாகப் பார்க்கும் போது....நல்லது போலத் தெரியும்!

ஆனாலும்..அது வருணாச்சிரம தர்மத்தை வாழவைப்பதற்காகவே உருவாக்கப்பட்டது!

கடமையைச் செய்...பலனை எதிர்பாராதே என்பது சரி..! எனினும் அந்தக் கடமைகளை வரையறுப்பது..வருணாச்சிரம தர்மம் தானே!

சூத்திரனைப் பார்த்து...நீ உனது கடமையைச் செய்...அதைச் செய்வதன் மூலம்..உனது ' கர்மா' கழுவப்படுகின்றது!

அடுத்த பிறவியில் நீ ஓர் உயர்ந்த வர்ணத்தில் பிறப்பாய் என்று அவனுக்கு ஆறுதல் கூறுவது தான் கீதை!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3.10.2016 at 5:53 PM, பகலவன் said:

 

அம்மானிடம் சென்று விசாரணை  முழு அறிக்கையையும் கொடுத்துவிட்டு, இது எந்த வித தேச துரோக நடவடிக்கையும் இல்லை என்று தெளிவுற விளக்கினேன், நீண்ட கலந்துரையாடலின் பின்னர் அவனது போராடடத்துக்கான பங்களிப்பு, குடும்ப பங்களிப்பை கருத்தில் கொண்டு  வேறு துறைக்கு மாற்றி விடுதலை செய்வது என்று முடிவு எடுத்திருந்தோம். இரவை தாண்டி இருந்தமையால் காலையில் அவனிடம் சொல்லி விடுதலை செய்ய அதிகாரி ஒருவரை நியமித்து விட்டு விடைபெற்றேன்.

அந்த அதிகாரி அதிகாலையிலேயே விடுதலை முடிவோடு 1-9 முகாமின் தனி அறையை திறந்தபோது, வாயிலே சயனைட் வில்லையுடன் அவனது உடலில் இருந்து உயிர் நிரந்தர விடுதலை பெற்று இருந்தது.

அவன் அருகே இருந்த அந்த ஒற்றை காகிதத்தில், "நான் அதை  செய்யவில்லை செய்தவனை கண்டுபிடியுங்கள் " என்ற ஒற்றை வாக்கியமே எஞ்சி இருந்தது.

அந்த வாக்கியம் என் போன்ற எத்தனையோ விசாரணையாளர்களின்  பல நாள் தூக்கத்தை தொலைத்திருந்தது. 

பாவம்.... அவன், அவசரப் பட்டு விட்டான். 

Link to comment
Share on other sites

7 hours ago, வாத்தியார் said:

இப்படிப்பல சம்பவங்கள் நடந்திருக்கலாம்.
போராட்டத்திலிருந்து மக்களை ஒதுக்கி வைத்ததும்
இப்படியான நிகழ்வுகள் தான்.

