Jump to content

தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில்.


Recommended Posts

தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில்.

 
தமிழ் கட்சிகளின் தலைமைகள் ஒரே மேடையில்.

யாழில்.மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசுவின் இலங்கை அரசியல் யாப்பு நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை யாழ்.சரஸ்வதி மண்டபத்தில் , நடைபெற்றது.

 

 
அந்நிகழ்வில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் . ஈழமக்கள் புரட்சிகர விடுதலை  முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் , தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , புளெட் அமைப்பின் சார்பில் வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்தவரும் , வடமாகாண எதிர்க்கட்சி தலைவருமான சி.தவராசா , மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்து கருத்து தெரிவித்தனர்.
 
 
 ரெலோ கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதன் அழைக்கப்பட்டு இருந்த போதிலும் அவர் நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை. அதேபோன்று வடமாகாண முதலமைச்சரும் தன்னால் தவிர்க்க முடியாத காரணத்தால் நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லை என ஏற்பாட்டாளர்களிடம் தெரிவித்து இருந்தார். 
 
தமிழ் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒரே மேடையில் இருந்து தமது கருத்துக்களையும் தமது கட்சி சார் நிலமைகளையும் வெளிப்படுத்தினர்.
 
 
இதன் போது , நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் , தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி , மற்றும் வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் கருத்து தெரிவிக்கும் போது கூட்டத்தில் இருந்த சிலர் அவர்களின் கருத்துக்கு எதிர்க்கருத்து தெரிவித்தும் , கேள்வி கேட்டனர். இதனால் நிகழ்வில் குழப்பங்கள் ஏற்பட்டன.
 
.
 

 

யாழில் இடம்பெற்ற ''இலங்கை அரசியல் யாப்பு'' நூல் வெளியீட்டு விழாவில் மக்களின் எதிர்ப்பை சந்தித்த அரசியல்வாதிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீ

இது பிரான்சில நடக்குது  போல...

Link to comment
Share on other sites

தமிழீழவிடுதலைப்புலிகள் கூட ஐக்கிய இலங்கைக்குள் சமஸ்டி என்பதை எதிர்த்தார்கள் என்பது அப்பட்டமான பொய்...

த.தே.கூ அன்றைய வெளிவிகாரகுழு 
செயலாளர் என்ற ரீதியில் இதற்கு நான் சாட்சி ...

மறைந்து விட்டார்கள் என்பதற்காக அனைத்தையும் பொய் கூறக்கூடாது..

- கஜேந்திரகுமார் -

சமஸ்டி  கவனிக்க  மக்களே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு பொதுமக்களையும் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும். அதற்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அமைதியாக பொறுமையாக பதிலளிக்க வேண்டியது அவர்கள் கடமை.

எழுபது ஆண்டுகால பிரச்சனையில் அமைதிகாத்து நல்லிணக்கங்களை முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் அரசியல்வாதிகளே.....பொதுமக்கள் அல்ல. ஏனெனில் அவர்கள் பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை.

ஒரு பொதுமகன் கேள்வி கேட்டால்....."தம்பி உமக்கு ஒண்டும் தெரியாது...பேசாமல் இரும்"  என சொல்லும் அரசியல்வாதிகள் இருக்கும் வரை எமக்கு விடிவில்லை.

Link to comment
Share on other sites

4 hours ago, குமாரசாமி said:

ஒவ்வொரு பொதுமக்களையும் கேள்வி கேட்க அனுமதிக்கவேண்டும். அதற்கு ஒவ்வொரு அரசியல்வாதிகளும் அமைதியாக பொறுமையாக பதிலளிக்க வேண்டியது அவர்கள் கடமை.

இந்த விடயத்திற்குத்தான் நானும் வெயிட்டிங்.

மேலைத்தேயநாடுகள் போன்று அமைதியாக ஆரவாரமில்லாமல் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளும் சமுதாயமாக நாமும் மாற வேண்டும். அதுவரையில் இது வெறும் பகற்கனவே.

