Jump to content
  • 0

பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள், அதனை... பிள்ளையிடம் சொல்லலாமா?


தமிழ் சிறி

Question

  • கருத்துக்கள உறவுகள்

 

110.jpg

 பிள்ளைகளுக்கு... திருமணம்  பேச ஆரம்பிக்கும் பெற்றோர்கள்,

அதனை... பிள்ளையிடம்,  சொல்லலாமா?   

எனது நண்பர் ஒருவர்.... தனது பிள்ளைக்கு  திருமணம் செய்து வைப்பதற்காக... அந்தப் பிள்ளைக்கு தெரியாமல்,  
அதற்கான... முன் ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். (சாதகம் பார்ப்பது... போன்ற விடயங்கள்.)

இவ்வளவிற்கும்... அந்தப் பிள்ளை, மேற் படிப்பு  படிக்க வேண்டும் என்ற... ஆர்வத்தில், உள்ளது.
இப்படியான சூழ் நிலையில்.... இதனை, எப்படிக் கையாள வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா?

Link to comment
Share on other sites

  • Answers 51
  • Created
  • Last Reply

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 15.10.2016 at 2:32 PM, விசுகு said:

இன்றைக்குத்தான் கண்ணில  அம்புட்டுது...

இதெல்லாம் நடக்கா இப்பவும்......

 

நான் பிள்ளைகள் என்னுடன்  கதைக்கத்தொடங்கும்போதே  சொல்லிவிட்டேன்

திருமணம் உங்க விருப்பப்படி தான் என்று.

சிறி

உங்களது நண்பருக்கு ஏதாவது நன்மை செய்வதாக இருந்தால்

உடனே இந்த மாதிரி மூடநம்பிக்கைளிலிருந்து வெளியில் வரச்சொல்லுங்கள்.

 

விசுகர்! உங்களது / உங்கள் சகோதரங்களது திருமணங்கள் எப்படி நடந்தன? காதல் திருமணங்களா அல்லது பேச்சு திருமணங்களா? :)

Link to comment
Share on other sites

ஒருவருக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை (Authority) கொடுத்தால் அவருக்கு ஒரு பலம் (power) வந்துவிடுகிறது. அந்தப் பலத்தைப் பெற்றுக்கொண்டவர் பொறுப்புக்கூறுதல் (Responsibility) செய்ய வேண்டியவராகிறார்.

பிள்ளைக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தால் அப்பிள்ளைக்கு பலம் கிடைக்கிறது. திருமணத்தை வெற்றியடையச் செய்ய வேண்டிய பொறுப்பு பிள்ளைக்குக் கொடுக்கப்படுகிறது.

மாறாக பெற்றோர்கள் முடிவெடுத்தால் திருமணத்தின் வெற்றி தோல்விக்கு அவர்களே பதில் கூறக் கடமைப்பட்டவர்கள். :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் காலத்தில்.. பிள்ளைகள் பார்க்கிறதை.. அப்பா அம்மா கட்டி வைச்சு.. தமது கெளரவத்தை காத்துக் கொள்வதே சிறந்தது. ஏனெனில்.. அப்பா அம்மா.. பிள்ளைகளின்.. எல்லா உணர்வுகளையும் அறிந்து கொள்ள முடியாது. அந்த வகையில்.. இந்த விசயத்தில்.. பெற்றோர் எதனையும் பிள்ளைகளிடம் திணிக்காதீர்கள். அவர்களின் தெரிவுக்கு முதன்மை அளியுங்கள். நீங்கள் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.. அவர்கள் வாழ இருப்பவர்கள். அதனை சிதைக்காதீர்கள். அவர்களின் தெரிவில்.. அவர்கள் விடும் தவறுகளுக்கு அவர்களே பொறுப்பு என்பதை தெளிவாகச் சொல்லிடுங்கள். முன்னெச்சரிக்கையாக. இதே தான் எங்கள் வீட்டில்.. எங்களுக்குச் சொல்லப்பட்டது.