போராட்டத்தில் இருந்து மக்களை ஒதுக்கி வைத்தது மட்டுமல்ல ஒட்டுமொத்த போராட்டத்தை சிதைத்த மையப்புள்ளியும் இந்த விசாரணைதான். புலிகளின் கட்டுமானத்தையும் அகநிலைப் பலத்தையும் புலநாய்வுத்துறைக்கு முன் புலநாய்வுத்துறைக்குப் பின் என்று பிரிக்கலாம். முன்னரான காலத்தில் போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் எதிரியாக இருந்தது சிங்கள இராணுவமே. சவால் என்பது சிங்கள இராணுவமே. பின்னரான காலத்தில் ஐ என்ற புலநாய்வுத்துறைக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டுவிட்டது. யாரை எந்த நேரத்தில் உள்ளே தள்ளுவார்கள். அடுத்து யார் என்பதே சிந்தனையாக இருந்தது. எதிரி மீதான அச்சம் இரண்டாம் கட்டத்திற்கு நகர்ந்து. அவ்வளவு துராத்திற்கு பல தளபதிகளும் போராளிகளும் விசாரணைக்கு உட்படுத்தபப்பட்டனர். இதில் 98 வீதமும் சந்தேகம் என்பதே அடிப்படையாக இருந்தது. பத்து பதினைத்து வருடமாக பல விழுப்புண்களை அடைந்து போராடியவர்களின் விசாரணையில் அவர்களின் உழைப்போ தியாகமே சிறிதளவேனும் மதிக்கப்படாமல் மிகக் கேவலமான நிலைக்குத் தள்ளப்பட்டனர். இது புலிகளின் மன உறுதி மனோ பலத்தின் மீது ஆப்பாக இறங்கியது. புலிகளின் அழிவுக்கான பாதை இதனால் திறக்கப்பட்டது. புறநிலையில் புலனாய்வுத்துறையின் நடவடிக்கைகள் குறிப்பாக அரசியல் படுகொலைகள் இலங்கை தலைநகர்  மீதான தாக்குதல்கள் அனைத்தும் சர்வதேசத்தின் ஒட்டுமொத்தமாக போராட்டத்தை பயங்கரவாதமாக்கி அழிப்பதற்கு வளிகோலியது. ஒரு புலநாய்வுத்துறை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கு புலிகளின் புலநாய்வுத்துறையை விட உதாரணம் உலகில் வேறு இல்லை. அகநிலையிலும் புற நிலையிலும் மிக மோசமான தற்கொலைக்கு ஒப்பான வகையில் இயங்கிய ஒரு பிரிவு. ஒரு அமைப்பின் உள்கட்டமைப்பை பலப்படுத்தவும் உள் கட்டமைப்பு மீதான புறநிலைத் தாக்குதலை தடுக்கவும் சர்வதேச ஆதரவை சிதையாமல் தக்கவைக்கவும் பொறுப்பான ஒரு பிரிவு அதற்கு எதிராக அனைத்தையும் செய்தது என்பது ஒட்டுமொத்த அழிவின் பின்னே உணரப்படுகின்றது. சிலரால் அது கூட என்னும் முடியவில்லை.

எதிரிகளுடன் போராடி பின்னர் இந்த சந்தேக விசாரணையின் சித்திரவதைக்குள் வருடக்கணக்கக போராடி மீளவும் எதிரிகளுடன் போராடிமடிந்த ஜெயம் லோறன்ஸ் தேவன் போன்ற தளபதிகளும் நூற்றுக்கணக்கான போரளிகளும் அவர்களது வலிநிறைந்த வாழ்வும் தியாகங்களும் பேரினவாதத்தினதும் மையவாதத்தினதும் கோரமுகத்தை எப்போதும் சுட்டிக்காட்டும். 

Link to comment
Share on other sites

கருத்துக்களையும் கதைசார் உங்கள் எண்ணங்களையும் பதிந்த வாத்தியார், குமாரசாமி அண்ணா , புங்கை அண்ணா, தமிழ்சிறி அண்ணா,  சண்டமாருதன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

விருப்பளித்த தமிழினி, நந்தன், புத்தன் உங்களுக்கும் நன்றிகள் பல.

இன்னும் சில மனதை அரிக்கும் சம்பவங்களை எழுதலாமா விடலாமா என்ற போராடத்திலேயே எழுதினேன்.

சுய விமர்சனம், புலிகள் மீதான மதிப்பு, மனிதாபிமானம், இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம், இனி எக்காலத்திலும் வெளிவரா உண்மைகள், தியாகங்கள், இழப்புகள், அவர்கள் குடும்பமே அறியா மறுபக்கங்கள், இப்படி எல்லாமே சேர்த்து என்னை குழப்புவதால் எழுதுவதா விடுவதா என்று தெரியா மனநிலையில் இருக்கிறேன்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பகலவன் said:

 

சுய விமர்சனம், புலிகள் மீதான மதிப்பு, மனிதாபிமானம், இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம், இனி எக்காலத்திலும் வெளிவரா உண்மைகள், தியாகங்கள், இழப்புகள், அவர்கள் குடும்பமே அறியா மறுபக்கங்கள், இப்படி எல்லாமே சேர்த்து என்னை குழப்புவதால் எழுதுவதா விடுவதா என்று தெரியா மனநிலையில் இருக்கிறேன்.

 

 

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுய விமர்சனம் - இது உங்களுக்கும் எங்களுக்கும் தேவைப்படுவதாய் உணர்ந்ததாலேதான் நீங்கள் எழுதவே தொடங்கினீர்கள். அந்த தேவை இருக்கும் வரை எழுதத்தானே வேண்டும்.

புலிகள் மீதான மதிப்பு -பொய்யான பிரமிப்பில் கட்டியெழுப்பபட்ட மதிப்பு கதைகளுக்கு நல்லாயிருக்கும், வரலாற்றில் இருந்து பாடம் படிக்க உதவாது. இதே தப்பு இன்னொரு வடிவில் இனியும் நடவாதிருக்க, உண்மைகள் பேசப்படல் அவசியம்.

