Jump to content

மலரினும் மெல்லிது காமம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலரினும் மெல்லிது காமம்

ஆர். அபிலாஷ்

 

மலரினும் மெல்லிது காமம்

சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்

 

நண்பர் ஹமீர் முஸ்தபா பார்க்க கோபமான மார்க்ஸியவாதி போல் தோன்றினாலும் அவர் ஒரு தமிழ் பேராசிரியரும் கூட. அவர் தான் மேற்குறிப்பிட்ட குறளை எனக்கு அறிமுகப்படுத்தினார். விளக்கினார். எனக்கு அப்போது பதினாறு வயதிருக்கும். “வள்ளுவன் கூறுவது போல் காதல் அப்படி புலப்படாத ஒரு சூட்சுமப் பொருளா என்ன?” எனக்குத் தோன்றியது. அழகான பெண்களை பார்த்தால் காதல் வருகிறது. ஆக காதல் அழகான பெண்ணுடலில் இருக்கிறது. இப்படித் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். முஸ்தபா எனக்கு விளக்கினார். “அப்படி இல்லப்போ. மலரின் மென்மை மலரில் இல்லை. காதலின் அழகு மலரின் மென்மையை விட மாயமானது.”

மாநகரம் வந்த பின் தம்மை சுலபத்தில் அழகாய் காட்டத் தெரிந்த ஏகப்பட்ட பெண்களை கண்டேன். ஒருவரோடு ஒப்பிடுகையில் இன்னொருவர் அழகில்லை எனத் தோன்றும். பிறகு மொத்தமாய் பார்க்கையில் யாருமே அழகில்லை எனத் தோன்றும்.

 சில பெண்கள் தூரத்தில் இருந்து பார்த்தால் அழகு. சிலர் சிரித்தால் மட்டுமே அழகு. சிலர் அமர்ந்திருக்கும் நெளிவில் மட்டும், சிலர் நடக்கும் விதத்தில், சிலருக்கு குரலில், சிலருக்கு கண்களின் ஒளியில், சிலருக்கு மச்சத்தில்… இப்படி அழகு துண்டுபட்டு தெரிந்தது. இதில் ஒன்றை பெரிது படுத்தி பார்த்தால் அப்பெண் அழகி என ஆணுக்கு படுகிறது. தனியாக பார்த்தால் தோன்றாது. கல்லூரியில் படிக்கையில் ஒருமுறை விளையாட்டு தினம் நடந்தது. நானும் ஒரு நண்பனுமாய் போய்க் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பெண் யாரையோ சீட்டியடித்து அழைத்தாள். நண்பன் சட்டென திரும்பி அவளிடம் சென்றான். அவள் அப்படி சீட்டியடித்ததில் அவன் மயங்கி விட்டான். ஆறு மாதங்கள் அவள் பின்னால் அதற்காகவே திரிந்தான்.

 நிரந்தர அழகிகள் தமக்குள் உள்ள துண்டு துண்டான அழகை அவ்வப்போது மட்டும் வெளிப்படுத்துவார்கள். எப்போதும் ஆணை வியப்பிலாழ்ந்த ஒரு புது விசயத்தை வைத்திருப்பார்கள். ஆனாலும் ஒரு கட்டத்தில் இந்த பெண்ணை அழகி என நினைத்தது தன் பார்வைக் கோளாறினால் தான் என ஆண் புரிந்து கொள்வான். இது காதல் முறிவில் கொண்டு போகும். புத்திசாலி ஆண்கள் கற்பனை மூலம் இந்த வறட்சி நிலையை தவிர்ப்பார்கள். அவர்களால் ஒரு பெண்ணின் அழகை பெருக்கி கொண்டே போக முடியும்.

ஆக பெண்ணின் அழகு முழுக்க ஆணின் பார்வையில், கற்பனையில் இருந்து தான் வருகிறது. இது ஒரு கருத்துமுதல்வாதம், அகவயபார்வை. திருவள்ளுவர் காமத்துப்பாலில் மீளமீள இதையே முன்வைக்கிறார்.

எனக்கு “ஆயிரத்தில் ஒருவன்” படத்தின் “நாணமோ” பாடலில் இந்த வரிகளை கேட்டதும் மேற்சொன்ன விசயங்கள் நினைவு வந்தன:

“தோட்டத்து பூவினில் இல்லாதது

ஒரு ஏட்டிலும் பாட்டிலும் சொல்லாதது

ஆடையில் ஆடுது வாடையில் வாடுது

ஆனந்த வெள்ளத்தில் நீராடுது”

 

அந்த ”அது” அதைக் கண்டு வியப்பவரின் மனதில் தான் இருக்கிறது. அது எது என அவருக்கு முழுக்க புலப்படாதவரையில் ”அது” இருந்து கொண்டே இருக்கும்.

 

http://thiruttusavi.blogspot.co.uk/2016/09/blog-post_26.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.