நீ விரும்பிறதை நீ செய்து கொள்ளலாம். ஆனால்.. அதன் விளைவுகளுக்கு நீயே பொறுப்பு. நீ சந்தோசமா இருந்தால் நாங்களும் சந்தோசப்படுவோம். இன்றேல் கவலை தான்.. இதுதான் எங்கட அப்பா அம்மா எங்களுக்குச் சொன்னது. இதுவே இப்பவும் பலருக்கு பொருந்துகிறது. tw_blush:

பெற்றோரின் எச்சரிக்கை என்பது இயல்பாக எச்சரிக்கையை அவதானத்தைக் பொறுப்பை கூட்டி விட்டதே தவிர.. கண்டபடி தீர்மானிக்கும் நிலைக்கு இட்டிச் செல்லவில்லை. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளை ஆணா , பெண்ணா.... சுமாராகவேணும்  அவர்களின் வயது விபரம் தெரியாமல் ஒன்றும் சொல்ல முடியாமல் இருக்கு....!அந்தப் பிள்ளைகள் இங்கே பிறந்து வளர்ந்தவையாகவோ அல்லது சிறுவயதில் இங்கு வந்து ஆரம்பக் கல்வியில் இருந்து படித்து வரும் பிள்ளைகளாக இருந்தால் , பெற்றோர் எவ்வளவுதான் சுழிச்சு ஓடினாலும் அவர்கள் சரியான நேரத்தில் தத்தமது துணையை நேரிடையாகவே கூட்டிவந்து தகவல் சொல்லுவார்கள்....!  :119_busts_in_silhouette:

பின்பு பெற்றோர் அதை ஏற்பதற்கோ அன்றி ஜீரணிப்பதற்கோ தம்மைத் தயாரிப் படுத்தித்தான் ஆகவேண்டும்....!  tw_cold_sweat:

பெற்றோரின் மனம் ஓரளவாவது குளிர்வதற்கு சில சாய்ஸ் உண்டு....!  tw_cry:

--- தன் பாலினத்தில் ஒருவரை கொண்டு வராமல் எதிர்பாலினத்தில் கொண்டு வருதல்....!     ஸ்...ஸ்......ஸ்.....!  tw_dissapointed:

--- வேற்று நாட்டவரை தேர்ந்தெடுக்காமல் தன் நாட்டவரைத் தேர்ந்தெடுத்திருப்பது ....!         ம்...ம்...ம்......!  tw_confused:

--- வேற்று மொழி பேசுபவர் இல்லாமல் தன் தாய்மொழி  பேசுபவரை அறிமுகப் படுத்துவது ...!   க்கும் ...க்கும்....! :rolleyes:

--- வேறு மதம் பிடிக்காமல்  தன் மதம் பிடித்தவரைச் சுட்டுவது ....!   ஐயோ ... ஐயோ.....! :unsure: 

--- ஒரு ஹிப்பியோ ,குருவியோ இல்லாமல் பார்வைக்கு லட்ஷணமாய் இருப்பது ....!    கக்கக்க  போ ....! tw_blush:

--- தனது சாதியுடையவனாய், நண்பனின் நன்பனுக்குத் தெரிந்தவராய்  இருப்பது ....!  ஓஹோ ....ம் ....!  :224_monkey:

--- ஆச்சரியமாக  தனது வழியிலோ, மனைவி வழியிலோ உறவினனாய் இருப்பது ......! ஆஹா ...ஆஹாஹா ....! :108_metal:

அவர் ஜென்ம விரோதியின் மகனோ,மகளாகவோ இருந்தாலென்ன... ஏலே சின்ர்ராசு  அடிடா மேளத்தை , நீ கட்றா  தாலியை ......! :112_lips: :11_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

எமது நாளைய சமுதாயம் துருக்கி,ஈராக்,துனேசியன் என நடு வீட்டுக்குள் அழைத்து வருகின்றார்கள். உங்களைப் பொறுத்தவரைக்கும் இது பற்றிய கருத்து என்ன? 