இரகசிய காப்பு சத்தியப்பிரமாணம் -இப்போ யாரையும் அந்த சத்தியபிரமாணம் காக்காவில்லை. அப்படி ஒரு ரகசியத்துக்கான தேவையும் இல்லை. இன்றைக்கும் காக்க வேண்டியரகசியங்கள் இருக்கிறன. அவை எவை என்பதையும், அவற்றை ஏன் வெளியிடக்கூடாது என்பதையும் யாரும் உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டிய நிலையில் நீங்கள் இல்லை.

மனிதாபிமானம், இனி எக்காலத்திலும் வெளிவரா உண்மைகள், தியாகங்கள், இழப்புகள், அவர்கள் குடும்பமே அறியா மறுபக்கங்கள் - என்ன கட்டத்தில் அவர்களின் பிள்ளைகள் இறந்து போனார்கள் என்ற தெளிவே இல்லாமல் அவர்களின் குடும்பங்களை இருட்டில் வைப்பதில் எங்கே இருக்கிறது மனிதாபிமானம். இங்கே இறந்து போனவன் என் சகோதரனாக இருப்பின் உங்கள் ஆக்கம் எனக்கு ஒரு முடிவை (closure) தந்திருக்கும்.

வர்ணாசிரமத்தை திணித்ததோ இல்லையோ, யாமறியோம், அது இந்த திரியில் ஆராயப்படும் பொருளும் அல்ல. ஆனால் வாழ்வில் சில தொழில்களை செய்பவர்களுக்கு குறிப்பாக ஏனையோரின் வாழ்கை பற்றிய முடிவை எடுக்கும் தொழில் செய்பவர்களுக்கு, "கடமையையை செய் பலனை எதிர்பாராதே" என்பது ஒரு coping strategy. (அது கண்ணன் கீதையில் சொன்னதாய் இருந்தா என்ன அண்ணன் போதையில் சொன்னதாய் இருந்தா என்ன, மெசேஜ்தான் முக்கியம்).

ஆகவே கடமையை செய்யுங்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  பகலவன்..

எப்படி எத்தனையோ.....????

முடிந்தவரை எழுதுங்கள்

இன்னொரு நன்றியும் கோசானை களத்தில்  இறக்கியதற்கு...

Link to comment
Share on other sites

இவ்வாறான மரியாதை  குறைந்து  விட்டது   அல்லது  தனக்கு அவமானம்  ஆகி  விட்டது  என அஞ்சி சிலர்  அவசர  முடிவுகள்  எடுத்தது உண்டு .

யாழ்  மாவட்ட  தளபதி செல்வராஜ்  அண்ணையின் பஜிரோ வாகனத்தை  ஒரு இளநிலை  தளபதி  வேகாம  ஓடி  தடுமாறி  பனையுடன்  மோதி  சிதைந்து  போனது  ,ஆள்  காயம்  இல்லை  ஏதே தப்பிட்டார்  வாகனத்தை  பார்த்த  தளபதி  கோவத்தில்  இறங்கடா  பங்கரில  என சொன்னதுக்கு  உள்ளே  இறங்கி  குப்பிய  கடித்து  விட்டார் அந்த  இளநிலை  தளபதி ...

இறுதியில்  போராளி நிலை  கூட  அறிவிக்காது  ஒரு பொதுமகனாக  அவரின்  உடல் வீட்டுக்கு  கொடுக்கபட்டது  இனிமேல்  இவ்வாறு  எவரும்  ஈடுபட  கூடாது  என்னும் சுற்றறிக்கையுடன் .

இப்படி  பார்க்க  போனால்  தளபதி  ஜெயம் போன்றவர்கள்  உறுதியின் உச்சம்  எனலாம் ....தொடருங்கள்  உங்கள்   அனுபவங்களை பகலவன் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"ஜெயத்தான் றோவின் ஆள்" என்று முன்னாள் போராளி ஒருவர் எழுதியதாகவோ கூறியதாகவோ ஞாபகம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கழுத்தில் கட்டிய சயனைட் வில்லை எதிரியிடம் பிடிபடாமல் இரகசியத்தை காப்பாற்ற என்ற கொள்கை, அவசரக் காரணங்களுக்காக வாழ்வை அழிக்க பல போராளிகளுக்கு உதவியிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தில் பலியான போராளியின் சயனைட் வில்லை ஒழுங்காக அகற்றப்பட்டிருக்கவில்லை. அதுவும் ஒரு ஒழுங்குப் பிரச்சினை. காணொளியை யார் பொதுவெளியில் விட்டது என்ற கேள்விக்கு பதில் கிடைக்காமல் இருந்திருக்கும் என்றுதான் கருதுகின்றேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா சுகன் நல்ல பதில் கொடுத்தீர்கள்...எதற்கெடுத்தாலும் அரசியற் துறை மீது பழி போடுவது புலனாய்வுத் துறையின் வேலை,புலனாய்வுத் துறை மீது பழி போடுவது அரசியற் துறையின் வேலை.

