Jump to content

இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கு, மொழிக்கு சேவை செய்வேன்: முதலமைச்சர் கருணாநிதி பேச்சு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கு, மொழிக்கு சேவை செய்வேன்: முதலமைச்சர் கருணாநிதி பேச்சு

சென்னை, ஜன.25-: இன்னும் 20 ஆண்டுகள் நாட்டுக்கும், மொழிக்கும் சேவை செய்வேன் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

முத்தமிழ்ப் பேரவை 31ஆம் ஆண்டு இசை விழா சென்னையில் நேற்று நடந்தது. விருதுகள் வழங்கி முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

தமிழின் பெயரால், தமிழர்களின் பெயரால் எந்தவொரு அமைபஞபை உருவாக்கினாலும், அதன் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி. ஆனால், அதற்கெல்லாம் முற்றிலும் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றால், இதற்காகப் பாடுபட்ட, உழைத்த, இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவில், நான் நீண்ட நாளாக நிறைவேற்றாமல் இருந்த ஒரு நிகழ்ச்சி இனஞறைக்கு நிறைவேறியிருக்கின்றது. அதுதான் நம்முடைய தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாருக்கு ``இயல் செல்வம்'' விருது வழங்கப்பட்டிருப்பதாகும்.

தமிழகத்திலே ஆன்மீகத்திற்கு ஒரு புதுப் பொலிவை, ஒரு தனி வலுவை, ஒரு தனி கீர்த்தியை உருவாக்கிக் காட்டியவர் பெரிய குன்றக்குடி அடிகளார். அவரிடம் நான் கொண்ட அன்பு, அவர் என்னிடம் கொண்ட அன்பு சிறிதும் மாறாமல் பழகி வந்தோம். அவ்வழியிலேயே இங்கு வந்துள்ள நம்முடைய இளம் அடிகளார் எப்படி இருப்பாரோ என்று நாங்கள் கருதிய நேரத்தில், அவர் தன்னுடைய வாழ்க்கையின் மூலம், தன்னுடைய கருத்துக்களை எடுத்துத் தருகின்ற செயலின் மூலம் நானும் அப்படித் தான் இருக்கிறேன் என்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கிறார்.

அவர் இங்கே வாழ்த்தும்போது சொன்னார் - நான் நீண்ட காலம் இருந்து நாட்டிற்கு, மொழிக்கு என்னென்ன நன்மைகளை எல்லாம் செய்ய வேண்டும் என்றார். நீங்கள் எல்லாம் இருந்தால், இன்னும்கூட ஒரு பத்து, இருபதாண்டு காலம் ஆயுள் எனக்கு நீண்டு அவைகளை எல்லாம் செய்யக்கூடிய வாய்ப்பு எனக்கு ஏற்படும். இந்த நம்பிகஞகை எனக்கு இருக்கின்றது.

எத்தனையோ பேர் நான் நூறாண்டு காலம் வாழப் போகிறேன் என்றெல்லாம் சொன்னார்கள். அவர்கள் தங்களை நம்பிச் சொன்னார்கள். நான் உங்களை நம்பிச் சொல்கிறேன். எனவே, இதில் எந்தவிதமான தவறும் இருக்க முடியாது.

பொள்ளாச்சி மகாலிங்கம் செல்வச் சீமான் மாத்திரமல்ல, அருட்செல்வர், வடலூர் வள்ளலாருடைய புகழைப் பரப்புகின்றவர். இவரைப் போலவே சி.சுப்பிரமணியம் தமிழக காங்கிரஸ் கட்சியிலே மாத்திரமல்ல, அகில இந்திய காங்கிரஸ் கட்சியிலே பெரும் பொறுப்புகளிலே இருந்தவர். பெருந்தலைவர் காமராஜருக்கு உற்ற தொண்டராக, தோழராக, துணைவராக இருந்தவர்.

அப்படிப்பட்ட சி.சுப்பிரமணியம் தமிழக சட்டப்பேரவையிலே நிதி அமைச்சராக இருந்த போது, 1957ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவும், நானும், பேராசிரியர் அன்பழகனும் சட்டமன்றத்திற்குள் தழைந்தோம். அன்றைக்கு தழைந்த நாங்கள், இன்றைக்கும் அங்கே தான் இருக்கிறோம். எத்தனை ஆண்டுகள் என்ற கணக்கை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நான் கணக்கிலே கொஞ்சம் ‘வீக்’.