அண்ணா

நான் பிரான்சுக்கு வந்த புதிதில் ஒரு கிரேக்க முதலாளியிடம் வேலை செய்தேன்

அவர்களும் கிட்டத்தட்ட எமது கலாச்சாரத்தோடு

தகப்பனாருக்கு 

ஆண்களுக்கு அதிக அதிகாரம் தரும் பரம்பரையில் வந்தவர்கள்.

அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள்.

அவர்கள் பிரெஞ்சு கலாச்சாரப்படி வாழத்தலைப்பட்டபோது..

அவருடன் இது பற்றி கலந்து பேசும் சந்தர்ப்பங்கள் கிடைத்தன

அவர் சொன்னது இன்றும் என்னுள் ஆளப்பதிந்துள்ளது.

எனது சமுதாயப்படி வளர்க்கணும் என்றால் நான் முதலில் எனது நாட்டில் இருக்கணும்

இங்கு இருப்பதென்றால் இப்படித்தான் வளரும்

ஒரேயொரு வழிதான் இருக்கு

 நான் தான் என்னை மாற்றிக்கணும் என்றார்.

இது இன்று எமக்கும் பொருந்துகிறது.

உங்கள் கேள்விக்கு இரண்டு பதிலிருக்கு.

1- நான் மாற்றங்களுக்கு தயாராகிவிட்டேன் (காரணம் எனது திருமணத்தில் நான் எனது பெற்றோர் சொல் கேட்டதில்லை)

2- நாட்டிலும் இப்போ அந்த நிலைமை (நாம் கற்பனை செய்யும்நிலை)  இல்லை

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைகளின் திருமணவிடயத்தை அவர்கள் அறியாமல் செய்ய வெளிக்கிடுவது சுத்த முட்டாள்த்தனம். இன்றை காலத்தில் பிள்ளைகளே தங்களுக்கான வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்கிறார்கள். ஒரு வேளை தெரிவு செய்யவில்லை என்றால் அவர்கள் தமக்குரிய துணைக்கு தங்களுக்குப் பிடித்த சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். அன்றைய காலங்கள் போல் பிள்ளையின விருப்பு வெறுப்புகளை அறியாமல் பெற்றோர் எம்முயற்சி எடுத்தாலும் தோல்வியில் மட்டுமே முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1.10.2016 at 0:59 AM, தமிழ் சிறி said:

இணையவனைத் தவிர,  வேறு. ஒருவரும், பதில் எழுதாமல்,  இருப்பதால்....
கனக்க... யோசிக்கினம் போலை கிடக்கு. 

"வீட்டுக்கு... வீடு,  வாசல் படி"  

,

இந்தத் தலைப்புக்குள் நுளைவதெனில் பலவிடயங்களைத் தொடவேண்டும். எமது இளையோரின் வாழ்வோடு விளையாட முடியாது. தொடருவேன்...

தலைப்புக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 01/02/2017 at 9:04 PM, ரதி said:

உங்கள் மீது தான் பிழை ஈழப்பிரியன்...நீங்கள்,உங்கள் பிள்ளைகளுக்கு  மொழியை சொல்லிக் கொடுத்த அளவிற்கு இனப் பற்றை என் ஊட்டி வளர்க்கவில்லை?...தமிழ்ரகளோடு பழக விடாமல் தனித்து வளர்த்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

குமாரசாயண்ணை மற்றும் ரதியின் கருத்துக்களின் தென்படும் ஆதங்கமும் விருப்பங்களும் தேவையான  ஒன்று தான்.

ஆனால் நாம் அதற்கு முன்  சிலவற்றை கணக்கில் எடுக்கவேண்டும்

1- எமது பிள்ளைகள் படிக்கும் நாடு எது?

2- அவர்கள் படிக்கும் முதல் மொழி எது?

3- அவர்கள் பழகும் பாடசாலை மற்றும் வேலையிடத்து  நண்பர்கள் உறவுகள் யார்??

4- அவர்கள் வாழப்போகும் தேசம் எது?