மொத்தத்தில் ஈகோ,பதவி துஸ்பிரயோகம்,ஆணவம்,இறுமாப்பு போன்ற பல காரணங்களால் ஒரு அமைப்பே அழிந்து போனது.

சுதந்திரத்திற்காக போராடுமொரு அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் புலிகள் தான் உதாரணம். இருக்க கூடாது என்பதற்கும் புலிகள் தான் உதாரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகலவன் நல்ல தொரு பகிர்வு ஒரு பெயரில் ஏற்பட்ட குளறுபடியால் ஒருவர் கூட சாவடைந்தார் அவசரமான அநியாய சாவுகள் கொஞ்சம் அதிகமாகதான் நடந்தது ஆனாலும் அதுவும் நன்மைக்கே என்று கடந்து சென்றதுதான் மிஞ்சிய வலி ஒன்று 

Link to comment
Share on other sites

  • 6 months later...

பகலவன், காலம் கடந்தும் நினைவுகளை விட்டு அகலாதவனின் இழப்பை பகிர்ந்துள்ளீர்கள். நேற்று முன்தினம் மீண்டும் வாசித்தேன். மனம் அமைதியை இழந்து அந்த மனிதனை நினைவில் கொள்கிறது. 

அவலம் என்பதா கவனயீனம் என்பதா? இல்லை காலம் என கடந்து செல்லவா? 

போன உயிர் போனதுதான். அந்த உயிர் ஆத்ம அமைதி பெறட்டும். 