Link to comment
Share on other sites

குழப்பகரமாக முடிவடைந்த நூல் வெளியீடு
குழப்பகரமாக முடிவடைந்த நூல் வெளியீடு
 தமிழ் அரசியல்வாதிகளின் பேச்சுக்களும் பார்வையாளர்களின் எதிர்க்கேள்விகளுமென மிகவும் குழப்பகரமாக நிறைவடைந்தது 
 மு. திருநாவுக்கரசு எழுதிய அரசியல் யாப்பு நூல் வெளியீட்டு விழா.
 
இந்த நூல் வெளியீடு நேற்று (சனிக்கிழமை) யாழ்.நாச்சிமார் ஆலய பகுதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
பேராசிரியர்.க.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நூல் வெளியீட்டு விழாவில், தலைமையுரையினை பல்கலைக்கழக வரலாற்றுதுறை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம, வரவேற்புரையினை யாழ் பல்கலைக்கழக தமிழ்த் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் க. அருந்தாகரன், நூலாய்வினை சிரேஸ்ட ஊடகவியலாளர் வ.தேவராஜா சிறப்புரையினை எழுத்தாளர் நிலாந்தன் ஆகியோர் வழங்கினர்.

மேலும் சிறப்புரைகளை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன், வீ.ஆனந்தசங்கரி, வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரும் பிரதம விருந்தினர் உரையை முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் வழங்க இருந்தார் எனினும் சில காரணங்களினால் அவர் வரமுடியாது போகவே அவருடைய உரையை பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் வாசித்து வைத்தார்.

அத்துடன் , வடமாகாண சபை உறுப்பினர் சிவநேசன், அஸ்மின் அயூப், சயந்தன் உட்பட அரசியல் பிரமுகர்கள், சமூகவியலாளர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

14550975_772654612873623_980762282_o.jpg
 

இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அரசியல்வாதிகள் பேசத் தொடங்கியதும் அவர்களிடம் தொடர்ச்சியாக எதிர்க்கேள்விகளை கேட்டவண்ணமிருந்தனர். விழா ஏற்பாட்டாளர்கள் அவர்களை அமைதி காக்குமாறு கோரியபோதிலும் அது முடியாமற் போனது. இறுதியில் நிகழ்விவிற்கு வந்த ஒரு சிலர் நிகழ்வு முடிவடையும் முன்னரேயே சென்றுவிட்டனர்.

நிறைவாக     மயிலங்கூடல் நடராஜன் மற்றும் அவரது பாரியார், பேராசிரியர் சிற்றம்பலம் இணைந்து நூலை வெளியிட்டு வைத்தனர்.

14536514_772654552873629_800099708_o.jpg

1475381675_kk.jpg

 

http://onlineuthayan.com/news/18380

Link to comment
Share on other sites

On 1/10/2016 at 10:36 PM, நவீனன் said:

தமிழ் கட்சிகளின் "தலைமைகள்" ஒரே மேடையில்.

புத்தகத்தை எழுதியவரின் "பின்னணியில்" தாங்களும் தலைவர்கள் என்று நினைக்கும் பலர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தது, உண்மையான "தலைவன்" யார் என்பதை மீண்டும் கோடிட்டு காட்டியுள்ளது. 

சுமார் 5 வருடங்களின் முன்னர் மு திருநாவுக்கரசுவை சந்தித்த போது சில வரலாற்று நூல்கள் எழுதப்படும் போது கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விடயங்களை பகிர்ந்து கொண்டது ஞாபகத்துக்கு வருகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியிலும் எதிர்க்கிறார்கள்,பாரிசிலும் எதிர்கிறார்கள்.யாழ்ப்பாணத்திலும் எதிர்க்கிறார்கள்.சிட்னியில் உருவர் சுமத்திரனைக் கேணள்வி கேட்ட பொழுது. இந்தக் கேள்விகளை அங்குள்ள மக்கள் கேட்க வேண்டும் என்று இப்ப அவங்களே கேட்கிறார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.