இவ்வளவையும் சேர்த்து பார்த்தால் இதில் தமிழும் தமிழர்களும் 1 வீதம் கூட வரமாட்டார்கள்

எனவே உண்மை கசக்கும்.

ஆனால்.......???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவனைத் தவிர,  வேறு. ஒருவரும், பதில் எழுதாமல்,  இருப்பதால்....
கனக்க... யோசிக்கினம் போலை கிடக்கு. 

"வீட்டுக்கு... வீடு,  வாசல் படி"  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

எனக்குத்தெரிந்து பல இடங்களில் சோறு,சோத்துக்கூட்டம் என்ற நக்கல் நளினங்கள் போய்......

தமிழன் , தமிழச்சி என்று பகிடிவதை பண்ணத்தொடங்கியிருக்கிறர்கள். நல்ல சகுனமாகவே பார்க்கின்றேன்.


எனக்கு தெரிந்த தமிழ் சமுதாயம் தமிழராகவே வாழ்கின்றார்கள்.

பிள்ளைகளை முடிந்த அளவிற்கு தமிழ்மணம் வீச வைக்கின்றார்கள்.(கலியாண சாமத்திய வீடு அல்ல)

வீட்டில் உணவு மற்றும் பழக்கவழக்கங்களில் ஊர் நினைவலைகளை மீள வைக்கின்றார்கள்.

திருமண விடயத்தில் என்னவிட அகங்காரத்துடன் அந்த பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

 

புலம் பெயர்ந்த நாடுகளில் வேலை படிப்பு விடயத்தில் அவர்களுக்கு அதிகம் தெரியும்....

ஆனால்....


வருங்கால வாழ்க்கை விடயத்தில் எனக்கு இன்னும் அதிகம் தெரியும்...


சொல்ல வேண்டியது என் பொறுப்பு...

சொல்லி திருத்த வேண்டியது என் கடமை.


மீறியவர்களின் கதையும் எனக்குத்தெரியும்.:grin:

அண்ணா

எல்லாத்தமிழர்களது ஆசைகளும் வளர்ப்பும் இது தான்

என் பிள்ளைகளையும் அப்படித்தான்  வளர்க்கின்றேன்.

மேலே நான் எழுதிய  ஒரு வீத கருத்தை எனது மகன் தான் சொன்னான்

அவனது அனுபவப்படியும்  இங்குள்ளநிலைப்படியும்

எமது ஆசைகள் மற்றும் எதிர்பார்ப்புக்கள் நிறைவேற ஒரு வீதமே சாத்தியம்.

அதுவே களநிலை.

அவன் என்னிடம் இன்னொரு  கேள்வியையும் முன்  வைத்தான்

புலம் பெயர் தேசங்களில்  நிறவெறி  வெளிநாட்டவர்களுக்கெதிரான தேசவெறி  மற்றும் மதவெறி என்பவற்றை வெறுக்கும் நாம்

எந்த அடிப்படைக்குள்  எமது இந்த நிலையை நியாயப்படுத்தமுடியும்

தமது பாடசாலைகளில் வேலைத்தளங்களில் இது சார்ந்து மற்றவர்கள் தம்மை கேலி செய்வதாகவும் சொன்னான்.

 

Link to comment
Share on other sites

தனது வாழ்ககைத் துணையை தேர்வு செய்யும் முழு உரிமையும் அந்த பிளளைககு உண்டு. பெறறோர் அதற்கு உதவியாக ஒததாசை இருக்கலாமேயொழிய தாங்களே தன்னிசசையாக முடிவெடுககும் உரிமை அவர்களுககு இலலை. நாங்கள் வாழ்வது மத்திய காலததில்(Middle Age)  இல்லை.நவீன அறிவியல் காலததில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர்,

இன்று தான் உங்கள் இந்த திரி பார்த்தேன்.