Link to comment
Share on other sites

  • 9 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்! 19 MAR, 2024 | 10:01 AM வெப்பமான காலப் பகுதியானது வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கும் ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும் எனக் கால்நடை வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். பகல் வேளையில் விலங்குகளை மூடிய வாகனங்களில் ஏற்றிச் செல்வதைத் தவிர்க்குமாறும் இந்த நாட்களில் நாய் போன்ற விலங்குகளுடன் விளையாடுவதைத் தவிர்க்குமாறும் கால்நடை வைத்தியர் அருண சந்திரசிறி தெரிவித்தார்.  விலங்குகளின் உடல் சூடாக இருப்பதனால் தினமும் செல்லப்பிராணிகளை குளியாட்டுதல், கூந்தல் உள்ள விலங்குகளுக்கு இரண்டு அல்லது மூன்று முறை குளியாட்டுதல், குடிப்பதற்குத் தேவையான அளவு சுத்தமான தண்ணீர் கொடுத்தல், பகல் வேளையில் ஐஸ் கட்டிகள் கொடுத்தல் போன்றவற்றை  செய்யலாம். வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் மயங்கி கீழே விழுந்தால், கால்நடை மருத்துவரிடம் அழைத்துச் செல்வதற்கு முன் குளிர்ந்த நீரில் உடலைக் கழுவுவதால் உயிரைக் காப்பாற்ற முடியும் என வைத்தியர் அருண சந்திரசிறி சுட்டிக்காட்டினார்.  செல்லப்பிராணிகள் மாத்திரமின்றி வீட்டில் வளர்க்கப்படுகின்ற  விலங்குகள் அனைத்தும் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்படுகின்றன,  அதிக வெப்பநிலையால்  மென்மையான  தோல் கொண்ட விலங்குகளுக்குக் காயங்கள் கூட ஏற்படலாம்  என்றும்  அவற்றை எப்போதும் நிழலான இடங்களில் கட்டி வைக்கலாம் என்றும் கால்நடை வைத்தியர்கள்  சுட்டிக்காட்டுகின்றனர். https://www.virakesari.lk/article/179087
    • பட மூலாதாரம்,HAMED NAWEED/LEMAR AFTAAB படக்குறிப்பு, ரபியா பால்ஜி 19 மார்ச் 2024, 02:44 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "மிக முக்கியமான விஷயம், இது ஒரு காதல் கதை." இப்படிக் கூறியவர் பிபிசி உலக சேவையில் பணிபுரியும் அப்துல்லா ஷதன், அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர். ஒரு காலத்தில் திரைப்பட நடிகராக இருந்தவர். 50 ஆண்டுகளுக்கு முன்பு அதே காதல் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். அத்திரைப்படம் இளவரசி ரபியா பால்ஜியின் வாழ்க்கை வரலாறு. அவர் இப்போதும் நேசிக்கப்பட்டு போற்றப்படுகிறார். அவர், சமூகத் தடைகளை மீறி ஒருவரைக் காதலித்தார். அதற்காக அவரது சகோதரனே அவரைக் கொன்றார். “அவள் அன்பின் சின்னம். காதலுக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்தவள். அதுதான் இன்றும் அனைவரையும் ஈர்க்கிறது,” என்று அப்படத்தில் இளவரசி ரபியாவின் காதலனாக நடித்த ஷதன் கூறுகிறார். ஆனால், ரபியாவின் காதல் இரண்டு வழிகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. ஒரு வகையில் அவரது காதல் தெய்வீகமானதாகவும், ரபியா ஒரு முஸ்லிம் துறவியாகவும் கருதப்படுகிறார். மற்றொருபுறம் அவர் ஒரு பெண்ணியவாதியாக அவரது காதல் கலகமாக, உடல்சார்ந்ததாகக் கருதப்படுகிறது. இப்படிச் சொல்பவர் ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைகழகத்தில் மானுடவியலில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்யும் ஷமீம் ஹுமாயுன்.   தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படும் கதை ஆனால், ரபியா, இஸ்லாம் கலாசாரத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞர்களில் ஒருவர், மேலும் ஆப்கானிஸ்தானின் கற்பனையில் மிகவும் மதிக்கப்படும் நபர்களில் ஒருவர் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முனாசா எப்திகர் கூறுகிறார். பண்டைய ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியைப் பூர்வீகமாகக் கொண்டவர் ரபியா. இது இன்று வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ளது. அங்கு 9-ஆம் நூற்றாண்டில் கணிதம் மற்றும் வானியல் செழித்து வளர்ந்தது. அங்கு 10-ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற தத்துவஞானி மற்றும் விஞ்ஞானி அவிசென்னா பிறந்தார். ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு என்பதால் சரியான தேதி நமக்குத் தெரியவில்லை. ஆனால், இக்கதை தலைமுறைகள் கடந்தும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதைசொல்லியும் இக்கதையில் தங்கள் சொந்த விளக்கத்தின்படி அவர்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதுவதை முன்னிலைப்படுத்தி வெவ்வேறு அம்சங்களை வலியுறுத்துகின்றனர். எனவே இக்கதைக்குப் பல பதிப்புகள் உள்ளன. எப்டிகார் என்பவர் எழுதிய கதைதான் இன்று பரவலாகச் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,MUNAZZA EBTIKAR படக்குறிப்பு, ரபியா கி.பி. 940-இல் பிறந்தார் என்று நம்பப்படுகிறது. இருப்பினும் அவரது ஆரம்பகால வாழ்க்கையை பற்றிய விவரங்கள் குறைவு அழகும் அறிவும் ஒன்றுகூடிய இளம்பெண் அக்கதை இப்படித் துவங்குகிறது. "... ஆயிரம் மசூதிகளுடைய, பால்க் அமீரின் மகளாக ரபியா பிறந்தார். பன்னீரில் குளித்து, பட்டால் அலங்கரிக்கப்பட்டு, தங்க ரதத்தில் அமர்த்தப்பட்டார். அவள் பிறந்த நாளை பால்க் மக்கள் கொண்டாடினர்...” "ரபியா அரண்மனையில் வளர்ந்தார், அங்கு அவருக்கு கலை, இலக்கியம், வேட்டை, வில்வித்தை ஆகியவை கற்பிக்கப்பட்டன..." அக்காலத்தில் அப்பகுதியில் பெண்களின் கல்வி கற்பது அசாதாரணமானது அல்ல, என்று லண்டன் பல்கலைக்கழகத்தின் கிழக்கத்திய மற்றும் ஆப்பிரிக்க ஆய்வுகள் பள்ளியின் ஆய்வாளர் நர்கஸ் ஃபர்சாத் பிபிசியிடம் கூறினார். "இஸ்லாத்துக்கு முந்தைய மரபுகள் மற்றும் கலாச்சாரங்கள் இஸ்லாமிய காலகட்டத்திலும் தொடர்ந்தன. எனவே செல்வந்தர்கள் மற்றும் பிரபுக்களின் மகன்களைப் போலவே அவர்களது மகள்களுக்கும் கல்வியறிவு வழங்கப்பட்டது," என்கிறார் நர்கஸ் ஃபர்சாத். மேலும் அவர், "ரபியா ஒரு மகிழ்ச்சியான மற்றும் பணக்கார தந்தையின் செல்ல மகள்" என்று கூறுகிறார். "சமானிட் தேசத்தின் அரசவைக் கவிஞரான ருடாக்கி, ரபியாவின் பேச்சுத்திறன், மொழித்திறன் மற்றும் கவியாற்றல் ஆகியவற்றால் ஈர்க்கப்பட்டார் என்பதும் நமக்குத் தெரியவருகிறது," என்று அவர் மேலும் கூறுகிறார். சிலகாலம் எல்லாம் மகிழ்ச்சியாகவே இருந்தது. "அவளது அழகும், வார்த்தைகளும் வசீகரமாக இருந்தன . அவளது பேச்சுத்திறன் பலரையும் ஈர்த்தது.” "ரபியா தனது கவிதைகளை மக்கள்முன் வாசித்தபோது, அவரது சமகால கவிஞர்களும் எழுத்தாளர்களும் வியப்பில் ஆழ்ந்தனர். அவர் தனது பெற்றோரின் இதயங்களை மட்டுமல்ல, பால்க் மக்களின் இதயங்களையும் வென்றார்." இருப்பினும், அவரது சகோதரர் ஹரிஸ் அவர்மீது கொடிய பொறாமை கொண்டிருந்தார். அவர்களது தந்தை மரணப்படுக்கையில் இருந்தபோது, அவருக்குப் பிறகு ரபியாவை நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு ஹரிஸைக் கேட்டுக்கொண்டார். ஆனால் ஹரிஸ்தான் ரபியாவின் கொடூரமான முடிவுக்குக் காரணமாக இருந்தார்.   