Jump to content

தொடராத காதல்களும் தொடரும் கொலைகளும்


Recommended Posts

தொடராத காதல்களும் தொடரும் கொலைகளும்

p94a.jpg

சமீபகாலமாக பத்திரிகைகளில் அடிக்கடி வரும் செய்திகளில் மிக முக்கியமான ஒன்று காதல் தோல்வியும், அதனைத் தொடர்ந்து நடைபெறும் கொலைகளும், தற்கொலைகளும், கோர நிகழ்வுகளும்தான். வாழும் உலகில் காதல்கள் ஏன் தோல்வி அடைகின்றன. அதனைத் தொடர்ந்து ஏன் இப்படிப்பட்ட அதிர்ச்சி சம்பவங்களும் நடக்கின்றன?

பெரும்பாலான இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் காதலைப் பற்றிய சரியான கண்ணோட்டமோ தெளிவான சிந்தனையோ இருப்பதில்லை. பருவவயதில் எழும் ஒரு உத்வேக உணர்வுக்கு காதல் என பெயர் சூட்டி, அது நிறைவேறாது போனால், காதலையும் கொலைசெய்து, தாங்களும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நான்கைந்து முறை ஒருவரை ஒருவர் பார்ப்பதும், அப்புறம் சிரிப்பதும், கடிதம் கொடுப்பதும் காதலாகி விடுமா? இதெல்லாம் சாதாரண சம்பவங்கள், இவையே காதலாகாது? பிறகு எதுதான் காதல்?

p65a.jpg

ரகசிய கனவு

50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் பத்து பேரில் ஒருவர் காதல் வயப்பட்டு திருமண வாழ்வையோ அல்லது காதலில் மனமுறிவையோ எதிர்கொள்வார்கள். அப்படி நிறைவேறாமல் போனாலும் தான் காதலித்த ஆண் அல்லது பெண் நன்றாக வாழட்டுமென விட்டுக்கொடுத்து வாழ்ந்து விட்டுப்போவார்கள். ஆனால் இன்றோ நடைமுறையில் எல்லா இளைஞர்களும் காதல் எனும் பாதையைக் கடந்தே ஆக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

எல்லோரும் காதல் செய்துதான் ஆகவேண்டுமா? சும்மா இருக்க முடியாதா? என்ற கேள்வியுடன் மனநல நிபுணர் டாக்டர் அசோகனிடம் கேட்டோம்.

93849.jpg

மனித மனம் விசித்திரமான ஒன்று. என்னதான் எல்லா விஷயங்களையும் தனக்குத்தானே சரிபார்த்து செய்தாலும், மற்ற்வர்களிடமிருந்து ஒரு அங்கீகாரத்தை ஒரு பாராட்டுச் சான்றிதழை

வாங்க மனம் துடிக்கும். அடுத்தவர்கள் நம்மைப் புகழும்போது ஒரு சந்தோஷம் நம் மனதில் ஏற்படும். இதை நார்சிஸம் என்று சொல்வார்கள். அட்லோஷன்ட் பருவத்தில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சமூகச்சூழல் காரணமாக ஒரு வித குழப்பமான மன நிலை உருவாகுவது இயல்பான ஒரு விஷயம்தான். குறிப்பாக மாற்றுப் பாலினத்தினரின் மீது ஒரு வித ஈர்ப்பு நிச்சயம் ஏற்படும். அவர்கள் தன்னை புகழ்ந்து பேசும்போது தன்னை ரசிக்கும்போது ஒருவித பரவச நிலைகூட நிகழும்.