இன்றைய நிலையில், பெற்றவர்கள், பெண்ணாயின் ஆணுடன், ஆணாயின் பெண்ணுடன் வாழ்க்கை நடாத்த முனையவேண்டுமே என்பதே முதலாவது  ஆதங்கம்.

அடுத்தது, நம்மூரில் உள்ளது போல மச்சான், மச்சாள், ஒன்று விட்ட அண்ணன், அக்கா, தங்கச்சி வித்தியாசம் புரியும் சூழல் இல்லை. எனவே சொந்தத்துக்குள் கட்டி வைப்பது, இங்குள்ள கலாச்சாரத்தில் வளரும் பிள்ளைகளுக்கு புரிய வைத்து செய்வது இலகுவானது அல்ல.

மூனறாவதாக, நமது சமூகத்துக்குள் புரையோடியுள்ள, சாதி, இன, மத வேறுபாடுகள் பிள்ளைகளுக்கு புரியாது. புரிய வைத்து தோல்வி கண்டவர்கள் பலர்.

(ஒரு சிங்கள பெண்ணை பல்கலைக் கழகத்துள் சந்தித்து, அவளும், என்னைப் போல இலங்கையர் தானே என்று வாதிட்டு கலியாணம் செய்த ஒருவர், தெரிந்த உறவில் உண்டு)

கனிரசம் கொட்டும் காதல் கடிதங்கள் எல்லாம் கடந்த காலமிது.

உனது (நிர்வாண) படத்தினை அனுப்பு... எனது அனுப்பி வைத்தேன், பார்த்தாயா என்று உடலழகு பார்த்து ஆண் நண்பர், பெண் நண்பர் தேர்வுகள் ஸ்னாப் சாட், இன்ஸ்டாகிராம் ஊடாக நடக்கும் காலமிது. (பகிடி இல்லை. முக்கியமாக அப்பாவிப் பெண் பிள்ளைகளுக்கு சொல்லி வையுங்கள்....பெண் தானாக விலத்தியவுடன், ஆண் நண்பர் அப்படியான படங்களை, இணைய வெளியில் போட்டு விடுகிறார்கள்... பழிவாங்கும் முகமாக... இது பெரிய ஒரு சமூகப் பிரச்னை.இது தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவர பிரித்தானிய அரசு ஆலோசிக்கின்றது)

இந்த நிலையில்..... குறிப்பு, பொம்பிளை பார்த்தல்...ஒகே சொல்லுதல்.... கலியாணம்....

ஒரு வெள்ளை நமது பெண்ணை, ஆணைக் கட்டினால்... முதல் அனுமானம்.... அவரது சமுகத்தில்.... அவருக்கு ஒன்றுமே கிடைக்க வில்லை.... அதுதான் இந்தப் பக்கம் எட்டிப் பார்த்து விட்டார்.

அதே போல குறிப்பு... பேச்சு என்றால்.... அவராக தேட முடியவில்லை... தாய் தகப்பன் உதவி செய்யினும் என்று முடியும்....

காலம் மாறிப் போச்சு. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, குமாரசாமி said:

வணக்கம் ஈழப்பிரியன்!
தவறுகள் எங்கும் எதிலும் இருக்கும்.

இது நியதி.


உங்களிடம் ஒரு சிறிய கேள்வி?.
எமது பிள்ளைகளின் இரண்டும் கெட்டான் வாழ்க்கை முறையால் திருமணங்கள் கொஞ்சம் தடுமாறித்தான் போய்க்கொண்டிருக்கின்றது. இது சந்தர்ப்ப சூழ்நிலை.:(


எமது பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகளின் வாழ்க்கை எப்படியிருக்கும் என நினைக்கின்றீர்கள்? அல்லது எப்படியிருக்க வேண்டுமென நினைக்கின்றீர்கள்?

இது விதண்டாவாதத்திற்கல்ல.....நாலு நல்ல விடயங்களை பகிர்ந்து கொள்வதற்கு மட்டுமே..:)

எமது பிள்ளைகள்  இரு தோணியில் பயணிக்கிறார்கள்.ஆனால் அவர்கள் பிள்ளைகளுக்கு அப்படி ஒரு தேவை இருக்காது. 