பட மூலாதாரம்,FARHAT CHIRA படக்குறிப்பு, அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள் ரத்தத்தால் எழுதிய கடைசி வரிகள் எப்டிகாரின் கதை தொடர்கிறது. "ஒரு நாள், ரபியா தனது பால்கனியில் ஒரு தோட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு அழகான மனிதர் ஹரிஸுக்கு மது பரிமாறுவதைக் கண்டாள்…” "ஹரிஸின் துருக்கிய அடிமையும் புதையல் காவலருமான அவரது பெயர் பக்தாஷ். அவர் ரபியாவின் இதயத்தைக் கவர்ந்தார். அந்த தருணமே ரபியாவின் துயரமான விதி தொடங்கியது..." பக்தாஷுக்கு ரபியா தனது விசுவாசமான பணிப்பெண் ரானா மூலம் காதல் கடிதங்களை அனுப்பத் துவங்கினார். "அருகிலிருந்தும் விலகியிருப்பவனே, நீ எங்கே இருக்கிறாய்? வந்து என் கண்ணுக்கும் என் இதயத்துக்கும் மகிழ்ச்சியைக் கொடு, இல்லையேல் வாளை எடுத்து என் வாழ்க்கையை முடித்துவிடு…" பக்தாஷும் ரபியாவுக்கு அதேபோல அன்பான மற்றும் கவிதை மிகுந்த பதில் கடிதங்களை எழுதினார். காந்தஹாரின் ஆட்சியாளர் பால்க் பகுதியைத் தாக்க முற்பட்டபோது, ஹரிஸ், தனது ஆலோசகர்களுடன் கலந்தாலோசித்த பிறகு, பக்தாஷின் உதவியின்றி தனது எதிரியைத் தோற்கடிக்க முடியாது என்பதை அறிந்தார். பக்தாஷ் தன் எதிரியைக் கொன்றால், அவன் விரும்பியதை அவனுக்குப் பரிசாகத் தருவதாக ஹரிஸ் சொன்னான். பக்தாஷ் வெற்றி பெற்றார், ஆனால் முயற்சித்து அதில் பலத்த காயமடைந்தார். "அவர் கிட்டத்தட்ட உயிரை இழந்துவிட்ட தறுவாயில், முகத்தை மூடிய ஒரு போர்வீரர் பக்தாஷைக் காப்பாற்றவும், போரில் வெற்றி பெற அவருக்கு உதவவும் போர்க்களத்திற்கு பாய்ந்து வந்தார். இந்த வீரர் வேறு யாருமல்ல, ரபியா தான்..." ரபியாவும் பக்தாஷும் காதலிக்கிறார்கள் என்பதை அறிந்த ஹரிஸ், பக்தாஷை கிணற்றில் வீசவும், ரபியாவை ‘ஹமாம்’ என்று அழைக்கப்படும் அரண்மனையின் குளியலறையில் பூட்டவும் உத்தரவிட்டார். சில பதிப்புகள், ஹரிஸ் ராபியாவின் கழுத்து நரம்புகளை வெட்ட உத்தரவிட்டதாகவும், மற்றவை, அவளது மணிக்கட்டில் உள்ள நரம்புகளை அவளே வெட்டிக் கொண்டதாகவும் கூறுகின்றன. ஆனால் அவர் தனது கடைசி கவிதை வரிகளை அரச குளியலறையின் சுவர்களில் தனது சொந்த இரத்தத்தால் எழுதினார் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். "உன் காதலின் கைதி நான்; தப்பிப்பது சாத்தியமல்ல "அன்பு என்பது எல்லைகளற்றக் கடல், புத்தியிருப்பவன் அதில் நீந்த விரும்ப மாட்டான்... "உனக்கு கடைசி வரை அன்பு வேண்டுமென்றால் ஏற்றுக்கொள்ளப்படாததை ஏற்றுக்கொள், கஷ்டங்களை மகிழ்ச்சியுடன் எதிர்கொ, விஷம் அருந்து, ஆனால் அதை தேன் என்று சொல்..." சில நாட்களுக்குப் பிறகு, ரானாவின் உதவியுடன், பக்தாஷ் கிணற்றில் இருந்து தப்பித்து, ஹரிஸின் தலையை வெட்டிக்கொன்று, குளியலறைக்குச் சென்றார். "தரையில் கிடந்த ரபியாவின் அழகான, உயிரற்ற உடலையும், சுவர்களில் ரத்தத்தால் எழுதப்பட்ட அவளது கடைசி காதல் கவிதைகளையும் மட்டுமே" அவன் கண்டான். அவன் தனது காதலியுடன் தன்னுயிரையும் விட்டுவிட்டான்.   பட மூலாதாரம்,SHAMIM HOMAYUN படக்குறிப்பு, பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேட்டின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஒரே பெண், இரண்டு முகங்கள் "ரபியா இறந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், மற்ற கவிஞர்கள் அவரது நற்பண்புகளையும் அழகையும் குறித்துப் பேசினர்," என்று ஃபர்சாத் கூறுகிறார். அவர்களில் ஒருவர் முதல் சூஃபிக் கவிஞரான அபு சயீத் அபு அல்-கைர் (1049 இறந்தவர்). இவர் அந்தக் காதல் கதையின் நாயகி ஏன் ஒரு புனிதராகக் கருதப்படுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறார். வெளிப்படையாகப் பார்த்தால் அவரது கவிதைகள் தெய்வீகத்தைப் பற்றிப் பேசுவதிலிருந்து வெகு தொலைவில் இருந்தன. ஆனால், ரபியா உணர்ந்த அன்பின் தன்மையைப் பற்றி அல்-கைர் வியந்து பேசுகிறார். "அது மிகவும் தீவிரமானது, அது தெய்வீகமான இடத்திலிருந்து மட்டுமே வந்திருக்க முடியும்," என்று அல்-கைர் கூறியதை ஹுமாயுன் கூறுகிறார். அல்-கைர் எழுதிய பிரதி