Jump to content

வெல்க பேரணி - வ.ஐ.ச.ஜெயபாலன்


poet

Recommended Posts

VIVA EZUKA THAMIZ PERANI. 
வெல்க எழுக தமிழ் பேரணி

- வ.ஐ.ச.ஜெயபாலன் கலைஞன்
*
எழுக தமிழ் பேரணி தமிழ் பேசும் மக்கள் நீதியும் சமாதானமும் சமத்துவமும் உள்ள சமாதானத்தையும் இணைபாட்சியைக் கோர அனிவகுக்கும் அறவழிப் பேரணியாகும். நீதியும் உண்மையும் சுயவிமர்சனமும் உள்ள நல்லிணக்கத்துக்கான பேரணியாகும். அநீதியாக தடுத்து வைக்கபட்டிருக்கும் சகல அரசியல் கைதிகளின் விடுதலைகுமான பேரணியாகும். பறித்தெடுக்கப் பட்ட மக்களின் வீடு கானி நிலங்களை மீழ அடைவதற்க்கான பேரணியாகும். 
*
சகல தமிழ் அமைப்புகளும் சகல தமிழ் கட்சிகளும் சம்பந்தர் ஐயா உட்பட சகல தமிழ்த் தலைவர்களும் ஒடுக்கப் பட்ட தமிழ் மக்களின் அறப் போராட்டமான எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென கோருகிறேன்.

தமிழகமும் இந்தியாவும் சர்வதேசமும் ஒடுக்கப் பட்ட தமிழர்களின் துயர் துடைக்க எழுந்த எங்கள் மக்களின் எழுக தமிழ் பேரணியை ஆதரிக்க வேண்டுமென விண்ணப்பிக்கிறேன்.
*
எரிக்கப்பட்ட காடுநாம்.

ஆனாலும் எங்கள் பாடல் தொடர்கிறது

எஞ்சிய வேர்களில் இருந்து.

இறந்தவர்களுக்கான ஒப்பாரியாய்

தொலைந்தவர்களுக்கான அழைப்பாய்

இல்லம் மீழ்தலாய்

மீண்டும் மீண்டும் வாழும் ஆசையாய்

சுதந்திர விருப்பாய்

தொடரும்மெம் பாடல்.

*
We are a charred forest

But our song continues

From the roots that remain.

Our Song will continue

As a dirge for the dead

A call for the lost

A reclaiming of home

Again and again, a living dream

A longing for freedom.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.