பேரப்பிள்ளைகள் எனும் போது பெரியதொரு கேள்விக்குறி தொக்கி நிற்கிறது.பிள்ளைகள் தங்களை எப்படி வளர்தோமோ அதே மாதிரி தங்கள் பிள்ளைகயையும் நாங்களே வளர்க்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

வயது போக போக குளிர் ரொம்ப தான் உலுப்பி எடுக்குது.இந்த நிலையில் அடுத்த அடி எங்கே வைப்பது.இது தான் உண்மை நிலமை.

Link to comment
Share on other sites

பிள்ளைக்கு திருமணம் என்பதால் பிள்ளையிடம் கேட்காமல் எப்படி திருமண நடவடிக்கையில் இறங்க முடியும்? பிள்ளையின் கருத்து மிக முக்கியமானது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் அந்தப்பிள்ள அப்பிராணி போலக் கிடக்கு..!

இப்பொழுதெல்லாம் படிப்பு முடித்தவுடனே அவர்களாகவே 'இன்னமாதிரி பெண் தேடுங்கோ!' என பெற்றோரிடம் சூசகமாக சொல்லிவிடுவார்கள், சிறீ..! எதற்கும் பையனின் அம்மாவிடம் வற்புறுத்தி கேட்க சொல்லுங்கள், அவரிடம் பச்சைக்கொடி காட்டியிருப்பார். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வல்வை சகாறா said:

பிள்ளைகளின் திருமணவிடயத்தை அவர்கள் அறியாமல் செய்ய வெளிக்கிடுவது சுத்த முட்டாள்த்தனம். இன்றை காலத்தில் பிள்ளைகளே தங்களுக்கான வாழ்க்கைத்துணையைத் தெரிவு செய்கிறார்கள். ஒரு வேளை தெரிவு செய்யவில்லை என்றால் அவர்கள் தமக்குரிய துணைக்கு தங்களுக்குப் பிடித்த சில தகுதிகளை எதிர்பார்க்கிறார்கள் என்றும் வைத்துக் கொள்ளலாம். அன்றைய காலங்கள் போல் பிள்ளையின விருப்பு வெறுப்புகளை அறியாமல் பெற்றோர் எம்முயற்சி எடுத்தாலும் தோல்வியில் மட்டுமே முடியும்.

உங்கள் பிள்ளை நாளைக்கு வேற்று இனத்தவரை....உதாரணத்திற்கு ஆபிரிக்கரையோ அல்லது அரேபியரையோ  மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தால் உங்கள் பதில் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, குமாரசாமி said:

உங்கள் பிள்ளை நாளைக்கு வேற்று இனத்தவரை....உதாரணத்திற்கு ஆபிரிக்கரையோ அல்லது அரேபியரையோ  மணம் முடிக்க விருப்பம் தெரிவித்தால் உங்கள் பதில் என்ன?

ஒன்னும் பண்ண முடியாது 

Link to comment
Share on other sites

தமிழ் சிறீ - இது அடி முட்டாள்தனமான வேலை.
 
ஒரு வருடத்திற்கே பாவிக்க முடியாத உடையை வாங்கும்போதுகூட அந்தப் பிள்ளையின் அபிப்பிராயத்தை கேட்க்கும் பெற்றோர், அல்லது அவர்களின் தெரிவிற்கு அனுமதிக்கும் பெற்றோர் - பிள்ளையின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதுக்கு மட்டும் அனுமதிக்கவில்லை என்பது மிகவும் கேவலமான விடயம்.

கட்டி வைத்து விட்டு இவர்கள் கம்மென்று இருந்து விடுவார்கள். வாழப்போவது பிள்ளைதான். சரி இல்லை என்றால் புதிதாக வேண்ட இது ஒன்றும் உடை இல்லை - மனது.