இப்போது நமக்குக் கிடைக்கவில்லை என்றாலும், 13-ஆம் நூற்றாண்டின் பாரசீகக் கவிஞர் ஃபரித் அல்-தின் அத்தாரால் மீண்டும் எழுதப்பட்டதிலிருந்து நாம் அறியலாம், என்கிறார். ரபியா ஒரு உண்மையான சூஃபி என்பதை நிரூபிப்பதே இந்த இரண்டு கவிஞர்களின் குறிக்கோள் என்று அவர் கூறுகிறார். அந்த விளக்கத்தின்படி, பக்தாஷ் மீதான அவளது காதல் வெறும் காமத்தால் தூண்டப்படவில்லை. மாறாக அவளுடைய காதல் தெய்வீக அன்பை வெளிப்படுத்தும் வழிமுறையாகும். இருப்பினும், வேறு ஒரு புரிதலின்படி ரபியா பெண்களின் தைரியத்திற்கான குறியீடாக இருக்கிறார். இந்தப் புரிதலின்படி ரபியா பழமைவாத எதிர்ப்பின் அடையாளமாகக் கருதப்படுகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு காபூலில் நடந்த ‘குறிப்பிடத்தக்க ஆப்கான் பெண்களைப்’ பற்றிய ஓவியக் கண்காட்சியில்), ஆப்கானிஸ்தான் ஓவியரும் புகைப்படக் கலைஞருமான ராதா அக்பர், "ரபியா ஆணாதிக்கத்திற்கு எதிரான எதிர்ப்பின் சின்னம். காதலுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் ஆப்கானியப் பெண்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறையின் நினைவூட்டல்," என்று ராபியாவை விவரித்தார். பல வருடங்களுக்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் முதல் திரைப்படமான ‘ரபியா பால்ஜி’ வெளியானபோது, பிரபல பத்திரிகையான ‘ஜ்வாண்டுன்’ இதழில் அதுபற்றி ஒரு கட்டுரை வெளியானது. அதன் முதல் வரி: "ரபியாவின் கதை கழுத்து நெரிக்கப்பட்ட நம் சமூகத்தின் பெண்களின் வாயிலிருந்து வெளிவந்த கதறல்."   பட மூலாதாரம்,WORLD DIGITAL LIBRARY, LIBRARY OF CONGRESS படக்குறிப்பு, ரபியா குறித்த திரைப்படத்தில் பெண்கள் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர் தாலிபான்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட திரைப்படம் ரபியா பால்ஜி படத்தில்தான் அப்துல்லா ஷதன் பக்தாஷ் வேடத்தில் நடித்தார். அதில் அவர் ரபியாவை காதலித்தார். குறிப்பாகச் சொல்வதெனில் அப்பாத்திரத்தில் நடித்த நடிகை சிமாவுடன். அவரையே அவர் திருமணமும் செய்து கொண்டார். இது அப்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியது. "ரபியா பால்ஜி மிகவும் பிரபலமான படமாகும்," என்று ஷதன் பிபிசி முண்டோவிடம் கூறினார். “சுமார் 40 பெண்கள் இதில் வேலை செய்தனர். இப்போது தாலிபான்களின் ஆட்சியில் அப்படி ஒரு படத்தை எடுக்கவே முடியாது," என்றார். அது மட்டுமல்ல. அப்படத்தில் ரபியா காதல்வயப்பட்ட, சுதந்திரமான, வலிமையான பெண். அவரும் மற்ற பெண்களும் காபூலில் 1970-களில் பிரபலமாக இருந்த நாகரீகமான பாணியில் ஆடம்பரமான, இறுக்கமான ஆடைகளுடனும் முடி அலங்காரத்துடனும் தோன்றினர். தாலிபான்கள் 1996-ஆம் ஆண்டு கடுமையான தணிக்கையை திணித்தபோது காபூலில் உள்ள தேசிய திரைப்படக் காப்பகத்தில் பணிபுரிந்தவர்கள், 6,000 விலைமதிப்பற்ற ஆப்கானிய திரைப்படங்களைப் பாதுகாத்தனர். அவர்கள் அவசரமாக ஒரு பொய்ச்சுவரைக் காட்டி அதற்குப் பின்னால் மறைத்து வைத்து, தாலிபான்களின் தணிக்கை பிடியில் இருந்து காப்பாற்றிய திரைப்படங்களில் இதுவும் ஒன்றாகும். பால்க் பகுதியிலுள்ள ரபியா ஆலயம் சமூகச் சீர்கேடின் இடமாகக் கருதப்பட்டதால் மூடப்பட்டது. ஆனால், பள்ளிகள் முதல் மருத்துவமனைகள் வரை, பல பெண் நிறுவனங்கள், ‘ரபியா’ என்று பெயரிடப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cekervmdr94o
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • ஆதரவற்றோர் இல்லத்தை சிறுமிகள் கடத்தும் இடமாக பாவித்துள்ளார்கள்.
    • நாற்பதாயிரம் ரூபா என நினைக்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.