வீட்டில் உள்ளவர்கள் நமது செயல்கள் குறித்து விமர்சனம் செய்தாலோ குறை கூறினாலோ இனம்புரியாத ஒரு கோபம் ஏற்படும். அதற்கு நேர்மாறாக தன் கருத்துக்களை ஆதரிப்பவர்கள், பாராட்டுபவர்கள் மீது ஒரு வித ஈடுபாடும் ஏற்படும். இந்த இடம்தான் ஒருவர் சுதாரிக்க வேண்டும். மனம் தன் போக்கில் போவதைக் கட்டுப்படுத்தி தான், தனது குடும்பம், தனது லட்சியம் இவற்றுக்கு தனது காதல் எந்த அளவு உதவிகரமாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்த்து செயல்படுவது நல்லது'' என்றவரிடம்,

'காதலில் காமம் உண்டு... காமத்தில் காதல் இல்லை' என்கிறார்களே அப்படியென்றால் காதலுக்கும் காமத்துக்கும் உள்ள தொடர்புதான் என்ன என்றோம். 'இதெல்லாம் வார்த்தைஜாலத்துக்கு வேண்டுமானால் நன்றாக இருக்கலாம். உளவியல்படி காமத்துக்கான நுழைவாயில்தான் காதால். வடிகாலற்ற மனம் காமத்தை எவரிடமாவது தீர்த்துக்கொள்ள அலைகிறது. இதனால், முறைதவறிய நெறிகெட்ட செயலில் இறங்கிவிடுகிறது. இந்த மனநிலைக்கு ஒருவர் போய்விட்டால் வயது வித்தியாசமெல்லாம் ஒரு பொருட்டாகவே இருக்காது. இன்னும் சொல்லப்போனால் கால நேரம் வரப்போகும் ஆபத்துக்கள் பற்றிகூட சிந்திக்க மாட்டார்கள். எந்தக் காதல்தான் சரி...என்று நாம் கேட்டதற்கு, காதலில் நல்ல காதல் கள்ளக்காதல் என்பதெல்லாம் கிடையாது. man is a social animal என்று சொல்வார்கள்.

ஒவ்வொருவருக்கும் தனிமனித ஒழுக்கம், குடும்ப ஒழுக்கம், சமூக ஒழுக்கம் என்று இருக்கிறது. இவற்றை ஒருவர் கடைப்பிடித்து வாழ்வது மற்றவர்களை விட அவருக்குத்தான் நல்லது. பொதுவாக காதல் வெற்றியடைய வேண்டுமென்றால் தற்போதுள்ள நிலையில் நல்ல படிப்பு நல்ல வேலையென பொருளாதார ரீதியாக இருவருமே தன்னிறைவு பெற்றவர்களாக சொந்தக்காலில் நிற்பவர்களாக இருந்தால் பெரும்பாலும் சக்ஸஸ்தான். சமூகமும் அவர்களை ஏற்கும். அதை விடுத்து அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டு ஐஸ்வர்யா ராய் மாதிரி பொண்ணு வேணும் என கனவுகண்டால் எப்படி நிறைவேறும். எல்லா தடைகளையும் தாண்டி கல்யாணம் செய்து கொண்டாலும், பரஸ்பர புரிந்து கொள்ளல் சுயக்கட்டுப்பாடும் மிகவும் முக்கியம். ஏனென்றால், இரண்டாவது காதல் என்பது இல்லாமல் போகும் என்பதற்கெல்லாம் எந்த உத்தரவாதமும் கிடையாது. மனக்கட்டுப்பாடும் சுய ஒழுக்கமும்தான் அவற்றைத் தீர்மானிக்கும்.

p26aaa.jpg

அதேப்போல் காதலிக்கும் போது கவனிக்கவேண்டிய விஷயங்கள்

* ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள். அப்படிச் செய்தால் அங்கே ஒரு எதிர்பார்ப்பு உங்களை அறியாமலே உங்களுக்குள் ஏற்படத்தொடங்கிவிடும்.

* காதலிக்கிறவர், உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள். மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல, என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

* நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள். தேவையானதை பேசுங்கள். தேவையற்ற வீண்கற்பனைகளை வளர்க்காதீர்கள். இயல்பாகவும் உங்கள் தனித்தன்மையுடனும் இருங்கள்.

* காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. எல்லா உணர்வுகளையும் போல அதுவும் ஒரு உணர்வு அதை முறையாகவும், தகுந்த பரஸ்பர மரியாதையும் அளித்து அணூகுங்கள். .

* நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதையெல்லாம் முழுமையாக நம்பாதீர்கள். உங்களைப் போலவே எதிர் பாலினரும் இருப்பார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

* காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரலாம் வராமலும் போகலாம். திருமணத்துக்கு முன்பே பரஸ்பரம் ஒருவர்மேல் ஒருவர் வைத்துக்கொள்ளும் நம்பிக்கையும் ஒப்பந்தமும்தான் காதல் என்று கூறுகிறார்.

Untitled.jpg
 

கனவுமனிதர்களாக காதல் வானில் பறந்து திரிபவர்கள் யதார்த்தமான நடைமுறை பிரச்னைகள் எனும் பூமிக்கு வரும் போதுதான் தரையில் கிடக்கும் முட்களையும் கற்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறார்கள். கண்மூடித்தனமாக ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்துகொள்ளாமல், வரும் காதலில்தான் பிரச்னையே உருவாகின்றது. புறத்தோற்றம், முகலட்சணம், இவற்றை வைத்து ஒரு ஆணையோ, பெண்ணையோ பிம்பமாக்கி மனதில் வரைய தொடங்கினால், பெரும்பாலும், அவை தோல்வியில்தான் முடியும். அந்தப் பெண்ணின் அல்லது ஆணின் குடும்ப சூழ்நிலை, விருப்பு வெறுப்பு. வாழ்க்கையைப் பற்றிய அவர்களது கண்ணோட்டம், எதிர்பார்ப்பு, சிந்தனைகள் இவற்றைப் பற்றியும் காதல் வாழ்வில் களித்துக்கிடப்போர் சிந்திப்பது நல்லது..

தயங்கக் கூடாது

உங்களின் லைஃப் பார்ட்னர் நீங்கள் விரும்புகிற எதிர்பார்க்கிற தகுதியுடையவராக இருந்தால் உங்களின் பெற்றோரிடம், உங்களின் நிலையை எடுத்துக்கூற தயங்கக் கூடாது. பெற்றோர்களும் அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்கள் உளபாங்குக்கு ஏற்ப இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண முயல வேண்டும். ஆனால், நடைமுறையில் பெரும்பாலானா தாய், தந்தையர், அண்ணன்கள், ஏதோ இதுவரை நடக்கக் கூடாத சம்பவம் நடந்தது போலவும், கொலைக் குற்றத்தை தங்கள் பெண் செய்து விட்டது போலவும் வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பது ஏன் என்று புரிவதில்லை. இதனால் எந்தவிதப் பயனும் இல்லை இது பிரச்னையை மேலும் சிக்கல் உள்ளதாகவே ஆக்குகிறது.

என்ன தவறு இருக்க முடியும்?

ஒரு பெண் தனக்கு, 'இந்த புடவை வேணும். அந்த சுடிதார் வேணும்' என உரிமையோடு தன் தந்தையைக் கேட்பது போல், 'இவரை எனக்கு பிடித்திருக்கிறது. இவர் எனக்கு வேண்டும்' என கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? தன் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அறிவுப்பூர்வமான சுதந்திரத்தை பெற்றோர்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் பெரும் பாலானா பெண்கள் சுதந்திரத்தை பயன்படுத்துகிறார்களே தவிர, அறிவுப்பூர்வமாக என்பதை மறந்து விடுகின்றனர்.

கண் மூடித்தனமாக, 'ஒருவரையே திருமணம் செய்து கொள்வேன்' என்று கூறுவது எந்த அளவு தவறானதோ அந்த அளவு தவறானது, தன் தந்தை சொன்னார். தாய் சொன்னார் அக்கா சொன்னார் என்பதற்காக, கட்டாயப்படுத்தியதால், 'திருமணம் செய்து கொண்டேன்' என்பதும் தவறுதான்.