பிள்ளையின் தெரிவுக்கு விட்டுவிடலாம். பிள்ளைக்கு தெரிவு இல்லை என்றால் எமது சமூகத்தில் பெற்றோர் வரன் பாப்பது அவர்கள் கடமை. அப்படியான சந்தர்ப்பத்திலும் வெளிப்படைத்தன்மை வேண்டும், ஒவ்வொரு விடயமும் பெற்றோர்கள் பிள்ளைகளுடன் கலந்ததாலோசித்துத்தான்  செய்ய வேண்டும். திருமணமான பின்னர் பிள்ளை தனது காலில் நின்று சுதந்திரமான முடிவுகளை எடுத்து ஒரு குடும்பத்தை வழிநடத்தும் என்று நம்பித்தானே திருமணம் செய்து வைக்கிறார்கள். அதாவது பிள்ளை அறிவிலும், வயதிலும் முதிர்ச்சி அடைந்தது என்ற எண்ணம்தானே திருமண ஏற்பாட்டில் பெற்றோர் இறங்க காரணம்.

ஆனால் அந்த துணையை தேர்ந்தெடுப்பதற்கு பிள்ளைக்கு முதிர்ச்சி போதாது என்று பெற்றோர் நினைப்பது சுத்த முட்டாள்தனம்.

மொத்தத்தில் முடிவை அந்த பிள்ளை எடுத்ததாகவே இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, குமாரசாமி said:


 

இதற்கு தானா பாடுபட்டு மண்ணை கவ்வினாய் பிரபாகரா? 

கு.சா அண்ணை இந்தத் தலைப்பிற்கும் இந்தக் கருத்திற்கும்என்ன சம்பந்தம்?tw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் இனமும் என் தேசமும் வேறு.....
என் நலமும் என் பிள்ளை நலமும் வேறு....:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, நந்தன் said:

ஒன்னும் பண்ண முடியாது 

அப்ப தனிநாடும் தேவையில்லை.....

சல்லிக்கட்டும் தேவையில்லை..

மானம் மரியாதையும் தேவையில்லை.

வரலாறும் தேவையில்லை....

பாரம்பரியமும் தேவையில்லை.....

சேறு கண்ட இடத்திலை மிதிச்சு தண்ணி கண்ட இடத்திலை கழுவிக்கொண்டு சீவியத்தை நடத்தவேண்டியதுதான்.:grin:

Link to comment
Share on other sites

1 hour ago, nunavilan said:

பிள்ளைக்கு திருமணம் என்பதால் பிள்ளையிடம் கேட்காமல் எப்படி திருமண நடவடிக்கையில் இறங்க முடியும்? பிள்ளையின் கருத்து மிக முக்கியமானது.

பிள்ளைகளுக்கு Surprise Birthday வைப்பது இல்லையா? அது போல் இதை எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். tw_smiley:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

சொல்லிட்டாங்களே. நீயே உன் வாழ்க்கையை தெரிவு செய்யுன்னு.  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/22/2016 at 6:00 AM, தமிழ் சிறி said:

தானும்... தன்ரை படிப்பும்...என்ற சிந்தனைகளில் இருக்கும்  பிள்ளைகளுக்கு, 
நீயும்...  "லவ்"  பண்ணு என்று, இலங்கைத் தமிழ்  அப்பன்  சொல்ல முடியுமா?

சிறி அண்ண செக்ஸ்சையையே எப்ப வைத்துகொள்ள வேண்டும்,எந்த வயதில் வைத்துக்கொள்ள வேண்டும் செக்ஸ் என்றால் இதுதான்  என்று சொல்லி கொடுக்கும் வெளி நாட்டில் தன் துணையாக வரப்போகிறவளை சொல்லி கொடுப்பதில் என்ன பிழை  

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
    • செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. https://yarl.com/forum3/topic/291011-செம்மணியில்-துடுப்பாட்ட-மைதானம்-அமையின்-அயற்கிராமங்கள்-வெள்ளத்தில்-மூழ்கும்-கோடையில்-கடும்-நீர்ப்பஞ்சமும்-ஏற்படும்/#comment-1709825
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.