‘தமிழாயஞந்த தமிழன் தான் தமிழகத்தின் முதல்-அமைச்சராய் இருத்தல் வேண்டும்’ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொன்னாரே, அந்த வரிகளை மறந்துவிடவில்லை, நாங்களும் மறந்துவிடவில்லை, தேர்தல் நேரத்தில் வாக்களிக்கும் தமிழர்களும் மறந்துவிடாத காரணத்தினால் தமிழாயஞந்த தமிழன் இந்தத் தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பிலே இருக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இந்த ஒரு விழாவிலே இயல் செல்வம், ராஜ ரத்னா, இசைச் செல்வம், நாட்டியச் செல்வம், தவில் செல்வம், மிருதங்க செலஞவம் போன்ற இந்தச் செல்வங்களை மாத்திரமல்ல, என்றைக்கும் வற்றாத செல்வத்தை, பகுத்தறிவு செல்வத்தை, தன்மான செல்வத்தை தமிழர்களுக்கு அளிக்க இந்த ஆட்சி தொடர்ந்து நீடிப்பதற்கு நீங்கள் தான் துணையாக இருக்க முடியும். அப்படி துணையாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு முறை இந்த ஆட்சி ஓட்டை விழுந்த ஆடஞசி என்று தி.மு.க. ஆட்சியைப் பற்றி சொன்னார்கள். அப்போது அண்ணா திருவாரூர் கூட்டத்தில் சொன்னார். திருவாரூர் தான் சங்கீத விஷயங்களை உதாரணமாகச் சொல்வதற்கேற்ற ஊர். ஏனென்றால், எந்த ஒரு வித்வானும் திருவாரூரில் வந்து நிகழ்ச்சி நடத்தி புகழ் பெற்றால்தான், அவன் தமிழ்நாட்டிலே புகழ் பெற முடியும் எனஞற அளவிற்கு திருவாரூர் அத்தகைய ரசிகத் தன்மை வாயஞந்த ஊர்.

அங்கே தான் அண்ணா சொன்னார், ``ஆமாம், இது ஓட்டைகள் நிறைந்த ஆட்சி தான் என்று சொல்லிவிட்டு, ஆனால், இந்த ஓட்டைகள் எல்லாம் ஏனோதானோ என்று விழுந்த ஓட்டைகள் அல்ல, நாதஸ்வரத்திலே இருக்கின்ற ஓட்டைகளைப் போன்றது, புல்லாங்குழலிலே இருக்கின்ற ஓட்டைகளைப் போன்றது, எந்தத் துவாரத்தை அடைத்தால் எனஞன நாதம் வரும் என்று எனக்கு தெரியும். ஆகவே, எத்தனை ஓட்டைகள் இருந்தாலுமஞ இருக்கட்டும், அந்த ஓட்டைகளை அடைக்க எனக்கு தெரியும்'' என்று அண்ணா சொன்னார்.

அண்ணாவின் தம்பிகளாகிய நாங்கள் இன்றைக்கு இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறோம். அடைக்க வேண்டிய ஓட்டைகளை அடைத்து, நடத்த வேண்டிய வேட்டைகளையும் நடத்தி வெற்றிகரமாக இயல், இசை, நாடகம் என்கிற இந்த முத்தமிழை வளர்ப்போம், வாழ்த்துவோம் என்று இங்கே வீற்றிருக்கினஞற கலைஞர்கள் சார்பாக நான் உறுதி எடுத்துக் கொண்டு சூளுரைத்து இந்தப் பேரவை மேலும் பல ஆணஞடு விழாக்களை கொண்டாடுகின்ற அளவிற்கு வாழ வேண்டும் என்று வாழ்த்தி விடை பெறுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

நன்றி விகடன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆ......................இன்னும் 20 வது ஆண்டுகள் வாயை திறக்கவேண்டியது தான்

Link to comment
Share on other sites

கருனாநியின் வாழ்க்கையில் அரசியலுடன் சுயமரியாதைக் கழகம் என்ற ஒன்றை கடைப்பிடிப்பதன் காரணமாக அவரது நெஞ்சுருதி, தன்னம்பிக்கை <_< இவற்றின் காரணமாக 90 வயதிலும் பய உணர்வென்பதே தெரியாது முடியும் என்ற நம்பிக்கையில் அவரால் சாதிக்கமுடியும். அவர் சொன்ன ஒரு வரிகள் அவரின் அனுபவ சேகரிப்பு. தமிழர் ஒற்றுமையாக ஒரு விசயத்தை செய்தாலும் கன காலம் பிரச்சனைப்படாம இருக்க மாட்டீனம் என்று சொல்கிறார். அப்படி என்றால் எம் தலைவர் கடந்த 30 வருடங்களாக போராளிகளை அணைத்து இப்புனித போராட்டத்தை எடுத்துச்செல்லிறார் என்றால் அவரும் அவரது மன உறுதியும் 100 அல்ல 1000 வருடங்களுக்கு நின்றுபிடிக்கும்.

கருணாநிதியே சொல்கிறார்...

தமிழின் பெயரால், தமிழர்களின் பெயரால் எந்தவொரு அமைபஞபை உருவாக்கினாலும், அதன் ஆயுட்காலம் குறைவாகத்தான் இருக்கும் என்பது நாம் கண்ட வரலாற்று நிகழ்ச்சி. ஆனால், அதற்கெல்லாம் முற்றிலும் விதிவிலக்காக, மாற்றாக, இந்த மாமன்றம் 30 ஆண்டுகளைக் கடந்து 31ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது என்றால், இதற்காகப் பாடுபட்ட, உழைத்த, இன்னமும் உழைத்துக் கொண்டிருக்கின்ற அனைவருக்கும் நான் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். :blink:

Link to comment
Share on other sites

எல்லாம் சாய்பாபாவின் ஆசிதான்.

இனித்தான் இவருக்கு நாட்டுக்கு சேவை செய்யவேண்டுமென்று ஆசை வந்திருக்கு.

Link to comment
Share on other sites

ஆ, என்ன 20 வருடமா? 2 ஐ தான் 20 என்று பிழையாகச் சொன்னாரோ

பாவம் தமிழ் மொழியும், தமிழ்நாட்டு மக்களும் !!

படா பேஜாராப் போச்சய்யா இவனுங்களோட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.