இளம்பிராய லட்சியங்கள்

காதல் தோல்வியில் முடிந்ததும் அவள் கிடைக்கவில்லையே என புலம்புவது, பேனாவும் பேப்பருமாக கவிதை பாடித் திரிவது, என்பதெல்லாம் போன தலைமுறையினரின் காதலாகப் போய்விட்டது. இப்போதெல்லாம் வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனப் போய், தங்கள் இளம்பிராய லட்சியங்கள் திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு தீ வைத்துக்கொள்கிறார்கள்.

p38b.jpg
 

திருத்திக்கொள்ள முடியாத தவறு

இவற்றையும் மீறி ஒருவரை ஒருவர் நேசித்து, வாழ்விலும் இணைய முடிவுசெய்தால் குடும்பம் - சமூகம் ஆகியவற்றில் உள்ள பிரச்னைகளை அவர்கள் சந்திக்க வேண்டியுள்ளது. சொந்த ரத்த பந்தங்கள் தங்களுக்கு எதிராக கிளம்பும் போது தன்னை அழித்துக் கொள்ள துணியக் கூடாது. சேர்ந்து வாழ வேண்டும் என்பது சரி, இல்லா விட்டால், 'சேர்ந்து சாக வேண்டும்' என்பது முற்றிலும் தவறானது. மனிதன் திருத்திக் கொள்ள முடியாத தவறு தற்கொலை.

காதலை வாழ வைத்து விட்டு நாம் சாவோம் என்கிறார்களே காதல் எப்போதாவது, 'என்னை வாழவையுங்கள் உங்கள் உயிரை தியாகம் செய்தாவது என்னை வாழ வையுங்கள்' என்று கேட்டு கொண்டதா?

புதிய பார்வையில் உலகை நோக்குங்கள்!

லைலா மஜ்னு என செத்து போன காதலர்களை உயர்த்திப் பேசுவது கூட இது போன்ற செயல்களின் அடித்தளமான ஒரு காரணமாக இருக்கலாம். நிறைவேறாத காதலுக்காக சாவது முட்டாள்களின் சொர்க்கம். வாழ துணிவின்றி இறந்து போன காதலர்களுக்கு புஷ்பாஞ்சலி செலுத்தும் பைத்தியக்காரத்தனத்துக்கு முடிவு கட்டுவோம். புதிய பார்வையில் உலகை நோக்குவோம்.

http://www.vikatan.com/news/miscellaneous/68300-story-of-breakups-and-love-murders.art

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: இன்று ஆரம்பமாகின்றது விவாதம்! சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று காலை 9.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. அந்த வகையில் இன்று காலை 9.30 மணி முதல், மாலை 5.30 மணி வரையிலும் நாளை (20) காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் விவாதம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373909
    • ஜனாதிபதிக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு! ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நாளை பிற்பகல் நடைபெறவுள்ளது. வவுனியா, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று 8 பேர் கைது செய்யப்பட்ட விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் வடக்கு- கிழக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திக்க வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் கோரியதையடுத்தே, இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாளை முற்பகல் குறித்த கலந்துரையாடலை நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய்வதற்கு ஏற்கனவே 2 அதிகாரிகள் வவுனியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பாக வவுனியா பிராந்திய அலுவலக ஒருங்கிணைப்பாளரின் அறிக்கை நாளை கிடைக்கப்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1373977
    • அன்புள்ள நண்பரே அழகுப் பெண்களே ........!  😍
    • வணக்கம் வாத்தியார்...........! பெண் : முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஆண் : முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா ஆண் : எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் பெண் : இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் ஆண் : தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் பெண் : இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் பெண் : ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு ஆண் : கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு பெண் : நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை ஆண் : தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் பெண் : சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய்.......! --- முதல் கனவே முதல் கனவே ---  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.